லோகமாதேவியின் பதிவுகள்

Category: Uncategorized (Page 1 of 5)

சிலுவையின் நிழலில் திராட்சைக்கொடி!

தாவரங்களின் பரவலைப் பற்றி வாசித்துக்கொண்டே இருக்கிறேன். மிகேல் போலானின் ’பாட்டனி ஆஃப் டிஸையர்’ நூல் குறிப்பிட்ட சில தாவரங்களின் பரவலைக்குறித்து மிக ஆச்சர்யமான தகவல்களைப் பேசுகிறது.

காற்றில், நீரில், வெடித்துப்பரவும் வழியில் ,விலங்குகளால், பறவைகளின் எச்சத்தால், மனிதர்களால் தெரிந்தும் தெரியாமலும் என்று அவற்றின் பல வழிகளை அறிந்துகொண்டிருக்கும் போதுதான் 1492 என்னும் நூலை எழுதத் தொடங்கினேன்.

1492-ல் தொடங்கிய கொலம்பஸின் கடற்பயணத்தில் அவர் கண்டறிந்த புதிய நிலங்கள் அங்கிருந்து பழைய உலகிற்கு அவர் அறிமுகப்படுத்திய அன்னாசி, புகையிலை, பருத்தி போன்ற தாவரங்களை அவரது கடல் பயணத்துடன் விவரித்துச் சொல்லும் நூலின் அத்தியாயங்களை சொல்வனத்தில் தொடராக எழுதிக் கொண்டிருக்கிறேன் இன்று அவர் கால்வைத்த கன்னித்தீவைக் குறித்த 5 வது அத்தியாயம் வெளியாகிறது.

மனிதர்களால் பரவிய தாவரங்களைக் குறித்த தேடலின் போதுதான் கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏசுவின் ரத்தமாக கருதப்படும் திரட்சை ரசத்தை அளிக்க உலகெங்கிலுமிருந்தும் கிறிஸ்துவ இறைப்பணியாளர்கள் திரட்சைக்கொடியின் நறுக்கிய தண்டை சிலுவை மற்றும் பைபிளுடன் கடல்கடந்து எடுத்துச் சென்றது, திராட்சை வளர வழியே இல்லலாத இடங்களிலும் தேவாலயத்தோட்டங்களில் அவற்றை வளர்த்தது ஆகியவற்றைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மும்பை மெதடிஸ்ட் தேவாலயத்தில் மிஷன் கிரேப்ஸ் என்னும் தலைப்பில் சமீபத்தில் ஒரு உரையாற்றினேன்.

கிறிஸ்தவ சமயச் சடங்குகளுக்கான வைனுக்காக திராட்சைக்கொடி உலகெங்கிலும் கிறிஸ்துவப் பாதிரியார்களால் பரவியதைக் குறித்தும், ஏன் திராட்சை ரசம் மட்டும் தேவைப்பட்டது, குருதியைப் போலவே இருக்கும் மாதுளைச்சாற்றை ஏன் தேவாலயங்கள் மறுத்தன, துருவப்பகுதி தேவாலயங்கள் ரத்தம் போல திரவமாக இருக்கவேண்டிய வைனுக்கு என்ன செய்தன? இவற்றோடு மெதடிஸ்ட் பிரிவை உருவாக்கியவரான வெஸ்லே மற்றும், ஈஸ்டின் பெருகலால் புளித்துப்போகாமல் இருக்க வைனை பாஸ்டுரைஸ் செய்த லூயி பாஸ்டரின் பங்களிப்பையும் சேர்த்து எழுதுவது சுவாரசியமாக இருக்கிறது.

ஏராளமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அகராதி முடிந்த பாடில்லை அதில் இணைத்த சித்திரங்களுக்கான credit கொடுக்காமல் அனேகமாக எழுதி முடித்தே விட்டேன். பாம்பு கடித்து பரமபதத்தின் கடைசிக்கு வந்து மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறேன் இந்த credit கொடுக்கும் வேலையை. இன்று மகன்களிடம் சொன்னேன் அனேகமாக இதை என் சார்பாக நீங்கள் தான் வெளியிடுவீர்களாக இருக்கும் என.

இன்னும் இரு நூல்கள் , ஸம்பா மற்றும் பொற்சுழல்; பிழைதிருத்தி பதிப்பகங்களில் தரவேண்டி இருக்கிறது. காலச்சுவடில் மொழிபெயர்ப்பு நூல் ‘அலையிடைவெளியில்’ வெளியாக வேண்டி இருக்கிறது. திரு அரவிந்தனின் மறைவினால் அது தாமதமாகிவிட்டது.

பெரும்பாலான பதிப்பகத்தார் என் தாவரவியல் நூல்களில் அக்கறை காண்பிப்பதில்லை என்பதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை , இறையன்பு மற்றும் கவிதாசனின் தன்னம்பிக்கை நூல்கள் ஆயிரக்கணக்கில் வெளியிட்டால் லாபம் வருகிறது, யாரும் விரும்பாத தாவரவியலைப் பற்றி நூல் வெளியிட்டு தெரிந்தே கையைச்சுட்டுக்கொள்ள யார்தான் தயாராக இருப்பர்கள்?

நூலாக வராவிட்டாலும் சரிதான்.எனக்கு எழுதவேண்டி இருப்பதை எல்லாம் மகிழ்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நதி நீரின் புனிதமும் நுண்ணுயிரியலும்!

உத்தர பிரதேசத்தில் பிரம்மாண்டமான மகா கும்பமேளா 2025-ம் ஆண்டு ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரயாக்ராஜில் (அலகாபாத்) நடைபெற்றது. திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்தது. சுமார் 66 கோடிப் பேர் அங்கு புனித நீராடி இருக்கின்றனர்.

இந்தியாவின் இரு பெரும் நதிகளான யமுனையும் கங்கையும் கலக்கும் அலகாபாத்தில், இந்த நதிகள் சங்கமிக்கும் இடத்தில்  நீராடுகையில் பல நோய்கள் தீருமென்றும் பிறவிச்சரடு அறுபடும் என்றும் கர்மவினைகள் தீரும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.

 இந்தப் புனித நதிகளின் நீரின் தூய்மைப்படுத்தும் இயல்புகளுக்கு நுண்ணுயிரியல் வரலாறும் உள்ளது.  நுண்ணுயிரியல் வரலாற்றில் மூன்று அறிவியலாளர்கள் இது தொடர்பான ஆய்வுகளில் பெரும் பங்காற்றி இருக்கின்றனர்.

ஹான்கின்-(Ernest Hanbury Hankin)

 1895-ல் ஆக்ராவில் அரசு நுண்ணுயிரியலாளாராகப் பணியில் இருந்த பிரிட்டிஷ் நுண்ணுயிரியலாளர் மற்றும் இயற்கையியலாளர் எர்னஸ்ட் ஹான்பரி ஹான்கின்   அங்கு ஒரு நுண்ணுயிரியல் ஆய்வகத்தையும் அமைத்திருந்தார். அப்போது இந்தியாவில் காலராத்தொற்று அதிகம் இருந்து பலரை பலிவாங்கிக்கொண்டிருந்தது. ஆக்ராவைச்சுற்றிலும் காலரா பரவி இருந்தது. கங்கை யமுனை ஆறுகளில் பிணங்களை வீசுவதும் குளிப்பதும் துணிகளைத் துவைப்பது கழிவுகளை கொட்டுவதும்தான் அந்த நீரை மாசுபடுத்தி காலாரவை அந்தபகுதியில் உருவாக்கியது என பரவலாக நம்பப்பட்டது. ஆனால் ஹான்கின் அந்த நீரை ஆய்வகத்தில் பரிசோதித்தபோது எதிர்பாராத முடிவுகள் கிடைத்தன.

   காலராத்தொற்றினால் இறந்த உடல்கள் வீசப்பட்ட  கங்கை மற்றும் யமுனை நதிநீரை அருந்தும் மக்களுக்கு நோய்த்தொற்று உருவாகவில்லை என்பதைக் குறிப்பிட்டு அந்த இரு நதிகளின் நீரிலும் ஏதோ ஒரு கிருமிக் கொல்லிப்பொருள் இருப்பதாக ஹான்கின் தெரிவித்திருந்தார்.

1896-ல்  முதன்முதலாக  காலராக் கிருமிகளை குணமாக்கும் யமுனை மற்றும் கங்கை நதி நீரின் இயல்புகளைக் குறித்து ஆய்வுக் கட்டுரையொன்றில் விவரித்தார்.  அதற்கு காரணமான பாக்டீரியாக்களை உண்ணும் வைரஸ்களான பேஜ்கள்  (phages) அதற்கு  20 ஆண்டுகள் கழித்துத்தான் கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும் ஹான்கின் அவற்றைக் குறித்த முதல் கண்டுபிடிப்பை செய்ததாகக்  கருதப்படுகிறார்.

நோய்க்கிருமிகளை அழித்து தூய்மைப் படுத்தும் நதி நீரின் இயல்பைக் குறித்த ஹான்கினின் ஆய்வுக் கட்டுரைகள் அறிவாய்வியலுடன் தொன்மங்கள்,  நாட்டுப்பாடல்கள், வாய்வழிக்கதைகள் ஆகியவற்றையும்,  இணைத்துச் செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகளைத் தெரிவித்தன.

இந்தியாவின் வடமேற்கு பகுதிமுழுக்க அரசாங்க அதிகாரியாகப் பொறுப்பிலிருந்த ஹான்கின் பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவன சஞ்சிகையில் 1896-ல்  வெளியிட்ட வரலாற்றுச்சிறப்பு மிக்க L’action bactéricide des eaux de la Jumna et du Gange-“The Bactericidal Action of the Waters of the Jumna and the Ganges on the Cholera Vibrio” என்னும் ஆய்வறிக்கையில் கங்கை யமுனை நதிகளின் நீரில் இருக்கும் கிருமிக்கொல்லிகளைக் குறித்து விவரித்திருந்தார்.  

அந்த நதிகளின் நீரில் பிற நதிகளில் இருப்பதை விட மிக மிகக் குறைவாகவே  நோய்க்கிருமிகள் இருப்பதை  ஹான்கின் குறிப்பிட்டிருந்தார்.  

பாதி எரிந்த நிலையில் வீசப்பட்டு மிதக்கும் பிணங்களுக்கருகில் சூழ்ந்திருக்கும் பிணந்தின்னிக் கழுகுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு  நீர் மாதிரிகளை ஆய்வுக்கெனச் சேகரித்தார் ஹான்கின்.

பல முறை  ஆய்வுகளைச் செய்து அப்படிச் சேகரித்த நதிநீர் 3 மணி நேரத்தில் காலராக் கிருமிகளைக் கொல்கிறது என்று நிரூபித்த அவர் அந்த ’’பாக்டீரியக்கொல்லித்தன்மை’’ நீரை வெப்பமூட்டுகையில் ஆவியாகி விடுகிறது என்பதையும் ஆய்வுகளின் மூலம் தெரிவித்தார். 

1915-1917- களில் பாக்டீரியாக்களை கொன்று தின்னும் வைரஸ்களான பாக்டீரியா பேஜ்கள் ஃபெலிக்ஸ் மற்றும் ட்வார்ட் ஆகியோரால் (Frederick Twort & Félix d’Herelle) கண்டுபிடிக்கப்பட்டதில் ஹான்கினின் இந்த ஆய்வுகள் மிக உதவியாக இருந்தன 

ஹான்கினின் இந்த ஆய்வு முடிவுகள் இருவகையான எதிர்வினைகளை  உருவாக்கின. 

ஒரு தரப்பு இப்படி நீரின் கிருமிக்கொல்லித் தன்மையை அறிவித்ததன் மூலம் மேலும் மேலும் கழிவுகளையும், பிணங்களையும் நதியில் கொட்டுவதற்கு ஹான்கின் காரணமாகிறார் என்று குற்றம் சாட்டியது

இந்துமத நம்பிக்கையாளர்களின் தரப்பு புனித நதிகளின் நீராடல் மக்களைத் தூய்மைப்படுத்துகிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தவர் என்று ஹான்கினுக்கு பாரட்டைத் தெரிவித்தது.

ஹான்கினின் ஆய்வு முடிவுகளைக் கேள்விப்பட்டு அலகாபாத், பனாரஸ் மற்றும் ஆக்ராவுக்கு வருகை தந்த அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின்  பண்டைய இந்தியர்கள், பிணங்கள் மிதக்கும், நாற்றம் அடிக்கும் கங்கை நீர், தான் தொடுபவற்றை எல்லாம் புனிதப்படுத்தும் என்ற உண்மையை எப்படி அறிந்திருந்தார்கள்? என்று தன் வியப்பை தெரிவித்திருந்தார், பண்டைய இந்தியர்கள் கிருமி ஆய்வாளர்கள் என்றும்  பயணக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்கந்த புராணம் பகவத்புராணம் மஹாபரதம் ஆகிவற்றிலும் கங்கை நீரின் கெட்டுப்போகாத, பாசிபிடிக்காத, எத்தனை காலம் வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசாத புனிதத்தன்மை குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கேம்ப்ரிட்ஜில் பட்டம் பெற்ற பின்னர், லூயி பாஸ்டருடனும்,  ராபர்ட்  காச்சுடனும் பணிபுரிந்த பின்பு இந்தியாவிற்கு வந்த ஹான்கின் இந்தியாவில் பரவிக் கொண்டிருந்த காலரா உள்ளிட்ட  தொற்று நோய்களுக்கான காரணம் நுண்ணுயிர்கள் என்பதை அறிவித்தவர்களில் முதன்மையானவர். ஹான்கின் ஆந்த்ராக்ஸ் மற்றும் உடலின் நோயெதிர்ப்புக் குறித்த ஆய்வுகளிலும் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தவர்.

இந்திய காலனியாதிக்கக் காலத்தில் மருத்துவ ஆய்வுகளை துவங்கியதில் ஹான்கினின் பங்கு அளப்பரியது. 1900-களில் இமாச்சல பிரதேசத்தில் முதல் பாஸ்டர் ஆய்வு நிறுவனத்தை உருவாக்குவதில் ஹான்கின் மிக முக்கியப் பங்கு வகித்தார். அங்குதான் இந்தியாவில் பரவிக்கொண்டிருந்த டைபாய்டு மற்றும் காலாரா நோய் குறித்த ஆராய்ச்சி முழுவீச்சில் நடைபெற்றது.

அங்கு பணியில் இருந்த புகழ்பெற்ற  பாக்டீரியா நிபுணரான  ஹாஃப்கின்னுடன் (W. M. Haffkine) இணைந்து இந்தியா முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருந்த  பிளேக் மற்றும் காலராவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியதில் ஹான்கின் பெரும்பங்காற்றினார்.

 இந்திய கிராமங்களில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை கிருமிநாசினியாக உபயோகிப்பதை பரவலாக்கியதும் ஹான்கின்தான். 

காலரா மற்றும் பிளேக் நோயுற்று இறநதவர்களின் உடல்களைத் தின்று, நோயுற்ற பிணந்தின்னிக் கழுகுகளைக்  கருணையுடன் சிகிச்சையளித்து காப்பாற்றியவராக  மருத்துவ அறிவியல் வராலாற்றில்  ஹான்கின்  பெருமதிப்புடன் நினைவு கூறப்படுகிறார்.ஹான்கின் இந்தியாவில் ஆற்றிய பணிகளில், காலரா பாக்டீரியா பற்றிய ஆராய்ச்சிக்கு அடுத்தபடியாக மிக முக்கியமானது, அவர் பாறுகழுகள் (Vultures) மற்றும் பிற பறவைகளின் நோய் எதிர்ப்புத் திறன் குறித்து மேற்கொண்ட ஆய்வுகள்தான்.

அவர் கழுகுகளைக் குணப்படுத்தினார் என்பதை விட, “அவ்வளவு அசுத்தமான அழுகிய இறைச்சியைத் தின்றும் கழுகுகளுக்கு ஏன் நோய் ஏற்படுவதில்லை, அவற்றின் செரிமான மண்டலம் எவ்வாறு நோய் கிருமிகளை அழிக்கிறது?” என்ற கோணத்திலேயே அவரது முதன்மை ஆராய்ச்சி அமைந்தது. ஹான்கின் கழுகுகளை வெறும் ஆராய்ச்சிப் பொருளாக மட்டும் பார்க்கவில்லை; அவர் பல கழுகுகளைத் தனது சொந்தக் கைகளால் பராமரித்து, குணப்படுத்தி, காப்பாற்றவும் செய்துள்ளார்.

அவர் ஆக்ராவில் இருந்த தனது ஆய்வகத்தின் அருகே பெரிய கூண்டுகளை (Aviaries) அமைத்து, காயமடைந்த அல்லது நோயுற்ற கழுகுகளைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து வளர்த்தார்.வேட்டையாடப்பட்டோ அல்லது விபத்துகளில் சிக்கியோ காயமடையும் கழுகுகளை ஹான்கின் மீட்டு வருவார். அவற்றின் சிறகுகள் மற்றும் கால்களில் ஏற்படும் காயங்களுக்கு மருந்திட்டு, அவை மீண்டும் பறக்கும் திறன் பெறும் வரை தனது கூண்டுகளில் வைத்துப் பராமரித்தார்.

பொதுவாக பாறுகழுகுகள் மனிதர்களைக் கண்டால் அஞ்சும் அல்லது தாக்க வரும் குணம் கொண்டவை. ஆனால், ஹான்கின் அவற்றுக்குத் தொடர்ந்து உணவளித்துக் காப்பாற்றியதால், அவை அவரிடம் மிகவும் பழகிவிட்டன.

அவர் கூண்டுக்குள் செல்லும்போது, அந்தக் கழுகுகள் நாய்க்குட்டிகளைப் போல அவரிடம் ஓடிவந்து, அவரது கைகளில் இருந்து உணவைக் கொத்தித் தின்னும் அளவுக்கு சாதுவாக மாறின. பூனைகள் அல்லது பிற விலங்குகள் தாக்க வரும்போது, இந்தக் கழுகுகள் ஹான்கினைத் தங்களுக்குப் பாதுகாப்பான அரணாகக் கருதி அவர் பின்னால் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு அவற்றுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது.

கழுகுகள் குணமடைந்தவுடன், அவற்றின் சிறகுகள் பலம்பெற வேண்டும் என்பதற்காகத் தனது ஆய்வக வளாகத்திலேயே அவற்றைப் பறக்கவிட்டுப் பயிற்சி அளிப்பார். முழுமையாகக் குணமடைந்த பறவைகளை மீண்டும் இயற்கையாக வாழ காடுகளில் கொண்டு போய் விட்டுவிடுவார்.

தன் உடலையே ஆராய்ச்சி விலங்காக மாற்றிக்கொண்டு நாகத்தின் நஞ்சு, ஓபியத்தின் போதை ஆகியவற்றின் விளைவுகளை  ஆராய்ந்த ஹான்கின் அவரது காலத்தில் முக்கியமான  இந்த  ஆய்வுகளுக்கு பேரும் புகழும் பெறவில்லை என்றாலும் பாக்டீரியாபேஜ் கண்டுபிடிப்பாளர்கள் இருவரும்   பல ஆய்வறிக்கைகளில் ஹான்கினின்  துவக்க கால ஆய்வு முடிவுகளைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

ட்வார்ட்- Frederick Twort

1915-ல் பிரிட்டிஷ் பாக்டீரிய நிபுணர் ஃப்ரெட்ரிக் ட்வார்ட்( Frederick Twort), நதி நீரில் இருக்கும் ஒரு மிகச்சிறிய நுண்ணுயிர் பாக்டீரியாக்களை அழிப்பதை கண்டறிந்தார். 

அந்த நுண்ணுயிர் 

  • வாழ்க்கைச் சுழற்சியில்  பாக்டீரியாவின்ஒரு நிலை 
  • பாக்டீரியா ஒரு குறிப்பிட்ட பருவத்தில் வெளியிடும் ஒரு நொதி 

           அல்லது

  • பாக்டீரியாவைக் கொல்லும் ஒரு வைரஸாக  இருக்கக்கூடும் என அவர் யூகித்தார்

  மேற்கொண்டு ஆய்வுகளைத் தொடர்ந்து அது என்னவென்று ட்வார்ட் உறுதிப்படுத்துவதற்கு முன்பு முதல் உலகப் போர் துவங்கியது . எனவே நிதிப் பற்றாக்குறையால் ட்வார்ட்டின் இந்த ஆய்வு அப்படியே கைவிடப்பட்டது.

1917-ல்தான் அது பாக்டீரியாபேஜ் என்று ஃபெலிக்ஸினால் பெயரிடப்பட்டது.  ட்வார்ட்டின் கண்டுபிடிப்பு நுண்ணுயிர்களின் அடிப்படை வகைகளின் அறிதலில் ஒரு பெரிய திறப்பை உண்டாக்கியது.  ட்வார்ட் 1950-ல் இறந்தார். நுண்ணுயிரியல் வரலாற்றில் ட்வார்ட்டின் சோதனைகள் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மிக முக்கியமானவை

ஃபெலிக்ஸ் -Félix d’Hérelle

தானாகவே நுண்ணுயிரியலை கற்றுத்தேர்ந்திருந்த, பாரீஸில் பாஸ்டர் நிறுவனத்தில் பணி செய்துகொண்டிருந்த ஃபெலிக்ஸ் (Félix d’Hérelle) என்னும் நுண்ணுயிரியலாளர் 1917- செப்டம்பர் 3-ம் தேதி,  நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்  கண்ணுக்குத் தெரியாத அளவு நுண்மையான ஒரு உயிரியைத்தான் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்தார்,  அவர் பாக்டீரியாக்களைக் கொல்லும் அந்த வைரஸுக்கு பாக்டீரியோ பேஜ் – bacteriophage என்றும் பெயரிட்டிருந்தார்.

 வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட ஒரு நோயாளிக்கு பாக்டீரியோ பேஜ் சிகிச்சை அளித்து அவர் முழுக்க குணமானதையும்  அப்போது அவர் ஆவணப்படுத்தினார். அதன் பிறகு ஃபெலிக்ஸ் பல ஆய்வுகளைச் தீவிரமாகச் செய்து பேஜ் சிகிச்சை முறையை அறிமுகம் செய்தார். 

பாரிஸில் முதல் அதிகாரபூர்வமான பேஜ் சிகிச்சையை அளித்த ஃபெலிக்ஸ் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த பாக்டீரியாபேஜ்களைக் கொண்டு மனித மற்றும் விலங்குகளின் நோய்க்கு சிகிச்சையளிக்கலாம் என்னும் கருத்தை வலுவாக முன்வைத்தார். ஆனால் உலகப்போரில் மும்முரமாக இருந்த உலகநாடுகள் இதைக் கவனிப்பதற்குள் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங்கின் பெனிசிலின் கண்டுபிடிப்பு ஃபெலிக்ஸின் இந்த முன்னெடுப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டது. 

உலக நாடுகள் பலவற்றில் பெனிசிலின் பயன்பாடு துவங்கி இருந்த வேளையில் ஃபெலிக்ஸின் குழு சோவியத் யூனியனில் இந்த பேஜைக்கொண்டு சிகிச்சையளிப்பதை வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தது.

முதல் உலகப்போரில் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஃபெலிக்ஸ்  பாக்டீரியா பேஜ்களைக்கொண்டு அளித்த சிகிச்சை பலனளித்ததை  உலகெங்கும் இருந்த மருத்துவர்கள் வியந்து கவனித்தார்கள். மருத்துவ சஞ்சிகைகளில் பேஜ் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்து விளைவிக்காத வைரஸ் என்பது பரவலாக அறிவிக்கப்பட்டது.

1930-40-களில் அஜர்பைஜான், உக்ரைன், ஜார்ஜியா மற்றும் ரஷ்யாவில் பேஜ் சிகிச்சை முயற்சிகள் ஃபெலிக்ஸின் முன்னெடுப்புக்களால் பரவலாக நடந்தன. மத்திய ஐரோப்பா, பிரான்ஸ் மற்றும் பிரேசிலிலும் இந்த பேஜ் சிகிச்சைச் சோதனைகள் நடந்தன.

 ஃபெலிக்ஸ்  இந்தியாவுக்கு வந்து பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடும் புனிதத்தலங்களில் இருக்கும் நீர்நிலைகளில் காலராவுக்கெதிராக பேஜ்களைக்  கலந்தார். அந்த இடங்களிலெல்லாம் காலராத்தொற்று மிக வேகமாகக் குறைந்தது.

அஸ்ஸாம் மற்றும் வங்காளத்தின் பல  கிராமங்களுக்கும் நேரில் சென்று பேஜ் கலந்த நீரை ஊர்க்கிணறுகளில் கலக்கவும், அந்த நீரை கொதிக்க வைக்காமல் அருந்தச்சொல்லியும் ஊர்த்தலைவர்களிடம் ஃபெலிக்ஸும் அவரது குழுவினரும்  அளித்தனர்.

அப்போது காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் நடந்துகொண்டிருந்த காலமாதலால் நோய்த்தொற்றின் தீவிரத்தைக் குறைக்கும் அந்த எளிய முறையை துரதிர்ஷ்டவசமாக  பெரும்பாலான ஊர்த்தலைவர்கள்  மறுத்தனர். அங்கெல்லாம் காலரா தொற்றினால் பலர் பரிதாபமாக இறந்தார்கள்.

எனவே 1937-ல் ஃபெலிக்ஸின் இந்த பேஜ் சோதனை கைவிடப்பட்டது. பிரான்ஸுக்கு திரும்பிய  ஃபெலிக்ஸ் ஜெர்மானிய ஆயுதப்படையினரால் வீட்டுச்சிறை வைக்கப்பட்டார். சிறையில் இருக்கையில் அறிவியல் சோதனைகளின் விளைவுகள்- “The Value of Experiment” என்னும் 800 பக்க நாவலை  ஃபெலிக்ஸ் எழுதி முடித்தார்.

நுண்ணுயிரியலை எந்த கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் படிக்காமல் தானே நூல்களிலும் சோதனைகள் செய்தும்   கற்றுக்கொண்ட  நுண்ணுயிரியல் படிக்காத மேதையான ஃபெலிக்ஸ் 1949-ல் கணையப் புற்றுநோயால் மடிந்தபோது அவர் யாருக்குமே தெரியதவராயிருந்தார்.

பேஜ் ஆராய்ச்சிகளுக்காக பலருக்கு நோபல் பரிசு வழங்கபட்டது. 1960-லிருந்து நோபல் பரிசுக்காக 10 முறை பரிந்துரைக்கப்பட்டும் ஃபெலிக்ஸுக்கு அப்பரிசு கிடைக்கவில்லை. ஆனால் ஃப்ரான்ஸ் அவரை மறக்கவில்லை ஒரு தெருவுக்கு அவர் பெயர் வைக்கப்ட்டிருக்கிறது.

 Félix d’Hérelle என்னும் அவர் பெயரைக்கொண்டு பேஜ்களின் ஒரு குடும்பமான Herelleviridae பெயரிடப்பட்டிருக்கிறது.

 இப்போது இந்த பேஜ்சிகிச்சை நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புச்சக்தி பெற்றிருக்கும் நோய்க்கிருமிகளுக்கெதிராகச் செயல்புரியுமென்பது ஆய்வுகளில் நிரூபணமாகி இருக்கிறது

நுண்ணுயிரெதிர்ப்பிகளால் அழிக்கமுடியாத  Pseudomonas aeruginosa, Klebsiella pneumoniae, மற்றும் Staphylococcus aureus ஆகிய பாக்டீரியாக்களுக்கு எதிராக பேஜ் வெற்றிகரமாகச் செயல்படுகிறது. 

நுண்ணுயிரெதிர்ப்புச் சக்தி பெற்றுக்கொண்டிருக்கும் நோய்க்கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் பேஜ் சிகிச்சை உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை, உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விவசாயத்துறைகளில் மிக முக்கியமான  பங்காற்றிக் கொண்டிருக்கிறது.

நுண்ணுயிரிகளின் வாழ்க்கை மற்றும் மருத்துவத்தில் அவற்றின் பயன்பாடுகள் பற்றிய நமது புரிதலை இந்த மூன்று முன்னோடி நுண்ணுயிரியலாளர்களின் பங்களிப்புகள் வெகுவாக மாற்றியமைத்தன.  பாக்டீரியோ பேஜ்களின் ஆரம்பகால கண்டுபிடிப்பு முதல் நுண்ணுயிரெதிர்ப்பி-எதிர்ப்பு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதில் அவற்றின் நவீன பயன்பாடு வரை, இம்மூவரின் பணி புதிய தலைமுறை அறிவியலாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. 

இப்போது மீண்டும் கவனத்துக்குள்ளாகி இருக்கும் பேஜ் சிகிச்சை இம்மூவரின் பங்களிப்பை  நாம் நன்றியுடன் நினைவு கூர்வது அவசியமாகிறது.

1930-ல் பிரயாக்ராஜில் (அலகாபாத்)  நிறுவப்பட்ட அருங்காட்சியகத்தின் ஒரு பிரிவான  கங்கா கேலரியில் கங்கை நீர் குறித்த தொன்மங்கள், நம்பிக்கைகள் ஆகியவை சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.

அங்கு  ஹான்கினின் புகைப்படமும்,  3 மணி நேரத்தில் காலராக் கிருமிகளை கங்கை நீர் அழிக்கிறது என்னும் அவரது  ஆய்வு முடிவுகளின்  வாசகங்களும் பொறிக்கட்டிருப்பதை  கும்பமேளாவுக்கு வருகை தருபவர்கள் காணலாம்

நியூயார்க் டைம்ஸில் 2019 -ல் வெளியான கட்டுரையொன்று கங்கை நீரில் பெருகி இருக்கும் நோயுருவாக்கும்  பாக்டீரியாக்களைப் பற்றி கவலை தெரிவித்திருந்தது.

ஹான்கின் இந்த நீரின் தூய்மைத் தன்மையைக்குறித்து ஆய்வு செய்து நூற்றுக்கணக்கான வருடங்கள் ஆகின்றன.  இன்று திரிவேணி சங்கமத்தில் தொழிற்சாலைக் கழிவுகளும், கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடுதலால் உண்டாகும் மாசுபாடும் சாக்கடைக்கழிவுகளும் அதிக அளவில் கலந்திருப்பதால் ஹான்கின்  குறிப்பிட்ட  கிருமிக்கொல்லித்தன்மையும், ட்வார்ட்டும் ஃபெலிக்ஸும் கண்டு பிடித்த பாக்டீர்யாபேஜின் பாக்டீரியாவைக் கொல்லும் தன்மையையும் தாண்டி நதி நீர் மாசுபட்டிருக்கிறது.

 சமீபத்தில்  கோடிக்கணக்கில் மக்கள் நீராடும் இந்த நதிகளில் மலபாக்டீரியா எனப்படும் இகோலியின்-(E coli) அளவு மிக மிக அதிகரித்திருப்பது  முக்கியச் செய்தியாகியிருகிறது.

பொதுமக்களின் ஆரோக்கியம்,நீர் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு,கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நதிநீரின் புனிதத்தன்மை, ஆகியவற்றால் பிரயாக்ராஜின் நதி நீர் மாசுபாடு மிகப்பெரிய சவாலாகி இருக்கிறது.  

 மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகள் மேலும் இறுக்கமாக்கப்பட்டு, பெருந்திரளாக அங்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி, கழிவு நீர் சுத்திகரிப்பில் புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை புகுத்தி கங்கை யமுனை நதிகளின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகி இருக்கிறது.  

திரிவேணி சங்கமத்தில் கங்கை யமுனை நதிகளுடன் சரஸ்வதி நதியும் கண்ணுக்குப்புலப்படாத மாய நதியாக கலப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. அன்னை நதிகளான கங்கையும் யமுனையும் அப்படி மாயமாகிப்போய்விடாமல்  காக்கப்படட்டும்.

விசால ஹ்ருதயன்!

நிமோனியாவில் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அப்பா (!) கடந்த 2 வாரங்களாக இருக்கிறார். தம்பி மனைவி லஷ்மி, நான், தருண் மூவருமாக உடனிருக்கிறோம். தம்பிவிஜி முக்கிய வேலையாக வெளியே இருக்கிறான் எனவே அவனை தொந்தவரவு செய்யாமல் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.

வீடு, கல்லூரி, மருத்துவமனை என தொடர்ந்து அலைந்து பின்னிரவில் களைத்து வீடு திரும்புகையில் சமயங்களில் எனக்கு சுய பச்சாதாபமும் எதிர்படுவோர் மீது ஆத்திரமும் வந்துவிடுகிறது. ஆனால் வெளியில் காண்பித்துக்கொள்வதில்லை லக்‌ஷ்மியும் மருத்துவமனையே கதி என்றுதான் இருக்கிறாள்.

ஜூன் மாதம் தருண் கொச்சியில் அவனுக்கு கிடைத்திருக்கும் பணியில் இணைய வேண்டும். எதன்பொருட்டோ அது தாமதமாகி, வரும் ஆகஸ்டில் வந்தால் போதும் எனச்சொல்லிவிட்டதால் அவன் வீட்டில் இருந்து நல்லவேளையாக எங்களுக்கு உதவுகிறான்.

காலை, மதியம், இரவு என வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவது,அவ்வப்போது லக்ஷ்மியை வீட்டுக்கு அழைத்து வந்து அவள் குளித்து தயாரானதும் மீண்டும் மருத்துவமனைக்கு செல்வது, இது ஒரு கிராமத்து மருத்துவமனை என்பதால் ஸ்கேன் எடுக்க அடிக்கடி பொள்ளாச்சிக்கு அவரை ஆம்புலன்ஸில் அழைத்து வருவது, மருத்துவமனையிலேயே அடிக்கடி எக்ஸ்-ரேவுக்கு கூட்டிச்செல்வது இரவுணவு கொண்டுவருவது என ஓயாமல் கார் ஓட்டிக்கொண்டு, ஓய்வு கிடைக்கையில் அந்த சின்ன மருத்துவமனை அறையிலேயே அமர்ந்து போனை பார்த்துக்கொண்டு  இருக்கிறான். .

ஒருமுறைகூட சங்கடப்பட்டுக்கொண்டோ முகம்சுளித்தோ புகார் சொல்லியோ  அவனைப் பார்க்கவில்லை. ’’பாவம்டா நீ இத்தனை வேலை செய்யறே, ஸாரி’’ என்று நான் சொன்னாலும் “டேய் கார், ஓட்டறதெல்லாம் ஒரு வேலையா” என்பான்.

அவரை முழு அன்புடன் அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறான். இரு மகன்களுக்கும் மூத்தோரின் அன்பு என்பதே கிடைத்ததில்லை. முற்றிலுமாக அனைவராலும் கைவிடப்பட்டவர்கள் நாங்கள்.  நான் மகன்களைக் கல்லூரிக்கு என்னுடன் அழைத்து வந்துதான் வளர்த்தேன். அழைத்து வரமுடியாத சமயங்களில் இந்த வீட்டிற்குள் அவர்களை வைத்து கதவை பூட்டிவிட்டு கல்லூரிக்கு வந்திருக்கிறேன். 

ஆனாலும் அந்த நினைவுகளின் காயம் ஏதுமில்லாமல் என் வருத்தங்கள், துயரங்கள் அறிந்திருந்தும் அவை தொட்டுவிடாத தொலைவில் தருண் இருக்கிறான். 

இடையில் அவனது தோழிகளும் தோழர்களும் அழைத்தால் “டிரைவிங்கில் இருக்கிறேன் பிறகு பேசலாம்” என்பான். முகம் சுளிக்காமல் தீவிர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு, டயப்பர் மாற்ற செவிலியர்களுடன் இணைந்து கொள்கிறான். இரவு வீடு திரும்புகையில் எனக்கு பிடித்தமான பாடல்களை ஒலிக்கச் செய்வது, என்னிடம் கல்லூரிக் கதைகளைக் கேட்பது என்று சுவாரஸ்யமாகப் பயணத்தை அமைத்துக் கொள்கிறான்.

மருத்துவமனையிலிருந்து வீடு வந்ததும் உலக வழக்கமான, ஆண்கள் நேரே வீட்டிற்குள் சென்று உடைமாற்றி சாப்பாட்டுக்கு காத்துக்கொண்டிருப்பது என்பதற்கு மாறாக  காரில் இருக்கும் பைகள், சாவி, பாட்டில்கள், அழுக்குத்துணி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாடிக்கு வருவது, என்னை அதிகம் நடக்காமல் பார்த்துக்கொள்வது என எதைச்செய்தாலும் சிரித்த முகத்துடன் செய்கிறான். 

இரவு குளித்து சமைக்க வருகையில் அவனும் தயாராகி இயல்பாக சமையலறையில் கூட ஒத்தாசை செய்வது, அல்லது முதலில் என்னை சாப்பிட வைத்து பிறகு அவன் சாப்பிடுவது என்று கவனமாக இருக்கிறான். இடையிடையே அடுத்த கானுலாவைக் குறித்து திட்டமிடுவது, வீட்டில் இளநீர் குடித்துவிட்டு மரத்திலேயே குடியிருந்து  கொழுத்திருந்த எலியை கூண்டில் பிடித்து வேறெங்காவது கொண்டு விட்டுவிட்டு வருவது என எந்நேரமும் பிஸியாகவே இருக்கிறான். 

அவ்வப்போது சூழலின் இறுக்கத்தை உணர்ந்து, நானும் மகன்களும் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் நகைச்சுவையாக ஏதேனும் சொல்லி தளர்த்துவதையும் செய்கிறான். நேற்று புரோட்டீன் பார் எனக்கு அனுப்புவதாக சரண் சொன்னதும் நான் ’’ அப்புறமா நான் சொன்னபுறமா வாங்கலாம்ஆர்டர் போடாதே’’ என்றேன். தருண் அண்ணனிடம் ’’டேய் அம்மாட்டெ ஆர்டர் போடலாமா பொறுமையா பேசு’’ என்கிறான் 🙂

ஆனைமலை விவசாய பூமி வழியே தினமும் மருத்துவமனைக்கு செல்லுகையில் மரங்களடர்ந்த அந்தச் சாலையைப் புகைப்படம் எடுப்பது, வயலில் இருக்கும் கருந்தலை அரிவாள் மூக்கன்களை கவனித்து வீடியோ எடுத்து எனக்கு அனுப்புது என அவனையும் உடன் இருப்பவர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறான்.

நான் தாவரங்களிடமிருந்து ஒளியை நோக்கியே செல்வது என்னும் பாடத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன்தான் எனினும்  களைச்செடிகளின் தொல்லை தாங்கமுடியாமலாகும்போது சலிப்படைந்துவிடுகிறேன் ஆனல் மகன்கள் அப்படியல்ல என்பதில் மகிழ்கிறேன்

மாலை வாசல் தெளித்துக் கோலமிட்டு விளக்கேற்றிக் கொண்டிருப்பார்கள், தோட்டத்தில் பூப்பறித்து நெருக்கமாக தொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்றெல்லாம்  சொல்வதற்கில்லைதான் எனினும் எங்கோ கொடுத்து வைத்த மகராசிகள் இருவர் நெட்ஃப்ளிக்ஸ் பார்த்துக்கொண்டோ, அஸைன்மென்ட் எழுதிக்கொண்டோ, மால்களில் சுற்றிக்கொண்டோ இருப்பார்கள். அவர்கள் இருவரையும் நினைத்தால் கொஞ்சமே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.

. அருட்காப்பு. 

Suseum!

Suseum (Sustainability Museum) is India’s first dedicated museum for renewable energy, clean technology, and eco-friendly lifestyles. Launched by Energy Alternatives India (EAI), a clean-tech research and consulting firm founded by IIT and IIM alumni, it is located on Nungambakkam High Road in Chennai. 

 Rather than focusing on ancient history, Suseum is designed as a forward-looking, interactive space focused on environmental survival and ecological balance.

The Vision

The core objective of Suseum is to bridge the gap between complex environmental science and everyday human life. By presenting sustainability in practical, tangible ways, it serves as an educational hub for students, researchers, and citizens looking to understand how modern engineering must align with nature to preserve the future.

The Brains Behind the Initiative

  • Founded by IIT & IIM Alumni: EAI was established by a team of premier technical and management professionals dedicated to accelerating the adoption of renewable energy and clean technology across India.
  • The Visionary: The primary driving force behind Suseum is Narasimhan Santhanam (Narsi), the co-founder and director of EAI. An alumnus of IIT Madras (B.Tech) and IIM Calcutta (PGDM), Santhanam is a prominent climate-tech and renewable energy expert.

The History and Evolution

  • 2013 Launch: Suseum was officially inaugurated in November 2013 on Nungambakkam High Road, Chennai, earning the distinction of being India’s very first dedicated sustainability museum.
  • The “Why”: Before Suseum, information on clean technology was heavily restricted to corporate boardrooms, technical journals, and academic papers. The founders realized there was a severe gap between complex environmental science and practical, everyday adoption by the public.
  • From Office to Innovation Hub: To bridge this gap, EAI creatively converted a section of its own workspace into a physical, public-accessible museum. The goal was to build a philanthropic, interactive space where students, citizens, and small business owners could see, touch, and feel real-world eco-friendly applications rather than just reading about them.
  • Expanding Ecosystem: Over the years, the history of Suseum has aligned with EAI’s broader initiatives to foster green talent and entrepreneurship, serving as a launchpad for climate-tech internships, educational workshops for school children, and a specialized eco-store showcasing commercial sustainable alternatives.

Key Highlights & Exhibits

  • Hands-On Clean Tech: Visitors can see and touch advanced green technologies, such as vertical-axis wind turbines, solar innovations, and flywheel energy storage systems.
  • Urban Gardening Solutions: The museum showcases practical urban greening concepts, including vertical gardens, which demonstrate how dense city spaces can be engineered to support plant life and reduce heat.
  • Eco-Friendly Alternatives: Displays feature daily-use sustainable products, ranging from compostable plastic cups to biodegradable materials, illustrating how consumers can reduce their carbon footprint.
  • The Suseum Store: A dedicated space where visitors can directly purchase eco-friendly products and find sustainable solution providers for homes or institutions.

Botanical relations

When we look at the clean-tech and sustainability solutions showcased at Suseum, they are essentially humans trying to copy what plants have been doing flawlessly for millions of years.

  1. Solar Energy Capture vs. Photosynthesis

Suseum heavily features advanced solar photovoltaic (PV) technologies, demonstrating how humans can harvest sunlight to generate electricity.

The Botanical Connection: Solar panels are nothing more than a mechanical, less efficient imitation of a leaf’s chloroplasts. While human engineers use silicon wafers to induce an electron flow from sunlight, plants use chlorophyll pigments to achieve quantum efficiency in splitting water molecules and capturing photons.

The Future: Advanced clean-tech research (like dye-sensitized solar cells) actively copies plant pigments to create organic solar cells.

  1. Vertical Gardens as Urban Ecosystems

One of the key practical exhibits at Suseum focuses on urban greening solutions, particularly vertical gardens and living walls for dense city spaces.

  • The Botanical Connection: This relies heavily on understanding epiphytic plants (plants that grow on other structures without soil, like certain ferns and orchids) and their root physiology.
  • Botanical Engineering: To design a sustainable vertical garden, one must understand how plant roots anchor, how they absorb moisture through specialized tissues (like velamen in orchids), and how different species interact to purify the air, reduce urban heat islands, and trap heavy metals.

3. Biodegradable Materials and Plant Polymers

The eco-store and material exhibits at Suseum showcase compostable plastics, plant-based packaging, and biodegradable consumer goods.

  • The Botanical Connection: This is entirely rooted in plant biochemistry. Instead of using fossil-fuel-based hydrocarbons, these materials are engineered using plant polymers like cellulose, hemicellulose, and lignin (the structural components of plant cell walls) or starches extracted from corn and cassava.
  • The Lifecycle: Understanding how microorganisms enzymatically break down these botanical bonds back into organic soil nutrients is what makes these products truly sustainable

4. Phytoremediation and Waste Treatment

Clean technology often involves eco-friendly ways to treat greywater and industrial waste without harsh chemicals.

  • The Botanical Connection: This introduces phytoremediation—the use of specific living plants to clean up contaminated soil and water. For example, using water hyacinths or specific reeds in constructed wetlands to absorb toxins, heavy metals, and excess nitrates through their root systems.

Bridging the Gap

  1. Academic Botany to Applied Green-Tech

In the classroom, you study plant anatomy, physiology, and biochemistry in detail. Suseum takes those exact concepts and showcases their real-world commercial applications.

  • From Stomata to Architecture: Understanding how a plant regulates water loss and gas exchange through stomata helps you design passive cooling systems for buildings using green walls.
  • From Plant Biochemistry to Materials Science: Your knowledge of plant cell walls, starch, and cellulose is exactly what industries need to engineer the next generation of bioplastics and compostable packaging materials shown at Suseum.

2. Opening Frontiers in Biomimicry and Bio-Design

The future of engineering is biomimicry—solving human problems by copying nature’s designs. Because plants are stationary, they have evolved the most sophisticated structural and energy-harvesting mechanisms on Earth.

  • As a botanist, you understand how leaves optimize light absorption at different angles. Clean-tech companies need this expertise to build tracking solar panels that mimic heliotropism (sun-following movements in plants like sunflowers).
  • You understand how lotus leaves stay clean via the microscopic structural architecture of their surface (the Lotus Effect). This is used to engineer self-cleaning solar panels and water-repellent paint.

3. Career Opportunities in Urban Agriculture & Phytoremediation

As cities grow denser and more polluted, traditional botany is moving into urban landscapes. Places like Suseum emphasize urban greening, vertical farming, and non-chemical waste treatment.

  • Hydroponics and Aeroponics: Future botanists will be the core architects of vertical farms, managing nutrient solutions, light wavelengths, and plant pathology without soil.
  • Phytoremediation Experts: Industries and municipalities increasingly look for botanists who can select and engineer specific plant species (like hyperaccumulators) to clean up heavy metal soil pollution and industrial greywater naturally.

4. Driving the Bio-Economy and Sustainable Entrepreneurship

The global shift away from fossil fuels means that plants are the new oil. Everything currently made from petroleum (plastics, fuel, synthetic fibers) will eventually need to be made from plant-based alternatives.

  • A botany student who understands sustainability trends can enter fields like Biofuels (algal and agricultural biomass energy), Ethnobotanical product formulation, and Green Supply Chain consulting.
  • It prepares you to be a consultant for environmental impact assessments, carbon sequestration auditing, and eco-restoration projects.

Suseum shifts Botany from a purely academic, lab-based, or field-classification science into an active, high-demand field of applied ecological engineering

Suseum demonstrates that true sustainability is not about human engineering overpowering nature, but rather human engineering submitting to botanical wisdom. Every clean energy device we build is just a step closer to replicating a plant’s natural metabolic processes. 

தோசைக்கல் முதுகு!

முன்பெல்லாம் மகன்கள் சின்னக்குழந்தைகளாக இருக்கையில் நான் என்ன சொன்னாலும் நம்புவார்கள். இந்த ஊருக்கு வந்த புதிதில் இந்த புதுக்குடியிருப்பு அமைந்திருந்த ஊர் மேட்டில் இரண்டே இரண்டு வீடுகளும் சுற்றிலும் வயல்களும்தான் இருந்தன. வீட்டுக்கு எதிரே ஒரு மாபெரும் மாந்தோப்பு . தெருவெங்கும் அடர்ந்த மரங்களுடன் மாலை விளக்கேற்றுகையிலேயே முழுக்க இருட்டிவிடும்.

இந்தச்சூழலில் ஒரு பெண் தனியே குழந்தைகளுடன் வீடுகட்டி வசிக்க வந்தது ஊரில் பேச்சாக இருந்தது. அதுவும் முதல் சில வருடங்களில் மதிலும் கட்டவில்லை; பாம்புகள் அதிகம் வந்துகொண்டிருந்த இடமாக வேறு இருந்தது.

அவ்வப்போது வீட்டுக்கு வரும் கிராமத்துப் பெண்களால் துபாய்க்காரர் வீடு என்று பெயரும், தனியே ஒரு டீச்சரம்மா மகன்களுடன் வசிக்கிறார் என்பதும் ஊரெங்கும் பரவியது. அபுதாபி என்னும் பெயர் புழக்கத்துக்கு வந்திருக்கவில்லை, துபாய் எனும் குடைச்சொல்லுக்கு கீழே அபுதாபி, குவைத், ஷார்ஜா போன்ற நாடுகள் அடங்கி இருந்த காலமது. எப்படியானாலும் ஆர்னால்டு ஷ்வாஷ்னேகர் ஆண்கள் இல்லாமல் பெண் ஒருத்தி தனியே இருப்பது ஒரு அதிசயமாகி பலர் நேரில் வந்தும் ’’.. பன்னாடி எங்கே? எப்போ வருவாரு? எப்படி தனியாக தைரியமாக இருக்கிறேன்?..’’ என்றெல்லாம் கேட்கத் தொடங்கினார்கள். 

எனவே நான் பேச்சோடு பேச்சாகச் சொல்வதுபோல் தோட்ட வேலைக்கு வரும் பெண்களிடம், என்னிடம் ஒரு கைத்துப்பாக்கி இருக்கிறது என்று சொல்லிவைத்தேன், அதனால் எந்தப் பயமும் இல்லை, லைசென்ஸ் வேறு இருக்கிறது, பாதுகாப்புக்காக நான் எப்போது வேண்டுமானாலும் சுடலாம் என்றும் சொல்லிவிட்டதால் அக்கிராமம் முழுக்க அந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. சரண், தருணிடமும் அதையே சொன்னேன்; பொய் சொன்னால் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா? 

அவர்களும் ஒரு கேள்வியும் கேட்காமல் நம்பினார்கள். அவ்வப்போது துப்பாக்கி எங்கே இருக்கு என்று கேட்டு நச்சரிப்பார்கள். அது எல்லாம் மறைச்சு வச்சிருக்கேன், சொல்ல முடியாது குண்டு போட்டுருக்கில்லையா நீங்க எடுத்தா சுட்டுருவீங்க..’’என்பேன்.

சரண் புத்திசாலித்தனமாக, ’’…மறைச்சு வச்சிருந்தா திருடன் வந்தா டக்குன்னு எப்படி எடுப்பே?..’’  என்பான்.

நான் பதிலுக்கு ’’… அது வந்து மறைச்சுதான் வச்சிருக்கேன், ஆனா எனக்கு உடனே கைக்குக் கிடைக்கும் இடத்துல வச்சிருக்கேன்…’’ என்பேன். நான் கல்லூரிக்குச் சென்றிருக்கையில் இவர்கள் இருவரும் மாய்ந்து மாய்ந்து துப்பாக்கியைப் பல இடங்களில் தேடி இருக்கிறார்கள். 

வெகுகாலம் கழித்தே அது பொய் என்று தெரிந்துகொண்டார்கள்.  நான் என்ன சொன்னாலும் நம்பிய பொற்காலமது. ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. இப்போது தருண் படிப்பு முடித்து வீட்டில் இருக்கிறான். அவனுக்கு வேலை வரும் ஆகஸ்ட்டில்தான் சென்னையில், எனவே நேரம் கிடைக்கையிலெல்லாம் அவனோடு பேசிக்கொண்டிருப்பேன். 

மகன்களோடு செலவிடும் சமயம் மிகவும் அரிது என்று அறிந்திருக்கிறேன். வேலை, கல்யாணம், குடும்பம் என அவர்கள் முன்புபெரும் கதவுகள் திறந்திருக்கின்றன. எனவே கிடைக்கும் சமயத்தை பேசிப்பேசிக்கழிக்கிறோம்

பெரும்பாலும் என் இளமைக்காலக்கதைகள் தான். அப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் நான் முதன்முதலில் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்த சம்பவத்தைச் சமீபத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

என் இளமைப்பருவத்தில் நான் மகிழ்ந்திருந்த காலமென்றால் அபயமத்தை வீட்டிலும், சரஸ்வதி பெரியம்மா வீட்டிலும் விடுமுறையில் இருந்த காலங்கள்தான். அதுவும் அபயமத்தை மீது எனக்குப் பெரும் பிரேமை இருந்தது.

என் சொந்த அத்தைகள் எல்லாம் மாமன்களிடம் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு, மூக்குச் சிந்திக்கொண்டும், அகால வேளையில் ரத்தக்காயங்களுடன்  இடுப்பில் குழந்தைகளோடு வந்து கதவை தட்டும் அபலைகளும், அண்ணன் வீட்டில் சீராடிக்கொண்டு வந்து இருப்பவர்களுமாகத்தான் இருந்தார்கள்.

ஆனால் அபயமத்தை நன்றாகப் படித்து, என் மாமாவைக் காதல் திருமணம் செய்துகொண்டு, லவ்டேல் பள்ளியில் நல்ல வேலையில் இருந்ததோடு, புடவையை ஒற்றைத்தலைப்பாகப் போட்டுக்கொண்டு, குளிர்கண்ணாடி அணிந்து, ஒரு மொபெடில் ஜம்மென்று என்னையும் உட்காரவைத்துக்கொண்டு சேரிங் கிராஸ்க்கு அழைத்துச்செல்வார்கள்.  அத்தை நல்ல ஓங்குதாங்காக வேறு இருப்பார்கள். எனவே எனக்கு அவரைப் போல் இருக்க வேண்டுமென்று பெரிய கனவெல்லாம் இருந்தது.

லவ்டேலில் இருந்த அத்தையும் மாமாவும்  சென்னை  கிண்டி ஐஐடி-யில் பணிமாறுதல் பெற்று வந்தார்கள். பின்னர் என் கோடை விடுமுறைகள் எல்லாம் சென்னையில்தான். மாமா அங்கு உடற்பயிற்சி இயக்குநராகவும், அதே வளாகத்தில் இருந்த வனவாணி பள்ளியில் அத்தை உடற்பயிற்சி ஆசிரியையாகவும் பணியாற்றினர். ஆசிரியர் குடியிருப்பொன்றில் கீழ்த்தளத்தில் வீடு. ஒரு கோடை விடுமுறையின்போதுதான் அவர்கள் வீட்டில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி வாங்கி இருந்தார்கள். நான் போன முதல் நாளே ஞாயிறு என்பதால் அன்று மாலை ஏதாவது ஒரு மொழித் திரைப்படம் போடுவார்கள் என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

மாமா ஒலிபரப்பு துவங்கும் முன்னர் தொலைக்காட்சியை ஆன் செய்து, கரகரவென்று சத்தத்துடன் கருப்பு வெளுப்பில் புள்ளிகளால் நிறைந்திருக்கும் திரையைக் காட்டி “பார்த்தியா, இதுதான் சென்னை மெரினா பீச் மணல்” என்று மொக்கை ஜோக் சொல்லிக்கொண்டிருந்தார். 

அக்கம் பக்கத்துக் குழந்தைகளும் வந்து அந்த குட்டி ஹால் முழுக்க நிறைந்து அமர்ந்திருந்தோம். அத்தை பெரிய பாத்திரத்தில் வாழைக்காயை மெல்லிசாகச் சீவி, எண்ணெயில் பொரித்து, உப்பு மிளகாய்த்தூள் போட்டுப் பொரித்து எல்லோருக்கும் சின்னச் சின்னக் கிண்ணங்களில் சாப்பிடக் கொடுத்திருந்தார்கள்.

அன்று ஒரு கருப்பு வெள்ளை மராத்திப்படம்; எனக்கு அந்தப் படம் லேசாகத்தான் நினைவில் இருந்தது, ஏதோ இளம் சன்னியாசியின் படம் அது. அந்தச் சிறுவனும் அவன் தங்கையுமாகக் காடெல்லாம் அலைவார்கள். ஒரு சமயம் ஊரில் எங்குமே அவர்களுக்குச் சமைக்கப் பாத்திரமோ சாப்பாடோ கொடுக்க மறுப்பார்கள்.

பசித்தழுத தங்கைக்கு இளம் சன்னியாசி கனன்று சுடும் தன் முதுகையே அடுப்பாக்கிக் காட்டுவார். தங்கை அவரது முதுகில் தோசைக்கல் மாதிரி ஒவ்வொரு ரொட்டியாகச் சுட்டுச் சுட்டு எடுப்பாள்.

அந்தப் படத்தின் மற்ற காட்சிகள் எல்லாம் எனக்கு மறந்துவிட்டன. ஆனால் இந்த தோசைக்கல் முதுகு மட்டும் மனதில் அப்படியே பதிந்துவிட்டது.

ஆனால் இந்தத் தருண் நான் சொன்னதை நம்பவே இல்லை. துப்பாக்கி வைத்திருந்ததையெல்லாம் நம்பினவன், “..போடா! முதுகு தோசைக்கல்லாமா? அதுல ரொட்டி சுடுவாங்களாமா? யார்கிட்ட கதை விடுறே? இப்படியெல்லாம் ஒரு புராணக்கதை நான் எங்கேயுமே கேட்கலை” என்று ஒரேயடியாக மறுத்தான். 

நானும் என்ன என்னவோ கூகுளில் தேடியும் அப்படி ஒரு படத்தை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இவன் வேறு, “டேய் சும்மாதானே சொன்னே? உண்மையைச் சொல்லு” என்று வெறுப்பேற்றிக்கொண்டிருந்தான். 

’’..சத்தியமா அப்படி ஒரு படம் இருந்ததுடா, நான் டிவியில் பார்த்த முதல் படமே அதான் , எதுக்குடா பொய்சொல்லபோறேன் உன்கிட்ட..’’ என மீள மீளச் சொல்லி என் முகம் வாடிய பின்னர், அவன் “சரி இரு, நான் தேடுறேன்” என்று ஜெமினையிடம், பல விதங்களில் கேட்டு, ஒருவழியாக அது 1940-ல் வெளியான 35 எம் எம் கறுப்பு வெள்ளை மராத்திப் படமான ‘Sant Dhyaneshwar’ என்பதையும், அதன் யூடியூப் லிங்க் எடுத்தும் அந்த முதுகு தோசைக்கல்லில் ரொட்டி சுடப்படுவதையும் பார்த்துவிட்டான். 

அந்த இளம் சன்னியாசி அவரது யோக வலிமையின் வெப்பத்தினால் முதுகைச் சூடு பண்ணி இருக்கிறார் என்பது இப்போது தெரிந்தது. நல்லவேளையாக படம் யூடியூபில் இருந்தது; இல்லாவிட்டால் நான் பொய் சொன்னேன் என்று நினைத்திருப்பான் 

திரைப்பட இணைப்பு: https://www.youtube.com/watch?v=HPqQydBYwz8 (Zee Music Marathi)

காட்சியின் தனி இணைப்பு: https://www.youtube.com/watch?v=DWs9LI_LT_8 

(தங்கை முக்தாபாய் ஞானேஸ்வரின் தகிக்கும் முதுகில் ரொட்டி சுடும் அந்த புகழ்பெற்ற  காட்சி).

சிங்கப்பெண் அதிரடித்திட்டம்!

த வெ க பொறுப்பேற்றபின் பெண்களின் பாதுகாப்பின் பொருட்டு சிங்கப்பெண் அதிரடிக்காவல் திட்டத்தை அறிவித்து, உடனே தொடங்கவிருந்து பின்னர் எதனாலோ தாமதமாகி பின் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் தவணையாகவே இந்தத்திட்டத்துக்கு  354 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த எல்லா ஆட்சிகளிலும், எல்லாக் காலங்களிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் இருந்திருக்கிறது இருக்கிறது.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நிலை என்பது வரலாற்றில் ஒரே சீராக இருந்ததில்லை; அது காலத்திற்குத் தகுந்தாற்போல் பல ஏற்ற இறக்கங்களையும், முரண்பாடுகளையும் கொண்டதாகவே இருந்துள்ளது. முற்காலத்தில் பெண்கள் “முழுக்க முழுக்கப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தார்கள்” என்பதும் உண்மையல்ல, அதே சமயம் “எப்போதும் ஒரு பொற்காலத்தில் வாழ்ந்தார்கள்” என்பதும் உண்மையல்லதான்.

பண்டைய தமிழ் சமூகத்தில், குறிப்பாக சங்க காலத்தில், பெண்களுக்குக் குறிப்பிடத்தக்க அறிவுச் சுதந்திரமும் மதிக்கத்தக்க இடமும் இருந்தது என்பதை நம் இலக்கியங்கள் காட்டுகின்றன. அவ்வையார் காக்கைபாடினியார் போன்றோரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பல பெண்கள்  ஏராளமாக பயணத்திருக்கிறார்கள்,  காதல் மற்றும் இணையைத் தேர்வு செய்வதிலும் சுதந்திரம் இருந்திருக்கிறது,  சமூக மதிப்பும் இருந்திருக்கிறது.

ஆனால் அதே சங்க காலத்திலும் அதற்குப் பிந்தைய காலங்களிலும், பெண்களின் “பாதுகாப்பு” என்பது பெரும்பாலும் அவர்களின் கற்பை பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின்  மூலமே உறுதி செய்யப்பட்டது.

இலக்கியங்களில் ‘இல்லிவன்பூட்டி’, ‘இறைவளை நல்லார்’ எனப் பெண்கள் வீட்டின் எல்லைக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்படும் வழக்கம் இருந்தது.   வெளியில் இருக்கும் வன்முறையைக் குறைப்பதற்குப் பதிலாக, பெண்ணை வீட்டிற்குள் வைப்பதையே  சமூகம் பாதுகாப்பாகக் கருதியது.

போர் நடக்கும்போது, தோற்ற நாட்டின் பெண்களைக் சிறைப்பிடித்து வருவதும், அவர்கள் அசிங்கப்படுத்தப்படுவதும்  வழக்கமாக இருந்தது.

 இடைக்காலச் சமூக அமைப்பில், சங்க காலத்திற்குப் பின்பு உடன்கட்டை ஏறுதல், மொட்டையடித்தல், கைம்மை நோன்பு போன்ற சடங்குகள், கைம்பெண்களுக்கான உணர்வுகளை மந்தமாக்கும் பிரத்யேக உணவுகள் (அல்லிவிதை) போன்றவை தீவிரமடைந்து, பெண்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்கிறது  உலகப்பொதுமறையான திருக்குறள். கடவுளைக் கும்பிடாவிட்டாலும் கணவனைத் தெய்வமாகக் கும்பிட்டுவிட்டு எழுகிற பெண் ‘பெய்’ என்று சொன்னால் மழை பெய்யுமாம்.

இன்றைக்கு வரை கணவன் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக மங்கலய பூஜைகளும், காரடையான் நோன்புகளும், இன்னும் பல விரதங்களும் நோன்புகளும் மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன. ஆனால், இதற்கு நேர்மாறாக, ஒரு மனைவியின் ஆயுளுக்காகவும், அவளது நல்வாழ்வுக்காகவும் கணவன்மார் கடைப்பிடிப்பதற்கென்று எந்தவொரு பிரத்யேக வழிபாடுகளோ அல்லது நோன்புகளோ நம் பண்பாட்டு வழக்கங்களில் உருவாக்கப்படவே இல்லை.

ஏன் மனைவி நீளாயுளுடன் இருக்க வேண்டியதில்லையா? பொண்டாட்டி செத்தவன் புதுமாப்பிளை எனும் பழமொழி எப்படி  வந்திருக்கும்?

பெண்ணின் வாழ்வும் ஆரோக்கியமும் அவளது கணவனைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற எண்ணமே இத்தகைய வழிபாட்டு முறைகளின் பின்னணியில் இருக்கிறது. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு, உத்தியோகம் புருஷலட்ஷணம்? இப்போது ஆண் மட்டுமா உத்தியோகத்திலிருகிறான்?

இந்த நிலை மாற வேண்டும். குடும்பம் என்பது இருவருக்குமானது, அங்கு இருவரின் ஆயுளும், ஆரோக்கியமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற புரிதல் புதிய தலைமுறை ஆண்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிச்சயம் வர வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில்,  பெண்கள் வெளியே வந்துவிட்டனர். கல்வி, வேலைவாய்ப்பு, விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் சாதனை படைக்கிறார்கள்.

முன்பை விட இன்று பெண்களுக்குச் சட்டப் பாதுகாப்பும் (POCSO, உள்நாட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம், பணியிடப் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்), அவசர உதவிக்கான தொழில்நுட்பங்களும் அதிகம். ஆனால், பெண்கள் பொதுவெளியில் நடமாடும் சுதந்திரம் அதிகரித்துள்ளதால், அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையின் வடிவங்களும் சைபர் குற்றங்கள், பொதுவெளித் தொல்லைகள் என மாறியுள்ளன.

எனவே சிங்கப்பெண் திட்டம் போன்ற முயற்சிகள் அவசியம் என்றாலும், என்னைப் பொறுத்தவரை வேரில் பூச்சிபிடித்திருக்கும் ஒரு மரத்துக்கு அதை கவனிக்காமல் கிளைகளுக்கும் இலைகளுக்கும் மருந்தடிப்பதைப் போன்றதுதான் இது.

சைபர் குற்றங்களாகட்டும், குடும்ப வன்முறைகளாகட்டும், தோல்வியுற்ற தாம்பத்தியமாகட்டும், பெண்களுக்கு எதிரான எல்லாக் குற்றங்களுக்கும் காரணமாக வேறு காரணிகள் இருக்கின்றன. அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது சரிசெய்ய சிங்கப்பெண் போன்ற திட்டங்களுக்கு இணையான முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.

பல்வேறு உலகளாவிய சமூகவியல் ஆய்வுகளின்படி, ஓருபால் திருமணங்களில்  லெஸ்பியன் (பெண்-பெண்) உறவுகளில்   விவாகரத்து அதிகரித்திருக்கிறது.  ஒப்பிடுகையில் ஆண்-ஆண் திருமணங்களில் சட்டப்பூர்வ பிரிவுகள்  குறைவாகப் பதிவாகியுள்ளன.. எல்லா வகையான உறவுகளிலும் சிக்கல் இருக்கிறது வன்முறை இருக்கிறது என்னும் போது சிக்கல்களின் வேரைக்கவனிக்க வேண்டுமல்லவா?

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிங்கப்பெண் திட்டத்தில் பல முக்கியமான முன்னெடுப்புகள் மற்றும் வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவை வெறும் தற்காப்பு அல்லது அவசரக் கால உதவிகளோடு நின்றுவிடாமல், இன்னும் ஆழமாகச் செயல்பட வேண்டியிருகிறது.

ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பது, பெண் காவலர்களுக்கு என்று பிரத்யேக உடனடி அடையாளம் காணும் வகையில் சீருடை அளித்திருப்பது, பள்ளி கல்லூரி பேருந்து ரயில் நிலையங்களில் கூடுதல் கவனிப்பும் பாதுகாப்பும் கண்காணிப்பும் அளிப்பது, தொழில்நுட்ப நிறுவன வளாகங்களிலும் பிற தொழில் நிறுவனங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, நெரிசல் மிகுந்த இடங்களிலும் பொதுப் பூங்காக்களிலும் பாதுகாப்பு அளிப்பது, சைபர் குற்றங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது, பின்தொடர்தல், பாதுகாப்பு அச்சம் விளைவித்தல் போன்ற குற்றங்களைக் கண்காணிப்பது, பாலியல் தொழிலுக்குப் பெண்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதைக் கண்காணிப்பது,  பெண் கள் தொடர்பான எல்லாக் குற்றங்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பது எனப் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. 

முழுக்க சிங்கப்பெண் தரப்பை இன்னும் நான் அறிந்துகொள்ளவில்லை எனினும் என் பரிந்துரைகள்: 

108 ஆம்புலன்ஸ், 100 காவல் என்று இருப்பது போல் சிங்கப்பெண் காவலர்களை அழைக்கவென்று ஒரு தனி எண் தரப்பட வேண்டும். நான் வளைகுடா நாட்டில் இருந்தபோது, அங்கு இப்படி குடும்ப வன்முறைகளைத் தடுக்கவென்று ஒரு நாளில் பலமுறை காவல் ரோந்து வாகனம் எல்லா குடியிருப்புகளின் வழியாகவும் மிக மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும். மாடியிலிருந்து பார்ப்பவர்களுக்கும் தெரியும் வகையில் அந்த வாகனத்தின் மேற்கூரையிலும் மிகத் தெளிவாகக் காவலர்களைத் தொடர்புகொள்ளும் எண் பெரிதாக எழுதப்பட்டிருக்கும். மேலும், அங்கெல்லாம் உள்ளூர் தொலைபேசி சேவை முற்றிலும் இலவசம் என்பதால் அது மிக பயனுள்ளதாக இருந்தது. குடும்ப வன்முறையில் ஈடுபட அங்கு வாழ்ந்த இந்தியர்களும் இந்த ஒரு காரணத்தினாலேயே மிகத் தயங்கியதை நான் அறிவேன்.

ஆனால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இவற்றுக்கெல்லாம் காரணமாக இருப்பது என்னவென்பதையும் கவனத்தில் கொண்டு, அவற்றைத் தவிர்க்கவும் சிங்கப்பெண்ணுக்கு இணையான கவனத்துடன் திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இப்படியான குற்றங்களுக்கு அடிட்பைக்காரணம் பாலியல் வறட்சிதான்.  இளம் வயதினருக்கு ஒழுக்கம், விழுமியம் போன்றவற்றைக் கற்றுத்தர வேண்டிய குடும்பம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதைச் சுத்தமாக மறந்துவிட்டு, மதிப்பெண் வாங்குவதற்கு மட்டும் மெனக்கெடுவது மிக முக்கியமான காரணமாகி இருக்கிறது.

பெண் குழந்தைகளுக்கு ஒருபக்கம் மிகத் தீவிரமாக கவனமும் செல்லமும், பாதுகாப்பும் அளிக்கும் குடும்பங்களும், மற்றொரு பக்கம் அவர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை எடுக்கக்கூட நேரமில்லாமல் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் குடும்பங்களும் பெருகி இருப்பது.

ஆணும் பெண்ணும் இளம் வயதில் எதிர்பாலினரைத் தெரிந்தும் புரிந்தும் கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்யும் கல்வி நிறுவனங்களும், அவற்றில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கப் போட்டி போடும் அறிவற்ற பெற்றோர்கள் இருப்பதும் பெரிய அவலமாகி இருக்கிறது.

குடும்ப வாழ்வில் மனைவி என்பவர் ஆணுக்குச் சமையலும் வீடு வேலையும் செய்வதற்காக இன்னொரு வீட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவள் என்ற எண்ணத்தோடு ஆண்கள் இருப்பது.அந்த எண்ணத்தை மகன்களின் பெற்றோர்களும் நூற்றாண்டுகளாக நம்பி வளர்த்தெடுத்துக் கொண்டிருப்பது எனப் பல முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்து, உயர்ந்த கல்வி அளிப்பதாகச் சொல்லிக்கொண்டு பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் தமிழகப் பள்ளிகளில், ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி வளாகம், தனித்தனி விளையாட்டு மைதானம், தனித்தனி படிக்கட்டுகள், தனித்தனி வகுப்பறைகள் இருக்கின்றன; இதை முதலில் தடை செய்ய வேண்டும்.

எதிர்பாலினத்தவரைப் பற்றிய அறிதலே இல்லாத இளைஞர்களை உருவாக்குவது, பிற்பாடு அவர்கள் இருவராக இணைந்து ஒரு கூரைக்கு கீழ் வாழவேண்டி வருகையில் அவர்களின் மனச்சிக்கல்களையும் உளவியல் ரீதியான கோளாறுகளையும் அதிகமாக்கிவிடுகிறது. இதுவே மணவுறவுச் சிக்கல்களுக்கும், பாலியல் வறட்சிக்கும் அடித்தளமிடுகிறது.

மேட்டுப்பாளையத்தில் ஒரு பிரபல பள்ளியில் சரணின் நண்பன் படிக்கையில், பெண்களின் விளையாட்டு மைதானத்தைத் திரும்பிப் பார்த்ததற்காக அவன் பல மணி நேரம் மைதானத்தில் முட்டிப் போட வைக்கப்பட்டான்.

கல்லூரி ஒன்றில் ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்ததற்காக, அவர்களின் அடையாள அட்டையைக் கல்லூரி முதல்வர் வாங்கி வைத்துக் கொண்டு, பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லியதால், அந்தப் பெண் அன்றே தற்கொலை செய்து கொண்டாள்.

இப்போதும் வானொலியில் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். பள்ளிகளின் விளம்பரங்களில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி வளாகம் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. பல பெற்றோர்களும் இதை விரும்புகிறார்கள்.

12-ம் வகுப்பு முடிந்ததும் தினமலர் போன்ற நாளிதழ்களும் பிற நிறுவனங்களும் ‘இனி என்ன படிக்கலாம்?’ என்பதற்கான ஆலோசனைகளைத் தரும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை ஏராளமாக ஒருங்கிணைக்கிறார்கள் அல்லவா?

அப்படி இளம் வயதில் இருப்பவர்களின் குடும்பங்கள் அந்த மிகச்சிறப்பான, குழப்பங்களும் ஹார்மோன் கொந்தளிப்புகளும் மனச்சிக்கல்களும் ஏராளம் இருக்கும்  வயதில்,  குழந்தைகளை,எப்படி நடத்த வேண்டும், வெறும் மதிப்பெண்களுக்காக அவர்கள் இளமையைத் தொலைக்க வேண்டியதில்லை, இந்த காலகட்டத்தில் அவர்களுக்குப் புரிதலும் அனுசரணையும், நல்ல ஊட்டச்சத்தும் தேவை, ஓய்வும்  அவசியம் என்பதை புரிந்து கொள்ள நல்ல உளவியல் தெரிந்த பேச்சாளர்களைக் கொண்டு பல இடங்களில் பேச வைக்க வேண்டும்.

சமூக ஊடகங்களின் தாக்கமும் ஊடுருவலும் மிகத் தீவிரமாக இருக்கும் இக்காலத்தில், அப்படிப்பட்ட ஊடகச் செய்திகள் பலருக்கும் சென்று சேரவும் அரசு முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

‘’..இப்ப பார்த்தீங்கன்னா, ஒரு அம்மா ராத்திரி 1 மணிக்கு ‘மேக்கப் போடுது…’ என்று ஒருவர் சொன்னதுமே, அதற்குப் பின்னர் என்ன சொல்லப் போகிறார் என்று கூட யோசிக்காமல், அரங்கம் சிரித்துக் கும்மாளமிடுகிறது.

இப்படியான அசட்டு பிசட்டு நகைச்சுவைகள் அன்றாடம் எத்தனை முறை மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது! அப்படி இளைஞர்களை எப்படி உடல், மனம் போன்ற ரீதியாகக் காயப்படுத்தாமல் வாழ வைப்பது என்னும்  தரமான உரைகளை ஊடகங்கள் வழியாகப் பரப்ப வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற எத்தனை வழிகளை ஊடகம் வழியாக உண்டாக்குகிறார்கள் அதே அக்கறையோடு இவைகளும் பரப்பப்பட வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் கட்டாயம் உளவியல் நிபுணர்கள் எப்போதும் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். குடும்ப வன்முறை, பின்தொடர்பவர்களால் உண்டாகும் மன அழுத்தம், பாலியல் தொல்லை போன்ற பலவற்றைப் மாணவ-மாணவிகள் பகிர்ந்து கொள்ள  யாரும் இல்லாத சூழல் கல்விக்கூடங்களில் நிலவுகிறது.

ஒரு ஆசிரியர் தவறாக நடந்து கொள்கிறார் என்றால், மாணவர்கள் புகார் அளிக்க முடிவதில்லை. எனவே, அந்தந்தப் பள்ளிகள், கல்லூரிகளில் புகார் பெட்டி பல இடங்களில் இருக்க வேண்டும்.

மேலும் ‘குட் டச், பேட் டச்’ (Good Touch, Bad Touch) போன்றவற்றைச் சிறு குழந்தைகளுக்கும் தொடர்ந்து கற்றுத்தரச் சிறப்பு வகுப்புகளும், பாடத்திட்டத்திலேயே இணைக்கப்பட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சில்மிஷங்களில் ஈடுபடாத ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

குடும்ப ஆண்களால் பெண்கள் பாலியல் தொல்லைகளை அனுபவிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. அவற்றைச் சொல்லவும் அவர்களுக்குப் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, உளவியல் நிபுணர்கள் எதேச்சையாக வரவேண்டியோ அல்லது மருத்துவ முகாம் ஒன்று நடக்க வேண்டியோ இருக்கிறது.

கோவைக்கல்லூரி ஒன்றில், ஒரு தேர்வின் போது ஒரு மாணவியைக் காணோம் என்று தேடித் தேடி அவளை மொட்டை மாடியில் கண்டுபிடித்தார்கள். அழுதுகொண்டிருந்த அவளை விசாரித்ததில், அவளது தந்தை அவளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிக்கொண்டே இருப்பதால் படிக்க முடியவில்லை என்றும், தேர்வை எதிர்கொள்ள முடியாமல் அப்படிச் செய்தாள் என்றும் தெரியவந்தது.

எங்கிருந்து பெண்களுக்குத் தொல்லை வந்தாலும் தெரிவிக்க ஒரு பிரத்யேக எண் அல்லது புகார் பெட்டி அவசியம் வேண்டும். எந்தக் கல்வி நிறுவனமாக இருந்தாலும், மாலை அல்லது காலை நேரச் சிறப்பு வகுப்புகள் இருந்தால், அங்கு கட்டாயம் ஆசிரியர் அல்லாத அல்லது பாடம் கற்பிக்காத, யாருக்கும்  யாரும் எந்தத் தொல்லையும் அளிக்காமல் இருக்கிறார்கள் என்று மட்டும் கண்காணிக்கும் பெண் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

கல்வி நிறுவன வளாகங்களிலும் பள்ளிப் பேருந்துகளிலும் கட்டாயம் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மனநல ஆலோசகர்கள் இல்லாத பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஆண் மையச் சமூகத்தை அத்தனை எளிதாக மாற்றிவிட முடியாது என்றாலும், இந்தத் தலைமுறையினருக்காவது பாடப்புத்தகங்களில் இருக்கும் பல பேதங்களைத் தவிர்த்த பாடங்களை இணைக்க வேண்டும்.

உதாரணமாக, human என்று வரவேண்டிய இடங்களில் எல்லாம் man என்று இருக்கிறதல்லவா, அதையெல்லாம் கவனமாக மாற்ற வேண்டும்.

Evolution of man, Descent of man, Stone age man என்றெல்லாம் வாசிக்கிறோமே, அப்போது பெண்கள் இல்லையா என்ன? டார்வினின் பரிணாம வளர்ச்சிப் படமான புகழ்பெற்ற ‘குரங்கிலிருந்து மனிதன் உருவான’ வரிசையில் ஆண் உடல் மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் இன்னும் பரிணாம வளர்ச்சியே அடையவில்லையா?

பெண் உடலை அப்படியே பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஜனன உறுப்புகளோடு சித்தரிக்க முடியாது என்றால், உறுப்புகளை மறைக்கும் வகையிலான கோணங்களில் (Silhouette or Stylized representations) ஏன் சித்தரிக்கக் கூடாது?

உடற்கூறியல், தசை மண்டலம், எலும்பு மண்டலம் போன்ற பொதுவான அறிவியல் வரைபடங்களில் ஆண் உடல் மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது பெண்களுக்கு அந்த மண்டலங்கள் இல்லையா என்ன?

இனப்பெருக்கச் சித்தரிப்புகளுக்கு மட்டுமே  பாடப்புத்தகங்களில் பெல்விக் பகுதியுடன் மட்டும் தனியே பெண் காட்டப்படுகிறாள். இதைப் படித்து வளரும் குழந்தைகளுக்குப் பெண் இனப்பெருக்கத்திற்கு மட்டுமானவள் எனும் புரிதல் மட்டுமே உண்டாகும். பாலினச் சார்பற்ற (Gender Neutral) உடலமைப்புகளைப் பாடப் புத்தகங்களில் கொண்டு வர வேண்டும். பெண் உடல் என்பது வெறும் இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உரியது என்று ஆண்கள் பள்ளிக்கால  இளமையிலிருந்தே நம்பும் நிலையை மாற்ற வேண்டும்.

பூப்பு நன்னீராட்டு விழாக்களையெல்லாம் விளம்பரப்படுத்தாமல் இருக்கலாம். அந்தச் சின்னப்பெண்ணுக்கு அஜித்தும் விஜய்யும் தலையில் கைவைத்து ஆசியளிக்கும் பேனர்கள் ஊரெல்லாம் வைக்கப்படுகின்றன, அதற்கு முற்றிலும் எதிராக மருந்துக்கடையிலும் மளிகைக் கடையிலும் ரகசியமாகக் கஞ்சா வாங்குவது போல் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டுச் சானிட்டரி நேப்கின்  வாங்குவதும் நடந்துகொண்டிருக்கும், வெளிப்படையாக கடைகளில் தனக்கு வேண்டிய ஃபெமினைன் ஹைஜின் பொருட்களை கேட்டுவாங்கலாம் என்று பெண்களும் நினைக்க வேண்டும். பெண்களை அப்படி நாம் வளர்கக்வும் வேண்டும். அது ரகசியமாக செய்யவேண்டிய திருட்டுச்செயலல்ல. இனப்பெருக்கத்திற்கு எங்கள் வீட்டுப் பெண் தயார் என்பதை பகிரங்கமாக விளம்பரப்படுத்தும் சமூகத்தில், வளர்ந்து வரும் ஆண் சமுதாயத்திற்குப் பெண்களின் மீது எப்படிப்பட்ட நல்ல அபிப்பிராயம் இருக்க முடியும்?

மாதவிலக்கு நாட்களில் பெண்களை வீட்டிற்குள் சேர்க்காமல் தீட்டு என்று சொல்லி வெளியிலோ அல்லது தனி அறையிலோ ஒதுக்கிவைக்கும் குடும்பங்கள், அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான புரிதலைக் கொடுக்கப் போகிறார்கள்? அது பெண் குழந்தைகளுக்கே தங்களின் உடல் சார்ந்த இயற்கை நிகழ்வின் மீது ஒருவிதக் குற்றவுணர்ச்சியையும், தாழ்வுமனப்பான்மையையும் வளர்க்கும். ஆண் குழந்தைகளுக்கோ பெண் உடல் என்பது ஏதோ அசுத்தமானது, ஒதுக்கி வைக்கப்பட வேண்டியது என்ற தவறான பார்வையை விதைக்கும்.

ஆண் குழந்தைகள், பெண்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள், இனப்பெருக்கத்திற்கானவர்கள் ஆண்களுக்கு வேலை செய்துகொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் மட்டுமே என நினைப்பதற்கான எல்லா அடித்தளங்களையும் இச்சமூகம் செய்துகொண்டே இருக்கையில் சிங்கப்பெண் திட்டம் எப்படி வெற்றிகரமாக இயங்க முடியும்?

எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று குழந்தைகளைத் தான் கேட்க வேண்டும். மருத்துவர்களும் பொறியாளர்களும் மட்டுமே நிறைந்த உலகமாய் மாறிப் போவதில்லை என்பதை முட்டாள் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறப்பு வகுப்புகள் நடத்தும் நிறுவனங்களில் அவ்வப்போது அதிரடிச் சோதனை நடத்தி, வகுப்புகளின் காலம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது, வகுப்புகளால் பாதுகாப்பு எப்படி இருக்கிறது எனத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

சமூக ஊடக விளம்பரங்களும் இந்த ஆண் ஆதிக்கச் சமூகத்தைப் பேணிக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு, நெய்யிலோ இதயம் நல்லெண்ணெயிலோ, பிரீத்தி மிக்ஸியிலோ சுவையாகச் சமைக்கும் பெண்கள், உணவு மேஜையில் அமர்ந்திருக்கும் ஆணுக்கும் அவன் குடும்பத்திற்கும் கொண்டு வந்து கொடுக்கும் உணவுகளை அவர்கள் சுவையாகச் சாப்பிட்டுப் பாராட்டுவது போன்ற விளம்பரங்கள்.

வாஷிங் மெஷின், குக்கர், மிக்ஸி, அடுப்பு போன்ற விளம்பரங்களுக்குப் பெண்களும், ரேஸ் கார், பைக் விளம்பரங்களுக்கு ஆண்களும் வருவதைக் குடும்பத்தோடு அமர்ந்து தொடர்ந்து பார்க்கும் இளம் தலைமுறையினர்—சமையல், பரிமாறுவது, துவைப்பது எல்லாம் பெண்களுடையது என்றும், ரேஸ் கார் ஓட்டுவதுதான் ஆண்மை என்றும் நம்புவார்கள்.

அ. வெண்ணிலாவின் ஒரு கவிதை இருக்கிறது: “யார் சொல்லிக் கொடுத்தது அந்தச் சின்னப் பெண்ணுக்கு, வீட்டு வாசலில் இருக்கும் நாளிதழை அம்மாவிடமும், புத்தகத்தை அப்பாவிடமும் கொடுக்க வேண்டும் என்று?”

நான் அன்றாடம் கேட்கும் ஒரு வானொலி விளம்பரம் இருக்கிறது: மாமனார் “அம்மாடி, தினத்தந்தியோ (தினமலரோ) எங்கே?” என்பார். எழுந்துட்டீங்களா மாமா? “இதோ கொண்டு வருகிறேன்” என்பார் மருமகள். உடனே கணவன் “லதா தினத்தந்தி எங்கே?” என்பார். “மாமா படிக்கறாருங்க படிச்சதும் கொண்டு வருகிறேனே” என்பாள் மனைவி. அடுத்து ஒரு சின்னப் பெண் “அம்மா, அப்பா படித்ததும் எனக்குக் கொடுங்கள்” என்பாள்.உடனே தாய் மகிழ்ந்து “எத்தனை தலைமுறையானாலும் தினத்தந்திதான் சிறந்தது” என்பார்.

ஏன் அத்தனை தலைமுறையாயினும் ஆண்கள் நாளிதழைக் கூடத் தாங்களாக எடுத்துக் கொள்ளாமல் பெண்களை ஏவுகிறார்கள்? இதை தினமும் கேட்டு பார்த்துத்தான் வளருகிறது எதிர்கால தலைமுறையொன்று. திரும்பத் திரும்ப ஒரு ஆண் ஆதிக்கச் சமுதாயத்தைக் கட்டமைத்து வளர்த்துவிட்டு, சிங்கப்பெண், புலிப்பெண் திட்டங்களை முன்னெடுப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

பெண்களை கிள்ளுக்கீரையாக நடத்தலாம் பெண்கள் காம இசைக்காக படைக்கப்பட்டவர்கள் பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் பெண்களை எப்படிவேண்டுமானாலும்நடத்தலாம் என்று சமூகம் ஆண்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. இதனால் தான் திரும்பத்திரும்ப பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் சீண்டல்களும் அவமதிப்புகளும் எத்தனை தண்டனை கொடுத்தாலும் நடந்துகொண்டே இருக்கிறது.

ஆண்கள் தேநீர் தயாரித்துக் களைத்து வரும் பெண்களுக்குக் கொடுக்கும் ஒரு தேநீர் விளம்பரம் இருக்கிறதா? நல்ல நெய் ஊற்றித் தோசை சுட்டு மனைவிக்குக் கணவன் கொண்டு வந்து தரும் ஒரு விளம்பரமாவது இருக்கிறதா? பெண்கள் கார் ஓட்டிக்கொண்டு போகும் ஒரு கார் விளம்பரம் தான் இருக்கிறதா? ஏன் இல்லை?

எல்லா நிறுவனங்களிலும் சிங்கப்பெண் புகார் பெட்டி வைக்கப்பட்டு, அதில் வரும் புகார்களை சிங்கப்பெண் அதிகாரிகள், காவலர்களே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் திறந்து பார்த்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவற்றைஎல்லாம் செய்தால்தான் இந்தத் திட்டம் உண்மையில் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான பெயரளவுத் திட்டங்களைப் போல இதுவும் ஆகிவிடும். 

இந்த திட்டத்தில் காவலர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், பெற்றோர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள், மாணவப்பிரதிநிதிகள், உயர்கல்விதுறை அமைச்சகத்தினர், மேடைப் பேச்சாளர்கள் இன்ஸ்டா பக்கத்தை உருவாக்குபவர்கள் என பலதரப்பினரும் இருக்கவேண்டும்

சிங்கப்பெண் காவலர்களுக்கும் பணியில் ஈடுபடுவதற்கு முன்பே உளவியல் ஆலோசனைகளும் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

பொள்ளாச்சி வீட்டில் இருக்கையில், அருகில் பெண்களுக்கென்று பிரத்யேகக் காவல் நிலையம் இருந்தது. அதில் வேலை பார்த்த தலைமைக்காவலர் எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர். அவர் மிகக் கடுமையான அணுகுமுறைகளைக் கொண்டிருந்தவர் என்பதால், அங்கு விசாரணைக்கு வரும் குடும்ப வன்முறை வழக்குகளில் ஆண்களுக்குத் தண்டனை நிச்சயமாக இருந்தது.

வேலைக்குப் போகாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து மனைவியைச் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்த அந்தத் தலைமைக் காவலரின் கணவர், ஒருமுறை சண்டையில் அக்காவலரின் கையை அடித்து உடைத்துவிட்டார். பல மாதங்கள் கட்டுப்போட்டுக் கொண்டு காவல் நிலையத்திற்கு அவர் வந்துகொண்டிருந்தார்.

சிங்கப்பெண்களுக்கு உண்மையில் தாங்கள் எதைப் பாதுகாக்கவிருக்கிறோம், தங்களுக்குத் தங்கள் வீடுகளிலும் இணையரிடமும் பாதுகாப்பு இருக்கிறதா, சமூகத்தில் தங்களின் இடம் என்ன என்ற புரிதலும் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கப்பெண் திட்டத்தை ஆண்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்ளும் பெண்களைக் குறித்த கவனமும் அவர்களுக்கு இருக்க வேண்டும்.

மகளிர்!

காலையிலேயே பெருங்கூச்சல் கேட்டது. சமையலறை ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரியும் தோட்டத்தின் உரிமையாளரின் காட்டுச்சாலை, வடக்கில் நம் வீட்டுச் சமையலறை ஜன்னலைப் பார்த்துத்தான் இருந்தது. ராசுக்கவுண்டர் பெரிதாகச் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.

‘’.. போடு, கீழே போடு,  இருக்கறது பூரா நீ வழிச்சுட்டுப் போயிட்டா நான் ஒரத்துக்கு என்ன பண்ணறது? அதுவும் கேட்கறதுமில்ல; என்னமோ கொப்பனூட்டிலிருந்து எடுக்கறவளாட்டம் போடு கீழே ..’’

முருங்கை இலைகளை பருப்பில் போட்டதும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஜன்னலில் எட்டிப்பார்த்தேன். ராசுவின் எதிரில்  கையில் அள்ளிய சாணியுடன் மாரியம்மாள் தலை குனிந்து நின்றிருந்தாள்.  விளிம்பு நிலை மக்களில் ஒருத்தி மாரியம்மாள். சனி ஞாயிறுகளில் அடுத்த நிறுத்தத்தில் இருக்கும் ஏராளமான கடைகளின் வாசலில் ஒன்றிரண்டில் சாணி போட்டு வழித்துவிட்டால் நூறோ இருநூறோ கிடைக்கும். அவ்வப்போது இப்படி அருகிலிருக்கும் தோப்புகளில் சாணியை பலர் இப்படி எடுத்துக்கொள்வார்கள்.  அது ஒரு உபரி வருமானம். 

மாரியம்மாள் இன்று ராசுக்கவுண்டரிடம் அதற்குத்தான் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறாள். 

ராசுக்கவுண்டர் தனி ஆள். ஒரு வகையில் எனக்கு உறவினரும் கூட. அவரின் நங்கையின் வகையில் ஒரு பெண்தான் என் அண்ணன் ஒருவர் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார். ஆனால் நான் ராசுவிடன் பேசியது கூட இல்லை. ஒரு பழைய சைக்கிளில் நான் கல்லூரிக்குச் செல்கையில் என்னை கடந்து அவர் பால் ஊற்றச் செல்கையில் அவ்வபோது பார்த்திருக்கிறேன். ஏனோ அவர் திருமணம் செய்துகொள்ளாமல் அந்த கோடிக்கணக்கான பெறுமதி உள்ள வீட்டில் ஓலைச்சாலையில் வசிக்கிறார். மாடும் கன்றும் எருமையும் ஆடும் கோழியும் தேங்காயும் மாங்காயுமாகச் செழிப்பான தோட்டம் அது.

சாணி அள்ளியதற்கு கொஞ்சம் அதிகமாகவே திட்டு , சத்தமும் அதிகமென்பதால் அக்கம்பக்கத்து ஆட்கள் எட்டிப் பார்த்தார்கள். ராசு மேலும் மகிழ்ந்து குரலுயர்த்தி, “எடுபட்ட சிறுக்கி, இனி தோட்டத்துப் பக்கம் வந்தீன்னா காலை முறிச்சுப்புடுவேன், போடி!” என்று கத்தினார்.

மாரியம்மாள் ஒதுங்கி ஓரமாகச் சென்று சாணியைக் கீழே போட்டுவிட்டுத் திரும்பி நடந்தாள். பின்னால் “சிறுக்கி மக” என்ற ராசுவின் குரல் எனக்கும் கேட்டது.

கோவிட் தொற்று முடிந்து கல்லூரி திறந்து சில மாதங்களில் ஒருநாள் ஏற்காட்டுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. கல்லூரியிலிருந்தே காலை 5.30-க்குப் பேருந்து புறப்படுவதாக ஏற்பாடு. நான் வேடசந்தூரிலிருந்து புறப்படும் 5 மணி  முதல்  பேருந்தைப் பிடிக்க கருக்கிருட்டில் டார்ச் அடித்தபடி வெளியே வந்தேன். 200 அடிகள் பேருந்து நிறுத்தத்திற்கு நடக்க வேண்டும். 

தாத்தாரப்புச்சி மரத்திற்கருகில் ஏதோ ஒரு அசைவு, அப்படியே திடுக்கிட்டு நின்று விட்டேன். திரும்பி வீட்டுக்குச் செல்வதும் முடியாது. முதுகுக்குப் பின்னால் அந்த அசைவு மேலும் பயமுறுத்தும். அந்நேரத்துக்கு எந்த நடமாட்டமும் இல்லை, மையச் சாலையில் ஒரே ஒரு பைக் வெளிச்சமாக அகன்று போனதைத் தவிர.

துணிச்சலை வரவழைத்துக்கொண்டு “யாரு அங்கே?” என்றேன் சத்தமாக.

தலையில் முக்காடிட்டுக்கொண்டிருந்த மாரியம்மாள் மெல்ல வெளியே வந்து என்னைச் சாதிப் பெயர் சொல்லி அழைத்து – “ச்சி நாந்தானுங்க” என்றாள்.

ஆச்சரியமாக இருந்தது, அந்த இருட்டில் அவள் அங்கே ஒளிந்திருந்தது. “என்ன மாரியம்மா, இந்நேரத்துல இங்கே?” என்றேன்.

அவள் சற்று நகர்ந்து முன்னே வந்து முக்காட்டை எடுத்துவிட்டாள். பொழுது துலங்கிக்கொண்டிருக்கையில், அவள் முகம்  கொஞ்சமாகத் தெரிந்தது. தலையில் நெற்றியைச் சுற்றிப் போடப்பட்டிருந்த வெள்ளைநிறக் கட்டில் ரத்தம் ஊறிக்கசிந்திருந்தது.

சில நாட்களுக்கு முன் தான் அவள் புருஷன் மாரி அவள் மீது சந்தேகப்பட்டு பாட்டிலில் ஓங்கி தலையில் அடித்த ரத்தப் பெருக்கோடு அப்பா வீட்டிற்குப் பஞ்சாயத்துக்கு வந்தார்கள். சமாதானம் செய்து அம்பரம்பாளையம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தபோது போட்ட கட்டுதான் அது.

மாரியம்மாள் அந்தச் சமூகத்திலேயே கொஞ்சம் வெளுப்பும் லட்சணமுமாக அழகி. மாரி வழக்கமான புருஷன்மார்களைப் போலத்தான், ஊதாரி, குடிகாரன். ஆனால் மாரியம்மாள் மீது எப்போதும் சந்தேகம். இரண்டு பிள்ளைகள் வேறு.

மாரியம்மாளிடம் “இங்கே வா, என்ன இந்நேரத்தில் இங்கே இருக்கே? என்ன?” என்றேன்.

“மன்னிச்சுருங்கம்மா” என்றாள். எனக்குப் புரியாமல் “என்ன சொல்லறே?” என்றேன்.

“ராசுக்கவுண்டர் சாலைக்குப் போயிட்டு வர்றேனுங்க. நீங்க கேட்டுக்கதவு திறக்கறதைப் பார்த்துட்டு இங்கே ஒளிஞ்சுகிட்டனுங்க” என்றாள்.

திகைப்பாய் இருந்தது. கீழ் சாதி மேல் சாதி எல்லாம் இந்தச்சுரண்டலுக்கு இல்லை போலிருக்கிறது. “என்ன மாரிம்மா? முதல்லயே வீட்டில் உனக்குப் பிரச்சனை, இப்படிப் பண்ணலாமா? மாரிக்குத் தெரிஞ்சா இன்னும் சண்டை ஜாஸ்தியாகுமில்ல?” என்றேன்.

“என்ன பண்ணறதுங்க அவரு செலவுக்கு காசே தரதில்லை, கவுண்டர், அப்பப்போ இப்படி கூப்பிடுவாருங்க, வெள்ளன புள்ளைங்க தூங்கையில போனா, கவுண்டரு கைச்செலவுக்கு  காசு கொடுப்பாருங்க. அதுங்க எதுனா ஆசையாச் சாப்பிடக் கேட்டா வாங்கிக்கொடுக்கலாம்னுதாங்க” என்றாள்.

’’..சரி வீட்டுக்குபோ யாராச்சும் பார்ப்பாங்க..’’ என்று சொல்லிவிட்டு விலகி பஸ் ஸ்டாப்பை நோக்கி  நடந்தேன். அன்று முழுவதும் மாரியம்மாளின் கீழுதட்டில்  ரத்தம் கசிந்த  காயம் நினைவிலேயே  இருந்தது.

அந்த மாரியம்மாள் தான் அதே ராசுக்கவுண்டரிடம் இன்று திட்டுவாங்குகிறாள் இருட்டில் நடப்பது யாருக்கும் தெரியாதுதான் என்றாலும் ஊரறிய  இப்படி வேஷம்போட்டால் ,சந்தேகமும் வராதல்லவா?

அங்கிருந்து வீட்டை  நோக்கி வந்த மாரியம்மாள் பின்  வாசலில் நின்றிருந்த என்னைப்பார்த்து’’.. லீவுங்களாங்க –ச்சி?,,’’ என்றாள் . ’’..ஆமா மாரிம்மா என்றேன்..’’சிரித்தபடி அவளது மாட்டை இழுத்துக்கொண்டு போனாள். நெற்றியில் மாரி  பாட்டிலில் அடித்த  காயம் தழும்பாகி இருந்தது.

உள்ளே வந்தேன். அலைபேசியில் ஏராளமான மகளிர் தின வாழ்த்துக்கள் வந்திருந்தது. எல்லோருக்கும் ’’ஹேப்பி வுமன்ஸ் டே ’’என்று பதில் சொல்ல வேண்டும்.

வலையில் ஆக்கிய மொமெண்ட்!

இன்று இன்ஸ்டாவில் கும்ப்ளாங்கி நைட்ஸ் -ன் சில காட்சிகளை மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். அது ஒரு எவர்கிரீன் படமாகிவிட்டிருக்கிறது கேரளத்திலும் என்னைபோல அரைமலையாளிகளுக்கும்.

இனி கேரளா இல்லை தெரியும் தானே? இந்த வாரத்திலிருந்து கேரளமானு.

அன்னா பென், கன்னக்குழியழகன் ஷான் நிகாமிடம் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளுக்கென வீண்டும் ஒருக்கில் மீன் வலையை வீசச்சொல்லிக் கேட்டுக்கொள்வதும், அநாயசமாக வலை வீசும் ஷான், அகலக்கண்ணி அன்னாவின் காதல் வலையில் சிக்கிக்கொள்ளும் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னொரு முறை படத்தைப் பார்க்கவேண்டும் நேரம் கிடைக்கையில். பசுமை கண்ணை நிறைக்கிறது காட்சிக்கு காட்சி.

இன்னொரு துண்டு ரீல்ஸில் ஷெளபின் ஷாகீரிடம், ஷான் தனது காதலை லேசாகச்சொல்லி, காதலியின் அக்காள் கணவனாகிய ஃபகத்திடன் வந்து பேசச் சொல்லிக்கேட்கும் காட்சியைப்பார்த்தேன். உண்மையிலேயே ஷெளபின் அசாத்தியமான கலைஞன். அதே காட்சியை உலகின் வேறெந்த நடிகரும் அத்தனை சரியாக சிறப்பாக நடிக்கவெ முடியாது. சாம்பவியுடன் ஷாகிரின் மகள்(மனைவியின் மகள்) படிக்கிறாள் என்று எனக்கு இன்று பெருமையாக இருந்ததென்றால் பாருங்களேன். நான் அவரின் ரசிகை (டென்ஸைல் வாஷிங்டன், இட்ரிஸ் எல்பா, பார்த்திபன் மற்றும் டாம் க்ரூஸ் இவர்களுடன்).

சட்டையிலாமல் இடிந்த திண்ணையில் படுத்துக்கொண்டு தேங்காயை கரண்டியபடி, அவ்வப்போது கடித்துக்கொள்ள,வெற்று மார்பில் துண்டு வெல்லத்தை வைத்துக்கொண்டு நடிக்க தமிழில் யாராவது இருக்கிறார்களா என்ன? அப்படி ஒரு காட்சியை ஒரு நடிகரிடம் சொல்லும் துணிவு கொண்ட இயக்குநர்களோ உதவி இயக்குநர்களோ இருப்பார்களா முதலில்?

அண்ணன் என்று கூப்பிடச்சொல்லி, ஷான் அப்படிக் கூப்பிடுகையில் செளபினின் நடிப்பு அபாரம் அபாரம். இன்று நினைத்துப் பாரக்கையில் கும்பளாங்கி நைட்ஸுக்கு நான் எழுதிய திரைவிமர்சனம் அசட்டுத்தனமானது என்று தோன்றுகிறது ஆனால் படம் பார்த்ததும் உணர்வெழுச்சியில் அப்போதே எழுதியது என்பதால் மன்னிக்கலாம்.

மலையின் மறு சரிவில் இறங்குதல்!

தங்களுக்குக் கல்யாணம் ஆக வேண்டுமென்பதற்காகச் சொந்தச் சகோதரியின் 16 நாட்களேயான பெண் குழந்தையை கால்களால் மிதித்தே கொன்ற மூன்று சகோதரிகளைக் குறித்து நவம்பரில் செய்திகள் தொடர்ந்து வந்தன. எனக்கு அதற்குள் சென்று மேலும் அறிந்துகொள்ளும் துணிவில்லை.  எனினும்  இதற்கிணையான அல்லது இதைக்காட்டிலும் வன்முறையானவற்றை செய்தவர்களை இந்த வருடமும் அறிந்துகொண்டேன்.

துரோகங்களை அதிகம் மிக அண்மையில் சந்தித்தவளாதலால் கழுத்தறுபடுகையில் வெளியாகும் முதல் குருதிச்சொட்டின் பச்சை வீச்சத்தை என்னால்  உடனே தெரிந்துகொள்ளமுடியும். புதிதாக வருந்த ஏதுமில்லை என்றாலும் அதே துரோகம் மகன்களுக்கும் நடப்பதுதான் துயரளிக்கிறது. இந்த உலகில்தான் அவர்களை நான் விட்டுச்செல்லவிருக்கிறேன் என்பதும் பெருந்துயரளிக்கிறது. எதுவுமே மாறவில்லை. சுழன்று சுழன்று வந்துகொண்டே இருக்கிறது. எனக்கு நிகழ்ந்ததே மகன்களுக்கும் நிகழ்கிறது.

தருண் சிறகு கொண்டவன் அவனுக்கு உலகே வீடு என்பதால் காயங்களை அவன் பெரிதாக கவனிப்பதில்லை, சொல்லப்போனால் புதிய காயங்களுக்காக மனதை திறந்து தயாராக வைத்துக்கொள்பவன் அவன். ஆனால் சரண் வேர்கொண்டவன் அவனுக்கு குடும்பமும் வீடும்தான் உலகு. மேலும் மனிதர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டவன் அவன். அவனால் காயங்களிலிருந்து விரைவில் விடுபடமுடிவதில்லை. எப்போதும் மானசீகமாக அவன் தலைகோதும் கரமொன்று எனக்கிருக்கிறது.   ஆழமான அந்தத் தழும்புகளை அவ்வப்போது  நிரடிப்பார்த்துக் புன்னகைத்துக் கொள்ளும் மனவலிமையுடன் அவன் முற்றிலுமாக மீண்டு வரவேண்டும்  என்பதுதான் இப்போது என் ஒரே விருப்பமும் வேண்டுதலுமாக இருக்கிறது. தெய்வங்களே காத்துக்கொள்க!

வழக்கத்தைக் காட்டிலும் தீவிரமான வருடமிது. அதிகம் பயணித்த, அதிகம் வாசித்த, அதிகம் எழுதிய, அதிகம் கற்றுக்கொண்ட வருடமும் கூட. 

அதிகம் மோசமான அனுபவங்களிலிருந்து  ஆகச்சிறந்த பாடங்களைக் கற்றுக்கொண்ட வருடமும் கூட. இன்னும் அத்தகைய பாடங்களின் பொருட்டு ஆசிரியர்கள் எனக்கெதிரே  நீண்ட வரிசையில் நிற்கிறார்கள் என்றும் அறிந்திருக்கிறேன். 

மிக முக்கியமாக நான் மகிழ்ந்திருந்த வருடமும் இதுதான். தன்னறம் வெளியீடாக வந்த இரு நூல்களுக்கு ஜெ எழுதிய முன்னுரையைக்காட்டிலும் ஆகப்பெரிய அங்கீகாரம் இனி வேறு ஏதுமில்லை. நிறைய மேடை உரைகள் நிறைய நிறைய அங்கீகாரங்கள் நிறைய விருதுகள் புதிய தோழமைகள், மகிழ்வளிக்கும் சில விலகல்கள் என கலவையான வருடமிதுவும்.   

முத்தச்சிறுகிளை நூலுக்காக செந்தமிழ்க்கோதை விருது சிவகாசியில் அளிக்கப்பட்டது, இந்திய மருத்துவக்கழகம் ‘’women of wonder’’ விருதளித்தார்கள். டிசம்பர் இறுதியில் உலகத்தமிழ் பண்பாட்டுக்கழகத்தின் சிறப்பு விருதும் 50,000 காசோலையும் அளிக்கப்பட்டது. அந்தத்தேதியில் நான் வெள்ளிமலையில் (மூன்றாவது வகுப்பு இது) இருந்ததால் தருண் சென்று விருதை வாங்கிக்கொண்டான். அதே நாள் நான் திருமணத்திற்கு முன்பு இந்தத் துறையில் பணியாற்றிய  போது படித்த மாணவர்கள் எனக்கு outstanding educator award  அளித்தார்கள். அந்த நிகழ்விலும் கலந்துகொள்ள முடியாததால் அதையும் நான் திரும்ப வந்து பெற்றுக்கொண்டேன். 

வேடிக்கையாக ஒன்று நிகழ்ந்தது. திருப்பூரின் சக்தி விருது எனக்களிக்கப்பட்டிருப்பதாக அழைப்பிதழ் வந்தது. பலர் அவர்களுக்கும் செய்தி தெரிந்து வாழ்த்தும் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தபட்டவர்கள் என்னை இன்று வரையிலும் அழைத்து முறையாக விருது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. விருதுபெறுபவர்கள் விழா நடக்குமிடத்தை அழைப்பிதழிலிருந்து தெரிந்து கொண்டு நேரில் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அந்த விருதை நான் பெற்றுக்கொள்ளவில்லை.

சரண் கல்லூரிக்கு வந்து ethics of AI என்று ஒரு உரையாற்றினான். அவனை உண்மையில் நான் என் கல்லூரிக்கு வரவேண்டாம் என்றுதான் சொன்னேன் ஆனால் அழைப்பு வந்தபோது ’’இல்லம்மா நான் வரேன் மாணவர்களுக்காக’’ என்று சொல்லி வந்தான். சிறப்பான உரை, அரங்கில் முன் வரிசையில் அமர்ந்து பெருமிதமாக கவனித்துக்கொண்டிருந்தேன். 

இறுதித்தளையொன்றிலிருந்தும் விடுபட்டேன். மிகுந்த தாமதமாகிவிட்டதுதான் இருந்தாலும் என் தரப்பில் தாமதிக்கச் சில காரணங்கள் வலுவாக இருந்தன.  என்னை இந்த வெர்ஷனில் ஏற்றுக்கொள்ள பலருக்கு தயக்கமிருக்கிறது அதைக்குறித்து எனக்கெந்த ஆட்சேபணையும் இல்லை. இதுதான் நான் இப்படித்தான் இனி நான் இருக்கப்போகிறேன். ’’அறிக இவ்வுலகு இனி நான்   தனியள் தன்னந்தனியள்’’ என்று ஏதேனும் ஒரு குன்றின் மீதிருந்து கூவலாமென்றிருக்கிறது. என் இந்த வெர்ஷனை எதிர்கொள்ளச் சங்கடப்படுபவர்கள் தள்ளிநில்லுங்கள் அல்லது விலகிச்செல்லுங்கள். 

வாழ்வு மொத்தத்தையும் பொருளற்ற சடங்குகளுக்காகவும் வற்புறுத்திப் போர்த்தப்பட்ட புனிதப்போர்வைகளுக்காகவும் என்னால் பலியிடமுடியாது .என் ஆத்தா, அம்மா, அத்தைகள், சித்திகள் அண்ணிகளைப் போல ஒருகூரைக்குக்கீழ் கடித்துக்குதறப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்து சமூகத்தின் முன்னால் பட்டுப்புடவையும் கூந்தலில் பூச்சரமும் கழுத்தில் காதில் நகைகளும் முகத்தில் வரவழைத்துக்கொண்ட புன்னகையுமாய் வாழும் நாடகத்தில் எனக்கு விருப்பமில்லை. அப்படியொரு முகமூடியை நான் இதுவரை அணிந்து கொண்டதுமில்லை. நான் அன்னை மட்டுமே என்று பெருமிதமாகத்தான் என்னை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேன். 

மேலும் மணவுறவின் பிணக்குகள் தீர்க்கமுடியாமலாகும் போது வெளியேறி மூச்சுவிட்டுக்கொண்டு மகிழ்ந்துவாழலாம் என்பதற்கு பின்வருங்காலத்துப் பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் நான் இருக்க விரும்புகிறேன்.

எனக்கு என் குடும்பத்தில்  அப்படிச் சொல்லிக்கொள்ள யாருமில்லை. கழுத்தில் கயிறு இறுக்கிய அடையாளத்துடன் செத்துப்போய் சடலமாகக் கிடந்த பெண்கள் இருக்கிறார்கள், அம்மாவைப்போல் கடைசிநாள் வரை வதையனுபவித்து கண்ணீருடன் மின்மயானம் சென்றவர்கள் இருக்கிறார்கள், மனதில் ஒருவரை மறக்கவே முடியாமல் கணம் கணமாக நினைத்துகொண்டு வேறொருவருடன் வாழ்ந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு செத்துப்போனவர்கள் இருக்கிறார்கள், படிப்பும் வேலையும் வெறும் ஏட்டுச்சுரைக்காயாகி இளமை, அழகு, பொருளாதாரம், ஆற்றல், ஓய்வு நேரம் என அத்தனையும் சுரண்டும் ஆணை முற்றிலும் சார்ந்து இருப்பதே குடும்ப தர்மம் என்னும் முட்டாள்தனத்தில் மூழ்கி மடிந்தவர்களும், வாழ்பவர்களுமான வரலாறு கொண்டது என் குடும்பம். நான் அவர்களில் ஒருத்தி அல்ல அல்லவே அல்ல . 

பாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்களல்ல, மேலும் பல மடங்கு வலிமையானவர்களும்தான். என் சுதந்திரம் என்பது வேலி சாடுவதல்ல எதுவரை போகலாம் என்றறிந்திருக்கிறேன், எத்தனை உயரம் பறக்கமுடியுமோ அத்தனைக்கு  பறக்கவிருக்கும் சுதந்திரம் இது. எனக்கு பிடித்தமானவைகளை செய்தேன், செய்கிறேன் இனியும் செய்யவிருக்கிறேன்.

என்னவானாலும் மகன்களின்  கைகள் என்னை இறுகப்பற்றிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். நான் அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது. சரண் இந்தியா வந்திருக்கிறான் இந்தியாவிலேயே இனி இருப்பதாகவும் இருக்கிறான் மும்பையில் பணியாற்றவிருக்கிறான். தருண் கடைசி செமஸ்டரில் இருக்கிறான், அவனுக்கும் வேலை கிடைத்திருக்கிறது காலூன்றி விட்டார்கள் இருவரும்.

முன்பொருமுறை தருணை தோளிலும் சரணை கையிலும் பிடித்துக்கொண்டு அம்பராம்பாளையம் செல்லும் பேருந்தில் நின்றுகொண்டு பயணிக்கையில்  முழுப் பைத்தியக்காரனொருவன் (அப்படி தனித்து யாரையும் அடையாளப்படுத்த முடியாதென்றாலும்)  ஒரு பெரிய பாறாங்கல்லை வேகமாகச்சென்று கொண்டிருந்த பேருந்தின் முன்னால் போட்டுவிட்டடான். திடீரென பிரேக் பிடித்து நின்ற பேருந்திலிருந்து வாசலுக்கருகில் நின்றிருந்த நானும் மகன்களும் தூக்கி எறியப்பட்டோம். பேருந்தின் படிக்கட்டுக்கு கீழே என் பாதி உடலிருந்தது ஆனாலும் பேருந்துக்குள்ளே இருந்த சரணையும் தருணையும் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டிருந்தேன்.  இனியும் இப்படி பாறாங்கற்களுடன் பைத்தியக்காரர்கள் குறுக்கே வருவார்களென்னும் கவனம் எனக்கும் மகன்களுக்குமிருக்கிறது. அவர்களின் நலனைத்தவிர வேறு எதுவுமே இவ்வுலகில் எனக்கு பொருட்டல்ல அல்லவே அல்ல.

அவர்களைப் புரிந்துகொள்ளாதவர்கள், அவர்களை ஏமாற்றுபவர்கள்  அவர்களைச் சுரண்டுபவர்கள் அவர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு என் வாழ்விலும் இடமில்லை. சட்டையில் படியும் புழுதியைத் தட்டி உதறுவதுபோல எளிதாக நான் அவர்களை ஒரு சிறு தட்டலில்  உதறிவிடுவேன்.

மனிதர்கள் குறைநிறைகளுடன் எனக்கும் தேவையாக இருக்கிறார்கள் தான். இப்படி பலரும் என் வாழ்வில் தோழமையுடன் இருக்கிறார்கள், எனினும் ஒரு கோடு இருக்கிறது எனக்கு  அந்தக்கோட்டையும் தாண்டிச்செல்பவர்களுக்கு ஒருபோதும் என் வாழ்வில் இடமில்லை.

வெட்கப்படும் விஷயங்களையும் செய்திருக்கிறேன் இந்த வருடம். எங்களது SR (service register)-ல் பணிக்காலத்து தவறுகளை கரும்புள்ளியில் குறிப்பிடும் வழக்கமிருக்கிறது. 

நான் பொதுவாக குரல் உயர்த்துவதில்லை எந்த சிக்கலான காலத்திலும் அப்படிச்செய்ததே இல்லை வருத்தத்துடன், கோபத்துடன் விலகி இருக்கிறேன் சொல்லிக்கொண்டும் சொல்லிக்கொள்ளாமல். ஒருபோதும் குரலுயர்த்திக் கத்தியதில்லை எனினும் கல்லூரியில் கடந்த செமஸ்டரில் ஒரு முக்கியமான மீட்டிங்கில்  தலைமைப் பொறுப்பிலிருந்த ஒருவர் சிக்கலை எதிர்கொள்ள முடியாத போது தப்பிக்கும் விதமாக வழக்கமாகக் கத்துவதைப் போலத்தான் என்னிடமும் கத்தினார் என்றாலும் நான் எப்படியோ பொறுமையிழந்து எல்லாக்கட்டுக்களும் தளர்ந்து பதிலுக்கு கத்திவிட்டேன். குற்றவுணர்வு கொள்கிறேன் இப்போதும் அதன்பொருட்டு. போர்ட் ரூமுக்கு வெளியே காத்திருந்த ஆங்கிலத்துறை ராதா ’’…அக்கா நீயாக்கா ஏங்க்கா…’’ என்றாள் அந்தக்கேள்வி நானே என்னைக் கேட்டுக்கொண்டதுதான் என்பதால் பதிலளிக்கவில்லை.shame on me

அதுபோலவே வீட்டில் ஒரு போன் அழைப்பு எனக்கு உண்டாக்கிய குமுறல் அடங்காமல் ’’..மீ போனை எடுக்காதே..’’ என்று தருண் சொல்லச்சொல்லவே அந்தக் கணத்தின் உணர்வுநிலையில் அடித்துச்செல்லப்பட்டு போனை எடுத்து நானும் மறுதரப்புக்கு இணையாகவே பேசிவிட்டேன். அப்படிப் பேசியது வருத்தமென்றால் அதை தருணும் கேட்டது மேலும் வருத்தம் இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்த வருடத்தில் எனக்கு நானே வைத்துக்கொண்ட கரும்புள்ளிகள் தான்.

வழக்கம் போல ஆர்வமாகவும் விரிவாகவும் சமையல் செய்கிறேன் சாப்பிடுகிறேன். புதிய புதிய சமையல் செய்முறைகளையும் கற்றுக்கொண்டு முயற்சிக்கிறேன். 2025-ல் வீட்டுக்கு வெளியே சாப்பிட்டதில் சொல்லிக்கொள்ளும் படி சிறப்பான உணவுகள் ஏதுமில்லை. மிக நெருங்கிய நண்பர்களுடன் சாப்பிட்ட நினைவுகளை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன் ஆனாலும் சிறப்பான உணவு என்றால் தீபாவளிக்கு தருண் சமைத்துக் கொடுத்ததுதான்.  அன்று அழுக்குசுவாமி கோயிலுக்குபோய் விட்டு வீடு திரும்பவே மதியம் 2 மணி ஆனது அதன் பின்னர் தருண்  ஆட்டுக்கறி வறுவலும் சாதமும் உப்புப்பருப்பும் சமைத்து சாப்பிட 3,30 ஆனது நான் 1 மணிக்கப்புறமாக  சாப்பிட்டதே இல்லை எப்போதுமே பசி தாங்காதவளான நான் அன்று மிகத்தாமதமாக தருணின் அந்தச் சமையலை ரசித்துச்சாப்பிட்டேன்  இந்த வருடத்திற்கானது மட்டுமல்ல எப்போதைக்குமான மிகச்சிறப்பான அசைவ உணவு அதுதான்.

சாப்பிடுகையில் தருணைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் அந்தப் பெண்ணைக் குறித்த பொறாமை எழுந்துவந்து தழலாடியதை தவிர்க்கவே முடியவில்லை.

// தேவி கைகழுவின தண்ணியில் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டாக்கூட ரசம்னு ஊத்திச்சாப்பிடலாம்//போன்ற என்னைக்குறித்த அதிபுனைவுகளையெல்லாம் காற்றில்  ஊதிப்பறக்க விட்டுவிட்டான்.

விரிவாகச் சமைத்து விரிவாக பேக் செய்து கல்லூரிக்கு கொண்டு செல்கிறேன்.  பலர் என்னிடம் எதிர்பார்க்கும் ’’…ஒருத்திக்கு என்னன்னு தனியா செய்யறது எலுமிச்சைசாதம், புளிசாதம் செஞ்சு கொண்டு வந்தேன்..’’ என்று சொல்லும் தியாகத்திருவுருத் தாயெல்லாம் நானில்லை எனக்குப் பிடித்தவற்றை செய்து சாப்பிடுகிறேன்.

உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறேன். புதிதாக ஜப்பானிய நடைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறேன், உண்மையிலேயே பயனுள்ளதுதான். (தகவல் தேவைப்படுபவர்கள் தனியே கேட்டுக்கொள்ளவும்) அதிகாலையில் நடக்கிறேன் நானிருக்கும் தெருவில் 5 வீடுகளில் 3-ல் தான் புழக்கம், அதில் நான் சமையலை முடித்துவிட்டு,நடப்பேன் காமாட்சியின் வீட்டில் மட்டும் பருப்பும் காயும் புளியும் வேகும், சோறு வடிக்கும் மணமும் அடிக்கும்.  சமயங்களில் வீட்டிலிருக்கும் மகிழமோ பாரிஜாதமோ ட்ரசீனாவோ செண்பகமோ மணக்கும். இளையராஜா, யுவன், சங்கர் மகாதேவன், ரஹ்மான் அல்லது வித்யாசாகர் என்று குறிப்பிட்ட யாரோ ஒருவரின் பாடல்களைக் கேட்டுக்கொண்டு நடப்பேன்.  

வெள்ளிக்கிழமைதான் விளக்கேற்றனும், வியாழக்கிழமைகளில் மட்டும் சாய்பாபா, செவ்வாயில் முருகன் என்றெல்லாம் எனக்கு நாள் கால பேதமில்லை எல்லா நாளும் விளக்கேற்றுவேன், கூட்டமில்லாத நாட்களில் தோன்றினால் கோவிலுக்குப் போவேன் எப்போதும் வீட்டைத்துடைத்து சுத்தமாக அழகாக உருளிகளில் மலர்களிட்டு  அழகாக வைத்துக்கொள்வேன்,

வழக்கம்போல காலை 5-லிருந்து இரவு 11 வரை ஒருநாளுக்கான நேரமாக இருக்கிறது எனக்கு.  எழுந்ததும் ஜெ தளத்தை முழுக்க வாசிக்கிறேன். வெண்முரசை மீள மீள வாசிக்கிறேன் நேரம் கிடைக்கையிலெல்லாம்.

இந்த  வருடத்திய disaster என்றால் முதல் தளம் வீடு கட்டநினைத்து, அதை செயல்படுத்தியதுதான். மகன்கள் சிறுவர்களாக இருக்கையில் அப்போதிருந்த பொருளாதார மற்றும் வங்கிக்கடன் வாங்கும் வசதிக்கேற்ப  சமையலறை உட்பட 4 அறைகள் கொண்ட சிறிய வீட்டைக் கட்டினேன். இப்போது ஊரிலிருந்து மகன்கள் வந்தால் சூட்கேஸ் வைத்தாலே வீடு நிறைந்துவிடுகிறது இனி கல்யாணம் காட்சி என்று சொந்தங்கள் அதிகரிக்கக்கூடும் எனவே மேல்தளம் எடுக்கலாம் என நினைத்தேன்.

பலரை சந்தித்துப் பேசியும், நம்பிக்கையூட்டும் பொறியாளர்கள் அமையவில்லை எனவே தள்ளித்தள்ளிப் போனது. சரண் ஜெர்மனியில் இருந்து சில நாட்கள் விடுமுறையில் வந்திருந்து வீடு கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் போட்டுவிட்டு செல்லவிருந்தான் எனவே தருணின் நண்பன் இன்னொரு தருண் கட்டுமானப் பொறியாளர், அவன் பரிந்துரைத்த இரு இளைஞர்களை முழுமையாக நம்பி கட்டிட வேலையை துவங்கினேன். 

சமீபத்தில் எனக்கேற்பட்ட ஆகப்பெரிய துயரம் வருத்தம் சங்கடம் எல்லாம் அந்த இளைஞர்களை நம்பியதுதான் என்றாகிவிட்டது. அவர்களுக்கு வழக்கமாகிவிட்ட துவக்கத்தில் நம்பிக்கையூட்டும் விதமாக நடந்துகொண்டு போகப்போக தேய்வதை இவர்களும் நடைமுறைப்படுத்தினார்கள். வீட்டு வேலைகளை நிறுத்தவும் முடியாமல் ஏகப்பட்ட பணத்தை முடக்கி, தொடரவும் முடியாமல் பெரும் சங்கடமாகியது.

தனியாக வீடு கட்டுவது பெரும் சவாலென்றால் எந்தத்திறமையும் பொறுப்புமில்லாத முடிந்தவரை ஏமாற்றுபவர்களிடம் வேலையை ஒப்படைத்தால் அது எப்படிப்பட்ட சவாலாக இருக்கும்? 

மேல்வீட்டு பணியின் அதிர்வுகளை சமாளிக்க கீழ்வீடு முழுக்க பெரிய தூண்கள் நிறுவப்பட்டிருந்தன எனவே எனக்கு நடமாட்டம்  மிகச்சிக்கலானது பணியாளர்கள் வீட்டுக்கெதிரே குடிசைபோட்டு தங்கி இருந்தார்கள் மாலைவேளைகளில்  துவைக்கும் கல்லருகே அவர்கள்  குளிப்பது வழக்கமாதலால் நான நடைசெல்வது வாசலில் அமர்வது எல்லாமே நின்றுபோனது. ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு புது பிரச்சனை உருவாகும் அதைச்சரி செய்வது குறித்து  பொறியாளர்களுக்கும் வீட்டிலேயே தங்கிக்கொண்ட  மேற்பார்வையாளர் என்று அமர்த்தப்பட்டிருந்த ஒருவருக்கும் மொத்தக்குழுவினருக்குமே எதுவும் தெரியாது.

திரும்ப அவற்றை நினைத்துப்பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருக்கிறது.

கடைசி நாளில் மதில்சுவற்றில்  அவர்கள் அடைக்காமல் விட்டிருந்த ஒரு துளையை அடைக்கச் சொன்னதற்கு, மேற்பார்வையாளரான மேஸ்திரி, அவரது வெறும் கைகளில் சிமெண்ட் கலவையை எடுத்து அந்தத் துளையில் அப்பி அடைத்துவிட்டு கையைகழுவி விட்டுப் போன அந்த அலட்சியமாக செயல்தான் முழு வீட்டு கட்டுமானத்துக்கும் நடந்ததது. எலக்ட்ரீஷியனோ ப்ளம்பரோ மேசனோ ஒருவருக்கும் எந்த திறமையும் துறைசார்ந்த அறிவும் இல்லாமல் குழப்பி அடித்தார்கள் ஆனால் ஒப்பந்தப்படி பணம் மட்டும் சரியாக கொடுக்க வேண்டி இருந்தது.

என் சுபாவமே மாறிப்போய் கடும் தலைவலியும், பின் கழுத்தில் வேதனையும் பாரமுமாக எப்போதுமிருந்தேன். ஒப்பந்தத் தொகைக்கும் ஆன செலவுகளுக்கும் எந்தச் சம்பந்தமுமே இல்லமாலானது. இளமையின் மீதும் கல்வியின் மீதும் எனக்கிருந்த நம்பிக்கையை முழுவதுமாக அவர்கள்  இருவருமழித்தார்கள். 

மனஅழுத்தம்  தாங்க முடியாமல் வெண்ணிலாவிடம் கண்ணீர் விட்டு அழுத நாட்களும் உண்டு. கடைசியில் கையெடுத்து வணங்கி அவர்களை அனுப்பவேண்டி இருந்தது.  இதோ இன்று வரை அவர்கள் செய்த தவறுகளை சரி செய்து கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு இப்போதைக்கு குடி போகவே முடியாது. 

இந்த வருடத்தின் மாபெரும் தவறு அவர்களை நம்பியதுதான் காலம்காலமாக இதை நினைத்து  வருத்தப்படப்போகிறேன்.

வீடு கட்டியதில் ஒரே ஒரு நல்ல நினைவு மற்றும் கிடைத்த உதவி என்றால் திரு பாலு மனைவி மகன்களுடன் இரண்டு நாட்கள்  செலவழித்து வீட்டுக்குத் தேவையான டைல்ஸ் போன்றவற்றை  கோவையில்  வாங்கிக் கொடுத்ததுதான். அந்த உதவியை ஒருபோதும் மறப்பதற்கில்லை. வீடுகட்டிய நினைவுகளில் மற்ற எல்லாமே மறக்க வேண்டியவை.  வாழ்நாள் முழுவதுக்குமான மிகக் கசப்பான நினைவு இதுதான். கட்டிடப்பணியின் பொது நிரந்தரமாக ல்யூகோபில்லம் ஃப்ரூட்டிகோசம், மொசுண்டா, ஒரு போன்சாய், தெபியா ஆரியா, சில ரோஜாக்கள் மற்றும் சில செம்பருத்திச்செடிகளை இழந்தேன். அன்னைமரமாக இருந்த நாவலைக் கொல்லவேண்டி வந்தது.

சில இறப்புகளும் மறக்கமுடியாதவைகள் இந்த வருடம். தாவரவியலாளர் டொனோவன் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து இறந்தது பெரும் துக்கமளித்தது. 51 வயதுதான் அவருக்கு. அதிலிருந்து நான் இன்னும் மீளவே இல்லை. ஜேன் குடாலின் இழப்பும் துயரளித்தது என்றாலும் அவர் நிறை வாழ்வு வாழ்ந்து இயற்கையாக மரணித்தார்.  எனக்குப்பிரியமான மலையாளத் திரைப்பட நடிகர் சீனிவாசன் மறைந்தார்.   

கரூர் நெரிசலில் இறந்தவர்களை நினைத்து பெரிதும் வருந்தினேன். துக்கம் விசாரிக்க குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டதும்,  அவர்கள் இறப்புக்கு பணம் வாங்கிக்கொண்டதும் எனக்கு பெரும் அவமானமாக இருக்கிறது இன்றும்.

 கேரள நடிகை ஆக்கிரமிக்கப்பட வழக்கின் தீர்ப்புக்காக நானும் காத்திருந்தேன், ஆனால் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்தது . இத்தனை வெளிப்படையாக ஒருவர் சட்டத்திலிருந்து தப்பியது எனக்குத்தெரிந்து இதுதான் முதல்முறை.  தீர்ப்பு நாளில் அந்த நபரின் கைகளில் ஏகப்பட்ட நிறங்களில் கோவில் கயிறுகள் நெற்றியில் குங்குமமும் சந்தனமும். அவரைக் காப்பாற்றிய கடவுளர்கள் நடிகையை ஏன் கைவிட்டார்கள்? அந்த மனக்குமுறல் எனக்கு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

இடவேலா பாபுவும் சித்திக்கும் மொழிமாற்றியதில் எனக்கு ஆச்சர்யமேதும் இல்லை ஆனால் பிந்து பணிக்கர் செய்தது வருத்தமளித்தது ஒரு பெண்ணால் கூட நடந்த அநீதியை புரிந்துகொள்ள முடியவில்லை. 

எல்லாவற்றையும் விட தீர்ப்பை ஒரு பெருங்கூட்டம் நீதிமன்றத்தின் வாசலில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக்கொண்டாடியதுதான் பெரும் வெட்கக்கேடாக இருந்தது . எதைக் கொண்டாடினார்கள் அப்படிக் கூட்டமாக? அந்தகூட்டத்தில் சில பெண்களுமிருந்தார்கள், குழந்தை மிதிபட்டுச் செத்துபோன அன்னை ’’..விஜய வரச்சொல்லுங்க..’’ என்று கத்தியதற்கு இணையானதுதான் அதுவும்.

இந்த வருடத்துக்கான சில  பயணங்களை திட்டமிட்டிருக்கிறேன். கோடையில் காஷ்மீர் ட்யூலிப் கொண்டாட்டத்துக்கு செல்லவிருக்கிறேன். நண்பர்கள் உடன் வரவிருக்கிறார்கள். ’’…காஷ்மீரா அங்கே போனால் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று விடுவார்கள்…’’ என்று ஒருசிலர் பயப்படுத்தினார்கள், ட்யூலிப் தோட்டத்தில் இருக்கையில் நெஞ்சில் குண்டு பாயுமானால் அதைக்காட்டிலும் நல்லிறப்பு தேவிக்கென்ன இருக்கமுடியும்?

அந்தமான் செல்லவேண்டும் என்னும் விருப்பம் பல ஆண்டுகளாக இருக்கிறது அதை இந்த வருடம் செயலாக்கவேண்டும்

அடுத்து லவ்டேலுக்கு சென்று நான் சுற்றிய தெருக்களை, நீலப்பச்சை இலைகள் கொண்டிருக்கும் யூகலிப்டஸ் மரங்களை, பனிக்கட்டிபோல சில்லிட்டிருக்கும் சிற்றோடைகளை வழியெங்கும், குட்டிக்குட்டிப் பட்டுதலையணைகளைபோல மலர்ந்திருக்கும் ஹைட்ராஞ்சியாக்களை எல்லாம் மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஏன் அதை ஒத்திப்போடவேண்டும் இப்போதே போகலாம் என்று மகன்கள் சொன்னதால் விஷ்ணுபுரம் விழாவிலிருந்து அப்படியே சாம்பவியையும் அழைத்துக்கொண்டு லவ்டேல் சென்றோம்.

எனக்கு பால்யத்தின் சொல்லிக்கொள்ளும்படியான நினைவுகளென்றால் அது லவ்டேலில் மட்டும்தான் இருந்தது. எல்லா பள்ளி விடுமுறைகளும் லவ்டேலில்தான் இருந்தேன். அத்தையின் அன்பு, லாரன்ஸ் பள்ளியின் ஆடம்பரம், அருமையான உணவு, கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் என்று மகிழ்ந்திருந்தேன் அங்கு.

பிள்ளையில்லாத அபயமத்தை அந்தக்குளிரில் அண்டாவில் வெந்நீர் வைத்து அத்தனை தலைமுடிக்கும் அரப்பு போட்டுக் குளித்துவிட்டது, அப்போதுதான் அறிமுகமாயிருந்த கோன் ஐஸ்கிரீமை  பெரிய பெரிய பாத்திரங்களில் வாங்கிவந்து சாப்பிட்டுவிட்டு, தனியே கோன் பிஸ்கட்டுகளை சேர்த்துவைத்து சாப்பிட்டது, 1 ரூபாய்க்கு கிடைக்கும் கோழிமுட்டை மிட்டாயை பலவண்ணங்களில் வாங்கி வாயில் அதக்கிக்கொண்டே திரிந்தது,  பள்ளி சமையலறையில் எண்ணெய் சட்டியில் முட்டையை உடைத்து ஊற்றி பூரி போல ஆம்லெட் போடுவதையும், கஸ்டர்ட் என்று ஒன்றிருப்பதையும் தெரிந்துகொண்டது, தினந்தோறும் கஸ்டர்டுடன் விரிவான மதிய உணவு சாப்பிட்டது, அங்கே எனக்கென நான் தெரிவு செய்து வைத்துக்கொண்ட நீலவிளிம்பு கொண்ட குழிவான வெள்ளை பீங்கான் தட்டு(இன்னும் அப்படி ஒரு தட்டை தேடிக்கொண்டிருக்கிறேன்), மாலைவேளைகளில் புல்வெளியில் நாற்காலி போடப்பட்டு வெள்ளுடைப்பணியாளர்கள் பரிமாறிய தேநீரும் வாட்டிய ரொட்டியும், கமல் ,ஸ்ரீதேவி, தர்மேந்திரா, ஹேமமாலினி, அமிதாப் என தினமும் ஷுட்டிங் பார்த்தது. மலைரயில் பயணம், பொட்டானிக்கல் கார்டன் செல்வது, பெரிய பெரிய வெள்ளைப் பொத்தான்கள் வைத்த வான் நீலத்தில் ஒரு ஸ்வெட்டரை சேரிங் கிராஸ் நடைபாதைக்கடையில் வாங்கிப்போட்டுக்கொண்டது, பொட்டனிக்கல் கார்டனின் ரோலிங் க்ராஸிலிருந்து உருண்டு உருண்டு சரிந்து விளையாடியது என லவ்டேலின் நினைவுகளை மீண்டும் ஒருமுறை அங்கு சென்று பார்க்க ஆசையாக இருந்தது.

லாரன்ஸ் பள்ளியை மீண்டும் பார்த்தது அத்தனை பரவசமளித்தது.  நான் விளையாடிய லவ்டேல் ரயில்வே ஸ்டேஷனில் நின்று புகைப்படமெடுத்துக்கொண்டேன்.

லவ்டேலில் தங்கி இருந்த வில்லாவில் காரை விட்டு இறங்கியதுமே புல்வெளி எங்கும் மலர்ந்துகிடந்த வெள்ளைக்ளோவரை பார்த்துவிட்டேன். அதைபறித்து முகர்ந்ததும் எனக்கு தெரிந்தது என் நினைவில் எங்கேயோ ஆழத்தில் இருந்த லவ்டேலின் வாசனை அந்த க்ளோவரின் வாசனைதான் என்று.  எத்தனையோ மலைப்பிரதேசங்களுக்கு சென்றிருக்கும் நான் இதுவரை லவ்டேலில் அல்லாமல் அந்த க்ளோவரை வேறெங்குமே பார்க்காமலிருந்ததும் விநோதம்தான். க்ளோவர் மலர்களை தலையிலும் வைத்துக்கொண்டேன். நான் லாரன்ஸ் பள்ளி வளாகத்தின் பக்கவாட்டு எல்லையிலிருந்து சறுக்கி கீழிறங்கி ஒருபெட்டிக் கடைக்கும் செல்லும் வழியும், அந்தக்கடையும் இருந்தது அருகில் ஒரு பஸ் நிலையம் கூடுதலாக.

லாரன்ஸ் பள்ளியில் அத்தை மாமாவின் மரவீட்டுக்கருகே இருந்த வீட்டில் அப்பள்ளியின் ஃப்ரெஞ்ச் ஆசிரியரின் வீடு இருந்தது.  அங்கேயும் சென்று விளையாடுவேன். அந்த வீட்டுப்பெண் நல்ல பருமனாக வெள்ளை வெளேரென்று இருப்பார் பெயர் நினைவிலில்லை. அவர் கணவர் தான் பிரஞ்ச் ஆசிரியர் மஞ்சள் நிறத்தில் இருப்பார் எப்போதும் ஏதோ எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டுமிருப்பார். அவரின் மயிரடர்ந்த புறங்கை எனக்கு நினைவிருக்கிறது. அடிக்கடி அந்தப்பெண் என்னை அதிகாலைகளில் அழைத்துக்கொண்டு பல ஏக்கரில் பரந்து விரிந்திருந்த லாரன்ஸ் பள்ளியின் பின்புறம் இருந்த பல  சிற்றோடைகளின் கரையிலிருக்கும்   கேலா லில்லிகளை

(சதைப்பற்றான புனல் வடிவ வெள்ளை இதழ்களைக் கொண்டிருக்குமே அது ) பறிக்க அழைத்து செல்வார். 

அவரது கைகளில் சிறிய ஆனால் மிகக்கூரிய கத்தி இருக்கும், பத்துப் பதினைந்து மலர்களை அவற்றின் நீளக்காம்புகளுடன் நறுக்கி இருவருமாக எடுத்துக்கொண்டு வருவோம். அவர் உடைந்த தமிழில் பேசுவார் ‘’..உறக்கத்துக்காக அதிகாலைகளை தவறவிடக்கூடாது..’’ என்பார் என்னிடம்.  கண்ணாடிக் குடுவைகளில் நீர் நிரப்பி பூக்களை அதில் இருவருமாக அடுக்குவோம், 

அடிக்கடி தங்கச் சரிகை சுற்றிய சாக்லெட்டுகள் தருவார் அருமையாக இருக்கும். அவருடன் நடக்கையில் எனது நீலவார்களிட்ட ஹவாய்செருப்புகள் புல்லின் மீதிருக்கும் பனியில் ஒட்டிக்கொண்டு நடக்க சிரமப்பட்டது நினைவுக்கு வருகிறது.

அந்த நினைவுகளின் நீட்சிதான் நான் இன்று வீட்டில் மலர்களை அமைக்கிறேன் போலும்.

வழக்கம் போல வேடசெந்தூரில் மழையும்,வெயிலும்,குளிரும் இருந்தது.இந்த வருடம் ஏராளமாக சீம்பால் இனிப்பு சாப்பிட்டு ரத்தச் சர்க்கரை அளவைக் கூட்டினேன். வீட்டு மரங்களின் மாம்பழங்ளை கணக்கு வழக்கில்லாமல் ருசித்தேன். எனக்கு மிகப் பிரியமான முந்திரி நிறைந்த ஜப்பான் கேக்கை இந்த வருடம் சாப்பிடவே இல்லை, எப்படியோ தவறவிட்டுவிட்டேன்.

நான் மலையடிவாரத்திலிருந்து இத்தனையாண்டு காலமாக மெல்ல மெல்ல மேலேறி வந்துகொண்டிருந்தேன். வழியில் பல வகையான அனுபவங்கள், கைகோர்த்து இறுதிவரை உடன் பயணிப்பதாகச் சொன்னவர்கள் காணாமல் போனார்கள், பயணத்துணையாக சேர்த்து வைக்கப்பட்டவர்கள் லாயக்கில்லாதவர்களாக இருந்தார்கள், கடந்துசென்ற குளிர்மேகங்களைப் போல சிலர் இனிய நினைவுகளுடன் பிரிந்து போனார்கள், சிலர் முதுகுக்கு பின்னாலிருந்து தள்ளிவிட்டார்கள், சிலசமயம் நானே காலிடறி விழுந்திருக்கிறேன், தலைகுப்புற விழுந்த அனுபவங்களும், ஆழம் தெரியாமல் கால்விட்ட  சம்பவங்களும் கொல்விலங்குகளிடமிருந்து மயிரிழையில் தப்பித்த, பிரியமான மலர்மரங்களுக்கருகில் மகிழ்ந்து கழித்த சமயங்களும் உண்டு. 

இந்தப்பயணத்தில் இந்த வருடம் ஒரு சில மயிலிறகுகளையும் சேகரித்து  மனப்பக்கங்களுக்கிடையே பத்திரமாக வைத்திருக்கிறேன். சமீபத்தில் கருக்கிருட்டில் சென்ற ஒரு   கார்ப்பயணத்தில் அப்படியொரு மயிலிறகை எடுத்து வைத்துக்கொண்டேன். சென்னைத் தெருக்களில்  7 மணி நேரம் காரில் பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டு கூடவே  பாடிக்கொண்டு being judged என்னும் கவனமோ கவலையோ இல்லாமல் மகிழ்ந்து பயணித்த மற்றொரு கார்ப்பயணமும்  நான் பாடம் பண்ணியிருக்கும் என்றைக்கும் வண்ணம் குறையாத மயிலிறகு.  பூமார்க்கெட்டுக்குள் சுற்றிவந்த  நாளொன்று, என சில மயிற்பீலிகள் என்றென்றைக்குமாக பாடமாகி பொக்கிஷமாக மனதிற்குள் இருக்கின்றன. மேலும் சில வண்ணச்சிறகுகளும் கூழாங்கற்களும் மினுங்கும் காக்கைப்பொன்னும் கண்ணாடிச்சில்லுகளுமாக மனதின் மூலையிலல்ல, நட்டநடுவிலொரு சிறு பெட்டியில் சேகரித்துவைத்திருக்கிறேன்.

பொதுவாகப் பரிசுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும் வழக்கத்துக்கு விரோதமாக இந்த வருடம் சில பரிசுகளை பெற்றுக்கொண்டேன். ,அதில்  புடவைகள், புத்தகங்கள், மலர்ச்சரங்கள், இனிப்புகள் அடக்கம்.  

எனக்கு மிகப்பிரியமான ஜகரண்டாவின் இளம் ஊதா நீறப்புடவையொன்று பரிசளிக்கப்பட்டது. மனமுவந்து பெற்றுக்கொண்டேன்.  எங்கள் குடும்பங்களில் பெண்களின் சடலத்தின் மீது அவர்களுப்பிரியமான அல்லது  வளைகாப்பு, கல்யாணப் புடவையைப் போர்த்திய பின்னரே எரிக்க எடுத்துச்செல்வது வழக்கம். அப்படி அம்மாவுக்கு   பிரியமான புடவையை கட்டிவிட முயன்று, உடல் விரைத்துவிட்டதால் தோற்று உடம்பில் சுற்றிக்கட்டிவிட்டோம். அந்தப்புடவை சுற்றப்பட்டிருந்த அம்மாவின் மீதுதான் விஜி மின்மயானத்தில் கற்பூரக்கட்டியை ஏற்றினான்.

இந்தப்பிரியத்துக்குரிய புடவை என் நெஞ்சின் மீதிருக்கையில்தான்,என்மீது உள்ளங்கை அகலக் கற்பூரக்கட்டி  வைக்கப்பட்டு சிதைநெருப்பு ஏற்றப்படவேண்டும்.  மகிழ்ந்தெரிந்து மறைவேன்.

இனி மலையுச்சியிலிருந்து மறுசரிவில் இறங்கும் காலமெனக்கு. மிக நல்ல நண்பர்கள் அமைந்திருக்கிறார்கள் அவர்களின் தோழமையில் இந்த இறங்குமுகப் பயணத்தை மகிழ்ந்து செல்லவிருக்கிறேன்.

‘’…ஏன் நானழைத்தபோது போன் எடுக்கவில்லை..’’ என்று குறைப்பட்டுக்கொண்டது  ’’…தேவி என்னை ஒருமுறை அழைத்து நான் எடுக்கவில்லை என்றால் இரண்டாவது முறை அழையுங்கள் எடுக்கவில்லை என்றால் மூன்றாவது முறை அழையுங்கள் அப்போதும் எடுக்கவில்லை என்றால் நான் எடுக்கும்வரை தொடர்ந்து விடாமல் அழைத்துக்கொண்டே இருங்கள்…’’ என்று சொல்லும் நண்பர்,  ஏழு பேருந்துகள் மாறி மாறி ஊரிலிருந்து கோவை வந்து வீட்டுத்தோட்டத்துக்கு கொடுக்கவென உலர்ந்த வாழையிலைச் சருகுகளில்  பாதுகாப்பாகச் சுற்றப்பட்டு மண்ணில் பொதியப்பட்ட 8 வாழைக்கன்றுகளை சுமந்துகொண்டு வந்து கையளித்த நண்பர்,  ஒன்றுமே சொல்லாமல் திடீரென ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று பவோபாப் மரத்தைக்காட்டி நான் அதை வாயை பிளந்துகொண்டு வேடிக்கை பார்க்கையில் பின்னிருந்து என்னை புகைப்படமெடுத்து கொடுத்த நண்பர், நான் மிகப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உணரும் அண்மையை அளிக்குமொருவர், ’’…அம்மா வீட்டுக்குவர லேட் ஆயிருச்சு இங்கே ஒருபக்கம் பயணத்தில் இருக்கேன் என்று சொல்லுகையில்’’.. ஜாலியா இருடா மெதுவா வா ஒன்னும் பிரச்சனை இல்லை..’’ என்று சொல்லும் சரண்,’’… நீ ஏன் பாண்டிச்சேரி போகமுடியலைனு வருத்தப்படறே நான் இன்னிக்கே நைட் புறப்பட்டு வரேன் நான் கூட்டிட்டுப்போறேன்..’’ என்று  கவனமாக இருக்கும் தனது அட்டெண்டன்ஸ் குறித்து கவலைப் படாமல் புறப்பட்டு வரும் தருண்,  என் மகிழ்ச்சியான வெர்ஷனாக நானே திரும்பப் பார்த்துக்கொள்ளும் சாம்பவி, லடாக்கில் இருந்து எனக்கென wind chimes வாங்கி வந்த, நான் வருடங்களாக தேடிக்கொண்டிருந்த காலையில் தூய வெள்ளையில் மலர்ந்து மாலை அது இளஞ்சிவப்பாகி, மறுநாள் குருதிச்சிவப்பாகும் மலர்களை அளிக்கும் ஹைபிஸ்கஸ் ம்யூட்டாபிலிஸ் செடியையும் வாங்கிக்கொடுத்த நண்பர்,  எந்தெந்த நாடுகளில் இருந்தோ இலைகளையும் மலர்களையும் பார்த்த உடனே எனக்கு புகைப்படமெடுத்து அனுப்பும் தோழமைகள் என்னுடன் இருக்கிறார்கள்.

எனக்குப் பிடித்தமான நான்  தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் இந்த தாவரவியல் துறை இன்னும் வாசிக்க வேண்டிய எழுதவேண்டியவைகள் என்று இப்போது மலையின் மறு சரிவிலிறங்குகையிலும் ஏராளம் பணிகள் காத்திருக்கின்றன.

புதிய வருடத்திற்கான  தீர்மானங்கள் ஏதுமில்லை

வாழ்க்கை அத்தனை இனியது அத்தனை துயர் மிக்கது எப்படியாகினும் அதை மகிழ்ந்து வாழவிருக்கிறேன்.

என்னுடன் இருந்தவர்களுக்கும்,  என்னவானாலும் உடன் நிற்பவர்களுக்கும், விலகிச்சென்றவர்களுக்கும், இனி இணைந்து பயணிக்க விருப்பவர்களுக்கும்,  புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்பு!

மன்மத ஏசு!!!!

ஆண்டவரே!

உங்கள் மீதான பக்திப்பாடல்களில் கானா வடிவப்பாடல்கள் பல வருடங்களாகவே புழக்கத்தில் இருக்கின்றன. அம்மாடி ,இதுதான் காதலா மெட்டில்

``மாதாவை வணங்கிட வாருங்க அஹ அஹ ஹ அஹஹா!

செம்பருத்தி செம்பருத்தி பூவைப்போல பெண்ணொருத்தி மெட்டில் ``ஏத்திவச்ச மெழுவத்தி எரியுதம்மா வூட்டைசுத்தி

இந்தப்பாடல்களையெல்லாம் நீங்களும் கேட்டிருப்பீர்கள் உங்களுக்கும் ஆட்சேபணை இருந்திருக்காது என்று நம்புகிறேன் .

இந்த கிருஸ்துமஸ் காலத்தில், சமீபத்தில் பிரபலமான காந்தா ஞானும் வரான் திருச்சூரு பூரம் காணாம் பாடலை சாந்தா, ஞானும் வராம் திருச்சூரு கரோல் காணாம் “என்று மாற்றி மெட்டமைத்ததும் கூட நன்றாகத்தான் இருந்தது என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்

ஆனாலும் மன்மத ராசா மெட்டில் மன்மத ஏசு மன்மத ஏசு'' கொஞ்சம் வரம்பு மீறிவிட்டதுதானே ? இதையெல்லாம் கொஞ்சம் தட்டிக்கேட்கக்கூடதா?

பிதாவே இந்தப்பாவிகளை மன்னிக்காதீர்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

« Older posts

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑