அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

பூக்கோலம்!

இன்று மீண்டும் ஒரு கீழ்மையை அருகில் சந்திக்க வேண்டி வந்தது. வழக்கம்போல உதாசீனப்படுத்தி விட முடியாமல் இன்றென்னவோ அதிகம் சங்கடப்பட்டேன். இந்த நாற்காலிகள் படுத்தும் பாடு இருக்கிறதே அப்பப்பா!சரண் ஒரு முறை என்னை the pale blue dot என்னும், பால்வெளியில் மிகச்சிறிய ஒரு புள்ளியாக நமது பூமி சுழன்று கொண்டிருப்பதைக் காட்டும் ஒரு ஆவணப்படம் பார்க்கச்சொன்னான்.  அந்தச் சிறு புள்ளிக்குள்தான் ,அதற்குள்தான்  பலரின் ஆணவம் இப்படி பேருருக்கொள்கிறது.  

ஏதேனும் ஒரு விதத்தில் சிறப்பான தகுதி கொண்டிருப்போர், பொதுவான அறிவோ, பொதுஅறிவோ    கொஞ்சமாவது கொண்டிருப்பவர்கள், எப்படியோ எதோ ஒரு தகுதியாவது கொண்டிருப்போரின் ஆணவத்தை நான் சகித்துக்கொள்ளப் பழகி விட்டிருக்கிறேன். 22 நீண்ட வருடங்களல்லவா ? 

ஆனால்அப்படி எதுவுமே இல்லாமல் கீழ்மையில் திளைப்பவர்கள், கீழ்மையை தங்களைச்சுற்றிலும் பரப்பிக்கொள்பவர்களின் ஆணவம் என்னைச்சீண்டுகையில் எரிச்சலாகிறேன்.

முன்பெல்லாம் கல்லூரி இப்படி இல்லை மெய்யாலுமே பெரிய மனிதர்கள் பொறுப்பான பதவிகளில் இருந்தார்கள். இளம் ஆசிரியர்களான எங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆசிரியம் என்பதை வாழ்வுநெறியாகக் கற்றுக்கொடுத்தார்கள்.இன்று அவற்றையெல்லாம் மீண்டும் நினைத்துக்கொண்டேன்

நான் திருமணத்திற்காக விடுப்பு எடுக்கக் கடிதம் எழுதிக்கொண்டு அப்போது முதல்வராக இருந்த திரு சுந்தரம் என்பவரைக் காணச்சென்றேன். அப்போதுதான் கல்லூரியில் இணைந்திருந்தேன்.  சம்பிரதாயமான கடிதங்கள் எழுதிப்பழகி இருக்கவில்லை. கடிதத்தில் ஒரு சொல்லில் tense தவறாக இருந்திருக்கிறது.

என்னை முதலில் அமரச்சொன்ன அவர் (முதல்வரின்) அறையின் மூலையில் அவரிடம் PhD ஆய்வு செய்துகொண்டிருந்த ,அமர்ந்து என்னவோ எழுதிக்கொண்டிருந்த இளைஞரை ’’கொஞ்சநேரம் வெளியே போப்பா’’என்று சொல்லி, அவர்  எழுந்து சென்று கதவை மூடியதும் என்னிடம் ’’லோகமாதேவி இந்த இடத்தில் இதுவல்ல இதுதான் வரனும்’’ என்று சொல்லிக் கடிதத்தைத் திருத்தினார், பின்னர்  ’’இன்னும் கொஞ்சநாளில் எல்லாம் கத்துக்குவீங்க இது ஒன்னும் பெரிய விஷயமல்ல இருந்தாலும் நீங்க தெரிஞ்சுக்கனும்னு சொல்லறேன்’’ என்றார்.பிறகு நான் கற்றுக்கொண்டேன்தான்.

இதைச் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில்  மிக வயோதிகராகிவிட்டிருந்த அவரிடமே சொன்னேன் அவருக்கு நினைவே இல்லை. புன்னகைத்தார் பதிலுக்கு.

அவர் நினைத்திருந்தால் அந்த இளைஞர் முன்னாலேயே என்னைக் கடிந்திருக்கலாம், கடிந்துகொள்ளாமல் அன்புடன் சொல்லுவதாக இருந்தாலும் அவர் முன்னிலையிலேயே சொல்லி இருக்கலாம்.

அப்போது நான் முனைவர் பட்டம் பெற்றிருந்தேன். இந்தக்கல்லூரியின் முனைவர் பட்டம் வைத்திருந்த முதல் பெண்பேராசிரியர் நான். சர்வதேச சஞ்சிகைகளில் வெளியாகி இருந்த என் ஆய்வுக்கட்டுரைகள் கல்லூரியின் பேசுபொருளாக இருந்தன.

அவர் என்னிடம் ‘’என்னம்மா PhD படிச்சிருக்கே ஒரு லெட்டர் கூட எழுதத்தெரியாதா’’? என்று கேட்பதற்கான எல்லா சாத்தியங்களும் அவர் முன்பாக இருந்தன. ஆனால் அவர் எத்தனை கவனமாக இருந்திருக்கிறார் அந்த நாற்காலியில், அந்தப்பதவியில்?

 பிறரை  எப்படி நடத்துவது என்பதை அவரிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டேன்.

இதைப் பல நூறு முறை நான் நினைத்துப்பார்ப்பதுண்டு, மகன்களுக்கும்  மீள மீளச்சொல்லி இருக்கிறேன்.

அப்படி  என்னை வழிநடத்திய துறைத்தலைவர்  திருசங்கரன்,  திருஷண்முக சுந்தரம் சார்,திரு வசந்தகுமார் திரு ரவீந்திர ராஜு, திரு மணியன், திருமதி நர்மதா பாய் என்று பலரை நான் மரியாதையுடன் நினைவில் வைத்திருக்கிறேன்.

கல்லூரியில் என்னை மரியாதைக் குறைவாக நடத்தியவர்கள், நடத்துபவர்கள், இனி நடத்தவிருப்பவர்களை எல்லாம் நான் ஒட்டுமொத்தமாக அலட்சியப்படுத்துகிறேன். ஒற்றைக்கையால் தூசியைப்போலத் தட்டி உதறுகிறேன் ஆனாலும் இப்படி சில சமயம் கண்ணில் தூசி விழுந்ததுபோல் சங்கடமாகி விடுகிறது.

 நான் எத்தனை எட்டி எட்டிச் என்றாலும் அலுவலக ரீதியாகச் சிலரை சிலசமயம்  நேரில் சந்திக்கவேண்டி வருகிறது அதுவும் துறைத்தலைவரான பிறகு இப்படி அதிகம் நடக்கிறது.

நாளை என் நெடுநாள் கனவான விதை வங்கி மற்றும் மூலிகைத்தோட்டத்தின் திறப்பு விழா. எனவே அதற்கான ஏற்பாடுகள். அடுத்துவரும் தேர்வுக்கான வினாத்தாள்களை அனைவரிடமும் கேட்டு வாங்கி தேர்வுக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப கடைசிநாள் என்பதால் அந்த வேலை. வழக்கமான வகுப்புகள் என்று ஏராளம் வேலைப்பளுவும்  இந்த மோசமான அனுபவத்தின் கூடச் சேர்ந்து விட்டது. 

மாணவர்கள் முன்பாக என அகத்தை பெரிதும் மறைத்துக்கொள்வேன்தான் என்றாலும் ஒரு சிலர் என்னை மிக அணுக்கமாக அறிந்துகொள்பவர்கள். என் ஆய்வு மாணவி மேனகா வந்து என்னவாயிற்று என்றாள் ’’இப்போவேண்டாம் பிறகு பேசலாம்’’ என் அவளை அனுப்பினேன், ’’சாப்பிட்டீங்களா’’? என்று கேட்டுவிட்டே என் அறையிலிருந்து அவள் சென்றாள். 

ஆய்வகத்தில் நாளை ஆயுதபூஜைக்கான ஏற்பாடுகளை முகமாறுதலின்றி கவனித்துவிட்டு நான் வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டேன். 

வீடு வரும் வழியில் இளம் தூறலாக மழை பெய்து கொண்டே இருந்தது பருவமழை துவங்கவிருக்கிறது. நல்ல குளிரும் ஆரம்பித்துவிட்டது.

வெண்முரசில் பாண்டவர்களை தண்டிக்க அந்த ஆயிரத்தவன் செய்யும் கீழ்மையான செயல்களைக் குறித்த அத்தியாயம் வாசித்தேன்.  அறிவின்மை முழங்கும் என்பதை மீள மீள வாசித்தேன். என்னால் அமைந்திருக்க முடியவில்லை சாக்கில் கட்டி வைத்த  பூனை போல உள்ளே என்னவோ நிமிண்டிக்கொண்டே இருந்தது.

நான் வீடு வந்தபோது எனக்கு வாட்ஸ் அப்பில் புவனா, காவ்யா என்னும் இரு மாணவிகள் என் அறை வாசலில் சிறிய மிக அழகிய பூக்கோலமிட்டு அதைப் புகைப்படம் எடுத்து ’’மேம்,உங்களுக்காக’’ என்றெழுதி அனுப்பி இருந்தார்கள்.அந்த  வண்ணமயமான மலர்க்கோலம் என்னை உண்மையிலேயே மலர்ச்சிகொள்ளச்செய்துவிட்டது.

நான் இந்தக் கல்லூரியிலிருந்து உடனடியாக வெளியேற ஆயிரக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன,  இன்னும் அதைச் செய்யாமல் இருக்க இந்தக் குழந்தைகளின் அன்பும் தாவரவியல் கற்றுக்கொடுப்பதில் எனக்கிருக்கும் பிரியமும்தான் காரணம். 

நிச்சயம் இந்த வேலைக்கான சம்பளம் ஒரு காரணமல்ல. இதற்குச்சற்றும் குறைவு இல்லாமல் அல்லது கூடுதலாகக்கூட நீட் பித்துப்பிடித்திருகும் இந்தக்காலத்தில்நான் அதற்கான சிறப்பு வகுப்புகள் எடுக்க முடியும், கட்டணத்தின் பேரில் தாவரவியல் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து நடத்த முடியும், அப்படியொரு திட்டம்  கைவசம் வைத்திருக்கிறேன். தருண் படிப்பை முடிக்கக்காத்திருக்கிறேன். 

ஜெ சொல்லிய

‘’ ஓர் அவமானத்தை ஒரு இளவெயில் போக்க முடியுமானால்,

  ஒர் இழப்பை ஒரு மென்மழை மறக்கச் செய்ய முடியுமானால்,

   ஒரு நோயைப் பூவின் நறுமணத்தால் சமன் செய்துகொள்ள முடியுமென்றால்    

வாழ்க்கையில் அஞ்சத்தக்கதாக ஏதுமில்லை ‘’

என்னும் வரிகளை வாசித்தேன்

எத்தனை உண்மை!

அந்தக்கோலம் இன்றைக்கு நான் சந்தித்த கீழ்மையை சமன் செய்துவிட்டதோடு என்னை அந்தச் சங்கடத்திலிருந்து விடுவித்தும் விட்டது.

 அன்பு!

அன்பின் சுவை!

துறைத்தலைவரான பிறகு முன்பு போல வாரத்துக்கு 16 மணி நேர வகுப்புகள் இல்லை என்பது பெரும் குறையாக இருந்தது. இப்போது ஒரு பேராசிரியை 15 நாட்கள் பயிற்சிக்குச் சென்றிருப்பதால் முடிந்த வரை அவரின் வகுப்புக்களை மகிழ்ச்சியுடன் நான் எடுத்துக் கொள்கிறேன். 

இன்று காலை 2 மணி நேரம் தொடர்ந்து. பாலாடைக்கட்டி உருவாக்கத்தில் நுண்ணுயிரிகளின் பங்கு, பாலருந்தும் இளம் கன்றுகளின் இரைப்பையின் நான்காவது சுவற்றிலிருந்து எடுக்கப்படும் ரென்னெட், கூடவே பால் பொருட்கள், உணவு பதப்படுத்துதல் என்று சுவாரஸ்யமான வகுப்பு. 

வகுப்பு முடிந்து ரெக்கார்டுகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கையில் தமிழ்த்துறை பேராசிரியை புஷ்பராணி அழைத்திருந்தாள். என்னைப் பார்க்க வர வேண்டும் என்றாள்  வரச்சொன்னேன். கையில் ஒரு லஞ்ச் பேக்குடன் வந்து சீம்பால் இருக்கு என்று கொடுத்தாள். 

இது  எப்படி தற்செயலாகும்? என்று நானே என்னைக் கேட்டுக்கொண்டேன். பால்பொருட்களை குறித்து வகுப்பில் சொல்லிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ எனக்குப் பிரியமான பால்பொருளை ஒரு பெண் அன்புடன் கொண்டு வந்து தருகிறாள்.

  எப்போதோ ஒரு முறை என் வாட்ஸ் ஆப் நிலைத் தகவலில் அது எனக்குப் பிரியமானது என்பதை தெரிந்து கொண்ட பின்னர் எப்போது  அவர்களது  வீட்டில் கன்று பிறந்தாலும் எனக்குச் சீம்பால் கொண்டு வந்து கொடுத்துக்கொண்டிருக்கிறாள்.  என்ன கன்று? என்று கேட்டேன் ’’தெரியவில்லை கன்று மாமாவின் தோட்டத்தில் பிறந்திருக்கிறது’’ என்றாள்.  நான் அந்தப் பெண்ணுக்கு எதுவுமே செய்ததில்லை என்னவோ இப்படி என்மீது அன்பும் மரியாதையுமாய் இருக்கிறாள்.

புஷ்பா இரு சிறுமகன்களின் தாய். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுச் சென்றாள்.

மதியம் கல்லூரி அலுவலகத்தில்  நான் ஒருவரால் சற்று மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டேன். என்னை அப்படி அவரல்ல கல்லூரியிலும் கல்லூரிக்கு வெளியிலும் அப்படி யாரும் நடத்தவேண்டியதே இல்லை. விஷயம்  கல்விக் கட்டணம் கட்ட முடியாத சில மாணவர்களின் நலன் குறித்தென்பதாலும் இப்போதெல்லாம் நான்  சமநிலை இழப்பதில்லை (usually but not always) என்பதாலும் பதிலுக்கு நான் எதிர்வினையாற்றவில்லை. 

அப்படி நான் நடத்தபட்டபோது ஆசிரியரல்லாப் பணியாளர் ஒருவரும் மூன்று பேராசிரியர்களும் அந்த அறையில் இருந்தனர். அதன் பொருட்டே நான் அப்படி நடத்தப்பட்டேன் என்பதையும் நான் அறிவேன்.ஆனால் எனக்குத் துளியும் கோபமோ பதட்டமோ எரிச்சலோ ஏன் வருத்தம் கூட உண்டாகவில்லை.  என் முயற்சியில் நான் சற்றும் மனம் தளரவில்லை. மேலும் என்னை இந்தக்கல்லூரியில் இருப்போர் 20 வருடங்களுக்கும் மேலாக அறிவார்கள். 

’’அப்பாடா! லோகமாதேவி அவமானப்படுத்தப்பட்டாள்’’ என்று அவர்கள் யாரும் மகிழ்ந்திருக்க மாட்டார்கள் என்றும் நான் அறிவேன் .என்னைக் குறித்து எனக்குப் பின்னால் பேச இத்தனை வருடங்களில் ஏதுமில்லை இனியும் இருக்காது என்பதால் நான் அதிலிருந்து உடனே மீண்டு வந்தேன்

என்னிடம் ஒன்று அளிக்கப்படுகையில்  அதை நான் வாங்கிக்கொண்டால்தானே அது என்னுடையதாகும்? அது என்னை வந்து சேரவே இல்லை, மேலும் நான் கல்லூரியில் ஆசிரியை என்னும்  எனக்கான இடத்தை மிகக் கவனமுடன் கையாளுபவள். ஒருபோதும் பிறர் முன்னிலையில் குரலை உயர்த்துவதோ அகம் சிதறுவதோ இல்லை மாணவர்கள் என்னைக் கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்பது என் கவனத்தில் எப்போதும் இருக்கும். 

அவரிடமிருந்து வந்த   ’’வீசி எறிந்துவிடுவேன்’’ என்று சொல்லப்பட்டது மிகவும் அதிகமாகிப்போன ஒன்று  எனவே அதைச்சொல்லிவிட்டு என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துத் தலையை ஒரு காகிதத்தில் எழுதுவதுபோலக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தார். நான் எந்தப் பதட்டமும் இல்லாமல் அவரிடம் ’’அப்போ நாளைக்கு வரட்டுமா?’’ என்றேன். கவனிக்காதவர் போலிருந்தார். மீண்டும் ’’அப்போ நான் நாளைக்கு வரட்டுமா?’’ என்று பலமாகக் கேட்டு அவர் குனிந்தபடியே சரி என்பதுபோலத் தலையாட்டிய பின்னரே வெளியே வந்தேன்.அதே விஷயத்துக்காக நாளையும் நிச்சயமாகச் செல்வேன்.

வீட்டுக்கு வரும் வழியில் இப்படி சற்றே வேறுபட்ட அன்றாடங்களின்போது  வழக்கமாகச் செய்வதுபோல  random ஆக ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுத்து  வெண்முரசை வாசித்தேன்

கிராதத்தின் 64 -வது அத்தியாயம்.

‘’உண்மை சினம் கொள்ளவைக்கிறது. நம்மால் மாற்றமுடியாத உண்மையோ பெருஞ்சினம் கொள்ளவைக்கிறது. ஏனெனில் நாமும் ஒரு கண்ணியென்றிருக்கும் இப்புடவி நெசவின் இரக்கமற்ற விரிவை அவை நமக்கு காட்டுகின்றன. தெய்வங்களும் அதில் ஒரு கண்ணியே. சினம் நிலை அழியச்செய்கிறது. நிலையழிவோர் முதலில் பிறழ்வது சொல்லில். சொல்லென்பது சித்தம் ஒவ்வொரு கணமும் கொள்ளும் கயிற்று நடை. 

ஒருபக்கம் அகமெனும் முடிவிலியின் ஆழம். மறுபக்கம் புறமென்றாகி நின்றிருக்கும் தகவுகளின் வெளி. செவிகள் சொற்களை அள்ளி முடைந்து உருவாக்கிக்கொண்டிருக்கும் வானத்தில் வந்து விழுந்து திகைக்கின்றன சொற்பொருட்கள். ஒருமுறை  சித்தம் அடிபிழைத்தால் சொல் ஓராயிரம் முறை தவறுகிறது’’ என்றிருந்த பத்தியை வாசித்தேன்.

வீட்டுக்கு வந்து வழக்கமான வேலைகள் மாலை நடை குளியல் விளக்கேற்றுதல் எல்லாம் முடித்துப் புஷ்பா கொடுத்த பையைத் திறந்தேன்.  இனிப்பில்லாமல் வேகவைக்கப்பட்ட சீம்பால், அதற்குத் தனித்தனியெ வெள்ளை மற்றும் கரும்புச்சர்க்கரை இரு சிறு டப்பாக்களில், மற்றொரு கிண்ணத்தில் கொங்கு பிரியாணியான அரிசிபருப்பு சாப்பாடும் ஆகியவை இருந்தன. ஏன் சர்க்கரையைக் கூட அதுவும் இரண்டு விதங்களில் புஷ்பா கொண்டு வந்தாள்? அத்தனை அன்பும் மரியாதையும் அவள் கொண்டிருக்கிறாள்.  எப்போதாவது  வளாகத்தில் சந்தித்தால் புன்னகைப்பதை தவிர புஷ்பாவுக்கு நான் எதுவுமே செய்ததில்லை.

நான் இன்று அந்த அறையில் பதிலுக்குக் குரல் உயர்த்தாமல் வந்ததற்கு காரணம் நான் என்மீதும் அதே அளவுக்கு மரியாதையும் அன்பும் கொண்டிருக்கிறேன் எனபதால்தான்.

சமநிலை இழப்பவரகளை குனிந்து பார்க்கும் உயரத்தில் நான் இல்லாவிடினும் நிச்சயமாக விலகி நின்று பார்க்கும் தொலைவில்தான் இருக்கிறேன் என்பதால் எனக்குச் தொடர்பே  இல்லாத சங்கடங்கள் என்னைத் தொடுவதே இல்லை.

இரவுச் சமையலிலிருந்து புஷ்பா என்னை விடுவித்து விட்டாள். ஒரு சிறு கரண்டியில் கரும்புச்சர்க்கரையை கலந்து சீம்பாலை வாயிலிட்டேன். அன்பின் சுவை அபாரமாக இருந்தது.

புஷ்பாவுக்கு அன்பு):

அன்னபூர்ணா!

கோவை மாவட்டத்தில்  வழக்கமாக ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்  ஆனால் கேரளத்துக்கு தொட்டடுத்து உள்ள பொள்ளாச்சியில் ஏறக்குறைய கேரளம் போலவே விமர்சையாக ஓணம் கொண்டாடப்படும். பாலக்காட்டு சாலையில் பாலக்காட்டிலிருந்து  முக்கால் மணிநேர பேருந்து பயணத்தில் அடைய முடியும் எங்கள் கல்லூரியில்  (அதாவது நான் படித்த, நான் பணி செய்கின்ற கல்லூரி!!!!!) ஓணத்துக்கு எப்போதும் விடுமுறையும் உண்டு. 

எனக்கு எப்போதுமே கேரளம், மலையாள மொழி, கேரள உணவு, பண்டிகைகள் மீதெல்லாம் சாய்வு உண்டு. இந்த வீடும் கேரள பாணியில் வீட்டு முன்பாகத் தோட்டம் வைத்துக் கட்டப்பட்டதுதான். மாலையில் ஏற்றப்படும் கல்விளக்கு தீபங்களும் வீட்டு முகப்பில் மாட்டப்பட்டிருக்கும்  கேரள  முகம் எனப்படும் மரச்செதுக்கு சிற்பமும் கேரளத்தை  வெகுவாக நினைவூட்டும். வழக்கமாக ஓணம் பண்டிகை அன்று மகன்கள் வீட்டில் இருப்பார்கள் எனவே எங்கேனும் வெளியூருக்கு செல்வோம். 

இந்த முறை தருண்  மட்டும் வீட்டுக்கு வந்திருந்தான், கவின்(வெண்ணிலா மகளும் என் மருமகளும்) நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் கோவையில் பயிற்சி மையத்தில் இருந்தாள். எனவே எல்லோரும் ஓணம் சத்யா எனப்படும் ஓண விருந்து சாப்பிடலாம் என்று முடிவானது. சரணும் தருணுமாகக் கோவையில் ஓண சத்யா அளிக்கும் உணவகங்களை இணையத்தில் தேடினர். எங்கும் இடம் இல்லை. ஒரு நல்ல உணவகத்தில் இடம் இருந்தது ஆனால் 45 நிமிடம் மட்டுமே உணவுண்ணும் நேரம் என்றனர் கறாராக.  அப்படி நேரக்கணக்கெல்லாம் வைத்துக்கொண்டு மகிழ்ந்து சாப்பிட முடியுமா என்ன? எனவே தேடித்தேடி ஒரு வழியாக மலபார் உணவகத்தைக் காந்திபுரத்தில் கண்டுபிடித்தோம்.

மிகுந்த நெரிசலான சந்துப்பகுதியில் அமைந்திருந்தது உணவகம். அவர்களின் மிகக் குறுகிய இடத்தில் காரைப் பார்க் செய்வதே பெரிய சாகசமாக இருந்தது.

கூட்டம் நெரிந்தது.  என்னைப்போலவே பலர் ஓணப்புடவையிலும், சிலர் செட்டு முண்டிலும் வந்திருந்தனர், பார்சல் வாங்கும் இடமும் திருவிழா போல இருந்தது. டோக்கன் வாங்கிக்கொண்டு நால்வரும் மாடிக்குச் சென்றோம்,

 டோக்கன் கொடுப்பவர்களுக்கும் மாடியில் பரிமாறுபவர்களுக்கும் ஜென்மாந்திரமாகத் தொடர்பே இல்லை போல. அங்கே அமர இடமே இல்லை என்னும் தகவலே தெரியாமல் சகட்டு மேனிக்கு கீழே டோக்கன்கள் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஏஸி பேருக்கு வேலை செய்துகொண்டிருந்தது, ஓணவெயில் அடித்துக்கொண்டிருந்த அந்த நண்பகலில் வியர்த்து வழிந்து, களைத்து வெகுநேரம் காத்திருந்து மின்விசிறிக்கடியில் ஒரு மேசை கிடைத்து  அமர்ந்தோம்.

ஓணம் சத்யா என்பது 16 வகை அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் தொடுகறிகளும் வல்லரிசிச்சோறும், பலவகைப் பாயசங்களும் பப்படமும் குழம்புகளுமாக இருக்கும் சைவ விருந்து. வெறும் உணவுண்ணும் அனுவபம் மட்டுமல்ல சத்யா, அது ஒரு பண்பாட்டு அனுபவமும் கூட.

தொடுகறிகள் துவரன், ஓலன், காளன், அவியல், தீயல், எரிசேரி, பச்சடி, கிச்சடி, பலவித ஊறுகாய்கள், துவையல்கள், இஞ்சிப்புளியென ஆடம்பரமாக இருக்கும். 

மலபார் உணவகத்தில் வாசலில் 16 வகைகளையும் (உப்பு வாழையிலை உள்ளிட்ட) பட்டியல் இட்டுப் பேனர் வைத்திருந்தார்கள்.பரிமாறிக்கொண்டிருந்த இளைஞர்கள் அப்போதே மிகவும் களைத்திருந்தனர். முற்பகலிலிருந்தே பந்தி நடந்திருக்கும் போல. நாங்கள் எண்ணியது போல 16 வகை தொடுகறிகளுடன் விமரிசையாக உணவு வரவில்லை.

ஒரு  நீள எவர்சில்வர் தட்டில் வாழை இலையை வைத்து அதில் அவசரக்கோலத்தில் எல்லா தொடுகறிகளையும் குழந்தைக்குக் கூட ஊட்ட முடியாத குறைந்த அளவில் வீசி எறிந்தது போல வைத்துக் கொண்டு வந்து வைத்தார்கள். வைக்கும் போதே என் இலையில் பாயஸம் கொட்டி இருந்தது. பேப்பர் கப்புக்களில் இரு வகை பாயஸம், எண்ணெய் படாத விளிம்புகளுடன் பச்சை உளுந்தின் வீச்சம்கொண்ட  வேகாத சிறிய பப்படம் ஒன்று.  

 எல்லா இலையிலும் நாலைந்து துவையல்கள் ஒன்றாய் சேர்ந்திருந்தன. என் முகத்தைப் பார்த்த கவின்  கொஞ்சமாக துவையல்கள் கலந்திருந்த அவளது இலையை எனக்குத்தர வந்தாள். நான் மறுத்து ஒரு டிஷ்யூ பேப்பர் வாங்கி பாயஸத்தை துடைத்தேன்.முதலில் பரிமாற வேண்டிய பருப்பும் நெய்யும் வரவே இல்லை. சாம்பார் மோர்க்குழம்பு ரசம் தயிர் வந்தது. இலையின் ஒரு மூலையில் வைத்திருந்த ஒரு சொட்டு பருப்புத்தான் பருப்பு நெய் என்று கடைசியில் தெரிந்துகொண்டேன். ஆனாலும் உணவகங்கள் இப்படி அறமில்லாமல் தொழில் செய்வதை சகித்துக்கொள்ளவே முடிவதில்லை. 

 அதன்பிறகு ஏனென்று கேட்கக் கூட ஆளில்லை. ஒவ்வொரு உணவுக்கும்  கைவிரல்கள் காய காத்திருக்க வேண்டி இருந்தது, சாதம் பரிமாறவும் என்ன வேண்டும் எனக்கேட்கவும் கூப்பிடு தூரத்தில் என்ன பலமைல் சுற்றளவில் கூட யாருமே இல்லை. களைத்துப்போன ஊழியர்கள் ஆங்காங்கே ஒளிந்து நின்று கொண்டார்கள் அப்படி தலையைக்காட்டின சிலரும் வட இந்தியர்கள் அவர்களுக்கு மோர்க்குழம்பையும் ரசத்தையும் பிரித்தறியத் தெரியவில்லை.

தருணின் தட்டில் கருத்து நெகிழ்ந்துபோன ஒரு பழம் இருந்தது அதை மாற்றித்தர சொன்னோம் எடுத்துக்கொண்டு போய் பதிலுக்கு பாதி தோலுரிந்த அழுக்கான ஒரு பழத்தை கொடுத்தார்கள் அதை அப்படியே வைத்துவிட்டான் தருண்.

கூடுதலாகத் துவரன், ஊறுகாய்கள் கேட்டபோது வெகுநேரம் கழித்து வந்து சின்ன ஸ்பூனில் கால்பாகம் வைத்தார்கள்.  பரிமாறியவருக்கு கையில் நரம்புத்தளர்ச்சியாக இருக்கலாம், பாத்திரத்துக்குள் விட்ட கையை அவரால் வெளியே எடுக்கவே முடியவில்லை பாவம்,

500 ரூபாய்க்கான உணவில் அளிக்கப்பட்டது 100 ரூபாய்க்கானது கூட இல்லை.  உணவின் அளவில் குறைவு இருந்தது கூடப் பரவாயில்லை,  பரிமாறுகையில் அன்பு இல்லாவிட்டாலும் போகிறது 500  ரூபாயில் 200 ரூபாய்க்கான அக்கறையாவது வேண்டுமல்லவா? அதுவும் இல்லை.

 நாங்கள் நொந்து போய் படி இறங்குகையில் கூட்டம் கூட்டமாக பலர் மேலே உணவுக்காக ஏறி வந்து கொண்டிருந்தார்கள் அய்யோ பாவம் என்று நினைத்துக் கொண்டோம். உண்மையில் அந்த உணவகத்தின் ஊழியர்கள் தான் ரொம்பவும் பாவம். ஓய்வே இல்லாமல் வேலை அன்று அவர்களுக்கெல்லாம்.

 கேரள சத்யாவை இப்படி மகா கேவலமாகச் சாப்பிட்ட இந்த ஓணம் மறக்க முடியாதது.அடுத்த ஓணம் வரை காத்திருக்காமல் சரண் நவம்பர் கடைசியில் இந்தியா வருகையில் சத்யாவை பிரமாதமாகச் சமைத்து எல்லாருமாகச் சாப்பிடனும் என்று கொதியாக இருந்தது. அந்த உணவகத்தின் முன்பாக  பூக்கோலமிட்டிருந்தார்கள். நால்வரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.

ஓணம் விழாவை சாக்கிட்டு வசூலுக்காகத்தான் அந்த சத்யா என்னும் அறிவிப்பும் பூக்கோலமும், மற்றபடி நல்ல உணவை ஒரு சிறப்பான கலாச்சாரம் சார்ந்த பண்டிகையின் போது அளித்து அதன்பேரில் லாபம் என்னும் நல்ல நினைப்பெல்லாம் இல்லை அந்த உணவகத்துக்கு.

கவினையும் உடன் வந்த ஈழவேந்தனையும் (என்ன ஒரு அழகான கம்பீரமான பெயர் இல்லையா?) விருந்தினர் மாளிகையில் இறக்கி விட்டுவிட்டு நானும் தருணுமாக நாஞ்சில்நாடன் அவர்கள் கி ரா விருது பெறும் நிகழ்வுக்கு  மாலை கோவை பூசாகோ தொழில்நுட்பக்கல்லூரிக்கு செல்ல வேண்டி இருந்தது.  நானும் முகம் கழுவிக்கொள்ள நினைத்தேன். கோவையில் பல நண்பர்கள் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் என்றாலும் நான்  அவர்களின் வீடுகளுக்கு எப்போதுமே  அழைப்பின்றி செல்வதில்லை. 

ஒரு நல்ல காப்பி தேவைப்பட்டது. எனவே பூ சா கோ கல்லூரியிலிருந்து கோவை அன்னபூர்ணாவுக்கே சென்றோம் 4 மணிக்கே கார் பார்க்கிங் நிறைந்து விட்டிருந்தது. காத்திருந்து காரை நிறுத்திவிட்டு உள்ளே செல்லும் முன்பாகவே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அன்னபூர்ணாவில் ஓணம் சத்யா அளிக்கப்படும் என்று முன்னால் போர்டு வைத்திருந்தார்கள். எப்படி இது எங்கள் கவனத்துக்கு வராமல் போனது என்று வருந்தினேன்.நல்ல அருமையான சாப்பாட்டை  அனுபவத்தை தவற விட்டுவிட்டோம் என்று நொந்தேன்.

கூட்டம் இருந்தாலும் எங்களுக்கு மேசை இருந்தது. அன்னபூர்ணாவின் மிகச்சுத்தமாகப் பராமரிக்கப்படும் (எப்போதுமே) ஓய்வறையில் முகம் கழுவி புடவை திருத்தித் தலைவாரிக் கொண்டேன். அன்னபூர்ணாவுடனான உறவைக்காட்டிலும் நெருக்கமான உறவுகள் கோவையில் எனக்கில்லை.

எத்தனை முறை அன்னபூர்ணாவில் உணவுண்டிருக்கிறோம்?  தருண் மிகச்சிறியவனாக இருக்கையில் அன்னபூர்ணாவின் மினி இட்லி அவனுக்கு பிரியம். ஒரு முறை ஏர்போர்ட்டிலிருந்து பீப்பிள்ஸ் பார்க் வருகையில் இரவாகி விட்டிருந்தது. தருணுக்கு அப்போது தூக்கம் வந்தால் நிறுத்தாமல் தூங்கிக்கொண்டே சாப்பிடும் பழக்கம் இருந்தது. 

அன்று இரண்டு மினி இட்லி தட்டுக்களுக்குப் பிறகும் மினி இட்லி வேண்டும் என்று  தூக்கக்கலக்கத்தில் அடம்பிடித்து ’’மினி இட்லி மினி இட்லி’’ என்று கதறக்கதற அவனை இழுத்துக்கொண்டு வந்ததை அன்னபூர்ணாவில் சாப்பிட்டுக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் சிரித்துக்கொண்டே பார்த்தார்கள்,

வழக்கமாக எல்லா செமஸ்டரும் அரசு கலைக்கல்லூரியில் விடைத்தாள் திருத்தும்  பணிக்கு வரும்போதெல்லாமே அங்குதான் நான் மதிய உணவு சாப்பிடுவேன்.

அனேகமாகப் பல சுவையான உணவுகள் எந்தெந்த கிளைகளில் சாப்பிட்டிருக்கிறேன் என்று கூட நினைவிருக்கிறது. டவுன்ஹால் கிளையில் ஒருமுறை நன்கு அமைந்த அவியல். ஏர்போர்ட் கிளையில் பிரமாதமான சாம்பார், ஆர் எஸ் புரத்தில் மசாலா அப்பளம் இப்படி பட்டியல் நீளும். அவர்களின் தரம் சுவை சுத்தம் மட்டுமல்ல பரிமாறுவதில் இருக்கும் அக்கறையும் ஒழுங்கும்தான் உணவின் சுவையை கூட்டி அந்த அனுபவத்தை மகத்தானதாக்கி விடுகின்றது.

விஷ்ணுபுர விருது விழாக்களுக்கு எப்போதும் நான் அன்னபூர்ணாவில்தான் தங்குவது. அங்கிருந்து நடந்தே ராஜஸ்தானி சங்கத்திற்கு வந்துவிடலாம் என்பதுவும் நல்ல  காலை உணவும் முக்கிய காரணங்கள். 

அன்னபூர்ணா தொடங்கப்பட்டதிலிருந்து அங்கே மட்டும் காப்பி அருந்தும் ஒருவரை எனக்குத் தெரியும். அவர் வீட்டு துக்க நிகழ்வுக்குக் கூட அன்னபூர்ணாவிலிருந்துதான் காப்பி அத்தனை கூட்டத்துக்கும் வாங்கினார். அவர் வீட்டின் உணவு மேசை அருகில் அன்னபூர்ணாவில் இருப்பதைபோல் வாஷ்பேசின் வைக்கும் அளவுக்கு அன்னபூர்ணாவுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது.

அன்றும் நல்ல காப்பியும் சாம்பார் வடையும். அருகிலேயே நின்று ஒரு பெண் வேண்டியதை கவனித்து கேட்டுக் கொண்டு வந்து கொடுத்தார். 

 பிறகு விழா முடிந்து பின்னிரவில் கற்பகம் பைபாஸ் சாலையில் இருந்த 20 ,30 கார்கள் நின்றிருந்த ஒரு சாலையோர பிரம்மாண்டமான உணவகத்தில் இரவு உணவு. கார்கள் இருந்த அளவுக்கு  வாடிக்கையாளர்கள் இல்லை. பெரிய திரையில் குத்துப்பாட்டுக்கள் ஓடிக்கொண்டிருந்தன. குழந்தைகள் அதனருகில் ஒரே ஆட்டம். ஒரே ஒரு கன்னம் ஒட்டிய ஒல்லியான பையன் மட்டுமே இருந்தான் பரிமாற.

இரண்டு தோசை, ஒரு சாலட் சொல்லி 20 நிமிடத்தில் தோசையும், சாப்பிட்டு முடிந்த பின்னர் சாலடும் கொண்டு வந்தான். அவனைக் கோபித்துக்கொள்ளவே முடியாத படிக்கு பரிதாபகரமான தோற்றம், ஏறக்குறைய நல்லிரவு அப்போது.

ஒன்றும் சொல்லாமல் எழுந்தோம்.  அந்தக் கார்கள் எல்லாம் ஒருவேளை இஞ்சின் இல்லாமல் சும்மா ஒரு பார்வைக்காக கூட்டம் வரும் உணவகமென்று காட்டும் பொருட்டு உரிமையளர்களால் வாங்கி நிற்க வைக்கப்பட்டிருக்குமோ? இந்த உணவுக்கு எப்படி இத்தனைபேர் வா முடியும் அந்த அகாலத்தில்?

வளர்ந்து கொண்டிருந்த நிலவைப் பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்கையில் அதிகாலையாகிவிட்டிருந்தது. அன்றைய நாள் நல்ல சூடும் மெல்லிய  கசப்பும் சரியான இனிப்புமாக இருந்த அன்னபூர்ணாவின் காப்பியாலாகி இருந்தது. 

தாவரவியல் அகராதி-F

F1 hybrid-A single cross; a plant breeding term for the result of a repeatable cross between two pure bred lines.

F2 hybrid A plant breeding term for the result of a plant arising from a cross between two F1 hybrids; may also refer to self-pollination in a population of F1 hybrids.

Faba -a bean, அவரை-(Vicia faba)

Fabaceus-Consisting of beans-அவரையினம்

Fabalia-Bean-stalks -அவரைக்காயின் காம்பு

Faber-Bean grower- அவரை சாகுபடியாளர்.

Fabiform -Shaped like a kidney bean- ராஜ்மா அவரை விதை வடிவம்(சிறுநீரக வடிவம்)

Fabiformis-Bean-shaped- அவரை விதை வடிவம்

Fabrefactus-Undeveloped, rough, coarse, primitive, rude, untilled, uncultivated- raw- முதிராத, சாகுபடி செய்யப்படாத, வளர்ச்சியடைந்திருக்காத.

Fabric- Very thin, thread-like strands -இழைமம்

Fabricatus-Constructed- கட்டமைக்கப்பட்ட,

Faceted- With many plane surfaces- பல முகப்புக் கொண்டிருக்கிற, பல பட்டைகள் கொண்டிருக்கிற.

Faeces-Bodily waste discharged-மலக்கழிவுகள்

Faecula-  Dried lees of wine, argol, tartar (used as a condiment or medicine)- உலர்ந்த  வைன் வண்டல்.

Faeculentia-Containing dirt, sediment, or waste matter-கசடை வண்டலை கழிவைக் கொண்டிருக்கிற.

Faeculentus-full of, abounding in-ஏராளமான.

Faenum-Any dried plant ,hay  faenum Graecum meaning “Greek hay” -உலர்ந்த தாவரம், வைக்கோல்.

Faetidus-That has an ill smell, evil-smelling, stinking, fetid; foul; having a disagreeable smell of any kind, disgusting- கெடுமணம்  கொண்ட,துர்நாற்றம் கொண்ட, மலம் போல் நாறுகின்ற.

Faetor- Bad / foul smell, stink- நாற்றம்

Faetulentus-Foul-smelling -கெடுமணம் கொண்ட

Faex-Sediment dregs of liquids- கரைசலின் வண்டல்

Falcarius- Resembling or relating to a sickle –  கதிரறுவாள் வடிவத்தை ஒத்த.(Aongstroemia falcataria)

Falcate- Sickle-shaped-கதிரறுவாள் வடிவம்.

Falcate-Curved like the blade of a scythe-புல் அறிவாள் வடிவிலிருக்கிற,

Falcatus-Sickle-shaped, curved as the blade of a sickle or scythe; “plane and curved, with parallel edges, like the blade of a reaper’s sickle; as the pod of Medicago falcata- சில தாவரங்களின் கனிகளின் நுனி வளைந்த கதிரறுவாள்  வடிவத்தை குறிக்கும் சொல்.

Falces-A tool with a curved blade for cutting grain- தானியங்களை அறுக்கும் வளைந்த அரிவாள்.

Falcicornis-With falcate or sickle-shaped horns , Bilabrella falcicornis; Oncidium falcicorne- ஆர்கிட் மலர்களின் அரிவாள் போன்ற அமைப்பை குறிக்கிறது.

Falci-Curved- (as in a sickle) falciformis, sickle-shaped- கதிரருவாள் வடிவம்.

Falconeri- As epithet-Hugh Falconer (1808 – 1865), Scottish doctor, geologist and Botanist in India from 1830 to 185.(The flower Rhododendron falconeri was named after Falconer by Joseph Dalton Hooker.) ஸ்காட்லாந்தை சேர்ந்த தாவரவியலாளர்.

Fallow-Unploughed, “plowed land or a piece of it; land ordinarily used for crop production when allowed to lie idle either in a tilled or untilled condition during the whole or the greater portion of the growing season: the plowing or tilling of land without sowing it for a season;” to break up land “without seeding for the purpose of destroying weeds and conserving soil moisture” – தரிசு நிலம்; பயிரிடப்படாத நிலம்; பயிரிடா நிலம்

Family-A taxonomic group of one or more genera with features, ancestry, or both in common. It is the term for the principal rank between order and genus-தாவரக்குடும்பம்.

Farina- Flour,’ ‘dust or powder of any kind;’ dry, flour-like powdery covering, “Blair’s term for pollen”  (in fungi) “the powdery material on a soredium -உலர்ந்த பொடி, துகள்

Farinaceous-Powderiness -that is mealy- மாவுக்குரிய, மாப்போன்ற, உலர் பொடியாக்கப்பட்ட, புள்ளிகளுள்ள, வெளிறிய.

Farinaceus- Mealy, floury, starchy, containing starchy matter; of a mealy texture or odor-மாவு கொண்டிருக்கிற, மாவுபோன்ற, மாவின் மணம் கொண்டிருக்கிற.

Farina-Powdery, pale yellow, crystalline secretion consisting of flavonoids in Primula and other species- சில வகைத்தாவரங்களின் குருணைபோன்ற கசிவு.

 Farinose- Mealy-textured, often whitish or greyish- வெள்ளை அல்லது சாம்பல்   நிறம் பூசினாற்போல 

Farinosus- Mealy, covered with farina, or starchy matter, pollinose; “covered with a white mealy substance, as the leaves of Primula farinosa”- மாவு போன்ற பொருளால் சூழப்பட்டிருக்கிற.

Fascia-Bandage, band, girdle; a cross-band, as of color; the fascia (Diatoms)-குறுக்குப்பட்டை.

Fasciarius- Band- or ribbon-shaped; “narrow; very long, with the two opposite margins parallel, as the leaves of the Seawrack-“banded, or band-shaped, narrow and long, with parallel margins -நாடாபோன்ற அமைப்பு.

Fasciate- Teratologically grown together, as of several stems into one  often monstrous, an abnormal proliferation- பல தண்டுகள்/ கிளைகள் இணைந்து பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் அமைப்பு.

Fasciatim- In bundles, a bundle of wood- கற்றையாக

Fasciatus- Marked transversely with broad parallel stripes of color- அகலமான குறுக்குப்பட்டைகள்  கொண்டிருப்பது.

Fascicle -A bundle arising from a common base- grouping of branches, flowers, pedicels, roots, hairs- ஒரு மையத்திலிருந்து உருவாகும் கற்றை. கிளைகள்/ மலர்கள், மலர்க்காம்புகள், வேர்கள் /தண்டுகளின்  ஒற்றைத்தொகுப்பு.

Fascicularis- Relating to a fascicle or bundle.Cambium fasciculare, the fascicular cambium- கற்றையை குறிப்பிடும் சொல்.

Fasciculatum-in the manner of a fascicle, fasciculately, i.e. in fascicles, in bundles, in bunches-கொத்தாக கற்றையாக.

Fasciculatus- Growing in bundles or fascicles, as when several stems grow together or coalesce, also of branches, hairs, leaves, etc.; bundled or bunched together, as in the manner of branching in Sphagnum- கற்றையாக வளர்தல்.

Fasciolaris-, fasciolatus, fasciated- Showing abnormal fusion of parts or organs, resulting in a flattened ribbon-like structure-தட்டையான நாடா போன்ற அமைப்பு.

Fascis- A bundle of wood, twigs, straw, a fagot; a packet, parcel – குச்சிகளின் சிறு கட்டு,பொதி, வைக்கோல் பொதி, சுள்ளிக்கட்டு 

Fashioned- Constructed- கட்டமைக்கபட்ட.

Fastigiate – Broom-like appearance- துடைப்பம் போன்ற தோற்றம் கொண்டிருக்கிற.

Fastigiatio-“When branches become more or less parallel with the main stem” -மையத்தண்டுக்கு இணையாக கிளைகள் வளர்ந்திருப்பது.

Fastigiatum- With organs nearly parallel and pointing upward- இணையாக மேல்நோக்கி வளர்ந்திருப்பவற்றை குறிக்கும் சொல்.

Fastigiatus- Parallel, clustered and erect, as the branches of Populus fastigiata, இணையாக குழுவாக நேராக வளர்ந்திருப்பவை.

Fatiscens- Disintegrating, crumbling, disappearing, ‘to open in chinks or clefts, to gape or crack open, to fall apart, tumble to pieces; to grow weak, become exhausted, to droop, faint; விரைவில் உதிர்ந்துவிடுகிற, உடையும் தன்மை கொண்டிருக்கிற.

Faucal- Pertaining to the throat of a perianth, the calyx or corolla- அதழ் அல்லது இதழ்களின் கழுத்துப்பகுதி.

Fauces- The orifice or throat of a gamopetalous corolla or calyx; the part between the proper tube and the limb, the throat is referred to as the ‘fauces’ – குழல் வடிவ மலர்களின் கழுத்துப்பகுதி.

Faux- Upper part of throat, ‘jaws, gullet, throat;’ in the singular it is the “orifice of calyx, or corolla, mouth, entrance;” “the orifice or throat of a gamopetalous corolla or calyx; the part between the proper tube and the limb” -குழல் வடிவ மலர்களின் மேற்பகுதி.

Faveolate-Honeycombed; having regular, angled pits. Compare foveolate.

Faveolatus- Faveolate, pitted, finely honeycombed- நுண்ணறைகள் கொண்டிருக்கிற, குழிகள் கொண்டிருக்கிற.

Favularius- Finely honeycombed – நுண்ணறைகள் கொண்டிருக்கிற.

Favulus- A little honey-comb-சிறு சிறு அறைகள் கொண்டிருக்கிற.

Favus- Honey-comb- தேன் கூடு போன்ற.

Fawn-color- Fawn-colored, light brown tinged with yellow-காவி கலந்த இளமஞ்சள் நிறம்.

Feather-Having veins which proceed from a midrib at an acute angle,with veins all proceeding from the sides of a midrib- pinnatifid, pinnately cleft or lobed half the distance or more to the midrib, but not reaching the midrib; divided almost to the axis into lateral segments, something in the way of the side divisions of a feather- pinnatifidus- இறகு போன்ற.(இலை நரம்பமைப்பைக் குறிப்பது)

Fecalis- Relating to, being, or involving feces – கழிவு, மலம் தொடர்பான.

Fecatus- Made from the dregs or lees; (Vinum faecatum, wine pressed from the dregs)- வண்டலிலிருந்து உருவான.

Fecula- Dried lees of wine, argol, tartar (used as a condiment or medicine)   dregs, sediment; lees; syn. Flocces- உலர்ந்த வைன் வண்டல்

Feculentia- Starch or similar substance; thick with sediment,feculent, muddy, thick with sediment, abounding in dregs or sediment, thick, impure, feculent (of fluids) full of sediment, thick- அசுத்தமான வண்டலாக படிந்திருக்கிற.

Feculentus- Full of sediment, thick- வண்டல் நிறைந்த.

Fecundans-To make fertile or fruitful- வளமாக்குகிற,

Fecundatio- The period during which the flower is open- மலர்கள் மலரும் காலம்.

Fecundatus- Made fruitful, fertilized- கருவுற்றவை. 

Fecundus- Fertile, rich; fertilizing, giving life- வளமானவை.

Felicitas- Fruitful, fertile -வளமை.

Felling- ‘Abruptly cutting or breaking off or away below, cutting through, cutting down, felling.’- வெட்டுப்படுகிற, வெட்டுகிற.

Fell-The treeless rocky area above timberline, or in frigid zones dominated by low plants or by graminoids: மரவரைக்கு மேல் இருக்கும் மரங்களற்ற  கீழ்நிலைத்தாவரங்கள்,சிறு செடிகள்/ புற்கள்  மட்டும் இருக்கிற/ பாறைப்பகுதி.

Felted-Having interlocked hairs to the extent of being matted- பின்னிப்பிணைந்த மென்மயிர்களின் பாய் போன்ற அமைப்பு.

Female flower-(Pistillate flower), the flower which contains only the female reproduction part. It is the only collection of carpels and stamens (male reproductive part) that is absent. Such flowers are unisexual female flowers.-பெண் மலர் ஒருபால் மலர், மகரந்தங்கள் இல்லாத சூலகம்  கொண்டிருக்கும் மலர்.

Fen- Low-lying wet land with grassy vegetation; usually is a transition zone between land and water. Synonyms. fenland, fenland, marsh, marsh, marshland- தாழ்ந்த சேற்று நிலம்’

Fence-A line of wooden or metal posts joined by wood, wire, metal, etc. to divide  landor to keep in animals.-நிலத்தைப் பகுதிகளாகப் பிரிப்பதற்காக அல்லது விலங்குகளை உள்ளிட்டுக் காப்புச் செய்வதற்காக அமைக்கப்படும், மரம், கம்பி, உலோகம், முதலியவற்றால் இணைக்கப்பட்ட மர அல்லது உலோகக் கம்பங்களின் வரிசை; வேலி.

Fenestra- Window, opening- திறப்பு, சாளரம்

Fenestrate-Having translucent or transparent areas that let light through; this variously affects the behavior of animal visitors or permits photosynthesis in many arid-region plants that grow only to the soil surface. Also refers loosely to perforations, for which perforate is the more precise term- துளைகளும் திறப்பும் கொண்டிருக்கிற.

Fenestratus- Windowed, provided with openings; with broad, window like openings, a more extreme condition than perforate: Pierced with holes, as the septum in some Cruciferae- சாளரங்களை ஒத்த திறப்பு அல்லது துளை கொண்டிருக்கிற.

Fenestrella- a little opening or window.- சிறு திறப்பு, சிறிய வாயில்.

Fenestrellatus- A little opening or window- சிறு திறப்பு

Fenestrelliformis- In the shape of a little window; window-like, such as an opening- சிறு வாசல் போலிருக்கிற, சிறிய சாளரம் போன்ற வடிவம்

Feneus- hay-like, like hay- வைக்கோல் போன்ற

Fenney-   Muddy,dirty, filthy-கலங்கிய, சகதியான

Fenny-  Loving or growing in marshes -சதுப்பு நிலத்தில் வாழ்கிற, சதுப்புப் பகுதிகளை விரும்புகிற.

Fenum- Hay, grass cut and cured for fodder-தீவனத்திறகாக வெட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்டபுல் அல்லது வைக்கோல்

Fere-nearly- Almost, for the most part, about, virtually; approximately; (but not in the sense of ‘usually’ or ‘mostly- ஏறக்குறைய, தோராயமாக

Ferens-Carry, bear, bring- கொண்டிருக்கிற, அளிக்கிற, வைத்திருக்கிற.

Ferreus-Iron, relating to iron- இரும்பு தொடர்பான, இரும்புக்குரிய, இரும்பு அடங்கிய.

Ferruginescens- Becoming the color of rust, rusty-red.செந்துருவின் நிறமாகிற.(Bryoerythrophyllum ferruginascens )

Ferrugineum- The rust-redcolor – செந்துரு நிறம்.(Rhododendron ferrugineum)

Ferrugineus- The color of iron-rust, dark-red, rusty, light brown with a little mixture of red; the taste of iron- அடர் சிவப்பு நிறம், செந்துருவின் நிறம், சிவபு கலந்த பழுப்பு நிறம், இரும்பின் சுவை.

Ferruginous-Ruddy or rust-colored- செந்துருவின் நிறம்.

Ferrugo-iron rust-இரும்புத்துரு

Ferrumequinum-A horseshoe- குதிரை லாட வடிவம்

Ferrum-iron-இரும்பு.

Fertile -Capable of producing fruit; of flowers when they produce seed, or of anthers containing pollen, Capable of bearing seeds or pollen, capable of producing offspring ; (of land) having nutrients capable of sustaining an abundant growth of plants- விதைகள் அல்லது மகரந்தங்களை கொண்டிருக்கிற,  வளமான, செழிப்பான, வளமான, இனப்பெருக்கமிக்க,   நிறைதிறமுடைய,   வளமிக்க.

Fertilization- The union of male and female gametes during sexual reproduction, fertilization, impregnation- கருவுறுதல், கருச்சேர்க்கை, வளமாக்கல்,

Fertilized-Made fruitful, fertilized- கருவுற்ற.

Ferula- The thin or slender branch of a tree;சிறுகிளை- பிரம்பு, ஆணைக்கோல்

Fervens-Be boiling hot- அதி வெப்பமான, சுடர் விட்டு ஒளிர்கிற

Festinus-Haste, hurry, speed- விரைவான

Fetens- having a bad smell, stinking, to stink, to smell badly, the whole herb strongly stinking, especially the root. கெடுமணம் கொண்டிருக்கிற(வேரைக்குறிப்பது).

Fetid -An offensive odour- கெடுமணம்

Fetid-stinking- நாற்றமடிக்கிற

Fetidus-Disgusting; see stinking; see putrid; cf. graveolens,-entis   ‘strong-smelling.’Sterculia foetida; Thalictrum foetidum; Ticoria foetida- நாற்றமடிக்கிற.

Fetor- an offensive smell, a stench; foulness, noisomeness- முடை, புழுங்கிய நாற்றம்.

Fetulentus- Stinking- நாற்றமடிக்கிற.

Fetus-Unborn, embryo- கரு, கருவில் இருக்கும் சிசு, முதிர்கரு

Fex- Excrement, solid motions-கழிவு, கழிவுப்பொருள், எரு, சாணம், வண்டல், மண்டி.

Fiber- A fiber, filament, நார், நாரிழை.

Fiber cell- Slender cells, many times longer than they are wide, A type of cell that is found in sclerenchyma; it is much elongated, and dies soon after an extensive modification of its cell wall. The cell wall is usually thickly lignified but is sometimes gelatinous. நாரிழை.

Fibered- Multifibris, with many fibers- நார் கொண்டிருக்கிற,

Fibra- Sheathing leaf, bade (of grasses, etc.) One of the subdivisions of a plant’s root- புல்தாள் உறை, வேரின் சிறுகிளை.

Fibrate- Fibrous.-நார்த்தன்மைய,நாருருவான

Fibril- A very small fiber; the roots of Lichens; any kind of small thread-shaped root; also applied occasionally among Fungals to the stipe; the fine, fiber-like wall thickenings in hyaline cells and sometimes cortical cells of Sphagnum; (in fungi) “a minute fiber, thin and threadlike; see ‘fibrillose- நுண்ணிழை

Fibriliformis-ஸ்haped like a fibril-இழை போன்ற தோற்றமுடைய.

Fibrilliger-Fibril-bearing, forming fibrils-இழை உருவாக்கம், இழை கொண்டிருக்கிற.

Fibrillose -Having small fibres- நுண்ணிழைகள் கொண்டிருக்கிற.

Fibrillosus-Covered with firm thin fibers, hairy- இழைகளால் சூழப்பட்ட, தூவிகள் கொண்ட.

Fibrillula-a very small fiber-மிக நுண்ணிய இழை

Fibrillulosus- With very small fibers (fibrilules) -நுண்ணிழைகொண்டிருக்கிற.

Fibrous roots – A branched root system, with all of the branches of about equal thickness- வேர்த்தூவிகள், சல்லிவேர், சிம்புவேர், வேரிழை

Fibrous- நாரியல்பு,நார்த்தன்மையுள்ள,நார்ச்சத்து நிறைந்த,இழைம, நார்த்தன்மையுடைய,நாருடைய, சிம்புவேர்போன்ற,நார்போன்ற

Ficulneus- Of the fig or fig tree-அத்தி மரத்தை குறிப்பது

Ficus- Any of a genus (Ficus) of chiefly tropical trees, shrubs, and woody vines of the mulberry family that have deciduous or evergreen leaves- அத்தி.

Fiddle-(of a leaf shape) Having rounded ends and a contracted center-சுருளி இலை, சுருள் இலை, நுனி இலைச்சுருள்.

Fidus- Divided (usually within the outer third of the structure or organ)- பிளந்த, பிளவுற்ற.

Fields-  An area of land on a farm, usually surrounded by fences or walls, used for growing crops or keeping animals in- சாகுபடிக்கான வயல்,நிலம், புலம், களம்,

Filament- The stalk that supports the pollen bearing anther in the male reproductive organ (stamen) of a flower; a long strand of similar cells joined end to end, as found, for example, in certain bacteria, algae, and fungi- இழை, மகரந்தத்தாள்.

Filamentous- Like a filament; thread-like- இழையுரு, நாருரு.

Filbert-  small nut-bearing tree much grown in Europe. synonyms:  small nut-bearing tree much grown in Europe. synonyms: Corylus avellana, Corylus avellana grandis, cobnut. hazel, hazelnut, hazelnut tree., cobnut. hazel, hazelnut, hazelnut tree- பழுப்பு நீல நிறமுள்ள கொட்டைவகை, கொட்டைவகை தரும் மரம், உண் கொட்டை(Hazelnuts)

Filiform -Thread-like, e.g. stamen filaments or leaf shapes.-  கயிற்றுவடிவம், நூல்போன்ற,சாட்டை அமைப்பு, இழையுரு.

Filum- A threadlike structure; filament- கயறு போன்ற, நூல், இழை

Fimbria- A natural prolongation or projection from a part of an organism either animal or plant.-மெல்லிழை,விளிம்பு மயி.ர்

Fimbriae- Hair-like appendages,Slender, hair-like projection -விளிம்பிழை,விளிம்புக் கீற்று,இதழ் விளிம்பு

Fimbriate- Fringed, usually with hairs- நுண்புற இழைகள், புற நுண் இழைகள், சீர்கொசுவமான,விளிம்பில் மயிரிழையுடைய.

Fimbrillate- Bordered with a minute fringe- நுண் விளிம்பு கொண்டிருக்கிற.

Fimbriolate- Having a border of hairs or filiform processes-விளிம்பில் மயிரடர்ந்த,

Fimentum- A dungheap-சாணிக்குவியல்

Fimetarius-  A dungheap fungus, on cattle dung-சாணத்தில் வளர்கின்ற, சாணப்பூஞ்சை.

Fimus- Dung, compost, manure, excrement, muck-கால்நடைகளின் சாணம், குதிரைச்சாணம், மாட்டுச்சாணம், சாண எரு.

Fine-  superior in kind, quality, or appearance : excellent-நேர்த்தி, உயர்ந்த, செம்மை, நயம்

Fissilis-capable of or prone to being split or divided in the direction of the grain or along natural planes of cleavage-உடையும்/பிளவுறும் இயல்பு கொண்டிருக்கிற.

Fission-The splitting of a unicellular organism into two or more separate daughter cells-  இரு பிளவு, பிளத்தல்.

Fissiparous – (of an organism) reproducing by fission-பிளவுற்று இனம்பெருக்குகிற, பிளவுண்டாக்குகிற.

Fissure -a split or crack; a line or opening of dehiscence- வெடிப்பு,பிளவு,பள்ளம்,மடிப்பு,பிளப்பு,மென்பிளவு

Fissured-  a long narrow slit or groove that divides an organ into lobes-நீள் பிளவு.

Fissus- cleft, split or divided half-way; separated; split- பிளவு, வெடிப்பு.

Fistula-A tube-shaped cavity,a pipe, tube, such as a water pipe,( tubular vessels; a hollow reed-stalk, a reed, cane)- புழை.

Fistulose-Hollow; usually applied to a tube-shaped cavity, as in a reed- உள்ளீடற்ற .

Flabby – Not strong or robust; incapable of exertion or endurance- தளர்வான,சுருக்கம் விழுந்த.

Flabellate-Fan-shaped, e.g. a flabellate (fan-shaped) leaf-விசிறி வடிவம்(இலை)

Flabellatim – Shaped like a fan- விசிறி வடிவம்

Flabellatus – Ffan-shaped colonies.  Lycopodium flabelliforme Fern. (fan-shaped)- விசிறி வடிவம்.

Flaccid -Out of condition; not strong or robust; incapable of exertion or endurance- தளர்வு, மெலிந்த, தளர்தசை, மென்மையானது.

Flagellaris – With flagella or whips.- கசையிழை கொண்டிருக்கிற.

Flagellum- A lash-like appendage used for locomotion (e.g., in sperm cells and some bacteria and protozoa)-கசையிழை

Flavedo -The colored outer layer of the rind of a citrus fruit-எலுமிச்சைக் குடும்பக்கனிகளின்   கடினமான வெளிப்புறம்.

Flavescent – Yellowish- மஞ்சளாக மாறுகிற, மஞ்சள் சாயலுள்ள, சிறிது மஞ்சளான.

Flax -Plant of the genus Linum that is cultivated for its seeds and for the fibers of its stem- ஆளி விதை-ஆளிச்செடி.(Linum usitatissimum)

Flaxen – “made of flax” or “the color of flax.” Flax is a plant used to make a linen-like material also called flax, and flaxen originally described things made of this fabric. சணலாலான, சணல்சார்ந்த, சணல் போன்ற நிறமுடைய, இலேசான பழுப்பு மஞ்சள் வண்ணமான.

Fleshy-Thick and pulpy -கொழுத்த,சதைப்பற்றுள்ள,சதைப்பிடிப்பான.

Flexistyly- Depending on the degree of maturation of the stamens, the style moves up or down (cataflexistyle or (ana-)hyperflexisyle) – மகரந்தத் தாள்களின் முதிர்வுக்கேற்ப அசையும் சூல்நுனி.

Flexuose- Bent alternately in different directions; zigzag- நெளிவரி வடிவம்.

Flexuous -Curved or bent- வளைந்த, வளைவுகள் நிரம்பிய.

Flinty – Very hard -கடினமான.

Floccose- Bearing tufts of long and tangled hairs, Having a soft and wooly covering of hairs.- குஞ்சப் பூப்பு, குஞ்சம் கொண்டிருக்கிற, மென் மயிரடர்ந்த.

Floccosus -Having or covered with tufts of soft woolly hairs that are often deciduous – குஞ்சம் போன்ற அடர்ந்த சிக்கலான மயிர்களால் சூழப்பட்ட

Flocculent -Having a fluffy character or appearance-தூள்ம,திரைப்பிகள்.

Flocculose – Finely floccose, full of small flocks or tufts of wool or soft hairs- மென் தூவிகள் நிறைந்த.

Flocculus -A small loosely aggregated mass-கம்பளி மயிர்த்திரள் போன்ற சிறு பொருட்த்தொகுதி,

Floccus -A small woolly tuft of hair- மெல்லிழைத்திரள்.

Flock-Clump, cluster-குவியல், மயிர்க்குஞ்சம்.

Flora -All the plants of a particular place or from a particular time in history-(ஒரு காலகட்டத்தில்) குறிப்பிட்ட நிலப்பரப்பைச்சேர்ந்த தாவரவர்க்கம், தாவர வளம்.

Floral diagram- A graphic representation of the structure of a flower. It shows the number of floral organs, their arrangement and fusion. Different parts of the flower are represented by their respective symbols- மலர்ச்சித்திரம்.

Floral envelope-The part of a flower that surrounds the stamens and pistil: the calyx and corolla (considered together) or the perianth (அல்லியும் புல்லியும் இணைந்த) அதழ் வட்டம்.

Floral formula-A description of flower structure using numbers, letters, and various symbols-  எண்கள், குறியீடுகள் மற்றும் எழுத்துக்களால் மலரின் அமைப்பைச்சுட்டும் மலர்ச்சூத்திரம்.

Floral leaves- Any of the modified leaves (as a sepal or petal) forming the perianth of a flower- அதழாக மாற்றமடைந்திருக்கும் மலரின் அல்லி அல்லது புல்லி.

Floral tube -An imprecise term sometimes used as a synonym of hypanthium, corolla tube, or calyx tube- அல்லி அல்லது புல்லிக்குழாயை குறிப்பது.

Floral-of, relating to, or depicting flowers; a floral display; a floral design.  of or relating to a flora; floral diversity -மலர்களுக்குரிய

Florentia–Blossoming- மலர்தல்

Florentinus -to blossom – மலர்தல்.

Floret-A reduced flower; for example flowers in the Asteraceae (sunflower) or Poaceae (grass) families– a small flower. especially : one of the small flowers forming the head of a composite plant. A cluster of flower buds separated from a head especially when used as food, small flower, especially one of the small flowers that is part of a larger flower-கொத்துப்பூவின் கூறான சிறு மலர், சிறு மலர். மஞ்சரியின் சிறுமலர், மலர்ப்பிரிவு, குறும்பூ.

Floricane -A flowering and fruiting stem or cane of a plant such as the bramble-மலர்க்காம்பு, கனிக்காம்பு

Florid  -Very flowery in style- பூவளமிக்க, பூவொத்த, பூவனப்புடைய, பகட்டொளி வண்ணம் வாய்ந்த, செக்கச்சிவந்த மலர்களால் அணிசெய்யப்பட்ட, மலர்போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற,  

Floridanus –  Floridanus – ஃப்ளோரிடாவைச் சேர்ந்த.

Florifer -Bearing flowers, flowering,flower-bearing- மலர்களைத் தோற்றுவிக்கிற, மலர்வளத்துக்குரிய.

Floriferous-(of a plant) producing many flowers-மிகையாக மலர்களை தோற்றுவிப்பது.

Floriparus -Producing secondary or supplementary flowers rather than fruits-கனிகளைக்காட்டிலும் அதிக மலர்களைத் தோற்றுவிப்பது.

Florist-A person who has a shop that sells flowers-மலர்பண்ணை வளர்ப்பவர், பூ விற்பவர், மலர் வகைகளை ஆராயும் மாணவர்.

Floruit- the time when the person was known to be active, and an exact birth or death date isn’t known-பிறந்தநாளும் இறந்தநாளும் சரியாகத் தெரியாத போது குறிப்பிடப்படும் வாழ்வுக்காலம்.

Florula – The flora of a small single environment- மிகச்சிறிய நிலப்பகுதியின் தாவர வகைகள்.

Flosculus -Flowery ornament- மலரணி

Flower -The reproductive structure of a plant; usually with sepals, petals, stamens and a pistil- மலர்

Fluted- Furrowed or grooved- வடு, பள்ளம், தடம் கொண்டது.

Fluxus -Flowing- ஒழுகுதல், வழிதல்.

Fodina -A place from which a mineral is dug; mine, pit- கனிமங்கள் கிடைக்கும் சுரங்கம், குழி.

Foecundus – Fertile, productive of offspring; fruitful- வளமான.

Foedus Offensive, foul- நாற்றம்.

Foenum – Feeding, food, nourishment, fodder-உணவு, தீவனம், சத்து.

Foetidus -That has an ill smell, evil-smelling, stinking, fetid; foul; having a disagreeable smell of any kind-கெடுமணம் கொண்ட.

Foetor -A distinctive odour that is offensively unpleasant- கெடுமணம்.

Foetulentus -Stinking of dung, with the odor of dung- மலநாற்றம்.

Foetus -The action of bearing of young; young, offspring, progeny- முதிர் கரு, முட்டையின் முதிர் கருமுனை, கரு.

Foetutina – Dungheap, dunghill- சாணக்குத்தாரம், மலக்குவியல்.

Foliaceous -Leaf-like in appearance- இலை போன்ற.

Foliage- Leaves  main organ of photosynthesis and transpiration in higher plants- இலைத்தொகுதி, இலைகளின் திரள், இலைச்செறிவு.

Foliaris – Relating to the leaf – இலை தொடர்பான

Foliate-Preceded by a number to signify having a certain number of leaflets, e.g. 3-foliate means “having three leaflets- இலைகளின் எண்ணிக்கையை குறிக்கும் எண்களுக்கு பின்னொட்டாக வரும் சொல்.

Foliatura -Provided with leaves, leaf-bearing, leafy.-இலைகொண்டிருக்கிற, இலைகளாலான.

Foliatus  -Provided with leaves, leaf-bearing, leafy- இலை கொண்டிருக்கிற.

Foliicolous -A growth habit of certain lichens, algae, and fungi that prefer to grow on the leaves of vascular plants- இலைகளின் மீது வளர்கின்ற லைக்கன்கள்,பாசிகள் மற்றும் பூஞ்சைகளை குறிப்பது.

Foliolatus -Provided with leaflets-சிற்றிலை கொண்டிருக்கிற.

Foliole -A small, leaf-like appendage on the front or back, each of the leaflike structures that together make up a compound leaf- சிற்றிலை  நீட்சி.

Foliolum -Having or relating to leaflets- இலைகொண்டிருக்கிற, இலை தொடர்பான.

Foliose- Leaf-like; flattened like a leaf- இலைவடிவம், தட்டையாக இலை போல,

Foliosus – Leafy, full of leaves, many-leaved; covered closely with leaves- இலைச்செறிவு.

Follicle- A fruit with one carpel containing few to several seeds, splits along one line of dehiscence at maturity, a dry unilocular fruit formed from one carpel, containing two or more seeds, A dry fruit formed from one carpel splitting along a single suture to which the seeds are attached- அடிப்புறமாக வெடிக்கும், (ஒருபுற) உலர் வெடிகனி (எருக்கின் கனி).

Fontanus – Growing in or by springs or a spring of water; Pertaining to springs or fountains; growing in fast-running water -நீரூற்றுகளின் அருகில் வளர்கின்ற, ஓடும் நீரில் வளர்கின்ற.

Fontinalis – A genus of submerged aquatic mosses belonging to the subclass Bryidae., நீர் வாழ் படுவப்பாசியின் வகை.

Footstalk – A small supporting stalk in plants; a pedicel, peduncle, or pedicle.இலைக்காம்பு, மலர்க்காம்பு, மஞ்சரிக்காம்பு.

Foot-the lower part of some plant structures, as of a developing moss sporophyte embedded in the parental tissue. a unit of length equal to one third of a yard or 12 inches.- அடிப்பகுதி, இணைப்புப்பகுதி,

Foramen- An aperture through the integuments, allowing the passage of the pollen tubes to the nucleus- திறப்பு, புழை ஊடுசெல் வழி.

Foraminatus –  Provided with foramina, with openings or aperatures- திறப்புகள் கொண்டிருக்கிற, 

Foraminosus – Perforated by holes , full of holes-  துளை கொண்டிருக்கிற.

Foraminula-  An opening, orifice, or short passage, as in the integument of the ovule of a plant.-சூலகத்தினுள் நுழையும் நுண்திறப்பு.(மகரந்தக்குழாய் கருவுறுதலின் போது நுழையும் வழி)

Foraminulatus -Provided with or covered with foraminuli-பல வழிகள், திறப்புகள், வாயில்கள் கொண்டிருக்கிற, 

Forb- A non-grass like herb- an herbaceous flowering plant that is not a graminoid, Any non-woody flowering plant that is not a grass, sedge, or rush- அகலிலை மூலிகை

Forest- Vegetation dominated by trees with single trunks, including closely arranged trees with or without an understory of shrubs and herbs. கானகம், வனம், காடு.

Forester -Someone trained in forestry- கானகப் பணியாளர்,கானக அலுவலர், வனப்பாதுகாவலர், வளர் மரங்களைக் கவனிப்பவர், காட்டில் வாழ்பவர், காட்டில் வாழ்வது, கானியல் வல்லுனர்.

Forimicarius- The ant colony- எறும்புக்கூட்டம்.

Fork- The act of branching out or dividing into branches- கிளை,அடிமரக்கவை.

Forked-Divided into two more or less equal branches- இரண்டாகப்பிளவுற்ற.

Forma (in common usage, form)- A taxonomic category subordinate to species and within the taxonomic hierarchy, below variety (varietas), and usually differentiated by a minor character- வகைப்பாட்டு வரிசையில் ஒரு படிநிலை.

Formica – A genus of ants of the family Formicidae- எறும்புகளின் பேரினம்.

Formicarianus -Those plants possessing saccharine fluids, thus attracting ants- எறும்புகளை கவரும் இனிப்புத் திரவத்தை சுரக்கும் தாவரங்கள்.

Formicarium – An artificial ant nest arranged for observation or study of the activities of the insects-எறும்புகளை ஆராயும் பொருட்டு உருவக்கிய செயற்கைக்கூடு/ புற்று.

Formicosus-f Full of ants-றும்புகளின் நிரை 

Fornicatus – Arched, provided with small arched scale-like appendages in the corolla-tube- அல்லிக்குழலின் வளைந்த செதில் போன்ற நீட்சி

Fornix – An arched bundle of white fiber-வளைவு,படலக்குழி.

Fovea -A small pit or depression-area consisting of a small depression- சிறு குழி.

Fovens – Nurturing,  surrounding, in a protective or nurturing sense- வளர்க்கிற,பாதுகாக்கிற.

Foveola -The perithecium of certain Fungus – சில வகைப் பூஞ்சைகளின் குடுவை வடிவ கனியுறுப்பு.

Foveolate -Having regular tiny pits. (Compare faveolate) – நுண் குழிகள் கொண்டிருக்கிற.

Foveolatus -Minutely or slightly pitted; marked with small pitting, delicately pitted; dimpled- சிறு குழி, நுண் குழிவு

Fovilla -One of the fine granules in the protoplasm of a pollen grain-மகரந்தத்தின் உள்ளிருக்கும் சிறு குருணை.

Foxglove -Any plant of the genus Digitalis. especially : a common European biennial or perennial (D. purpurea) cultivated for its showy racemes of dotted white or purple tubular flowers and as a source of digitalis-கையுறை விரல்கள் போன்ற வடிவத்தில் இளஞ்சிவப்பு-ஊதா அல்லது வெள்ளையில் கூர்முனைகளைக் கொண்ட மலர்களை அளிக்கும்  தாவரம். இது டிஜிட்டாலிஸ் என்ற மருந்தின் ஆதாரம்.

Frankincense – An aromatic gum resin obtained from various trees in the genus Boswellia. frankincense. Also called: olibanum-சாம்பிராணி. குங்கிலியம்.

Fraxinetum – An association of ash-trees- பிராக்சினஸ் மரக்கூட்டம்

Fraxinin – A principle existing in the bark of the ash-பிராக்சினஸ் மரப்பட்டையின் வேதிப்பொருள்.

Fraxinus -The common ash (Fraxinus excelsior), of the Oleaceae family, is also called the “European ash”. Its name comes from the Greek word “phraxis “, which means “hedge” and the Latin word “fraxinus “, a word that means “lightning”, for when it grows in isolated conditions, this tree is reputed to attract lightning. பிராக்ஸினஸ் மரம்.

Freckled- Freckles-  Flat, circular spots on the skin of a fruit that typically range in the size of the head of a nail and may be various colors. Freckles on fruits may be caused by infections by plant pathogens, or by physiological processes such as ripening or aging- நோய்வாய்ப்பட்ட (பப்பாளி போன்ற) கனிகளின் மேல் தோன்றும்  பல நிறங்களிலான சிறு வட்டத்திட்டுகள், புருடுகள். 

Free central -(of placentation) Ovules attached to a free-standing column in the center of a unilocular ovary-தனிமைய சூலொட்டு.

Free- Not united with other organs of the same type; not attached at one end- இணைந்திருக்காத.(மகரந்த தாள்களை, சூலகங்களை குறிப்பது)

Frigescens – Becoming cold.

Fringed-  With hairs or bristles on the margin- ஒரம் அல்லது விளிம்பில் தூவிகள் கொண்டிருப்பது.

Fritillus -Checker-board or dice-box, referring to markings on perianth of some species- சில வகை தாவரங்களின் அதழ்களில் இருக்கும் வரிகள்.

Frond -The leaf of a fern, cycad, or palm- பெரணியிலை.

Frondescentia- The condition or period of unfolding of leaves- இலைகள் சுருளவிழும் கால அளவு. 

Frondose – Bearing fronds : resembling a frond- பெரணியிலை போன்ற.

Frondosus -Leafy, leaf-like, leaf-bearing, with well-developed leaves, full of leaves; closely and regularly branched in one plane, as in a fern frond.

Frondula -Division of a pinnate frond- பெரணியிலையின் பகுதி

Fruct -The combining form fruct– is used like a prefix meaning “fruit.” It is very rarely used in scientific terms, especially in botany-கனி என்பதைக் குறிக்கும் முன்னொட்டு

Fructicolous -Living on fruit- கனியிலிருக்கிற.

Fructifer – Fruit-bearing-கனி கொண்டிருக்கிற

Fructification-Organs of fruiting (especially the reproductive parts of ferns and mosses- கீழ்நிலைத்தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புக்களின் தொகுதி.

Fructus -Fruit- கனி

Frugifer -Fruit-bearing- கனி கொண்டிருக்கிற கனியளிக்கிற,

Frugiparens-an animal that thrives mostly on raw fruits or succulent fruit-like produce of plants such as roots, shoots, nuts and seeds. (Approximately 20% of mammalian herbivores eat fruit)- பழந்தின்னி உயிரி. 

Frugiparus -Fruit-bearing- கனிகொண்டிருக்கிற,

Fruit -A ripened ovary and associated structures- கனிந்த கருவுற்ற சூலகம்-( A seed-bearing structure, present in all angiosperms, formed from the mature ovary and sometimes associated floral parts upon fertilization).

Fruiter- a tree producing fruit at a specified time or in a specified manner- கனி மரம்.

Fruiterer- A person who deals in fruit.-பழமரம் வளர்ப்பவர்.

Fruitstalk – The thin part of fruit that joins it to the plant or tree- கனிக்காம்பு.

Frutectum -A place full of shrubs or bushes; shrubby association of species; a thicket- புதர்க்கூட்டம்

Frutescens -Shrubby, somewhat or becoming shrubby or woody- புதர் போன்ற.

Frutescent- Shrub-like (fruticose) or becoming shrub-like.

Frutex -A plant or shrub with a woody stem-வன்மரத்தண்டு கொண்ட புதர்

Fruticans -Shrubby” or “bushy -புதர் போன்ற.

Fruticatus -Bushy, bristly, prickly- அடர்ந்த புதர்.

Fruticetum -A collection of shrubs grown for ornament or study. வளர்க்கப்படும் புதர்க்கூட்டம்.

Fruticose-Shrubby; having the branching character of a shrub.

Fruticosus- having a shrubby often branched thallus that grows perpendicular to the substrate-அடர்ந்த புதர் போன்ற வளர்ச்சி.

Fruticulosus-   Small shrub-சிறு புதர்ச்செடி.

Fruticulus- A small shrub, shrublet- சிறு புதர்.

Frux- Fruit,that part of a plant which consists of the ripened carpels and the parts adhering them-கனி

Fugacious-  Plant parts that wither or fall off before the usual time, Disappearing, falling off, or withering. Compare persistent and caducous.நிலையற்ற- விரைந்தேடுகிற, எளிதில் மறைகிற, 

Fugax- Short-lived; falling off, or perishing very rapidly- withering or falling off quickly- குறுகிய காலம் மட்டுமே இருக்கிற,விரைந்து வாடுகிற, விரைந்து உதிர்கிற.

Fugitivus- Quickly disappearing; ‘evanescent,fugacious- fleeing away, fugitive, விரைந்து உதிர்கிற.

Fulciens- Supporting, propping up, upholding; supporting or propping up anything; said of one organ which is placed beneath another- முட்டுக்கொடுக்கிற, தங்கிப்பிடிக்கிற.

Fulcimen- Prop, support, pillar- முண்டு, முட்டு- ஆதாரக்கம்பம்.

Fuliginosus-   Sooty or smoky, of the colour of soot; dull greyish-black or brown-புகைக்கரியின் நிறம்.

Fuliginous-  Sooty; dusky-புகைக்கரி படிந்த, கருநிற, மங்கலான.

Fuligo- A widely distributed genus of large slime molds with the sporangia gathered in an aethalium and the plasmodium commonly bright yellow- கோழைப்பூசணத்தின் பேரினம்.

Fultus- Supported, upheld, propped up- முட்டுக்கொடுத்த.

Fulvaster- Yellowish- மஞ்சள் நிறம்.

Fulvescens- Yellowing, yellowish, tawny-மஞ்சள் நிறமான, பழுப்பு மஞ்சளான, தோல் பதனீட்டு நிறமான.

Fulvus- Reddish-yellow-செம்மஞ்சள் நிறம்,

Funarius- Relating to a rope- திருகிய கயறு போன்ற.

Fundibulum- Funnel-shape – குழல் வடிவம்/புனல் வடிவம்.

Fundus- The bottom of or part opposite the aperture of the internal surface of a hollow organ-அடிக்குழி.

Funicle- The stalk that attaches an ovule or seed to the wall of the ovary-சூல்காம்பு.

Funiculus-The stalk by which an ovule or seed is connected to the placenta in the ovary-சூல்காம்புள்ள.

Funnel- An object that is wide at the top and narrow at the bottom, used for pouring liquid, powder, etc. into a small opening-மேற்பக்கம் அகன்று அடிப்பக்கம் குறுகலான, சிறிய திறப்புடைய கொள்கலங்களி்ல் திரவம், நுண்பொடி முதலியவற்றை ஊற்றுவதற்கு/கொட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்; புனல்.

Funnel form- Having a form gradually widening from the base to the apex; funnel-shaped- புனல் வடிவம்.

Funnel-shaped- A conical shape with a wider and a narrower opening at the two ends-புனல் வடிவான, ஊற்றுவாயினையுடைய,பெய்குழல், புகைவாயில்.

Furca- An ingrowth of the thorax – கவடுள்ள கவை முள்போன்ற வளர்ச்சி. 

Furcalis- Forked- பிளவுற்ற.

Furcate -Forked, usually applied to a terminal division; with two long lobes – நுனிக்கிளைத்தல்,இரட்டைப்பிளவு.

Furcatio- Something that is branched, the act or process of branching- கிளைத்தல்

Furcatus- Branching like a fork,forked- கிளைத்த, பிளவுபட்ட.

Furcellatus- Having a small forked notch at the apex- உச்சியில் பிளவுபட்ட முழைகொண்டிருக்கிற.

Furcifer-Forked-பிளவுற்ற.

Furciformis- Snow fungus, snow ear, silver ear fungus, white jelly mushroom-Tremella fuciformis என்னும் பனிப்பூஞ்சை

Furfuraceus-Consisting of or covered with flaky particles-சொரசொரப்பான தோலுடைய, செதிளுடைய, பொடுகுபோன்ற, உமிபோன்ற செதிள்களால் மூடப்பட்ட.

Fuscus-Dark, swarthy, dusky- கருமையான,இருண்ட,கரிய, கரு நிறம் கொண்ட.

Fused-Joined together- இணைந்த.

Fusiformis–Having a spindle-like shape that is wide in the middle and tapers at both ends-கதிர்க்கோல் வடிவான, இடைபெருத்து இருமுனைகளிலும் கூம்பியுள்ள.

Fustis-A long stick, a knobbed stick, முழைகள் கொண்ட நீண்ட தடி, சிறு புடைப்புக்களையுடைய தடி.

தம்பி விஜய் சந்திரசேகருக்கு,

உங்கள் த வெ கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். ஆனால் கட்சிக் கொடியில்  வெற்றிக்கு குறியீடு எனக்கருதி நீங்கள் பொறித்திருப்பது வாகை மலரல்ல ,அது தூங்கு வாகை, சீமை வாகை, பண்ணி வாகை,  செம்பட்டு வாகை,அயல் வாகை என்றெல்லாம் அழைக்கப்படும்  ஒரு அயல் மரத்தின் மலர்.

நம் முன்னோர்கள் வெற்றியின் போது சூடிக்கொண்டதும் அதன் பொருட்டு உருவான வாகை சூடல் என்னும் சொல்லாட்சியும் இம்மலரலினாலல்ல. அது அல்பிஸியா லெபெக் Albizia lebbeck என்னும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வாகை மரத்தின் அழகிய இளம் பச்சை நிற மலர்கள்.

நீங்கள் வைத்திருப்பது சமன்னா சமன் –Samanea saman என்னும் தென் மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட மரத்தின் இளஞ்சிவப்பு  மலர். 

உங்கள் கட்சியின் கொடியை டிகோடிங் செய்து கொண்டிருக்கும் உங்கள் ரசிகர்களில் யாருக்கும் தாவரவியல் தெரிந்திருக்க நியாயமில்லைதான் எனினும் கட்சிக்கொடியின் குறியீடுகளை தெரிவு செய்கையில் நீங்கள் கூகுளை சார்ந்திருக்காமல் தாவரவியலாளர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்.

மேலும்  விழாக்களில் நீங்கள் யார் பக்கத்தில் அமர்கிறீர்கள் என்பதும் சமூக வெளியில் உற்று நோக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. சாதீய வன்முறையினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் அருகிலும் திருநங்கை ஒருவரின் அருகிலும் அமர்ந்தது மூலம்  விளிம்பு நிலை  மக்களுக்கான தலைவர் நீங்கள் என்பதை காட்டியிருக்கிறீர்கள். அறிவியல் வெளியில் தாவரவியலும்  அழிவின் விளிம்பில் இருப்பதால்தான்  த   வெ க வின்  கட்சிச்சின்னம் குறித்த பிழையை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

கொடியின் 28 நட்சத்திரங்கள் குறிப்பிடும் 28 கொள்கைகளை பிற்பாடு அறிவிப்பீர்கள் என்று நம்புகிறேன். எனினும் ’’வாகைன்னா வெற்றி, விஜய்னாலும் வெற்றி’’ என ஆர்ப்பரிக்கும் உங்கள் ரசிகர்களுக்கு அது தென் அமெரிக்காவினரின் வெற்றியாகிவிடும் என்பதைச் சொல்லுங்கள். ஏனெனில்  தூங்கு வாகை இந்திய மரமல்ல அது தென் மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அல்பிஸியா லெபெக் தான் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நமது முன்னோர்கள் சூடிக்கொண்ட வாகைமலரை கொண்ட  மரம். 

எனக்கு அரசியல் நிலைப்பாடோ, அரசியல் குறித்த கூரிய பார்வையோ இல்லை, சுமாரான அல்லது மங்கலான பார்வை தான் இருக்கிறது. (நான் சொல்வது எனக்கிருக்கும் Keratoconus எனப்படும் அரிய  கண் கூம்புக் குறைபாட்டை அல்ல  என்பதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.)

நான் சொல்வது பொதுவானஅரசியல் அவதானிப்புப் பார்வையை. ஒரு முக்கிய கட்சிப் பிரமுகரின் சிலையை வீட்டு வாசலில்  எழுப்பி அதை மேற்படி தலைவரே வந்து திறந்து வைக்க அழைப்பு விடுத்து, அவருக்காக இரவுவரை காத்திருந்து அவர் பல வேலைகளில் இதை மறந்து விட்டதால் அவமானத்தால் சிலையை உடைத்து விட்டு அங்கேயே விஷமருந்தி, நிறைமாதக்  கர்ப்பிணியான  மனைவியை  விட்டுவிட்டு உயிரிழந்த  ஒருவரின் கொடிவழியில் வந்தவள் என்னும்  அளவுக்கே அரசியல் பார்வை இருக்கிறது.

ஏன் விஜய் சந்திரசேகர் என்றழைத்தேனென்றால்,  என் சொந்தத் தம்பியின் பெயரும் விஜய்தான் . அவனும் அடிக்கடி நான் பணிபுரியும் கல்லூரிக்கு வருவதால் அவன்தான் புதிய  கட்சி துவங்கி இருக்கிறான் என்று நினைத்து அவன் பின்னாலும் என்னை அறிந்த இளைஞர்கள் திரண்டால்  அவர்களைச் சமாளிக்கும் நல்மேய்ப்பன் அல்ல அவன் என்றுதான் உங்களின் மனஸ்தாபத்தையும் பொருட்படுத்தாமல் சந்திரசேகரையும் பின்னொட்டாகச் சேர்த்தேன். கட்சிக்கொடி வெளியீட்டு விழாவில் உங்கள் பெற்றோரும் முன்வரிசையில் அமர்ந்திருந்ததை உளவுத்துறையினரோடு சேர்ந்து நானும் உற்றுக்கவனித்தேன். மகிழ்ந்தேன்.

எனவே இந்தக் கட்சி கொடிச் சின்னத்தை மாற்றுவது தொடர்பாக உங்கள் முன்பாக இரு வாயில்களைத் திறந்து வைக்கிறேன். 

1. தவறை   ஒத்துக்கொண்டு சின்னத்தைச் சரியான வாகை  மலரைக் கொண்டு மாற்றுதல்.

 உங்கள் ரசிகத் தொண்டர்களுக்கு இத்தவறை மனப்பூர்வமாக    ஒத்துக்கொள்ளும் தலைவனாக உங்கள் தூய  மனதை திறந்துகாட்டும் ஒரு வாய்ப்பாக  இது  அமையலாம்.

2. ஒரு கட்சி தொடங்கப்பட்டால்  அதைகுறித்து எதையும் ஆராயாமல் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு அதில் இணையும் மரபு நமக்கிருப்பதால்   நுண்மையாகக் கட்சிக்கொடியின் சின்னம் தவறாக இருப்பதையெல்லாம் கவனித்திருக்க மாட்டார்கள், எனவே காதும் காதும் வைத்தது போல்  மலரையும் மலரையும் மாற்றி விடுங்கள்.

2026 என்பது  வெகுதூரத்தில் இல்லை , வியாழனுக்கும் வெள்ளிக்கும் இருக்கும்  தூரம்தான். எனவே நாளை த வெ க பெரும்பான்மையாக வாகை சூடி அரியணையில் அமரவேண்டி வரும் போது  உங்களின் எதிர்கட்சியினரும் பிறரும் அதிலிருப்பது அன்னிய தேச மலர் என்பதைக் கண்டுபிடித்துப் பெரும் சிக்கலை உருவாக்கலாம்.

 அப்போது அந்நிய நாட்டு சதி, அன்னிய நாட்டு நிதி என்றெல்லாம் சிக்கல்கள் எழக்கூடும், எனவே  ’’இளைதாக முள் மரம் கொல்க’’ அதாவது… இல்லை வேண்டாம் சுருக்கமாக சொல்கிறேனே தொடக்கத்திலேயே தவறை சரி செய்து விடுங்கள்.

உங்களுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியவகையில் நானும் நேரடி  அரசியலில் இறங்கி இருக்கிறேன் என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன். பகீரென்கிறது. ஒரு அரசுப்பணியாளராக நான் அரசியலில் ஈடுபடக்கூடாது  என்றுதான் நினைக்கிறேன்

இதைக் குறித்து கல்லூரிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் கேட்டுக்கொள்கிறேன்.அப்படி இது தவறான முன்னெடுப்பென்றால் என் பின்னால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அணி திரளும் என்று நம்புகிறேன்,

நாங்கள்  அணி திரண்டு    போராடி  எங்களுக்கு வரவேண்டிய  பணிமேம்பாட்டு நிதியைக்கூட இதுவரை பெற்றதில்லை என்பதால் அரசு இந்த பிரச்னையையும்   கண்டுகொள்ளாது என்னும் நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

தம்பி, ’’ அரியணை அமர்தல் போல் தீயூழ் பிறிதில்லை’’ என்கிறது வெண்முரசு. கட்சிக்கொடியை அறிவிப்பதன் வழியாக நீங்கள்  அதற்குத் தயாராகவே இருக்கிறீர்கள். அதற்கான மனக்கட்டியை தேவன் உங்களுக்கு அளிப்பாராக!.

உங்கள் கட்சிப்பாடலை கேட்டேன், மிகவும் சுமாராக இருக்கிறது. எழுச்சியூட்டும் படி இருந்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்.

  வாகை என்றாலும், வெற்றி என்றாலும்,  விஜய் என்றாலும் ஒன்றுதான் எனவே  ’’ஜெய் விஜயீபவ” என்பதை ஏன் நீங்கள் உங்கள்  கட்சி முழக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது?

சங்கீதாவுக்கும் குழந்தைகளுக்கும் என் அன்பை தெரிவியுங்கள்

 ’’ஜெய் விஜயீ பவ’’

இப்படிக்கு அன்பு அக்கா

லோகமாதேவி

ஜெய் விஜயீ பவ!

தம்பி விஜய் சந்திரசேகருக்கு,

உங்கள் த வெ கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். ஆனால் கட்சிக் கொடியில்  வெற்றிக்கு குறியீடு எனக்கருதி நீங்கள் பொறித்திருப்பது வாகை மலரல்ல ,அது தூங்கு வாகை, சீமை வாகை, பண்ணி வாகை,  செம்பட்டு வாகை,அயல் வாகை என்றெல்லாம் அழைக்கப்படும்  ஒரு அயல் மரத்தின் மலர்.

நம் முன்னோர்கள் வெற்றியின் போது சூடிக்கொண்டதும் அதன் பொருட்டு உருவான வாகை சூடல் என்னும் சொல்லாட்சியும் இம்மலரலினாலல்ல. அது அல்பிஸியா லெபெக் Albizia lebbeck என்னும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வாகை மரத்தின் அழகிய இளம் பச்சை நிற மலர்கள்.

நீங்கள் வைத்திருப்பது சமன்னா சமன் –Samanea saman என்னும் தென் மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட மரத்தின் இளஞ்சிவப்பு  மலர். 

உங்கள் கட்சியின் கொடியை டிகோடிங் செய்து கொண்டிருக்கும் உங்கள் ரசிகர்களில் யாருக்கும் தாவரவியல் தெரிந்திருக்க நியாயமில்லைதான் எனினும் கட்சிக்கொடியின் குறியீடுகளை தெரிவு செய்கையில் நீங்கள் கூகுளை சார்ந்திருக்காமல் தாவரவியலாளர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்.

நீங்கள் கட்சிக்கொடி அறிமுக விழாவை பனையூரில் நிகழ்த்தியது  அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழகத்தின் மாநில மரமான பனையை காப்பாற்றத்தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

மேலும்  விழாக்களில் நீங்கள் யார் பக்கத்தில் அமர்கிறீர்கள் என்பதும் சமூக வெளியில் உற்று நோக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. சாதீய வன்முறையினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் அருகிலும் திருநங்கை ஒருவரின் அருகிலும் அமர்ந்தது மூலம்  விளிம்பு நிலை  மக்களுக்கான தலைவர் நீங்கள் என்பதை காட்டியிருக்கிறீர்கள். அறிவியல் வெளியில் தாவரவியலும்  அழிவின் விளிம்பில் இருப்பதால்தான்  த   வெ க வின்  கட்சிச்சின்னம் குறித்த பிழையை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

கொடியின் 28 நட்சத்திரங்கள் குறிப்பிடும் 28 கொள்கைகளை பிற்பாடு அறிவிப்பீர்கள் என்று நம்புகிறேன். எனினும் ’’வாகைன்னா வெற்றி, விஜய்னாலும் வெற்றி’’ என ஆர்ப்பரிக்கும் உங்கள் ரசிகர்களுக்கு அது தென் அமெரிக்காவினரின் வெற்றியாகிவிடும் என்பதைச் சொல்லுங்கள். ஏனெனில்  தூங்கு வாகை இந்திய மரமல்ல அது தென் மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அல்பிஸியா லெபெக் தான் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நமது முன்னோர்கள் சூடிக்கொண்ட வாகைமலரை கொண்ட  மரம். 

மேலும் இந்த மரத்துக்குத் தூங்கு வாகை என்னும் பெயர் இருப்பதால் உங்கள் அரசியல் எதிரிகள் (? அதாவது  கட்சி வளருகையில் உருவாகும் சாத்தியமிருக்கும் எதிரிகள்) உங்களைத் தூங்கும் கட்சி என எள்ளி நகையாட வாய்ப்பளிக்காதீர்கள். 

இன்னொரு பெயரும் இருக்கிறது இம்மரத்துக்கு பண்ணி வாகை என்று. தமிழகத்தில் தமிழறியாதவர்களே பெரும்பான்மையாக இருப்பதால்அந்த மூணு சுழி ’ண்’  என்பதை இரண்டு சுழியாகக் கருதி உங்களை அவர்கள் வேறு வகையிலும் இழிவு படுத்தக்கூடும்.

மேலும் நீங்கள் யோசிக்கக்கூடும் ஏன் நான் விஜய் சந்திரசேகர் என்று நீங்கள் உபயோகிக்காத உங்கள் அப்பாவின் பெயருடன் உங்களைக் குறிப்பிட்டிருக்கிறேன் என்று. உஙகளுக்கும் அப்பாவுக்கும் மனஸ்தாபங்கள் இருப்பதை நானுமறிவேன், அதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான் ஏனெனில் நீங்கள் சிறுவனாயிருக்கையிலிருந்தே (செந்தூரப்பாண்டி க்கும்  முன்பு ) அப்பா உங்களை திரைக்குக் கொண்டு  வர அரும்பாடு பட்டதை  நானறிவேன். 

அவர் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. சட்டம் ஒரு இருட்டறையெல்லாம்   என்ன ஒரு படம். இங்கு  என்ன என்பது கேள்விக்குறியல்ல, ஆச்சர்யக்குறி என்பதையும்  அடிக்கோடிடுகிறேன்.  கதை ஷோபாம்மாவுடையது, திரைக்கதையும் இயக்கமும் உங்கள் அப்பாவுடையது. எப்பேர்ப்பட்ட வணிக வெற்றி வாகையை அது அடைந்தது ,எத்தனை  எத்தனை ரிமேக்குகள் கண்டது அது இல்லையா?

நீங்கள்  வாகையை தவறாகச் சித்தரித்ததில் மற்றொரு சிக்கலும் எழலாம் பல வெற்றிப்படங்களின் மூலம் வாகை சூடியவராகையால் உங்கள் தந்தையின் பெயர் வாகை சந்திரசேகர் என்று யாரேனும் எண்ணக்கூடும். அப்போது நீங்கள் தலையிட்டு அது ’’ஆறும் அது ஆழமில்லை’’ என்று ஒற்றைக்கையுடன்  ஏரிக்கரையில் பாடி   ரம்யா  கிருஷ்ணனை  குற்ற  உணர்வில் கொல்பவர் என்று விளக்கமளிக்க வேண்டி இருக்கும்.

 உங்களின் குடும்ப விஷயத்தில் நான்  அதிகம் தலையிடக் கூடாது  அது நாகரீகமல்லை, எனினும் இப்போது இந்தக் குறைந்த  பட்ச தலையீடென்பதை    பொதுவெளியில் இருக்கும் ஆளுமையாக நீங்கள் தவிர்க்க முடியாதது என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  

எனக்கு அரசியல் நிலைப்பாடோ, அரசியல் குறித்த கூரிய பார்வையோ இல்லை, சுமாரான அல்லது மங்கலான பார்வை தான் இருக்கிறது. (நான் சொல்வது எனக்கிருக்கும் Keratoconus எனப்படும் அரிய  கண் கூம்புக் குறைபாட்டை அல்ல  என்பதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.)

நான் சொல்வது பொதுவானஅரசியல் அவதானிப்புப் பார்வையை. ஒரு முக்கிய கட்சிப் பிரமுகரின் சிலையை வீட்டு வாசலில்  எழுப்பி அதை மேற்படி தலைவரே வந்து திறந்து வைக்க அழைப்பு விடுத்து, அவருக்காக இரவுவரை காத்திருந்து அவர் பல வேலைகளில் இதை மறந்து விட்டதால் அவமானத்தால் சிலையை உடைத்து விட்டு அங்கேயே விஷமருந்தி, நிறைமாதக்  கர்ப்பிணியான  மனைவியை  விட்டுவிட்டு உயிரிழந்த  ஒருவரின் கொடிவழியில் வந்தவள் என்னும்  அளவுக்கே அரசியல் பார்வை இருக்கிறது.

ஏன் விஜய் சந்திரசேகர் என்றழைத்தேனென்றால்,  என் சொந்தத் தம்பியின் பெயரும் விஜய்தான் . அவனும் அடிக்கடி நான் பணிபுரியும் கல்லூரிக்கு வருவதால் அவன்தான் புதிய  கட்சி துவங்கி இருக்கிறான் என்று நினைத்து அவன் பின்னாலும் என்னை அறிந்த இளைஞர்கள் திரண்டால்  அவர்களைச் சமாளிக்கும் நல்மேய்ப்பன் அல்ல அவன் என்றுதான் உங்களின் மனஸ்தாபத்தையும் பொருட்படுத்தாமல் சந்திரசேகரையும் பின்னொட்டாகச் சேர்த்தேன். கட்சிக்கொடி வெளியீட்டு விழாவில் உங்கள் பெற்றோரும் முன்வரிசையில் அமர்ந்திருந்ததை உளவுத்துறையினரோடு சேர்ந்து நானும் உற்றுக்கவனித்தேன். மகிழ்ந்தேன்.

 நீர் அடித்து நீர் விலகுவதில்லைதானே தம்பி?

எனவே இந்தக் கட்சி கொடிச் சின்னத்தை மாற்றுவது தொடர்பாக உங்கள் முன்பாக இரு வாயில்களைத் திறந்து வைக்கிறேன். 

1. தவறை   ஒத்துக்கொண்டு சின்னத்தைச் சரியான வாகை  மலரைக் கொண்டு மாற்றுதல்.

 உங்கள் ரசிகத் தொண்டர்களுக்கு இத்தவறை மனப்பூர்வமாக    ஒத்துக்கொள்ளும் தலைவனாக உங்கள் தூய  மனதை திறந்துகாட்டும் ஒரு வாய்ப்பாக  இது  அமையலாம்.

2. ஒரு கட்சி தொடங்கப்பட்டால்  அதைகுறித்து எதையும் ஆராயாமல் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு அதில் இணையும் மரபு நமக்கிருப்பதால்   நுண்மையாகக் கட்சிக்கொடியின் சின்னம் தவறாக இருப்பதையெல்லாம் கவனித்திருக்க மாட்டார்கள், எனவே காதும் காதும் வைத்தது போல்  மலரையும் மலரையும் மாற்றி விடுங்கள்.

2026 என்பது  வெகுதூரத்தில் இல்லை , வியாழனுக்கும் வெள்ளிக்கும் இருக்கும்  தூரம்தான். எனவே நாளை த வெ க பெரும்பான்மையாக வாகை சூடி அரியணையில் அமரவேண்டி வரும் போது  உங்களின் எதிர்கட்சியினரும் பிறரும் அதிலிருப்பது அன்னிய தேச மலர் என்பதைக் கண்டுபிடித்துப் பெரும் சிக்கலை உருவாக்கலாம்.

 அப்போது அந்நிய நாட்டு சதி, அன்னிய நாட்டு நிதி என்றெல்லாம் சிக்கல்கள் எழக்கூடும், எனவே  ’’இளைதாக முள் மரம் கொல்க’’ அதாவது… இல்லை வேண்டாம், கடிதம் மிக நீண்டு விடும், சுருக்கமாக சொல்கிறேனே தொடக்கத்திலேயே தவறை சரி செய்து விடுங்கள்.

தமிழக அரசியல் என்னும் சந்தனக்குழம்பில் கால் வைத்து  விட்டீர்கள் எனவே இப்படியானவற்றில் நீங்கள் கவனத்துடனிருக்க வேண்டும்.

  கட்சிக்கொடியை அறிவித்தவுடனே இத்தனை சிக்கலா என நினைக்காதீர்கள், ஒரு அரசியல்வாதி என்பவர்  அரசியல்  கட்சி துவங்கி, அரசியல் பழம் தின்று கொட்டை போட்டவர் மட்டுமல்ல. கட்சிக்கொடியை   அறிவித்தவர்கள், அரசியல்வாதியாவதை கற்பனை செய்துகொள்பவர்களுமே அரசியல்வாதிகள்தான்.

 எனவே அரசியல்வாதியான உங்களுக்குச் சமூக ஊடகத்தில் பகிரங்கக் கடிதம் எழுதியவகையில் நானும் நேரடி  அரசியலில் இறங்கி இருக்கிறேன் என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன். பகீரென்கிறது. ஒரு அரசுப்பணியாளராக நான் அரசியலில் ஈடுபடக்கூடாது  என்றுதான் நினைக்கிறேன்

இதைக் குறித்து கல்லூரிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் கேட்டுக்கொள்கிறேன்.அப்படி இது தவறான முன்னெடுப்பென்றால் என் பின்னால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அணி திரளும் என்று நம்புகிறேன்,

நாங்கள்  அணி திரண்டு    போராடி  எங்களுக்கு வரவேண்டிய  பணிமேம்பாட்டு நிதியைக்கூட இதுவரை பெற்றதில்லை என்பதால் அரசு இந்த பிரச்னையையும்   கண்டுகொள்ளாது என்னும் நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

தம்பி, ’’ அரியணை அமர்தல் போல் தீயூழ் பிறிதில்லை’’ என்கிறது வெண்முரசு. கட்சிக்கொடியை அறிவிப்பதன் வழியாக நீங்கள்  அதற்குத் தயாராகவே இருக்கிறீர்கள். அதற்கான மனக்கட்டியை தேவன் உங்களுக்கு அளிப்பாராக!.

உங்கள் கட்சிப்பாடலை கேட்டேன், மிகவும் சுமாராக இருக்கிறது. எழுச்சியூட்டும் படி இருந்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்.

  வாகை என்றாலும், வெற்றி என்றாலும்,  விஜய் என்றாலும் ஒன்றுதான் எனவே  ’’ஜெய் விஜயீபவ” என்பதை ஏன் நீங்கள் உங்கள்  கட்சி முழக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது?

உங்களை கடிதத்தின் தொடக்கத்தில்  அன்புத்தம்பி எனக் குறிப்பிடவில்லை என்பதை  கவனித்திருப்பீர்கள், எங்கள் மீது அன்பிருந்தால் லியோ, சுறா மாதிரியான திரைப்படங்களை எங்களுக்கு அளித்திருப்பீர்களா?

ஆனால் எனக்கு உங்களின் மீது மூத்த சகோதரியாக அன்பிருப்பதால்தான்  இதையெல்லாம் இடித்துரைத்திருக்கிறேன் 

சங்கீதாவுக்கும் குழந்தைகளுக்கும் என் அன்பை தெரிவியுங்கள்

 ’’ஜெய் விஜயீ பவ’’

இப்படிக்கு அன்பு அக்கா

லோகமாதேவி

சுநீதி, நிர்மலா மற்றும்  நூரி!

 ஆகஸ்ட் 11, 2024  No Comments

சென்னை காட்பாடி இரவு ரயிலில் நிர்மலாவும் அவரது கணவரும்  கையில் வைத்திருந்த ஒரு சிறிய பெட்டியுடன் ஏறினார்கள். பெட்டியில் ஐஸ் துண்டங்களுக்கு மத்தியில்  ரத்த மாதிரிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சீரம்   80 சோதனைக்குழாய்களில்  பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை வேலூர் போய்ச் சேர்ந்த இருவரும் அங்கிருந்து ஆட்டோவில் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு (CMC) சென்றனர்.

அங்கு  வைராலஜி துறையின் இயக்குநர் ஜேகப் (Jacob T John) அவர்களுக்காகக் காத்திருந்தார். நிர்மலா கொண்டு வந்திருந்த  மாதிரிகளைச் சோதனை செய்ய உதவிக்கு ஜார்ஜ் பாபு மற்றும் எரிக் சைமோஸ் (P George Babu and Eric Simoes) ஆகியோரை அனுப்பினார்.

அப்போது சென்னையில் ELISA சோதனை செய்யும் ஆய்வகங்கள் இல்லை எனவேதான் நிர்மலா வேலூர் வந்திருந்தார்.  காலை 8.30-லிருந்து சோதனைகள் ஆரம்பமாகின. நிர்மலாவின் கணவர் ஆய்வகத்துக்கு வெளியே பொறுமையாகக் காத்திருந்தார். மூவரும் மும்முரமாக ஆய்வைத் தொடர்ந்தனர். மதியம் மின்சாரம் தடைப்பட்ட போதுதான்  ஒரு சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு ஆய்வகத்திலிருந்து வெளியே சென்று  அனைவரும் தேநீர் அருந்தினார்கள். 

தேநீர்க் கடையிலிருந்து திரும்பி ஆய்வகத்துக்குள் முதலில் நுழைந்து, 80  மாதிரிகள் இருந்த அந்த  ELISA சோதனையின் தட்டுப் போன்ற அமைப்பின் மூடியை மெல்ல தூக்கிய ஜார்ஜ் பாபு, அதிர்ந்துபோய் உடனே அதை மூடினார். 

நிர்மலா அதன் அருகே சென்றதும் ’’விளையாடாதீர்கள் எடுக்க வேண்டாம்’’ என்று  ஜார்ஜ் பாபு எச்சரித்தார். ஆனால் அதற்குள் அதில் 6 மாதிரிகள் மஞ்சள் நிறமாகி இருந்ததை  நிர்மலா  பார்த்துவிட்டார். இந்த ஆய்வின் துவக்கத்திலிருந்தே இதை ஆரம்பிக்கக் காரணமாயிருந்த Dr.சுநீதியும், Dr நிர்மலாவும் இந்த முடிவுகள் இப்படி வராது என்றே நினைத்திருந்தனர். ஆனால்  அந்த 6 மாதிரிகள் இந்தியாவுக்குள் நுழைந்திருந்த பேராபத்தை அடையாளம் காட்டி இருந்தன.

பின்னர்  வந்த சைமோஸ் இதை அறிந்ததும் இயக்குநரை அழைக்க ஓடினார்.  அடுத்த நிமிடம் இயக்குனர் ஜேகப் அங்கே வந்தார். அந்த 6 மாதிரிகளும் அவர்கள் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தன.

ஜேகப் நிர்மலாவிடம் அப்போதுதான் ’’இந்த ரத்த மாதிரிகளை எங்கிருந்து எடுத்தீர்கள்’’? என்று கேட்டார்.

நிர்மலா அவற்றைச் சென்னையின் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடமிருந்து பெற்றதை சொன்னார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஜேகப் நிர்மலாவிடமும் அவரின் கணவரிடமும் அந்தச் சோதனையின் முடிவுகள் குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வரை ரகசியம் காக்கும் படி அறிவுறுத்தினார்.

அவர்கள் இருவரும் அதிர்ச்சி நீங்காமலேயே சென்னை திரும்பினார்கள். சென்னை வந்த உடனேயே நிர்மலா சுநீதியை சந்தித்து 6 மாதிரிகள் நிறம் மாறியதை தெரிவித்தார்.

ஆபத்தை உணர்ந்து கொண்ட சுநீதி உடனடியாக அந்த 6 பெண்களிடமும் மீண்டும் ரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு, அவற்றை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றார். அமெரிக்காவில் அந்த ரத்த மாதிரிகளில்  நடந்த  Western Blot ஆய்வு இந்தியாவில் எய்ட்ஸ் அறிமுகமாயிருப்பதை  உறுதி செய்தது.

உடனடியாக அந்த  முக்கியமான செய்தி அப்போதைய பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தமிழக சுகாதார அமைச்சர் எச்,வி ஹண்டேவுக்கும் தெரிவிக்கப்பட்டது. எச்,வி ஹண்டே தமிழக சட்டசபையில்  இதை அறிவித்தபோது பார்வையாளர்கள் அமரும் இடத்தில் சுநீதியும் நிர்மலாவும் இருந்தனர்.

38 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் எய்ட்ஸ் இருப்பதை சுநீதி, நிர்மலா என்னும் இந்த இரு பெண்களும் தான் முதலில் கண்டறிந்தவர்கள்.

1981, 82-ல்தான் எய்ட்ஸ் இருப்பது உலகுக்கு தெரியவந்தது.   அதிகாரபூர்வமாக   எய்ட்ஸ் தொற்று இருப்பது 1981, ஜூன் 5 அன்று அட்லாண்டாவில் இயங்கும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. 

18981-ல் லாஸ் ஏஞ்சலீஸ் மருத்துவமனையில் ஐந்து ஓரினச் சேர்க்கையாளர்களான இளைஞர்கள் அரிய வகை நிமோனியா மற்றும் சருமப்புற்றுக்காகச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். (Pneumocystis pneumonia (PCP) &  Kaposi’s sarcoma) அவர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக மிகக் குறைவாக இருந்தது.   மேலும் சில  மருத்துவமனைகளிலும் இப்படியான சிகிச்சைக்கு தொடர்ந்து இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டபோது,  இந்த உடல்நிலை பிரத்யேகமாக  ஓரினச் சேர்கையாளர்களுக்கானது எனக் கருதப்பட்டு GRID-Gay related immune disease  என்று  பெயரிடப்பட்டது. எனினும் தொடர்ந்த 18 மாதங்களில் எல்லாத் தரப்பினருக்கும் இந்த அறிகுறிகள் தென்பட்டன. 

எனவே  1982, ஜூனில்  இது பாலுறவின் வழி பரவும் நோய் அறிகுறிகளின் தொகுப்பு (Syndrome) எனக் கண்டறியப்பட்டு அந்த ஆண்டு ஆகஸ்டில் இது எய்ட்ஸ் என  நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் பெயரிடப்பட்டது.

1983-லிருந்து  ஃபிரான்ஸின் பாஸ்டர் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களால் ஆராயப்பட்டு, LAV, HTLV-III, ARV  ஆகிய பெயர்களில்  எய்ட்ஸ் வைரஸ் குறிப்பிடப்பட்டது. ஆனால்   வைரஸை இனங்காணும் சர்வதேச அமைப்பு அந்தப் பெயர்களை நிராகரித்து எய்ட்ஸ் உருவாக்கும் வைரஸுக்கு  HIV என்னும் பெயரை இறுதியாகப் பரிந்துரைத்தது.

பிறகு உலகெங்கும் எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். எய்ட்ஸ் 1930-1950-களிலேயே இருந்ததும் முதல் எய்ட்ஸ் நோயாளி காங்கோவைச் சேர்ந்த பழங்குடியினத்தவர் என்பது முன்பே  வேறொரு நோயின் பொருட்டு எடுக்கப்பட்டு சேமிப்பில் இருந்த அவரது ரத்த மாதிரியிலிருந்து  பின்னர் உறுதி செய்யப்பட்டது.

1960-களில் மேற்கு ஆப்பிரிக்காவில் HIV-2 வகை வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. 

1983-க்கு பிறகு அடுத்தடுத்து உலகின் பல நாடுகளில்  எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைகளும் மருந்துகளுக்கான ஆராய்ச்சிகளும் முழுவேகத்தில் நடந்தன.

1985-ல் HIV வைரஸ் கண்டுபிடிப்பதற்கான சோதனையான ELISA (ELISA) பெருநகரங்கள் பலவற்றில் பயன்பாட்டுக்கு வந்தது. ரத்த வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் ரத்த வகைகளிலும் இந்த சோதனைமூலம் நோய்க்கிருமியைக் கண்டறிய முடிந்தது. 

உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால்   பாதிக்கப்பட்டிருப்பதும் எய்ட்ஸ் ஒரு உலகளாவிய தொற்று (Pandemic) என்பதும் உறுதியானது. ஆனால் இந்தியாவில் எய்ட்ஸ் அப்போது கண்டறியப்பட்டு இருக்கவில்லை.

1984. 85-ல் உலகில் எய்ட்ஸ் தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கையில் இந்தியாவிலும்  எய்ட்ஸ் இருக்குமா என்னும் ஆய்வுகள் மும்பை மற்றும் பூனேவில்  நடத்தப்பட்டன, ஆனால் அந்த ஆய்வின் முடிவுகள் இந்தியாவில் எய்ட்ஸ் இல்லை என்று தெரிவித்தன.

அப்போதுதான் 1985-ல் மருத்துவரான நிர்மலா   மருத்துவர் சுநீதியிடம் தனது நுண்ணுயிரியல் மேற்படிப்பின் ஆய்வுக்காக இணைந்திருந்தார். சர்வதேச சஞ்சிகைகளில் உலகின் பிற நாடுகளில் பரவிருந்த எய்ட்ஸ் குறித்து வாசித்தறிந்திருந்ததால், இந்தியாவிலும் எய்ட்ஸ் இருக்குமா என அறிய விரும்பிய சுநீதி ’Surveillance for Aids in Tamil Nadu’ என்னும் தலைப்பில் சென்னையில்  எய்ட்ஸ் இருக்கிறதா என்று நிர்மலாவிடம் ஆய்வு செய்யச் சொன்னார்.

38 வருடங்களுக்கு முன்னர் பக்தி, கூட்டுக்குடும்பம், பாலியல் ஒழுக்கம் இவற்றுக்கெல்லாம் உதாரணமாக இருந்த இந்தியாவில் எய்ட்ஸ் வருவதற்கு சாத்தியமே இல்லையெனக் கருதப்பட்டது.

அப்போது 32 வயதாக இருந்த பள்ளி செல்லும் இரு குழந்தைகளின் தாயான நிர்மலா ஒரு பாரம்பரிய இந்துக்குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது கணவர்  நிர்மலாவை அந்த மருத்துவ ஆய்வில் ஈடுபடச் சொல்லி  ஊக்குவித்தார். 

நிர்மலாவும் அந்த ஆய்வைத் தொடங்கும்போது இந்தியாவில் எய்ட்ஸ் இருக்கும் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று என்றுதான் நம்பி இருந்தார்.

இந்திய நாளிதழ்கள் அப்போது எய்ட்ஸ் என்பது   கட்டட்ற்ற பாலியல் சுதந்திரமும், ஓரினச் சேர்க்கையாளர்களும் நிறைந்த   மேற்குலகின் நோய் என்றுதான் குறிப்பிட்டன.

மேலும் சில பத்திரிக்கைகள் அப்படி ஒருவேளை இந்தியாவுக்கு எய்ட்ஸ் வருமேயானால் அதற்குள் அமெரிக்கா அதற்குச் சிகிச்சையளிக்க மருந்தைக் கண்டுபிடித்து விடும் என்றும் எழுதின.

மும்பையிலும் புனேவிலும் நடந்த சோதனைகள் அங்கு எய்ட்ஸ் இல்லை என்று தெரிவித்ததால் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் எய்ட்ஸ் வர வாய்ப்பே இல்லை என்று தான் நம்பப்பட்டது.

இந்த ஆய்வுக்காக ஆப்பிரிக்க மாணவர்கள்,  போதை அடிமைகள்,பாலியல் தொழிலாளிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களிடமிருந்து  200 ரத்த மாதிரிகள் நிர்மலா சேகரிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டது. 

ஆனால் அது நிர்மலாவிற்கு அத்தனை எளிதாக நடக்கவில்லை.  இந்த ஆய்வுக்கு முன்பு நிர்மலா நாய்கள் மற்றும் கொறித்துண்ணிகளுக்கு உண்டாகும் பாக்டீரிய நோயைக் குறித்து ஆய்வு செய்திருந்தார். எய்ட்ஸ் குறித்து அவருக்கு எதுவும் அப்போது தெரிந்திருக்கவில்லை. 

மும்பை போன்ற நகரங்களில் இருப்பதுபோலப் பாலியல் தொழிலுக்கென்று குறிப்பிட இடம் சென்னையில் இல்லை. எனவே  நிர்மலா சென்னை அரசுப் பொது  மருத்துவமனைக்குப் பால்வினை நோய்களுக்குச் சிகிச்சை பெற வரும் பாலியல் தொழில் செய்யும் பெண்களைத் தேடிச் சென்றார். 

மருத்துவமனைக்கு வந்த   பாலியல் தொழில் செய்யும் இரு பெண்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் நட்பும் கொண்ட நிர்மலா அவர்களின் உதவியுடன் பாலியல் தொழிலுக்காகக் கைதுசெய்யப்பட்டு, அவர்களில் பெயில் தொகை கட்ட வசதி இல்லாதவர்கள் திருந்தி வாழ்வதற்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் (vigilance home) அரசுக் காப்பகத்தில்  இருந்த பெண்களைச் சந்தித்தார்.

நிர்மலா எய்ட்ஸ் ஆய்வுக்கான ரத்த மாதிரிகளைப் பல இடர்பாடுகளுக்கு மத்தியில்  சேகரித்தார்.  அந்தப் பெண்கள் காப்பகத்திலிருந்து மொத்தம் 102 மாதிரிகளைச் சேகரித்த நிர்மலா ஓரினச்சேர்க்கையாளர்களின் ரத்த மாதிரிகளுக்காகச் சென்னை சிறைச்சாலைக்குச் சென்றார். அங்கும் பலத்த முயற்சிக்குப் பிறகு  21 ஓரினச்சேர்க்கையாளர்களின் ரத்த மாதிரியைப் பெற்றார்.

ஒரே ஊசியை மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்ளும் போதை அடிமைகளை நிர்மலாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் ஒரு ரத்ததான நிகழ்ச்சிக்கு வந்திருந்த 9 வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸுக்கான பரிசோதனைக்காக  ரத்த மாதிரி தேவைப்படுகிறது என்று உண்மையைச் சொல்லி ரத்தம் பெற்றுக்கொண்டார்.

ரத்த மாதிரிகளை சேகரிக்க நிர்மலா ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அங்கு வந்து விடுவார். நிர்மலாவை அரசுக்காப்பகத்தில்  அவரது கணவர் ஸ்கூட்டரில் கொண்டு வந்து இறக்கிவிடுவார். 80-களில் சென்னை போன்ற   பெருநகரில் தமிழ்க்குடும்பத்தின் திருமணமான பெண் இப்படியான ஆய்வில் ஈடுபட்டிருந்ததும், அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் உறுதுணையாக இருந்ததும் அரிதினும் அரிது.

மூன்று மாதங்களில் நிர்மலா தேவையான ரத்த மாதிரிகளைக் கையுறையோ வேறு எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லாமல் சேகரித்தார்.  ரத்தம் அளித்த பெண்களிடம் நிர்மலா எய்ட்ஸுக்கான ஆராய்ச்சியைக் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அந்தப் பெண்களுக்கும் எய்ட்ஸ் குறித்து அப்போது எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் பால்வினை நோய் சிகிச்சைக்கென நிர்மலா ரத்தம் சேகரிக்கிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தனர். 

ஒருவேளை நிர்மலா எய்ட்ஸ் குறித்து சொல்லி இருந்தாலும் படிப்பறிவற்ற அந்த ஏழைப் பெண்களுக்கு அதைப் புரிந்து கொண்டிருக்க முடியாது.

எய்ட்ஸின் தீவிரம் அறியாத நிர்மலா, சேகரித்த ரத்த மாதிரிகளைத் தனது வீட்டில் குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்திருந்து பின்னர் சுநீதியிடம் கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

சுநீதியின் கணவர் சாலமன்   இதயம் மற்றும் நுரையீரல் சிறப்பு மருத்துவர். அவர் உதவியுடன் சுநீதி ஒரு சிறிய ஆய்வகத்தை உருவாக்கி இருந்தார் அந்த ஆய்வகத்தில் நிர்மலா சேகரித்த ரத்த மாதிரிகளின் சீரத்தை பிரித்தெடுத்து சுநீதி சேமித்து வைத்திருந்தார். அவற்றைத்தான்  வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு நிர்மலாவும் அவரது கணவரும் கொண்டு சென்றனர்.

வேலூர் ஆய்வகத்தில் எலிஸா சோதனையில்  மஞ்சள் நிறமாக மாறி    எய்ட்ஸ் இருப்பதை காட்டிய அந்த 6 மாதிரிகளை மீண்டும் இரண்டு முறை நிர்மலா சோதித்து உறுதிப்படுத்திய பிறகுதான் சென்னை திரும்பிச் சுநீதியை சந்தித்தார்.

இரு பெண் ஆய்வாளர்களும் பலரின் கண்டனங்களையும் கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்கள். பலர் அப்படி எய்ட்ஸ் இந்தியாவில் இருக்க வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆய்வு தவறாகச் செய்யப்பட்டிருக்கிறது என்றும்  பலர் கருத்து தெரிவித்தார்கள்.

பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான் என்றாலும் மகாராஷ்டிர தோல் வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால்   ’எப்படி ஒரு வட இந்தியப் பெண் தமிழகப் பெண்களின் ஒழுக்க குறைவினால் நோய் வந்ததாகத் தெரிவிக்கலாம்’ என்றும் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. மருத்துவப்படிப்பு முடித்தபின்னர் சிகாகோவிலும் லண்டனிலும் பணியாற்றி விட்டே சுநீதி சென்னை மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல் பிரிவில்  1973-ல் இணைந்தார்.  அவரது ஆய்வின் நோக்கம்  பல்லாயிரக்கணக்கானோரை காப்பாற்றுவதுதான் என்பது அப்போது பலரால் புரிந்து கொள்ள பட்டிருக்கவில்லை  

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் தலைவர் நிர்மலாவிடன் ’’நீங்கள் கண்டுபிடித்திருப்பது கடலின் மேற்பரப்பில் தெரியும் பனி மலையின் உச்சியை மட்டும்தான், பேராபத்தை நாம் இனி வரும் காலங்களில் சந்திக்கவிருக்கிறோம்’’ என்றார்.

பொதுமக்களுக்கும் அரசுக்குமிருந்த அதே அதிர்ச்சி இதை வெளிக்கொண்டு வந்த இரு பெண்களுக்கும் இருந்தது. உடனடியாக நாடு தழுவிய எய்ட்ஸ் கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு நிகழ்வுகள்  1900-லிருந்து 2000 வரை ஒருங்கமைக்கப்பட்டன. அதன் முடிவுகள் எய்ட்ஸ்  என்னும் பெருந்தொற்று இந்தியாவின் மூலை முடுக்குகள் எங்கும் பரவி இருந்ததை உறுதிப்படுத்தின.

மேலும் சில வாரங்கள் காப்பகங்களுக்கும் சிறைச்சாலைக்கும் சென்று ரத்த மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வைத் தொடர்ந்து நடத்திய நிர்மலா 1987-ல் Surveillance for Aids in Tamil Nadu -தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கண்காணிப்பு என்னும் தனது ஆய்வேட்டை சமர்ப்பித்து அதற்கான் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றார். பின்னர் சென்னை கிண்டியில் அமைந்துள்ள  கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தடுப்பூசி ஆராய்ச்சிப் பிரிவில் இணைந்து பணியாற்றி 2010-ல் பணி ஓய்வு பெற்றார். 

தகுந்த நேரத்தில் எய்ட்ஸ் இருப்பதை கண்டுபிடித்துப் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய இத்தனை முக்கியமான ஆய்வுக்கான  அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்காததில் வருத்தம் இல்லையா? என்று கேட்கப்பட்டபோது நிர்மலா ‘’நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் இப்படி அங்கீகாரங்கள் குறித்தெல்லாம் யோசித்ததில்லை சமுதாயத்துக்கு ஏதோ ஒன்றை செய்யமுடிந்த மகிழ்ச்சியே எனக்குப் போதும்’’ என்றார்.

அச்சமயத்தில் ஒரு சில நாளேடுகள் நிர்மலாவையும் சுநீதியையும் குறிப்பிட்டு  கட்டுரை வெளியிட்டது. சுநீதிக்கு கெளரவ டாக்டர் பட்டமும், தமிழகத்தின்  எய்ட்ஸ் அமைப்புகள் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவையும் பிற்பாடு அளிக்கப்பட்டது. சுநீதியின் மறைவுக்குப் பிறகு தான் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ அளிக்கப்பட்டது. சுநீதியும் நிர்மலாவும் மருத்துவ வரலாற்றிலும்  பொது சமூகத்திலும் பின்னர் மறக்கப்பட்டார்கள்.  

நிர்மலா சேகரித்த  6 ரத்த மாதிரிகளில் ஒன்று 13 வயதே ஆன ஒரு சிறுமியுடையது. கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டு இருந்த அந்தச்  சிறுமி இந்த ஆய்வு முடிவுகள் வெளியான சில மாதங்களில் நோய் முற்றி மரணம் அடைந்தாள்.

அந்த முதல் 6 பெண்களில் நூரி என்னும் திருநங்கையும் இருந்தார் அவர் அந்த முடிவுகளுக்குப் பிறகு எப்படி எய்ட்ஸ் வந்தது என்னும் விசாரணையில் தாங்கள்  கடுமையாகத் தண்டிக்கப்பட்டதை இப்போதும் கசப்புடன் நினைவுகூறுகிறார்.

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் முகமது என்னும் பெயரில் இருந்த நூரி தனது 4-வது வயதிலிருந்தே தனக்குள் பெண்மையை உணரத் தொடங்கி இருந்தார். அவரது பெண்மை உணர்வை, நடவடிக்கைகளைச் சரியாக்க அவரின் அப்பா  கடும் வன்முறையைப் பிரயோகித்தார். 13 வயதில் அந்த வன்முறையின் குரூரத்தை தாங்க  முடியாமல் சென்னைக்கு ஓடி வந்த நூரி பிழைக்க வழி இல்லாமல் பாலியல் தொழிலுக்குத் தள்ளப் பட்டார்.

 நூரியின் அந்த இருள் நிறைந்த நாட்களின் ஒரே வெளிச்சக்கீற்றாக ஒரு ராணுவ வீரரின் காதல் இருந்தது. முறையாகப் பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறிய நூரி அவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த மகிழ்சியும் அதிக காலம் நீடிக்கவில்லை அவரது கணவர் அந்தமான் பகுதிக்குப் பணி மாற்றம்  செய்யப்பட்டபோது நூரி அவருடன் செல்லாமல் சென்னையில் தங்கிவிட்டார் 

அப்போதுதான் சுநீதியின் ஆய்வுக்கென நூரியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நூரி தனக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்த அந்த 1987-ன் ஜுலை 22-ம் , நாளை மறக்க முடியாமல் நினைவில் வைத்திருக்கிறார்.  

அதிகபட்சமாக இன்னும் இரண்டு வருடங்கள் தான் உயிர் வாழ முடியும் என்னும் செய்தியும் பேரிடியாக அவர்மேல் அப்போது விழுந்தது. மனம் உடைந்து போனவரைத் தேற்றி அரவணைத்துக் கொண்டது  உஷா ராகவன் என்னும் மருத்துவர்.  சிகிச்சை எடுத்துக்கொண்ட  நூரியை தையல் வேலையில் சேர்த்து  மாதம் 750 ரூபாய் வருமானம் கிடைக்க வழி செய்தார் உஷா ராகவன்

உஷா ராகவனுடன் இணைந்து நூரி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். ஒரு மருத்துவமனையில் உதவியாளராக இருந்த   நூரி அங்கு பணிபுரிந்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில்   தானே சொந்தமாக எய்ட்ஸ்  நோயாளிகளின்   நலனுக்காக     2001 அக்டோபர் 10 அன்று  South India Positive (SIP) Network என்னும் அரசு சாரா அமைப்பை  முறையாகப் பதிவு செய்து உருவாக்கினார். 

அந்த அமைப்பின் மூலம் இன்று வரை நூரி எய்ட்ஸ் இருப்போருக்கு ஆரோக்கிய வழிகாட்டல், சிகிச்சை, கைத்தொழில் பயிற்சி மற்றும் நிலையான  வருமானத்துக்கு உதவி பலரை பாலியல் தொழிலிருந்தும் மீட்டிருக்கிறார்.

எய்ட்ஸினால் இறந்து போன தனது மூன்று தோழிகளான  செல்வி, இந்திரா  மற்றும் பழனி ஆகியோரின் நினைவாக ஒரு அறக்கட்டளையையும் நூரி உருவாக்கி இருக்கிறார். 

மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் நூரி இப்போது தென்னிந்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு அமைப்பின் தலைவராக இருக்கிறார். நூரியின் 2 அறைகள் மட்டும் கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான அலுவலகம் முழுக்க எய்ட்ஸ் தினத்திலும் சர்வதேச மகளிர் தினத்திலும் திருநங்கயர் தினத்திலும்  அவருக்கு  அளிக்கப்பட்ட பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் பரிசுகளும் நிறைந்திருக்கிறது.

நூரிக்கு 2005-ல் வந்த ஒரு தகவல் அவரது சேவை அமைப்பை மேலும் விரிவாக்கியது. குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தை கிடப்பதாகச் செய்திவந்தவுடன் நூரி  அங்கு சென்று, பிறந்து 2 நாட்களாயிருந்த அந்தப்பெண் குழந்தையை எடுத்துக்கொண்டார். அதனருகில் இருந்த கடிதத்தில் அதன் தாய்க்கு எய்ட்ஸ் இருந்த தகவல் எழுதப்பட்டிருந்தது.

இளமைப்பருவம் என்ற ஒன்று இல்லாத தன் வாழ்க்கையின் பிழையீடாக அந்தக் குழந்தையை நன்றாக வளர்க்க முடிவு செய்த நூரி உடனடியாக எய்ட்ஸ் இருக்கும் குழந்தைகளுக்காக ஒரு அமைப்பையும் உருவாக்கினார். குழந்தைகள் நல அமைப்புடன் இணைந்து செயல்படும் இந்த அமைப்பு  200-க்கும் அதிகமான குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை  பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கிறது.  

அவர்களில் பல பெண்கள் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ்கிறார்கள். அவர்களின் குழந்தைகளும் பேரக்குழந்தைகளுமாக நூரி ஒரு மகிழ்ச்சியான தாயும், பாட்டியும், கொள்ளுப்பாட்டியுமாக வாழ்கிறார்.

இப்போது எய்ட்ஸுக்கான சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்டு வாழ்நாளை நீட்டிக்கும் மருந்துகளும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது உச்சத்தை தொட்டிருந்த எய்ட்ஸ் இருப்போரின் எண்ணிக்கை இப்போது வெகுவாகக் குறைந்திருக்கிறது. கடந்த 25 வருடங்களில் எய்ட்ஸ் சிகிச்சை. தடுப்பு மற்றும் விழிப்புணர்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும்  எய்ட்ஸ் சிகிச்சை  பெறுவோர் கண்ணியக்குறைவாக நடத்தப்படுவதும் அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

2009-ல் ஒரு நேர்காணலில் சுநீதி எய்ட்ஸ் இருப்பவரைக் கொல்வது வைரஸ் மட்டுமல்ல இந்தச் சமூகம் அவர்களை நடத்தும் விதமும்தான் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் எய்ட்ஸ் வரலாறை சுநீதிக்கு முன்னும் பின்னுமென இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். 

அந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு சுநீதி இந்தியாவின் முதல்  எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் சோதனைக்கான தன்னார்வ அமைப்பைச் சென்னை மருத்துவக் கல்லூரியில் துவங்கினார். 1988-93 வரையில் எய்ட்ஸ் வைரஸ்குறித்த கல்வி, சிகிச்சை மற்றும் விழிப்புணர்வில் இந்த அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டது  1993-ல் சுநீதி சொந்தமாக லாபநோக்கமற்ற  Y. R. Gaitonde Centre for AIDS Research and Education (YRGCARE) என்னும் அமைப்பைச் சென்னையில்   தோற்றுவித்தார். 

2015-ல் தனது 76-வது வயதில் கணையப் புற்று நோயினால் சுநீதி  மறைந்த பிறகு அவரது மகனும் மருத்துவருமான சுனில் சாலமன் அதை நிர்வகித்துத் தாயின் சேவையைத் தொடர்ந்து செய்கிறார். 

இந்த அமைப்பு எய்ட்ஸ் இருப்போரின் பள்ளிக்கல்வி,  நோய்த் தடுப்பு, சிகிச்சை, நிதியுதவி, வழிகாட்டுதல் இவற்றோடு எய்ட்ஸ் இருப்போருக்கான திருமண தகவல் மையத்தையும் நடத்துகிறது. இதுகுறித்து 2017-ல் வெளியான ஆவணப்படம் Lovesick பெரும் கவனம் பெற்றது.

எய்ட்ஸ் இருப்போருடன் கைகுலுக்கவும் கண்ணீர் துடைக்கவும் கூடத் தயங்கும் மறுக்கும் உலகில் சுநீதி அவர்களுக்கிடையே  மண உறவை அமைத்துக் கொடுத்தார். 3 பேருடன் துவங்கிய இந்த அமைப்பு இந்தியாவின் 28 மாநிலங்களில், பரவி விரிந்து ஆயிரக்கணக்கான பணியாளர்களுடன் இந்திய அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து எய்ட்ஸ் நோய்த் தடுப்பு சிகிச்சையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. 2022-ல் அகார் வளர்ப்பு ஊடகத்தில் உருவங்கள் அமைக்கும் போட்டியில் சுநீதியின் உருவம பரஸ்மிதா என்பவரால் உருவாக்கப்பட்டிருந்தது. உலக அறிவியல் தளத்தில்  இந்திய நுண்ணுயிரியல் முக்கியமான இடத்திற்கு  கொண்டு வந்த சுநீதிக்கு இந்த அகார் ஊடக உருவ அமைப்பு பொருத்தமான கெளரவம் தான்.

2011-க்குப் பிறகு எய்ட்ஸ் தொற்றும் வேகம் வெகுவாகக் குறைந்திருந்தாலும், இப்போது இந்தியாவில் சுமார் 24 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் இருக்கிறது.

இவர்களில் 77%த்தினருக்கு தங்களுக்கு HIV தொற்று இருப்பது தெரிந்திருக்கிறது  65%த்தினர் எய்ட்ஸுக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர்  55%த்தினரின் உடலில் இருக்கும் HIV  வைரஸின் அளவு குறைக்கப்பட்டு அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது

HIV மற்றும் எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டத்தின் குறிக்கோளான 2025-ல் சிகிச்சை, உடலின் வைரஸ் அளவை குறைப்பது மற்றும் எய்ட்ஸ் குறித்த அறிதலை தொற்று இருப்பவர்களுக்கு உண்டாக்குவது  ஆகிய மூன்றிலும் 95%த்தை எட்டுவது என்னும் குறிக்கோளை நோக்கித்தான்  இந்தியாவும் பயணிக்கிறது. 

சுநீதி இந்தியாவில் எய்ட்ஸ் இருப்பதை அப்போது கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளிகளும், பிராத்தல் அமைப்புக்களும், லட்சக்கணக்கில் வெளிமாநிலங்களில் வீட்டைப்பிரிந்து வேலை செய்வோரும் லாரி ஓட்டுநர்களுமாக எய்ட்ஸ் இந்தியாவில் பெருகி மாபெரும் அழிவைக் கொண்டு வந்திருக்கும் 

இப்போது எய்ட்ஸ் தொற்றுக்காளானவர்களை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் தொற்று உண்டாகும் வேகம் மிகக்குறைவாகத்தான் இருக்கிறது. இதற்கு நிச்சயம் சுநீதி மிக முக்கியமான பங்களித்திருக்கிறார். நூரி சொல்வது போலச் சுநீதி அறிவியல் உலகின் முக்கியமான கண்டுபிடிப்பை மட்டும் செய்யவில்லை, ஆயிரக்கணக்கில் எய்ட்ஸ் தொற்றுக்காளானவர்கள் ஆரோக்கியமாக வாழவும் கற்றுக்கொடுத்தார்,

அறிவியல் கண்டுபிடிப்புகள் சாதனைகள் என்றால் மேரி க்யூரியைத் தவிர வேறு பெண்களின் நினைவு வருவதே இல்லை. அப்படி  வளர்ப்பு ஊடகங்களில் பயன்படும் அகார் அகாரை கண்டுபிடித்த ஃபேனி ஹெஸ்ஸி, DNA-வின் வடிவத்தை முதன் முதலில் கண்டுபிடித்த ரோஸலிண்ட், சூழியலை தனது ஓவியங்களில் முதன்முதலாகச் சித்தரித்த மரியாசிபில்லா போன்றோரின் நீண்ட வரிசையில் சுநீதியும் நிர்மலாவும் இருக்கிறார்கள்.

எய்ட்ஸ் இருப்போருடன் கைகுலுக்கவும் கண்ணீர் துடைக்கவும் தயங்கிய காலத்தில் அவர்களுக்குத் தொடர்ந்து வாழ நம்பிக்கை அளித்த சுநீதி, தனக்கு எய்ட்ஸ் இருந்தும் அதனுடன் போராடிக்கொண்டே தன்னைப் போன்றோருக்காகச் சேவை செய்யும் நூரி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு முக்கிய ஆய்வைச் செய்த நிறைவுடன் தனது வாழ்வை அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிர்மலா ஆகியோரை  தமிழ்நாட்டிலேயே பலர் அறிந்து கொள்ளாமல் இருப்பதும்.  இவர்களைத் தாமதமாக அறிந்துகொள்வதற்கான பிழையீடாகவும் தான் இந்தக் கட்டுரை உருவா கியது.

 .

மேலதிக தகவல்களுக்கு:

பெனிசிலியமும் பெனிசிலினும்!

கோக்கனட் க்ரூவ் இரவு விடுதி அன்று வழக்கத்துக்கு மாறாக நிரம்பியிருந்தது. அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு ஒரு வருடமாயிருந்த 1942-ன் அந்த நவம்பரில் அமெரிக்கர்கள் நன்றி தெரிவிக்கும் வார இறுதி கொண்டாட்டத்தில் இருந்தார்கள். 

பாஸ்டனில் கோக்கனட் க்ரூவ் என்னும் அந்த இரவு விடுதி மிகப் பிரபலமானது. அங்குத் திரை நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் பாடகர்களும் வழக்கமாகக் கூடுவார்கள். நவம்பர் 28 அன்று 600 பேர் மட்டும் இருக்க முடிந்த அந்த இடத்தில் போரிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்த ராணுவ வீரர்களும், புதுமணத் தம்பதியினரும் பாடகர்களுமாகச் சுமார் ஆயிரம் பேர் கூடியிருந்தனர். 

சமீபத்தில் விரிவாக்கப்பட்ட தரைத்தளமும் ஒரு சிறு முதல்தளமும் கொண்டிருந்த அந்த விடுதியின் உரிமையாளர் நிழலுலக தாதாக்களுடன் தொடர்பில் இருந்தவர், எனவே அவ்விடுதிக்கான உரிமம் பெறப்பட்டிருக்கவில்லை, பாதுகாப்பு விதிமுறைகளும் வெகுவாக மீறப்பட்டிருந்தன. உலகப் போர் சமயமாதலால் தட்டுப்பாட்டில் இருந்த குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படும் ஃப்ரியானுக்கு (Freon) பதில் எளிதில் தீப்பிடிக்கும் மெத்தைல் குளோரைடு பயன்படுத்தப்பட்டிருந்தது.

தரைத்தளத்தின் விதானம் எடையற்ற காகித அட்டைகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அன்றைய கொண்டாட்டத்திற்கு விடுதி ஒரு கடற்கரை தீவைப் போலக் காட்சிப்படுத்தப் பட்டிருந்ததால் நியான், துணி, காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கால் செயற்கையாக உருவாக்கப்பட்ட, காய்ந்த ஓலைகள் இணைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும், தேங்காய்க் கொப்பரைகளில் அமைக்கப்பட்ட பிரகாசமான விளக்குகளுமாக விடுதி ஜொலித்தது.

தரைத்தளத்தின் ஒரு மூலையில் தன் காதலியை முத்தமிட விரும்பிய ஒரு இளம் ராணுவ வீரர் அங்கிருந்த பிரகாசமான குமிழ் விளக்கொன்றை கழட்டி அந்த இடத்தை இருட்டாக்கி இருந்தார்.

இரவு 10.15க்கு அந்த இருட்டான மூலையை கவனித்த மது பரிமாறிக்கொண்டிருந்த ஒருவர் தனக்கு உதவி செய்துகொண்டிருந்த 16 வயது சிறுவனான ஸ்டான்லியிடம் அந்த விளக்கை மீண்டும் மாட்டச்சொன்னார். இருட்டில் விளக்கைப் பொருத்த முயன்ற ஸ்டான்லி தீக்குச்சியை உரசி வெளிச்சம் உருவாக்கி அந்த விளக்கை மாட்டினான்.

தீக்குச்சியிலிருந்து பறந்த ஒரு தீப்பொறி காய்ந்த ஓலைகளில் பற்றி மளமளவென அந்த விடுதியின் விதானமும் தென்னை மரங்களும் பற்றிக்கொண்டன. கொண்டாட்டத்தில் இருந்தவர்கள் தீயை கவனிக்கும் முன்பு தீ முதல் தளத்துக்குப் பரவியது.

கூடுதலாக ஆட்கள் உள்ளே வரக் கூடாது என்பதற்காக வாசல் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. குளிர்சாதனப்பெட்டியின் மெத்தைல் குளோரைடும் பிளாஸ்டிக்கும் காகிதங்களுமாக 12 நிமிடங்களில் அந்த விடுதி முழுக்க தீக்கிரையானது. ஒரே ஒரு சிறு வாசல் வழியே தப்பிக்க முயன்றவர்களால் அந்த வாசலும் அடைபட்டு தீப்பிடித்த சிறிது நேரத்திலேயே அன்று மதியம் திருமணம் செய்து கொண்டிருந்த புதுமணத்தம்பதிகள், 15 வயதேயான ஒரு சிறுவன் உள்ளிட்ட 492 நபர்கள் உடல் கருகியும் விஷப்புகையை சுவாசித்தும் இடிபாடுகளில் சிக்கியும் உயிரிழந்தார்கள்.பலர் நாற்காலிகளில் உட்கார்ந்தபடி கையில் மதுக்கோப்பையுடன் அப்படியே இறந்திருந்தார்கள்.

எரிந்து கருகிய கோக்கனட் க்ரூவ் விடுதி.

பொதுமக்களும் காவல் துறையினரும் முழுவீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தப்பிப்பிழைத்த பலருக்கு தீவிரமான தீக்காயங்கள் இருந்தன.

1993- சிக்காகோவின் திரையரங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து 602 உயிர்களைப் பலி கொண்டது அதன் பிறகு அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான இரண்டாவது பெரிய தீ விபத்து இதுதான்.

தீக்காயமுற்று உயிருக்குப் போராடியவர்கள் மாசசூசெட்ஸ் (Massachusetts) பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்தத் தீ விபத்து நடந்த உடனயே அரசு Merck பன்னாட்டு மருந்து நிறுவனத்தை எத்தனை பெனிசிலின் கையிருப்பில் இருக்கிறதோ அத்தனையையும் போஸ்டனுக்கு அனுப்ப உத்தரவிட்டது. அப்படியே கையிருப்பில் இருந்தவற்றை அனுப்பிய அந்நிறுவனம் மேலும் அதிக பெனிசிலினை தயாரிக்கவும் முனைந்தது.

இரவும் பகலுமாக மிகக்கடுமையாகப் பல பணியாளர்கள் உழைத்து 3 நாட்களுக்குப் பிறகு 1942 டிசம்பர் 1 அன்று ஒரு குளிரூட்டபட்ட வாகனத்தில் 32 லிட்டர் பெனிசிலின் ஊசி மருந்து நியூஜெர்ஸி மருந்து நிறுவன வளாகத்திலிருந்து போஸ்டனை நோக்கிப் பயணித்தது. அந்த வாகனத்துக்கு முன்னும் பின்னும் காவல் வாகனங்கள் பாதுகாப்பளித்து தொடர்ந்து வந்தன. அதிகாலை இருட்டில் அந்த வாகனத்தின் மருந்துகள் மாசசூசெட்ஸ் மருத்துவர்களால் பெறப்பட்டு உடனடியாகப் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஏறக்குறைய மரணத்தைச் சந்தித்திருந்த பலர் காப்பாற்றப்பட்டார்கள். மறுநாள் போஸ்டன் குளோப் மற்றும் டைம் நாளேடுகள் விலைமதிப்பற்ற அற்புத மருந்து எனப் பெனிசிலினைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.

இதுதான் பெனிசிலின் என்னும் முதல் நுண்ணுயிர்க்கொல்லி மருந்து அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களைக் காப்பாற்றிய முதல் நிகழ்வு. உலக மருத்துவ வரலாற்றின் மிக முக்கியமான சிகிச்சை அளிக்கப்பட காரணமாயிருந்த அந்த விபத்து பல முதல்முறையானவைகளை தொடங்கி வைத்தது பெனிசிலினின் முதல் பரவலான உபயோகம், விடுதிகள் அடுக்ககங்கள் மற்றும் கட்டிடங்களுக்கான முறையான பாதுகாப்பு விதிகளின் ஒழுங்கமைப்பு, மருத்துவமனைகளிலேயே செயல்பட துவங்கிய ரத்தவங்கிகள், எல்லாக் கட்டிடங்களிலும் அவசரகால வழிகள் அமைக்கப்படுவது ஆகியவை அப்போதிலிருந்துதான் கட்டாயமாக்கப்பட்டன.

அதன்பிறகு அமெரிக்க அதிபரின் நேரடிப் பார்வையில் உலகப் போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பெருமளவில் பெனிசிலினை தயாரிக்க Merck, Squibb, Pfizer மற்றும் Lederle நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

I4 மாதங்களில் ஏராளமாகப் பெனிசிலின் தயாரிக்கப்பட்டு சந்தைப் படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பல்லாயிரம் வீரர்களின் உயிரைப் பெனிசிலின் காப்பற்றியது. பெனிசிலின் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதோடு Merck, Pfizer, Glaxo and Sandoz போன்ற மிக முக்கியமான மருத்துவ மற்றும் அறிவியல் நிறுவனங்கள் உருவாகவும் உதவியது. மருத்துவ வரலாற்றின் இந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்வு அத்தனை எளிதில் நடந்துவிடவில்லை

உலகின் முதல் நுண்ணுயிர் எதிர்ப்பியான பெனிசிலினை 1928-ல் தற்செயலாகத்தான் அலெக்சாண்டர் ஃபிளெமிங் பெனிசிலியம் பூஞ்சையிலிருந்து கண்டறிந்தார்.

எனினும் நுண்ணுயிர் திர்ப்பிகளை அதற்கு முன்பே பலர் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிரான சிகிச்சையில் உபயோகப்படுத்தி இருக்கின்றனர்.

பூஞ்சையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட முதல் இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பி பெனிசிலின்தான். ஆனால் 1910-ல் பெனிசிலின் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே சால்வர்சன் (Salvarsan / 606) என்னும் சந்தைப்பெயரில் பால் எர்லிச், சா ஹசிரோ ஹட்டா (Paul Ehrlich & Sa Hachiro Hata) ஆகியோரால் நோயெதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்.

சிபிலிஸ் என்னும் பால்வினை நோயை உருவாக்கும் பாக்டீரியாவுக்கு (Treponema pallidum) எதிரான சிகிச்சையில் சால்வர்சன் வெற்றிகரமான நுண்ணுயிரெதிர்ப்பியாகப் பயன்பாட்டில் இருந்தது. பெனிசிலின் புழக்கத்துக்கு வந்தபின்னர்தான் இதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்தது.

பண்டைய நாகரிகங்கள் பலவற்றில் பூஞ்சைகளைக்கொண்டு பாக்டீரியா தொற்றை குணமாக்குவது அதன் அறிவியல் அடிப்படை தெரியாமலேயே புழக்கத்தில் இருந்தது.

பண்டைய கிரேக்கம், இந்தியா மற்றும் எகிப்தில் சமையலறையில் பூசணம் பிடித்த நீலப்பச்சை நிறத்திலிருந்த ரொட்டித் துண்டுகளைச் சேமித்து வைத்திருந்து. வெட்டுக்காயங்கள், கொப்புளங்களுக்கு அதன் சிறு துண்டை நீரில் கரைத்துப் பூசி சிகிச்சையளிக்கப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் இந்தியா, எகிப்து மற்றும் கிரேக்கத்தில் போர் வீரர்களின் காயங்களுக்குப் பூசணம் பிடித்த ரொட்டித் துண்டுகளைக் கரைத்துப்பூசி சிகிச்சை அளித்தற்கான ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. 

17-ம் நூற்றாண்டில் போலந்தில் சிலந்தி வலையையும் பூசணம் பிடித்த ரொட்டித்துண்டையும் குழைத்துப் பூசி பல வெட்டுக்காயங்களுக்கும் கொப்புளங்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டதை ஹென்ரிக் (henryk Sienkiewicz) அவரது ’’with fire and sword’’ என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சிலந்தி வலையில் பூஞ்சைக்காளான் ஸ்போர்கள் சிக்கிக்கொண்டிருக்கும் என்பதை அவர்கள் எப்படியோ அறிந்திருந்தனர்.

இப்படி பூஞ்சைகளைக் கொண்டு சிகிச்சையளிப்பதை முதலாம் சார்லஸின் மருந்தாளுனரும், அரசாங்க தாவரவியலாளருமான ஜான் பார்கின்சன் 1640-ல் அவரது தியேட்ரம் பொட்டானிகம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 

அறிவியல் ரீதியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கண்டுபிடிப்புக்கள் 1870-லிருந்தே ஐக்கியநாடுகளில் தொடங்கி இருந்தது. சர் ஜான் ஸ்காட் (Sir John Scott Burdon), உயிர்களின் தன்னிச்சையான தோற்றம்குறித்த ஆய்வுகளின்போது பூசணம் பிடித்த வளர்ப்பு ஊடகங்கள் பாக்டீரிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை கண்டறிந்தார்.

இவரது அறிக்கைகளை வாசித்த (கிருமிநாசினியை கண்டு பிடித்தவரான) ஜோசஃப் லிஸ்டரும் (Joseph Lister), பூசணம் பிடித்த சிறுநீர் பாக்டீரியாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை கண்டறிந்து தெரியப்படுத்தினார். அந்தப் பூஞ்சை Penicillium glaucum என்பதையும் 1871-ல் லிஸ்டர் கண்டறிந்தார், மேலும் இந்தப் பூஞ்சையின் நுண்ணுயிர் எதிர்க்கும் செயல்பாட்டை லிஸ்டர் மனிதர்களுக்கும் சோதனை செய்து பார்த்தார்.

1877-ல் எல்லென் ஜோன்ஸ் என்னும் பெண்மணியின் ஆறாக்காயங்களுக்கு பெனிசிலியம் க்ளாக்கம் பூஞ்சையை ஆய்வகத்தில் வளர்த்தி அதன் சாறெடுத்து அந்தக் களிம்பைப் பூசி குணப்படுத்திய லிஸ்டர் அவரது அந்தக் கண்டுபிடிப்பைப் பிரசுரிக்கவில்லை.

இவரைப்போலவே 1873-ல் வில்லியம் ராபர்ட்ஸ் (என்ஸைம் என்னும் பெயரை உருவாக்கியவர்) 1875-ல் ஜான் டிண்டல், 1876-ல் ராபர்ட் கோச், லூயி பாஸ்டர் ஆகியோரும் பூஞ்சைகள் பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படுவதை கண்டறிந்தார்கள். 

1895-ல் நேபிள்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவரான வின்சென்ஸோ (vincenzo tiberin) அர்சானோ (Arzano) பிரதேசத்தின் ஒரு குடிநீர்க்கிணற்றின் சுவர்களில் படிந்திருக்கும் பூஞ்சைகளைச் சுத்தம் செய்து அகற்றிய பின்னர் அந்த நீரைக் குடித்தவர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கும் வலியும் இருந்ததையும் மீண்டும் கிணற்றின் சுவர்களில் பூஞ்சை வளர்ந்த பின்னர் அப்படி வயிற்றுப்போக்கும் வலியும் ஒருபோதும் வராமலிருந்ததையும் கவனித்தார். தொடர்ந்த ஆய்வுகளுக்குப் பின்னர் கிணற்றுச்சுவரில் வளர்ந்த பூஞ்சைகள் பெனிசிலியம் மற்றும் அஸ்பர்ஜில்லஸ், இவை பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அழித்தன என்ற இவரின் ஆய்வறிக்கை யாருடைய கவனத்திற்கும் வரவில்லை. 

கனடாவை சேர்ந்த உயிரியலாளர் கிளிஃப் (A E Cliffe) 1908-ல் ஐரோப்பாவின் பெரும்பாலான பண்ணை வீடுகளின் சமையலறையில் பூசணம் பிடித்த கஞ்சியும் ரொட்டியும் சேமிக்கப்பட்டிருந்ததையும் காயங்கள், கீறல்கள், கொப்புளங்களுக்கு அதன் சிறு துண்டை நீரில் கரைத்து பூசி சிகிச்சை அளிக்கப்படுவதையும், அப்படி பூசிய பின்னர் அந்தக் காயம் விரைவில் ஆறிவிடுவதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய ஐரோப்பாவில் பூசணம் பிடித்த தானியங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட கஞ்சியையும் இப்படி புண்களை ஆற்றும் சிகிச்சையில் பயன்படுத்தினர்.

1929-ல் பிரண்டா என்னும் பெண்ணின் முகத்தில் உண்டாகி இருந்த பாக்டீரியா தொற்று எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் அதிகரித்துக்கொண்டே போனபோது கடைசி முயற்சியாக அவர்களின் குடும்ப மருத்துவரான ஜேம்ஸ் (James Twomey) மாவுக்கஞ்சியை கொதிக்க வைத்துப் பல நாட்கள் ஆறவைத்து அது பூசணம் பிடித்தபின்னர் அந்தக் கஞ்சியை குழைத்து முகத்தில் பூசியபோது ஒரு வாரத்தில் அவள் முழுக்க குணமானாள். 1989-ல் பிரிட்டிஷ் நுண்ணுயிரியலாளர் மில்டன் (Milton Wainright) அந்தக் கஞ்சியில் வளர்ந்திருந்தது பெனிசிலியமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

பெனிசிலின் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்கினால் கண்டுபிடிக்கப்பட்ட அதே காலகட்டத்தில் (1924) பெல்ஜிய பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆன்றே (Andre Gratia) மற்றும் சாரா (Sara Dath) பூஞ்சைகளின் பாக்டீரியாவுக்கெதிரான செயல்பாடுகுறித்து ஆய்வறிக்கை வெளியிட்டார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வளர்ப்பு ஊடகம் தொலைந்துபோனது.

பெனிசிலின் கண்டறியப்படும் வரைக்கும் இந்த ஆய்வுகள் எந்த முக்கியத்துவமும் பெறவில்லை.

1921-ல் லண்டன் செயின்ட் மேரி மருத்துவமனை ஆய்வகத்தில் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் பணிபுரிந்துகொண்டிருந்தார் ஸ்காட்லாந்தின் இயற்கை அழகு மிகுந்த ஒரு பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த அவர் சூழலைக் கூர்ந்து கவனித்து ரசிக்கும் இயல்பை இளமையிலேயே பெற்றிருந்தார்.

நிதிப் பற்றாக்குறையால் மருத்துவம் படிக்க முடியாமல் இருந்த ஃபிளெமிங்கிற்கு அவரது உறவினர் ஒருவரின் சொத்து கிடைத்தபோது தாமதமாக மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

மருத்துவப்படிப்பை முடித்தபிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் ஃபிளெமிங் உதவியாளராகச் சேர்ந்தார். சால்வர்ஸன் அப்போதுதான் சிபிலிஸ்க்கு எதிரான சிகிசையில் பயன் பட்டுக்கொண்டிருந்தது. ரைட் ஆய்வுக்குழுவினரின் முறிமருந்துகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருந்தனர், எனினும் அப்போது சிகிச்சையில் இருந்த ரசாயன நச்சுமுறி மருந்துகளால் இரத்தத்தின் வெள்ளையணுக்கள் அழிந்து இறப்பு மேலும் அதிகமாவதை ஃபிளெமிங் நிரூபித்தார்.

பக்க விளைவுகளற்ற நச்சு முறிமருந்துகளின் மீது ஃபிளெமிங்கின் கவனம் திரும்பியது. செயிண்ட் மேரி ஆய்வகத்தில் பணியில் இணைந்த ஃபிளெமிங் பல பெட்ரி தட்டுக்களில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை வளர்த்து அவற்றிற்கெதிராகச் சீழ், கண்ணீர், உமிழ்நீர், சளி போன்ற உடல் திரவங்களின் செயல்திறனை ஆராயத் துவங்கினார். 1922-ல் அப்படியான ஒரு நச்சு முறிமருந்தான லைசோஸைம் நொதியை அவர் கண்டுபிடித்தார்,

அந்த ஆய்வின் ஒரு பகுதியாகத்தான் Staphylococcus aureus என்னும் பாக்டீரியா, ஊடகத்தில் வளரும் விதங்களில் இருந்த வேறுபாட்டை அவர் ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆய்வின் முடிவுகளை System of Bacteriology சஞ்சிகையில் கட்டுரையாகப் பிரசுரிக்கவும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆய்வகத்தில் பல பெட்ரி தட்டுக்களில் அந்தப் பாக்டீரியா வளர்ந்து கொண்டிருந்தது.

1928, ஆகஸ்ட்டில் தன் குடும்பத்தினருடன் விடுமுறைக்காகச் சொந்த ஊரான சஃபோல்க்’கிற்கு ஃபிளெமிங் சென்றிருந்தார். ஊருக்குப் போகும் முன்பு அந்தப் பாக்டீரியாக்கள் இருந்த பெட்ரி தட்டுக்களை சூரிய ஒளி படாத இடத்தில் மேசையில் வைத்துவிட்டு சென்றிருந்தார்.

விடுமுறைக் காலத்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அந்த மருத்துவமனையின் உயர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்ததால் செப்டம்பர் 1-ம் தேதி புதிய பணியில் சேர ஃபிளெமிங் மருத்துவமனைக்குத் திரும்பினார். 

அவருடன் முன்பு மருத்துவ உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த டேனியலும் (Daniel Merlin Pryce) அன்று உடனிருந்தார். இருவருமாகப் பாக்டீரியாக்கள் வளர்ந்திருந்த பெட்ரி தட்டுக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கையில் அவற்றில் ஒன்றின் மூடி திறந்திருந்ததையும் அந்தத் தட்டு முழுக்க நீலப்பச்சை பூசணம் பிடித்திருப்பதையும் டேனியல் பார்த்தார்.

அதை ஃபிளெமிங்கிற்கு அவர் சுட்டிக்காட்டியபோது பூஞ்சை வளர்ந்திருந்த அந்தத் தட்டில் பாக்டீரியா வளரவில்லை என்பதை இருவரும் கண்டார்கள். அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் அப்போது டேனியலிடம் ’’இது வேடிக்கையாக இருக்கிறது’’ என்றார். டேனியல் பதிலுக்கு ’ஆம் இப்படித்தான் நீங்கள் லைசோஸைமையும் கண்டுபிடித்தீர்கள்’’ என்றார்.

மீண்டும் விடுமுறையை தொடர்ந்த, அந்தக் கண்டுபிடிப்பின் தீவிரத்தை அப்போது உணர்ந்திருக்காத, ஃபிளெமிங் தன் ஆய்வகத்துக்கு செப்டம்பர் இறுதியில் திரும்பினார்.

முன்பு வளர்ந்திருந்த அந்த நீலப்பச்சை பூஞ்சையான பெனிசிலியத்தை உபயோகித்து மீண்டும் பாக்டீரியா வளர்ச்சியை ஆராய்ந்தபோது அந்தப் பெனிசிலியத்தின் ஏதோ ஒன்று பாக்டீரியாக்களை வளரவிடாமல் அழிப்பதை உறுதி செய்தார். 

தொடர்ந்து அந்த ஆராய்ச்சியில் பல வகையான பாக்டீரியாக்களை வளர்த்த அவர் இறுதியாகப் பெனிசிலியம், குறிப்பிட்ட சில பாக்டீரியாக்களுக்கு எதிராக மட்டும் செயல்புரிவதை உறுதி செய்தார். 

ஃபிளமிங் பாக்டீரியாக்களில் ஆராய்ச்சி செய்துவந்த வல்லுநர் என்பதால் பூஞ்சைகளைக் குறித்த அந்த ஆய்வில் அவரால் ஆழமாக ஈடுபடமுடியவைல்லை. பெனிசிலியத்தின் எது பாக்டீரியாக்களை அழிக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை. இருந்தும் 1929, மார்ச் 7-ல் அந்தக் குறிப்பிட்ட (அப்போது ஆன்டிபயாடிக் என்று பெயரிடப்பட்டிருக்காத) ஒன்றுக்கு பெனிசிலின் என்று பெயரிட்டார். பிற்பாடு ஒரு நேர்காணலில் ’’ஏன் பெனிசிலின் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்ற கேள்விக்கு ’எப்படி டிஜிட்டாலிஸிலிருந்து டிஜிடாலின் கண்டுபிடிக்கப்பட்டதோ அதுபோலவே பெனிசிலியத்திலிருந்து பெனிசிலின்’ என்றார்.

ஆனால் ஃபிளெமிங் கண்டுபிடித்தது பெனிசிலியத்தின் எந்தச் சிற்றினம் என்பதில் குழப்பம் நிழவியது அது நொட்டேட்டம், ரூப்ரம், கிரைசோஜீனம், கிரைசோஜினத்திலேயே சிறிய கொனிடியாக்களை கொண்டது, சயனோஃபல்வம், மீலியாகிரைனம் அன்று பலர் பலவிதமாகக் குறிப்பிட்டார்கள்.

ஃபிளெமிங் இந்த ஆரய்ச்சியை குறித்து சக ஆராய்ச்சியாளர்களிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டபோது யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை, மாறாக அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னார்கள். 

ஃபிளெமிங் 1929, பிப்ரவரி 13 அன்று இதைக் குறித்த ஆய்வுக்கட்டுரையை மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் முன்பாகச் சமர்ப்பித்து தனது கண்டுபிடிப்பையும் விளக்கினார், அந்தக் குழுவினர் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மே 1929-ல் ஃபிளெமிங் மீண்டும் அந்த ஆராய்ச்சியைக் குறித்த கட்டுரையை British Journal of Experimental Pathology-க்கு அனுப்பினார். அந்தக் கட்டுரையில் பெனிசிலியத்தின் பாக்டீரியாவுக்கெதிரான செயல்பாட்டைக் குறித்து அதிக கவனம் கொண்டிருந்த ஃபிளெமிங் அதன் மருத்துவ உபயோகங்கள் குறித்த தனது தெளிவின்மையையும் குறிப்பிட்டிருந்தார்.

பெனிசிலின் தனியே பிரித்தெடுத்தல்

ஃபிளெமிங்கிற்கு வேதியியல் ஆய்வுகளில் அத்தனை பரிச்சயமில்லை அவரே ’’நான் ஒரு பாக்டீரியாலஜிஸ்ட் மட்டும்தான் வேதியியலாளரல்ல’’ என்று சொல்லியும் இருக்கிறார். எனவே பெனிசிலியம் பூஞ்சையின் வேதியியல் இயல்புகளை ஆராய டிசம்பர் 1928-ல் ஸ்டூவர்ட் (Stuart Craddock), என்பவரை ஆய்வக உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். 

அடுத்து ஜனவரி 1929-ல் உயிர்வேதியியலாளரான ஃப்ரெட்ரிக்கையும் (Frederick Ridley) இணைத்துக்கொண்டார். ஆனால் பெனிசிலின் அடையவிருந்த உலகப்பிரசித்தி குறித்து எந்த யூகமும் இல்லாத இருவரும் ஃபிளெமிங்கை விட்டுவிட்டு வேறொரு ஆய்வகத்தில் பணியில் சேர்ந்து கொண்டனர்.

எனவே ஃபிளெமிங் பெனிசிலியத்தின் வேதிப்பண்புகளை ஆராயாமல் அப்படியே விட்டுவிட்டு அதன் உயிரியல் பண்புகளை மட்டும் ஆராய்ந்தார்.

ஆனால் ஆய்வகத்துக்கு வெளியே பெனிசிலியம் எப்படி பெட்ரி தட்டுகளுக்கு வந்திருக்கக்கூடும் எனப் பலவிதமான யூகங்கள் உருவாகின. ஃபிளெமிங் ஆய்வகத்தை அத்தனை தூய்மையாக வைத்திருக்காதவர் என்று அனைவருக்கும் தெரியும்.

ஒரு சாரார் ஃபிளெமிங் குடித்துவிட்டு கழுவ மறந்த காபி கோப்பையிலிருந்து பெனிசிலியம் உருவாகி இருக்கலாம் என்றார்கள். 1945-ல் ஃபிளெமிங் அந்தப் பூஞ்சையின் ஸ்போர்கள் பிரேய்ட் (Praed) சாலையை நோக்கித் திறந்திருந்த ஜன்னல் வழியே வந்திருக்க கூடும் என்றார். இந்த ஜன்னல் கருத்து அதன்பின்னர் பல கட்டுரைகளிலும் 1945-ல் வெளியான நூலான The Story of Penicillin -லும் இடம்பெற்றது எனினும் ஃபிளெமிங்கின் உதவியாளரான டேனியல் அந்த ஜன்னல் அப்போது மூடியே இருந்தது என்பதை பிற்பாடு தெரிவித்தார்.

அந்த இரண்டடுக்கு மாடி கட்டிடத்தின் மற்றொரு தளத்தில் பணிபுரிந்த ரொனால்டு (Ronald Hare) அந்த ஜன்னலின் முன்பாக இருந்த மிகக் கனமான மேசையினால் அந்த ஜன்னல் ஒருபோதும் திறக்கப்படவே இல்லை என்பதை 1970-ல் குறிப்பிட்டார்.

ஃபிளெமிங்கின் ஆய்வகம் இருந்த தளத்தின் கீழ்த் தளத்தில் இயங்கிய ஆய்வகத்தில் ஆஸ்துமாவுக்கு காரணமானவை என்று கருதப்பட்ட பெனிசிலியம் உள்ளிட்ட பல பூஞ்சைகளில் ஆய்வு நடந்தது, பூஞ்சைகள் பல பெட்ரி தட்டுக்களில் அங்கு வளர்க்கப்பட்டன. அந்த மருத்துவமனையில் அப்போதுதான் இணைந்திருந்த பூஞ்சையியலாளர் ஜான் பேட்ரிக் (John Patrick La Touche) பெனிசிலியத்தின் ஸ்போர்கள் காற்றில் பறந்து வந்து கதவு வழியே ஃபிளெமிங்கின் ஆய்வகத்துக்குள் நுழைந்திருக்கலாமென யூகித்தார். அவர் ஃபிளெமிங்கின் ஆய்வக பெட்ரி தட்டுக்களில் வளர்ந்திருந்தது பெனிசிலியம் ரூப்ரம் (Penicillium rubrum) என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் அது நொட்டேட்டம்தான் என்னும் உறுதியான கருத்தும் நிலவியது.

பெனிசிலியம் பூஞ்சையின் சாற்றைக் கொண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஃபிளெமிங் அந்தப் பூஞ்சைச்சாறு பல பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்புரிவதை அறிந்தார். அப்போது உலகெங்கிலும் பாக்டீரியா தொற்றுக்கெதிரான முறிமருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

1933-ல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் நோயியல் பிரிவில் பணியாற்றிய ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான ஃப்ளோரேவிடம் (Howard Florey), வேதியியலளரான செயின் (Ernst boris chain) உதவியாளராக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கண்டுபிடிக்கும் ஆய்வில் இணைந்தார். ஃப்ளொரே அவரிடம் ஃபிளெமிங் 1922-ல் கண்டுபிடித்திருந்த லைசோஸைமின் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளை ஆராயச்சொல்லி இருந்தார்.

1929-ல் ஃபிளெமிங் பெனிசிலியம் பூஞ்சையின் பாக்டீரிய எதிர்ப்பைக் குறித்து எழுதிய பழைய கட்டுரையை இருவரும் வாசித்தார்கள். அதன்பின்னர், ஃப்ளோரேவும் செயினும் பெனிசிலினின் மருத்துவ உபயோகங்களை முன்கூட்டியே யூகித்தார்கள்

எனவே நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கண்டுபிடிக்கும் ஆராய்சிக்காக ராக்ஃபெல்லர் அறக்கட்டளையில் (Rockefeller Foundation) 25000 டாலர் உதவித்தொகையை பெற்று, ஒரு ஆராய்ச்சி குழுவை அமைத்து ஆய்வில் ஈடுபட்டார்கள். 

அக்குழுவில் அவர்கள் இருவருடன் நார்மன் ஹீட்லி (Norman Heatley) உள்ளிட்ட 6 பேர் இருந்தார்கள். அக்குழு பெனிசிலியம் ரூபென்ஸிலிருந்து (P. rubens) பழுப்புப் பொடியை உருவாக்கி அந்தப் பொடி பாக்டீரிய வளர்ச்சியை ஆய்வகத்திலும், பாக்டீரிய நோய்களை எலிகளிலும் குணமாக்கியதை கண்டறிந்தார்கள்.1939-ல் நடைபெற்ற இந்த ஆய்வுகளை 1940-ல் The Lancet மருத்துவ சஞ்சிகையில் இக்குழுவினர் வெளியிட்டனர்

1941-ல் பெனிசீலியம் பூஞ்சையிலிருந்து அதிக அளவில் பெனிசிலினை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை இக்குழு வெளியிட்டது.1942-ல் அக்குழு துய பெனிசிலினை பிரித்தெடுத்து அதன் மூலக்கூறு சூத்திரமான C24H32O10N2Ba என்பதையும் வெளியிட்டது.

இந்த மூலக்கூறு சூத்திரத்தில் பெனிசிலினின் சல்ஃபர் குறிப்பிடப் பட்டிருக்காததால் பல மாதங்களுக்குக் குழப்பம் நிலவியது. பின்னர் அதே குழு அந்த மூலக்கூறை திருத்தி C5H11O2SNHCl என்று சரியாக வெளியிட்டது. 

1942 ஜூனில் அக்குழு British Journal of Experimental Pathology- யில் வெளியிட்ட கட்டுரையில் இந்தத் தூய பெனிசிலின் பிரித்தெடுக்கப்பட்டதையும், அதன் பாக்டீரிய தொற்றுகளுக்கெதிரான மருத்துவ உபயோகங்களையும் விவரித்திருந்தது.

பெனிசிலினின் மருத்துவ சிகிச்சைகள்

ஜனவரி 1929-ல் ஃபிளெமிங்கின் உதவியாளராக இருந்த கிரடோக்கிற்கு மூக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மூக்கினுள் பாக்டீரியத் தொற்று உண்டாகி இருந்தது. ஃபிளெமிங் அவருக்குப் பென்சிலின் ஊசியை அளித்தார் ஆனால் அவருக்கு அந்தச் சிகிச்சை பலனளிக்கவில்லை. பிற்பாடு அந்தத் தொற்று பெனிசிலினால் குணப்படுத்த முடியாத (Haemophilus influenzae) பாக்டீரியாவினால் உண்டானது என்பது தெரிய வந்தது.

நவம்பர் 1930-ல் இங்கிலாந்தின் தெற்குப் பகுதி மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த நோயியலாளரும் ஃபிளெமிங்கின் முன்னால் மாணவருமான பெய்னி (Cecil George Paine), ஃபிளெமிங்கிடமிருந்து பெனிசிலின் இருந்த பூஞ்சைச்சாற்றை கேட்டுப்பெற்று மூன்று குழந்தைகள் உட்பட சிலரின் கண் நோயைக் குணப்படுத்தினார்.

அதற்கு 9 வருடங்கள் கழித்துத்தான் ஆக்ஸ்போர்டு குழுவினர் 1940, ஆகஸ்ட் 24-ல் லேன்செட் சஞ்சிகையில் “Penicillin as a chemotherapeutic agent என்னும் ஆய்வுக்கட்டுரையில் பெனிசிலின் மருத்துவ உபயோகத்தை வெளியிட்டனர்.

அடுத்த ஆண்டு ரோஜா பாத்தியில் தலைகுப்புற விழுந்து முகமெங்கும் முட்கள் கிழித்த காயம் புரையோடிப்போன ஆல்பெர்ட் அலெக்ஸாண்டர் (Albert Alexander) என்னும் காவலர் இந்த ஆய்வுக்குழுவினரிடம் சிகிச்சைக்கென 1941 பிப்ரவரி 12 அன்று அழைத்து வரப்பட்டார்.

அவருக்கு முன்பு அளிக்கப்பட்ட அனைத்து வகையான சிகிச்சைகளும் பயனற்றுப்போய் முகம் மற்றும் தலையெங்கும் சீழ் பிடித்திருந்தது. மிக மோசமான பாக்டீரியத் தொற்றினால் பாதிக்கப்பட்டதால் அவரது ஒரு கண் அறுவை சிகிச்சையில் நீக்கப்பட்டிருந்தது.

அதுவரை மனிதர்களில் தீவிர சிகிச்சைக்கெனப் பெனிசிலினை உபயோகப்படுத்தி இருக்காத அக்குழுவினர் தயங்கினாலும் அலெக்ஸாண்டரின் கவலைக்கிடமான நிலையை உத்தேசித்து அவருக்குப் பெனிசிலினின் முதல் ஊசியை அளித்தார்கள்.

முதல் ஊசியிலேயே உடல்நிலையில் நலல முன்னேற்றம் இருந்தது எனினும் துரதிர்ஷ்டவசமாகப் பெனிசிலின் கையிருப்பு சில நாட்களுக்கு மட்டுமே இருந்ததால், ஐந்து நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது, மீண்டும் பெனிசிலினை உருவாக்கும் முயற்சியில் ஆய்வுக்குழுவினர் இருந்தபோது சிகிச்சை தொடராததால் அலெக்ஸாண்டர் 1941 மார்ச் 15 அன்று அன்று நோய் முற்றி மரணமடைந்தார்.

பிறகு கிடைத்த குறைந்த அளவிலான பெனிசிலினைக் கொண்டு அதிக மருந்து தேவைப்படாத குழந்தைகளுக்கு அக்குழுவினர் வெற்றிகரமாகச் சிகிச்சையளித்தனர். பெனிசிலின் மிக மிகக் குறைந்த அளவில் கிடைத்துக் கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பொதுமக்களுக்கும் ராணுவத்தினருக்கும் சிகிச்சை அளிக்கப் பெனிசிலின் தட்டுப்பாடு நிலவியது

1942 ஆகஸ்டில் முதல் வெற்றிகரமான பெனிசிலின் சிகிச்சை நடந்தது. நரம்பு மண்டலத்தில் தீவிரமான பாக்டீரியா தொற்று உருவாகி இருந்த ஹேரி (Harry Lambert) என்பவருக்கு ஃபிளெமிங் சிகிச்சை அளித்தார். ஃப்ளோரேவிடமிருந்து தூய பெனிசிலின் ஊசியைப் பெற்று ஃபிளெமிங் அவருக்கு முதுகுத்தண்டுவடத்தில் செலுத்தினார். மறுநாளே உடல்நிலையில் நல்ல முன்னேற்றமிருந்தது, ஹேரி ஒரு வாரத்தில் முழுக்க குணமடைந்தார். இந்தச் சிகிச்சையின் விவரங்களை 1943-ல் லேன்செட் சஞ்சிகையில் வெளியிட்டார்.

உடனே அரசு ஃபிளெமிங்கை தலைவராகக் கொண்ட பெனிசிலின் குழுவை அமைத்தது. அக்குழுவில் ஃப்ளோரேவும் ஹீட்லியும், செயினும் பிற விஞ்ஞானிகளும், மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக இருந்தார்கள். 

ஃப்ளொரேயும் ஃபிளெமிங்கும் ஹீட்லியும் எத்தனை முயன்றும் மருந்து நிறுவனங்கள் பெனிசிலினை தயாரிக்க அதிகஅளவில் முன்வரவில்லை. ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் பெனிசிலினின் அளவுக்கும் பெனிசிலின் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது.

குழுவில் இருந்த நார்மன் ஹீட்லி உயிர்வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். அந்த ஆய்வகத்தில் ஆராய்ச்சி மட்டுமல்லாது பெனிசிலின் தயாரிப்புக்கான எல்லா வேலைகளிலும் ஹீட்லி தன்னை மனமுவந்து ஈடுபடுத்திக்கொண்டார். மின்சாரப் பழுது, குழாய்கள் பதிப்பது இவற்றோடு மரவேலைகளைக்கூட அவர் செய்தார்.

பெனிசிலியம் வளர்க்க கொள்கலன்கள் பற்றாக்குறையானபோது ஹீட்லி நோயாளிகளின் கழிகலன்களில் கூடப் பெனிசிலியம் பூஞ்சையை வளர்த்தார்.

1940-ல் சீனக்களிமண்ணில் 500 வளர்ப்புக்கலங்களை வடிவமைத்து 6 பெண்களை உதவிக்கு அமர்த்திக்கொண்டு அவற்றில் பெனிசிலியத்தை வளர்த்தார். (அந்தப் பெண்கள் மருத்துவ வரலாற்றில் ‘penicillin girls’ எனக் குறிப்பிடப்பட்டனர்) 

வளர்ந்த பெனிசிலியத்திலிருந்து பெனிசிலினை பிரித்தெடுக்க அவரே தயிர் கடையும் மத்து, குடிநீர் பாட்டில்கள், ரப்பர் மற்றும் கண்ணாடிக் குழாய்களை இணைத்து ஒரு கருவியை வடிவமைத்தார். அதில் பெனிசிலின் தயாராகி புட்டி நிறைந்ததும் தெரிவிக்க ஒரு அழைப்பு மணியையும் இணைத்திருந்தார். அந்தக் கருவி 6 அடி உயரத்தில் ஒரு நூலகத்திலிருந்து வாங்கிவந்த புத்தக அலமாரியுடன் இணைத்து நிற்க வைக்கப்பட்டிருந்தது. 

1941-ல் ஹீட்லியின் இந்த ஆய்வகத் தயாரிப்பிலிருந்து மட்டுமே சுமார் 2 மில்லியன் யூனிட் பெனிசிலின் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பின்னரே ஹீட்லியும் ஃப்ளோரேவும் அமெரிக்காவிற்கு பெனிசிலின் தொழிற்சாலை உற்பத்திக்கான பேச்சுவார்த்தைக்கெனப் புறப்பட்டுச் சென்றார்கள்.

போர்க்காலமென்பதால் ஃப்ளோரேயும் ஹீட்லியும் பெனிசிலியம் பூஞ்சையைச் சோதனைக்குழாய்களில் எடுத்துச்சென்றால் பிடிபடும் சாத்தியங்கள் இருந்தன. எனவே அவர்கள் இருவரும் அணிந்திருந்த கோட்டின் உட்புறத்தில் பெனிசிலியம் பூஞ்சையைத் தேய்த்துக்கொண்டு அமெரிக்காவிற்கு பயணித்தார்கள்.

அமெரிக்க மருந்து நிறுவனங்களின் முதலாளிகளைச் சந்தித்து பென்சிலின் தயாரிப்பின் சந்தை நிலவரத்தை விளக்கியபோது அவர்கள் வெகு ஆர்வமாக அதைத் தயாரிக்க முன்வந்தார்கள். 

எனினும் ஜூலை மாத இறுதியில் அந்தப் பெனிசிலியத்தின் சிற்றினமான நொட்டேட்டம் மிகக் குறைவாகவே பென்சிலினை அளித்தது. பூஞ்சையியலாளர் கென்னெத் (Kenneth Briyan Reper) பென்சிலியத்தின் பல சிற்றினங்களை மருந்து நிறுவனங்களுக்கு அளித்தார். 

பெனிசிலின் வரலாற்றில் குறிப்பிடப்படும் பெனிசிலியம் கிரைசோஜீனம் எனப்படும் பொன்னிறப் பூஞ்சை அப்போதுதான் பெனிசிலின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டது. 

அந்தப் பெனிசிலியத்தை ஆய்வக உதவியாளர் மேரி கொண்டுவந்தார், அவரே பூசாண மேரி (Moldy mary) என்று புகழ்பெற்றார் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று சொல்லிய கென்னெத் அந்தப் பூசணம் பிடித்த பழம் அருகிலிருந்த பழக்கடையிலிருந்து ஒரு பெண்ணால் கொண்டு வரப்பட்டது என்றார். P. notatum சிற்றினத்தைவிட P. chrysogenum 6 மடங்கு அதிக பெனிசிலினை அளித்தது.

1941-லிருந்து 43-க்குள் கென்னெத்தும் பிற விஞ்ஞானிகளும் இணைந்து பெருமளவில் பெனிசிலின் தயாரிப்பதை சாத்தியமாக்கினார்கள். பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு 

1942, ஆகஸ்டில் ஃப்ளோரே streptococcal meningitis எனும் பாக்டீரியத் தொற்றினால் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு நோயாளியைப் பெனிசிலின் அளித்துக் குணப்படுத்தினார். இந்தச்செய்தியை வெளியிட்ட டைம்ஸ் நாளிதழ் ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து பெனிசிலின் உருவாகியதாகக் குறிப்பிட்டிருந்தது. ஃப்ளொரே, செயின் ஆகியோரின் பெயர்கள் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருக்கப்படவில்லை.

செயின்ட் மேரி மருத்துவமனையில் ஃபிளெமிங்கின் மேலதிகாரி உடனடியாகத் தலையிட்டு இந்த விஷயத்தில் ஃபிளெமிங்கிற்கே எல்லாப்புகழும் சேரவெண்டுமென நாளிதழ் அலுவலகத்தில் தெரிவித்தார். ஃபிளெமிங் மகிழ்ச்சியுடன் நிருபர்களுக்குப் பெனிசிலின் கண்டுபிடிப்பைக் குறித்து பேட்டியளித்தார்.

ஃப்ளோரே பேட்டியளிக்காததோடு ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குழுவினர் யாரும் எந்தப் பேட்டியும் கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளையும் விதித்தார். எனவே பெனிசிலின் கண்டுபிடிப்பு முழுக்க ஃபிளெமிங் என்னும் ஒற்றை மனிதரால் தான் சாத்தியமானது எனும் சித்திரம் பொதுவெளியில் உருவானது. உண்மையில் ஃபிளெமிங் 1931-ல் பெனிசிலியம் குறித்த ஆய்வை நிறுத்திக்கொண்டார். அதன்பின்னர் புளோரேவும், செயினும்தான் முழுவீச்சில் அந்த ஆய்வில் இருந்தனர்.

அப்போதுதான் துரதிர்ஷ்டவசமாக 1942 நவம்பரில் கோக்கனட் க்ரூவ் தீவிபத்து உண்டாகி பெனிசிலினின் உயிர்காக்கும் செயல்பாடு உலகிற்கு தெரிய வந்தது.

பிற்பாடு காதலர்கள் ’’என்னை எல்லா துயரங்களிலும் இருந்து விடுவிக்கும் பெனிசிலின் நீ’’ என்றெல்லாம் கடிதம் எழுதிக்கொண்டார்கள்

பெனிசிலினின் வேதிவடிவம் 1942-ல் எட்வர்ட் ஆப்ரஹாமினால் (Edward Abrahaam) கண்டறியப்பட்டது. பின்னர் மூன்று வருடங்கள் கழித்து பெனிசிலினின் திருத்தப்பட்ட வேதிவடிவத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த டோரதி மேரி (Dorothy mary Hodgkin) கண்டறிந்தார். 

அதே சமயத்தில் பல பல்கலைக்கழகங்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்களில் பெனிசிலினின் வேதி வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்தனை முடிவுகளும் science இதழில் வெளிவந்த போதுதான் பல விதமான பெனிசிலின்கள் இருப்பதும் அவை அனைத்திற்கும் beta-lactam என்னும் வடிவம் பொதுவாக இருப்பதும் தெரியவந்தது.

ஐக்கிய பேரரசில் பெனிசிலின் Penicillin I, Penicillin II, Penicillin III மற்றும் Penicillin IV என அவை கண்டுபிடிக்கப்பட்ட காலத்தை வரிசைக்கிரமமாக ரோமானிய எண்களால் குறிப்பிடப்பட்டு பெயரிடப்பட்டது.

அமெரிக்க விஞ்ஞானிகள் பெனிசிலினை, F G, K, X என்று அவை எதிலிருந்து பெறப்பட்டதோ அதைக்குறிக்கும் ஆங்கில எழுத்துக்களுடன் குறிப்பிட்டார்கள்.

இப்படி பெனிசிலினுக்கு இரண்டு விதமான பெயர்கள் இருந்தது குழப்பத்தை உண்டு பண்ணியது.1948-ல் செயின் இந்தக் குழப்பத்தைப் போக்க ரோமானிய எண்களையும் ஆங்கில எழுத்துக்களையும் நீக்கிவிட்டு பெனிசிலினுக்கு பின்னொட்டாக அதன் வேறுபட்டிருக்கும் R பக்கச்சங்கிலியை குறிப்பிடலாம் என்னும் முறையை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் ஆஸ்திரியாவில் வாய்வழி மருந்தாக எடுத்துக் கொள்ளும் வடிவத்தில் பெனிசிலின் v 1952-ல் கண்டுபிடிக்கப்பட்டது. 1957-ல் வேதிப்பொருட்களிலிருந்து செயற்கை பெனிசிலின் தயாரிப்பும் கண்டறியப்பட்டது.

பெனிசிலினின் பெயரில், வேதி வடிவத்தில், மூலக்கூறு சூத்திரங்களில் குழப்பம் இருந்ததைப் போலவே பெனிசிலினுக்கு காப்புரிமை பெறுவதிலும் சிக்கல்களும் குழப்பங்களும் இருந்தன. 

செயின் பெனிசிலினுக்கு காப்புரிமை வாங்க முயன்றார். ஆனால் ஃப்ளோரேவும் பிறரும் அப்படி பெனிசிலின் கண்டுபிடிப்பை ஒருவர் சொந்தம் கொள்வது சரியல்ல பெனிசிலின் பொதுமக்களின் பயன்பாட்டில் இருக்க வேண்டும், காப்புரிமை பெற வேண்டியதில்லை என்று வாதிட்டனர்.

மேலும் பல முக்கியஸ்தர்களை செயின் சந்தித்து இதுகுறித்து கேட்டபோதும் பெனிசிலின் என்னும் உயிர்காக்கும் மருந்துக்கு அப்படி அவர் காப்புரிமை பெறுவது அறமற்ற செயல் என்றுதான் சொல்லப்பட்டது. மனம் தளராத செயின் மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைவரை அணுகினார் அவரும் அறமில்லாத செயல் என்று குறிப்பிட்ட பின்னர் செயின் அந்த முடிவைப் பல கசப்பான அனுபவங்களுக்குப் பின்னர் கைவிடுவதாக அறிவித்தார்.

1945-ல் மோயர் பெனிசிலியம் பூஞ்சையிலிருந்து பெனிசிலினை பெருமளவில் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் முறைகளுக்குக் காப்புரிமையை பிரிட்டிஷ் காப்புரிமை அலுவலகத்திலிருந்து பெற்று அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு விற்றார். 

இதைக்கேள்விப்பட்ட ஃபிளெமிங் “பெனிசிலினை நான் கண்டறிந்து மக்களின் நலனுக்காக அளித்தேன் அதை ஏன் இன்னொரு நாட்டின் லாபம் சம்பாதிக்கும் வணிக முதலாளிகளுக்கு அளிக்க வேண்டும்?“ என்று கேட்டார்.

பெனிசிலின் இரண்டம் உலகப்போரின் ஆயிரக்கணக்கான இறப்புக்களையும், ஆயிரக்கணக்கானோருக்கு ஆறாத புண்களால் கைகால்கள் வெட்டியகற்றப்படுவதையும் நிறுத்தியது. பெனிசிலின் கண்டுபிடிப்புக்காக ஃபிளெமிங், ஃப்ளோரே மற்றும் செயின் 1945-ல் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஃபிளெமிங் தனது நோபல் ஏற்புரையில் வருங்காலத்தில் பெனிசிலின் எல்லோரும் வாங்கக்கூடிய வகையில் மருந்துக்கடைகளில் கிடைக்கலாம் அப்போது அதைக் குறித்து அறிந்திருக்காத சாமான்யர்கள் பெனிசிலினை அதிகமாக உபயோகித்து பெனிசிலினால் எதிர்க்கப்படவேண்டிய பாக்டீரியாக்கள் பெனிசிலினுக்கான எதிர்ப்பைப் பெற்று விடும் அபாயம் இருப்பதாக எச்சரித்திருந்தார். அந்த ஆபத்து பின்னர் நிகழ்ந்து விட்டிருந்தது

அவர்களுக்கு நோபல் பரிசுடன் பலநூறு விருதுகளும் பாராட்டுகளும் அங்கீகாரங்களும் குவிந்தன. ஃபிளெமிங்கிற்கு ஆறாம் ஜார்ஜ் மன்னரால் நைட் பட்டம், 25 கெளரவ பட்டங்கள், 26 பதக்கங்கள், 18 விருதுகள், 13 அலங்கார பதக்கங்கள்,89 அறிவியல் அமைப்புக்களின் உறுப்பினர் பதவிகள் ஆகியவை அளிக்கப்பட்டன.

1999-ம் ஆண்டில் டைம் சஞ்சிகை வெளியிட்ட 20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் ஃபிளெமிங் இருந்தார். 2002 ஆம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தேர்வுசெய்யப்பட்ட பிரித்தானியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலிலும் ஃபிளெமிங் இருந்தார். செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதைக்கு இடையே அமைந்துள்ள ஒரு சிறுகோளுக்கு 91006 ஃபிளெமிங் எனப் பெயரிடப்பட்டது. 

பாராட்டுகளிலும் புகழிலும் ஆர்வமற்றிருந்த ஃப்ளோரேவுக்கு நைட் பட்டம் அளிக்கப்பட்டது. எடின்பர்க் பலக்லைக்கழகத்தின் கேமரூன் பரிசு, லிஸ்டர் பதக்கம், பல்வெறு பல்கலைக்கழகங்களின் கெளரவ பட்டங்கள், ராயல் மருத்துவ சொஸைட்டியின் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல கெளரவங்கள் அளிக்கபட்டன.

செயினும் ஸ்வீடன் மருத்துவக்கழகத்தின் வெள்ளிப்பதக்கம், பாஸ்டர் நிறுவனத்தின் பதக்கம், பல நினைவு விருதுகள், பால் எரிலிச் நூற்றாண்டு விருது. லண்டன் மருந்து நிறுவனங்களின் தங்கப்பதக்கம், இத்தாலியின் பதக்கவிருது, ராயல் சொசைட்டியின் உறுப்பினர் பதவி, பல பல்கலைக்கழகங்களின் கெளரவ பட்டங்கள் ஆகியவற்றை பெற்றார்.

ஆனால் ஹீட்லியின் பெயரும் பெனிசிலின் கண்டுபிடிப்பில் அவரது பங்களிப்பும் முற்றிலும் மறக்கப்பட்டது.

1990-ல் அவரது 79-வது வயதில்தான் மருத்துவர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்ட மருத்துவத்துறைக்கான கெளரவ டாக்டர் பட்டம் 800 வருடங்களுக்குப் பின்னர் முதன்முறையாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினால் அளிக்கப்பட்டது

1964-ல் ஹோட்கின் மேரி எக்ஸ்ரே கதிர்களை உபயோகித்து பெனிசிலின் உள்ளிட்ட பல உயிர்வேதிப்பொருட்களின் வடிவங்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றார்.

2000-ம் ஆண்டின் இறுதியில் ஸ்வீடனின் புகழ்பெற்ற மூன்று சஞ்சிகைகள் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்திருந்தன. 

பெனிசிலினுக்குப் பிறகு ஸ்ட்ரெப்டோமைசின் உள்ளிட பல நுண்ணுயிர் எதிர்ப்பிக்கள் கண்டுபிடிக்கபட்டன. எனினும் பிற்காலத்தில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு விதியின் கரங்களால் நகர்த்தப்பட்டு திறந்திருந்த கதவின் வழியே அந்தக் கீழ்த்தளத்து ஆய்வகத்திலிருந்து காற்றில் ஃப்ளெமிங்கின் ஆய்வகத்துக்கு வந்து சேர்ந்து, வளர்ந்து ஃப்ளெமிங்கினால் காணப்படவேண்டி காத்துக்கொண்டிருந்த பெனிசிலியப் பூஞ்சை மருத்துவ வரலாற்றை மாற்றியமைத்தது.

மேலதிகத் தகவல்களுக்கு:

உள்ளொழுக்கு!

 பலர் இது மனதை கனக்கச்செய்ததாகச் சொல்லி இருந்தார்கள் எனக்கென்னவோ படம் பார்த்து முடிந்ததும் பெரிய விடுபடல் இருந்தது. படத்தின் இறுதிக்காட்சி காட்டும் காதலை துறத்தல்,மன்னித்தல் மறத்தலினால் அல்ல. இன்னாது அம்ம இவ்வுலகு என்பதை மீண்டும் நினைவு படுத்திய திரைப்படம் என்பதால்.

தாமஸ் குட்டியின் அந்த நீல நிற ஃபைலை பார்த்துவிட்டுப் பார்வதி சவப்பெட்டியின் முன்னமர்ந்து ஊர்வசியிடம் பேசுவதும்,  ’’நின்ன கட்டியவனாடி இவிட கிடக்குன்னது’’ என்னும் ஊர்வசிக்கு பார்வதி திரும்பச்சொல்வதும் நிறைவளித்தது.

அந்த சிஸ்டர் தெரிவிக்கும் உண்மையும், பிறகு  இருட்டில் சமையலறையில் பார்வதியின் அம்மா சொல்லுவதும் எனக்கு அதிர்ச்சியாகவே இல்லை. இங்கும் ஒரு ’சிஸ்டர்’ இங்கும் ஒரு அன்னை என்று நினைத்துக்கொண்டேன்.புன்னகைத்தும் கொண்டேன். இறுதியில் பார்வதிக்காவது பற்றிக்கொள்ள ஊர்வசியின் தளர்ந்த கைகள் இருந்தது ஆசுவாசம் அளித்தது. எனது உள்ளொழுக்கின் வேகம் இனி மட்டுப்படலாம்.

பாப்பட்டாங்குழல் நோம்பி!

இன்று ஆடிப்பெருக்கு. தொடர் மழையில் ஆறு குளம் அணைக்கட்டு எல்லாம் நிரம்பி இருக்கிறது. அம்பராம்பாளையம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஆழியார் அணையின் கொள்ளளவை நீர் எட்டிவிட்டதால் 11 மதகுகளிலும் நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது, ஆற்றையும்அணையையும்  வேடிக்கை பார்க்க  இன்று ஏராளமானோர்  வந்து கொண்டிருக்கின்றனர்.

தென்னிந்தியா முழுக்க ஆடிப்பெருக்கு என்றால் ஓடும் நீரை பார்ப்பதும் கலந்த சாதம் சமைத்து எடுத்துச்சென்று ஆற்றங்கரைகளில் அமர்ந்து உண்பதுவும் தான் வழக்கம்

ஆனால் வேட்டைக்காரன் புதூர் ஆனைமலை கிராமங்களில் மட்டும் இன்றைய தினம் குழம் நோம்பி எனப்படும். நான் சிறுமியாக இருக்கையிலிருந்தே இங்கு மூங்கிலில் சிறிய குழல் போலச் செய்து அதில் பாப்பட்டாங்காய் எனும் சிறு மணி போன்ற காய்களை நுழைத்து ஒரு குச்சியால் அடித்து டப் என்னும் ஓசை வருவது விளையாட்டாக மகிழ்ந்து கொண்டாடப்படும்

அந்தப் பாப்பட்டாங்குழல் இன்றும் வேட்டைக்காரன்புதூரில் மட்டுமே செய்யப்படுகிறது. இதைக் கைத்தொழிலாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு சில வயதானவர்கள்  இதை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் பயிற்றுவித்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்தப் பண்பாடு  அழிந்துபோகக்கூடும்.

காடுகளில் மிகச்சரியாக இந்தச் சமயத்தில் பச்சைக்குண்டுகளாகக் கொத்துக்கொத்தாகக் காத்திருக்கும் பாப்பட்டங்காயை  இதற்கெனப் பறித்துக் கொண்டு வந்து இந்தக் குழலுடன் சேர்த்து விற்பார்கள்.

இந்தக் குழல் பாப்பட்டாங்குழல் இந்தக் காய் பாப்பட்டாங்காய்.

இதன் தாவர அறிவியல் பெயர் பாவெட்டா இண்டிகா.

ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்த இதன் தமிழ்ப்பெயர் காட்டுக்கரணை, மலையாளத்தில் இது மல்லிகை முட்டி. மராத்தியில் பாப்பட்.தெலுங்கில் பாப்பிடி. இந்தப் பாப்பட்டாங்காய் என்பதும் பாவெட்டா என்னும் லத்தீன் பெயரின் மருவூதான். பாவெட்டா என்பது எப்படியோ வேட்டைக்காரன் புதூர்க்காரர்களுக்கு தெரிந்து இதைப் பாவட்டாங்காய் என்று அழைக்கத்துவங்கி அது இப்போது பாப்பட்டாங்காய் ஆகி இருக்கிறது. 

இப்படித்தான் ஒரைஸா என்னும் நெல்லின் லத்தீனப்பெயர் தமிழின் அரிசியிலிருந்து வந்தது.

இந்தப் பாப்பட்டாங்காய் வெடிக்கும் விளையாட்டுத் தமிழர் பண்பாட்டில் இணைந்த ஒன்று அதுவும் குறிப்பாக வேட்டைக்காரன் புதூரில் ஆனைமலையில் மட்டும்தான் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தியவில் வேறெங்கும் இது இல்லை 

இப்படி பண்பாட்டுடன் இணைந்த இது போன்ற இயற்கை கொண்டாட்டங்களை அவசியம் நாம் தொடர வேண்டும்

இளம் மூங்கில் குச்சிகளில் சிறு குழல்போலச் செய்யப்படும் இந்த விளையாட்டுக் கருவியில் சிறுகாய்கள் உடைகையில் உருவாகும் ஒலி பெருக்கிக்கேட்கவெனக் குழலின் வாய்ப்பகுதி அகலமாகப் புனல் போலச் செய்யப்பட்டிருக்கும். வண்ணக்காகிதங்களால் அந்த வாய்ப்பகுதி அலங்கரிக்கப்பட்டிருப்பதால் குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தமான விளையாட்டாக இருக்கும். பொட்டு வெடி என்னும் ஒரு பட்டாசை கல்லில் கொட்டுகையில் உண்டாகும் ஒலியைப்போலவெ இதிலும் உருவாகும் என்பதால்ல  இதைக் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள். ஆடி 18 அன்று உறவினர்களின் குழந்தைகள் ஒன்றிணைந்து ஒருவர் மீது ஒருவர் இதை அடித்து விளையாடி மகிழ்வார்கள்.

ஆபத்தற்ற, சூழல் மாசுண்டாக்காத,  இயற்கையோடு இணைந்த  இந்த விளையாட்டுத்தான் எத்தனை இனிது!!

நான் ஒவ்வொரு வருடமும் மகன்கள் வீட்டில் இருந்தாலும் இல்லையெனினும் இவற்றை வாங்கி வந்துவிடுவேன். பண்டிகையன்று இதில் காய்களை நுழைத்து அடித்து விளையாடுவேன்.

இந்தப் பாவட்டா  2 லிருந்து 4 மீ உயரம் அவரை வளரும் புதர் செடி. நல்ல நறுமணமுள்ள வெண்ணிற மலர்கள் கொத்துகளாக உண்டாகும்.மலர்களைத் தேடி எண்ணற்ற பட்டாம்பூச்சிகளும் சிறு வண்டுகளும் ஈக்களும் வரும். பச்சை நிற காய்கள் தான் இந்தக் குழலில் அடித்து விளையாடப்படுகின்றன

காய்கள் பழுத்துக் கனிகையில் கருப்பு நிறமாகி விடும்.இதன் வேர் இலை மரப்பட்டை ஆகியவை பல்வேறு சிகிச்சைகளுக்குக் கைவைத்தியமாகக் கிராமங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஜுலையில் மலர்கள் முதிர்ந்து சரியாக ஆடிமாதத்தில் இந்தப்பண்டிகையின்போது காய்கள் திறண்டு காத்திருக்கும். வேட்டைக்காரன்புதூரை சுற்றியுள்ள காடுகளில் இந்தப் பண்டிகை காலத்தில்  இவை ஏரளமாகக் காய்த்துக்கிடக்கும்.

எழுத்தாளர் அகரமுதல்வன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கையில் ஈழத்தில் பாலைப்பழம் பழுக்கும் காலத்தில் காடுகளுக்குள் மொத்த கிராமமே கூட்டமாகச் சென்று பாலைப்பழம் உண்பார்களாம். இது அவர்களின் பண்பாட்டின் ஒரு பகுதி என்றார். அப்படியான பண்பாடுகளை எல்லாம் நாம் ஏறக்குறைய இழந்து விட்டிருக்கிறோம். இந்தப் பாவட்டங்காய் அடித்து விளையாடும் பண்டிகை இயற்கையுடன் இணைந்திருக்க வேண்டியதன் மகிழ்சியையும் அவசியத்தையும் உணர்த்தும் ஒன்று. இன்று சரணும் தருணும் சாம்பவியும் இல்லை எனினும் அவர்கள் எப்போது விடுமுறைக்கு  வந்தாலும் அவர்கள் விளையாட வென்று குளிர்சாதனப்பெட்டியில் காய்களைச் சேமித்து வைத்திருக்கிறேன்.

எதிர்காலத்தில் இந்த வீட்டுவாசலில் சிறு  குழந்தைகள் பாப்பட்டாங்குழலால்  ஒருவர் மீது  ஒருவர்  காய்களை அடித்து விளையாடிச் சிரித்து பூசலிட்டுக்கொள்வதை பார்க்கக் காத்திருக்கிறேன். இன்று விஜியும் ஜோதியும் வந்திருந்து விளையாடினார்கள் மாலை புதுப்புனல் காண உறவினர்களுடனும்  நண்பர்களுடனும் செல்லவெண்டும்.

« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑