லோகமாதேவியின் பதிவுகள்

Category: Uncategorized (Page 1 of 2)

கிரிஜா!

ஐரோப்பாவில் மேற்படிப்பு முடித்துவிட்டு சரண் வீடு திரும்பி இருக்கிறான். ஒரு மாத விடுமுறை காலத்தின் பின்னர் மீண்டும் மே மாதம் ஜெர்மனியில் பணியில் சேர வேண்டும். 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவுக்கு  ஐரோப்பா இணையப் பாதுகாப்பளிக்கிறது. அந்த பல்லாண்டு திட்டத்தில் சரணும் முக்கிய பொறுப்பிலிருக்கிறான். அவனுக்கு ஐரோப்பா வாழ்க்கை அத்தனை உவக்கவில்லை எனினும் இந்த பணியில் ஈடுபாடு இருக்கிறது. சைபர் தொழில்நுட்பத்தின் தேவை கானா போன்ற வளர்ந்துவரும்  நாடுகளில் இப்போது தான் துவங்கி இருப்பதால் அந்த அடிப்படை முன்னெடுப்புக்களில் தன் பங்களிப்பும் இருப்பது மிகவும் முக்கியம் என்று கருதுகிறான். இதில்

எனக்கும் மகிழ்ச்சிதான்.

சரணை பார்க்க நண்பர்களும் உறவினர்களுமாக வந்துகொண்டிருப்பதால் இத்தனைநாள் சந்தடி இல்லாமல்  தனிமையும் நானும் மட்டுமாக இருந்த வீடு கலகலவென்றிருக்கிறது, அப்படி யாரும் வராத தினங்களில் நானும் அவனும் பயணிக்கிறோம்.

இந்த கிராமத்து வீட்டில் சரணும் தருணும் மிகச்சிறுவர்களாக இருக்கையிலேயே   வசிக்கத்துவங்கி விட்டிருந்தோம். இருவரையும் மாதா மாதம் இந்த கிராமத்து நாவிதர் மணியின் சலூனுக்கு அழைத்துச் செல்வேன். கடைவாசலில் நான் தெருவை பார்த்தபடி நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர்கள் இருவரும் முடிவெட்டும் வரை  நாளிதழ்கள் வாசித்துக்கொண்டிருப்பேன். 

மணியிடம் முடிவெட்டுதல் என்பது  ஏறக்குறைய செடிகளுக்கு பாத்தி கட்டுதல் அல்லது செடிகளை தறித்தல் என்பதற்கு நிகரான ஒன்றுதான். சட்டிகிராப் என்பார்கள் இங்கெல்லாம். தலையில் ஒரு சட்டியை கவிழ்த்து சட்டிக்கு வெளியே தெரியும் முடியை முழுக்க வெட்டி அகற்றும் ஸ்டைல் அது. மணிக்கு சட்டி தேவையில்லை தலையின் அளவுக்கேற்ற அப்படி ஒன்றை மானசீகமாக கவிழ்த்து முடிவெட்டி விடுவார். கோவிட் காலங்களில் வீட்டுக்கு வந்து  மகன்களுக்கு முடி திருத்திய மணியின் உதவியை மறக்கவே முடியாது.

சரணும் தருணும் விடுமுறைக்கு வீடுவந்தால் மரியாதை நிமித்தம் மணி வந்து அவர்களை பார்த்து நலம் விசாரித்துவிட்டு போவது வழக்கம்

இன்றும் மணி வந்திருந்தார். சரணிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்படுகையில் ’’தம்பி,  கிரிஜாம்மணி செளக்கியங்களா’’? என்றார்

சரண் பதறி’’ அண்ணா ஏன்னா இன்னும் அதை கேட்கறீங்க”என்றான் வெட்கம் பிடுங்கி தின்ன. 

ஒரு  சுவாரஸ்யமான ஃப்ளேஷ்பேக்!

சரண் 6 அல்லது 7-ல் படிக்கையில்  ஒரு  மாதாந்திர முடிவெட்டுதலுக்காக மணி கடைக்கு போயிருந்தோம். நான் வழக்கம் போல வெளியில் அமர்ந்திருந்தேன்.

சரணுக்கு  மணி முடிவெட்டிகொண்டிருந்தார், தருண் அடுத்ததாக வெட்டிக்கொள்ள காத்திருந்தான்.

திடீரென மணி வெளியே முகம் முழுக்க சிரிப்புடன் வந்து ’’பெரிய தம்பி என்னமோ சொல்லறாப்பிலங்க’’ என்றார்

மகன்கள் இருவரும் திருத்தமாக முடிவெட்டிக்கொள்வதில் நான் கவனமாக இருந்தேன் அப்போதெல்லாம். இப்போது தருணின்  பிடரிவழியும் கேசத்தை பார்க்கையில் ’’அந்தக்காலம் அது அது அது ஒரு கனவு காலம்’’ என்று தோன்றும்.

எனவே எனக்கு தெரியாமல் சரண் சற்று கீழிறக்கி கிருதா வைத்துக்கொள்ள விரும்பியிருக்கிறான். ஆனால் சரணுக்கு அவன் வைத்துக்கொள்ள விரும்பியதின் பெயர் கிருதா என்பது தெரியவில்லை அது எப்படியோ கிரிஜா என்று மனதில் பதிந்திருக்கிறது

 எனவே மணியிடம் ’’அண்ணா கிரிஜாவை ஒண்ணும் பண்ணாதீங்க, விட்ருங்க நான் வச்சுக்கறேன்’’ என்று சொல்லி இருக்கிறான். நானும் மணியுமாக வெகுநேரம் சிரித்தோம் அன்று.

அந்த கிரிஜாவை பின்னர் பலமுறை மணி நலம் விசாரிப்பதுண்டு கிரிஜாவை தவிர்க்கவேண்டியே  மணியிடம் போவதை நிறுத்திக்கொண்டு  பலநூறுகள் கொடுத்து முடிவெட்டினது போலவும் வெட்டாதது போலவும் காட்டும் நேச்சுரல்ஸுக்கு  சரண் மாறி இருந்தான்.

ஆனாலும் இப்படி வீடுவரை வந்து  கிரிஜாவை அவ்வப்போது மணி விசாரிப்பதுண்டு

பல ஆண்டுகளுக்கு பிறகென்பதால் நாங்களும் கிரிஜாவை  பேசிப்பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்

இப்போது வளர்ந்து வாலிபனாகி இருக்கும் சரணின் வருங்கால மனைவிக்கு ஒருவேளை கிரிஜாவை பற்றி தெரிய வந்தால் என்னவாகும் என்பது கவலை அளிக்கிறது

 அப்படி கிரிஜாவின் மீது உள்ளார்ந்த அன்பு கொண்டிருந்த சிறுவன் சரண்  நாளை 24 வயதை நிறைவு செய்கிறான். மனமார்ந்த அன்பும் ஆசிகளும், சரணுக்கும் அவன் கிரிஜாவுக்கும்!

தாவரவியல் அகராதி-A

  1. + A-  A chimera created by a grafting process, e.g. Aesculus + domestica , being a fusion between Horse-Chestnut and Yellow Buckeye-வெவ்வேறு மரபுத்திரி எண்ணிக்கை கொண்ட கலப்பினத் தாவரம்.
  2. ±- Approximately-tendency towards, not all do, varies-தோராயமாக என்பதை காட்டும் குறியீடு.
  3. A – ஒரு குறிப்பிட்ட தாவர பாகம் இல்லை என்பதை குறிக்கும் முன்னொட்டு எழுத்து (Aphyllus- இலைகளற்ற , Acaulus தண்டுகளற்ற). 
  4. A × b- Denotes a hybrid between species ‘a’ and species ‘b’. E.g. Epilobium lanceolatum x tetragonum– சிற்றினங்கள் இரண்டின் கலப்புயிரியை குறிப்பது.
  5. ab- A prefix meaning “from, away from, or outside”. விலகிய, வெளிப்புறத்திலிருந்து என்று பொருள் அளிக்கும் முன்னொட்டு
  6.  Abaca – Abaca, also known as Manila Hemp with the scientific name Musa textilis, is a natural leaf fiber species of banana grown as a commercial crop-நார்வாழை
  7. Abaxial- The lower surface of a lateral organ such as a leaf or petal.  facing away from the stem of a plant (denoting the lower surface of a leaf)-அச்சில் இருந்து விலகிய, இலையின் கீழ்பரப்பு.
  8. Abbreviation – a short form of a word or phrase- சுருக்கீடு, ஒரு சொல் அல்லது தொடரின் குறுக்க வடிவம்
  9. Aberrant- deviating from the normal or usual type, as certain plants from the group in which they are classified /behaving in an abnormal or untypical way -தொடர்புடைய தாவரங்களிலிருந்து   வேறுபடுதல்/பொதுத்தன்மையிலிருந்து வேறுபடுதல்
  10. Aberration of light- a deviation in the rays of light when unequally refracted by a lens or reflected by a mirror, so that they do not converge and meet in a point or focus -ஒளிப்பிறழ்ச்சி
  11. Abies- any conifer of the genus Abies ; a fir tree, tall tree-உயரமான, ஊசி இலை மரம், ஃபிர் மரம்
  12. Abietinus- Used for designating certain cryptogamic plants which grow on evergreen trees-பசுமை மாறா மரங்களில் வளரும் , ஒரு சில மலர்களையும் விதைகளையும் உருவாக்காத கீழ்நிலைத்தாவரங்கள்.
  13. Abiogenesis – the idea that life arose from nonlife more than 3.5 billion years ago on Earth. -உயிரில்லாப்பிறப்பு-கருதுகோள்
  14. Abioptic – non living thing-உயிரற்ற பொருள்
  15. Abiosis-the absence or lack of life; a nonviable state. -உயிர் வாழ்க்கையின்மை
  16. Abnormal growth – Describes a state, condition, or behavior that is unusual or different from what is considered normal -இயல்பிழந்த வளர்ச்சி
  17. Abnormalities – something that is not normal, -பிறழ்வுகள்
  18. Abode –   the place of living-தங்கிடம் , உறையுள், இருப்பிடம்
  19. Aboriginal – indigenous- inhabiting or existing in a land from the earliest times or from before the arrival of colonists-தொன்முதுவர்-ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தோன்றிய/ ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்கு சொந்தமான
  20. Aborigines – a person, animal, or plant that has been in a country or region from earliest times-தொன்முதுமக்கள்
  21. Abort- To abandon development of a structure or organ -உருவாகும்/வளரும் ஒன்றை கலைத்தல்/ சிதைத்தல்.
  22. Abortive- defective, barren- குறையுள்ள, குறைபட்ட, சிதைந்த
  23. Abrasion-the process of scraping or wearing something away-தேய்ப்பு, தேய்த்து அகற்றுதல்
  24. Abrupt-when some part appears as if it were suddenly terminated- திடீரென  முடிகின்ற
  25. Abruptly pinnate-where a pinnate leaf is without an odd leaflet at its extremity, இலைக்காம்பு நுனியில்  ஒற்றைச் சிற்றிலையை கொண்டிருக்காத கூட்டிலை.  ஜோடி சிற்றிலைகளில் முடியும் கூட்டிலை .
  26. Abrus precatorius – commonly known as jequirity bean or rosary pea, is the seeds of  herbaceous flowering plant in the bean family Fabaceae -குன்றிமணி.
  27. Abrus precatorius albiflora – வெண்குன்றி
  28. Abscisic acid- Plant hormone that inhibits growth-  தாவர வளர்சியை குறைக்கும் வளர்ச்சித் தடுப்பான்/ ஒரு வகை இயக்கச்சாறு
  29. Abscission- Falling off of a leaf or other organ- The shedding of an organ that is mature or aged, as of a ripe fruit or an old leaf- வலியப் பிரிதல்/வலிய உதிர்தல்- பிரிவுறுதல்
  30. Abscission layer- a layer of parenchyma cells that is formed at the bases of fruits, flowers, and leaves before abscission. As the parenchyma disintegrates, the organ becomes separated from the plant- உதிரும் அடுக்கு-வலியபிரிப்படுக்கு
  31. Absolute transpiration – The loss of water by evaporation in terrestrial plants, especially through the stomata -முழு நீராவியிழப்பு
  32. Absorption- the function by which the plants imbibe the moisture which becomes sap- உள்ளுறிஞ்சல் -உறிஞ்சுதல், உணவு மற்றும் நீர்க்கரைசலை தாவரங்கள்  எடுத்துக்கொள்ளுதலை குறிக்கும் சொல்.
  33. Abundance – a very large quantity of something-அளப்பரிய /மிகுதியாக
  34. Abyssinica / Ethiopia Ethiopian- எதியோப்பியாவை சேர்ந்த
  35. Acacia -Thorn-முள்
  36. Acacine  gum – வேலம்பிசின் : கருவேல மரப் பாலிலிருந்து கிடைக்கும் பிசின்
  37. Acalycalis-where the stamens contract no adhesion with the calyx- புல்லி வட்டத்துடன் இணைந்திருக்காத மகரந்தத்தாள்கள்- 
  38. Acalycinus, acalycis,-where the calyx is wanting- புல்லிவட்டம் இல்லாத/ புல்லியற்ற
  39. Acanthocladus – Where the branches are furnished with spines – முட்களை கொண்டிருக்கும் கிளைகள்
  40. Acanthophorus- furnished with spines, or large stiff bristles-முட்கள் அல்லது விறைப்பான வளரிகளை கொண்டிருக்கிற. 
  41. Acanthopodius, Where the petioles or footstalks to the leaf are furnished with spines– முட்கள் கொண்டிருக்கும் இலைக்காம்புகள்.. 
  42. Acaroid resin- a red or yellow balsamic alcohol-soluble resin from Australian grass trees used chiefly in varnishes, printing inks, and paper sizes — called also accroides, gum accroides-புல்மரப் பிசின்
  43. Acarpous -not producing fruit – கனிகளற்ற,   கனிகளை தோற்றுவிக்காத
  44. Acaulescent-Having no apparent stem, or at least none visible above the ground surface.  Stemless-Antonym of caulescent (possessing stem)- தண்டுகளற்ற
  45. Acaulis -Stemless-  தண்டுகளற்ற
  46. Accessory bud – a bud growing near and in addition to a normal axillary bud. -மேலதிக அரும்பு.
  47. Accessory cell- any of various cells in addition to -மேலதிகக்கலம்
  48. Accessory fruit- A fleshy fruit developing from a succulent receptacle rather than from the pistil; for example a strawberry- சூலகத்தில்லாது வேற்றிடங்களில் உருவாகும் கனி /வேற்றிடக்கனி
  49. Accessory gonidium asexual reproductive cell or group of cells especially in algae additional asexual reproductive cell or group of cells especially in algae -மேலதிக வித்தியம்
  50. Accessory pigments- light-absorbing compounds, found in photosynthetic organisms, that work in conjunction with chlorophyll a-துணை நிறமிகள்
  51. Accisus -(truncate.) Where the extremity appears as if it were cut away- வெட்டுப்பட்ட தோற்றம் கொண்டிருக்கிற
  52. Acclimation – physiological adjustment by an organism to environmental change- இணக்குதல்.
  53. Acclimatize- to get used to a new climate, a new situation -ஒரு தாவரத்தை பூர்வீகமாக இல்லாத ஒரு  புதிய /அந்நிய நிலப்பரப்பில், பாதுகாப்பின்றி திறந்த வெளியில் வாழ பழக்கப்படுத்துதல்.
  54. Accrescent- Increasing in size with age, often referring to the expansion of the calyx in fruit maturation- கனிஉருவான பின்னும் வளர்ந்துகொண்டிருக்கும் புல்லிவட்டத்தை குறிக்கும் சொல்
  55. Accrete -when contiguous parts or organs become naturally grafted together-  திரளுதல். ஒன்றாக சேர்ந்துகொள்ளுதல் 
  56. Accumbent- when one part lies close upon the edge of another; as where the radicle is bent round and pressed against the edges of the cotyledons, (opposition to “incumbent.”)-ஒரு பாகத்தின் விளிம்பில் மற்றொரு பாகம் நெருக்கமாக அமைந்திருப்பது, சாய்ந்த
  57. Accumulation – an amount of something that has been collected-திரட்சி ; குவிப்பு
  58. Acerellatus- somewhat acerose– ஊசி போன்ற/கூரான நுனியில் முடிதல்
  59. Acerose- needle-shaped- ஊசி போன்ற கூர் நுனிகொண்ட  நீளமானவை-ஊசியிலை மரங்களின் இலைகளை குறிக்கும் சொல்.
  60. Acetabulum- acetabular form-saucer-shaped, as the fruiting bodies of certain lichens-குழிந்த தட்டு அல்லது சிறிய கிண்ணம் போன்ற- லைக்கன்களின் இனப்பெருக்க உறுப்புக்கள் 
  61. Acetarius- suited for salads- சாலட்களாக  பச்சையாக,உண்ணப்படுபவை
  62. Acetosa / Acetosella-Acidic-அமிலச்சுவை
  63. Achascophytum- plant having indehiscent fruit-வெடியாக்கனி கொண்ட தாவரம்
  64. Achene -A small, dry one-seeded indehiscent fruit, that does not open at maturity to release the seed. Also called caryopsis-வெடியா ஒருவிதை உலர்கனி -அங்காவிலி
  65. Achenium -a dry one-seeded indehiscent fruit with the seed distinct from the fruit wall- உலர்ந்த கடினமான வெடியா ஒற்றை விதைக்கனி (சூரியகாந்தி விதை)
  66. Achlamydeous- lacking both calyx and corolla-தெளிவான அதழ்கள் இல்லாத மலர்கள். இதழ்களற்றவை
  67. Achlorophyllous -Without chlorophyll, not green- பச்சையமற்ற
  68. Achyrophytum- a plant having glumaceous flowers,  a glumaceous plant, as grasses, sedges-உமியடிச்செதில் கொண்ட மலர்களை கொண்டிருக்கும் தாவரம்.
  69. Acicula-a name given to the rachis of some grasses, where it is reduced to a mere bristle-சிறு முடிபோன்ற புல்செடியின் முள்ளந்தண்டு
  70. Acicular- of a slender form, like a needle- ஊசியைப்போன்ற. 
  71. Aciculated- superficially marked, as if irregularly scratched with the point of a needle-ஊசியால் கீறப்பட்டது போல தோன்றும் மேற்புரப்பு
  72. Acid – any substance that in water solution tastes sour, changes blue litmus paper to red, reacts with some metals to liberate hydrogen, reacts with bases to form salts, and promotes chemical reactions, a substance which releases hydrogen ions in water and has a ph. less than 7 -புளிமம் ,அமிலம்
  73. Acidiferous- containing some acid principle- அமிலம் கொண்டிருக்கும்
  74. Acidophilous- Acid-loving- அமிலவிரும்பி
  75. Acidotus- when the branches or other organs terminate in a spine, or hard point- முள் அல்லது கடினமான கூர் நுனியில் முடியும் கிளைகள் அல்லது பிற தாவர பாகங்கள்
  76. Acinacifolius- a curved fleshy leaf, with a thin edge and broad back -மெல்லிய விளிம்பை கொண்டிருக்கும் சதைப்பற்றான இலை
  77. Acinaciformis -formed like a scimitar- முனைப்பகுதி அகன்ற. கொடுவாள் போன்ற
  78. Acinarius-when a stem or branch is covered with little spherical and stalked vesicles, looking like grape seeds; as in some sea-weeds- சிறு கொப்புளம் அல்லது குமிழ்பொன்ற சுரப்பிகளை கொண்டிருக்கும் (கடற்பாசி)
  79. Acinodendrus- plant whose fruit is arranged in bunches.  கொத்துக்கனிகளை கொண்டிருக்கும் தாவரம்
  80. Acinosus-shaped like the seed of a grap- திராட்சைகனியின் விதைகளை போலிருக்கிற.
  81. Acinus- the seed of grapes- திராட்சை கனியின் விதைகள்
  82. Aciphyllus- a linear and pointed leaf-கூர்நுனி கொண்ட நீண்ட இலை
  83. Aclythrophytum-plants whose seeds are supposed to be naked, or without a pericarp- மூடப்படாத  விதைகள்
  84. Aconite- a plant in the Aconitum genus that grows in rocky areas in the Northern Hemisphere. Despite containing poisonous chemicals, it’s used as medicine.அக்கோனிட் : மங்க் ஷுட்’ எனப்படும் தாவரத்திலிருந்து பெறப்படும் ஒரு நச்சு மருந்து. இது மிகவும் நஞ்சுத்தன்மைவாய்ந்த வெடியக் கலப்புடைய வேதியின் மூலப்பொருள். இதனை சரும வலியைக் குறைக்கப் பயன்படுத்துகிறார்கள்
  85. Acorn- A hard, dry indehiscent fruit of oaks, with a single, large seed and cup-like base- கருவாலிக்கொட்டை. 
  86. Acotyledon-a plant belonging to those flowerless tribes, which have no true seeds, but are reproduced by sporules. (cryptogamic plant) விதை முளையிலைகளற்ற/ சிறு சிதல்விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் மலர்களையும் விதைகளையும் தோற்றுவிக்காத தாவரங்கள் (synonym for cryptogamia)  
  87. Acotyledonous- wanting cotyledons.-  விதையிலைகளற்ற.
  88. Acquired character-ஈட்டுப் பண்பு : விலங்கின் அல்லது தாவரத்தின் ஆயுட்காலத்தின் போது, அதன் உடலில் நோய் அல்லது உணவின் காரணமாகப் பரம்பரையாக ஏற்படும் மாறுதல்
  89. Acre -ஏக்கர் : ஒரு நில அளவுக் கூறு. 160 சதுர முழம் அல்லது 4840 சதுரகெஜம் அல்லது 43,560 சதுர அடி அல்லது 4425.696 சதுரமீட்டர் கொண்ட நில அளவு
  90. Acrid – having a strong and bitter smell or taste that is unpleasant-மனம் ஒவ்வாத உறைப்பான கசப்புச்சுவை அல்லது மணம் உடைய.
  91. Acris / Acre- Acrid, Sharp bitter Taste-கடுமையான/ நெடியுடைய சுவை
  92. Acronychius- curved like the claw of an animal- விலங்குகளின் நகங்களைப்போல் வளைந்திருக்கின்ற.
  93. Acropetal- development or maturation of tissues or organs or the movement of substances, such as hormones, from the base toward the apex-நுனி நோக்கிய
  94. Acrosarcum- a spherical fleshy fruit, adhering to the calyx, by whose limb it is often crowned ;(Synonym for Berry)- சதைப்பற்றான வட்ட வடிவ, புல்லியுடன் இணைந்திருக்கும் கனி (தக்காளி)
  95. Acrospira- a name which has been given to a plumule, as in the barley, which in germination rises like a chord from the summit of the seed-விதைகளின் நுனியிலிருந்து நாண் போல முளைக்கும் குருத்திலை 
  96. Actinenchyma- the cellular tissue which forms the medullary rays-கத்து திசுக்கற்றைகளுக்கிடையேயான திசு
  97. Actinocarpus- where the placenta are ranged in a radiated manner-ஆரச்சமச்சீரான சூலக இணைப்பு திசு.
  98. Actinomorphic- being radially symmetrical and capable of division by any longitudinal plane into essentially symmetrical halves -ஆரச்சமச்சீர்
  99. Actinomorphic flower-   a  flower  having radial  symmetry.  The existence of  two or  more  planes  taken perpendicular  to  the  face  of  the  flower  which divide  the flower  into  identical  halve-ஆரச்சமசீர்கொண்ட மலர். (See  zygomorphic)
  100.  Actinomycetes- prokaryotic organisms that are classified as filamentous bacteria-இழைபேக்டீரியங்கள்
  101. Activators- catalysts, drivers-கனிம ஊக்கிகள்
  102. Aculeate -sharply pointed; also,prickly- கூர் நுனி கொண்டிருக்கிற, முட்களைக் கொண்டிருக்கிற
  103. Aculeosus- furnished with prickles-  சிறு முட்கள் நிறைந்த
  104. Aculeus- a prickle-  சிறுமுள்
  105. Acumen- a tapering point- குறுகலான நுனிப்புள்ளி
  106. Acuminate- tapering gradually to a protracted point/Long, pointed, gradually tapering towards apex – நீண்ட, கூர்மையான, படிப்படியாக உச்சியை நோக்கி குறுகலாகும் கூர் நுனி-அரசிலையின் நுனியை போல
  107. Acuminately-cuspidate- Acuminate, and ending in a bristle-குறுகலான நுனியில் சிறுமுள்கொண்டிருக்கிற, அடிநிலைக்குரிய/அடிப்பகுதியில் அமைந்திருக்கிற/ இரண்டாகப் பிரிந்த, இரண்டு பிரிவாக உள்ள,இரு கூறாக்கு
  108. Acuminifolius- where the leaf is acuminate.  படிப்படியாக உச்சியை நோக்கி கூராகிய நுனி கொண்டிருக்கும் இலை (அரச மரத்தின் இலைகள்)
  109. Acutangular-where the edges of stems, are sharp, and a transverse section presents acute angles; Sometimes used also, where the leaves are divided into many narrow lobes-கூரிய விளிம்புகளை உடைய தண்டுகள் அல்லது இலைகளின் வரிகளை குறிக்கிறது. பல வரிகளை கொண்டிருக்கும் இலைகளையும் குறிக்கும்  சொல்
  110. Acute- ending in a sharp point (apex of a leaf) ; with an angle less than 45 degrees to the midrib (leaf side veins)- இலைகளின் கூர் நுனி 
  111. Acute-emarginatus- notched, but ending abruptly- முடிச்சு கொண்டிருக்கும் திடீரென வெட்டப்பட்டது போலிருக்கும் அகன்ற இலை நுனி
  112.      Acutiflorus- where the petals, or lobes of the corolla, terminate in a point- ஒரு  கூர் புள்ளியில் முடியும் இதழ்கள்
  113.       Acutifolius-  where the leaves are pointed- கூரான நுனிகொண்ட இலைகள்.
  114.      Acutilobus- where the lobes of the leaves are pointed- கூரிய இலை மடல்கள்.
  115.        Acutus- terminating in a sharp or well-defined angle-ஓரளவுக்கு கூரான இலைநுனி
  116.        Acyclic- with the floral parts arranged spirally rather than in whorls-சுழல் வட்டச்சுற்றில் அமைந்த மலரின் பாகங்கள்/அடுக்குகளாக இல்லாமல்
  117. Adaptation – the state or process of changing to suit a new situation- the changes to the structure of a living organism to adapt better to an environment -தகவமைப்பு
  118. Adaxial- contrast upper surface of a leaf-  இலையின் மேற்பரப்பு/ஊடச்சுநோக்கிய
  119. Additive-In food technology, any natural or artificial chemical added to prolong the shelf life of processed foods (salt or nitrates), alter the color or flavor of food, or minerals)- உணவுப்பொருட்களில்  சுவை நிறம் ஆகியவற்றை கூட்டும்பொருட்டு சேர்க்கப்படும் இயற்கையான அல்லது செயற்கைப் பொருட்கள்
  120.  Adductores- the young state of the mosses-இளம் படர் பாசிச்செடிகள் 
  121. Adelphic, adelphous- when the stamens are united by their filaments into one bundle-ஒற்றைக் கற்றையாக இணைந்த மகரந்த தாள் காம்புகள்
  122. Adenocalyx- where the calyx is studded with glandular points-சுரப்பிப் புள்ளிகள் கொண்ட அல்லிவட்டம்.
  123. Adenocarpus-gland-fruit (the glandular pod)-சுரப்பிகளை கொண்டிருக்கும் கனி
  124. Adenophorus- which has glands about it- சுரப்பிகளை கொண்டிருக்கிற.
  125. Adenophyllus- a leaf studded with glandular spots, or bearing distinct glands. தெளிவாக தெரியும் சுரப்பிப்புள்ளிகளை கொண்டிருக்கும் இலைகள்
  126. Adenopodus- bearing glands on the petioles-  சுரப்பிகளை கொண்டிருக்கும் இலைக்காம்புகள்
  127. Adenostemon- where there are glands on the stamens-சுரப்பிகள் கொண்ட மகரந்த தாள்கள்
  128. Adequate – good enough; acceptable. -போதிய
  129. Adfluxion-  the force by which the sap is drawn towards the leave- சாற்றை இலைகளை நோக்கி இழுக்கும் விசை
  130. Adglutinate- same as accrete -திரட்டுதல்
  131. Adherence, adhesion- the complete union, or grafting together of parts, which originally, or in their nascent state, were distinct- இணைந்திருத்தல்/ ஒட்டிக்கொண்டிருத்தல்
  132. Adherent- Sticking together of unlike parts-two or more organs appearing to be fused but actually separable- இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்புக்கள்( பிரிக்க முடியும்படி) இணைந்திருத்தல். 
  133. Adherent- Having the quality of clinging or sticking fast to something.  Attaching or pressing against a different organ -ஒட்டிக்கொள்ளும்/ பற்றிக்கொள்ளும்
  134. Adhesion – bands of scar-like tissue that form between two surfaces inside the body and cause them to stick together. -ஒட்டிணைவு.
  135.   Adhesive – any substance that is capable of holding materials together in a functional manner by surface attachment that resists separation. ஒட்டி,பசைமம்
  136. Adiscalis- (a without, a disk) where the stamens are inserted immediately into the torus, without the intervention of a fleshy disk found in some flowers-சதைப்பற்றான தட்டுக்களில்லாது, மலர்த்தளத்தில் நேரடியாக இணைந்திருக்கின்ற மகரந்த தாள்கள்.
  137. Adminiculum- a prop, stay, support- முட்டு/ஆதரவு.
  138. Admixture- a material other than water which aggregates-கலப்படச்சேர்க்கை.
  139. Admotivus-  in germination, when the episperm investing the extremity of a swollen cotyledon, remains laterally attached to the base of the cotyledon-விதை  முளைத்தலின் போது விதைவெளியுறை,  வீங்கிய வித்திலையின் அடிப்பகுதியுடன் பக்கவாட்டில் இணைந்திருப்பது
  140. Adnacens, synonym for young bulb; also for suckers of some monocotyledons-ஒரு வித்திலை தாவரங்களின் இளம்  அடிநில குமிழ்த்தண்டு அல்லது வேர்த்தூர்
  141. Adnate- fused to an organ of a different kind, (A stamen fused to a petal or an anther fused for its whole length to the filament)  Fused to an un-like part, -பிறிதொரு பாகத்துடன் இணைந்திருத்தல் (மகரந்த தாள் இதழுடன் இணைந்திருப்பது)
  142. Adpressed- lying close to another organ but not fused to it. (See appressed) பிறிதொரு உறுப்புடன் நெருங்கி ஆனால் ஒட்டாமல் இணைந்திருத்தல்.
  143. Adpressus, same as Adpressed- மிக அருகில் நெருங்கி அமைந்திருப்பது
  144. Adsorption – capability of all solid substances to attract to their surfaces molecules of gases or solutions with which they are in contact-வெளியுறிஞ்சல்
  145. Adulterant- contaminant something that is or that makes impure-கலப்படப்பொருள்
  146. Adulteration-the process of adulterating-கலப்படமாக்கம்
  147. Adult-the final growth phase of the leaves- முதிர்ந்த 
  148. Aduncate- hooked- கொக்கி வடிவான. கொக்கி கொண்டிருக்கிற
  149. Adventitious -arising in abnormal positions-வேற்றிடங்களிலிருந்து உருவாகின்ற- வேர்களை, இலைமொட்டுக்களை குறிப்பது
  150.  Adventitious roots- a root that arises from any point other than the radicle or the root -வேற்றிட வேர்கள்- இடமாறு வேர்
  151. Adventive embryony-   the process of the embryonic development without fertilization. (from nucellus or integument but not from gametophyte)-வேற்றிடக் கருத்தோன்றல்.
  152. Adverse-when one part is placed directly opposite or over against another. ( Where the stigma turns towards the circumference of the flower, so as to face the stamens)- ஒரு உறுப்பு பிறிதொரு  உறுப்புக்கு நேர் எதிரில் அமைந்திருப்பது.
  153. Aequilateral- equal-sided, as opposed to oblique சரி சமமான         
  154. Adventive-not native and not fully established; locally or temporarily naturalized. புறமிருந்து வருகிற, வெளிப்பொருள்.
  155. Aerated water-காற்றுட்டிய நீர் : காற்றினைச் செலுத்தித் தூய்மையாக்கப்பட்ட நீர்
  156. Aeration-the process by which air is circulated through-காற்றூட்டம்
  157. Aeration-காற்றூடல்: காற்றோட்டம் மூலமாகக் குளிர்விக்கும் கலவை செய்யும் செய்முறை
  158. Aerenchyma- modified parenchymatous tissue having large intracellular air spaces that is found especially in aquatic plants where it facilitates gaseous exchange and maintains buoyancy -நீர்த்தவரங்களில் மிதவைத்தனமைக்கு காரணமான செல்களின் இடையில் காற்றறைகளை கொண்டிருக்கும் காற்றுத்திசு.
  159. Aerial- Occurring above ground or water- நீர் அல்லது நிலமட்டத்துக்கு மேலிருப்பது
  160. Aerial root – roots that are exposed to the air all or most the time/ a root that is produced above the ground-தாங்கு வேர். ஆகாய வேர்/ விழுது/தூண்வேர்/காற்றூடான வேர்
  161. Aerobes-an organism able to live and reproduce only in the presence of free oxygen -காற்று சுவாசிகள்
  162. Aerophilic- living or active only in the presence of oxygen-காற்று சுவாச விரும்பி
  163. Aerophyte- a plant which lives entirely out of the ground or water: as many Orchidaceae, termed Air-plants, whose roots cling to the branches and trunks of trees-நிலத்திலும் நீரிலும் இருக்காத, பிற தாவரங்களின் மீது வளரும் தொற்றுத்தாவரங்கள் (சில ஆர்கிடுகள்)
  164. Aeroponics- the process of growing plants in an air or mist environment without the use of soil or an aggregate medium- காற்றுத்தாவர  வளர்ப்பு அல்லது பனிமூட்ட தாவர வளர்ப்பு.
  165. Aerosol- தூசிப்படலம்: காற்றில் மிதக்கும் சிறு சிறு துகள்கள். (தூசி, மூடுபனி, புகை)
  166. Aerotropism-(oxytropism) – the growth of an organism either toward or away from a source of air/oxyge-காற்றூட்டத்துவம்
  167. Aesthetics- the philosophical study of beauty and taste-   அழகுணர்வு
  168.  Aestivation -the arrangement of sepals and petals in a flower bud before it opens-மலர் அரும்பில் அல்லி மற்றும் புல்லி இதழ்களின் அமைவு-புல்லி, அல்லி இதழமைவு
  169. Aestivum / Aestivalis- Summer- கோடை
  170. Aestuans- glowing-ஒளிர்கிற
  171. Aethusa -Burning-one- எரி நெடி கொண்ட
  172. Aetiology, Etiology- நோய்முதல் ஆய்வியல்: நோய்க்கான காரணம் பற்றி ஆராயும் துறை
  173. Affinity- when the relation which plants or groups of plants bear to each other is very close, and depends upon some striking resemblance between their most important organs- இன உறவு
  174. African mahogany- ஆஃப்ரிக்கச் சீமை நூக்கு: சீமை நூக்குக் குடும்பத்தைச் சேர்ந்த ஒர் அரிய மரவகை. முக்கியமாக ஆஃப்ரிக்காவில் காணப்படுவது. மிகுந்த உயரமும் அகலமும் உடைய இந்த மரம் நல்ல மெருகேற்றும் கட்டுமான மரவகை.  
  175. Africanus-  African- ஆப்பிரிக்காவுக்கு சொந்தமான.
  176. Agamic- synonym for cryptogamic- விதைகளற்ற- ஸ்போர்களை மட்டும் கொண்டிருக்கிற (பாசிகள்  பூஞ்சைகள் மற்றும் படுவ (படர்) பாசிகள்)
  177. Agar-  It is a jelly obtained from seaweeds which is used as a medium for culturing bacteria-கடற்பாசிகளிலிருந்து/ கடற்கோரை (sea weeds)களிலிருந்து பெறப்பட்ட,( பாக்டீரியா வளர்ப்பிற்கான) ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிற ஜெல்லி/கடற்கோரைக் கூழ்
  178. Agaric- the dried umbrella like fruiting body of a fungus நிலக்குடை காளான்,
  179. Agave-  genus of monocots native to the hot and arid regions, characterized by a rosette of succulent or leathery leaves – ரயில் கற்றாழை/கள்ளிக்கற்றாழை
  180.  Agave fiber-Sisal Fiber-fiber from the Agave leaves-கள்ளிக்கற்றாழை நார்
  181. Agglomerated- collected closely together into a head or mass; as the cones on the Scotch-pine, or the flowers of a Scabious-நெருக்கமாக சேகரிக்கப்பட்டவைகளின்  தொகுப்பு (மலர்கள் அல்லது கோன்கள்)
  182. Aggregate- a group of closely related species or sub-species-ஒத்த உறுப்புக்களின் அல்லது சிற்றினங்களின் திரள்.
  183. Aggregate fruit- A cluster of small fleshy fruits originating from a number of separate pistils in a single flower-திரள்கனி
  184. Aggregated- Clustered together as the fruit of the mulberry. Much the same as agglomerated-  திரண்ட
  185. Aggregation, collection, accumulation, assemblage – several things grouped together or considered as a whole- பலவற்றை ஒன்றாக திரட்டுதல்
  186. Aging- the process of becoming older. முதுமை/முதிர்தல்/முதிர்வு
  187. Agravic – of or relating to a theoretical condition of no gravitation-புவிஈர்ப்பு இன்மை: புவிஈர்ப்பு விசை இல்லாத ஒரு நிலை, எடையின்மை நிலை
  188. Agretis- Applied to wild flowers, whether indigenous or naturalized-காட்டு மலர்கள்.
  189. Aggrigate fruit;a fruit that develops from the merger of several ovaries that were separated in a single flower.-
  190. Agriculture – the science of farming, including growing plants and raising animals- தாவர விலங்கு வேளாண்மை/விவசாயம்/ வேளாண்மை, உழவு: பயிர்களைச் சாகுபடி செய்து விளைப்பொருள்களை விளைவித்தல், கால்நடையைப் பேணி வளர்த்தல் ஆகியன தொடர்பான அறிவியல்
  191. Agronomy -science and technology of producing and using plants by agriculture for food, fuel, fiber, chemicals, recreation, or land conservation-உழவியல்.
  192. Agropyron- Field wheat- வயல் கோதுமை
  193. Agrostology- the branch of systematic botany that studies grasses. Also called graminology-புல்லியல்- புல் இயல்
  194. Agynarius, agynicus, agynvs, ( without a woman) -where the pistil is wanting; as in the sterile flowers of Monoecious and Dioecious plants-பெண் இல்லாத -பெண் இனப்பெருக்க  உறுப்பில்லா மலட்டு மலர்கள்.
  195. Aianthous- flowering constantly- தொடர்ந்து மலர்கின்ற.
  196. Aiophyllus -Evergreen- பசுமை மாறாத. 
  197. Airspace-These are the inter-cellular gaps within the Spongy mesophyll of leaves-காற்றிடைவெளி
  198. Ala- a wing. -இறகு
  199. Alatus, winged. –இறகு கொண்டிருக்கிற
  200. Alba / Albus / Album / Albida / Albicans- White- வெண்ணிறம்
  201. Albescens- Whitish- வெள்ளை
  202. Albescent-where any colour assumes a pale tinge, or has a hoary appearance- வெளுத்த நிறம் கொண்ட
  203. Albumen- a substance found in many seeds. It is of a farinaceous, oily, or horny consistency, surrounding the embryo wholly or in part, and affording nourishment to the young plant  – விதைகளில்  கருவுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் கருவூண்
  204. Albuminosus- containing albumen- கருவூண் கொண்டிருக்கும்
  205. Alburnam- The outermost layers of wood- sap wood-மென்கட்டை 
  206. Alcohol – the colourless liquid that is found in drinks such as beer, wine, etc. and is used in medicines, cleaning products, etc, sometimes referred to by the chemical name ethanol -வெறியம்
  207. Aldrovanda-carnivorous waterwheel plant -நீர் சுழல் தாவரம்
  208. Alga-  chiefly aquatic usually chlorophyll-containing nonvascular plant or plantlike organisms / A large group of primitive plants, mostly aquatic and capable of photosynthesis -பாசிகள் 
  209. Algology-the branch of botany that studies seaweeds and algae. Also called phycology-பாசியியல்
  210. Alien plant- a plant belonging to another place-அன்னிய/அயல் தாவரம்
  211. Aliferous-Having wings; winged.-இறகு கொண்ட
  212.  Alignment – arrangement in a straight line or parallel to something else. -இசைவாக்கம்
  213. Alkalescent- partaking of the properties of an alkali-மிதமான காரத்தன்மை
  214. Alkaline soil-clay soils with high ph (greater than 8.5), a poor soil structure and a low infiltration capacity-கார மண்
  215. Alkaline- soils that contain high amounts of various salts of potassium and/or sodium, as well as other soluble minerals, and are basic rather than acidic with a Ph greater than 7.0-காரத்தன்மையுடைய.
  216. Allelopathy-a characteristic of some plants according to which chemical compounds are produced that inhibit the growth of other plants in the immediate vicinity-உயிர்வேதி விளைவு
  217. Alliaceous- possessing the odour of garlic-பூண்டின் நெடி கொண்டிருக்கிற.
  218. Allied Botany-துணைத்தாவரவியல்.
  219. Alligator- to bind, to tie- synonym of fulcrum –இணைக்கிற
  220. Allochrous- changing from one colour to another-ஒரு நிறத்திலிருந்து மற்றோரு நிறத்துக்கு மாறுகிற 
  221. Allomorphic with a shape different from the typical shape-மாற்றுருபு
  222. Allopatric -Species occurring in separate non-overlapping geographical regions-வேற்று இடவழிச் சிற்றினத் தோற்றம், வேற்றிட உயிரினத் தோற்றம்.  
  223. Alluvial soil -deposits of earth, sand, etc., left by water flowing over land that is not permanently submerged-வண்டல் மண்
  224. Almond- the drupaceous fruit of a small tree (Prunus dulcis) பாதாங்கொட்டை
  225. Aloe-a succulent plant with a rosette of thick tapering leaves and bell-shaped or tubular flowers on long stems-சோற்றுக்கற்றாழை
  226. Alpicola / Alpestris-growing at high elevations but not above the timber line-மலைப்பகுதியில் வளர்கின்ற
  227. Alpine- strictly speaking this term refers to the higher parts of the Alps- ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின்  உச்சிப்பகுதி தாவரங்கள்
  228. Alsinaceous,-(from the genus Alsine) applied to a petal having a short but distinct claw, like those of Alsine.  அல்சைன் பேரினத்தாவர மலர்களின் நகம் போன்ற அமைப்பை கொண்டிருக்கும் ஒற்றைஇதழ்
  229. Alternanthera- Alternating-stamens- மாற்றடுக்கில் அமைந்திருக்கும் மகரந்த தாள்கள்
  230. Alternate- A descriptor for the arrangement of leaves (or flowers) placed singly at different levels along a stem. (See opposite.) Alternate Born singly at each node-மாற்றடுக்கு இலை அமைவு
  231. Alternately-pinnate, when the leaflets of a pinnate leaf are not exactly opposite to each other- கூட்டிலைக்காம்பில் மாற்றடுக்கில் அமைந்திருக்கும் சிற்றிலைகள். 
  232. Alternation of Generations-also called metagenesis or heterogenesis, the alternation of a sexual phase and an asexual phase in the life cycle of an organism-சந்ததிப் பரிவிருத்தி , சந்ததி மாற்றம்
  233. Alternifolia / Alternata- Alternate-leaved-மாற்றிலை
  234. Altissima / Altissimum / Altissimus / Altus- Tallest-உயரமான.
  235. Altitude- the height of something above sea level. -கடல்மட்ட குத்துயரம்
  236. Alveolate- studded with cavities, somewhat resembling the cells in a honey-comb; like the receptacles of many Composite-தேன் கூடு போல பல சிற்றறைகளை, சிறு  குழிகளை கொண்டிருத்தல் .  
  237. Amaranthus (Amarantus) unfading-flower -வாடா மலர்
  238. Amarella / Amarus-  Bitter- கசப்புச்சுவை
  239. Amaurus – dark, without lustre -ஒளி குறைந்த, இருண்ட
  240. Amazonicus -a -um from the Amazon basin,South America- அமேஸான் பகுதியை சேர்ந்த
  241. Amber- fossil tree resin – தொல்லுயிர்படிம பிசின்
  242. Ambigenus,- applied to a perianth whose outer surface partakes of the usual character of a calyx, and the inner of a corolla, as in many Mono cotyledonous plants- வெளிப்புறம் அல்லியைப்போலவும் உட்புறம் புல்லியைப்பொலவும் இருக்கும் அதழ்.
  243. Ambiguous, (doubtful) when certain characters of some part or organ are not well marked, so that it cannot be accurately referred to any well-defined condition- பன்மைப்பொருள் கொண்ட- தெளிவில்லாத. 
  244. Ambiparus- producing two kinds; as where a bud contains both flowers and leaves- இரு விதங்களில் உருவாகிற.
  245. Ambleocarpus- to be abortive/where several ovules being abortive  & a few only become perfect seeds-கருக்களில் பல அழிந்தபின்னர் ஒரு சில கருக்கள் மட்டுமே முதிர்ந்து விதையாதல். ஒரு வகை கனியை குறிக்கும் சொல்.
  246. Ambrosfacus- possessing a strong scent like Ambrosia- அம்புரோஷியாவின் இனிப்பு மணம் கொண்ட
  247. Amensalism-a type of biological interaction where one species causes harm to another organism without any cost or benefits to itself-உயிரெதிர்ப்புத்துவம்.
  248. Ament- A dense spike or raceme of unisexual flowers; a catkin – தாழ்ந்து தொங்கிக்கொண்டிருக்கும் மஞ்சரி.
  249. Americana- American- அமெரிக்காவை சேர்ந்த.
  250. Ammophilous- Sand-loving/: living or growing in the sand or in dry sandy places-மணற்பாங்கான வாழிடங்களில் வளர்பவை
  251. Amnios- a viscous fluid which in some ovules surrounds the embryo in its earliest state, and a portion of which afterwards thickens into the “perisperm.” – சில சூலகங்களில் காணப்படும் இளம் கருவை சூழ்ந்திருக்கும் பிசுபிசுப்பான நீர்
  252. Amorphous (without, form)- where the form is not well denned, or distinct- தெளிவற்ற புறத்தோற்றம் கொண்ட.
  253. Ampelo- wine-, vine-, grape- திராட்சை, திராட்சை  மது, திராட்சை கொடி.
  254. Ampelography- the branch of botany that studies the identification and classification of grapes -திராட்சை வளர்ப்பியல்
  255. Amphibia / Amphibius- Living on land and in water- நிலத்திலும் நீரிலும் வாழும் இருவாழ்விகள்.
  256. Amphicarpic- possessing fruit of two kinds—either as regards its form, or period of ripening/ the production of aerial and subterranean fruits/seeds on the same plant- இரு வகையான கனியளிப்பவை
  257. Amphigastrium- a stipular appendage peculiar to certain Jungermanniae, which clasps and covers their stems-தண்டை தழுவி அணைந்துக்கொண்டிருக்கும்  இலையடிச்செதில்
  258. Amphisarca- an indehiscent multi locular fruit, dry externally and pulpy within, மேற்பரப்பு உலர்ந்து உள்ளே சதைப்பற்றாக காணப்படும், பல அறைகள் கொண்ட வெடியாக்கனி. (Melon and Wood apple)
  259. Amphispermium- where the pericarp so closely invests the seed as to maintain the same form with it- அட்டைக்காய்
  260. Amphitrichous-Having a single flagellum on each of two opposite ends-இருமுனைக்கசையிழை
  261. Amphitropal, amphitropus- when the embryo is so much curved, that both ends are brought close together and turned towards the hilum-  இரு நுனியும் வளைந்த கரு. 
  262. Amplexicaulis-(embracing  the stem) when the peduncle, leaf, or stipule is dilated at the base, and extends partially round the stem, so as to clasp it.- மஞ்சரித்தண்டு, இலை அல்லது  இலையடிச்செதில் அகன்று தண்டைசுற்றித் தழுவிக் கொண்டிருப்பது. 
  263. Ampulla- a Bladder –  கைப்பிடிகள் கொண்ட பை (போன்ற அமைப்பு)
  264. Anabolism-the set of metabolic pathways that construct molecules from smaller units-வளர் மாற்றம்
  265. Anacardium-the cashews, genus of flowering plants in the family Anacardiaceae- முந்திரிக்குடும்பத்தின் பேரினம். (தலைகீழ் இதய வடிவம் என்னும் பொருள் கொண்ட சொல்)
  266. Anaerobe-It is an organism which requires oxygen to survive-காற்றின்றி வாழும் உயிரினம்/காற்றில்லா சுவாசிகள்
  267. Analgesics- a substance that reduces pain. -வலிநிவாரணிகள்
  268. Analogous arrangement- Possessing the same or almost the same characteristics -ஒத்த சீரமைப்பு
  269. Analogy- similarity of function and superficial resemblance of structures that have different origins-ஒப்புமை
  270. Analysis – the act of studying or examining something in detail, in order to discover or understand more about it, or your opinion and judgment after doing this-பகுப்பாய்வு
  271. Anamorphosis- an abnormal change in the form of a plant that falsely gives it the appearance of a different species – உருக்குலைவாக்கம்.
  272. Ananas-   tasty fruit, (probably of Peruvian origin)-சுவையான கனி
  273. Anandrious- (of flowers) having no stamens. a double flower in which the stamens have entirely disappeared- ஆண் பகுதியான மகரந்த தாள்கள் இல்லாத மலர்கள்.
  274. Ananthus- flowerless-மலர்களற்ற 
  275. Anasarca- a disease in plants termed dropsy; arising from a super abundance of fluids in their tissue- நீர்கோர்வை நோய்
  276. Anastomosing -connecting with one another, particularly applied to veins- பிணைந்திருத்தல்
  277. Anastomosis-where branches of vascular tissue reunite; as in the reticulations formed by the nerves or veins of many leaves-  இலைகளின் வலை நரம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருப்பது
  278. Anatomy-Study of internal structure of plants-உடற்கூறியல்
  279. Anatropous-position of the ovule appears completely reversed and brought near the hilum- கவிழ்ந்தமைந்திருக்கும் சூலகம்
  280. Ancipital- flattened or compressed, with two edges more or less sharp-. இருகூர்முனைகொண்ட .
  281. Androdynamus-a term which has been employed for Dicotyledonous plants; in which Class the stamens and petals are generally highly developed- மகரந்த தாள்களும் அல்லிவட்ட இதழ்களும் நன்கு வளர்ச்சியடைந்திருக்கும் இரு வித்திலைத்தாவரங்கள்
  282. Androecium- the stamens taken collectively- மகரந்த தாள் தொகுதி/ வட்டம்
  283. Androgynaris- double flowers in which both stamens and pistils have become petaloid-  ஆண் பெண் பகுதிகள் ஒன்றிணைந்து இதழ் போல் அமைந்திருக்கும் மலர்கள்.
  284. Androgynophore- stalk supporting the androecium and gynoecium in some flowers- -சூல்மகரந்த காம்பு
  285. Androgynous- where both stamens and pistils are present within the same perianth-ஆண், பெண் இருபால் கூறுகளையும் உடைய/ அதழ் வட்டத்தில் ஆண்பெண் பகுதிகள் இணைந்தவை 
  286. Andromonoecious- having male flowers and bisexual flowers on the same plant- ஆண் மலர்களும் இருபால் மலர்களும் ஒரே தாவரத்தில் காணப்படுவது. (see. Gynomonoecious)
  287. Andropetalaris- double flowers in which the stamens have become petaloid (the pistils remaining unchanged) அல்லிவட்ட இதழ்களை போலிருக்கும்  மகரந்த தாள் கொண்ட இருபால் மால்ர்கள்
  288. Androphore- talk supporting a group of stamens- மகரந்த வட்டக் காம்பு
  289. Androphorum- whenever the filaments are united together so as to appear as a single support to several anthers, as in monadelphous plants-ஒற்றை மகரந்த தாள் கற்றை
  290. Anemometer- an instrument that measures wind speed.- காற்று வேகமானி
  291. Anemophily –Wind pollinated-காற்றினால் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை
  292. Anfractuous-  intricate turnings -spirally twisted as the anthers of gourds and cucumbers- நெளிந்திருக்கும் மகரந்தப்பைகள் (பூசணி மலர்களில் இருப்பவற்றைப்போல)
  293. Angiocarpus- where the fruit is invested by some extraneous organ so as not to distinguishable- வெளிப்புறம் தெரியாதவாறு பொதிந்திருக்கும் கனிகள்/ மறை கனி
  294. Angiosperms – The flowering plants- சூலகம் கொண்டிருக்கும் பூக்கும் தாவரங்கள்
  295. Angiosperms –  are plants that produce flowers and bear their seeds in fruits.- மூடு விதைச் செடி : பெரும்பாலான பூக்குந் தாவரங்களைப் போன்று ஒரு விதைக் கூட்டினுள் விதைகள் முதிர்ச்சியடையும் தாவரங்கள்
  296. Angle- The angle or point of divergence between the upper side of a branch, leaf, or petiole, and the stem or branch from which it springs-(ஒரு கிளை, இலை அல்லது இலைக்காம்பு ஆகியவற்றின் மேல் பக்கத்திற்கும், அது தோன்றும் தண்டு அல்லது கிளைக்கும் இடையே உள்ள) கோணம் 
  297. Anglica / Anglicum- English-இங்கிலாந்தை சேர்ந்த
  298. Angular- Having sharp angles or corners, generally used in reference to structures such as stems-கோணங்கள் கொண்ட (தண்டு)
  299. Angularis- belonging or attached to an angle or edge-கோணங்கள் கொண்ட
  300. Angustifolium-Narrow-leaved-  குறுகிய இலைகொண்ட
  301. Angustifolius- where the breadth of a leaf is small when compared with its length- நீளத்தை விட குறைவான அகலம் கொண்ட இலைகள்
  302. Anhydrous – (of a substance, especially a crystalline compound) containing no water-நீரற்ற.
  303. Anisatus- partaking of the scent of anise- பெருஞ்சீரக மணம் கொண்டிருக்கிற.
  304. Anise- (Pimpinella anisum) also known as aniseed, is a flowering plant in the family Apiaceae that originated in the eastern Mediterranean and Southeast Asia. Its closest relative include cumin- பெருஞ்சீரகம்
  305. Anisobriatus-a name which has been given to the embryo of monocotyledons, because one side is supposed to possess a greater developing force than the other-  சமச்சீரற்ற- ஒருவித்திலை தாவரங்களின் கருவை குறிப்பது
  306. Anisomericus- where the corresponding parts of a flower are not all regular, or alike-  சமச்சீரற்ற மலரடுக்குகள்
  307. Anisopetalus-where the petals are of unequal size.(Prangos anisopetalus) – சமச்சீரற்ற அல்லிவட்ட இதழ்கள்
  308. Anisostemonis- where the number of stamens in a whorl is different from the number of parts in a whorl of the perianth- மகரந்த தாள்களின் எண்ணிக்கை மலரின் பிற அடுக்குகளைக் காட்டிலும் வேறுபட்டிருப்பது
  309. Anisotropy- the state or condition of certain flowers or plants of having different dimensions along different axes-  மலர்களின் திசை வேற்றுமை-திசையொவ்வாப் பண்பு
  310. Annatto- an orange-red condiment and food coloring derived from the seeds of the achiote tree (Bixa orellana), native to tropical America-செம்மஞ்சள் சாயம்.
  311. Annual crop- production of new seeds in a single year and then dies-ஒரு பருவப்பயிர்
  312. Annual Rings-the growth layers of wood that are produced each year in the stems and roots of trees and shrubs-ஆண்டு வளையங்கள், வெட்டு மரத்தில் மரத்தின் ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கும் வளைய வரை.
  313. Annulatus- ringed-  வளையம் கொண்ட 
  314. Annulus- A row of cells in the walls of a sporangium that shrink or expand to cause the rupture of the sporangium and release of spores- வளைய வடிவ பொருள், அமைப்பு
  315. Anode –  an electrode of a polarized electrical device through which conventional current enters the device-நேர்மின்வாய்
  316. Anomalus-  abnormal- அசாதரணமான/ வழக்கத்துக்கு மாறான
  317. Antagonism-the inhibitory relationships between microorganisms including plants-எதிர்ப்புத்துவம், முரண்பாடு
  318. Antepetalous- Directly opposite the petals-இதழெதிர் அமைவு
  319. Anteriolateral-situated or occurring in front and to the side-அருகுபக்க அமைப்பு
  320. Anterior- In the front; on the side away from the axis- முன்புறம்
  321. Antesepalous -Directly opposite the sepals- புல்லியெதிர் அமைவு
  322. Antha-Anthos- Flowers- மலர்கள்
  323. Anther- that portion of the stamen which contains the pollen. It is most frequently formed of two distinct cells, and is very variously shaped, and generally attached towards the summit of a filament- மகரந்தக்காம்பில் இணைந்திருக்கும் மகரந்தப் பை
  324. Antheridium- The male reproductive structure in mosses and ferns, produced at the gametophytic stage -கீழ்நிலைத்தாவரங்களின் ஆண் இனபெருக்க பகுதி.
  325. Antheriferous-a part which supports the anthers; as the filament generally- மகரந்தப்பைகளை தாங்குபவை (மகரந்த காம்புகள்)
  326. Antherogenous- those double flowers whose supernumerary petals have originated from the transformation of anthers; (as in Aquilegia vulgaris var. corniculate)-மகரந்த தாள்களிலிருந்து உருவான கூடுதல் இதழ்கள்.
  327. Anthesis-  the time when the flower has arrived at perfection and the anther is just bursting; or  the expansion of the flower / bursting of the anthers.  மகரந்தப்பை திறப்பு/வெடிப்பு 
  328. Anthocarpa- false fruit consisting of the true fruit and the base of the floral whorls- கனியுடன் மலரடிப்பகுதியும் இணைந்திருக்கும் போலிக்கனி.
  329. Anthodium- whole capitulum – மலர்த்தலை.
  330. Anthropogenic – Originating in human activity and used in connection with environmental issues-  மனிதச்செயல்பாடுகள்
  331. Anthropology – the study of the origin and development of human societies and cultures-மாந்தரியல், மனிதவியல்.
  332. Anthus-Flower- மலர்
  333. Antibiosis-an antagonistic association between two organisms (especially microorganisms), in which one is adversely affected- உயிர்ப்பகைமை.
  334. Antibiotic-It is a substance, synthesizes by microorganism, which damages or kills other microorganism- நுண்ணுயிர்க்கொல்லி/உயிரெதிர்மம்/நுண்ணுயிரி முறி. 
  335. Anticlinanthus-the inferior and scaly part of some receptacle in the Composite-சூரிய காந்தி குடும்பத்தின் சில வகைகளின் பூத்தளங்களின் அடிபுறம் காணப்படும் செதில் போன்ற பகுதி.
  336. Antidote — a medical substance that is used to prevent a poison or a disease from having an effect. மாற்று, நஞ்சு அல்லது ஒரு பிணியின் தாக்கத்தைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்துப்பொருள்; நஞ்சுமுறிவு அல்லது நோய்மாற்று மருந்து.
  337. Antimicrobial- medicines used to prevent and treat infections in humans, animals and plants-நுண்ணுயிர் எதிர்ப்பு/உயிரிஎதிர்ப்பு/முரண்உயிர் அழிப்பு
  338. Antiseptics-are chemicals for cleaning the skin and wounds. They can kill or prevent the growth of microorganisms-கிருமிநாசினிகள்
  339. Antispasmodic- a drug used to relieve spasm of involuntary muscle-நடுக்க நீக்கி/வலிப்பு நீக்கி
  340. Antitropal-where the embryo lies reversed with respect to the seed,its cotyledons, or upper extremity, being directed towards the hilum, or base of the seed, (as in Daphne)- விதைக்கருவின் தலைகீழமைவு 
  341. Antrorse- Directed upward or forward to the tip, cf. Retrorse- நுனி நோக்கிய/மேல் நோக்கிய.
  342. Antrum- a synonym for pomum /any type of fruit (applied to apples, cherries, nuts, berries, figs, dates, etc.) / fruit tree- கனி /கனி மரங்கள்
  343. Aperturate- with one or more openings or apertures- பல திறப்புக்கள் கொண்டிருக்கிற
  344. Aperture-  the opening of a lens’s diaphragm through which light passes- ஒளிபுகு இடைவெளி -ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம்.  
  345. Apertus- naked- திறந்த
  346. Apetalous Without petals-  a flower destitute of true corolla, however much the calyx may be coloured and petaloid.  Lacking petals- இதழ்களற்ற (எனினும் அல்லிகளைபோலவே தோன்றும் வண்ணமயமான புல்லிவட்டம் கொண்டிருக்கிற)
  347. Apex  -Tip, uppermost part- நுனி
  348. APG  – Acronym for  the  Angiosperm  Phylogeny Group. 
  349. Aphids -soft-bodied insects of the Order Homoptera that feed on the sap of cells on the underside of rose leaves and on young shoots and flower buds-  அசுவினி(பூச்சி)
  350. Aphyllous- destitute of leaves. Sometimes signifies their partial or imperfect production-  இலைகளற்றவை
  351. Apical bud- the primary growing point located at the apex (tip) of the stem -உச்சியரும்பு
  352. Apical dominance- an inhibitory control exercised by the apical portions of the shoot over the growth of the lateral buds below -உச்சியாட்சி/நுனி ஆதிக்கம்
  353. Apical growth- growth occurring at the tips of the plant, both top and bottom- நுனி வளர்ச்சி.
  354. Apical -Positioned at the tip of a structure- நுனியமைவு
  355. Apically-at the apex of (tip)-நுனியில்
  356. Apices (apex) – Top- உச்சி 
  357. Apicillaris- applied to any organ which is inserted upon or towards the summit of another; or used to signify some circumstance connected with the summit of an organ; as in the Caryophyllaceae, where the dehiscence of the capsule is at the summit- உச்சியில் அமைந்திருக்கிற/உச்சியில் நிகழ்கிற
  358. Apicula- a sharp but short point in which a leaf or other organ terminates, and which is not very stiff- குறுமென்கூர் (இலை நுனியை குறிக்கும் சொல்)
  359. Apiculate- With a short, abrupt point ending in an abrupt slender tip which is not stiff ending in an abrupt slender tip which is not stiff: ending abruptly in a short flexible point-அலகுடைய
  360. Apiculture- the scientific method of rearing honeybees-தேனீ வளர்ப்பு
  361. Apis- Bee – தேனீ
  362. Apocarpous -Carpel- not fused-  இணையாத  சூலகங்கள-இணையா சூலிலைகள்.
  363. Apocarpy- not producing fruits- கனி உருவாக்காத.
  364. Apogamy – development of an embryo without fertilization; especially the development in some ferns of a sporophyte from the gametophyte without fertilization- பால் கலவா  வழிப்பிறப்பு,
  365. Apopetalous- Having separate petals- தனி இதழ் கொண்டிருக்கிற
  366. Apophysis – a natural swelling or enlargement: at the base of the stalk or seta in certain mosses or on the cone scale of certain conifers swelling on the surface- பருத்த காம்பு 
  367. Aporo- impenetrable- துளைக்க முடியாத
  368. Apothecium-the organ of fructification peculiar to Lichens, which contains their sporules, and is frequently cup shaped. – பூஞ்சை மற்றும் லைக்கன்களின் கிண்ணம் போன்ற இனப்பெருக்க அமைப்பு
  369. Apparatus – the set of tools, instruments or equipment used for doing a job or an activity-செயற்கருவி
  370. Appendage- A secondary part attached to a main structure, a part superadded to another; thus the leaves are appendages to the stem- ஒட்டு/இணைப்பு.
  371. Appendant- when the hilum is towards the upper part of the seed, which is sessile, or nearly so, on the placenta; as in the plum and other stone fruit. 
  372. Appendiculatus- furnished with any kind of appendage-இணைப்புகள் கொண்டிருக்கிற.
  373. Appetizer-a small portion of a food or drink served before or at the beginning of a meal to stimulate the desire to eat-பசியூட்டி/பசிபெருக்கி/ பசிதூண்டி
  374. Applanate- flattened-தட்டையாக்கப்பட்ட
  375. Applicatus – where two surfaces are applied face to face without folds of any sort (as in the venation of the leaves of Aloe)
  376. Apposite-where similar parts are similarly placed. Thus, in most anthers the dehiscence of each lobe is towards the same side. Two ovules in the same cell are apposite when they are attached close to the same point of the placenta- அருகருகில் அமைந்திருக்கிற
  377. Appressed (pressed hard together) where a part lies close to another throughout its whole length; as the pubescence on some leaves and branches/ as leaves on a stem or hairs on a leaf-ஒன்றின் மீது  அழுத்தமாக ஒட்டி படர்ந்த.  
  378. Approach graft-The basic technique in grafting consists of placing cambial tissues of stock and scion in intimate association-அணுகு/ ஒட்டுச்சினை
  379. Approximate – Borne close together, but not fused, இணைதலின்றி மிக நெருங்கி அமைந்திருக்கின்ற
  380. Apricot color- yellow tinged with red, -பாதாமி கனியின் செம்மஞ்சள் நிறம் கொண்டிருக்கிற
  381. Apterous (a without, a wing) without any membranous appendage like those on certain petioles, seeds, சிறகற்ற,இறகற்ற
  382. Apyrenus, (without, a seed) fruit which produces no seeds, as many cultivated varieties of Pine-apple, Orange-விதையில்லா கனி.
  383. Aquaculture-farming in water-நீரியல் வளர்ப்பு
  384. Aquaponics- Aquaponics is a combination of aquaculture and hydroponics, which involves growing fish and other aquatic animals and growing plants without soil-மீன் வளர்ப்பு மற்றும் நீரியல் தாவர வளர்ப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஒரு வடிவம்
  385. Aquatic- a plant /organism, living in or on water for all or a substantial part of its life span in water- நீர் வாழ்விகள்
  386. Aqueous- generally indicates some nearly colorless tint. நீர்ம /நீரிய/நீர் கலந்த
  387. Arabicus- Arabian-அரேபியாவை சேர்ந்த.
  388. Arable – Arable land is suitable for growing crop plants-விவசாயத்திற்கு ஏற்ற/விளைவிற்குரிய.
  389. Arachnoid- composed of soft downy fibres, resembling the web of the gossamer spider; as the pubescence on the leaves of Sempervivum arachnoideum-நுலாம்படை போன்ற,/சிலந்திநூல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள.
  390. Arborescens- becoming or tending to be of tree-like dimensions- மரம் போன்ற தோற்றம் கொண்ட
  391. Arborescens  Tree-like-உருவில் மரம் போன்ற
  392. Arboricola- On Trees- மரங்களின் மீது
  393. Arboriculture- the cultivation, management, and study of individual trees, shrubs, vines, and other perennial woody plants-மரச்சாகுபடி
  394. Arbuscula, a small shrub with the appearance of a tree, like many heaths- மரம் போலிருக்கும் புதர்ச்செடி.
  395. Arbusculus – arbuscularis – small-tree-like, shrubby- புதர் போன்ற, கிளைத்த வடிவம். 
  396. Archaeobotany or archaeobotany-the study of ancient plant remains-தொல்தாவரவியல்.
  397. Archegonium-The female reproductive structure in mosses and ferns, produced at the gametophytic stage – கீழ் நிலைத்தாவரங்களின் சூற்பை. 
  398. Arciatus- bent like a bow, so as to form a large arc of a circle. Curved – வில் போல் வளைந்த.
  399. Arcticum / Arctica-   Arctic-ஆர்டிக் பகுதியை சேர்ந்த.
  400. Arcuate- Moderately arched or curved, Leaves with arcuate venation have veins that are curve towards the apex -வளைந்த
  401. Ardil- Ardil is a synthetic fibre produced from the protein found in pea nuts-செயற்கை நார்
  402. Areca nut/ betel nut -the fruit of the areca palm -பாக்குக்கொட்டை
  403. Arenia / Arenarium / Arenaria / Arenarius On Sand / Dunes- மணற் குன்றுகளில் வளர்கின்ற
  404. Arenicolous -Growing in sandy substrate-மணலில் வளருகின்ற
  405. Areole -Areoles are circular clusters of spines on a cactus  a raised area on a cactus from which spines develop – (கள்ளிகளின்) முகட்டு முள்.
  406. Areola- (little beds in a garden) spaces distinctly marked out on a surface. Otherwise used synonymously with small cells or cavities.  The area or organ from which spines, flowers, or new branches appear-பாத்திகள்/சிறு குழிகள், கள்ளிகளில் முட்கள் தோன்றுமிடம்
  407. Argentatum / Argetea – Silvery- வெள்ளி நிறம்
  408. Arhizus- a term which has been applied to plants whose roots are very small. Also to those whose reproductive organs have no radicle, and consequently no true embryo- வேரற்ற. 
  409. Arid -environment specialized very dry and without enough rain for plants-வறண்ட நிலங்கள்
  410. Aril- A fleshy outgrowth from the funiculus that partly or wholly encloses a seed, usually brightly coloured and fleshy -விதைஅலகு (சீனிப்புளி)
  411. Arillatus,-furnished with an aril -விதை அலகு கொண்ட
  412. Arillus/Mace -spice derived from the aril of nutmeg-ஜாதிப்பத்திரி
  413. Arista- (the beard of corn) an awn- கதிரலகு
  414. Aristate -having a stiff, bristle-like tip-கதிரலகுகொண்ட
  415. Aristatus- awned- same as Aristate 
  416. Aristulate- having a small, stiff, bristle-like tip; a diminutive of aristate- நுண் கதிரலகு கொண்ட
  417. Aristulatus- furnished with a very small arista/same as Aristulate.
  418. Armata- Prickly- குத்துகின்ற
  419. Armature- Thorns, spines, or prickles-முட்கள்
  420. Armed- provided with prickles, spines or thorns- முட்கள் கொண்ட
  421. Armeniacum- from Armenia- ஆர்மீனியாவுக்கு சொந்தமான.
  422. Aromatic crops- plants that contain aromatic compounds – basically essential oils that are volatile at room temperature-நறுமணத்தாவரங்கள்
  423. Arrack-a distilled alcoholic drink typically produced in India, Sri Lanka and Southeast Asia, made from the fermented sap of coconut flowers or sugarcane, and also with grain or fruit-சாராயம்-நாட்டுச்சாராயம்
  424. Arrectus- erect-நிமிர்ந்த
  425. Arrow grass-monocotyledonous perennials having long thin fleshy leaves and spikes of inconspicuous flowers-அம்புத்தலைப்புல்
  426. Arrowroot- a herbaceous Caribbean plant from which a starch is prepared-கூவைக்கிழங்கு
  427. Arrow-shaped or -headed- synonym for Sagittate -அம்பு வடிவம்
  428. Artichoke- (Cynara cardunculus, variety scolymus), large thistle like perennial plant of the aster family (Asteraceae) grown for its edible flower buds-முள்ளிக்கிழங்கு/ கூனிமலர்.
  429. Articulate jointed- usually fracturing easily at the nodes or point of articulation into segments or articles-இணைப்பு உறுப்புகள் கொண்ட .
  430. Artiphyllous- where a joint of the stem bears leaf-buds-இலையரும்புகள் கொண்ட தண்டுக்கணு 
  431. Arundinaceus -a -um Arundo-like, reed-like- நாணல் போன்ற.
  432. Arvensis / Arvense- Of Arable/Ploughed Fields- உழுத வயலில் வாழ்பவை.
  433. Asafoetida- hing ,oligo gum resin of the roots of Ferula asafoetida-பெருங்காயம்
  434. Ascellus- synonym for ascus. 
  435. Ascending- arched upwards in the lower part and becoming erect in the upper part-ஏறுதல்.   
  436. Ascent of sap-the upward movement of water and minerals from the root to the aerial parts of the plant-சாற்றேற்றம்
  437. Ascidium- an appendage termed a pitcher- குடுவை இணைப்பு
  438. Asepalous- Without sepals-புல்லியற்ற.
  439. Aseptate- not divided into cells or sections by septa-குறுக்கு சுவரற்ற
  440. Asexual reproduction – reproduction in which new organisms are formed a single parent without gamete production-கலவா இனப்பெருக்கம்-பாலிலா இனப்பெருக்கம்.
  441. Asiatica / Asiaticus-  Asian- ஆசியாவை சேர்ந்த.
  442. Aspera / Asper- Rough- தொடுவதற்கு கடினமான.
  443. Aspergillum -a brush- little tufts of hair which collected together assume the form of a brush-புருசு போன்ற  கொத்து வளரிகள்
  444. Asperous- rough to the touch- சொற சொறப்பான
  445. Assimilation–that act by which a plant converts nutritious matter into its own substance. தன்மயமாதல், ஒன்றியமாக்கம்
  446. Association (Plant)- A grouping of plant species, or a plant community, that recurs across the landscape. Plant associations are used as indicators of environmental conditions such as temperature, moisture, light, etc -தாவர கூட்டகம் ,கூட்டங்கள்
  447. Associative symbiont- A relationship between two species of organisms in which both members benefit from the association -சகவாச கூட்டுயிர்
  448. Assurgens- the resemblance borne by a plant to an original race or stock from which it is descended, though it may have sprung from the seed of some different variety of the same species-காட்டு மூதாதையின் சாயல் கொண்டிருக்கிற.
  449. Aster-a genus of perennial flowering plants in the family Asteraceae/ a unique daisy-like wildflower that’s known for its star-shaped flower head. சாமந்தியினச்செடி. சாமந்தியைபோன்ற மலர்.
  450. Astringent- able to stop a cut from bleeding, or to make the skin tighter so .that it feels less oily. -கசிவகற்றி
  451. Astrobotany-the branch of botany that investigates the possibility that plants grow on other planets- வான் தாவரவியல்.
  452. Asymmetrical  – having disproportionate arrangement of parts; exhibiting no pattern, not divided into like and/or equal parts-சீர்மையற்ற;சமச்சீரற்ற.
  453. Ater- pure black, as distinguished from Niger-தூய கருப்பு,
  454. Atmosphere-  mixture of gases that surrounds the Earth -வளிமண்டலம்
  455. Atropurpurea- Dark Purple- அடர் ஊதா.
  456. Atrorubens- Dark-Red- ஆழ்ந்த சிவப்பு.
  457. Atrovirens- Dark Green- அடர் பச்சை.
  458. Attenuate- tapering gradually- படிப்படியாக குறைகிற.
  459. Attenuation-the reduction of the force, effect, or value of something-நொய்மையாக்கல்.
  460. Attitude – a position of the body or a figure  – உடல் நிலை; நிலை
  461. Aurantiaca / aurantiacus- Orange/of an orange color –  ஆரஞ்சு நிறம்
  462. Aurantiacus – orange-coloured-ஆரஞ்சு நிறம்
  463. Aurantium / Aurea / Aureus Orange / Golden Yellow- பொன்மஞ்சள் நிறம்.
  464. Aurea- golden-பொன்னிறம்
  465. Aureus- (golden) of a bright golden colour; composed of yellow with a small portion of red-செம்பொன்னிறம்
  466. Auri- Little Ear-சிறு கதிரி
  467. Auricula-(the ear, or lap of the ear) rounded appendages at the base of some leaves; as in those of Salvia officinalis; or those otherwise called wings on the petioles, as in the Orange,- வட்டச் சிற்றிறகு
  468. Auriculatus- (having auriculae) eared-வட்டச்சிற்றிறகு கொண்ட.
  469. Auriferous – பொன் தருகிற; பொன் விளைகிற 
  470. Australiensis- Australian-ஆஸ்திரேலியாவை சேர்ந்த.
  471. Australis- to plants ‘which grow in warm climates, without regard to their being strictly confined to the southern hemisphere. தென் அரைக்கோள தாவரங்கள்.
  472. Autocarpian, autocarpeanus- synonym for a ” superior” fruit, one which contracts no adhesion with the perianth-மேல் சூலக கனி 
  473. Autogamy -Self-fertilization- தன்னினக் கலப்பு
  474. Autolysis – உயிரணு அழிவு : உடலிலுள்ள உயிரணுக்கள் உடலினின்றும் வடியும் ஊன் நீரால் அழிதல்
  475. Autophilous: self-pollinated-தன்மகரந்த சேர்க்கை
  476. Autotroph- an organism that can produce its own food using light, water, carbon dioxide, or other chemicals-சுயஜீவி
  477. Autotrophic- self feeding, not depending on parasitism or entirely on organic matter. Cf. Heterotrophic- தன்னூட்டு முறை
  478. Autotrophy- (in certain plants and bacteria) the process of making food from inorganic substances -தற்சார்பு ஊட்ட முறை
  479. Autumnalis / Autumnale/ Autumn/ of the autumn -இலையுதிர்காலம்,இலையுதிர் காலத்தில் வளர்கின்ற/ மலர்கின்ற
  480. Auxin – Growth hormone found in plants- வளரூக்கி/ ஒரு வகை இயக்கச்சாறு.
  481. Avena- Nourishment- ஊட்டச்சத்து
  482. Avenaceous- bearing some relation, or casual resemblance to oats- ஓட்ஸ் தானியத்தை போன்ற.
  483. Avenius- without a vein/reinless- இலை நரம்புகளற்ற
  484. Aversus, (turned back) inverse- தலைகீழ்/ நேர்மாறு
  485. Avocado- a tropical a large, usually pear-shaped fruit,  with thick, dark green or purple skin, a large, round seed, and soft, pale green flesh that can be eaten -பெரு பேரிக்காய்.
  486. Awl-shaped -Short, narrowly triangular and sharply pointed/narrow and gradually tapering to a fine point-குறுகிய முக்கோண் வடிவ(இலை)
  487. Awn -A bristle-like projection, often at the tip of a structure, a slender, bristle-like projection, e.g. From the back or tip of the glumes and lemmas in some grasses and on the fruit of some Geraniaceae- சிலாம்பு; மணி முள்; மேற்கூர்; கூல வகைகளின் கதிரலகு,தூரிகை முடி . 
  488. Awned, furnished with an awn- தூரிகை முடி கொண்ட .
  489. Axe helves-  the handle of an ax, hatchet, hammer, or the like -கோடாரிக் கைப்பிடிக் காம்புகள்
  490. Axe-shaped- having somewhat the form of an axe, as the fleshy leaves of some Mesembryanthema- கோடாரி வடிவம்
  491. Axial inflorescence-inflorescence  that originates from the leaf axils கக்கமஞ்சரி /கோண மஞ்சரி
  492. Axil – The angle between the upper side of a leaf stalk or branch and the stem from which it is growing. The angle between the stem and leaf Axil-இலைக்கோணம்/கக்கம்
  493. Axile placentation- ovules attached where the septae intersect in the centre of an ovary -அச்சு சூல் ஒட்டுமுறை.
  494. Axillary bud -The axillary bud is a bud that developes in the axil (The angle between the stem and the leaf) of plant- கோண மொட்டு/கோண அரும்பு.
  495. Axillary- In the axil of a leaf-இலைக்கோணத்தில் அமைந்த.
  496. Axillary inflorescence- An inflorescence that arises from a leaf axil. -கோணக்கிளை மஞ்சரி
  497. Axis – A line of symmetry in a plant or part of a plant, e.g., the principal column of an inflorescence/the central pillar of tissue in the ovary that bears the placenta-அச்சு
  498. Axle wood tree-a small to medium-sized tree, growing up to 20 m tall. It is closely related to the Buttontree (Anogeissus latifolia)-வெக்காளி மரம்.
  499. Azalea -Of dry habitats- வறண்ட வாழிடங்களிலிருந்து
  500. Azure, azureus- of a lively pale blue, like the sky.  வான் நீலம்/ இள நீலம்

சென்னையில் விஜி!

(விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி தொண்டைமான் பூபதி காளிங்கராய சுப்ரமண்ய சுந்தரவடிவேல் தனது சென்னை விஜயம் குறித்தும் அகரனுடனான நட்பைகுறித்தும் எழுதிய (முதல் எழுத்துப்) பதிவு)

எழுதுவதில் உள்ள சிக்கல் எழுதுவது அல்ல, துறை சார்ந்த வேலைகளும், நேரமின்மையும், நமக்கு எழுத்து முதிர்ச்சி இருக்குமா என்ற  ஐயப்பாடு இவையெல்லாம் தான். பிரதிபலன் பாரா பேரியற்கை எப்படி நமக்கு வேண்டுவனவற்றை வாரிவழங்கிக்கொண்டுள்ளதோ அப்படியே நம் சமூகமும். நாம் கவனிக்கவில்லையே, கிரகிக்கவில்லையே தவிர, வழங்குதல் என்றுமே வற்றுவதில்லை வரண்டுவிடுவதில்லை. எல்லோருக்கும் வாழ்வை வரையறுக்கும், வெற்றிடமாக்கும், திசைமாற்றும் புள்ளி என்று ஒன்று உண்டு,

ஓரு பேரிழப்பு, பெருந்துயரம், அவமானம், வெறுமை, பெருஞ்சுழல், பயணம், ஓர் சந்திப்பு அந்தப்புள்ளியை அணுப்பிளவாகவும் மாற்றும் அல்லது மிக எளிமையாக தடயங்களே இல்லாமல் அழித்துவிடும்.

ஒரு தனிமனிதனின் சிறப்பாளுமை, ஒரு சந்திப்பு மீளாஅற்புதங்களை நிகழ்த்தும் என்று கண்டுகொண்டேன்.

சென்னைக்கு ஒரு இலக்கிய அமர்வுக்கு சென்ற போது அகரமுதல்வன் என்ற அகரன் எப்படி ரயில் நிலையம் வந்து தன்னை அழைத்தது முதல் அரசியல் கட்சி கூட்டத்திற்கு ஆள் பிடித்துச்சென்று கட்சிக்கூட்டம் முடிந்தபின் ஆதரவற்றவர்களை கைவிட்டு வருவது போல இல்லாமல், திரும்ப பாதுகாப்பாக வழியனுப்பி வைத்த அகரனுடனான முழு பயன அனுபவத்தை என் மூத்தசகோதரி லோகமாதேவி என்னிடம் கூறினார்.

பேராசிரியையாக உள்ளதால் பொதுவாகவே நிகழ்வுகளை நேர்த்தியான விவரிப்புடன் கூறுவார் என் சகோதரி. எல்லா சந்திப்புகளும், உரையாடல்களும் பெரும்பாலும் உள்நோக்கத்துடன் தான் இருக்கும், அமையும் என்று திடமாக நம்புபவன் நான். சில சுயநலத்துடனும் சில இயற்கை விதிப்படியும் சில காரணகாரியங்களுக்காகவும் அமையும்.  ஆனால் விதிவிலக்குகள் உண்டு என அகரனை குறித்து கேள்விப்பட்டபோது உணர்ந்தேன்

தன்னை தேடி வரும் அனைவரையும் இவ்வாறே அகரன் அழைத்து, அனுசரித்து திரும்ப அனுப்பிவைப்பதாகவும் கூறினார். கூடவே அகரனின் ஈழப்பிறப்பிடம் பற்றியும் “ கடவுள் பிசாசு நிலம்” பற்றியும் கூறினார். வெகு சில நாட்கள்  நான் ஈழத்தில் வேலை செய்திருக்கின்றேன். வெகு இயல்பான என்கொடியுறவு என்பதாலும் என் இனக்கீற்று அவன் என்பதாலும் ஒரு பிணைப்பு ஏற்ப்பட்டதில் வியப்பில்லை. ஈழம் எப்போதுமே ஈர்ப்புதான் எனக்கு.

அடுத்தமுறை சென்னைக்கு சென்றால் நிச்சயம் அகரனை நான் சந்திக்க வேண்டும் என்றும்,அல்லது இதற்க்காகவே செல்ல வேண்டும் என்று கூறினேன்.ஆச்சரியத்தோடு பார்த்தாள் அக்கா. நீ அவனை பார்த்ததே இல்லையே பின் எதற்க்கு இத்தனை ஆர்வம்? என்றாள் தெரியவில்லை என்றேன்,

இரண்டொரு மாதம் கழித்து அகரன், லக்ஷ்மணன், மூர்த்தி, மணி நால்வரும் பொள்ளாச்சியை அடுத்த வேடசெந்தூரில் உள்ள எங்களது வீட்டிற்க்கு வந்தார்கள். இரண்டொருமணி நேரம் கதைத்ததில் சற்றே அறிமுகம் கிடைத்தது நால்வருக்கும். நால்வரும் ஒவ்வொரு ஆளுமை. பார்ப்பதற்க்கு வெகு இயல்பாகவும் இனிமையாகவும் இருந்தனர்.உணவு இடைவேளையின் போது இலக்கியம் மற்றும் திரைப்படம் சார்ந்தும், பகடிகளோடு அன்று பகல் போனது. மிக சிறிய சந்திப்பு அது.

கடந்த வாரம் நடைபெற்ற திரு. எம் கோபாலகிருஷ்ணன் அவர்களின் ஒரு நாள் கருத்தரங்கிற்கு அகரனிடமிருந்து அழைப்பு வந்தது. நானும் எனது சகோதரியும் சென்னைக்கு சென்றோம். முன்னிரவு விலாசம் தொடங்கி நிலப்படம் வரை மிகச்சரியான வழிகாட்டுதலோடு தகவல் வந்து சேர்ந்தது.

இலக்கியமும் திரையுலகம் இரு வேரு ஆளுமைகளைக் கொண்ட துறைகள்.

இலக்கியத்திற்கும் திரையுலகிற்கும் மொழி ஆளுமை, கற்பனை, பயணம், வாசிப்பு, புனைவு பற்றிய அடிப்படைகள், துறை சார்ந்த அறிவு, அனுபவம் எனப் பல விதிகள் பொதுவில் உண்டு, ஆனால் அதில் பயணிப்பவர் வேறு வேறு அடையாளங்களைக் கொண்டிருக்க வேண்டும்.   திரையுலகில் உள்ளவர் பெரும்பாலும் இலக்கியம் சாராமலே இருப்பர். முதல் நாள் முழுவதும் திரைத்துறை நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார் அகரன். அணைவரிடமும் ஒரே மாதிரியான பாவனையில் இணைந்திருந்தார். அவர் பேசிய உலகத்திரைப்படம் அனைத்தும் போர்ச்சூழல், புலம்பெயர்தல், மனித உணர்வுகள் மற்றும் மனஎழுச்சி என்றே கட்டமைக்கப்பட்டிருந்தது.

ஆங்கில அமெரிக்க ஐரோப்பிய பொழுதுபோக்குப் படங்களையே பார்த்து வளர்ந்த எனக்கு அகரனினுடைய விவாதம், திரைப்படங்களைப் பற்றிய பார்வை, படத்தேர்வு, காட்சி நுகர்வு, திரை அரசியல் எனப் பல நுண்மைகளை கவனிக்க கற்றுத்தந்தது. என்னுடைய விவாதம் நிச்சயம் சிறுபிள்ளைத்தனமாகவே இருந்திருக்கும். என் வயது மற்றும் என் துறை சார்ந்த அனுபவத்திற்காக மட்டுமே அகரன் அமைதிகாத்தார் என்றே நம்பிக்கொண்டேன்.

ஒரு முறை என் சகோதரியின் மற்றுமொரு அறிமுகமான் சதீக்ஷ் என்பவரிடம் இதே போல  உரையாடிக்க்கொண்டிருந்த போது அதுவும் பிதாமகன் காந்தியைப்பற்றி கதைத்தபோது அவர் பாவம் பொறுமை இழந்து, பற்றிக்கொண்டு எரிந்தார், அவரின் உடல் மொழிசிதைந்து, அகமெய் அலறியஹை முகத்தில் காணமுடிந்தது. நரம்பு புடைக்க ஆற்றாமையை அடக்க முடியாமல் வயதின் வரம்பு மீறி …..…ஒன்றும் செய்ய இயலாததால் கூடுதலாக இரண்டு சுருட்டு புகைத்து விட்டு கூடுமானவரை வேகமாக அங்கிருந்து தன் காதலியுடன் தூர விலகி விட்டார். பாவம்

அகரன் அமைதியானவர், விருந்தின் வினயம் கருதி விவாதத்தை தொடர்ந்தார். அந்த மனசுதான் “ கடவுள்”. அனுபவமில்லாத துறைசார்ந்த பேச்சும், நகைப்பும், பகடியும் ஆளுமைகளால் பெரும்பாலும் சகித்துக்கொள்ளமுடியாது, அகரன் அப்படியல்ல என்பதை தெரிந்துகொண்டேன்.

சென்னையிலிருகும் அகரனின் இல்லதிற்கு சென்றோம் காலை உணவிற்கு. என்னதான் ஈழ எழுச்சி என்றாலும் சாய்விருக்கையில் புலித்தோல் விரிப்பு அமைக்கப்பட்டு இருந்தது. ஆச்சரியமாக கேட்டதற்கு நகைச்சுவையாக இல்லை, ஆமாம் என்று பதில் வந்தது. யோசனையூடே அவரின் தாய் என்னை எடை போட்டுக்கொண்டே இருந்தார். அவர் கடந்து வந்த பாதையை என் அக்கா முன்பே கூறி இருந்தார். மரியாதையூடே ஒரு பயத்துடன் அமர்ந்திருந்தேன். அகரனின் மனைவி ப்ரபா மிக மிக எளிமையானவர், அவர் ஈழத்தமிழில் பேசுவதை கேட்பதற்கு கொடுப்பினை வேண்டும். நாம் மறந்த ஒரு அழகு தமிழ் நடை. தமிழகம் முழுவதும் வாசிப்பில், நட்பில், இயல்பில், மரபில் இப்படி பேசினால் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அவர்கள் சமைத்த புட்டு, பருப்பு மற்றும் முட்டையை சுவைத்தோம். அகரனின் அன்பு மைந்தன் ஆதீரன் , இருவரின் கலவை. தமிழில் மைனா பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்தான். மைனாவை அவன் மைய்யா என்றது இனிமை.

அகரனை சிறிது வேலை செய்ய விடுவோம் என்று நானும் எனது அக்காவும் நீரதிகாரம் வெண்ணிலாவின் வீட்டிற்க்குச் சென்றோம். அவரது தாயும் இரட்டை மகள்களில்களில் ஒருவரான அன்பு மட்டும் இருந்தனர் வீட்டில்.  என்னுடன் அதிகமாக என் அக்கா பேசியது திரு ஜெயமோகன் மற்றும் திருமதி. வெண்ணிலா அவர்கள் பற்றி மட்டுமே. அவரின் மகள் அசல் என் மகள் சாம்பவியின் ஜாடையை ஒத்து இருந்தார்.  சிறிது நேரத்தில் வெண்ணிலாவும் கதிரும்(அவர் பெயர் தீபக் ஆனால்  எனக்கு கதிர் என்ற பெயர் அவருக்கு ஒத்திருந்தாக நினைக்கிறேன்) வந்தனர். பல நாள் பேசிப்பழகிய உணர்வுடன் உண்மையாக இயல்பாக உள்நோக்கமில்லாமல் பேசுவது எளிது என்று அவர்கள் குடும்பத்தைப்பார்த்து தெரிந்து கொண்டேன். இது எனக்கு புதிது. நான் அவர்களில் வேறல்ல என்பதை ஒவ்வொரு உரையாடல்களிலும் இயல்பாக்கிக்கொண்டே வந்தார்கள்.  வெகு குறைவான நேரமே அங்கிருந்தோம்.

மதியம் ஒரு புது உணவகத்திற்க்கு அழைத்துச்செல்வதாக அகரன் கூறி இருந்தார். பிரபாவுடன் இணைந்து நால்வரும் விமலம் மெஸ் சென்றோம். தீர்கசுத்த அசைவ உணவகம். பசிக்காக அல்லாமல் எங்களை மகிழ்விக்க, புதிய உணவனுபவத்தை தருவதற்க்காகவே அகரன் அங்கு அழைத்து வந்தார் என்பதை பிறகு புரிந்து கொண்டோம். வெகுசிறப்பான அனுபவம்.

மறுநாள் அகரன் நடத்தவிருந்த திரு எம்.கோபலகிருஷ்ணனின்  கருத்தரங்கிற்கு  கூட்டிச்சென்றார். அவரின் தோழமைகள் கட்டளையின்றி வேலை செய்துகொண்டிருந்தார்கள். சில சிறப்பு மேற்பாற்வைகள் செய்துவிட்டு ஒரு தமிழ்த்திரைப்பட முன்னோட்டக் காட்சிக்கு ஆயத்தமானோம்.

”நூடில்ஸ்” என்ற படம். முதன் முறையாக நானும் அக்காவும் சென்றோம்.  அன்று முழுவதும் பேரலைச்சலாக இருந்ததால் முன்னூடே அகரன் எங்களிடம் முக்கிய ஒப்பந்த விதிகளை அறிவுருத்தினார். கண்டிப்பாக தூங்க கூடாது, குறட்டையேதும் மறந்தும் விட்டுவிடக்கூடாது, நல்ல விமர்சனமாக இருக்க வேண்டும்(திரைப்படம் கவலை மறந்து ஈடுபாட்டுடன் ரசிக்கும்படியாக இருந்தது).  வழி நெடுக கலைஞர்கள் வரவேற்றார்கள். சிறிய அரங்கம். அகரனைத்தெரியாதவர்கள் மிகச்சிலரே. சில நபர்களை அறிமுகம் செய்து வைத்தார். இரண்டு மணி நேரத்திற்க்கும் குறைவாக ஓடக்கூடிய நகைச்சுவைப் படம். 

ஞாயிறு காலை நானும் எனது அக்கா மற்றும் நீரதிகாரம் வெண்ணிலா அனைவரும் திரு எம்.கோபாலகிருஷ்ணனின்  கருத்தரங்கிற் கு சென்றோம். காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடக்கம். வெண்ணிலா அவர்கள் முதலில் பேசுவதாக நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்தது, சென்னையில் 8.30 க்கு தொடங்கி மண்டபம் வருவதற்க்குள் 10.20 ஆகி விட்டிருந்தது. மிகுந்த பதற்றத்தினூடே உள்சென்றோம், அது வரையில் அகரன் எங்களிடம் கைபேசியில் அழைக்கவில்லை,நாங்கள் எங்கிருக்கிறோம் என்று கேட்கவில்லை. மிகவும் இயல்பாக எங்களை வரவேற்று அமரச்செய்தார். ஒரு 11 மணிக்கு நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம் என்று தகவல் கூறிச்சென்றார். எப்படி ஒருவர் மிகப்பெரும் ஆளுமைகள் கலந்து கொள்ளும் ஒரு கருத்தரங்கத்திற்க்கு நேரம் தவறியதற்கு பெரிய பதட்டம் ஏதுமில்லாமல் எரிச்சலில்லாமல் நிகழ்வை நேர்மறையாக கொண்டுசெல்ல முடியும்?

25 – 30 வருடத்திற்கும் குறையாமல் இலக்கிய பங்களிப்பை செய்து வருகிறார் திரு. எம்.கோபாலகிருஷ்ணன். 1994 ல் சிறுகதை எழுத ஆரம்பித்தார், 2002க்கு பிறகு தொடர்ச்சியாக எழுத்துலக பணிகளை செய்கிறார். பொதுவில், வளரும், வளர்ந்துவரும், அரியப்படாத இளம் இலக்கியவாதிகளை பெரும்படைப்பாளர்கள் முன்னிருத்துவது வழக்கம். புலம்பெயர் ஈழத்தமிழர் இளந்தமிழர் ஒருவர் , இலக்கியவட்டத்தில் , திரைத்துறையில், வேரூன்றிக்கொண்டிருக்கும் வேளையில் தன்னுடைய படைப்புகளை தரவேற்றிக்கொள்ளவே முனைவார்.   ஆனால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்று திரு எம்.கோபலாகிருஷ்ணனை சிறப்பிக்கும் விதமாக, தமிழில் தற்போது பிரபலமடைந்துவரும், முறையே பங்களிப்பாற்றிவரும், திறமைமிகுந்த இளம் எழுத்தாளர்களை, பேச்சாளர்களை திரு. எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் முக்கிய படைப்புகளை படித்தறிந்து கருத்தரங்கில் பேச அழைத்திருந்தார்.

திரை விமர்சனம் போலவே திரு. எம்.ஜி யின் படைப்புகளை பகுப்பாய்வு செய்தனர் இளம் பேச்சாளர்கள். மொத்தம் ஆறு தலைப்புகள், ஒவ்வொறு தலைப்பிற்கும் இரண்டு பேச்சாளர்கள். ஒரே தலைப்பில் ஒருவர் மட்டுமே வாசிப்பை செய்தால் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதால் இரண்டு பேரை கூராய்வு செய்ய அமர்த்தியிருந்தார் அகரன். 

சிற்றொளியில் வீற்றிருந்த  மூலவரை பேரொளியில் உற்சவமூர்த்தியாக உலவச் செய்யும் முயற்சி என்று அகரன் முதலுரையாய் பேசும்போதே கைதட்டல் முழங்கியது.  அது உண்மையும் கூட. பன்னிரண்டு பேரும் பகுத்தாய்ந்து பேசியதை ரசிகர்களுடன் சேர்ந்து தன் முதல் திரைப்படத்தை கான வந்த இயக்குநர் போல சலனமில்லாமல் உற்சவமூர்த்தி பார்த்துக்கொண்டிருந்தது. யாரும் ஒருவரை ஒருவர் போல் இல்லாமல் தங்கள் இயல்பில்  தனித்துவமாக பேசியது வியப்பும், மகிழ்வாகவும் இருந்தது. முதல் நூலாக “அம்மன் நெசவு” நீரதிகாரம் வெண்ணிலா மற்றும் திரு. விக்னேஷ் இருவரால் பேசப்பட்டது.

அடுத்த உரை தொடங்குமுன்னே பலரும் அம்மன் நெசவு புத்தகங்களை வாங்க வரிசைகட்டியதே முதல் வெற்றியைக்காட்டியது. ஒவ்வொரு உரையின் தொடக்கத்தில் முன்னுரை வழங்கிவிட்டு தேநீர் ஏற்பாட்டினை செய்யச்சென்றார் அகரன். உரை முடிந்ததும் வாழ்த்துரை வழங்கி பின் அடுத்த உரையை தொடங்கி விட்டு மதிய உணவிற்கான ஏற்ப்பாட்டிற்கு சென்றார் .  

ஒவ்வொருவருக்கும் தனித்தனியே விருந்துபச்சாரம் செய்து முடித்து மதிய அரங்கு ஆரம்பித்தது. பன்னிரண்டு ஆய்வுகள் முடிந்தவுடன், சிறப்பு அழைப்பாளர்கள் தங்கள் பங்கினைச் செய்ய  முடிவாக திரு எம்.ஜி அவர்கள் பேசினார். நிறைய இடங்களில் நெகிழ்ந்து, கண்பணித்து தனது இதயபூர்வமாண நன்றிகளை நெகிழ்வுடன் கூறினார்,  மிகச்சுருக்கமான பேச்சு.

ஞாயிற்றுக்கிழமை, சென்னை கூட்ட நெரிசல், மதிய அசைவ உணவு, ஒருநாள் விடுமுறை போன்ற பல காரணங்களைத் தாண்டி அகரனின் அன்பிற்கும்,  திரு. எம்.கோபாலகிருஷ்ணனின் தன்னலமற்ற இலக்கிய அர்ப்பணிப்பிற்கும், இதுபோல் கருத்தரங்கிற்கு இசைவாகாமல் இருப்பது எதிர்கால இலக்கிய  உலகிற்கு கேடு என்று வருகை தந்து அரங்கை நிறைத்த சொந்தங்களுக்கும் நன்றி கூறி விடை கொடுத்தது அந்நாள்.

போர்ச்சூழலில் பிறந்து, துயரங்களால் தத்தெடுக்கப்பட்ட தம்பி அகரன். புலம்பெயர்ந்தவர்கள் பொதுவில் தன்னை தன் குடும்பத்தை தன் சுற்றத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதிலேயே கவனமாக இருப்பர்.  பிறப்பிடத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்படுதலின் தாங்கொணாத்துயர் புதிய முயற்சிகளுக்கும், பெறிய முன்னேற்றத்திற்கும், துணிந்த பரிசோதனைகளுக்கும் தடையாகவே இருக்கும். அதற்கு நாம் திருப்திகொள்ளும் வகையில் சப்பைக்கட்டுகள் நிறைந்து கிடக்கும். திருமணத்தில், வேலையில், சமூகத்தில் நமது போரட்ட வைபவங்கள் மாறி மாறி அமையப்பெற்று நம்மைச் சமூகப்போராளியாக மாற்றுவது போல இல்லை இந்த வாழ்விடப்பெரும்பெயர்ச்சி. மிகச்சரியான திட்டமிடல், எளிய பணிவான வாழ்வு, கடும் பயிற்சி, தொடர் முயற்சி, நன்றியுணர்வு,  தாய்மொழிப்பற்று, வாசித்தல், நட்புபாரட்டுதல், பயணம், பக்தி என்று பலதுறைகளில் தன்னை அர்ப்பணிப்பவருக்கு மட்டுமே அருளப்படும். அகரன் அருளப்பட்டவன்.  அகரனின் நட்பை நான் பொக்கிஷமாக பாதுகாப்பேன்.

குட்ஸு

உலகெங்கிலும் பிரபலமான ஒரு சிறார் கதை. “Jack and the Beanstalk’’. இதில் தகப்பனை இழந்த ஜேக் தனது அம்மாவுடன் வறுமையில் வாழ்கிறான். அவர்களது மாட்டையும் விற்க வேண்டி வந்தபோது சிறுவனான ஜேக் சந்தையில் மாட்டை விற்றுவிட்டு பதிலாக கிடைத்த ஐந்து  மந்திர பீன்ஸ் விதைகளை கொண்டு வருவான். கோபம் கொண்ட ஜேக்கின் அம்மா அவற்றை ஜன்னல் வழியே வீசி எறிவாள்.

ஆனால் மறுநாள் காலையில் ஜேக் அந்த பீன்ஸ் கொடி பிரம்மாண்டமாக வளர்ந்து வானுயர சென்றிருப்பதை  பார்க்கிறான், அந்த  பீன்ஸ் செடியில் ஏறி  சூனியக்காரியொருத்தியின்  மாயக்கோட்டைக்குச் சென்று  பொன்முட்டையிடும் கோழியை கொண்டு வரும் ஜேக்,  துரத்தி வந்த சூனியக்காரியை பீன்ஸ் கொடியை கோடாலியால் வெட்டி கொல்கிறான்.பின்னர் அவனும் அம்மாவும் செல்வச்செழிப்புடன் வாழ்கிறார்கள்.

1734  ல் வெளியான இந்த ஜேக் மற்றும் மந்திர பீன்ஸ் கொடியின் கதை பின்னர் பற்பல வடிவங்களில் உருமாறி உலகெங்கும் பரவியது. இதை கேட்காத குழந்தைகளே இல்லை எனலாம் 

இப்படி ராட்சஷத்தனமாக ஓரிரவில்  வளரும்  மந்திர செடிகள், மாயக்கொடிகள் குறித்த சிறார் கதைகள் ஏராளமுண்டு.

ஒரு வீட்டின் அளவில் பெரிதாக இருக்கும் மந்திர பண்புகள் கொண்ட இலைகள் கொண்டிருக்கும் மரம் குறித்த The Giving Giant,கதை.

அந்த மரத்தடியில் வந்து நிற்பவர்களை  கிளைகளை பெருக்கி கட்டித் தழுவி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி அவர்களை அறிவாளியாக்கும் வில்லோ மரத்தின் கதையான The Wisdom Willow,

ஒரு பள்ளத்தாக்கு கிராமத்தில் வளரும்   மேகங்களுக்குள் மறையும் கிளைகளையும் பாதாளம் வரை செல்லும் வேர்களையும் கொண்ட மரங்களின் கதையான The Legend of Titan Sprout Valley.

மிக வேகமாக வளர்ந்து தனது பற்றுக்கம்பிசுருள்களால் அருகில் வருபவர்களை இழுத்து பிடிக்கும் ஒரு ஐவி கொடியை பற்றிய  Enchanted Ivy என்னும் கதை,

இது போன்ற தேவதைக்கதைகளில் கற்பனையில் உருவாக்கப்பட்ட தாவரங்களை காட்டிலும் மிக அதிகம் வளரும் தாவரங்கள்  உண்மையிலேயே இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் குட்ஸூ கொடி (Kudzu). இக்கொடியை குறிக்கும் ஜப்பானிய பெயரான  “kuzu”, என்பதன் ஆங்கில தழுவல்தான் Kudzu.

ஆசியாவை தாயகமாக கொண்ட பயறு வகை குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த   பல்லாண்டு கொடி வகை தாவரமான குட்ஸூ மிக வேகமாக வளரக்கூடிய ஆக்கிரமிப்பு தாவரம்

ஆசியாவிலிருந்து அறிமுகமாகி அமெரிக்காவின் சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை அளித்துக் கொண்டிருக்கிறது இந்த குட்ஸூ கொடி. இக்கொடிக்கு அமெரிக்காவில் ’’தெற்கை தின்ற கொடி’’ என்றே பெயர் .(the vine that ate the South) ஏனெனில் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் மிக வேகமாக பரவி ஆக்கிரமித்திருக்கும் இக்கொடியை அகற்ற  களைக்கொல்லிகள்  பயன்படுத்துவது, வெட்டியகற்றுவது ஆகியவற்றிற்கு மட்டும் ஆண்டுக்கு சுமார்  6 மில்லியன் டாலர்கள் செலவாகிறது. 

அமெரிக்க வனத்துறையும் விவசாயத்துறையும் குட்ஸூவை எத்தனை கட்டுப்படுத்தியும் ஆண்டுக்கு சுமார் 1, 50,000 ஏக்கர்களில் இவை விரைந்து செழித்துப் பரவுகிறது என 2015ல்  ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

வளையும் தன்மை கொண்ட உறுதியான தண்டுகளையும் பற்றுகம்பி சுருள்களையும் கொண்டு அருகில் இருக்கும் ஆதாரங்களை தழுவிப்பிணைத்து மிக வேகமாக அவற்றையே கம்பளியை போல் மூடி  வளரும் இலையுதிர்க்கும் இதற்கு Japanese arrowroot , Chinese arrowroot என்றும் பெயர்களுண்டு

Pueraria  பேரினத்தை சேர்ந்த இவற்றின் ஐந்து சிற்றினங்களுமே அகன்ற முக்கூட்டிலைகளை கொண்டிருப்பவை, ஆக்ரமிக்கும் இயல்பு கொண்டவை .(P. montana, P. lobata, P. edulis, P. phaseoloides, P. thomsoni)

Pueraria montana var. Lobata என்னும் சிற்றினம் இவற்றில் மிக அதிகம் காணப்படுமொன்று.

இக்கொடியின் தண்டுக்கணுக்கள் மண்ணில் பட்டால் வேர் பிடிக்கும் இயல்புடையவை என்பதால்  தண்டு மண்ணில் படும் இடங்களிலெல்லாம் இவை மிக வேகமாக வளர்ந்து அடர்த்தியாக பரவும்.. வேர்க்கிழங்குகள் மாவுச்சத்தும் நீர்சத்தும் நிரம்பியவை, வேர்தொகுப்பு மிக அடர்த்தியாக முழுத்தாவரத்தின் எடையில் 40 சதவீதத்தை கொண்டிருக்கும், அகன்ற இலைகள் வளிமண்டல நைட்ரஜனை ஈர்த்து தாவரத்துக்கு அளிக்கும்.

பொதுவாக தண்டுகள் மூலம் இவை பரவி வளருமென்றாலும் மகரந்த சேர்க்கை நடைபெறுகையில் விதைகளும் உருவாகும். விதைகள் வேர்க்கிழங்குகள் மூலமும் குட்ஸூ இனப்பெருக்கம் செய்யும். காடுகளின் விளிம்புகளில் இவை அதிகம் காணப்படும்

குட்ஸு ஜப்பானில் தோன்றி பின்னர் சீனாவுக்கும் கொரியாவுக்கும் அலங்காரத்தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஜப்பானிலும் அதை சுற்றியுள்ள பல தீவுகளிலும் , கொரியாவிலும் இவை செழித்து வளர்ந்திருக்கின்றன.  

உலகின் முதல் சர்வதேச கண்காட்சி பிலடெல்பியாவில் 1876, ல் நடைபெற்ற போது குட்ஸூ அங்கு காட்சிப்படுத்தபடுவதற்காக ஜப்பானிலிருந்து கொண்டுவரப்படடது. அதன் அழகிய  அகன்ற இலைகளுக்காகவும்  நறுமணமிக்க வண்ணமயமான மலர்களுக்காகவும் இவை பெரிதும் விரும்பப்பட்டன. பின்னர் வீடுகளில் அலங்கார செடிகளாக வளர்க்கவும் நிழல் தரும் செடிகளாகவும் இவை சந்தைப்படுத்தப்பட்டன. இதன் விரைவான வளர்ச்சியினால் ’அதிசயக்கொடி’ என்று அப்போது பரவலாக இதற்கு பெயர் இருந்தது. இவற்றின் அதிகப்படியான  புரதத்தினால் கால்நடை தீவனமாகவும்,  அதிகம் சாகுபடி செய்யப்பட்டன.

தாவரவியல் பண்புகள்

 ஒரு நாளில்  0.3 மீ வளரும் குட்ஸு புனைவுகதைகளில் வரும் ராட்ஷச தாவரங்களை காட்டிலும் அச்சுறுத்துவது.

ஒரு குட்ஸு கொடி சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரும். ஒரு நாளில் 3செ மீ தூரம் கீழ்நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் இவற்றின்    வேர்கிழங்குகள் 200 கிலோ அளவு எடைகொண்டிருக்கும்,

இவற்றின் இலைகள் நல்ல அகலமாக அடர்பச்சை நிறத்தில் இருக்கும். இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிற  நறுமணம் மிக்க மலர்கள் நீண்ட தொங்கு மஞ்சரிகளில்  உருவாகும்.

மண் நிறத்தில் தட்டையான நீண்ட பீன்ஸ் போன்ற  மென்மயிர் போன்ற வளரிகள் சூழந்திருக்கும் கனிகள் 3 லிருந்து 10 கடினமான விதைகளை கொண்டிருக்கும்,

குட்ஸு அனைத்து விதமான காலநிலைகளையும் தாங்கி வளரும் இயல்புடையது அதிக பனிக்காலத்தில் கூட இவற்றின் மேல் பகுதி மட்டும் உலர்ந்து வாடிவிடும். சாதகமான காலம் திரும்புகையில் வேர்கிழங்குகளிலிருந்து இவை மீண்டும் முளைத்து வளரும். இவை வறட்சியையும் தாங்கி வளரக்கூடியவை.

பரவலும் ஆக்கிரமிப்பும்

இதன் அகன்ற வேர்த்தொகுப்பினால் தென்னமெரிக்காவில் மண் அரிப்பை தடுக்க சரிவான நிலங்களில் குட்ஸூ ஏராளமாக பயிரிடப்பட்டது, 1946ல் சுமார் 85 மில்லியன் குட்ஸு விதைகள் இதன்பொருட்டு சரிவுகளில் விதைக்கப்பட்டு 1,200,000 ஹெக்டேர்களில் குட்ஸு பரவியது, விவசாய நிலங்களின் விளிம்புகளில் இவை பசுமைவேலிகளாக பரவி வளர்ந்தன.  

பெரும்பாலான பருத்திப்பயிர்களில்  பூச்சித்தாக்குதல் உண்டாகி விளைநிலங்கள் கைவிடப்பட்டபோது குட்ஸு வேகமாக பரவி விளைநிலங்களுக்குள் ஊடுருவியது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியின்  காலநிலை குட்ஸுவுக்கு சாதகமாக இருந்ததால் அவற்றின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாமலாகியது.

அவற்றின் மண்ணரிப்பை தடுக்கும் பயன்கள் பலராலும் வியந்து பாரட்டப்பட்டு 1930–1940 களில் அமெரிக்க குட்ஸு கிளப் துவங்கப்பட்டு 1943ல் அதில் 2000  உறுப்பினர்கள் இணைந்திருந்தார்கள்.

இவற்றின் அச்சுறுத்தும் வளர்ச்சியினால் மண்ணரிப்பை தடுப்பதற்கென்று குட்ஸுவை பயிரிடுவது 1950களில் முற்றிலும் நிறுத்தப்பட்டது

இரண்டாம் உலகப்போரின் போது குட்ஸு அமெரிக்க படையினர் மறைந்துகொள்ள வசதியாக இருந்ததால் பசிஃபிக் தீவுகளின் அருகில் இருக்கும் வனட்டு மற்றும் பிஜி தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1970. ல் அமெரிக்க விவசாய துறை குட்ஸு ஒரு ஆக்கிரமிப்புக் களை என அறிவித்து சில விளைநிலங்களில் அவற்றை அப்புறப்படுத்தியது

1997ல் குட்ஸூ தொந்தரவு தரும் களைச்செடிகளின் பட்டியலில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டது 

தற்போது குட்ஸூ அமெரிக்காவின் தென்கிழக்கு பிரதேசங்களில் மட்டும் சுமார் 7,400,000  ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது

அச்சுறுத்தல்

குட்ஸூ அருகில் இருக்கும் மரங்களை கம்பளி போல மூடி அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி கொல்கிறது பல மரங்கள் குட்ஸுவின் எடையினால் கிளைகள் முறிந்தும் வேரோடு பெயர்ந்தும் அழிந்திருக்கின்றன. கட்டுப்படுத்த முடியாத   வளர்ச்சியால் குட்ஸூ அமெரிக்காவின் இயல் தாவரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

வளிமண்டல நைட்ரஜனை அம்மோனியாவாக மாற்றி அருகிலிருக்கும் தாவரங்களுக்கான நைட்ரஜனையும் குட்ஸூ  தான் எடுத்துக்கொள்கிறது. ஒரு ஆண்டில் சுமார் 235 கிலோ நைட்ரஜனை குட்ஸு எடுக்கிறது. இந்த வேகம் இயல் தாவரங்கள் நைட்ரஜனை எடுத்துக்கொள்ளும் வேகத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமென்பதால் இயல்தாவரங்கள் மெல்ல மெல்ல நைட்ரஜன் சத்து இல்லாமல் மடிகின்றன. அருகில் எந்த தாவரமும் வளராமல் மண்ணும் நல்ல நைட்ரஜன் சத்துடன் இருக்கையில் குட்ஸு ராட்ஷத்தனமாக வளர்கிறது.

குட்ஸு அமெரிக்காவின் 32 மாநிலங்களில் பெரும் சூழல் அச்சுறுத்தலை கொடுக்கிறது. 

ஆசிய பிரிவெட்களும், ஆக்ரமிப்பு ரோஜா செடிகளும் குட்ஸுவைகாட்டிலும் தீவிரமான அச்சுறுத்தலை அமெரிக்க சூழலுக்கு அளிக்கின்றன என்றாலும்  விரைந்து வளருவதால் குட்ஸுவே அதிக ஆக்ரமிப்பு தாவரமாக அமெரிக்க மக்களால் கருதப்படுகிறது. குட்ஸு ஒரு நாளில் 1 மைல் தூரம் வளரும் என்னும் கதைகளெல்லாம் கூட அமெரிக்காவில் உலவுகின்றன, 

வன எல்லைகளில் மரங்களினடியில் கவனிக்காமல் விட்டுவிட்ட வாகனங்களை குட்ஸு ஒரு வாரத்தில் முழுவதும் பரவி மூடிவிடுகிறது, கட்டிடங்களையும் இவை ஆக்கிரமித்து மூடிவிடுகின்றன.

ஐரோப்பாவில் 2016ல் குட்ஸு, ஆக்ரமிப்பு களைகளின் பட்டியலில் இணைக்கப்பட்டது. ஐரோப்பாவில் குட்ஸுவை இறக்குமதி செய்வது, சாகுபடி செய்வது மற்றும்  அதன் விதைகளை சந்தைப்படுத்துவது  ஆகியவை சட்டப்படி குற்றம்

சமீபத்தில் குட்ஸூ வடகிழக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்ஸர்லாந்து, வடக்கு இத்தாலி ஆகிய பிரதேசங்களில் ’’தேவையற்ற தாவரம்’’ என்று வகைப்படுத்தப் பட்டிருக்கிறது  

அமெரிக்க வனப்பொருட்களின் விளைச்சலில் குட்ஸுவினால் மட்டும் ஆண்டுக்கு  $100 லிருந்து $500 மில்லியன் நஷ்டம் உண்டாகிறது. குட்ஸுவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 2000 டாலர்களும்,  குட்ஸு,  தொழிற்சாலைகளின் நிலத்தடி குழாய்களை சுற்றி இறுக்கி உடைத்துவிடுவதை சரிசெய்யமட்டும் 1. 5 மில்லியன் டாலர்களும் ஆண்டு தோறும் செலவாகிறது.

அமெரிக்க தேசிய பூங்காக்களில்  பல ஏக்கர்களில் குட்ஸூ ஊடுருவியிருப்பதால் பூங்காக்களின் முக்கியத்துவமும் அழகும் குறைகிறது.

கட்டுப்படுத்தல்

குட்ஸுவை இயந்திரங்கள் கொண்டும் ரசாயனங்கள் கொண்டும் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றாலும், தண்டு,விதை, வேர்கிழங்குகளின் மூலம் இவை தொடர்ந்து பெருகி வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் உடைந்த சிறு துண்டு வேர்க்கிழங்கு கூட மிக வேகமாக வளர்ந்து விடும்.

குட்ஸு ஆக்கிரமித்திருக்கும் பிற இயல் தாவரங்களை அதிகம் சேதப்படுத்தாமல் குட்ஸுவில் மட்டும் நோயுருவாக்கும் Myrothecium verrucariap பூஞ்சையை அறிமுகப்படுத்தி இவற்றை கட்டுப்படுத்தும் முயற்சி  1998லிருந்து அமெரிக்க விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு இன்னும் ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றது.

வெற்றிகரமான முறையாக இப்போது நடைபெறுவது ஆடுகளும் பன்றிகளும் குட்ஸுவை மேய்வதுதான். ஒரு சிறு ஆட்டுக்கூட்டம் ஒருநாளில் ஒரு ஏக்கரில் பரவியுள்ள குட்ஸுவை உண்டு விடுகிறது.

உணவுப்பயன்கள்

கொரியாவின் பிரபல நுடுல்ஸ் உணவான naengmyon குட்ஸுவின் வேர்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது

 இதன் வேர் கிழங்கு மாவு சீன, ஜப்பானிய, கொரிய உணவுகளில் அதிகம் பயன்படுகிறது, கொரியாவில் வேர் கிழங்கிலிருந்து தேநீர்  போன்ற பானம் தயாரிக்கப்படுகிறது. ஜப்பானில் இந்த மாவு சூப்களை கெட்டியாக்க உபயோகப்படுகிறது

இதன் மலர்களும் இலைகளும் கூட உணவாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் மலர்களிலிருந்து கிடைக்கும்  ஊதா நிற தேன் திராட்சையின் சுவை கொண்டிருக்கும்.

 மருத்துவப்பயன்கள்

குட்ஸுவின் மற்றொரு பயன் அதிலிருக்கும் மருத்துவகுணம் உள்ள வேதிப்பொருட்கள்  Puerarin, daidzein, daidzin,, mirificin, மற்றும் salvianolic அமிலம் ஆகியவை பாரம்பரிய சீன மருத்துவத்தில் பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது

சீன மருத்துவத்தில் மது அடிமைகளை மீட்க குட்ஸுவிலிருந்து எடுக்கப்படும் மருந்துகள் உபயோகிக்கப்படுகின்றன.

பிற பயன்கள்

குட்ஸு கால்நடை தீவனமாகவும்,  மட்கச்செய்தபின் பயிர்களுக்கு உரமாகவும் பயனாகிறது.

குட்ஸுவின் தண்டுகளிலிருந்து நார் எடுக்கப்பட்டு ஆடைகளும் காகிதங்களும் உருவாக்கப்படுகின்றன .இவற்றை தொழிற்சாலைகளில் தயாரிக்கும் முன்னெடுப்புகளும் நடந்துகொண்டிருக்கின்றன. குட்ஸுவிலிருந்து அழகுசாதன பொருட்கள், எத்தனால் ஆகியவையும் கிடைக்கின்றன 

உலகின் மாபெரும் சவால்களான காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு அகியவற்றுடன் இந்த  அயல் ஆக்கிரமிப்புக்களைகள், அயல் ஆக்கிரமிப்பு உயிரினங்களின் அச்சுறுத்தலும் இணைந்திருக்கிறது எனினும் இதுகுறித்து போதுமான கவனம் இன்னும் உலக நாடுகள் பலவற்றில் உண்டாகி இருக்கவில்லை

 இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்கின் மனைவி ஹூக்ளி நதியில்  அறிமுகப்படுத்திய ஆகாயத்தாமரைகள் இப்போது இந்தியாவின் நீர் நிலைகள் பலவற்றை மாசுபடுத்தி பல நீர்வழித்தடங்களை அடைத்திருக்கிறது

குட்ஸுவை போலத்தான் தென்னமெரிக்காவில் இருந்து லண்டானா அழகுத்தாவரமாக உலகின் பல நாடுகளுக்கு அறிமுகமாகி உலகின் முதல் பத்து ஆக்ரமிப்பு களைகளின் பட்டியலில் இருக்கிறது

 தென்னமரிக்காவிலிருந்து நமக்கு விறகுக்காக  சீமைக்கருவேலம் அறிமுகமாகி இப்போது கட்டுக்கடங்காமல் வளர்ந்துகொண்டிருக்கிறது.  

இந்தியாவுக்குள் கோதுமை தானியங்களுடன் கலந்து வந்ததுதான் பார்த்தீனியம்.

கருங்கடலில் இருந்து வட அமெரிக்காவுக்கு கப்பல்களின் அடியில் ஒட்டிக்கொண்டு வரிக்குதிரை சிப்பி உயிரினங்கள் சென்று  பல்கிபெருகி இன்று ஆக்கிரமிப்பு உயிரினங்களாக, பல கடல்வாழ் இயல் உயிர்களுக்கு அச்சுறுத்தலாகி விட்டிருக்கின்றன

1949ல் இந்தியபெருங்கடலின் தென்பகுதியின் மரியோன் தீவுக்கு ஐந்து பூனைகள் எலிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு கொண்டுவரப்பட்டன. 1977ல் மூவாயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் அப்பூனைகள் பல்கிப்பெருகி அங்கிருந்த இயல் பறவைகள் பலவற்றை  வேட்டையாடி அழித்தன.

வளர்ப்பு பிராணியாக வைத்திருந்த மலைப்பாம்புகளை ஃப்ளோரிடாவில் காடுகளுக்குள் சிலர் கொண்டு வந்து விட்டனர். 6 மீட்டருக்கும் அதிகமான நீளம் வளரக்கூடிய அப்பெரும் பாம்புகள் அப்பிரதேசத்தின் இரு முக்கிய பறவை இனங்களை வேட்டையாடி முற்றிலும் அழித்தன

Bighead மற்றும் silver carp  எனப்படும் இரு பெரிய மீன் வகைகள் மீன் பண்ணைகளில் இருந்து தப்பி மிஸோரி ஆற்றுக்கு வந்தன. அவை அங்கிருந்த சிறு மீன்களின் உணவுகளை வேகமாக உண்டு அவற்றை பெருமளவில் அழித்தன.

இப்படி ஏராளமான அயல் உயிரினங்கள் தெரிந்தும் தெரியாமலும் புதிய இடங்களில் அறிமுகமாகி இயல் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறுகின்றன.

ஜேக் ஏறிச்சென்று மாயக் கோட்டையிலிருந்து பொன்முட்டையிடும் கோழியை கொண்டு வந்தது போலல்ல இதுபோன்ற அயல் ஆக்கிரமிப்பு தாவரங்களின் பரவல். இவை  சூழல் படுகொலைக்கு  காரணமாகிவிடுகின்றன.

பல நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்களின் காலணிகளின் அடியிலிருக்கும் மண்ணிலிருந்தும் பல அயல் தாவர விதைகளும் மகரங்தங்களும் புதிய பிரதேசங்களுக்கு அறிமுகமாகின்றன, எனவே உலக நாடுகள் அனைத்தும் மிக கவனமுடன் இருந்து இந்த அயல் உயிரினங்களின் அறிமுகத்தை, ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த வேண்டும். 

Pet poisons

வளர்ப்புப்பிராணிகள் நம் வாழ்வில்  மகிழ்ச்சியையும் தோழமையையும் நிறைவையும் தருகின்றன, ஆனால் அவற்றின் உரிமையாளர்களாக, அவற்றைப் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதும் மிக முக்கிய கடமையாகும். வளர்ப்பு பிராணிகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருட்கள் நம் வீட்டிலும் வீட்டுதோட்டத்திலும் நாம் பிரியம் என்னும் பேரில் அவற்றிற்கு அளிக்கும் உணவுபொருட்களிலும் இருக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன

 நச்சுத்தன்மையுள்ள தாவரங்கள் அல்லது சில உணவுகள் என  செல்லப்பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது உயிருக்கே ஆபத்தான பல பொருட்கள் நம்மை சுற்றிலும் அநேகமாக அனைத்து வீடுகளிலும் உள்ளன.  

வீடுகளில் தோட்டம் வைத்திருப்பவர்கள் பலர் செடிகொடிகளை செல்லமாக வளர்ப்பதுண்டு. செடிகளுக்கு நீரும் உரமும் அளித்தால் போதும் ஆனால் செல்லப்பிராணிகளுக்கு எதை உணவாக்க கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர்களும் உண்டு. 

கோடைவிடுமுறைக்கென சமீபத்தில் ஊட்டி சென்றிருந்த போது தங்கி இருந்த விடுதி ஒன்றில் தங்கள் வீட்டு பொமரேனியன் நாயையும் உடன் அழைத்து வந்திருந்த ஒரு குடும்பத்தினர், ரமேஷ் என்று பெயரிடப்பட்டிருந்த அதை மடியில் அமர்த்தி மூன்று வேளையும் தயிர் சாதம் ஊட்டினார்கள்.  நல்லவேளை தொட்டுக்கொள்ள ஊறுகாய் கொடுக்கவில்லை.

பிராணிகளின் உடலியல்புக்கு தகுந்த. மனிதர்களின் சீரண மண்டலத்தை காட்டிலும் வேறுபட்ட சீரணமண்டலத்தை கொண்டிருக்கும் விலங்குகளுக்கு, அவற்றின் உடலியக்கங்களுக்கு தேவையான மற்றும் ஏற்ற உணவுகளை அளிப்பதுதான் சரி

அவற்றை நம் குடும்பத்தின் உறுப்பினர் போல நடத்துவதும் நினைப்பதும் அன்புமிகுதியால் தான் எனினும் அவற்றின் உணவுத்தேவைகள் மனிதர்களை காட்டிலும் வேறானது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். மேலும் பல உணவுப்பொருட்கள் செல்லப்பிராணிகளுக்கு மிக ஆபத்தானதாகி விடுவதுமுண்டு. அப்படியான சிலவற்றின் பட்டியல் இங்கே:

  • அவகேடோ-அல்லது பட்டர் பழம் (Avocado): (Persea americana) அவகேடோவின் இலைகள், கனிகள் மற்றும் விதைகளில் இருக்கும் பெர்சின் (persin,) என்னும் வேதிப்பொருள் பறவைகளின் உயிருக்கு ஆபத்தானது 
  • ரோடோடென்ரான்  (Rhododendron)செடிகளில்  இருக்கும் க்ரேயான் (grayantoxins,)  நஞ்சு பறவைகளின் இதயத்தை செயலிழக்கச் செய்யும்
  • Lily of the Valley என்றழைக்கப்படும் மிக அழகிய  வெண்ணிற மணிகளை போன்ற மலர்களைக் கொண்டிருக்கும் செடியில்   (Convallaria majalis) கார்டியாக் கிளைகோசைடுகள் எனப்படும் இதயத்துடிப்பை நிறுத்தும் பொருட்கள் உள்ளன. அவை பறவைகளுக்கு மிகவும் ஆபத்தானது
  • டேஃபோடில்கள் எனப்ப்டும் மிக அழகிய மலர்களை கொண்டிருக்கும் அலங்கார செடியின் (Daffodils,Narcissus spp.) வேர்க்கிழங்குகள் லைகோரின் (lycorine) என்னும் ஆல்கலாய்டை கொண்டிருக்கும் இது பறவைகளின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்
  • தென்னிந்தியாவில் மிக சாதாரணமாக காணப்படும் கோவில்களில் பூஜைக்கு பயன்படுத்தும் அழகிய நறுமணமுள்ள மலர்களை அளிக்கும் அரளிச் (Oleander Nerium oleander) செடியின் அனைத்து பாகங்களுமே மிக மிக நஞ்சுகொண்டது. இவையும் பறவைகள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கும் கார்டியாக் கிளைக்கோசைடுகள் கொண்டிருக்கின்றது.
  • பல நிறங்களில் மிக அழகிய மலர்களை அளிக்கும் லில்லிகள் உண்டு (Lilium spp.) ஈஸ்டர் லில்லி, டைகர் லில்லி, டே லில்லி என பலவகைகளில் இருக்கும் இவை பூனைகளுக்கு மிக ஆபத்தானது இவற்றின் இலை மலர் மகரந்தம் என எதை பூனைகள் சாப்பிட்டலும் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழப்பு உண்டாகும்
  • மதன காமராஜ மரம் என்றழைக்கப்டும் சிறிய தென்னை மரங்களை போலிருக்கும் சைகஸ்  மரங்கள் (Sago Palm ,Cycas spp )  உலகெங்கிலும் மிக அதிகமாக விரும்பி வளர்க்கப்படும்  பிரபலமான  அலங்கரவகை தாவரங்கள். இதன் கொட்டைகள் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ஈரல் செயலிழப்பை, வலிப்பை உண்டாக்கி உயிரிழக்கச் செய்யும்
  • ட்யூலிப் மற்றும் வெங்காயத்தாமரை செடிகளும் (Tulips and Hyacinths) ட்யூலிபாலின் மற்றும் ஹையாசிந்தின் என்னும் நஞ்சினை கொண்டிருக்கின்றன. இவை செல்லப்பிராணிகளுக்கு உடலுபாதைகளை உண்டாக்கும்
  • சோற்றுக்கற்றாழை மனிதர்களுக்கு பல நன்மைகளை அளிக்கும் ஒரு மூலிகை தாவரம் ஆனால் இது நாய்களுக்கும் பூனைகளுக்கும் வயிற்று உபாதைகள் உண்டாக்க்கி அதிகமான அளவில் உட்கொள்ளப்பட்டால் உயிரிழப்பையும் உண்டாக்கும்
  • மிக சாதாரணமாக வீடுகளில் அழகிய இலைகளுக்காக பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும்  ஊமைப்பிரம்பு என்றழைக்கப்படும் (Dieffenbachia (Dieffenbachia spp, Dumb Cane) செடியில் ஆக்ஸலேட் கிரிஸ்டல்கள் உள்ளன. இவை வாய் மற்றும் தொண்டையில் அழற்சி மற்றும் வீக்கம் உண்டாக்கி குரல் இழப்பை தற்காலிகமாக உண்டாக்கும். இச்செடிகள் வளர்ப்பு பிராணிகள் மற்றும் மனிதர்களுக்கும் மிக ஆபத்தானவை
  • மிக மிக குறைந்த அளவில் கொடுக்கப்பட்டாலும் தியோபுரோமின், காஃபின் ஆகியவற்றை கொண்டிருக்கும் சாக்கலேட்டுகள் கிளி உள்ளிட்ட அனைத்து பறவைகளுக்கும் நஞ்சாகி உயிராபத்தை உண்டாக்கும்
  • இவற்றோடு மிக அதிக உப்பு, கொழுப்பு, வெங்காயம் பூண்டு, திராட்சை, ஈஸ்ட் கலக்கப்பட்ட மாவு ஆகியவைகளும் செல்லப்பிராணிகளுக்கு உடல்நல கோளாறுகள் உண்டாக்கும்.

செல்லப்பிராணிகள் இப்போது காவலுக்கு மட்டுமல்ல  நடைபயணத்தோழமைக்கும்  விழியற்றவர்களுக்கு வாழ்க்கைத் துணையாகவும் பலருக்கு பெற்ற பிள்ளைகளுக்கிணையாகவுமே இருக்கின்றன. அவற்றின் உணவுத்தேவையை சரியாக அறிந்துகொண்டு அவற்றிற்கு உணவளிக்க வேண்டும்.  அவற்றிற்கு ஆபத்துண்டாக்கும் உணவுகளைக்குறித்தும் நாமறிந்திருக்க வேண்டியது மிக அவசியம்

குருதி மரம்

 இந்தியப்பெருங்கடலில் ஆப்பிரிக்க கடற்கரைக்கு அடுத்து அமைந்திருக்கும் நான்கு தீவுகள் அடங்கியது  சொகோட்ரோ தீவுக்கூட்டம். இது 34 மில்லியன் வருடங்களுக்கு முன்பே அரேபிய நிலப்பரபிலிருந்து தனியே பிரிந்த நிலப்பரப்பு. யேமான் குடியரசின் பகுதியாகிய இங்குள்ள தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு உலகின் பிற பகுதிகளில் காணப்படுவதில்லை.

டிராகன் குருதி மரங்கள் என்பவை தாவர உலகின் அதிசயங்களில் ஒன்று.இத்தீவுக்கூட்டங்களில் ஒரு தீவில் மட்டுமே காணப்படும் இவற்றை நாம் விரைவில்   நிரந்தரமாக இழக்கவிருக்கிறோம். 

இம்மரங்கள் 1835ல்    அத்தீவுக்கூட்டங்களுக்கு சென்ற கிழக்கிந்திய கம்பெனியின் லெஃப்டினண்ட் வெல்ஸ்டெட் (Lieutenant Wellsted) என்பவரால்  முதன் முதலில் விவரிக்கப்பட்டது. முதலில் இவை Pterocarpus draco என்று பெயரிடப்பட்டன. பின்னர் 1880ல்தான் ஸ்காட்லாந்து  தாவரவியலாளர் ஐஸக் பேலே இதை   Dracaena cinnabari என்று  முறையாக மறுபெயரிட்டார். டிரசீனா பேரினத்தின் 100 சிற்றினங்களில் சின்னபரி உள்ளிட்ட 6 சிற்றினங்களே மரமாக வளரக்கூடியவை.

30 அடி உயரம் வளரும் 600 வருட வாழ்வை கொண்டிருக்கும் இம்மரங்கள் அத்தீவின் மலைக்குன்றுகளில் வளர்கின்றன. மரங்களில் இருந்து வடியும் குருதி போன்ற  அடர்சிவப்புநிற  கசிவு  இம்மரத்தின் பெயருக்கு காரணமாகிவிட்டிருக்கிறது.  டிராகனின் குருதி என்றழைக்கப்படும் இக்கசிவை அத்தீவு வாசிகள் ’emzoloh’ என்றழைக்கிறார்கள். 

அத்தீவின் பழங்குடியினரால் அந்த செஞ்சாறு உதட்டுக்கு சாயமிடுவதிலிருந்து மருந்துப்பொருளாக, வயலினுக்கு மெருகேற்ற என பல நூறு பயன்பாடுகளை நூற்றாண்டுகளாக கொண்டிருக்கிறது.

அத்தீவின் தொல்குடிகளின் பாரம்பரிய இசைகக்ருவியான Stradivarius violin எனப்படும் செந்நிற வயலின் இம்மரத்தின் செந்நிற கசிவினால் நிறமேற்றப்படுகிறது.

மாபெரும் குடைக்காளான்களை போலவும் பெரிய மழைக்குடை போலவும் அமைந்திருக்கும் இம்மரங்களின் தோற்றம் பிரமிக்க வைக்கும்.

இயற்கையில் எந்த ஒரு உயிரினத்தின் பாதுகாப்பு, பலநூறு பிற உயிர்களின் வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் காரணமாக இருக்கின்றதோ அவை குடை உயிரினங்கள் – umbrella species  எனப்படுகின்றன. டிராகன் குருதி மரங்கள் பார்ப்பதற்கு குடை போலிருப்பது மட்டுமின்றி அப்பிரதேசத்தின் குடை உயிரினங்களாகவும் இருக்கின்றன. எனவேதான் அழியும் ஆபத்திலிருக்கும் இவற்றின் பாதுகாப்பு தற்போது உலகின் கவனத்துக்கு வந்திருக்கின்றது.

நேரடியாகவும் மறைமுகமாகவும்  அவற்றின் வாழ்விடங்களிலும். அவற்றிற்கு அருகிலும்  இருக்கும் பல உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் வாழ்விற்கும் காரணமாக இருக்கும் குடை உயிரினங்களின் பட்டியலில் புள்ளி ஆந்தைகள், பாண்டா கரடிகள் மற்றும் மலை கொரில்லாக்கள் போன்ற பறவை விலங்கினங்களும் இருக்கின்றன.

அஸ்பரகேசி (Asparagaceae) குடும்பத்தை சேர்ந்த ஒருவித்திலை தாவரமான  டிராகன் குருதி மரங்களின் அறிவியல் பெயர் Dracaena cinnabari. Dracaena என்பதன் கிரேக்க பொருள் டிராகன், cinnabari  என்பது செங்குழம்பு அல்லது சிவப்புக் கசிவு என பொருள்படும். இம்மரங்கள்  இத்தீவை வறளச்செய்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றம், விதைகளையும் இளம் செடிகளையும் மேய்ச்சல் விலங்குகள் உண்பது மற்றும் வாழ்விட அழிப்பு ஆகியவற்றால் அழியும் ஆபத்திலிருக்கிண்றன. ஆய்வாளர்கள் தற்போது 10 சதவீத வாழ்விடங்களில்  மட்டும் வளரும் இவை 2080ல் முற்றிலும் அழியும் என்கிறார்கள்.

 பச்சை வெள்ளை நிறங்கள் கலந்த சிறுமலர்களின் கொத்துக்கள் மார்ச் மாதத்தில் தோன்றி ஐந்து மாதங்களில் ஆரஞ்சு நிற சிறுகனிகள் உருவாகும். கனிகளில் 1லிருந்து 4 விதைகள் இருக்கும். கனிகளிலும் சிவப்பு சாறு இருக்கும். பறவைகளின் விருப்ப உணவு இக்கனிகள்.

இவற்றின் நாற்றுக்களை வளர்த்து பாதுகாக்கும் திட்டமும் தற்போதைய ஏமானின் அரசியல் காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையியலாளர்கள் இவற்றை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

இவற்றை குறித்து மேலும் அறிந்துகொள்ள : https://youtu.be/hnIBdNqx2So

ஆலிவ், கனி மரம்.

கனி மரம்

ஆலிவ் மரக்காடுகளுக்குள் சென்றிருக்கிறீர்களா? காற்றில் மண் மணமும், மரங்களினடியில்  குளிர்ந்த நிழலும் கவிந்திருக்கும், வெள்ளியென மினுங்கும் ஆலிவ் இலைகள் உரசும் ஒலி ஒரு நாடன் பாடலைப்போல் காதில் கேட்கும், ஆலிவ் மரங்களை சிறிதளவாவது அறிந்து கொண்டிருப்பவர்களுக்கு, அந்த அனுபவம்,அந்த அற்புத மரங்கள் தோன்றிய கடந்தகாலத்துக்கே அழைத்துச் சென்றுவிடும்

6000 வருடங்களுக்கு முன்பிருந்தே மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் ஆலிவ் மரங்கள், பல சாம்ராஜ்யங்களின், நாகரீகங்களின் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும், பற்பல கலாச்சாரங்களை சேர்ந்த பல கோடி மக்களின் வாழ்வையும் பார்த்து கொண்டிருப்பவை, 

ஆலிவ் மரங்களின் வரலாறு மனித குல வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருப்பது. பண்டைய கிரேக்கத்தில் இருந்து ரோமாபுரி வரை, போனிஷியாவிலிருந்து பாலஸ்தீனம் வரை ஆலிவ், சமாதானத்தின் அமைதியின், வளமையின் குறியீடாக இருந்து வருகிறது

 அவற்றின் குறியீட்டு முக்கியத்துவங்களை கடந்தும் ஆலிவ் மரங்கள் அவற்றின் கனிகளால், ஆலிவ் எண்ணெயால் பல கலாச்சாரங்களின் சமையலறைகளில் இன்றியமையாத இடம் கொண்டிருக்கிறது. இன்று குக்கிராமங்களுக்கும் அறிமுகமாகி இருக்கும் பீட்ஸாக்களில் இருப்பது எங்கோ தொலைதூர நாடொன்றில் விளைந்த ஆலிவின் கனிகள் என்பதை எத்தனை இளைஞர்கள் அறிந்து உண்ணுகிறார்கள் ? 

கிரேக்க தொன்மங்களில் ஆலிவ் மரங்கள் அதிகம் பேசப்பட்டிருக்கின்றன அதில் முதன்மையானது எவ்வாறு ஆலிவ் மரங்கள் முதன் முதலில் உருவாகின என்பதுதான். அதனுடன் சேர்ந்தே ஏதென்ஸ் நகரத்துக்கு அப்பெயர் எப்படி வந்ததென்பதும் சொல்லப்பட்டிருக்கும்

மெய்ஞானத்தின் தெய்வமான ஏதினாவுக்கும் கடலின் தெய்வமாகிய பொசைடனுக்கும் நடந்த போட்டியில் உருவானதுதான் ஆலிவ் மரம் என்கிறது கிரேக்க  தொன்மம்.

ஆட்டிக்காவில்  புத்தம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு நகர் யாருக்கு சொந்தம், யார் அந்நகரின் பாதுகாவல் தெய்வம் என முடிவு செய்வதில் சிக்கல் உண்டாகியது, அந்நகரின் குடியேறவிருக்கும் மக்களின் தீர்ப்பே இறுதி எனவும்,  யார் வெல்கிறார்களோ அவர்களின் பெயராலேயே அந்த நகரும் அழைக்கப்படும் என்றும்  தீர்மானிக்கப்பட்டது. 

ஏதென்ஸ் என அப்போது பெயரிடப்பட்டிருக்காத அப்பெரு நகரம் யாருக்கானது என்னும் போட்டி ஏதீனாவுக்கும் பொஸைடனுக்கும் நடுவே நடந்தது. கிரேக்க கடவுளர்களின்  அரசரான ஜீயஸ் இதை ஏற்பாடு செய்திருந்தார். மன்னர் செக்ராப்ஸின் (Cecrops ) முன்னிலையில் இந்த போட்டி ஏற்பாடானது. 

 அந்நகர மக்களுக்கு அரிய பரிசை அளிப்பவர் யாரோ அவருக்கே அந்த நகரம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. பொஸைடன் தனது திரிசூலத்தை  அக்ரோபொலிஸ் கற்கோட்டையின் பாறை ஒன்றில் வேகமாக ஊன்றி ஒரு பெரும் உப்பு நீரூற்றை உருவாகினார்.  கடலின் தெய்வமாகிய அவர் அந்த உப்பூநிரூற்றை தனது கடலின் சக்தியாக காட்டினார். அவ்வூற்று நீர் பீறிட்டுக்கொண்டு வந்து நிலத்தை ஈரமாக்கியபடி நகரினுள் பாய்ந்தது. ஏதீனா அந்த ஈரநிலத்தில் மண்டியிட்டு ஒரு சிறு நாற்றை  நட்டுவைத்தாள், சில நொடிகளில் அந்நாற்று  வெள்ளியென மினுங்கும் பச்சிலைகளும் கொத்துகொத்தான கனிகளுமாக  அமைதியின், வளமையின்,நம்பிக்கையின் குறியீடான ஒரு ஆலிவ் மரமாக முளைத்து எழுந்தது. மக்களுக்கு உப்புநீரூற்றைவிட ஆலிவ் மரங்களே பிடித்திருந்ததால் அந்நகரம் ஏதினாவுக்கானதாகி அன்றிலிருந்து ஏதென்ஸ் என அழைக்கப்பட்டது. ஏதீனாவே எப்போதைக்குமாக ஏதென்ஸின் தெய்வமாகவும் ஆனாள் .

 இன்று வரையிலும் ஏதென்ஸின் கலாச்சாரத்தில் இரண்டற கலந்திருக்கிறது ஆலிவ் மரங்கள். ஆலிவ் இலைகள் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் தலையில் கிரீடமென, ராணுவ தளபதிகளின் தலையில், அரசர்களின் மணிமகுடத்தில் மகுடமென சூட்டப்படுகிறது. ஆலிவ் மரக்கட்டைகள் வீடுகள், படகுகள் செய்யவும் ஆலிவ் எண்ணெய் உணவாகவும், விளக்குகளுக்கு எரிபொருளாகவும் உடலில் தடவிக் கொள்ளவும் பயனாகிறது. ஆலிவ் கனிகள் ஏராளமான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. பண்டைய ரோமானிய கிரேக்க  நாணயங்களில் ஆலிவ் இலைக் கொத்து பொறிக்கப்பட்டிருந்தது

 அக்ரோபொலிஸ் நகரின் மத்தியில் கோட்டைகளின் இடிபாடுகளுக்கிடையில் ஏதீனாவின் ஆலிவ் மரம்தான் இன்றும் இருக்கிறது என கருதப்படுகிறது,  பலநூறு  ஆண்டுகளாக அங்கேயே இருக்கும் அம்மரம் மிகப்பழமையாகும் போதெல்லாம் அதிலிருந்து ஒரு கிளை எடுக்கப்பட்டு புதிய மரம் அதிலிருந்து அதே இடத்தில் உருவாக்கப்படுகிறது.

 சுமார் 2500 வருடங்களாக அந்த ஆலிவ் மரம் ஏதென்ஸின் வளமை நம்பிக்கை அமைதி மற்றும் உயிர்த்தெழுதலின் குறியீடாக காலத்தை கடந்து நின்றுகொண்டிருக்கிறது. கனிகளும் அளிக்கிறது.

 கிமு 480 ல் பெர்சியன் படையெடுப்பின் போது ஏதென்ஸின் புனித கோட்டை தரைமட்டமாகப்பட்டு அந்த ஆலிவ் மரமும் நெருப்பிட்டு அழிக்கப்பட்டது . அழிந்த அந்த ஆலிவ் மரம் அன்றே மீண்டும் ஒரு அடி உயரம் வளர்ந்ததாகவும் அதிலிருந்து மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்ட ஆலிவ் மரமே இன்று அதே புனிதமான ஏதீனா ஆலிவ்மரமாக நிற்கிறதென்றும் நம்பப்படுகிறது. பாதகமான சூழலிலும் முளைத்தெழும். அழித்தபின்னரும் உயிர்த்தெழும்   ஏதென்ஸ் மக்களின் இயல்பை குறிக்கும் மரமாக கருதப்படும் அந்த ஆலிவ் மரம்  கடவுளாகவும் வணங்கப்படுகிறது. 

 அந்த ஆலிவ் மரக்கிளைகளிருந்து உருவாக்காப்பட்ட 12 மரங்களும் ஒரு சரணாலயத்தில் வளர்கின்றன அவற்றிற்கு   moriai என்று பெயர். இச்சொல்லிற்கு ’’ஒரு பகுதி’’ என்று பொருள் அதாவது அவை ஏதென்ஸ் அரசின் ஒரு பகுதி, அதற்கு சொந்தமானது என்று பொருள். பண்டைய கிரேக்கத்தில் அம்மரங்கள் ஏதீனாவின் சொத்துக்களாக கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இன்றும் ஏதென்ஸில் இருக்கும் ஆலிவ் மரங்களனைத்துமே ஏதீனா உருவாக்கிய மரத்தின் சந்ததிகள் என நம்பப்படுகிறது.

கிரேக்கத்தில் ஆலிவ் அறுவடை அக்டோபரில் துவங்கி டிசம்பரில் முடிவடையும். குடும்பமாக நண்பர்களுடன் சேர்ந்து ஆலிவ் அறுவடை ஒரு கொண்டாட்டமாகவே அங்கு நிகழும். அறுவடை முடிந்த பின்னர் காய்ந்த ஆலிவ் மரக் குச்சிகளில் நெருப்புண்டாக்கி மகிழ்வதும் அங்கு வழக்கம். சில ஆலிவ் தோட்டங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் அந்த அறுவடையில் பங்குகொள்ளும் வாய்ப்பளிக்கிறார்கள். அவர்களே பறித்த ஆலிவ் கனிகளிலிருந்து , எண்ணெய் எடுத்து, கையோடு சில பாட்டில் ஆலிவ் எண்ணெயும் வீட்டுக்கு எடுத்து செல்லும் அந்த அனுபவத்துக்கு சுற்றுலாப் பயணிகள் போட்டி போடுகிறார்கள்.   

வரலாறு

இத்தாலியில் கிடைத்த ஆலிவின் புதைபடிவ எச்சங்கள் இவை 40 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே பூமியில் இருந்ததற்கான சான்றளிக்கின்றன

.கிரேக்க கோவில்களின் தீபங்களிலும் , ஒலிம்பிக் தீபத்திலும் ஆலிவ் எண்ணெயே உபயோகப்படுத்தப்பட்டது.

பிளைனி, ஹோரேஸ் மற்றும் தியோஃப்ராஸ்டஸ் ஆகியோரும் ஆலிவ் மரங்களை அவர்களின் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்

கிரேக்கத்தில் ஹோமரின் காலத்திலிருந்தே ஆலிவ் எண்ணெய் உடலில் தேய்த்து கொள்ளப்  பயன்பட்டது. கிமு 600களில் ரோமானியர்களின் முக்கிய பயிராக ஆலிவ் இருந்திருக்கிறது. ஆலிவ்களை  சித்தரிக்கும்  பல நூற்றாண்டுகளுக்கு முன்பான ஓவியங்கள் அகழ்வாய்வில்  கிடைத்திருக்கின்றன

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முதன் முதலில் குறிப்பிடப் பட்டிருக்கும் மரம் ஆலிவ் தான்.ஜெருசேலத்தின் ஆலிவ் மலைக்குன்றுகள் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கிறிஸ்தவ தொன்மம் ஒன்று ஏசு கிறிஸ்துவின் சிலுவை ஆலிவ் மரங்களில் செய்யபபட்டதென்றும்  அதன்பிறகே குற்றவுணர்வில் அவை நிமிர்ந்து வளர்வதில்லை என்கிறது.

திருக்குரானில் ஆலிவ் மரங்களும் கனிகளும் எண்ணெயும் 7 முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது

முகமம்து நபி அவர்கள் புனிதமரமான ஆலிவின் எண்ணெயை தேய்த்து குளிப்பதை குறித்து சொல்லி இருக்கிறார். பல நாடுகளில் ரமலான் நோன்பில் பேரீச்சைகளுக்கு பதிலாக ஆலிவ் கனிகள் உண்ணப்படுகின்றன.

சாலமன் அரசர் உலகின் அனைத்து உயிரினங்களின் மொழியுமறிந்தவர். அனைத்துயிர்களின் பேரிலும் பேரன்பு கொண்டிருந்தவர், அவர் உயிரிழந்தபோது அனைத்து விலங்கு,பறவை, பூச்சி இனங்களும் கண்ணீர் விட்டழுதன ,உலகத்தின் மரங்களெல்லாம் இலைகளை கண்ணீரை போல் உதிர்த்து துக்கத்தை காட்டின.  ஆனால் ஆலிவ் மரங்கள் மட்டும் இலை உதிர்க்கவில்லை, பிற மரங்கள் அதை நன்றி கெட்ட மரமென்று ஏசின, அப்போது ஆலிவ் மரம் ’’சாலமன் அரசரின் மீதுள்ள எனதன்பை நான் இலைகளை உதிர்த்தல்ல ஏராளமான கனிகளை அளித்தே காட்டுவேன்’’ என்று சொல்லியதாம் இப்படி சிரிய நாட்டுப்புறக் கதைகளிலும் ஆலிவ் மரம் இருக்கிறது.

மற்றொரு ஆலிவ் தொன்மம் சிறுவனாயிருந்த ஹெர்குலிஸ் ஒரு சிங்கத்தை ஆலிவ் மரக்கட்டையால் அடித்து கொன்றான் என்கிறது

பொ யு 3700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கணிக்கப்பட்ட, உறைந்த கிரேக்க எரிமலை குழம்புகளிலிருந்து  கிடைத்த ஒரு ஆலிவ் இலையில் நோய் உண்டாகி இருந்த வெள்ளை ஈ யும் படிவமாயிருந்தது. அதே வெள்ளை ஈயான  whitefly Aleurobus olivinus என்பது இன்றும் ஆலிவ் மரங்களில் அரிதாக உண்டாகும் நோய்க்கு காரணமாக இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த ’’தாவர – பூச்சி பரிணாம- இணை’’  அறிவியலில் மிக முக்கியமாக கவனிக்கப்படும் ஒன்று.

ஒடிஸியில், குரானில், விவிலியத்திலென பல முக்கிய இலக்கிய படைப்புகளில் தொன்று தொட்டு இடம்பெற்றிருக்கும் ஒரு கனிமரம் ஆலிவ்.

அமைதி, வளமை, செல்வம், வெற்றி ஆகியவற்றின் குறியீடாக, புனித மரமாக,  பல நாகரீகங்களில் இருந்து, இன்றும் அதே பொருளில் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் ஒரு மரம் ஆலிவ்.

 நோவாவின் படகுக்கு திரும்பிய புறா வாயில் கொண்டு வந்த ஆலிவ் சிறுகிளைதான் பூமியில் வாழ்வதற்கான சாத்தியத்தை அறிவித்தது.

  1782   ல் வெளியிடபட்ட அமெரிக்காவின் முதல் அதிகார பூர்வமான அரசு முத்திரையில் ஒரு கழுகு தன் கால்களில் ஆலிவின் சிறுகிளையை பற்றியிருக்கும் சித்திரம் அமைதியின் வலிமையை குறிப்பிட சித்தரிக்கபட்டது.

 1946ல் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் கொடியில் உலக வரைபடத்தில் இருபுறமும் ஆலிவ் கிளைகள் இருக்கின்றன.

மத்திய தரைக்கடல் பகுதி உணவுகளின் ‘Triad’’  எனப்படும் மூன்று’  முக்கிய இடுபொருட்களில் ரொட்டிக்கான கோதுமை, வைன் தயாரிப்புக்கான திராட்சைகளுடன் மூன்றாவதாக ஆலிவ் இருக்கின்றது..

பரவல்

.கிமு 16 ஆம் நூற்றாண்டில் பீனிசியர்கள் கிரேக்க தீவுகள் முழுவதும் ஆலிவ் சாகுபடியை தொடங்கினர், பின்னர் கிமு 14 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிரேக்க நிலப்பகுதிக்கு ஆலிவை அவர்கள் அறிமுகப்படுத்தினர், அங்கு அதன் சாகுபடி வெகுவாக.அதிகரித்தது . 

கிமு 4 ஆம் நூற்றாண்டில்  (கிரேக்க நாட்டின்) ஏதென்சின் அரசியல்வாதியும், சட்ட நிபுணரும், கவிஞரும்  நெருக்கடியான மற்றும் குழப்பமான நிலையில் இருந்த ஏதென்சில் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் பல மாற்றங்கள் செய்தவருமான  சோலோன் ஆலிவ் நடவு ஒழுங்குமுறை ஆணையை வெளியிட்டபோது உலகெங்கிலுமே ஆலிவ் சாகுபடி பெரும் முக்கியத்துவம் பெற்றது.  கிமு 6ம் நூற்ரண்டில்  சிசிலி வழியாக இத்தாலிக்கு நுழைந்த ஆலிவ்கள் பின்னர் உலகெங்கிலும் பரவின.

2007ல்தான் இண்டியாவில் ஆலிவ் வளர்ப்பு தொடங்கியது. முதன் முதலில் ராஜஸ்தான்  தார் பாலை நிலங்களில் ஆலிவ் சாகுபடியாகப்பட்டது.  

தமிழில் இடலி மரமென்றும்,  விரலிக்காய் எனவும் அழைக்கப்படும் ஆலிவ் இந்தியாவின் பல மாநிலங்களில் வளர்கிறது எனினும் இந்தியாவில் ஆலிவ் மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது

தாவரவியல்

ஐரோப்பிய ஆலிவ் என்று பொருள்படும்  Olea europaea என்னும் அறிவியல் பெயர் கொண்ட ஆலிவ் ஒருபசுமை மாறா குறுமரம் மற்றும் புதர் வகையைச் சேர்ந்தது. மல்லிகைப்பூவின் குடும்பமான ஓலியேசீ குடும்பத்தை சேர்ந்த இவற்றின் புதர் வகைகள் ஆங்கிலத்தில்  Olea europaea ‘Montra’, dwarf olive, அல்லது  little olive. என அழைக்கப்படுகின்றன

3 லிருந்து 12 மீ உயரம் வரை வளரும் இவை  ஏராளமான கிளைகள் கொண்டிருக்கும்.  எதிரெதிராக அமைந்திருக்கும் ஜோடி இலைகளின் மேற்பரப்பு அடர் பச்சையிலும் அடிப்பரப்பு வெள்ளிபோல மினுக்கமும் கொண்டிருக்கும். இதன் மரக்கட்டை மிகவும் உறுதியானது. மரத்தின் மேல் பாகம் பழமையாகி இற்றுப்போய்  மடிந்தால் வேர்களிலிருந்து மீண்டும் ஒரு புதிய மரம் உருவாகி வளரும்.

 ஆலிவ் மரங்கள் 4 வருடங்களில் மலர்களும் கனிகளும் அளிக்கத் துவங்குகின்றன. வசந்த காலத்தில் இலைக் கோணங்களிலிருந்து  சிறு வெண்மலர்களின் தளர்வான மலர் கொத்துக்கள் உருவாகும். மாமரங்களை போலவே ஆலிவ் மரங்களிலும் கனிகளை அளிக்கும் இருபால் மலர்களும், வெறும் மகரந்தங்களை மட்டும் கொண்டிருக்கும் ஆண்மலர்களும் ஒரே மஞ்சரியில் அமைந்திருக்கும் (Polygamous inflorescence). ஆலிவ் மலர்களின் மகரந்தம்  மனிதர்களுக்கு ஒவ்வாமையை உருவாக்கும்.

காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும் இம்மரங்கள் பொதுவாக  ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் கனியளிக்கும், சில மரங்கள் வருடா வருடம் கனியளிப்பதும் உண்டு. கனிகள் பீச், பிளம், மா போல ட்ரூப் வகையை சேர்ந்தவை, கனிகளின் மத்தியில் கடினமான உறைகொண்ட இருவிதைகள் இருக்கும்

பச்சை நிறத்தில் இருக்கும் கனி முதிர்கையில் கரிய நிறம் கொள்ளும் விதைகளில்  30- 40 % எண்ணெய் அடங்கி இருக்கும். சுமார் 7 கிலோ கனிகளிலிருந்து 1 லிட்டர் ஆலிவ் எண்ணெய் கிடைக்கும் 

ஆலிவ்கள்  விதைகள் மூலம் இனப்பெருக்கம்  செய்வதில்லை, இவற்றில் தண்டுகள், வேர்கள் அல்லது இலைகள் மூலமே இனப்பெருக்கமும் சாகுபடியும் நடைபெறுகிறது.

ஆலிவ்களில் ஆயிரக்கணக்கான கலப்பின வகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன, பொதுவில் உண்ணக்கூடிய கனிகள்  “table olives’’ எனப்படுகின்றன. உண்ணும் கனிகளுக்கெனவும் எண்ணெய்க்கெனவும் பிரத்யேக வகைகள் வளர்க்கப்படுகின்றன

உலகின் மொத்த ஆலிவ் உற்பத்தியில் 80% எண்ணெய் தயாரிப்பிலும், 20 சதவீதம் மட்டுமே உண்ணும் கனிகளுக்காகவும் பயன்படுகின்றன.

இதன் பல கலப்பின வகைகளில் இருப்பதிலேயே பெரிய ஆலிவ் மரம் டாங்கி ஆலிவ்  (“donkey olive” ) என்றும் ஆகச்சிறிய ஆலிவ்  மரம் புல்லட் மரம்  ( “bullet”) என்றும் பெயர் கொண்டிருக்கிறது.

 ஆலிவ் மரங்கள் கடற்கரையில் செழித்து வளர்பவை எனினும் இவை பாறை குன்றுகளிலும் வறள் நிலப்பகுதிகளிலும் நன்கு வளரும், அதிக காற்றையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது ஆலிவ். 

கனிகளின்  வகைகள்

சர்வதேச ஆலிவ் சபையான  International Olive Council (IOC)  உண்ணக்கூடிய ஆலிவ்களை  மூன்றாக வகைப்படுத்தி இருக்கிறது

  1. முற்றிலும் பழுத்திருக்காத கொஞ்சம் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும்  கசப்பு சுவை கொண்ட பச்சை ஆலிவ்கள்
  2. சிவப்பும் பழுப்பும் பச்சையும் கொண்டிருக்கும் பாதி பழுத்த ஆலிவ்கள்

     3. நன்கு கனிந்த கருப்பு ஆலிவ்கள்

கனிந்த ஆலிவின் கசப்பை நீக்க மரச்சாம்பலிலிருந்து கிடைக்கும் ‘’லெ’’ (lye) எனும் வேதிப்பொருள் உலகெங்கும் உபயோகிக்கப்படுகிறது.

ஆலிவ்களின் கசப்புக்கு காரணமான oleuropein என்னும் வேதிப்பொருளை  நீக்க உப்பு நீரில் அவை  நனைக்கப்பட்டு நொதிக்கச்செய்யாப்படுகிறது.  இதை அறிந்துதான் ஏதீனா உப்பூ நீரூற்றின் அருகே ஆலிவ் மரத்தை  உருவாக்கி இருக்கிறாள் போலிருக்கிறது.

இந்த ஆலிவ் நொதித்தல் உலகின் பலநாடுகளில் பலவிதமான முறைகளில் நிகழ்கிறது.

கனிகள் பலமுறை அழுத்தப்பட்டு சாறெடுத்தும், வேதிபொருட்கள் கலக்கப்பட்டும் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் ஆண்டுத்தோறும் 3 மில்லியன் டன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது 

உலகின் மிக அதிகம் விளைவிக்கப்படும் கனிகளில் ஆப்பிள், வாழை, மா இவற்றுடன் ஆலிவ்களும் இருக்கின்றன. உலகில் எண்ணெய்க்காக சாகுபடி செய்யப்பட்ட கனிகளில் மிகபழமையாதும் ஆலிவ்தான். 7000 வருடங்களுக்கு முன்னர் மத்தியதரைக்கடல் பகுதியில் ஆலிவ் சாகுபடி  செய்யப்பட்டு எண்னெய் பிழிந்து எடுக்கபப்ட்டதற்கான சான்றுகள் உள்ளன  

ஆயில்-Oil  என்னும் ஆங்கிலச் சொல்லின் வேர் இந்த ஆலிவ் என்னும் சொல்லிலிருந்தே வந்தன.  உலகின் மிக அதிகமாக சுவைத்து மகிழப்படும் கனியும் ஆலிவ்தான்,  

 ஆலிவ் மரங்களும் கற்பக விருட்சங்கள் தான் அவற்றில் பயனற்றவை என எந்தப் பகுதியும் இல்லை. கனிகள் உண்ணத்தகுந்தவை, கனிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உலகெங்கிலும் பலவிதமான பயன்பாட்டில் இருக்கிறது. 

கரிய ஆலிவ் கனிகளில் செம்பு இரும்பு உள்ளிட்ட பல சத்துக்களும் ஓலியிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.. எனினும் நன்கு பழுக்காத ஆலிவ் காய்களை உண்ணுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். 

 ஆலிவ் எண்ணெய் அழகு சாதன  பொருட்கள் தயாரிப்பிலும் வெகுவாக பயன்படுகிறது. ஆலிவின் மரக்கட்டைகள்  மரச்சாமான்கள் செய்ய பயன்படுகிறது. ஆலிவ் கனிகளும் எண்ணெயும் ஏராளமான மருத்துவ பலன்களும் கொண்டிருக்கின்றன.

 கிரேக்க ஆலிவ் எண்ணெய் உலகின் முதல் தரமானது ஆனால் உலகின் முன்னணி ஆலிவ் எண்ணெய் உற்பத்தியாளராக இருப்பது ஸ்பெயின், இரண்டாவது இத்தாலி பின்னரே கிரேக்கம்.

புகழ்பெற்ற ஒரு ஆலிவ் மரம்

 இத்தாலிய மரபுகள், இயற்கை காட்சிகள்,, வரலாறு, கலைப் பாரம்பரியம், மீயுயர் பண்பாட்டில் தாக்கம் ஆகியவற்றிற்காக பெரிதும் அறியப்படுகின்ற டுஸ்கான்  (Tuscany ) பிரதேசத்தில்  15 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயமான  சாண்டிஸிமா (Santissima Annunziata) வின் பின்புறம்    3500 வருட பழமையான Olivo della Strega, என்னும் பெயர் கொண்ட ஆலிவ் மரமொன்று கடந்த கால தொன்மங்களின் நினைவுச்சின்னமாக நின்றுகொண்டிருக்கிறது. இதுவே உலகின் மிக பழமையான உயிருள்ள ஆவணமென்று கருதப்படுகிறது. ஐரோப்பாவின் மிக பழமையான மரமும் இதுதான்.

மரத்தண்டும் கிளைகளும்   திருகிக் கொண்டிருக்கும் இந்த சூனியக்காரிகளின் ஆலிவ் மரம் என்று பெயர் கொண்ட மரத்திற்கு பின்னால் ஒரு மர்மம் கலந்த தொன்மம் இருக்கிறது.  

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு  பாகன் பழங்குடியினரின் கொண்டாட்டங்களின் ஓரிரவில் சூனியக்காரிகளும் பாதி குதிரை- பாதி மனிதன், பாதி மனிதன்- பாதி ஆடு என்னும் உடலமைப்பு கொண்டிருக்கும் உயிரினங்களும் இம் மரத்தின் கீழ் கூடி மகிழ்வார்கள். அவர்களில் மிக சக்திவாய்ந்த சூனியக்காரி என்று தேர்வு செய்யப்படுபவள் அன்றிரவு முழுக்க அம்மரத்தின் முன்னால் நடனம் ஆடுவது வழக்கம். நடனத்தின் உச்சத்தில் அம்மரத்தில் உறையும் தீய ஆவிகள் எழும்பி உடன் நடனமாடும், விடியும்போது நடனத்தில் ஈடுபட்ட  சூனியக்காரி ஒளிரும் கண்கள் கொண்ட ஒரு மாபெரும் பூனையாக  உருமாறி அம்மரத்துக்கு அடுத்த வருடம் வரை காவலிருப்பாள் என்கிறது அத்தொன்மம்.

 உபகதையொன்று அந்த மரக்கிளைகளில் அமர்ந்திருந்த ஒரு ராபின் பறவையை நோக்கி கல்லெறிந்த ஒரு சிறுவனை  காவலிருந்த சூனியக்காரி ஆலிவ் கனிகளை வீசியெறிந்து துரத்தினாள் என்கிறது. இக்கதையை கேட்காத இத்தாலிய சிறுவர்களே இல்லை எனலாம். 

சூனியக்காரிகள் ஆலிவ் மரத்தினருகில் கூட்டமாக நடனமிட்டு ஆவிகளை எழுப்பும் சித்திரம் அந்நாட்டு கலாச்சாரத்துடன் இணைந்து தலைமுறைகளாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது

 இத்தாலியின் பண்டைய கலாசாரத்தின் நீட்சியாக இன்றும் அங்கு நின்றிருக்கும் இம்மரத்தின் கார்பன் ஆய்வுகள் இவை 3500 வருடத்திற்கு முற்பட்டவை என்றும் இன்னும் 90 வருடங்களில், இம்மரம் உயிரிழக்கும் எனவும் தெரிவிக்கின்றது.   இப்போதும் சிறுகிளையொன்றில் சில ஆலிவ் கனிகளை வருடம்தோறும் அளிக்கும் இம்மரம் இத்தாலியின் புகழ்மிக்க சொத்தாக கருதப்படுகிறது. இத்தாலிய சுற்றுலாவின் மிக முக்கிய பகுதியாகவும் இது விளங்குகிறது. 

9 மீ சுற்றளவும் 10 மீ உயரமும் கொண்டிருக்கும் 3500 ஆண்டு பழமையான தெற்கு நோக்கிய இம்மரமும் அதனுடன் இணைந்து வளர்ந்திருக்கும் அதன் அடிப்பாகத்திலிருந்து தோன்றிய 200 வருட பழமையான ஒரு புதிய மரமுமாக இணைந்து திருகி நிற்கும் இந்த மரத்தை சுற்றிலும் வேலியிட்டு அரசு பாதுகாத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சிறந்த ஆலிவ் எண்ணெய் தயாரிப்பிற்கு இம்மரத்தின் பெயரால் ஒரு விருதும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆலிவ் மரங்கள் சாதாரணமாக 500- 600  வருடங்கள் உயிர் வாழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளை தாண்டி வாழ்ந்து இன்னும் கனியளித்துக்கொண்டிருக்கும் பல ஆலிவ் மரங்களும் உலகெங்கிலும் உள்ளன.

கிரேக்கத்தில் ஆலிவ் அருங்காட்சியகமொன்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான  பல ஆலிவ் மரங்கள் இருக்கும் காட்டினருகில் அமைந்திருக்கிறது. அங்கு ஆலிவ் மரக்காட்டு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுகிறது, ஆலிவ் மரங்களை எப்படி வளர்ப்பது, பாதுகாப்பது, அவற்றிலிருந்து மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரிப்பது ஆகியவையும், ஆலிவ் மரங்களுடன் இணைந்த கிரேக்க கலாச்சரா அம்சங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகிறார்கள்.

உலகெங்கிலும் எப்படி வைன் சுவைத்தல் என்பது ஒரு சடங்காக கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கிறதோ அப்படி கிரேக்கத்திலும் இத்தாலி மற்றும் ஸ்பெயினியில் ஆலிவ் எண்ணெய் சுவைத்தலும்  விமரிசையாக நடக்கிறது.பல நாகரீகங்களின் கலாச்சாரத்துடன் பிணைந்திருக்கும் திராட்சைக்கனியின் எதிர்த்தரப்பென்றால் அது நிச்சயம் ஆலிவ்தான்.  

ஆலிவ் கனி, எண்ணெய் மற்றும் சிறு கிளை ஆகியவை பல பண்பாடுகளின் குறியீடாக அமைந்திருக்கின்றன. நட்புறுதிக்கென நண்பர்கள் உலகெங்கிலும் கைமாற்றிக் கொள்வதும் ஆலிவ் கிளைகளைத்தான். மனிதர்களின் சரும நிறத்தில் ஒரு வகை ஆலிவ் நிறம் எனப்படுகிறது

பப்பாயி என்னும் புகழ்பெற்ற கார்டூன் கதாநாயகனின் மனைவியின் பெயர் ஆலிவ் ஆயில் என்பது அதை சிறுவயதில் பார்த்தவர்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும்

 ஸ்பெயினின் புகழ்பெற்ற  கால்பந்தாட்ட  நிர்வாகியும், பிரீமியர் லீக் அர்சினால் குழுவின் தற்போதைய நிர்வாகியுமான மைக்கேல் அர்டேட், குழுவினருடன் நடக்கும் ஒவ்வொரு முக்கிய கூடுகைகளுகும் ஒரு சிறு ஆலிவ் மரக்கன்றை  அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பொருட்டு எடுத்துச்செல்வதாக சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.150 வருடங்கள் பழமையான  போன்ஸாய் மரமான அதை தன் குழுவின் குறியீடாக காட்டுகிறார் அவர்

2015 ன் ஸ்பெக்டர் திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டான டேனியல் கிரெய்க் தனது வழக்கமான பானத்துக்கு மாற்றாக ஆலிவ் கனிகள் அலங்கரிக்கும் மார்டினி அருந்துவதை கவனித்தீர்களா யாரேனும்?

 வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றிருப்பது  மட்டுமல்ல நம் ஆரோக்கியத்தின் மகிழ்ச்சியின் கலாச்சாரத்தின் அங்கமாகவும் ஆகிவிட்டிருக்கும் ஆலிவ்களை குறித்து  உலகமொழிகளில் பல அழகிய கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன, பெரும்பாலும் பிரிவுத்துயரை சொல்லி மீண்டும் சந்திக்கையில் ஆலிவ் மரங்களினடியில் முத்தமிட்டுக்கொள்வதை குறித்தானவைகளாக இருக்கும்.  

இனி எப்போதேனும் ஆலிவ் காடுகளுக்குள் செல்ல நேர்ந்தால் அவற்றின் காலம் கடந்த அழகை ஆராதிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள், அவை கடந்து வந்திருக்கும் காலத்தை, அவற்றை பேணிப்பாதுகாத்த நம் முன்னோர்களின் தலைமுறைகளை எண்ணிப்பாருங்கள். ஆலிவ் கனிகளின் வாசனையையும் சுவையையும் அனுபவியுங்கள். அதன் மூலம் இயற்கைக்கும், கலாச்சாரங்களுக்கும் மனிதனுக்குமான பிரிக்க முடியாத தொடர்பையும் நீங்கள் உணரலாம் 

சமர்ப்பணங்கள்

வாசிப்பிற்குள் நான் மிக இளமையிலேயே நுழைந்துவிட்டேன் என்றாலும் அப்போது அவை திருட்டுத்தனமான வாசிப்பென்பதால் அத்தனை மகிழ்ந்து வாசித்திருக்கவில்லை அப்பாவுக்கு பெண்கள் கதைப்புத்தகம் வாசிப்பதில் பெரும் ஆட்சேபணை இருந்தது, வாரப்பத்திரிகைகளுடன் என்னையோ அக்காவையோ பார்த்துவிட்டால் வீடு இரண்டுபடும். அவர் வீட்டில் இல்லாத சமயங்களில் அவசரமாக படிப்பதுண்டு.

அப்போது பெரும்பாலும் காதல் கதைகள் தான் வந்துகொண்டிருந்தன என்பதும் காதல் திருமணத்தின் எல்லா பாதகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர் என்பதையும், இப்போது நினைக்கையில் அப்பாவின் அந்த மூர்க்கத்தை கொஞ்சமாகவேனும் புரிந்துகொள்ள முடிகின்றது

சுதந்திரமாக வாசிக்க தொடங்கியது நூலகம் சென்ற கல்லூரிக் காலங்களில் தான் அப்போதும் வீட்டுக்கு பின்னே இருந்த கல்லூரி என்பதால் அதிக நேரம் செலவழிக்க முடிந்ததில்லை. கோவை பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காகச் சென்று விடுதியில் தங்கியிருந்தபோது தான் ஏராளம் வாசித்தேன். என்னை முழுக்கவே வாசிப்பு அப்போது மூடிக் கொண்டிருந்தது.

பல்கலைக்கழகத்துக்கு எதிரே   A-Z  என்று ஒரு இரவல் புத்தக நிலையம் இருந்து. அங்கே பெண்கள் கூட்டம் அலைமோதும் ரமணிசந்திரன் அங்கேதான் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தார். ஒரு வாரத்தில் திருப்பி கொடுக்கையில் புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கும் விலையில் 10 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு பேருந்தில்  பயணித்த அந்த சில வருடங்களில் எப்போதும் என்னுடன் எண்டமூரியோ, சுஜாதாவோ, பாலகுமாரனோ, லா சா ரா வோ , தி ஜாவோ உடனிருந்தார்கள். அப்போதுதான் அ முத்துலிங்கம் அவர்களையும் அறிந்து கொண்டிருந்தேன்

அ.முவின் கதைகளின் மாந்தர்கள், கதைக்கரு, நிலக்காட்சிகள் என்ற அத்தனை சுவாரஸ்யங்களைக் காட்டிலும் அவரது தூய இனிய மொழி என்னை கவர்ந்தது. இலங்கை தமிழின் மீது எனக்கு எப்போதும் தனித்த பிரியம் உண்டு. மொழியின்பத்துக்காகவேதான் நான் பிரதானமாக அவரது கதைகளை வாசித்தேன்

என்  ஆய்வு நெறியாளருக்கு கோத்தகரி வனக்கல்லூரிக்கு மாற்றலானதும்  இரண்டு வருடங்கள் பொள்ளாச்சி- கோவை- மேட்டுப்பாளையம்- கோத்தகிரி என்று கூடுதலாக பயணங்களும் கூடுதல் வாசிப்புமாக இருந்தேன். அட்டையிலிருந்து அட்டை வரை நிதானமாக வாசித்த அச்சமயத்தில்  புத்தகங்களை யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பதும் விசித்திரமானவைகளை  குறித்து வைத்துக்கொள்வதும் வாடிக்கையாக இருந்தது.

தனக்கு பிரியமான சிவப்பு மதுவுக்கு, மனப்பிறழ்வு நோய்க்கு தானெடுத்துக் கொள்ளும் மருந்துக்கு, இறந்த தன் மனைவிக்கு போன்ற சமர்ப்பணங்கள் இருந்தன. தனது, ஏராளமான, நெருக்கமான காதலிகளுடனான  உறவைச் சொல்லிய நூலொன்று எழுதியவரின் மனைவிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது):. தன்னை முதன்முதலாக நூலகத்துக்கு அழைத்துச் சென்ற தனது அன்னைக்கு ஒரு நூல், தனக்கு பிரியமான முலாம்பழத்துக்கும் ஒருநூல் அர்ப்பணமாயிருந்தது.

2016 எனக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டு முதன் முதலாக வீட்டைவிட்டு, மகன்களை பிரிந்து  மற்றொரு இடத்தில் ஒரு மாதம் தங்கி இருந்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்த கொந்தளிப்பான காலமது.  ஒரு மாத கால துறை சார்ந்த பயிற்சியையும் அச்சமயத்தில் எடுத்துக் கொண்டிருந்தேன். பல்கலைக்கழக பேருந்தில் பயிற்சிக்கு செல்லுகையில் நட்பான பேராசிரியர் ஒருவர் எனக்கு அ. முவின் ‘’மகாராஜாவின் ரயில் வண்டி’’ தொகுப்பை வாசிக்கக் கொடுத்தார். நூலாகவோ அல்லது மின்னூல் வடிவிலோ அல்லாது நகலெடுத்த பக்கங்களை இணைத்து புத்தகமாக்கிய வடிவம் அது

நாள் முழுக்க நீண்ட பயிற்சியின் முடிவில் களைத்துப் போயிருந்த ஒரு நாள் இரவில் அதை பிரித்து வாசிக்கத் துவங்கினேன். மகாராஜாவின் ரயில் வண்டி என்னும் அந்த நூலை அ.மு  சமர்ப்பித்திருந்தது,  அவரால் உயிரிழந்த ஒரு பறவைக்கும் பிறக்காமல் போன அதன் சந்ததிக்கும். அவரே அது சமர்ப்பணமல்ல பிராயச்சித்தம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த ஒரு பத்தி என்னை கசிந்துருகச் செய்துவிட்டது. இளமையின் வேகத்தில் நண்பனுடன் சேர்ந்து விளையாட்டாக செய்யப்போன ஒரு காரியம் விபரீதமாக முடிந்து ‘பாம்’மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த ஒரு பாவமும் செய்திராத அந்த கொழுத்த பறவை உயிரிழந்ததை   சொல்லுகையில்:

//அந்தகாகம் ஒரு குற்றமும் செய்யவில்லை. அது செய்ததெல்லாம் அந்த நாட்டில் இருந்த அத்தனை காடுகளில், அந்த காடுகளில் இருந்த அத்தனை மரங்களில், அந்த மரங்களிலிருந்த அத்தனை ஓலைகளில், அந்த வளைந்த ஓலையை தேர்வு செய்து அங்கே தன் பாட்டுக்கு உட்கார்ந்திருந்துதான். இந்த புத்தகம் ஒருபாவமும் அறியாத அந்த பறவைக்கு,பிறக்காமல் போன அதன் சந்ததிகளுக்கு// என்று சொல்லி இருந்தார்.

 எத்தனை வாஞ்சையும், பரிவும், கருணையும், அறியாத செயலுக்கான குற்ற உணர்வும் கலந்த ஒரு சமர்ப்பணம்? இந்தவரிகளில் காணமுடிந்த அந்த மனதின் ஈரம் என்னால் ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் அவ்விரவு முழுவதும் உறங்காமல், உறக்கம் வராமல் ஒரே மூச்சில் அத்தனை கதைகளையும் வாசித்து முடித்தேன்.  அத்தொகுப்பின்  75 கதைகளின் ஒவ்வொரு வரியும் அ.முவின் அந்த கனிவில் தோய்ந்தவைகளாகவே இருந்தன.

அப்போது எனக்கிருந்த பல சிக்கல்களிலிருந்து நான் எளிதில் அந்த தூய அன்பின் கையைப்பிடித்துக் கொண்டு கடந்தும்  வந்து விட்டிருந்தேன். இத்தனை நல்ல மனம் கொண்ட மனிதர்கள் இருக்கையில் நான் அஞ்சவும் நம்பிக்கையிழக்கவும் தேவையில்லை என்று ப் மனமார நம்பினேன்

 ’’ஓர் அவமானத்தை ஓர் இளவெயில் போக்க முடியுமானால், ஓர் இழப்பை ஒரு மென்மழை மறக்கச் செய்ய முடியுமானால், ஒரு நோயை பூவின் நறுமணத்தால் சமன் செய்து கொள்ள முடியுமானால், வாழ்க்கையில் அஞ்சக்கூடியதாக ஏதுமில்லை..!!என்று சொல்லி இருப்பார் ஜெயமோகன்

அப்படி என் முன்பாக ஒரு பெரிய மலையைப் போல நின்றிருந்து அச்சமூட்டிய ஒரு சிக்கலை  அ. முவின் அந்த கனிவினால் திரைச்சீலையை தள்ளி விலக்குவதுபோல் எளிதில் கடந்து வந்துவிட்டேன். உலகம் அப்படியொன்றும் அன்பின்மையால் வரண்டு விடவில்லை என்று அந்த சமர்ப்பணம் எனக்கு சொல்லியது.

அவரின் பல படைப்புக்களை நான் வாசித்திருந்தும் இந்த குறிப்பிட்ட தொகுப்பு என் தனித்த பிரியத்துக்குரியதானது.

கோடைமழையில் அவரது சொந்த ஊரான கொக்குவில்லிலிருந்து புறப்படும் மஹாராஜாவின் ரயில் வண்டி ’எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலையில் நிற்கும்’ வரை நான் வண்டியை விட்டு இறங்கவேயில்லை.

அடிக்கடி இடையில் சுருட்டு, புகையிலை, சிகரெட் வாடை வந்து கொண்டிருந்தது,  மழை பெய்தது, வெயிலடித்தது, புழுதி பறந்தது அதிக ரிக்டர்  அளவிலான பூகம்பம் வந்தது, போர் தொடர்ந்தது, ஏதேதோ ஒழுங்கைகள் வழியாக பயணம் ஆப்பிரிக்காவிலும் கொக்குவில்லிலும் சோமாலியாவிலும், நைரோபியிலும் தொடர்ந்தது.  இடையே யாழ்தேவி கணக்காய்  நேரத்துக்கு கடந்து சென்றது. கச்சான் காற்றும் சோளக்காற்றுகளும் அடித்தன

ரயிலெங்கும் குட்டிக்கூரா மணந்தது, இடைக்கு கல்பெஞ்சும், கவண்மேந்தும் வருகின்றன,  நாடன் பாட்டுக்களும் பழமொழிகளும் சிறார்களின் விளையாட்டுப் பாட்டுக்களும் காதில் கேட்டது.

இரண்டு பூ பூக்கும் ஒரே மரமென்னவென்னும் விடுகதையும் போடுகிறார் அ.மு.

 நல்ல பசி நேரத்தில் மாங்காய் சம்பலும் ஆப்பிரிக்காவின் வ்வூவ்வூ களியும் மணமடித்து அவற்றை உண்ணவேண்டும் என்னும் ஆவலை உருவாக்கியது. ஆட்டுச்செவி பருவத்தில் இளசாக உடையாமல் இருந்த தேங்காயின் வழுக்காய் சச்சதுரமாக வெட்டிபோடப்பட்டு செய்த குழம்பும், கணவாயுடன் ஒரு சொட்டு மையும் முருங்கைப்பட்டையும் போட்டு வேகவைத்த மணத்தையெல்லம் கூட சமாளித்துவிடலாம், ஆனால் அந்த  ஆட்டுக்கறி பிரட்டல் இருக்கிறதே! வாய்நீர் ஊறாமல் அதை கடந்து வந்திருக்கும்  அசைவ உணவுக்காரர்கள் இருக்கவே முடியாது.

கோலாகலமான  மஞ்சவனப்பதி தேர் திருவிழாவை மட்டுமல்ல, மக்களை மக்கள் அடித்துக் கொள்ளும் இனவெறியில் சிந்தும் கண்ணீர்த்துளைகளையும் ரத்தத்தையும் கூட காண நேர்ந்தது

இந்த ரயில் வண்டி பிரயாணத்தில் என்னை கவர்ந்தது அல்லது என்னை பேரலையென அடித்துக் கொண்டு சென்றது உடன் வந்த பெண்மைப் பெருக்குத்தான். எத்தனை எத்தனை வகையில் பெண்கள்! துணிச்சல்காரிகளும், துயரமே உருவானவர்களும், வடிவானவர்களும், அன்பான அக்காக்களும், பச்சிளம் குழந்தைகளும், சிறுமிகளும், சிறு மகள்களும், காதலிகளும் அன்னைகளும், மனைவிகளுமாக வரும் அவர்களுக்கெல்லாம்தான் எத்தனை வகையில் இடர்பாடுகள், சிக்கல்கள் கலைடாஸ்கோப்பின் வர்ணஜாலம் போல அவர்களின் இயல்புகளின் வண்ணக்கோலம் கண்முன்னே விரிந்தது

மனதில் ஒருவனை வைத்துக்கொண்டு, இன்னொருவனை மணமுடித்த சாந்தினி,  காதல் துயரை உவந்து ஏற்றுக்கொள்ளும் அனுலா,  மனதிற்குள் ரகசியமாக ’கொண’ மாமாவை காதலிக்கும் ஒரு அக்கா, சோதிநாதன் மாஸ்ரரை தவிக்க வைக்கும்,  பல்லி வயிற்றில் முட்டை தெரிவது போல விரல்களில் ஓடும் ரத்தம் கூட தெரியும் நிறத்திலிருக்கும் இளமை பொங்கும் அலமேலு, தண்ணீருக்காக காதலை மறக்கும் சோமாலியாவின் மைமூன், திறமான நிச்சயத்துடன் வருவேனென்று சொன்னவனுக்காக காத்திருந்து மட்கும் ஹொன்ஸாகூல், என ஒவ்வொரு நிறுத்தத்திலும் காதல் கொண்ட, காதல் கொள்ள வைத்த பெண்கள் பயணத்தில் இணைகிறார்கள்

  துயரமே உருவான பெண்கள் பலரையும் காணமுடிகின்றது பிள்ளைப்பாசத்தில் கட்டுண்ட பார்வதி, இனக்கலவரத்தில் உயிர்பிழைக்க ஓடிவருகையில் இறந்துபோய் புதைக்கவும் இல்லமால் எரிக்கவும் இல்லாமல் அப்படியே வீதியோரத்தில் விடப்பட்ட தங்தம், சிறு ஜாடையில் அவளைப்போலவே இருக்கும்  அவள் மருமகள். பயணச்சீட்டுக்களாக மாறிவிட்ட வளையல்கள்  இல்லாத மூளிக்கைகளை அசைத்து பிளேனில் போகும் மகனுக்கு விடைகொடுக்கும் ஒரு அன்னை,

எங்கோ நாதியற்று கிடக்கும் மகனுக்கு வயலட் கலர் பென்சிலை நாக்கில் தொட்டுத்தொட்டு ’’இப்போதெல்லாம் தென்னையிலிருந்து தேங்காய்கள் விழுவதில்லை, வானத்திலிருந்து மழை விழுவதில்லை ஆகாயத்திலிருந்து குண்டுகள் தான் விழுகின்றன’’ என்று கடிதம் எழுதும் அன்னையொருத்தியின் சித்திரமும், வீட்டை துடைத்துப் பெருக்கி, குழந்தைகளைக் குளிப்பாட்டுவது போல வாஞ்சையுடன் பாத்திரம் அலம்பி, துணிகளை துவைத்து அப்படியும் நேரம் எஞ்சி இருக்குமானால் அடுப்புக்கரி அணைந்த இடத்தில் படுத்துக்கொள்ளும்  பதிமூன்றே வயதான வேலைக்கர சிறுமி பொன்னியையும்,  நினைத்தாலே கிலி பிடிக்கும்படியாக ஒரு பிறந்த நாள் பரிசைப்பெறும் பாரதிராஜா பார்த்தால் பொறாமைப்படும் படியாக ஒரு  நீள  வெள்ளைத் துகில் உடையை வைத்திருக்கும் பத்மாவதியும்  மனதை கனக்க செய்து விடுகிறார்கள். ரயில் பெட்டியிலிருந்து நான் இறங்கி இத்தனை காலமாகியும். அந்த கனம் இன்னும் நெஞ்சில் தான் அழுத்திக் கொண்டிருக்கிறது

 நகை சுற்றிவரும் மெல்லியதாள் போன்ற காகிதத்தில் இரண்டு பக்கமும் இங்க் தெரிய அந்நிய தேசத்திலிருக்கும் கணவனுக்கு கடிதம் எழுதும் ஒரு பாவப்பட்ட மனைவி, பாயை விரித்துப்போட்டு  இரு பக்கத்திலும்  இரண்டிரண்டாக படுத்திருக்கும் பிள்ளைகளுக்கு  சரிசமமாக தன்னை பிரித்துக் கொடுத்து நடுவாக படுத்துக்கொள்ளுமொருத்தி, தனக்கு விதிக்கப்பட்ட வறுமையை ரகஸ்யமாக அனுபவிக்க விரும்பும் பாத்திமா, நாலு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு போகும் தொக்கையான ஒரு மனுஷி என இவர்களின் துயரத்தில்  ரயில் வண்டி  தளும்புகிறது.

குளிருக்கென அடைத்த வாத்துச்சிறகுகள் பிய்ந்து வெளியே வந்திருக்கும் மோசமான  காலணிகளுடன்  தினமும் ரெய்கி சிகிச்சைக்கு செல்லும்  இரண்டு கிழமைகளுக்கு முன்னர் மோசம் போய் விட்ட பரமசோதியின் அக்கா மேல்கோடடை மறந்து வைத்துவிட்டுபோகிறாள்.

கஷ்டப்பாடுகள் கீழ்மையின் எல்லை வரைக்கும் துரத்தி வந்ததில் சொந்த மகளிடமே  வட்டிக்கு காசுகொடுக்க துணியும் வெயிலில் உலர்த்தியது போலிருக்கும் சின்னாயிக்கிழவியும் ரயிலில் இருந்தாள்.  

தனியாக எடுத்து வைத்த சாமி படையல் போல சிரிக்கிற இரண்டே இரண்டு பாவாடைகளும் அவையிரண்டுக்குமாக சேர்த்து ஒரே  ஒரு நாடாவையும் வைத்திருக்கும், மேலுதட்டில் வெண்டைக்காய் மயிர்போல  ரோமம் கொண்டிருக்கும்  அம்மா ஒருத்தி  கண்களை நிறைக்கிறாள் ,மூன்றாவது அம்மாவின் மகளான, மூக்குத்தியும் முகப்பருவும் போட்டிருந்த , ஒரே நாள்  மூளைக்காய்ச்சலில் செத்துப்போன அழகு அக்காவை மறக்கமுடியுமா?

துயரமே உருவானவர்களுக்கிடையில் துணிச்சல்காரிகளும் புதுமைப் பெண்களும் கூட  இருந்தார்கள்  ஒரு காவாலியின் அசிங்கமான செய்கையை பார்த்து திகைத்து பயந்து போகாமல் கண்களை நேராகப் பார்த்து ’’அடுத்த ஷோ எப்போ வரும். என் தங்கையும் பார்க்கனும்’’ என்ற ஒரு துணிச்சல்காரி, .ஒப்பாரிப்பாட்டிலும் வம்புச்சண்டை வளர்க்கும் உறவுப் பெண்கள், வீட்டுவேலைக்கு வந்து எஜமானியாகிவிடும்  ஆப்பிரிக்க கருப்பழகி அமீனாத்து, தமிழ் படங்களில் ’’ஏன் கேர்ல்ஸ் எல்லாம் குனிஞ்ச படியே போகினம்?’’என்று கேட்கும் வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு சிறுமி.

ஆங்கிலம், ரஸ்யன், பிரெஞ்சு எல்லாம் சரளமாக பேசும், பச்சை கண்கொண்ட மூச்சை நிறுத்தும் அழகில்லாவிட்டாலும் வசீகரமாயிருந்த, ஒரு பார்ட்டியின் முடிவில் இரு மார்புகளையும் கழட்டி வீசியெறியும் அனா என்கிற அன்னலட்சுமி, இவர்களுடன்  நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும், துணிவும் சாதுர்யமும் கொண்ட, கற்பெனும் புனிதப்போர்வயால் மூச்சுமுட்டும்படி  போர்த்தப்படாத பல ஆப்பிரிக்க பெண்களும் இருக்கிறார்கள்.

ஸ்வென்காவின் 17 பெண் கருச்சிசுக்களில் ஒன்றாக காத்திருந்த காமாட்சி இனி வரப்போகும் காலங்களின் இனவிருத்தி எப்படி இருக்கும் என்று கோடு காட்டி அச்சமூட்டினாள்

பேரம் படியாத போது அலறும் ’யூ லவ்  மீ’’ மீன்காரியும் அவள் முதுகில் ஒட்டிக்கொண்டிருக்கும் கரிக்குருவிக் குழந்தையையும்  இந்த பிரயாணத்திலல்லாது வேறெங்காவது காணக்கிடைக்குமா என்ன?

பலவிதமான மனைவிமார்களையும் பார்க்கமுடிந்தது இந்த ரயில் பிரயாணத்தில்.

வெளிநாட்டுக்கு போகும் கணவனுக்கென்று பார்த்துப் பார்த்து சூட்கேஸில் சாமான்கள் அடுக்கும் ’’வாங்கும் நோய்’’ கொண்டிருந்த பட்டியல் போடும் மனைவி, கொஸ்டோரிக்கன் போலவே இருந்த பிடிவாதக்காரியும் சீனனிடம் மார்பில் டிராகனை பச்சை குத்திக்கொண்டவளுமான  தங்கராசாவின் மனைவி பத்மாவதி,  

தனது மூன்று மாத குழந்தைக்கு முலைப்பாலை கறந்து போத்தல்களிலடைத்து டேகேரில் குழந்தையுடன் கொடுத்துவிட்டு வரும் ஜமைக்காவின் எஸ்தர், உள்ளத்தின் குரலை கேட்காமல், உடலின் கட்டளைகளை மட்டும் செவிமடுத்து மருகும் கமலி, பணிவிடை செய்யும் கணவன் மீதுள்ள பிரேமையை சந்தேகமாக மாற்றிக்கொண்ட கமலா, உருண்டை வீட்டில் பிரியமில்லாததால் கணவன் மீது மயிர் வளர்வது போல கண்ணுக்கு தெரியாத விரோதத்தை வளர்க்கும் மனைவி, இவர்களின் துக்கம்   வாசிப்பிற்கு பின்னர் என் துக்கமாகிவிட்டிருந்தது.

ஆப்பிரிக்க யானைத்தந்தத்தின் மீது  எத்தனைதான் ஆசையிருந்தும் பேருயிரொன்று அதன்பொருட்டு அழிந்ததை அறிந்ததும் அன்னை மனம் துடிக்க கிடைத்த தந்தத்தை ஏறெடுத்தும் பார்க்கமல் ஊர் திரும்பு இன்னொருத்தியும் இருந்தாள்

குடியுரிமைக்கு பிறகே தாய்மை என முடிவு செய்து பெண்மையையும்  தாய்மையையும் தவறவிடும் சங்கீதா மனம் கனிய வயதும் காலமும் தடையில்லை என் உணர்கிறாள், அதற்கு சாட்சியாக அவளருகில் கிடக்கிறது  பெண்குழந்தை அய்சாத்து

இத்தனை பேருடன் பச்சிளம் குழந்தைகளும் பருவப்பெண்களும் சிறுமிகளுமாக மகள்களும் நிறைய பேர் இருந்தனர். ரயிலில் 75 பெட்டிகளல்லவா?

தங்கைக்கு பிறகு தாமதமாக மலர்ந்த ராசாத்தி, தேநீர் போல கோபத்தில் சிவந்த , தூக்கி வைத்துக் கொள்ள யாருமில்லாமல் தானாகவே தூக்கி வைத்துக் கொள்ளும் 14 வயது பள்ளி மாணவியொருத்தி, ஒழுங்காய் சடை நுனியில் நீல ரிப்பன் கட்டிக்கொண்டு கிலுகிலுவென்று சிரித்துக்கொண்டு பள்ளி செல்லும் சிறுமிகள், பாய்பிரண்டின் பிறந்த நாளை  மறந்த  அப்பாவை கோபித்துக்கொள்ளும், அவருடனான தன் இளமைப்பருவத்தின் அபூர்வ தருணங்களையெல்லாம் மறந்தே மறந்து விட்ட மகளொருத்தி,

ராட்சத்தனமான கருப்பு புழு போல் நெளியும் மூன்று மாதமேயான தில்லைநாயகி, விருந்தாளிகளுக்கு  ஆட்டுப்பால் கொடுத்து உபசரிக்கும் வீட்டைச்சேர்ந்த,  கண் இமைகளில் வைரத்துண்டுகள் ஒட்டியிருக்குமோர்  சிறுமி, ஐஸ்கிரீம் கடையை கண்டால்  வெட்டுக்கிளியை கண்ட நாய் போல் அசைய மறுக்கும் ஒரு இளமகள், இவர்களுடன் வரும் நீளமான கண்கள், நீளமான விரல்கள் கொண்ட அம்மாவிற்கு பிரசவம் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண். முதலில் தெரிந்த கால்களை பிடித்து இழுத்ததால் நீளமான கால்களும் கொண்ட டோல்ரஸை சொல்லுகையில் ‘’தின்னவேண்டும் என்று பட்டது’’ என்கிரார் அ.மு. எனக்கும் அவளைப்பார்க்கையில் அப்படித்தான் இருந்தது.

பஞ்சலோகத்தில் செய்ததுபோல் ஒரு 4 வயது மகளும் இருக்கிறாள். அள்ளியெடுத்து மடியிலிருந்திக்கொள்ள மனம் விழைந்த நிமோனியாவால்  மூச்சுவிட சிரமப்படும்  லவங்கிக்குட்டி, ஏன் தனக்கு சூரிய கிரகணம் பிடிக்காது என்பதை சொல்லாமலே மறைந்த பஸ்மினா, இடுப்பில்  குடத்திலேயே அடித்த அப்பனுக்கு  சோறாக்கிப் போடும் பூரணி மற்றும் தன் பெரியப்பனை கொழுத்த ஆடாக்கி, கொள்ளியால் சுடும் விஜயாவின் மகளான குண்டுப்பெண் ஆகியோருமுண்டு.(பல சினிமாக்களில் போடுவார்களே இருதயம் பலவீனமானவர்கள் கர்ப்பிணிகள் அதை பார்க்க வேண்டாமென்று,  அப்படி ,மனைவி மக்களை பிரிந்து நினைவில் வாழும் பலவற்றுடன் போராடிக்கொண்டு பொருள் வயிற்றின் நீங்கியிருப்பவர்கள் இந்த கதையை படிக்க வேண்டாமென்று டிஸ்க்ளெய்மெர் போடவேணுமென்கிற அளவுக்கு மனதை கலைக்கும் கதையது)

மிக அழகான பெண்ணாக வருவதற்கு திட்டம் போட்டிருந்த டொன் தம்பதினரின் சிறு மகளுடன், சிறிய சிவப்பு உருண்டை வாயுடன் இருக்கும் ஒரு குட்டியும், பாஸ்மதி அரிசியைப்போல நாலே நாலு பற்களைக் கொண்டிருக்கும்,  திராட்சைகளை சுவைக்கும், ஜெயமோகனின் ’’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’’ புத்தகத்தை  மட்டும் சரியாய் தூக்கிக்கொண்டு ஓடிப் போகும் 26 இன்ச் உசரமான வாசகி i think அப்சரா குட்டியும் வருகிறார்கள்.

நான் கண்னை விரித்துக்கொண்டு பார்த்த சுவாரஸ்யமான  பல பெண்களும் பயணத்தில் உண்டு. பிரான்ஸிஸ் தேவசகாயத்தின் சவக்குழியை பிரான்ஸிஸ் தேவ சகாயத்திடமே சுட்டிக்காட்டும் செங்கூந்தலும் வெள்ளுடையுமாக  கனவில் வருமொருத்தி. ரம்புட்டான் பழம் போல சிவந்த உதடுகளுடன் சரசக்கா, நட்ட நடு நிசியில் வாடிக்கையாளரிடம் இனிக்க இனிக்க பேசும்  17 வருடமும் ஒன்பது மாதமும் வயதான ஸேர்லி, ஸ்கர்ட் உடுத்திய பெண் படம் வரைந்த  கதவு கொண்ட கழிப்பறைக்குள் தன்  பணிச்சூழலின் அழுத்தமனைத்தும் மறந்து உற்சாகமாகிவிடும் மீனுக்குட்டி.

ஆஸ்பத்திரியின் சக்கர நாற்காலியின் உராய்வுக்கும் பிணம் தள்ளிக்கொண்டு போகும் சில்லு வைத்த கட்டிலின் கரகர ஓசைக்கும் நடுவெ பொருத்தமில்லாத இனிமையுடன் ஒலிக்கும் குரலைக்கொண்ட யவனம் நிறைந்த, தேனிக் கூட்டம் போல சிவந்த கூந்தல் கொண்டிருக்கும் வெளிநாட்டு டாக்டர் பெண்ணொருத்தியும் உண்டு.

புன்னகையை ஸ்டிக்கர் பொட்டு போல ஒட்டி வைத்திருக்கும்  வரவேற்பாளினியும், கந்த சஷ்டி விரதத்திற்கு இரவு பாலும் பழமும் மட்டும் சாப்பிடுகிற, அந்த பழம் ஒரு முழு பலாப்பழம் என்பதை மறைத்துவிடும் அன்னமக்காவும் புன்னகைக்க வைக்கிறார்கள்.

மலர்வதற்கு இரண்டு நாள் இருக்கும் மல்லிகை மொட்டுக்களை  தலையில் சூடிக்கொள்ளும், தன் வனப்பை தொற்று வியாதி போல பரப்பிவிடும் மகேஸ்வரி, தலைமயிர் அவ்வளவு குவியலாக அவ்வளவு பொன்னிறமாக இருந்த ஸோரா , ட்ராஃபிக் சிக்னலைப்போல மஞ்சள் முகமும் ரத்தச் சிவப்பு உதடுகளும், பச்சைக்கீற்று கண்களுமாக ஒரு சீனப்பெண் என்று எத்தனை எத்தனை வகைப்பெண்கள்

’ம்வாங்கியை’ களவு செய்யத்தூண்டும் அழகுடன் இருந்த எமிலி, போறனையில் இருந்து இறக்கிய பாண் போல மொரமொரவென்று இளஞ்சூடும், மணமுமாக  இருக்கும் துப்புரவுக்காரியொருத்தி, ஜெனிஃபர் என்ற பெயருள்ள நாயுடன் வரும் பெயரிடப்படாத ஒரு அழகி ,  பச்சைப்பாவாடையும் பட்டுரிப்பனுமாக, உப்பு என்று சொல்வதுபோல் உதடுகளை எப்போதும் குவித்து வைத்திருக்கும் விசாலமான கண்கள் கொண்ட விசாலாட்சி,  தானாக கனிந்த அறுத்த, கொழும்பான் மாம்பழம் போலவும், அரிய வண்ணத்துப்பூச்சியை போலவும் இருப்பவளான,  வேகமான  யாமினி, கிட்டார் வாசிக்கிற பூனைக்குட்டிக்கு அரிஸ்டாட்டில் என பெயர் வைத்திருந்த ரோஸ்லின், மர அலங்காரியாக வேலை செய்யும் அமண்டா ஆகியோரும் ரயிலை அவர்களின் பேரழகாலும் ததும்பும் இளமையாலும் நிறைக்கிறார்கள்

ஒரே கரண்ட் கம்பியில்  வேலை செய்யும் பல்புகள் போல மூன்று உடலும் ஓருயிருமாக இருக்கும் மூன்று ஸ்நேகிதிகள் அவர்களில் ஒருத்தி அமெரிக்காவின் நட்சத்திர உணவகத்தில் தட்டில் வைக்கபட்ட முட்டையை பார்த்துக்கொண்டிருக்கையில் காதலனால்  முத்தமிடப்படும் மித்  என்கிற மைதிலி,

மண்ணெண்ணெய் வாடை அடிக்கும், மூக்குத்தியில் அழுக்கு சேர்ந்திருக்கும் கருத்த மாமி,  நாவல் பழம் பொறுக்குகையில் கதாநாயக சிறுவனுக்கு ராமு மாட்டுடன் அறிமுகமாகும் வத்ஸலா,  உடும்புப்பிடி போல குணம் கொண்ட சரசக்கா ஆகியோருடன் வரலாற்றிலிருந்து எழுந்துவந்து இணைந்து கொள்கிறார்கள்  பொத்தா தேவியும் குந்தியும். ரோட்டின் கீழே இருந்து வென்ற் வழியாக அடிக்கும் வெப்பக்காற்றில்  மேலே எழும்பி பறக்கும் இடையாடையை இரண்டு கைகளால் அமத்திப் பிடிக்கும் மர்லின் மன்றோ கூட  பிரயாணத்தில் இருக்கிறாள்

சிரிப்பால் வீட்டை நிறைக்கிற, அண்ணாந்து தண்ணீர் குடிக்கையில் சிந்தும் தண்ணீர் கழுத்துக்குழியில் தங்கிவிடும் அளவுக்கு ஒல்லியான,   இன்னும் நிரப்பப்படாத பல அங்கங்களைக் கொண்ட, காதுவரை நீண்ட ஓயாது வேலை செய்யும் கண்களைக் கொண்ட கனகவல்லி,  வெங்காய சருகு போல மெல்லிய சருமம் கொண்ட ஸ்வீடனின் மார்த்தா, மறைக்கப்படாத  மார்பகங்களுடன் மீன்களும் துள்ள, கார்களை துரத்தி  வரும் மீன்காரப்பெண்கள், பிறகு நினைத்துப் பார்க்கையில் ஒரு சொற்பொழிவு போல தோன்றும்படியாக  இடுப்பை வெட்டி காண்பித்த ஆப்பிரிக்க அழகியென அநேகம்பேர் வருகிறார்கள்

கிராமத்து மனுஷியும் நான்கு ஆதார சுவைகளை கலந்து பத்தாயிரம் சுவைகளை கொண்ட உணவுகளையும், தோசையில் விழும் துளைகள் கூட எண்ணினால் ஒரே மாதிரியாக இருக்கும்படி சமைப்பவளுமான  ஒரு அம்மாவும், அவரை சமையலறைக்குள்ளேயே நுழையவிடாத, சமையல் வகுப்புக்களுக்கு போய் கற்றுக்கொண்ட சமையலை செய்து பார்க்கும் அவரது மருமகளும் கூட உண்டு.

மனிதர்கள் மட்டுமல்லாமல்  எல்லா பயணங்களிலும் நான் தவறவிடாமல்  ரசித்துப் பார்க்கக்கூடிய விதம் விதமான மரங்களும் மலர்களும் கனிகளும் இந்தப் பயணத்திலும் காணக்கிடைத்தன. அனிச்சம்பூ ,ஓக், அகேஸியா, கிளுவை மரங்களுடன், சதி செய்யும் முசுட்டை மரங்கள், கணப்பு அடுப்பில் புகையின்றி சிறிது மணத்துடன்  எரியும் விறகைத் தரும் பேர்ச் மரங்களை எல்லாம் ரயில் கடந்து சென்றது. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை காய்க்கும் ’மொற’ மரமொன்றையும் கண்டேன்

பயணத்தில் எதிர்பாராமல் திடீரென தலை காட்டும்  கவிதைகளைப் போல சின்னப்பெண்கள் தங்களை கடக்குமுன்பாக அனைத்துப் பூக்களையும் அவர்கள் முன் கொட்டும் மரங்களும்,  மஞ்சளாக வழவழப்பாக  பார்க்க லட்சணமாக இருக்கும் தண்ணீர் பாங்கான இடங்களில் வளரும் ஃபீவர் மரமும்,  மரெண்டா கீரைகளும், நிலம் தெரியமல் பூக்களை சொரிந்திருக்கும் ஜகரண்டா மரங்களையும் காண முடிந்தது.  கதிரைகள் செய்யப்படும் காஷ்மீரி வால்நட் மரமும், வானத்தில் பறந்து வந்த வாழையிலைகளும் ஆழ்குளிரிலிருந்து எழுப்பிய மாவிலைகளையும் கூட பார்த்தேன். தோறாஇலையும் குயினைன் மரப்பட்டைகளும் இருக்கின்றன. எங்கோ கமகமவென்று இலுப்பைப்பூ மணமுமடித்தது

பேயின் கைவிரல்களைப்போல் பரவி வளரும் ஐவி செடியும் வழியில் இருந்தது. இதுநாள் வரை மணிப்ளாண்ட் என்றே சொல்லியும் கேட்டும் வாசித்தும் பழக்கமாயிருந்த , முதன் முதலில் அ. மு வால் மணிச்செடி என்று அழைக்கபட்ட அந்த செடியை கண்டதும் அத்தனை பிரியம் உண்டாகி விட்டிருந்தது. பயணத்தில்  இப்படி பல புதிய அழகிய சொற்கள் இடையிடையே வந்து எட்டி பார்த்து சந்தோஷப்படுத்தும்.

அடடா பட்சிகள் உச்சியில் அமர்ந்திருக்கும் மிமோசா விருட்சங்கள்.முதலில் இலைகளை கொட்டும் பேர்ச் மரமும் இலைகளை கொட்டவே கொட்டாத மேப்பிள் மரமும், தோட்டத்தின் சிவப்பு வத்தகப்பழமரம்,  அக்லனீமா செடிகளும், தோலுரித்து வைத்த தோடம்பழங்களுமாய் பசுமைப்பெருக்கும் பயணத்தில்  கூடவே வந்தது

நம்மூர் தீக்கொன்றை மரத்தை அவர் தீச்சுவாலை மரம் என்கையில் அதற்கொரு ஆப்பிரிக்கத்தனம் வந்துவிட்டிருந்தது. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பரமசோதியின்  சாமான்களுடன் நிற்கிறது  ஒரு வாகைமரம்

இடிமுழக்க துண்டுகளை  கட்டி இழுப்பது போல் சத்தம் போடும் ஒரு மோட்டர் சைக்கிளும், கோபத்துடன் உறுமி எழுந்த சிங்கம் போல ஒரு ஓஸ்டின் காரும் ரயிலை கடந்து சென்றன. வழியில் மகரந்த துள்களை பரப்பி வைத்ததுபோல பரவிக்கிடந்த மணலைப்பார்க்க முடிந்தது. பிரயாணத்தின் ஓரிரவில் குழைத்து வைத்ததுபோல் கலங்கலாக தெரிந்தான் சந்திரன். யாரோ ராட்சஷன் அடித்து வீழ்த்தியது போல சிவந்திருக்கும் ஆகாயத்தையும் அந்தியொன்றில் கடந்தது ரயில்.

பிரயாணத்தில் கந்தபுராணமும், சிவபுராணமும்,சிலப்பதிகாரமும், ராமாயணமும் மகாபாரதமும் கூட கேட்கிறது. துரியோதனன் மனதை கெடுக்கிறது  ஒரு சடைக்கார சிறுக்கி நாய்

’’அம்மணத்துகு கோமணம் மேல்’’ போன்ற முதுமொழிகள் இடையிடையே வந்து விழுகின்றன. பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு நெருக்கமாக வந்து அணில்கள் பொறுக்கிச் சாப்பிடுகின்றன. அந்த செகரட்டரி பறவை தான் என்ன வினோதம், அப்படியொன்றை கேள்விப்பட்டது கூட இல்லையே!

அதைப்போலவே சாளரம் 2000 என்பது முதலில்  என்னவென்று மனசில் தைக்கவே இல்லை அத்துடன் சேர்ந்து நின்ற பில்கேட்ஸை பார்த்ததும்தான் அது விண்டோஸ் 2000 என்பது உரைத்தது . Veloy don என்கிற வேலாயுதமும் வருகிறார்.

 சாளரம் உள்ள கடித உறையும் அப்படித்தான் வியப்பூட்டிய மற்றொன்று.  அப்படியான கடித உறையை இதுவரை பலநூறு பயன்படுத்தி இருப்பேன் அதை கவனித்து இப்படி ஒரு பெயர் இருக்கலாமென்று ஒருபோதும் எண்ணியதில்லையே!

அ.முவுக்கே உரித்தான அங்கதங்களும் வேடிக்கையான மனிதர்களும்  குறைவில்லாமல் உண்டு  குறிப்பாக அடைப்புக்குறிக்குள் சொல்லப்பட்டிருப்பவைகள்.(கடைசி மூச்சில் இருந்த பேட்டரி) நாலு பியருக்கு மேல் நாப்பது வாட்டில் மூளை வேலை செய்கையில் மட்டும் அரசியல் பேசும் தம்பிராசா, சிவராத்திரி கந்த சஷ்டியையெல்லாம் தீவிரமாக சிந்திக்கும் மாரியோ இவர்களுடன் இடது கைப்பழக்கம் கொண்ட ஒரு கரப்பான் பூச்சியும் இருக்கிறது, ஆம் நிஜம்தான்.

கனடிய அரசுக்கு அனுப்பும் குரல் பதிவில் வசந்தம் வந்து, தோட்டத்தில் முதல் பூ பூத்ததையும்,  பெண்ணின் சடைபோல் பின்னப்பட்ட பிரெஞ்ச் ரொட்டியை பிய்த்து தின்றதையும், தட்டில் கிடந்தபடி  தன்னையே பார்த்துக் கொண்டிருந்த  வதக்கபட்ட பெரிய மீனை உண்ணமால் விட்டதையும் சொல்லும் ஒருவர் எத்தனை சுவாரஸ்யமான மனிதராயிருப்பார்?

மைமலான மழைநாளில்  காதலிக்கு முதல் முத்தம் பதிக்கும் காதலனும் ஸ்ட்ராபெரி ஜாம் வாசனையுடன் கொட்டாவி விடும் மனிதர்களையும் போல  அ.மு அவர் வாழ்க்கையில் சந்தித்த,  அறிந்துகொண்ட சுவாரஸ்யமானவர்களை உலகில் வேறு யாருமே சந்தித்திருக்க மாட்டார்கள்

ஒரு பிரயாணம் இப்படி ரசிக்கத்த விஷயங்களுடன் மட்டும் முடிந்து விடாதில்லையா?

தோலைச்சீவுகையில் பூரணமாக ஒத்துழைப்பு கொடுத்து  இறைச்சி வெட்டப்படுகையிலும் கண்களை அசைத்துக்கொண்டே இருந்த உடும்பையும், அந்நியமான ஊருக்கு வந்து அடிபட்டு செத்துப் போகிற பறவையொன்றையும், நிலவறையில் விறைத்துக்கிடப்பவரையும் அ.மு சொல்லிக்கேட்கையில் என்னையறியாமல் கண் நிறைந்து வழிந்தது.

தில்லை அம்பல பிள்ளையார் கோவில் கதையை கேட்டு முடித்ததும். கல் மனசுக்காரர் என்று அ. முவை மனதில்  மரியாதையுடன் கடிந்து கொண்டேன்.

இத்தனை சுவாரஸ்யமான பிரயாணமொன்றை இதுவரையிலும் நான் செய்ததில்லை இனிமேலும் செய்யப்போவதுமில்லை.. அ.மு இத்தொகுப்பில் உள்ளதை பெரிதாக்கவில்லை, இல்லாததை இட்டுக்கட்டவில்லை, ஏன் உள்ளது உள்ளபடிகூட சொல்லவில்லை நம்மை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் கதைகளின் நடுவில் நிறுத்தி விடுகிறார். எல்லாக்கதைகளும் நம்மைச்சுற்றித்தான் நடக்கிறது நாம் கதைகளை  பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கன்னத்து உப்பலில் கூர்பார்க்கப்படும் கல்லுப்பென்சிலும், பென்னம் பெரிய காரில் பொம்பளை பார்க்க வருபவர்களுமாக நிறைந்திருக்கும் கதைத்தொகுப்பை அ. முவல்லாது வேறு யாரால் அளிக்க முடியும்?

‘திரு அ முத்துலிங்கம் அவர்கள் இன்னுமோர் நூற்றாண்டு நல்ல தேக ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்கட்டும். அவருக்கு என் வணக்கங்கள்

அன்புடன்

லோகமாதேவி.

-விஜயா பதிப்பகம் 2022ல் அ மு அவர்களுக்காக கொண்டு வந்த சிறப்பி நூலில் வெளியான எனது கட்டுரை

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

சமீபத்தில் நடிகர் சரத்பாபு மரணம் என்று செய்தி பரவியது.  இப்போது வளர்ந்த பிள்ளைகளுடன் இருக்கும் என் வயது பெண்களின் இளவயது கனவு நாயகன் அவர். செய்தி கேட்டு, பலர் மனமுடைந்து போனோம். சரத்பாபுவின் பல திரைப்படங்கள் சிறப்பானவை, அதிலும் ரஜினி, ஷோபாவுடன் அவர் நடித்த ’முள்ளும் மலரும்’ பலரின் தனித்த பிரியத்துக்குரியது.

இப்படத்தின் ’செந்தாழம்பூவில்’ பாடலை இன்று வரையிலும் மீள மீளக் கேட்காத என் தலைமுறையினர் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த செய்தி கேள்விப்பட்ட அன்று மீண்டும் ’செந்தாழம்பூவில்’ பாடலை கேட்க நினைத்தேன்.

ஒரு மலைப்பாதையில் வயல் வேலையிலிருந்து திரும்பும் அல்லது செல்லும்  ஷோபா உள்ளிட்ட இளம்பெண்களை ஜீப்பின் பின்புறம் அமரவைத்து சரத்பாபு என்னும் எஞ்சினீயர்,  காடுகள் பெருமரங்கள் தேயிலை தோட்டங்கள் வழியில் இடைபடும் செம்மறியாட்டு கூட்டங்களை ஜீப்பில் கடந்துசென்றபடி பாடும் பாட்டாக இத்தனை வருடங்களாக அது மனதில் பதிந்திருந்தது. பெரும்பாலும் பலநூறு முறை அப்பாடலை ஒலிவடிவில்தான் கேட்டிருக்கிறேன், 

அதைக் காட்சியாகப் பார்க்கும் அவகாசமற்ற,  பரபரப்பான பல வருடங்களுக்குப் பின்னர்,  இப்போது திரையில் பார்க்கையில்தான்  சரத்பாபுவுக்கும் ஷோபாவுக்குமான காம்பினேஷன் காட்சிகளே இல்லாமல்,  அவர்களிருவரும் தனித்தனியாக படமாக்கப்பட்டிருக்கும் அநீதி தெரியவந்தது.

சரத்பாபு  பக்கவாட்டு காமிராவை பார்த்து முறுவலிக்கிறார், ஷோபா காமிராக்காரரை  அல்லது பாலுமகேந்திராவை பார்த்து நாணுகிறார். தூரக்காட்சிகளில்  ஷோபா இல்லாமல் பல பெண்கள்  ஜீப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.என்னவோ ஏமாற்றமாக இருந்தது.

இப்பாடலை  இறுதிக்காட்சிகளில் காண்பிக்கப்படும் மலைப்பிரதேசங்களில் மட்டும் வளரும் யுலெக்ஸ் யுரோப்பியா என்னும் மஞ்சள் நிற மலர்களும் கூர் முட்களும் நிறைந்த ஒரு பயறு வகை குடும்பத்தை சேர்ந்த செடியை  சுட்டிக்காட்டும் பொருட்டு நான் மாணவர்களுக்கு பரிந்துரைப்பேன். கூடவே கற்றலை சுவாரஸ்யமாக்க ஷோபா என்னும் பேரழகியைக் குறித்தும் சொல்வதுண்டு. அந்த பாடல்  ஜீப் கடந்து வரும் சில்வர் ஓக் மரங்கள் நிறைந்த  தேயிலைத் தோட்டங்கள், பெருமரங்களின் நிழலில் நனைந்திருக்கும் காட்டுப்பாதை, மலைச்சரிவுகள், மலைமுகடுகள் என மிக அழகிய காட்சிப்புலம் கொண்டிருக்கும்.

 தாவரவியல் துறை சார்ந்த பிரேமை கொஞ்சம் கூடுதலாகவே இருப்பதால் எல்லாக் காட்சிகளிலும் கதை மாந்தர்கள், திரைக்கதையில் உண்டாகி இருக்கும் உணர்வெழுச்சி, அக்காட்சியின் முக்கியத்துவம் போன்ற பலவற்றையும் கடந்து திரையில் தெரியும் செடிகொடிகளின் மீதுதான் என் கவனம் முற்றாக குவிந்திருக்கும்.

தாவரங்கள் மீதான அதீத கவனத்தில் புடவையில், படுக்கை விரிப்பில் இருக்கும் மலர், கனி வடிவங்களை கூட கவனமாக பார்ப்பதுண்டு. ஜோதிகா ’’திருமண மலர்கள் தருவாயா’’ பாடலில் ’’வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே’’ என்னும்போது ’’அட, மாதுளை sun demanding செடியாயிற்றே அதைப்போய் ஜோ வீட்டுக்குள் வைத்து இம்சைபண்ணி, தினமொரு கனியைத் தருமாறு கூடுதல் கோரிக்கை வேறு வைக்கிறாரே’’ என்று கவலைப் பட்டிருக்கிறேன்.

 காதல் காட்சிகளில் கூட ’’அடடே இந்த  மால்வாவிஸ்கஸ் மலர்ச்செடிகள் பின்னால் இன்னும் கொஞ்ச நேரம் அவர்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்திருக்கலாம், செடியை பார்த்தே ரொம்ப நாளாச்சு,’’ என்று அங்கலாய்ப்பது,  காதலர்கள் பெயர் பொறித்திருக்கும்  மரப்பட்டைகளை கண்டவுடன் ’’இது முதலை மரப்பட்டை அப்படின்னா இது மருத மரம்தான்,’’ என்று கூவுவது, ’’என்னதிது  பாட்டில் தாமரைன்னு வருது,  இவங்க என்னமோ அல்லிக்குளத்தில் நீந்தறாங்களே,’’ என்று கொதிப்பது,  காதலன் அல்லது காதலிகள் பேசிக்கொண்டே, காதல் வேகத்தில் அமர்ந்திருக்கும் புல்வெளியின் புற்களை பிய்த்து கொண்டே இருக்கும் காட்சிகளில் ’’அடப்பாவமே இந்த ஜோய்ஸியா ஆஸ்திரேலியப் புல் வளருவதே பெரும்பாடு அதை ஏன் பிச்சுகிட்டுப் பேசறே’’  என்று  மானசீக கண்டிப்புக்களுமாகவே இருப்பேன்.

வெட்டப்படும் வாழைகளையும், வைக்கோல் படப்புக்கு வைக்கப்படும் நெருப்பும், தூக்கிப்போட்டு உடைக்கப்படும் தொட்டிச்செடிகளுமாக  Anti Botanical சண்டைக்காட்சிகளில்,  மனம்வெதும்புவது எப்போதும் நடக்கும்.

எலுமிச்சை, கேரட், மக்காச்சோள லாரிகளில் படுத்துப்புரளும் காதலர்களும், காய்கறி மார்க்கெட்டில் எல்லாத் தள்ளுவண்டிகளிலும் ஏறிமிதித்து துவம்சம் செய்யும் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகளும் ஒரு தாவரவியலாளராகவும் ஒரு நல்ல இல்பேணுநராகவும் எனக்கு தாளமுடியாத வருத்தத்தை உண்டாக்குபவை.

 பல்வேறு நிலப்பரப்புக்கள், இயற்கை காட்சிகள், விலங்குகள், தாவரங்கள், நீர்நிலைகள் என பலவற்றுடன் இணைந்த  காதல், பாடல், சண்டை காட்சிகள் ஆகியவைதான்  கதைகளே இல்லாத பல  தென்னிந்திய திரைப்படங்களைத் தோள் தாங்கி நிமிர்த்திச் சில வாரங்கள் தாக்குப்பிடிக்கச் செய்திருக்கின்றன

காதலைச் சொல்லக்  கொடுப்பதிலிருந்து, மனம் சிதைந்த  தொடர் கொலையாளியால் கொல்லப்பட்ட பெண்களை  புதைத்த இடத்தில் நட்டு வைக்கும் குருதிச் சிவப்பு மலர்ச்செடிகள் வரை தமிழ் சினிமாவில் ரோஜா மலர்களின் தாக்கம் ஹாலிவுட் படங்களின் அளவுக்கே இருக்கிறது.

 அப்படியே மன்னன் மயங்கும் மல்லிகைகளும். 1974ல் வெளியான தீர்க்க சுமங்கலியில் ஏழுஸ்வரங்களின் நாயகி, சமீபத்தில் மறைந்த இசையரசி வாணி ஜெயராமின் குரலில் மணத்த அதே மல்லிகை கடந்த வருடத்தின் வெந்து தணியும் காட்டில்  ஒரு  நாயகனை பிரிந்த நாயகியின் தலையில் பிரிவுத் தாபத்தின் வெம்மையில்  வாடியது.

மல்லிகை என்றதும் கே ஆர் விஜயாவும் நினைவுக்கு வருகிறார், கிலோ கிலோவாக மல்லிகை  மலர்ச்சரம் சூடிவரும் அவரின் தலைக்கனத்தை அநேகமாக எல்லா பாடல்களிலும் வியப்பதுண்டு.

இதுபோலவே கருப்புவெள்ளைப்படமான கொடிமலரில், ’’மெளனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாடவேண்டும்’’ பாடலில் முத்துராமனும் விஜயகுமாரியும் செயற்கை குளம், செயற்கை தோட்டம் என அமைக்கப்பட்ட செட்டில்  இருப்பார்கள். விஜயகுமாரிக்கு கூந்தலில் குறைந்தபட்சமாக 4 கிலோ மல்லிகைச்சரமும், குழாயடியில் அமரவைத்து தேய்த்துக்கழுவி விடலாமென்னும் கொதியுருவாக்கும்  அதீத ஒப்பனையும் இருக்கும். கையில் ஒரு தாமரை மலரை நல்லவேளையாகக் கசக்காமல் முழுப்பாடலிலும் வைத்துக்கொண்டிருப்பார். அவர்களிருவரும் ஒரு மரத்தருகில் நின்றிருப்பார்கள், அம்மரத்தில் தாவர அறிவியல் அடிப்படையில்  சாத்தியமே இல்லாத  வகையில் மலர்கள் அமைக்கப்பட்டிருக்கும். 

 ’’ஆயிரம் தாமரை மொட்டுக்களே’’வில் ராதா மலர்ந்த தாமரை மலர்களின் மத்தியில் ட்ராலியில் பயணித்துக்கொண்டும், படுத்துக்கொண்டுமிருப்பார்.   நாயகனை காட்டிலும் நாயகியிடம் மிக நெருக்கமான இடம் பிடித்திருக்கும் தாமரைகள். குளக்கரையில் காதலிக்கும் அவர்களை சுற்றி பிடுங்கிப் போடப்பட்ட தாமரை இலைகளும், மலர்களும் சோர்ந்து கிடக்கும்.

காதலோவியம் பாடலிலும் ஏராளமாக இதழிதழாக பிய்த்துப் போடப்பட்ட மலர்கள் காதலர்கள் மீது பொழிந்துகொண்டே இருக்கும், காலடியிலும் மலர்கள் மிதிபடும்.

பல்வேறு மலர்களை காட்சிக்குள் கொண்டுவந்த புண்ணியத்தை பெரும்பாலும் பாரதிராஜா கட்டிக்கொண்டார்.

கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் அகலக்கண்களுடன் அருணா சலவை செய்த பாரதிராஜாவின் உடைகளை  எடுத்துக் கொண்டு வருவார். அறைக்குள் நுழையும் முன்னர் வாசலிலிருக்கும் ஒரு செடியின் சிறுமலர்க்கொத்தொன்றைப் பறித்து சலவை சட்டைகளின் மீது வைத்து அப்படியே மேசையில் வைத்துவிட்டு வந்துவிடுவார். கலைஞனான பாரதிராஜாவால் அம்மலர்களின் சுகந்தத்தை ரசிக்காமல் இருக்க முடியாதல்லவா, அவர் அருணா ஒளிந்திருந்து பார்ப்பது தெரியாமல் மலர்களை  நுகர்வார். அருணாவின்  இளமனதில் கிளைவிரித்து பெருமரமாகவிருக்கும் ஓர் காதல்விதையூன்றப்படுவதைக் காட்டும் அழகிய காட்சியது

ஆனால் மிகக் கோரமாக மலர்கள் தமிழ்சினிமாவில் மட்டுமல்லாமல்  இந்திய சினிமா முழுவதிலுமே காட்டப்பட்ட  இடமென்றால் அது முத்தக்காட்சிகளில் தான்.

காதலை உன்னதமாக காட்டிய திரைப்படங்களே அரிதினும் அரிதுதான் அக்காலத்தில். அப்போதைய சமூக கட்டுப்பாடுகள் அப்படி.

’’ஏரிக்கரை மேலே போறவளே பெண்மயிலே, நில்லுகொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போலாம் பெண்ணே’’ என்னும் பாடல் வெளியான போது மரபுகளில் ஊறித்திளைத்திருந்த வேறு ஒரு பாடலாசிரியர் இத்தனை வெளிப்படையாக காதலியை அழைக்கும் ஒரு பாடல் திரையில் காட்டப்படும் இந்த காலத்தில் நானும் திரைப்பாடலாசிரியர் என்று சொல்ல வெட்குவதாக அறிவிக்து  திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலகியதை பிற்பாடு கேள்விப்பட்டிருக்கிறேன். அதன்பின்னர் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழத்துக்கு பதிலாக என் கன்னம் வேண்டுமென்றான் பாடல் வெளிவந்தபோது அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

எனவே அத்தனை கட்டுப்பாடும் ஒழுக்க நெறிகள் என்னும் கற்பிதங்களும் நிறைந்திருந்த சமூகத்தில் முத்தக்காட்சிகள் காட்டப்படத் துவங்கியது பெரும் புரட்சியாகத்தான் இருந்திருக்கும்.

அப்போதைய இந்திய திரைப்படங்களில் காதல் இலைமறை காய் மறையாகவும்,  முத்தம் மலர்மறையாகவும் காட்டப்பட்டது. ஒரு பெருமலர் அல்லது மலர் நிறைந்த செடி, இவற்றில் ஏதேனும் ஒன்றின் பின்னர்  காதலனும் காதலியும், முகத்தை  அல்லது முழு உடல்களை  மறைத்துக் கொண்டபிறகு அவற்றை  வெகு வேகமாகவும் ஆபாசமாகவும் அசைத்து, அல்லது ஒன்றுடன் ஒன்று ஒட்டவும்முட்டவும் வைத்து  முத்தமிடப் பட்டதை பார்வையாளர்கள் யூகித்துக்கொள்ளுபடி காட்டினார்கள்.

இதைவிட கேவலமாக ஒரு முத்தத்தை  காட்டவே முடியாது .

பின்னர் கொஞ்சம் துணிவு வந்த காலத்தில் மலர்களின் தேவை மெல்லக் குறைந்து காதலி வெட்கப்பட்டு கொண்டே தன் உதட்டை துடைத்து கொள்ளும் நேரடிக்காட்சிகள் முத்தத்தை உணர்த்த வந்தன. மலர்களும் தப்பிப்பிழைத்தன. பின்னர்  ரகஸ்யமென்றோ உன்னதமென்றோ ஏதுமில்லா காதல்கள் மலிந்த திரைப்படங்கள் வந்தபோது  எல்லா உணர்வுகளுமே பரஸ்யமாக பட்டவர்த்தனமாக  காட்டப்பட்டன.

எம்ஜிஆர், லதாவின் ’’நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது’’ என்னும் பாடலை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மிக கவர்ச்சியான, உடலை ஒளிவு மறைவின்றி காட்டும் ஒரு சிங்கிள் பீஸ் உடையில் லதாவும், வழக்கம்போல அழுத்தமான நிறத்தில் கோட்டும் சூட்டுமாக கூடுதல் ஒப்பனையில் எம்ஜிஆரும் இருக்கும் அந்த பாடல்காட்சியை ஒலியை குறைத்துவிட்டு பார்த்தால்  முழுப்பாடலும் விரசமாக மட்டும்தான்  இருக்கும். லதாவின் ஒவ்வொரு அசைவும் ’’நான் அழகி என்னைப் பாருங்கள்’’ என்று எம்ஜிஆரை அழைத்துக்கொண்டே இருக்கும். வேடிக்கை என்னவென்றால் நடனம் என்னும் பெயரில் அந்த பாடலில் படுக்கை அறை காட்சிகள்தான் காட்டப்பட்டிருப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.

பல தமிழ்ப்பாடல்கள் அப்படிதான்.  ஆனால் இதில் அத்தனை நெருக்கமான காதல் காட்சிகளின்போது அவர்களை  சுற்றிலும் தடித்தடியாய் பல ஆண்களும் நல்ல அழகிய அலங்காரங்களுடன் பல பெண்களுமாக நின்று கொண்டு இவர்களின் நெருக்கத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுதான் தாங்க முடியவில்லை.

அந்த நடன இயக்குநரின் கரங்களை  மானசீகமாக கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். அத்தனை ரசனையான அசைவுகள் லதாவுக்கு, எம்ஜிஆருக்குத்தான்  எப்போதும் நடன அசைவுகள் தேவையில்லையே.   அவருக்கு மிகப்பிடித்த, எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம் என்னும் சாத்தியம் கொண்ட ஒரு உணவுப் பண்டத்தை போலவே பாடல் முழுவதும் லதாவை எம்ஜிஆர் பார்த்துக் கொண்டிருப்பார்.  காமிராக்கோணங்களை பற்றியெல்லாம் பொதுவில் பேசவே முடியாது.

’’நில்லு கொஞ்சம் நானும் வாரேன்’’ என்பதற்கே கோபித்துக்கொண்டவரை, இப்பாடலை பார்க்கும் போதெல்லாம் நினைத்துக்கொள்வது வழக்கம்.

காதலை, அத்தனை மறைவிலும், இத்தனை அப்பட்டமாகவும், இந்தியச் சினிமா எதிரெதிர் முனைகளில் நின்று காட்டி  கேவலப்பபடுத்திக் கொண்டேதான் இருக்கிறது. ஒரு சில மலையாளப் படங்களைத் தவிர பிற மொழிப் படங்களில் காதல்  பல்வேறு வழிகளில் சிதைக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

அழகிய உரையாடல்களில் எளிமையாக அழகாக, வார்த்தைகளில்  காதலை வெளிப்படுத்த முடியாதென்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பவை  தமிழ் சினிமாக்கள். மீசை  மாதவனில் ’’பிணங்கல்லே’ என்னும் காவ்யாவின் கொஞ்சலில் தெரிவிக்கப்படும் காதலுக்கீடாக  தமிழில் எந்த காட்சியை சொல்லமுடியும்?

சந்ரோல்ஸ்வம் திரைப்படத்தில் முன்காதலியும் அப்போது விதவையும் ஆகிவிட்டிருக்கும் மீனாவுடன்  நான்கு கட்டுவீட்டின் நடுமுற்றத்தின் தாமரைக்குளத்தில் மழை பெய்து கொண்டிருக்கையில் பழைய நினைவுகளை பேசிக்கொண்டு மீனாவின் எதிர்காலம் குறித்து படிகளில் எதிரெதிரே அமர்ந்தபடி லாலேட்டனும் மீனாவும் உரையாடும், மழையின் ஸ்ரீ ராகத்தில் ஒரு துண்டு கீர்த்தனையை மீனா பாடிக்காட்டும் அக்காட்சி முழுக்கவே காதல் நிறைந்திருக்கும்.

 இப்படி பல உதாரணங்கள் காட்டலாம் வங்காள மற்றும் மலையாளப் படங்களில், அரிதாக பழைய இந்தி படங்களில். 

தமிழில் அதுபோன்ற  காட்சிகள் வணிக வெற்றியைத்தராதவை என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறது போல. அப்படியான  காட்சிகளை  கமல்ஹாசனைத் தவிர பிறர் சிந்திப்பதில்லை, அல்லது அவர்களுக்கு அமைவதில்லை. 

 ‘சலங்கைஒலி’ படத்தில் காதலி ஜெயப்ரதாவை கணவருடன் ரயிலேற்றிவிடுகையில்  அவரைப் புகைப்படமெடுக்க முனைவார் கமலின் பாத்திரம். காமிரா வழியே காணும் அவரின் பேரழகை, அதை இழப்பதின் துயரைத் தாங்கமுடியாத கமலின் நடிப்பை, அவர் உடல்மொழியில் தெரியும் காதலைப் போலவெல்லாம்  காட்சிகளை அதற்கு முன்பும் பின்பும் தமிழில் யாரும் கொண்டு வந்ததில்லை. சமீபத்தில் மறைந்த புகழ் பெற்ற இயக்குநர் கே. விஸ்வநாத் இந்தக் காட்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். 

 மலையாளப் படங்களுக்கு வரலாம் மீண்டும். கேரளாவின் பாரம்பரியமும் இயற்கை அழகும், நிலக்காட்சிகளும் இடம் பெறாத மலையாளப்படங்கள் அரிதினும் அரிது கப்பைக் கிழங்கு, மீன், கஞ்சி, தென்னை,வாழை, யானை,  சந்தனக் குறியிட்ட நெற்றிகள், அகலக் கண்களுக்கு மை எழுதிய நாயகிகள், முண்டும் துவர்த்தும் அம்பலமும், வாழையிலைப் பிரசாதமும், காடும் மலையும், மழையும், விவசாய பூமியும் இல்லாத மலையாளப்படங்களை தேடித்தான் பார்க்கவேண்டும்.

இப்படித் தங்களின் நிலத்தை, இனத்தை , மொழியை கலாச்சாரத்தை இயல்பாக பிரதிபலிக்கும் கலைகள் தான் காலத்தை கடந்தும் நிற்பவை.

தமிழிலும் கிராமியப்படங்களில் வயலும் வரப்பும் தோப்புமாக முழுக்க பொள்ளாச்சியை அதன் சுற்றுப்புறங்களை நம்பி எடுக்கப்பட்ட படங்கள் பலநூறிருக்கும். ஆனால் அனைத்திலும் பேசுபொருள் காதல் மட்டும்தான் என்பதுதான் ஆயாசமளிப்பது. அவற்றில் கதை என்று ஒன்று இருக்குமா என்னும் கேள்விக்கெல்லாம் போகவே வேண்டியதில்லை, ஆனால் கண்ணை நிறைக்கும் பசுஞ்சூழல் நிச்சயம் இருக்கும்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமலிருப்பதற்கு சினிமா படப்பிடிப்புக்களும் காரணம். அதிகாலை டிராக்டர்களிலும், குட்டியானை எனப்படும் சிறு பார வண்டிகளிலும் பேருந்து நிறுத்தத்தில்  காத்திருக்கும் ஆட்களை  திரட்டிக்கொண்டு போவர்கள் crowd artists எனப்படும் இவர்களுக்கு ஒப்பனை தேவையில்லை, நடிப்பும் சொல்லித் தர வேண்டியதில்லை.

ஆலமரத்தடி பஞ்சாயத்தில் வெறுமனே குந்தி அமர்ந்திருக்க வேண்டும் கோழிப்பண்ணையில் நடக்க்கும் சண்டையின்போது  நாலா திசைகளிலும் சிதறி ஓடவேண்டும்,  செட்போடப்பட்டிருகும் காய்கறி மார்க்கெட்டில் குறுக்கும் மறுக்கும் நடக்கவேண்டும், காய் வாங்க வேண்டும், வயலில்  களை எடுக்கவோ, நெல்லறுக்கவோ வேண்டும். இப்படி சிக்கலில்லாத வேலைதான். 400 ரூபாய்களும், மதிய உணவும் தண்ணீர் பாட்டிலும் அளிக்கப்படுகிறது பிறெகெங்கே  விவசாய கூலிவேலைகளுக்கு ஆட்கள் வருவது?

அதுபோலவே  மழை, அணை ஏரி கடல் குளம் குளக்கரை ஆறு போன்ற நீர்நிலைகளும் தமிழ்சினிமாவில் வழக்கமாக  காட்டப்படுவதுண்டு

பத்தில் 8 தமிழ் படங்களில் ஆளியார் அணை தவறாமல் இடம் பெற்றிருக்கும். கோழி (சேவல்) கூவி விடியும் தேனீர்க்கடையில் புகைபோகும் பாய்லர்கள்,,  சமையலறையில் ஆவிபறக்கும் இட்லிப்பாத்திரங்களும் கதிரெழும் துவக்கக்காட்சிகளும் மலிந்துதான் கிடக்கின்றது.

எனினும் தமிழ்சினிமாவில் அரிதாகவே  காதலர்கள் சாலையை குறுக்கே பத்திரமாகக் கடந்து தர்பூசணி கீற்று வாங்கி சாப்பிடுகிறார்கள் அப்படியான இயல்பான் காட்சிகளுக்கு மறுபடி நாம் மலையாளப்படங்களுக்கு தான் போகவேண்டி இருக்கிறது. 

நாடோடிக்காற்று படத்தில் ஷோபனாவுக்கு  அம்மியில் தேங்காய் அரைத்துக்கொடுத்து, வாசலில் கோலம் போட்டு, அவர் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கருகே இருக்கும் டீக்கடையில் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு வர்க்கி தொட்டுக்கொண்டு டீ குடித்தபடி,  ஷோபனாவையும்,  டீ குடிக்க வற்புறுத்தி அழைத்து செல்லும் அழகிய காட்சிகள் கொண்ட பாடலான ’’வைசாக சந்தியே’’ பாடல் நான் பலநூறு முறை கண்டு ரசிக்கும் பிரியப்பட்ட பாடல்களில் பட்டியலில் ஒன்று.

 இயல்பான காட்சிகளில் தமிழ் சினிமாக்காரர்களுக்கிருக்கும் ஒவ்வாமை ஆச்சர்யமூட்டும். பொள்ளாச்சி கரும்பு காட்டில் காதல் சொல்லப்பட்டதும் , காதலர்கள் கோட்டும் சூட்டும் உடலை இறுக்கிப்பிடிக்கும் உடையுமாக சுவிட்ஸர்லாந்தில் டூயட் பாடுவது நல்ல ரசனைக்காரர்களுக்கு எத்தனை துயரளிக்கும் என அவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை

பேருந்து நிறுத்தங்களும், ரயில்நிலையங்களும் இல்லாத தென்னிந்திய சினிமாவே இல்லையென்றே சொல்லலாம். தமிழ்சினிமாவில் பேருந்துநிறுத்தங்கள் என்னும் தலைப்பில் எளிதாக ஒரு முனைவர் பட்ட ஆய்வை செய்துவிடலாம், சுவாரஸ்யமாக இருக்கும்.

கமலின் பாபநாசம்  திரைப்படத்தின் கதையை மேலும் சுவாரஸ்யமாக்குவது  தென்னையும், காப்பியும், வாழையும் செறிந்து வளர்ந்திருக்கும் அந்த தோட்ட வீடு தான்  இல்லையா? ஜப்பானில் கல்யாணராமன் படத்தை நினைத்தாலே  செர்ரி மரங்களுக்கடியில்  ராதா பாடும்  ’’சின்னப்பூ சின்னப்பூ’’ பாடல் தான் நினைவுக்கு வரும்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரியில் தீபாவை காடுமலையெல்லாம் கூட்டிச்செல்லும் சிவச்சந்திரனின் புல்லட்டில் நாமுமல்லவா அமர்ந்திருப்போம்?

நிழல்கள் பாடலான  ’’இது ஒரு பொன்மாலைப் பொழுதில்’’ மரங்களடர்ந்த சாலையும் தீக்கொன்றைகளும், கடற்கரையும்,  புல்வெளியும், கதிரணைதலுமாக 80களின்  சென்னைச்சாலை அந்தியின் செவ்வொளியில் மூழ்கிக் கொண்டிருக்கும்.

தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பிரபல பாடலான ’’காதலின் தீபமொன்று’’  துவங்குகையில் பட்டைஉரித்திருக்கும் யூகலிப்டஸ் மரத்தில் சுமதி என்று பெயரெழுதி முத்தமிடும் ரஜினியை காட்டித்தான் துவங்கும், அந்தப் பாடலில் அவர்களுக்கிடையில்  உருவாகி இருக்கும் காதலை எண்ணியபடி ஓங்கி உயர்ந்த யூகலிப்டஸ் மரங்களின் காடுகளில் நடந்தபடி ரஜினி சென்று கொண்டிருப்பார். ரஜினியின் இயல்பான பாடல்களில் இதுவும் ஒன்று 

ஊட்டியின் யூகலிப்டஸ் காடுகளும் பொள்ளாச்சி அருகே இருக்கும் வனப்பகுதியான சர்க்கார்பதியின் முள்மரக்காடுகளும் பல காதலை சொல்லி இருக்கின்றன.

என் தனித்த பிரியத்துக்குரிய படமான பன்னீர்புஷ்பங்கள் திரைப்படத்திலும் ’’ஆனந்தராகம்’’ பாடலில் அந்த பள்ளியின் ஆரம் லில்லிகளும், பைன். யூகலிப்டஸ், சாம்பிராணி மரங்களுமாக திரையில் பச்சிலை வாசனையே அடிக்கும் 

அதிலேயே  ’’பூந்தளிராட’’  பாடல் லவ்டேலின் ரயில் நிலயத்தையும் தண்டவாள விளிம்பில் தடுமாறிக்கொண்டு நடந்துவரும் இளங்காதலர்களையும் புகைந்து கொண்டுவரும் ரயிலையும் பட்டையுரித்த   யூகலிப்ட்ஸ் மரங்களுக்கிடையில்  அழகாக காட்டும். 

பகத்ஃபாசிலின் மகேஷிண்ட ப்ரதிகாரம் படத்தின் துவக்க காட்சியிலேயே அவர் குளிக்கும் நதிநீரில் இரண்டு நட்சத்திர பழங்கள் மிதந்து வரும்.

அப்படியான வெகு இயல்பான இயற்கையுடன் நெருங்கிய காட்சிகள் அப்படங்களை அணுக்கமாக்கிவிடும்

உயரக்காட்சியில் படம் துவங்கும்போதே பாம்புபோல வளைந்து வளைந்து செல்லும் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, கொல்லிமலை, கேரளா என்று மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியை காண்பித்து துவங்கும் எந்தப்படமானாலும் கதையையோ கதைமாந்தரையோ பற்றி கவலையின்றி முழுப்படத்தையும் அவை எடுக்கப்பட்ட கதைக்களத்திற்கெனவே பார்த்து ரசிப்பதுண்டு. சில காட்சிகளில் தெரியும் சில அரிய தாவரங்களை பார்த்து பரவசமடைவதும் வழக்கம்.பல திரைப்படங்களில் உள்ளறை அலங்காரங்களில்  அழகிய பசுஞ்செடிகள் பிரமாதமாக காட்டப்பட்டதுண்டு.

தமிழ்சினிமாவில் இயல்பான இயற்கை காட்சிகளும் காதில் கேட்கும்படியானதும், என்றும் மறக்கமுடியாத நல்ல இயற்கைகாட்சிகளுமாக பாரதிராஜா இளையராஜா கங்கைஅமரன் ஆகியோரின் கூட்டணிக்காலத்தில்  நமக்கு காணக்கிடைத்தது 

குறிப்பிட்ட நிலப்பரப்புக் காட்சிகளில் திரைப்படங்களை காட்டுவது உலகசினிமாக்களின் முக்கிய அம்சமாகும், இது கதைக்களத்திற்கு பார்ப்பவர்களை அணுக்கமாக்கி, கதையில் அவர்களையும் ஈடுபடுத்துவதின் மூலம் பார்வையாளர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஈர்க்கின்றது    

திரைப்படங்களின் அழகியல் மற்றும் கதைப்போக்கு  இவ்விரண்டிலும் பங்களிப்பதில் நிலப்பரப்பின் முக்கியத்துவம்  வெகுவாக இருக்கும் போதிலும், இந்திய சினிமாவில்  நிலக் காட்சி பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம் பற்றி மிகக் குறைவாகவே அறியபட்டிருக்கிறது.

அடர் வனங்கள், பனிமூடிய மலைமுகடுகள், பாழ்நிலங்கள், பாலைவனபெருமணற்பரப்புக்கள், சந்தடியான நகரங்கள், இயற்கை எழில் நிறைந்த கிராமப்புறங்கள் கைவிடப்பட்ட பின்னி மில்ஆகியவற்றை திரையில் காண்பவருக்கும் அந்நிலப்பரப்புக்குமான அந்தரங்கமான நினைவுகளும் கதையோட்டத்துடன் கலந்து திரைப்படக்குழுவினர் எண்ணியிராத வடிவத்தில் ரசிகர்களிடம் அக்காட்சி சென்று சேரும். ரசிகர்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பை நினைவூட்டும் ஒரு ஊடகமாக இப்படியான காட்சிகள் அமைந்துவிடுகின்றன.

அவற்றின் மகத்தான குறியீட்டு மதிப்பினால், குறிப்பிட்ட நிலப்பரப்புக்காட்சிகள் கொண்ட படங்கள் அச்சினிமாவிற்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான பரந்த உரையாடலின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றன.

உதாரணமாக ஹாலிவுட் படமான ’The mountain between us’ என்பதை எடுதுக்கொள்ளலாம்.

துவக்கத்தில் சில காட்சிகளில் மட்டும் வரும் வால்டர் என்னும் விமான ஓட்டியும், இறுதிவரை பெயரிடப்படாத கோல்டன் ரெட்ரீவர்  நாயொன்றையும்  தவிர,  பரந்து விரிந்திருக்கும் பனிமலை முகடுகளுக்கு நடுவில் நாயக நாயகி இருவர் மட்டுமே கதைமுழுக்க வருகிறார்கள்.

பனிக்காற்றில் உலையும் பைன் மரங்களும்,  முகத்திலும் உடைகளிலும் ஒட்டியிருக்கும்   பனிப்பொருக்குகளும் , உலர்ந்த உதடுகளும், வழக்கமான ஒப்பனையின்றி வீங்கிய முகமும் ரத்தக்காயங்களுமாய்,   எப்போதுமாய் கொட்டிக்கொண்டிருக்கும் பனியும்,  அதில் கால் புதையப்புதைய இருவரும் நாட்கணக்காக நடப்பதுமாய்   வழமையான திரைக்காட்சிகளினின்றும் மிக வேறுபட்ட ஆனால்  அழகுக்காட்சிகள்.

 இவர்களிருவரும் சிக்கிக்கொண்டிருக்கும், முடிவற்றதுபோல தோற்றமளிக்கும் பனிமலையையல்ல இக்கதையும் அதன் தலைப்பும் பேசுவது,  அது ஒரு குறியீடுமட்டும்தான், வாழ்வு குறித்தான விழைவுகளும் அச்சங்களும் கவலைகளும் திட்டங்களுமாக இவர்கள் இருவருக்கும் இடையில்  உருவாகியிருந்த மாபெரும்  பனிமலையொன்றினைக்குறித்தும் அது மிக மெல்ல  அவர்களுக்குள் உருவாகும் காதலின் வெம்மையில்   கரைவதையுமே இத்திரைப்படம் பேசுகின்றது.

சில வருடங்களாகவே  சினிமா சுற்றுலா பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. ரஜினி பாறை, குணா குகை, குஷ்பூ குளம், தேவர் மகன் அரண்மனை வீடு, ஜியா ஜலே பாடலுக்கு பிறகு அதிரப்பள்ளி அருவி, குசேலனுக்கு பிறகு ஆலப்புழை, கடலோர கவிதைகளுக்கு பிறகு முட்டம் கடற்கரை என்று சொல்லிக்கொண்டே போகலாம் உதாரணங்களைக் கவனமாக கையாளப்படுகையில் நிலப்பரப்புகாட்சிகளை காட்டும் சினிமாக்கள்  நமது கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியங்களை அடுத்த தலைமுறைக்கு  கொண்டு செல்லவும் உதவுகிறது.இந்தியா கேட்டும், தாஜ்மகாலும்,   சார்மினார் சதுக்கமும் தலைமுறைகளாக நம் நினைவில் நின்றுகொண்டிருக்கிறதல்லவா?

பல்வேறு வகையான நிலப்பரப்பு மற்றும் வாழ்விடங்களை கொண்டிருக்கும் இந்தியா திரைப்படம் தயாரிக்கும் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும், சர்வதேச மற்றும் உள்நாட்டு சினிமாக்களை தயாரிப்பதற்கான ஒரு வசீகரமான  இடமாகவும்   இருக்கிறது.  

சினிமாக்கலையுடன் சினிமா அனுபவமும் மாறிக்கொண்டே இருக்கிறது. 70, 80களில் சினிமாவுக்கு செல்லுதல் என்பதே ஒரு பெரிய குடும்ப நிகழ்வாக, கூட்டு அனுபவமாக இருந்தது, அந்த சினிமாஅனுபவம் பலகாலங்களுக்கு நினைக்கப்படும் போற்றப்படும் ஒன்றாகவும் இருந்து. பின்னர் நகரங்களின் மல்டிப்ளெக்ஸுகள் வேறு விதமான அனுபவங்களை அளித்தன. 

கனிணி மயமாக்கல் இப்போது தொடுதிரைகளை நம் விரல்நுனிகளில் உயிர்ப்பித்து சினிமாவை  அந்தரங்க அனுபவமாக வீட்டறைகளுக்குள் கொண்டுவந்து விட்டிருக்கிறது. 

செந்தாழம்பூவில் காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்பது பல வருடங்கள் கழித்தே எனக்கு தெரியவந்திருக்கிறது. ஆனால் சினிமா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் அத்துப்படியாயிருக்கும் இந்த தலைமுறையினரை லேசாக நினைத்துவிடக்கூடாது.

பிரம்மாண்ட வெள்ளித்திரை அனுபவம் மீச்சிறு தொடுதிரை அனுபவமாகிவிட்டிருக்கும் இக்காலத்தில் நிலப்பரப்புகளை, இயற்கையின் அம்சங்களை, கலச்சாரங்களை, மரபை சினிமா என்னும் மாபெரும்  சக்திவாய்ந்த ஊடகத்தின் மூலம்  அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் பொறுப்பு சினிமாக்காரர்களின் தோளில்தான் இருக்கிறது. 

மாறிக்கொண்டு வரும் உலகை மனதில் கொண்டு  கண்ணியமாகவும் கவனமாகவும்,அதே சமயம் கொண்டாடும்படியும் சினிமாக்கள் உருவாக்கப்படவேண்டி இருக்கிறது.

இந்த கட்டுரையை வாசித்து முடித்ததும் உடனடியாக  ’’நீல நயனங்களில்’’பாடலை யூடூபில் பார்க்கச்செல்பவர்கள் அதற்கு பிழையீடாக மகேஷிண்ட பிரதிகாரத்தின் ’’இடுக்கி’’பாடலையோ அல்லது இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே   நம்மை விட்டுபிரிந்த சரத்பாபுவின் ’’செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றலை’’யோ சேர்த்துப் பார்க்கலாம். 

புளிப்பும் இனிப்பும்,

 நாளை அகிலாவின் நிச்சயதார்த்தம். கோவை செல்ல வேண்டி இருக்கிறது. நினைத்துக்கொண்டாற்போல டெய்லர் சங்கீதாவிடம் இருக்கும்  தைத்து முடித்த புதுப்புடவைகளில் ஒன்றை வாங்கிகொள்ளலாமென்று புறப்பட்டேன். செந்திலை இனி பொள்ளாச்சியிலிருந்து வரச்சொல்லி பின்னர் புறப்பட மாலை ஆகிவிடும் எனவே பேருந்திலேயே செல்ல நினைத்தேன்.

நல்ல உச்சிவெயிலில் புறப்பட்டு வேடசெந்தூர் பேருந்து நிறுத்தத்தில் 20 நிமிடம் நின்றேன்.பேருந்து வரும் அறிகுறியே இல்லை. என்னுடன் நிலா டைன் உணவகத்தில் பாத்திரம் தேய்க்கும் பணியிலிருக்கும் ஒரு பெண்மணியும் காத்திருந்தார், பின்னர் இருவருமாக பேசிக்கொண்டே அடுத்த சுங்கம் நிறுத்தம் வரை நடந்துவந்தோம்.அங்கு நான்கு வழிச்சாலையாதலால் அடிக்கடி பேருந்துகள் வரும்.

அவர் பெயர் கோகிலா, தினம் 3 மணிக்கு பணி முடிந்து புறப்படுவார் நாளொன்றுக்கு 300 ரூபாய் சம்பளம் என்பதை எல்லாம் பேசிக்கொண்டு வந்தார், நல்ல திருத்தமாக புடவை உடுத்திக்கொண்டு தலையில் பூச்சரம் வைத்துக்கொண்டு அழகாக இருந்தார்.

நான் என்னசெய்கிறேன் என்றுகேட்கப்பட்ட போது டீச்சர் என்று சொன்னேன். 

சுங்கத்திலும் நல்ல கூட்டம். இன்று முகூர்த்த நாள், ஏதோ திருமணவிருந்தில் பணிபுரிந்து வீடு திரும்பும் சரிகைக்கரை இட்ட  வெள்ளை முண்டும் அழுத்தமான நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்த பெண்கள் கூட்டமொன்றும்   இருந்தது. அனைவருமே வெகுவாக களைத்திருந்தார்கள்.

வெயில் முதுகில் அறைந்து மண்டையை பிளந்து உள்ளே இறங்கிக்கொண்டிருந்தது.  பேருந்து அங்கும் வெகுநேரம்வரக்காணோம். என்னருகில் நின்று கொண்டிருந்த பெண் போனில் உரக்க யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். அன்றுதான் ICUவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்லவிருப்பதாகவும் கணவரும் உடன் சிகிச்சையில் இருந்து இப்போது அவரது அக்காவீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் எதிர்முனையில் இருந்தவரிடம் சொல்லிக்கொண்டார். 

20 நாட்களுக்கு முன்னர் அவர்களின் செல்ல நாய் சின்னுவுக்கு வெறி பிடித்து பால் சோறு கொடுக்க வந்த இவரை தலையில் கடித்து,காப்பாற்ற வந்த அவர் கணவரையும் கை,காலென்று ஏகத்துக்கும் கடித்துவிட்டது அக்கம்பக்கத்தினர் வந்து காப்பற்றி ஆம்புலன்ஸில் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்திருக்கிறார்கள். இனி 10 நாட்கள் கழித்தே தையல் பிரிக்கவேண்டும். ஊர்ப்பஞ்சாயத்தில் அந்த நாயை கொல்ல முடிவாகி கொன்றும் விட்டார்கள், அதை சொல்லுகையில் அவருக்கு குரல் கம்மியது. அவரது தலையின் மறுபக்கத்தில் பெரிய பாண்டேஜ் போடப்பட்டிருந்ததை பின்னரே கவனித்தேன். ’’நானே வளர்த்தி இப்படி கொல்லவேண்டியதாயிருச்சே’’ என்று புலம்பினார். ’’ பாடு தான் எப்பவும் பாடுதான் ஒருநாளும் விடியாது’’ என்றவர். தனக்கு ஏதேனும் வேலை இருந்தால் சொல்லும்படி மீள மீள எதிர்முனையை கேட்டுக்கொண்டார்

50 வந்தது,நானும் கோகிலாவும்  ஏறினோம். அகால வேளை என்பதால் இருக்கைகள் காலியாகவே இருந்தன. கோகிலா என்னருகில் அமர்ந்தார்.

அவரது வயர் கூடையில் இருந்த சிறு பெட்டியிலிருந்து பொன்மஞ்சள் வண்ணக் காகிதம் சுற்றப்பட்டிருந்த ஒரு சாக்லேட்டை எடுத்து, பிரித்து இரண்டாக உடைத்து எனக்கு பாதியை அளித்தார். வாங்கிக்கொண்டேன். அவருக்கு இனிப்பு மிகவும் பிடிக்குமென்றும் எப்போதும்  பயணங்களில் சாப்பிட கையோடு கொண்டு வருவதாகவும்சொன்னார்.  வாழ்வென்னும் பெருவதை அவருக்கான  இனிப்புச்சுவையை  எப்படியோ விட்டுவைத்திருக்கிறது. எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. இனிப்புப்பிரியையான நான் இத்தனைகாலம் சாப்பிட்டதிலேயே ஆகச்சிறந்த இனிப்பு அதுதான். கோகிலாவை கட்டிக்கொள்ள நினைத்தேன். பேருந்தில் சாத்தியமில்லாமல் போனது.அவரது கையை ஒரு முறை பிடித்துக்கொண்டேன்.

பலர் நல்ல உறக்கத்திலும் வெயிலின் கிறக்கத்திலும் இருந்தார்கள்.நடத்துனர் ஓட்டுநர் இருவருமே சுவாரஸ்யமில்லாமல் இருந்தார்கள் . கட்டணமில்லை பெண்களுக்கு என்பதை வெகுநேரம் கழித்தே உணர்ந்துகொண்டு கையில் வைத்திருந்த  பணத்தை பர்ஸில் வைத்துக்கொண்டேன். கோகிலாவிடம் விடைபெற்றுக்கொண்டு வஞ்சியாபுரம் பிரிவில் இறங்கிநடந்தேன். முந்தாநாள் மழையில் சங்கீதாவின் கடை வாசலில் குளமாக நீர் தேங்கி இருந்தது.

என் புடவை ரவிக்கையை தயாராக வைத்திருந்தார். திரும்ப வந்து சாலையை கடந்து எதிர்புறமாக நின்றேன்

20 நிமிட காத்திருப்பிற்கு மீண்டும்  சுங்கம் வழியே உடுமலை செல்லும் மற்றொரு50 வந்தது. நல்ல கூட்டமதில். மூன்றாவது இருக்கைக்கு அருகில் நின்று கொண்டேன். அந்த இருக்கையில் இரு பெண்களும் அவர்களை பார்த்து திரும்பியபடி நின்று கொண்டு மற்றொருத்தியுமாக இருந்தார்கள், தோழிகள்,  ஒரே இடத்தில் பணிபுரிவர்கள்  என தெரிந்தது. அவர்களில் மிக இளையவள் ‘’காலையில் 3 மணிக்கா, வீட்டைவிட்டு போன்னு சொல்லறாங்க்கா உள் ரூமை வேற பூட்டிவச்சுட்டான் பர்ஸ் அங்கே இருக்கு எங்கேக்கா போவேன் ஆட்டோ கூட இருக்காது அந்நேரெத்துக்கு ‘’என்றாள் அதை முன்னரே பல முறை பேசிஇருப்பார்கள் போல.’’மசநாயாயிருந்தாகூட குடும்பம் நடத்திடலாங்க்கா இவன்கூட முடியது கெரகம் மறுபடி அங்கேயே போரேன்பாருங்க இப்போ ‘’ என்றாள்.

 சின்னப்பெண், வயது  20 அல்லது 22 தான் இருக்கும் சிவப்பில் பழைய சுடிதார், எண்ணெய் இறங்கிய ஒரு மூக்குத்தி, கழுத்தில் அழுக்காக ஒரு வெறுஞ்சரடு, காதில் ஒரு பிளாஸ்டிக் மொட்டுத்தோடு. இவர்களெல்லாம் ஒரு டிகிரி படித்திருக்கலாம், கம்ப்யூட்டரில் பில் போட 8000, அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்தால் மேலும் 3000 என்று, அந்த அவன்களில் எவன்  எத்தனை மணிக்கு போகச்சொன்னாலும் புறப்பட்டு வந்து தனியே  கண்ணியமாக வாழ்ந்திருக்கலாம்.

சற்று நேரத்திலேயே மூவருமாக என்னமோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது

துயர்களை இவர்கள் பெருக்கிக்கொள்வதில்லை மேலும் அவை இருப்பதுதான் வாழ்க்கை என்றும் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. 

சுங்கத்தில் இறங்கி செல்வம் கடைக்கு வந்தேன், ரேகாவும் இருந்தாள்.அக்‌ஷய திருதியைஅன்று நகைக்கடைபோல கூட்டம் நெரிபட்டது.  இருவரிடமும் பேசிக்கொண்டிருந்துவிட்டு பச்சைமிளகாய்களும் புதினாஇலைகளும் மிதந்த குளிர்ந்த  எலுமிச்சை ரசத்தை குடித்தேன்.  வெயில் உறிஞ்சிக்கொண்டிருந்த உயிர் திரும்ப வந்தது. 

அங்கிருந்து நடந்து ஊருக்கு வரும் வழியில் பலர் என்னையும், ஏன் நடந்து வருகிறேனென்றும், அப்பா எப்படி இருக்கிறார் என்றும் விசாரித்தார்கள்.  ஊமைக்கவுண்டர் சரண் எப்படி இருக்கிறான் என்று சைகையில் கேட்டார் நலமென்று தெரிவித்தேன். ’’போ போ’’ என்று கையாட்டி சிரித்தார்.

காவலர் பிரபுவின் அப்பா தன்னந்தனியே கோவில் வாசல் கல்பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவரும் மனைவியை இழந்திருந்தார் சில வருடங்களுக்கு முன்னர். அப்பா தளர்ந்துவிட்டார் என்றதும் ’’என்ன கண்ணு பண்ணறது உங்கம்மவோட போச்சு எல்லாம்’’  என்ற படி சுய பச்சாதாபத்தில் கண் நிறைந்து  வேட்டி  நுனியில் துடைத்துக்கொண்டார். சங்கடமாக இருந்தது. 

மெல்ல நடந்துவந்தேன், வழியெங்கும் தீக்கொன்றைகள் மலரத் துவங்கி இருந்தன.புளியமரங்கள் தளிரும் மலருமாக நிறைந்திருந்தன புளியம்பூக்களை எனக்கு  சாப்பிட பிடிக்கும் ஆனால் எட்டாத உயரத்தில் இருந்தன. 

ஒரு வெள்ளை நாய் வாலாட்டிக்கொண்டே தொடர்ந்தது.  நாய் இன்று மூன்றாவது முறையாக இடைபடுகிறது. கொல்லப்பட்ட சின்னு,3 மணிக்கு வெளியே போகச்சொன்ன ஒன்று, பிறகு இது.

லண்டனில் ஒரு மகளையும் அமெரிக்காவில் இன்னொருத்தியையும் கட்டிக்கொடுத்துவிட்டு கணவரும் இல்லாமல் தனியே வாழ்ந்துவரும் அந்த அரசமரத்துக்கருகிலிருக்கும் வீட்டம்மா கூடத்தில் கையை தலைக்கு வைத்து உறங்கிக்கொண்டிருப்பது திறந்திருந்த கதவு வழியே தெரிந்தது. அருகில் பால்வாங்க பாத்திரம் வைத்திருந்தார். எங்கோ வெகு தொலைவில் இருக்கிறதென்று நான் நினைக்கும் எதிர்காலம் ஒரு கணம் மிக அருகிலென வந்துசென்றது.

நல்ல இளங்காற்றில் புளியம்பூக்கள் உதிர்ந்தன, இன்றும் மழை வரலாம்.  மணி அண்ணன் வொர்க்‌ஷாப் அருகில் வந்ததும் திரும்பி அந்த வெள்ளைநாயிடம் ’போடா’  என்று அதட்டினேன். உடனே சொல்பேச்சு கேட்டு பவ்யமாக திரும்பி நடந்தது, டீச்சர் என்று தெரிந்திருக்குமோ?

வீடு வந்து வெளிவாசல் கதவை திறக்கையிலேயே இன்று பறிக்காமல் விட்ட ராமபாண மணம் கமழ்ந்தது. 

குளிக்க செல்லுமுன்பு கொண்டைபோட தலை முடியை பிரிக்கையில்  தலையிலிருந்து ஒரு  புளியம்பூ விழுந்தது. வாயில் போட்டுக்கொண்டேன் நல்ல புளிப்பு.

« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑