யுத்தத்தில் மரணம் போல்,வெயிலில் தாகம் போல்

தவிர்க்க இயலாததுதான் நீ என்னை மறுத்ததும்

தேவதைகள் கிடைப்பது அரிதென்று தெரிந்து கொண்டேன்

முதலிலும் ,முடியவே முடியாதெனும் உன் முடிவிலும்

எனினும் இன்னுமிருக்கிறதோர் வேண்டுகோள்,

இத்தனைக்கும் பிறகும்.,,

உன் இதழோரம் என்றுமிருக்குமே ஓர் இளநகை,

அதை மட்டுமாவது எனக்களியேன்?

எனக்கான அக் குறுஞ்சிரியின் நினைவுகளிலேயே

வாழ்ந்து முடித்து விடுகிறேன் மீதி நாட்களை

நீயின்றியும்……