லோகமாதேவியின் பதிவுகள்

Author: அதழ் (Page 1 of 17)

பெல்லடோனா!

புடவி நெசவில் மானுடர் ஒவ்வொருவருக்கான இழையையும் நெய்பவள் க்ளோத்தோ, இழையின் நீளத்தை கணக்கிட்டு அளந்து வைப்பவள் லேச்செஸிஸ்,  வாழ்நாளில் மானுடர் சந்திக்க வேண்டிய இன்னல்களை மொத்தமாகக் கணக்கிட்டு இழைகளில் அமைப்பவளும் இவளே, இவர்கள் இருவரையும் விடச் சிறிய உருவம் கொண்டவளும், மூத்தவளுமான அட்ரோபோஸ், அளந்து இணைக்கப்பட்டிருக்கும்  பிறவிச்சரடை அறுத்து மரணத்தை அளிப்பவள்.  

மரணத்தின் தேவதையான அட்ரோபோஸ் இரக்கமற்றவளாகவும் பிடிவாதக்காரியாகவும் அறியப்படுகிறாள். 

க்ளோத்தோ, லேச்செஸிஸ் மற்றும் அட்ரோபோஸ்   (Clotho, Lachesis & Atropos) ஆகிய மூன்று சகோதரிகளும் கிரேக்கத் தொன்மங்களில்  ஊழின் தேவதைகளாகக் கருதப்படுகிறார்கள்.  இவர்கள்  மூவரும் இருளின் தெய்வமாகிய எர்பஸுக்கும் (Erebus) இரவின் தேவதையான நைக்ஸுக்கும் (Nyx) பிறந்தவர்கள். 

மரணத்தையளிக்கும் மூத்த சகோதரி அட்ரோபோஸின் பெயரில் பல அறிவியல் பெயர்கள் உள்ளன. திரும்பிச் செல்ல முடியாத, மாற்றமுடியாத  என்று பொருள் கொண்ட Atropos என்னும் சொல்லைக்கொண்டு  தென்னாப்பிரிக்காவின் மலைப்பகுதியில் வாழும் விஷமுள்ள விரியன் வகைப் பாம்பொன்றிற்கு Bitis atropos என்றும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும்  தலைப்பகுதியில் மனித மண்டையோட்டின் வடிவத்தைக் கொண்டிருப்பதால் Death’s-head hawk moth என்றழைக்கப்படும் அந்துப்பூச்சிக்கு Acherontia atropos என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியின் குடும்பமான சொலனேசியைச் சேர்ந்த,  இலைகளிலும் கனிகளிலும் உயிரைப் போக்கும் கடும் நஞ்சு கொண்டிருக்கும்  ஒரு தாவரம், இதே அட்ரோபோஸ் என்னும் பெயரைக்கொண்டு தாவர வகைப்பாட்டியலின்  தந்தையான லின்னேயஸினால்  Atropa bella donna என்று 1753-ல் பெயரிடப்பட்டது. bella donna  என்று இரு சொற்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது தவறு என்று பலர் கண்டனம் தெரிவித்ததால் பிற்பாடு இரு சொற்களுக்கிடையில்  ஒரு  சிறு கோடு இணைக்கப்பட்டு இதன் அறிவியல் பெயர் bella-donna  என்றாகியது. 

பெல்லடோனாவின் பிற வழங்கு பெயர்களாக  deadly nightshade, devil’s cherries, devil’s herb, divale, dwale, dwayberry, naughty man’s cherries, gray morel,  poison black cherry,  Dilber grass, bear flower, மற்றும் wolfberry ஆகியவை இருக்கின்றன. 

பெல்லடோனா மேற்கு ஆப்பிரிக்காவையும் ஐரோப்பாவையும் பூர்வீகமாகக் கொண்டது. கனடா, அமெரிக்கா மற்றும் வடஆப்பிரிக்காவின் இயற்கையான வாழிடங்களிலும் பெல்லடோனா  அறிமுகப் படுத்தப் பட்டு  வளர்கிறது. இது சுண்ணாம்புச் சத்து மிகுந்த நிழலான  நிலத்தில் நன்கு செழித்து வளரும்.  

வரலாற்றில் அட்ரோபா பெல்லடோனா

அட்ரோபா பெல்லடோனா மருந்தாக, நஞ்சாக, அழகு சாதனப் பொருளாக நீண்ட வரலாறு கொண்டிருக்கிறது. 

முதல் நூற்றாண்டைச் சேர்ந்த மருந்தியலின் தந்தையான டயாஸ்கொரிடஸ் அட்ரோபின் கொண்டிருந்த மாண்ட்ரேக்கின் சாற்றை அறுவை சிகிச்சைகளின்போது வலி நிவாரணியாகவும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கவும் பரிந்துரைத்திருந்தார். அட்ரோபா பெல்லடோனாவும் அட்ரோபினைக் கொண்டிருப்பதால் மாண்ட்ரேக்கைப் போலவே இதுவும் பயன்படுத்தப்பட்டது.

பண்டைய ரோமானியர்கள் நஞ்சு கொண்டிருந்த பெல்லடோனாவை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள். எதிரிகளின் உணவில் பெல்லடோனாவை கலந்து அவர்களைக் கொல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தில்  எதிரிகளின் மதுவில் பெல்லடோனா சாற்றைக் கலந்து ஸ்காட்லாந்த்துப் படையினர் அவர்களைக் கொன்றது சொல்லப்பட்டிருக்கும். 

4-ம் நூற்றண்டைச் சேர்ந்த தியோஃப்ராஸ்டஸ்  அட்ரோபின் கொண்டிருந்த மாண்ட்ரேக் சாற்றை பாலுணர்வைத் தூண்டும் காதல் பானமாகவும், காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பரிந்துரைத்தார். அட்ரோபின் நிறைந்திருந்த எகிப்திய ஹென்பேன் தாவரத்தின் சாற்றைப் பேரழகி கிளியோபாட்ரா கண்மணியை விரிவாக்க பயன்படுத்தினாள்.

பண்டைய ரோமானிய மற்றும் உக்ரைன் பகுதிகளில் இளம் பெண்கள் மிக அழகிய தோற்றம் கொண்டிருக்கச் செய்யும் சடங்குகள் இருந்தன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இச்சடங்குகளில். ரொட்டியும் உப்பும் பிராந்தியும்  கொண்டுவரும் இளம்பெண் தன் தாயுடன் காட்டுக்குள் சென்று, கொண்டு வந்ததை அட்ரோபா பெல்லடோனா செடிக்கடியில் புதைத்துவைப்பாள்.  

பின்னர் தோண்டி எடுத்த அட்ரோபா பெல்லடோனாவின்  வேரை தலையில் வைத்துக் கொண்டு வீடு திரும்புவாள் வழியில் எதிர்ப்படும் யாரிடமும் எதுவும் பேசாமல் இருக்கவேண்டும் என்பதும் கட்டாயம். பேசினால் சடங்கின் பலன் கிடைக்காமல் போகும் என்று நம்பிக்கை நிலவியது

கிரேக்க மருத்துவரும், மருந்தியலின் தந்தையுமான  பெடானியஸ் டயாஸ்கொரிடஸ், அப்போது பெல்லடோனா என்று அறிவியல் பெயரிடப்பட்டிருக்காத இந்தத்தாவரத்தைக் குறித்து:

//மனிதர்களைப் பைத்தியமாக்குகிற இதன், வேர்ச்சாற்றை வைனுடன் கலந்து அருந்தினால் மனம்மயக்கி, மகிழ்ச்சியளித்து கூடவே விசித்திரமான உருவங்களைக் கண்ணில் தெரியச்செய்கிறது. வேர்ச்சாற்றின் அளவை இருமடங்காக்கினால் அருந்தியவர் இந்த உலகைவிட்டே 3  நாட்களுக்கு வெளியே சென்ற அனுபவத்தை அடைவார், நான்கு மடங்காக்கினால் உயிரிழப்பு ஏற்படும். இதைத்தான் சூனியக்காரிகள்  தங்கள் சருமத்தில் பூசிக்கொள்கிறார்கள்// என்று  அவரது மெட்டீரியா மெடிக்கா என்னும் நூலில்  குறிப்பிட்டிருந்தார்.

பெல்லடோனா மற்றும் அதைப்போலவே நஞ்சு கொண்டிருக்கும்   மாண்ட்ரேக் மற்றும் ஹென்பேன் ஆகிய மூன்று தாவரங்களுமே முன்காலத்தில் மந்திர தந்திரம் மற்றும் சூனியச்செயல்களுக்குப்  பயன்படுத்தப்பட்டன. சூனியக்காரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் பழங்காலத்திலிருந்தே பெல்லடொனாவின் விழுதைப் பூசிக்கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தனர். 

வரலாற்றில் பல போர்களில் எதிரிப்படைகளை அழிக்கவும், பலர் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டதிலும் அட்ரோபாவின் பெரும்பங்கு இருந்திருக்கிறது.

இதன்சாற்றை அம்பு நுனிகளில் தடவி வேட்டையாடுவதில் தொடங்கிய இதன் பயன்பாடு மெல்ல விரிவடைந்து பண்டைய ரோமானியப் பேரரசர்கள் மனைவிகளால் கொல்லப்படுவதற்கும் அட்ரோபா பெல்லடோனா காரணமாயிருந்தது.

பெல்லடோனா சாற்றின் உயிரைக்கொல்லும் அளவென்பது வெறும் 600 மி கி தான். ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் மற்றும் கிளாடியஸ் ஆகியோர் இருவரும அவரவர் மனைவிகளால் பெல்லடோனா நஞ்சளித்துக் கொல்லப்பட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது.

கொலைசெய்யப்படும் அபாயம் இருந்ததால் பேரரசர் அகஸ்டஸ் அன்றாடம் அவர் கண்முன்பாகப் பறிக்கப்படும் அத்திப்பழங்களைத்தான் உண்பார். அவரது மனைவி அத்திப்பழங்களின் மீது அவை பறிக்கப்படுவதற்கு முந்தைய நாளே பெல்லடோனா சாற்றைத் தடவியதாக நம்பப்படுகிறது.

1659-களில் ரோமானியப் பேரரசில் கொடுமைக்காரக் கணவர்களைக் கொல்லவிரும்பிய பெண்களுக்கென ஒரு ரகசிய அமைப்பு செயல்பட்டது. அதில் உறுப்பினராக இருந்த குல்லியா டொஃபானா (Giulia Tofana) என்னும் பெண் தனது கணக்கற்ற கணவர்கள். இரண்டு போப்கள்  உள்ளிட்ட சுமார் 600 நபர்களை  ஆர்சனிக்கும் பெல்லடோனாச்சாறும் கலந்த திரவத்தை “Aqua Toffana,” என்று பெயரிட்டு, ஆண் பெண் இருபாலருக்கான ஒப்பனை பொருட்கள் அடங்கியது என்று    பாட்டில்களில் அளித்துக் கொலைசெய்தாள். 

“Aqua Toffana,” வின் ஓரிரு சொட்டுக்களே தடயமே இல்லாத  மரணத்தை அளித்தது.  பெல்லடோனா நஞ்சூட்டி பலரைக் கொலைசெய்த குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தன் தாயிடமிருந்து நஞ்சூட்டுதலை கற்றுக்கொண்ட குல்லியா  தொழில்முறை நஞ்சூட்டுபவளாகவே வரலாற்றில் அறியப்படுகிறாள். 

கிமு 4-ம் நூற்றாண்டிலிருந்தே பெல்லடோனாவின் சாறு அழகுக்காகப்  பயன்பாட்டில் இருந்திருக்கிறது

இத்தாலியில் பெல்லடோனா இலைச்சாறு அழகுசாதனப்பொருளாக  பலகாலம் முன்பிருந்தே புழக்கத்தில் இருந்தது. இத்தாலியப் பெண்கள் பெல்லடொனாவின் இலைச்சாற்றை ஒரு துளி கண்களில் விட்டுக்கொள்கையில் கண்மணி பெரிதாகி  வசீகரமாகியது கன்னமேடுகளை வண்ணமாக்க கனிச்சாற்றையும் அப்போது பெண்கள் பூசிக்கொண்டனர்.  எனவே இது  பெண்களுக்கான அழகுப்பொருளாகப் பெருமளவில் உபயோகப்பட்டது. 

இதனால்தான் இந்தத்தாவரத்தின் சிற்றினப்பெயர் இத்தாலிய மொழியில் அழகிய பெண் என்று பொருள் படும் பெல்ல-டோனா என்று வைக்கப்பட்டது. இன்றும் அட்ரோபைன் ஆல்கலாய்டு கொண்டிருக்கும் பெல்லடோனாச்சாறு கண்மணியைப் பெரிதாக்க கண் அறுவைசிகிச்சைகளில் பயன்படுகிறது.

130,000  பங்கு நீருக்கு 1 என்னும் அளவில் இருக்கும் பெல்லடோனாச் சாற்றின் அளவே கண்மணியை விரிவாக்கப் போதுமானது. பெல்லடோனாவின் குடும்பமான சொலனேசியைச் சேர்ந்த மாண்ட்ரேக் மற்றும் ஹென்பேன் தாவரங்களிலுமே அவற்றிலுமிருந்த அட்ரோபினுக்காகப் பன்னெடுங்காலமாகவே அழகுச்சாதனப் பொருளாக  உபயோகத்தில் இருந்தன.

கண்மணியைப் பெரிதாக்க இது நஞ்சு என தெரிந்தும்   14, 16-ம் நூற்றாண்டுகளில் இத்தாலிய பெண்கள் மிக அதிகமாக இதை  உபயோகப் படுத்தினார்கள்.  தொடர்ந்த உபயோகத்தால் பார்வையிழப்பு,  நரம்புச்சிக்கல்கள் போன்ற அபாயங்கள் ஏற்பட்டும் இந்தப் பயன்பாடு  பல்லாண்டு காலம் புழக்கத்தில் இருந்தது

காபியிலிருக்கும் காஃபின் ஆல்கலாய்டை கண்டறிந்தவரான ஜெர்மானியத் தாவரவியலாளர் ஃப்ரெட்லிப் (Friedlieb Ferdinand Runge) தான் பெல்லடோனாவின் கண்மணியை விரிவாக்கும் இயல்பையும அறிவியல் பூர்வமாக நிருபித்தவர்.

பெல்லடோனா என்னும் பெயர் வெகுவாகப் புழக்கத்தில் இருந்ததால் 1597-ல் மூலிகை மருத்துவரான ஜான் (John Gerard)  தனது ’தாவர வரலாறு’ என்னும் நூலில் இதன் பெயரைப் பெல்லடோனா முதன் முதலாகக் குறிப்பிட்டிருந்தார்.  

16-ம் நூற்றாண்டில் தான் பெல்லடோனா தாவரவியல் ரீதியாக விவரிக்கப்பட்டு அதன் சித்திரங்கள் வெளியாகின.

இதன் முதல்  பெயரான Solarium horrense nigrum என்பது 1532-ல் Traps J என்பவரால் பாரிஸில் பிரசுரமான் ஒரு நூலில் குறிப்பிடப்பட்டது . பின்னர் 1542- ல்  Fuchso என்பவரால்  Solanum somniferum,  என்று பெயரிடப்பட்டு விவரிக்கப்பட்டது

1753-ல் தான் லின்னேயஸ் அட்ரோபா பெல்லடோனா என்று இதன் பேரின மற்றும் சிற்றினப்பெயர்களை அதிகாரபூர்வமாகப் பிரசுரித்தார்.

லண்டன் பார்மகோபியாவில் அட்ரோபா பெல்லடோனாவின் இலைளின் மருத்துவ இயல்புகள் 1809-ல் வெளியாகின. 1860-ல் இதன் வேர்களின் மருத்துவப் பண்புகள்    விவரிக்கப்பட்டு பிரிட்டிஷ் மருந்துத்துறையில் இணைக்கப்பட்டது.

1831- ல் ஜெர்மானிய மருந்தாளுநர் ஹெம்ரிச் (Heinrich F. G.) இந்தத் தாவரத்திலிருந்து தூய அட்ரோபினை (atropine) குருணைகளாகப் பிரித்தெடுத்தார்.

பெல்லடோனாவின் தாவரவியல் பண்புகள்

அட்ரோபா பெல்லடோனா ஒரு பல்லாண்டுத் தாவரம். சதைப்பற்றான நன்கு கிளைத்த வேர்த்தொகுதியும். உருளைவடிவ நிமிர்ந்த  இரண்டிரண்டாகக் கிளைத்த, தடித்த 3 அடி உயரமுள்ள தண்டுப்பகுதியையும் கொண்டது. 

இரண்டிரண்டாகப் பக்கவாட்டில் அமைந்திருக்கும் நீண்ட இலைகள் புகையிலையின் இலைகளைப் போலிருக்கும். இலைக்காம்பு குறுகியது. இலைகள்  கீழ்ப்பகுதியில் மாற்றடுக்கிலும்,மேல்பகுதியில் எதிரடுக்கிலும் அமைந்திருக்கும்

பெல்லடோனாவின் ஊதா நிற மணி வடிவ மலர்கள் மிக  அழகியவை. காம்பு கொண்டிருக்கும், தனித்த அழகிய மணி வடிவ  ஐந்து மடிப்புகள் கொண்ட இம்மலர்கள்  பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன. 

பெல்லடோனா மணத்தக்காளியின் கருப்புக்கனிகளைப் போலவே  ஆனால் அளவில் சற்றுப் பெரிதாக இருக்கும் தனித்த கனிகளைக் கொண்டிருக்கும். அடர் ஊதா அல்லது ஆழ்ந்த கருப்பு நிறத்தில்  சாறு நிரம்பிய, 2 அறைகள் கொண்ட கருப்புக்கனிகள்  தேய்த்தால் கெடுமணம் அளிப்பவை. கனிகளில் சிறுநீரக வடிவில் பல நுண் விதைகள் நிறைந்திருக்கும். இவை  விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்பவை.

அட்ரோபா பெல்லடோனாவின் வேதிச்சேர்மானங்கள்

அட்ரோபாவின் கனிகளிலும், இலைகள் மற்றும் வேரிலும் 20 வகையான கடும் நச்சுத்தன்மை கொண்ட வேதிச் சேர்மங்கள் உள்ளன. இலைகளிலும் வேர்களிலும் சக்திவய்ந்த  பெல்லடோனா ஆல்கலாய்டுகள் 0.13 to 0.70 % வரை அடங்கியிருக்கின்றன,

பெல்லடோனாவில் hyoscyamine, atropine, atropamine, belaplomine மற்றும் scopolamine, போன்ற ஆல்கலாய்டுகள் எல்லாத் தாவரப்பாகங்களிலும் இருக்கின்றன. இலைகள் மற்றும் கனிகளில் இவை மிக அதிக அளவில் இருக்கின்றன. 

பெல்லடோனாவின் ஆல்கலாய்டுகளில் மிகவும் சக்திவாய்ந்தவை அட்ரோபைன் மற்றும் ஸ்கோபோலமைன் இரண்டும் தான். (Atropine & scopolamine). இவ்விரண்டும் அட்ரோபா பெல்லடோனாவில் மட்டுமல்ல ஊமத்தை போன்ற சொலனேசி குடும்பத்தின் பிற தாவரங்களிலும் காணப்படுகின்றன. 

பெல்லடோனா விழுதை உடலில் பூச்சிக்கொள்கையிலும், அருந்துகையிலும் மனமயக்கம், இல்பொருள் தோற்றம் உண்டாகுதல், உடல் எடை குறைந்து பறக்கும் உணர்வு தோன்றுதல் ஆகியவை உண்டாகிறது. மிக அதிக அளவில் உட்கொள்ளுகையில் பெல்லடோனா கண் விழித்திருக்கையிலேயே மாயத்தோற்றங்களை உருவாக்கி மனம் பிறழச்செய்து கோமா அல்லது இறப்புக்குக் கொண்டு செல்கிறது.

இதயநோய், ஆஸ்துமா, வலிப்பு நோய் மற்றும்  பார்கின்ஸன் சிகிச்சைகளில்  பெல்லடோனாவின் அட்ரோபைன் ஆல்கலாய்டு (Atropine) இப்போது பயன்படுகிறது. பல்வேறு வகையான நஞ்சுகளுக்கு பெல்லடோனா முறிமருந்தாகவும் பயனாகிறது. 

16-ம் நூற்றாண்டில் இருந்துதான் நச்சுத்தாவரமான இதன்  மருத்துவ உபயோகங்கள் பரவலாகின.1700-த்தில் மருந்துச்சரக்குகள் குறித்த பிரசுரங்கள் அனைத்திலுமே பெல்லடோனாவின் பெயர் இடம்பெற்றிருந்தது

1813-ல் இந்தத்தாவரத்திலிந்து அட்ரோபைன் ஆல்கலாய்டு தனியே பிரித்தெடுக்கப்பட்டது. 

1950-களில் இருந்து பெல்லடோனா ஆல்கலாய்டுகள் தடவப்பட்ட பிளாஸ்டர்கள் அதிகம் புழக்கத்துக்கு வந்தன. அவை முடக்குவாதத்திலிருந்து சுவாச அழற்சி வரை பல்வேறு மருத்துவப் பயன்பாடுகள் கொண்டிருந்தன.

தன்னியக்க நரம்பு மண்டல (autonomic nervous system) சிகிச்சைகளில் இதன் ஆல்கலாய்டுகள் பயன்படுகின்றன. கால்நடை சிகிச்சைகளிலும் அட்ரோபா பெல்லடோனா பயன்படுத்தப்படுகிறது

இப்போது அட்ரோபினின் உபயோகம் அத்தனை அதிகமில்லை என்றாலும் கண் மருத்துவத்தில் கண்மணியைப் பெரிதாக்க மிககுறைந்த அளவில்  இந்த ஆல்கலாய்டு மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் இயற்கையாக இவை வளர்ந்திருக்கும் இடங்களில் இவற்றின் நச்சுத்தன்மையை அறியாமல் அதன் கனிகள் தவறுதலாக உண்ணப்படும் அபாயம் உலகெங்கிலும் இருக்கிறது. 

நத்தைகள்,முயல்கள் மற்றும் பறவைகள் அட்ரோபாவின் கனிகள்  மற்றும் இலைகளை உண்கின்றன. எனினும் பறவைகளுக்கு மட்டும் அட்ரோபா நஞ்சினால் பாதிப்பு உண்டாவதில்லை.   அட்ரோபா பெல்லடோனாவின் இலைகள் கனிகளை உண்ட முயல் போன்ற சிறு விலங்குகளின் இறைச்சியை உண்பதாலும்  பெல்லடோனா ஆல்கலாய்டுகளின் பாதிப்பு உண்டாகிறது. அரிதாக பெல்லடோனா ஆல்கலாய்டுகள் போதை உண்டாக்கவும், தற்கொலைக்கும், கொலை செய்யவும் பயன்படுகின்றன. 

பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவமுறைகளில் பெல்லடோனா   வலி நிவாரணியாக, வீக்கங்களுக்கெதிராக,மாதவிடாய்க்கோளாறுச் சிகிச்சைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

ஹோமியோபதியில் பெல்லடோனா

ஹோமியோபதி மருத்துவமுறையை தோற்றுவித்தவரான சாமுவேல் ஹானிமேன். பெல்லடோனாவை  பலவிதமான நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தினார். ஹோமியோபதி மருந்துகளில் பயன்படுத்தப்படும் தாவரப்பொருட்களின் அளவு பல்லாயிரம் முறை நீர்க்கச்செய்யபடுவதால் அதன் விளைவுகள் பெரிதாக இல்லை.

அமெரிக்காவிலும் கனடாவிலும் இயங்கும் ஹைலேண்ட்ஸ் ஹோமியோபதி மருந்து நிறுவனத்தின் அட்ரோபா பெல்லடோனாவின் ஆல்கலாய்டுகள் கலந்திருக்கும் குழந்தைகளுக்கு பல் முளைக்கையில் உண்டாகும் வலிநிவாரண மாத்திரைகள் 2004-லிருந்து உலக அளவில் இரண்டாம் இடத்தில் பிரபலமாக இருந்தன. 

ஆனால் 2010-ல் FDA அந்த மருந்துகளில் அபாயகரமான அளவில் அட்ரோபா பெல்லடோனாவின் ஆல்கலாய்டுகள் இருப்பதாக தெரிவித்தது. ஹைலேண்ட்ஸ் தனது மருந்துகளைத் திரும்பப் பெற்று வேறு புதிய மருந்துகளைச் சந்தைப்படுத்தியது. 

அதன் பிறகும் அந்த மருந்துகளின் தொடர்ந்த பயன்பாட்டில் பத்துக் குழந்தைகளின் இறப்பு மற்றும் சுமார் 400 குழந்தைகளுக்கு உண்டான உடல்பாதிப்பு மீண்டும் இந்தப் பிரச்சனையை எழுப்பியபோது ஹைலேண்ட்ஸ் நிறுவனம் அந்த மருந்துக்கும் குழந்தைகளின்   இறப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை என வாதிட்டது 

எனினும் 2017-ல் மீண்டும் ஆதாரபூர்வமாக அந்த பல்வலி மருந்துகளில் பெல்லடோனாவின் அளவு அபாயகரமாக இருந்தது FDA-வால் நிரூபிக்கப்பட்டபோது அந்த மருந்துகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டன.

பெல்லோடா நஞ்சின் அறிகுறிகள்

• பேச்சுக் குழறல் மற்றும் குழப்பமான மனநிலை

• மாயத்தோற்றங்கள் உண்டாகுதல்

• மனநிலை பிறழ்தல் 

• கட்டுப்படுத்தமுடியாத வன்முறைச்செயல்பாடுகள் வலிப்பு

• கோமா நிலை 

• கண்மணி விர்வடைதல் 

• சிறுநீர் கழிக்க முடியாமை

• அதிகரிக்கும் இதயத்துடிப்பு 

• ரத்த அழுத்த மாறுபாடுகள்

அஞ்சல்தலைகளில் பெல்லடோனா

அட்ரோபா பெல்லடோனா 1957 மற்றும் 1965-ல்  வெளியிடபப்ட்ட  யூகோஸ்லேவியாவின் இரண்டு அஞ்சல் தலைகளில் இடம்பெற்றது

போலந்தில் 1980-ல். ஆஸ்திரியாவில் 2022-ல் அட்ரோபா பெல்லடோனா வின் சித்திரம் அஞ்சல் தலைகளில் சித்தரிக்கப்பட்டு வெளியானது

ஸ்விட்சர்லாந்து 1974-ல் காடுகளில் இருக்கும் நச்சுத்தாவரங்களின் வரிசையில் அட்ரோபா பெல்லடோனாவின் சித்திரத்தை  அஞ்சல்தலையில் வெளியிட்ட்டது

அல்பானியாவும் 1976-ல் அட்ரோபா பெல்லடோனாவின் சித்திரத்தை  அஞ்சல்தலையில் வெளியிட்டது. 

இந்த அஞ்சல்தலைகள் அட்ரோபா பெல்லடோனாவின் உலகளாவிய முக்கியத்துவத்துக்குச் சான்றளிக்கின்றன.  

தற்போது மருந்துத் தயாரிப்புக்கென பெல்லடோனா சாகுபடி ஐரோப்பா, பாகிஸ்தான், வட அமெரிக்கா மற்றும் பிரேஸிலில் சட்டபூர்வமாகவே நடக்கிறது.

ஜெர்மனியில் மருந்துக்கடைகளில் பெல்லடோனாவின் வேர் மற்றும் இலைகள் மருத்துவரின் பரிந்துரைகளின் பேரில் கடைகளில் கிடைக்கின்றன 

அமெரிக்காவில் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பெல்லடோனா ஆல்கலாய்டுகளைக் கொண்டிருக்கும் மருந்துகள் கிடைக்கின்றன. அதற்கு இணையாகவே  இருமல் சளி நிவாரணியாக 0.2 மி கி அளவில் பெல்லடோனா மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளாகவும் கிடைக்கின்றன. 

ஊழின் தெய்வங்களான மூன்று சகோதரிகள் பிறப்பையும் இறப்பையும் முடிவு செய்வதுபோல  சிகிச்சையளிக்கவும் உயிரைப்போக்கவுமான இயல்பினை கொண்டிருக்கும் அட்ரோபா பெல்லடோனாவும் ஊழின் தெய்வங்களில் ஒன்றுதான்.  

இருபெருநகரங்களில் !

இரு பெருநகரங்களில்!

கல்லூரியில் கோடை விடுமுறை சுமார் 40 நாட்கள். பொதுவாக விடுமுறையிலும் தேர்வுப்பணி,  ஆய்வுப்பணி, விடைத்தாள் திருத்துதல் ,  ஜூன் மாதம் புதிய மாணவர் சேர்க்கை என ஓடியே போய்விடும்.பத்து நாள் சேர்ந்தாற்போல வீட்டில் இருந்தாலே அதிசயம்தான். ஆனால் இந்தமுறை மேனகாவின் ஆய்வு முடிந்துவிட்டது. தேர்வுப்பணியை முதல்நாளே முடித்துவிட்டேன். விடைத்தாள் திருத்தும் பணிக்கும் மாணவர் சேர்க்கைக்கும் முதன்முறையாக என்னைக்காட்டிலும் இளைய, இன்னும் பல ஆண்டுகள் துறையில் பணியாற்றவிருக்கும் பேராசிரியர்களைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். சொல்லப்போனால் இதுதான் 22 வருட ஆசிரியப்பணியில் முதல் விடுமுறை என்றும் சொல்லலாம்.

சமீப காலங்களில் மாணவர் சேர்க்கையும் பெரும் அயர்ச்சியளிக்கிறது. காமர்ஸ் கணினி துறைகளுக்கான நீண்ட வரிசையில் காத்திருப்பவர்கள் தாவரவியல் துறை என்னும் ஒன்று இருப்பதே அறியாதவர்களாக கல்லூரி நிறைந்திருப்பதை இப்போதெல்லாம் பார்க்க பெரும் துயரேற்படுகிறது. 

அழிந்து போகத்தான் போகிறது அடிப்படை அறிவியல் துறைகள் எல்லாம் என்றால் நடக்கட்டும். என்னால் ஆனவற்றை நான்  தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறேன் மேலும் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

கல்லூரி கடைசி வேலைநாள் 24 ஏப்ரல் அடுத்த நாள் ரயிலேறி சென்னை வந்தேன்.  வீட்டில் முதல்தளம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒப்பந்த அடிப்படை என்பதால் என் இருப்பு அங்கு தேவைப்படவில்லை என்றாலும் வீடு முழுக்க கட்டுமானப் பொருட்கள் இறைந்துகிடக்க சிமெண்ட் பட்டு பல செடிகள் வாடியும் உயிரிழந்தும் போயிருக்கும் கடும் கோடையில் ஏறக்குறைய 1 மாதம் வீட்டை விட்டு போவது என்னும் கலக்கம் இருந்தது.  

தோட்டதுக்கு இரண்டு நாட்களுக்கொருமுறை நீரூற்ற ஒருவரையும் வராந்தாவில் இருக்கும் நிழல் விரும்பிகளுக்கு மாணிக்காவை நீருற்றவும் ஏற்பாடு செய்துவிட்டு வாசல் மேசையில் வைத்திருந்த இரண்டு போன்சாய் மரங்களையும் மாணிக்காவிடமே ஒப்படைத்து தினமும் நீர் ஸ்ப்ரே செய்து பாதுகாத்து வைக்கும் படி கேட்டுக் கொண்டேன்

கோவை புறப்படுகையில் பால் பீச்சும் மாட்டை விட்டு, பஞ்சாரத்தில் கோழியை விட்டு புறப்படும் பொன்னுத்தாயைபோலவே கலங்கினேன்.

முதலில் சென்னை அங்கிருந்து பெங்களூர் அங்கிருந்து வெள்ளிமலை அங்கிருந்து குக்கூ காட்டுப்பள்ளி சென்று மே 28 வீடு திரும்ப உத்தேசம்.

சென்னையில் வேணுவை , அகரமுதல்வனின் மகன் அங்கணனை வெண்ணிலாவை  சந்திக்கவேண்டி இருந்தது. சென்னை மாம்பாக்கத்தில் ஒரு அடுக்ககத்தில் மீனாட்சி ரவீந்திரன் தம்பதியினர் ஒரு நாள்  தாவரவியல் பயிற்சிக்கு அழைத்திருந்தார்கள்.  மகன்கள் ’’இந்த வெயிலில் ஒரு நாள் பயிற்சிக்காக சென்னை வரை போறியா?’’ என்றார்கள். ’’ஆம்’’ என்றேன். செயலாக இருக்கும் வரைக்கும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தாவரவியலின் முக்கியத்துவத்தை இயற்கையை அறிதலை கற்றுக்கொடுக்கத்தான் போகிறேன்.  வெள்ளிமலை வகுப்புக்குப் பிறகு இப்போது பலருக்கு இயற்கையை அறிதலுக்கான விருப்பமிருக்கிறது.

மதிய ரயிலாதலால் இரவு 10.30க்கு சென்னை வந்துசேர்ந்தேன். மீனாட்சி ரவீந்திரன் மற்றும் குக்கூ சத்யா எனக்காக ரயிலடியில்  காத்திருந்தார்கள். மேலும் 35 கி மீ அந்நேரத்துக்கிருந்த வாகன நெரிசலில் நீந்தி பின்னிரவில் அந்த அடுக்ககம் வந்து சேர்ந்தேன். நல்ல அசதியும் கால்வலியும் இருந்தது. நான் கேட்டுக்கொண்டிருந்த படி தனியறை ஒதுக்கித்தந்திருந்தார்கள். குளித்து உடைமாற்றி உறங்க நள்ளிரவானது.  100 பேர் வரை பங்கேற்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்து 15 பேர் கூட தயாராக இல்லை . எனவே முதல்நாள் நான் ஓய்வெடுத்துக்கொண்டு அங்த பிரம்மாண்டமான அடுக்கத்தின் தாவரங்களைப்பார்த்தேன் அருகில் இருந்த பெரிய புகழ்பெற்ற பள்ளியில் அனுமதி வாங்கி அங்கும் வகுப்பை நடத்த திட்டமிட்டோம். பள்ளி வளாகத்தில் இருந்த ஆலமரத்தடிவகுப்புக்கென  சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. 

ஒரு மாமரத்தில் பெயர்ப்பலகை இருந்தது. அருகில் சென்று பார்த்தேன். அறிவியல் பெயர் சரியாகவும் குடும்பம் தவறாக மால்வேசி என்றும் இருந்தது . அனகார்டியேசி  என திருத்தச் சொன்னேன்.

இப்படி பல முக்கியமான இடங்களில் தவறாக பெயர்ப்பலகைகளைப் பார்க்கிறேன்.

வேதாரண்யம் சென்றிருந்த போது பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஸ்தல மரத்தின் அறிவியல் பெயர் தவறாக எழுதபட்டிருந்ததைப் பார்த்தேன் அதை திருத்த யாரிடம் சொல்வதென தெரியவில்லை தருணின் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலையில் கூட ஒரு மாபெரும் ட்ரீ ஃபெர்ன் மரம் சில்வர் ஓக் என தவறான பெயரிடப்பட்டு இருந்தது. மேட்டுப்பாளையம் பள்ளி ஒன்றிலும் பல மரங்கள் மிகத்தவறாக பெயரிடப் பட்டிருந்தன நான் அந்தபள்ளியின் தாளாளருக்கு புகைப்படங்களுடன் தகவல் சொல்லியும் எந்த பலனும் இல்லை.

வெயில் முதுகில் அறைந்துகொண்டிருந்தது. ஏராளம் விசிறி வாழைகளும் ப்ளுமீரியாக்களும் அங்கிருந்தன. காலை மதியம் மீனாட்சி வீட்டில் உணவு.அன்றைய அந்தி மிக இனியது. மறக்கமுடியாதது.என்றேனும் அதைக்குறித்தெழுதுவேனாயிருக்கும்.

 மறுநாள் எப்படியோ 20 பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். போர்டு ரூம் போலிருந்த ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு துவக்க உரை அவர்களுக்கு தெரிந்த vegetable insult குறித்தும் பொதுவான தாவரவியல் குறித்தும்  சில கேள்விகள்  பின்னர் குழந்தைகளுக்கான ஒரு ppt பின்னர் அடுக்கக வளாகத்தில் களத்தாவரவியல். ஆலமரத்தடியில் 45 நிமிட வகுப்பு பின்னர் மரம் தழுவல் . குளிர்ச்சியாக லிச்சி குளிர்பானம் ஒன்றை குடித்த பின்னர் மீண்டும் அரங்கில் பெரியவர்களுக்கான ppt. 

மதிய உணவு பின்னர் ஓய்வு . மாலை வெயில் தாழ botanical hunt 1 மணி நேரம். அதில் அனைவரும் ஆர்வமாக கலந்துகொண்டனர். பின்னர் அங்கிருந்த ஒரு அரைவட்ட வடிவ திறந்த வெளி அரங்கில் அமர்ந்து இருட்டும் வரை அன்றாட வாழ்வில் தாவரங்களைக் குறித்துப் பேசியும் விவாதித்தும்கொண்டிருந்தோம். எனக்கு நிறைவாக வகுப்பாக இருந்தது. மீனாட்சி ரவீந்திரன் தம்பதியினர் அவர்களின் சொந்தச்செலவில் இதை முன்னெடுத்துச்செய்தார்கள்.

 மறுநாள்  அதிகாலை அங்கிருந்து விடைபெற்று அகரமுதல்வன் வீட்டுக்கு சென்றேன். முழுநாளும் அங்கிருந்துவிட்டு அங்கிருந்து வெண்ணிலா வீடு. 3 நாட்கள் அங்கிருந்து விட்டு பெங்களூருக்கு வந்து சேர்ந்தேன்.

………

துடரும்!

பெங்களூரில் தருண் வீட்டில் இருக்கிறேன். 10 நாட்கள் இருப்பதாக உத்தேசம்.முந்தைய நாள் ஹிட் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் 3-ம் பாகம் பார்த்தோம் அதன் வன்முறைக்காட்சிகள் உண்டாக்கிய ஒவ்வாமை தீர இன்னும் நெடுநாட்களாகும். எந்தக் குறிக்கோளுமில்லாமல் கதைக்கும் தொடர்பு இல்லாமல் அல்லது கதையென்ற ஒன்றே இல்லாமல் ரத்தக்களறியாக ஒரு படம். அதன் முந்தைய 2 பாகங்களைப் பார்த்தவர்களுக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லை எனக்கு எரிச்சலாகவும் கோபமாகவும் இருந்தது. ரத்தம் நன்றாகத்தெரிய வெள்ளைவெளேரென்ற கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு நானி வரும் இறுதிக்காட்சிகளெல்லாம் எப்படி தணிக்கையில் தப்பித்ததென்றே தெரியவில்லை.

அதற்குப்பிழையீடாக நேற்று லாலேட்டனின் ’துடரும்’ பார்க்கசென்றொம். எளிய கதைக்கரு, அசாதாரணமான திரைக்கதை, திரைப்படத்தின் பெரும் பலமாக இசை, லாலேட்டனின் பிரமாதமான நடிப்பு எனப் பிரமிப்பாக இருந்தது.

டைட்டிலில் காட்டும் புகைப்படங்களிலிருந்து சாதாரணமாகத் தோன்றும் சின்ன சின்ன நிகழ்வுகளெல்லாம் இரண்டாம் பாகத்தில் இணைந்து குற்றமென்னும் ஒற்றைச்சரடில் கோர்க்கப்பட்டு நம் முன்னே விரிகையில் திகைப்பெழுகிறது.

அப்படி இருக்கும், இப்படி இருக்கும் காரில் சாய்ந்து நின்று போன் பேசிக்கொண்டிருக்கும் இளைஞனாயிருக்கும், வொர்க்‌ஷாப்பில் இருந்த மணியனாயிருக்கும் என்று நம்மை ஏதேதோ யூகிக்கவைத்து கொஞ்சமும் எதிர்பாராமல் மற்றொரு புதிய பரிமாணத்தைக்காட்டி கதை விரிவது மிரட்டலாக இருந்தது. இசை லாலேட்டனுக்கு இணையாகப் பங்களித்திருக்கிறது.

ஒரு காட்சியில் லாலேட்டனின் நிழல் ஜார்ஜின் நிழலுக்கு பின்னால் தோன்றி மெல்ல நெருங்கி வருகையில் இசை ’’சான்ஸே இல்லை’’ என்போமே அதுதான் அதேதான்.

லாலேட்டனை எனக்குப்பிடிக்கும் அவரது ஸ்டைல் குரல் எல்லாமாகத்தான். ஆனால் இதில் அவர் ஒரு கலைஞனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது அபாரமாக இருக்கிறது. எல்லாம் முடிந்த பின்னர் அந்த சலசலத்தோடும் ஆற்றில் தனது KL4455 கருப்பு அம்பாஸடர் காரை நிறுத்திவிட்டு தளர்ந்து அமரும் காட்சிவரையில் கொஞ்சமும் இறங்காமல் உச்சகட்ட உணர்வு நிலையில் சன்னதம் கொண்டும் பித்தேறியுமே இருக்கிறார்.

இடையிட்டையே காட்சிகளில் தோன்றி சாலையைக் கடந்துசெல்லும் கேரள நாடன் நிகழ்த்துகலைகளின் தெய்வவேடம் பூண்டவர்கள் லாலின் அபோதைய உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார்கள்.

காவல் நிலையத்தின் நிலவறையில் லாலைக்கொல்ல முயற்சி நடக்கையில் வேட்டியில்லாமல் ட்ரவுசரும் முழுக்கைச்சட்டையுமாக அவர் போடும் சண்டையை, நிதானமாக கருப்பு வேட்டியை எடுத்து இறுக்கிகட்டிக்கொண்டு சண்டையை தொடருவதையெல்லாம், புருவம் வரைந்து உதடுகளில் சிகப்பெழுதி உன்னத உடைகள் உடுத்தி அரசியல்வாதியாகும் கனவெல்லாம் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்கதாநாயகர்கள் பார்த்துப் படிக்கவேண்டும்.

ஷோபனாவும் லாலேட்டனும் இணைந்துநடிக்கும் 56 வது படம் இது என்றாலும் ஷோபனாவுக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. சொல்லப்போனால் லாலைத்தவிர யாருக்குமே இதில் வேலை இல்லை முழுப்படத்தையும் யானையைபோல தானே தாங்கிக்கொண்டிருக்கிறார் லால்.

எதற்கு ஒருசில காட்சிகளில் மட்டும் பாரதிராஜா, போன்ற ஒரு சில கேள்விகள்முதல் பாதியில் எழுந்தாலும் எல்லாவற்றையும் இரண்டாம்பாகம் கனெக்ட் செய்கிறது.

லாலின் மகளாக வரும் பெண் வாயில் பிரஷ் வைத்துக்கொண்டே பேசுவதும், அப்பாவின் சட்டைப்பாக்கெட்டிலிருந்து இயல்பாகப் பணம் எடுத்துக்கொள்ளுவதும், அடுப்படியில் அட்டகாசமாக உட்கார்ந்துகொண்டு கதைப்பதும் அப்படியே சாம்பவியை பார்ப்பதுபோல இருந்தது. அதே வயதில்தான் அந்தபெண்ணும் இருக்கிறாள்.

மனைவி மகள் காவல்நிலையத்தில் இருக்கையில் வழக்கமாக எல்லா மொழிகளிலும் எல்லாக்கதாநாயகர்களும் செய்வதுபோல ’’என் மனைவியை ஒன்னும் செஞ்சுறாதே’’ எனக் கெஞ்சும் வேலையெல்லாம் அறவே இல்லாமல் தான் நினைத்ததை செய்துமுடிக்கும் வரை வெறிகொண்டு இருக்கும் லாலேட்டனின் கதாபாத்திரம் வெகுசிறப்பு.

இறுதியில் கோர்ட் காட்சியில்தான் ஷோபனாவையும் மகளையும் பார்க்கையில் அவர் கண்களுக்கு அவர்கள் அடையாளமே தெரிகிறார்கள். அப்பா என்ன ஒரு நடிப்பு!

மேரியும் ஷோபனாவும் கட்டிக்கொண்டு கதறும் காட்சியில் அவர்களை லாலின் மகளும் கட்டிக்கொண்டு கதறுவாள். அந்தக்காட்சியின் உணர்வுவேகம் தாளாமல் தருண் சட்டென உடைந்து கண்ணீர் விட்டு அழுதான். அவன் அக்காட்சியில் மேரியாக, பவியாக, ஷோபனாவாக எல்லாருமாகவே இருந்திருந்திருப்பான்

யாரேனும் இன்னும் இந்தத்திரைப்படம் பார்க்கவில்லை என்றால் உடனே பார்த்து விடுதல் நலம். ஓடிடியில் வருமாயிருக்கும் ஆனால் அந்தக் காடும் மழையும் இடியும் மின்னலும் லாலேட்டனின் சிலைபோன்ற உடலை, உணர்வெழுச்சியை குறிப்பாக இசையை எல்லாம் பெரியதிரையில் பார்ப்பதுமட்டுமே இந்தப் படத்தின் உரியகாட்சி அனுபவத்தை நமக்குக் கொடுக்கும்.நான் மீளமீள இந்தத்திரைப்படத்தைப் பார்க்கவிருக்கிறேன்.

இந்தப்படத்தைப் போலத்தான் திரைப்படங்கள் இருக்கனும் இப்படிப்பட்ட படங்களைத்தான் பார்க்கவேண்டும் என்பதையெல்லாம் தாண்டி இந்தத் திரைப்படத்தில் ஏதேனும் ஒரு சிறு பங்காற்றி இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று எனக்கு ஏக்கமாக இருக்கிறது. வாழ்நாளில் பெரும் நிறைவடைந்திருப்பேன் அப்படிஏதேனும் செய்திருந்தால். திரைப்படக்குழுவினருக்கு ஒரு நல்ல தேநீராவது போட்டுக்கொடுத்திருக்கலாம் என்றெண்ணிக்கொண்டேன்

இதை தமிழில் மொழிமாற்றம் பண்ணாமலிருக்கட்டும் எண்ட குருவாயூரப்பா என்று மனதார பிரார்த்தித்துக்கொண்டேன். இந்தப்படத்தின் மொழி வழியே தெரியும் அசல் உணர்வுகளை கொல்லவேண்டி இருக்கும் மொழிமாற்றுகையில்.

நட்பான உடல்மொழியுடன் ஜார்ஜ் சொல்லும் ஹல்லோ நம்மை அப்படி எரிச்சலூட்டுகிறது. திரையரங்கில் பலர் உரக்க காதுகூசும் கெட்ட வார்த்தைகளில் ஜார்ஜையும் பென்னியையும் வசைபாடினார்கள். ஃப்ர்ஹான் ஃபாசிலை முதன் முதலாக திரையில் பார்க்கிறேன். அண்ணனுக்கும் தம்பிக்கும் பெரிதாக சாயல் ஒற்றுமை இல்லை. ஆனால் நன்றாகவே நடித்திருக்கிறார்

துடரும் படத்தைப்போல படம் எடுப்பது,லாலேட்டனைப்போல நடிக்க முயற்சிப்பது, துடரும் படத்தின் இசையைப்போல இசையைக் கொடுக்க முயல்வதெல்லாம் சாத்தியமே இல்லை தமிழ்ச் சினிமாத் துறையினருக்கு. எனினும் குறைந்தபட்சமாக சவப்பெட்டியின் மீதேறி நின்றபடியும், ரத்தவாடைகொண்ட கார் டிக்கிக்கருகே நின்றுகொண்டும் தொடர்ந்து குரைக்கும் அந்த நாய் கொடுக்கும் உணர்வெழுச்சியில் 100ல் ஒரு பங்கையாவது கொடுக்கும்படியான படங்களை எடுக்க முயற்சிக்கலாம் நமது ஆட்கள். லால் சலாம்!

கடுகில் மரபணு மாற்றம்!

DMH-11 கடுகு

நறுமணப் பொருட்களுக்கு பிரபலமான இந்திய  உணவுகளில் கடுகு மிக முக்கியமான காரச் சுவையூட்டி. பல வகைப்பட்ட கடுகுகள் இந்தியச் சமையலில் பயன்படுகின்றன. சுவையூட்டியாக மட்டுமல்லாது கடுகு பல சத்துக்கள் அடங்கிய, உடல் ஆரோக்கியத்துக்கும் உதவும் ஒரு பொருள். ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட கடுகின் உலகளாவிய பயன்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துள்ளது. 

முட்டைக்கோஸ் குடும்பமான பிரேசிகேசியை சேர்ந்த கடுகுச் செடியின் நீளமான பச்சைக்காய்களின் சிறிய உருண்டை விதைகளே கடுகு எனப்படுகின்றது. கடுகுச் செடியின் சத்துக்கள் நிறைந்த இலைகளும் கீரைகளாக உண்ணப்படுகின்றன. இவற்றில் சுமார் 40க்கும் மேற்பட்ட  வகைகள் இருந்தாலும் உலகெங்கும் மிக அதிகம் உபயோகத்தில் இருப்பவை வெண்கடுகு, பழுப்பு கடுகு மற்றும் கருங்கடுகு ஆகிய மூன்றும் தான்.

முழுவிதையாக, எண்ணெயாக, பொடியாக, அரைத்த விழுதாக என்று பல விதங்களில் சமையலில்  கடுகு உபயோகப்படுத்தப்படுகிறது 

பாவையர் கண்ணின் கடைக்கோடியை காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகு, கடுகு சிறுத்தாலும் காரம் போகாது  போன்ற முதுமொழிகளின் வழியாகவும், கடுகளவும் மலையளவும், கடுகு போலப் பொரிதல் போன்ற ஒப்புமை நோக்கல்கள் மூலமும் நம் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பில்  இருந்து வரும் கடுகு சமீபத்தில் சர்ச்சைக்குரிய பேசு பொருளாகி இருக்கிறது.

இந்தியாவின் இரண்டாவது முக்கிய எண்ணெய் பயிர் கடுகுதான் (நிலக்கடலைக்கு அடுத்ததாக). பெரும்பாலான இந்திய கடுகுப் பயிர்கள் வடஇந்தியாவில் பயிராகின்றன. கடுகின் நுண் விதைகளில் 45 சதவீதம் கடுகு எண்ணெய் அடங்கியிருக்கிறது.  இந்தியாவின் மொத்த கடுகு உற்பத்தியில் 60 சதவீதம் உத்தரபிரதேசத்தில் பயிராகின்றது. இந்தியாவில் மிக அதிகமாக பயிராகும் கடுகு வகைகள்:

1.      பழுப்பு கடுகு-Brassica juncea

2.      மஞ்சள்/வெண் கடுகு-Brassica alba

3.      கருங்கடுகு-Brassica nigra

இந்தியாவில் கடுகுப் பயிர் 87.44 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடியாகிறது.எனினும் இந்திய கடுகு உற்பத்தி 7 மில்லியன் டன்களாகத்தான் இருக்கிறது. இந்தியாவிற்கான உணவு எண்ணெய் தொடர்ந்து  வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது வருடா வருடம் இந்தியா 14.5 மில்லியன் டன்  உணவு எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக மட்டும் சுமார் 60 ஆயிரம் கோடிகளை செலவு செய்கிறது.

இந்தியக் கடுகு விவசாயிகளின் சவால்களாக தரமான கடுகு விதைகள் கிடைக்காதது, கடுகுப் பயிர்களின் பூச்சி, பூஞ்சை தாக்குதல்கள் மற்றும் களை ஆகியவை இருக்கின்றன.

எனினும் கடந்த ஐந்து வருடங்களில் கடுகு விவசாயிகள் புதிய விவசாய தொழில் நுட்பங்களை மேற்கொண்டதால் இந்தியக் கடுகு விளைச்சல் வெகுவாக அதிகரித்திருக்கிறது. புதிய விவசாயத் தொழில்நுட்பங்கள்  உணவுப்பயிர்களில் இது போன்ற சவால்ளைத் தீர்க்கப்  பெரிதும் உதவுகின்றன.   

1996 ல், Genetically Modified (GM) Crops  என்னும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 6 நாடுகளில் முதன்முதலாக வளர்க்கப்பட்டன. 2009ல் இப்பயிர்கள் 25 நாடுகளிலும் 2019 ல் 29 நாடுகளிலும் பயிராகின

மரபணு மாற்றப்பட்ட  மக்காச்சோளம், சோயாபீன், சோளம், உருளைக்கிழங்கு ஆப்பிள்,பப்பாளி, இளஞ்சிவப்பு அன்னாசி,பருத்தி ஆகியவை இந்நாடுகளில் பயிராகும் மரபணு மாற்றப் பயிர்கள் 

மரபணு மாற்றுப் பயிர்கள் என்பவை  டி.என்.ஏ வில் மரபணு பொறியியல் தொழில்நுட்பத்தின் மூலம் குறிப்பிட்ட,தேவையான மாற்றங்கள் உருவாக்கப்பட்ட பயிர்கள். அதாவது  ஒரு தாவரத்தில் இயற்கையாக இல்லாத ஒரு புதிய இயல்பை தொழில்நுட்பத்தின் உதவியுடன்  புகுத்துதல்தான் மரபணு மாற்றம்.உதாரணமாக தடித்த தோல் கொண்ட  சதைப்பற்றான தக்காளியை பெற அதில் உருளைக்கிழங்கின் மரபணுக்கள் கலக்கப்பட்டதை சொல்லலாம்.

இவ்வாறு உணவுப் பயிர்களும், உணவல்லாத பிற மருந்துப் பயிர்கள், உயிரி எரிபொருள் பயிர்கள் ஆகியவற்றில் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

 சோயா, தக்காளி, பருத்தி விதை போன்ற மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் 1990ல் சந்தைக்கு வர ஆரம்பித்தன. இவற்றின் மரபணு மாற்றப்பட்ட இயல்புகளாக  பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு, ஊட்டச்சத்து மற்றும் விளைச்சல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் உப்புத் தன்மையை தாங்கி பயிர் வளர்தல் போன்றவை கூறப்படுகின்றன.

இவற்றில்:

Transgenic பயிர்கள் என்பவை பிற இனங்களின் மரபணு புகுத்தப்பட்டவை.

Cisgenic பயிர்கள் அவற்றுடன் தொடர்புடைய அல்லது அதே இனத்தை சேர்ந்த பயிர்களின் மரபணுக்களை பெற்றவை.

Sub Genic  பயிர்கள் புதிய மரபணுக்கள் புகுத்தப்படாமல் அவற்றின் மரபுக்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்  மட்டும் செய்யப்பட்டவை

 அமெரிக்கா பிரேசில் கனடா ஆகியவற்றுடன் இந்தியாவும் மரபணு மாற்ற பயிராய்வில் ஈடுபட்டிருக்கிறது.கடந்த 23 வருடங்களில் சுமர் 17 மில்லியன் விவசாயிகள் வளர்ந்த நாடுகளின் மரபணு மாற்றம் உள்ளிட்ட பல உயிரி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பயிர் விளைச்சலை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட, 2002ல் வணிகரீதியாக சாகுபடியும் செய்யப்பட்ட பயிர் Bt பருத்தி. இது   அமெரிக்க நிறுவனமான   Monsanto வுடன் இணைந்து மகாராஷ்டிரா கலப்புயிர் விதை நிறுவனத்தினால் ( MAHYCO) உருவாக்கப்பட்ட்து.

இந்தியாவில் மரபணு மாற்று சோதனைகள் முடிந்து, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு பிரிவான மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee -GEAC) வின் அனுமதி பெற்று வணிக ரீதியான பயன்பாட்டிற்கான அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருந்த மூன்று பயிர்கள் கத்தரிக்காய், கடுகு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை. 

கத்தரிக்காயின் சோதனை சாகுபடிக்கு மேலதிகச் சோதனைகள் தேவைப்படுவதாக பரிந்துரைகளும் செய்யப்பட்டு அப்போதைய வேளாண் அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. GEAC 2009ல் கத்தரிக்காயின் சோதனைகள் முடிவடைந்துவிட்டதாக தெரிவித்தன எனினும் மரபணு மாற்றப் பயிர்களை சாகுபடி செய்வதை எதிர்க்கும் அமைப்புகளின் போராட்டத்தினால், கத்தரிக்காய் சோதனைச் சாகுபடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்புகள் உணவுப்பயிர்களில் உருவாக்கப்படும்  மரபணு மாற்றங்கள் மனித உடலிலும் ஆதிக்கம் செலுத்துமென்பதால்  தொடர்ந்து  அத்தகைய சோதனைகளை ஆட்சேபித்து வருகின்றன. கடுகுப் பயிரின் மரபணு மாற்றத்துக்கான கலப்புயிரி உருவாக்க சோதனைகளும் ஆராய்சிகளும் பல ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வருகின்றன. 

DMH-11கடுகு

 இந்நிலையில் கடந்த அக்டோபர் 18,  2022ல்  மரபணு மாற்றபட்ட கடுகு வகையான் DMH-11 என்பதை வணிக ரீதியாக  சாகுபடி செய்வதற்கான சோதனைகளை செய்யலாம் என்று GEAC அனுமதி அளித்திருப்பதுதான் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது.  சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்புக்களில் இந்த கடுகினால் உண்டாகும் விளைவுகள், தேனீ உள்ளிட்ட பிற மகரந்த சேர்க்கை நடத்தும் பூச்சி இனங்களுக்கு  மரபணு மாற்றப்பட்ட கடுகுப்பயிரினால்  உண்டாகும் மாற்றங்களை சோதனை  சாகுபடி செய்து அறிந்துகொள்ளலாம் என்றும் GEAC பரிந்துரைத்திருந்தது.  .இதற்கு அனுமதி  அளிக்கப்பட்டு இக்கடுகு சந்தைப்படுத்தப்பட்டால், இதுவே இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிராக இருக்கும்.

Dhara Mustard Hybrid-11,  எனப்படும்  DMH – 11 கடுகு டெல்லி பல்கலைக்கழகத்தின்  பயிர்த்தாவரங்களின் மரபணு கையாளுதல் மையத்தில் (CGMCP) உருவாக்கப்பட்டது. டெல்லி பல்கலைக்கழக மரபியல் பேராசிரியரும் துணைவேந்தருமான தீபக் பெண்டால் ( Deepak Pental) தலைமையேற்று வழிநடத்திய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.    இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகின் வெற்றிகரமான உருவாக்கத்துக்கு 14 நீண்ட  வருடங்களும் 700 மில்லியனும் செலவாகி இருக்கிறது.

2002ல் நிலத்தில் வாழும், நோயுருவாக்காத பாக்டீரியாவிலிருந்து  மரபணுவை பிரித்து இந்த கடுகில் புகுத்தி புதிய வகை கடுகு உருவாக்கப்படும் ஆய்வுகள் துவங்கின.

ஒரு புதிய கலப்பின கடுகு வகை, வருணா  மற்றும் Early Heera-2 ஆகிய இருவகை கடுகுகளை கலப்பினம் செய்து உண்டாக்கப்பட்டது.Bacillus amyloliquefaciens என்னும் பாக்டீரியாவிலிருந்து  Bar, Barnase , Barstar ஆகிய மரபணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு இந்தக் கடுகில் புகுத்தப்பட்டு மரபணு மாற்றப்பட்ட DMH – 11 கடுகு உருவாக்கபட்டிருக்கிறது. 

Barnase மரபணு ஆண் மலட்டுத்தன்மையை கடுகில் உருவாக்குகிறது ஆனல் Barstar மரபணு கடுகின்  வளமிக்க விதைகளை உருவாக்கும் திறனை தக்கவைக்கிறது, Bar மரபணு கடுகுப்பயிருக்கு களைக்கொல்லி (glufosinate-ammonium tolerance) சகிப்புத் தன்மையை அளிக்கிறது. 

புதிய மரபணுக்கள் கடுகுப்பயிரில் மகரந்த சேர்க்கை மற்றும் கருவுருதலில் ஆதிக்கம் செலுத்தி மகசூலை அதிகப்படுத்தும் திறன் கொண்டவை என சொல்லப்படுகின்றது.  ஆய்வகச் சோதனைகள் இந்த புதிய வகை கடுகு 19 லிருந்து 30 சதவீதம்  அதிக மகசூல் அளிப்பதாக தெரிவிக்கின்றன.

இதனால் உண்டாகும் சூழல் சீர்கேடு மற்றும் மனிதர்களுக்கான  ஆரோக்கிய கேடுகள் குறித்து இப்போது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன   

இந்தியாவின் முக்கிய உயிரி தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த புதிய கடுகு வகை மிகத்தேவயான ஒன்று, பருவநிலை மாற்றங்களினால் உணவுப் பற்றாக்குறை உண்டாகி இருக்கும் இச்சமயத்தில் இதுபோன்ற வரவுகள் உண்மையில் அத்தியாவசியமானவை என்கிறார்கள். 

இது வெற்றிகரமாக நடந்தால் பல புதிய மரபணு மாற்ற பயிர்கள் உருவாக இது வழிவகுக்கும் என்பதால் பல ஆய்வாளர்கள் இதை வரவேற்கிறார்கள். 

’’மரபணு மாற்றுப் பயிர்கள் இல்லா இந்தியா’’ போன்ற எதிர்ப்பமைப்புக்களோ இக்கடுகு இன்னும் பலகட்டச் சோதனைகளை கடந்த பின்னரே சூழலுக்கு அறிமுகமாக வேண்டும் என எச்சரிக்கிறார்கள். இப்போது  நடத்தப்பட்ட சோதனைகளின் போதாமையை சுட்டிகாட்டும் இவர்கள் இக்கடுகு இப்போது சூழலில் அறிமுகமானால் பெரும் சூழல் சீர்கேடு உண்டாகும் என தெரிவிக்கிறார்கள்.

 மரபணு மாற்றப் பயிர்களை எதிர்க்கும் அமைப்புக்களினால் உச்ச நீதிமன்ற அனுமதியை காத்திருக்கும் இந்த கடுகுச் சோதனைச் சாகுபடி பெரும் சர்ச்சைக்குரியதாயிருக்கிறது  நவம்பர் மாதத்திலிருந்து இது தொடர்பான விசாரணைகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

உச்ச நீதிமன்றம் அனுமதித்தாலும் பலகட்ட சோதனைகளை இன்னும் கடந்த பின்னரே விவசாயிகளுக்கு DMH – 11 கடுகுப்பயிர்  விதைகள் அளிக்கப்படும் என்றாலும், இயற்கையான சூழலில் நடைபெறவிருக்கும்  இந்த சோதனைகளுக்கு இப்போது கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. GEAC தனது அக்டோபர் அறிக்கையிலேயே இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகில் தீங்கு விளைவிக்கும் தன்மைகள் உள்ளதாக ஆதாரங்கள்  இருப்பின் இந்த ஒப்புதல் ரத்து செய்யப்படும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது

நீதிமன்றம் இன்னும் சிலமாதங்கள் தொடரும் விசாரணைக்கு பின்னர் தான் தீர்ப்பை அறிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள். ஆனால்  எதிர்ப்பமைப்புக்கள் முன்னரே கையிலிருக்கும்  ஆய்வு  முடிவுகளின் அடிப்படையில் தீர்ப்பளிக்காமல் குரங்குகள் உள்ளிட்ட சில விலங்குகளில் DMH – 11 கடுகு எண்ணெயை கொண்டு  சோதனை நடத்தி அந்த ஆய்வு முடிவுகளின் பேரில்தான் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் அதற்கு மேலும் ஐந்தாண்டுகளாவது அவகாசம் தேவைப்படும் என்கின்றன. 

ஏற்கனவே GEAC யிடம்  2017ல் இதே கடுகை வெளியிட அனுமதி கோரிய பயிர்த்தாவரங்களின் மரபணு கையாளுதல் மையத்தினர், பின்னர் எதிர்ப்பாளர்களின் குரலுக்கு செவி மடுத்து தேனீக்களிலும்  மகரந்த சேர்க்கை நடத்தும் மற்ற பூச்சி இனங்கள் மற்றும் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகளில்  நடத்தவேண்டிய சோதனைகளுக்கு அவகாசம் கேட்டு  அவர்களே  அதை நிறுத்தினார்கள். 

2015லிருந்து  DMH – 11 கடுகில் நடத்தப்பட்ட சூழல் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு ஆகிவற்றிற்கான பலகட்ட சோதனைகளின் முடிவுகள் திருப்திகரமாக இருந்தன என்று சொல்லப்பட்டாலும், களைக்கொல்லி மரபணு மாற்றத்துக்கான சோதனைகளின் முடிவுகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை

இந்த சோதனைகளின் அனைத்து முடிவுகளையும் விண்ணப்பத்தின் பேரில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் யாரும் காணமுடியும் என்னும் வசதியும் உள்ளது

 இந்த DMH – 11 கடுகு பயிருக்கு குறைந்த அளவே தண்ணீரும், உரமும் களைக்கொல்லிகளும் தேவைப்படும் என்பதால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என்றும் உருவாக்கியவர்களின் தரப்பில் கூறப்படுகிறது

 எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வரும் Alliance for Sustainable and Holistic Agriculture அமைப்பு இந்த ஒப்புதலில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்  பல சோதனைகள்  முழுமையடையவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறது

 ஏற்கனவே பல எதிர்ப்புக்களிடையேயும் அறிமுகமாகி தோல்வியடைந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தியையும், அதன் நஷ்டங்களால் நடைபெற்ற கணக்கற்ற  விவசாயிகளின் தற்கொலைகளும் இந்த எதிர்ப்பாளர்களால் சுட்டிகாட்டப்படுகிறது. மேலும் இது சாகுபடி செய்யப்படுகையில் இந்தியக்கடுகின் தூய மரபணுக்கள் கலப்படமாகிவிடும் அபாயமும் உள்ளது என்கிறார்கள்.

இக்கடுகின் மற்றொரு அபாயமாக சொல்லப்படுவது இதன் களைக்கொல்லி (glufosinate-ammonium tolerance ) சகிப்புத்தன்மை. இதனால் விவசாயிகள் பல மடங்கு அதிகம் களைக்கொல்லி ரசாயனங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என எச்சரிக்கப்படுகிறது. 

இதன்  பல பரிசோதனைகளில்  மகசூல் அதிகரிப்பு இருப்பதாக முடிவுகள் காட்டினாலும் சில பரிசோதனைகளில் கடுகின் அளவும் காய்களின் நீளமும் கணிசமாக குறைந்திருந்தன. மகசூலுக்கு இவ்விரண்டும் மிக முக்கியமான காரணிகள்.

மிக அதிக விதை விலையும் குறைந்த மகசூலும் மீண்டும் ஏற்படுமானால் மீண்டும் பருத்தி தற்கொலைகளைப் போல கடுகு தற்கொலைகளும் நிகழலாம் என்னும் அபாயம்  போராடும் அமைப்பினரால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

உணவு ஒவ்வாமைக்கான சோதனைகளில் இந்த கடுகில் இருக்கும்  Bar, Barnase மற்றும் Bastar proteins புரதங்களின் ஒவ்வாமை குறித்த ஒப்புமை ஆய்வு நடத்தப்பட்டதில் இவற்றால் எந்த ஒவ்வாமையும் உண்டாவதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும் மனிதர்களின் நோய் எதிர்ப்பு திறன் தொடர்பான மேலதிக ஆய்வுகள் இதில் நடத்தப்படவேண்டி இருக்கிறது.

இந்த கடுகை எதிர்ப்பவர்கள் முக்கியமாக சுட்டிக்காட்டுவது மரபணு மாற்றப்பட்ட கடுகு மண்ணிலும் சூழலிலும் மகரந்த சேர்க்கையிலும் உண்டாக்கவிருக்கும் மிக ஆபத்தான விளைவுகளைத்தான், 

இது நடைமுறைப்படுத்தப்பட்டால் மீட்டெடுக்கவெ முடியாத சூழல் சீர்கேடுகள் உருவகும் என்பதே மரபணுப்பயிர்களை எதிர்க்கும் அமைப்பினரின் ஆணித்தரமான வாதம்.   

மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு இந்த கடுகை வணிக ரீதியாக சாகுபடி செய்வதற்கு முன்னரான சோதனைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த கடுகை உருவாக்கியவர்களே அனுமதியளிக்கும் குழுவில் உறுப்பினர்களாக இருப்பது தான் சர்ச்சைகளின் அடிப்படையாக இருக்கிறது.

இப்போது இந்த சோதனை முயற்சியை உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகின் சாகுபடியினால் தேனீக்களுக்கும் மற்ற  பூச்சி இனங்களுக்கும் உண்டாகும் தாக்கம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட் டுள்ளது.

இதன் ஆதரவாளர்களும் இதை உருவாக்கிய குழுவினரும் இந்த கடுகினால் அதிக கடுகு விளைச்சல், குறைந்த உணவு உற்பத்திக்கான முதலீடு, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைதல் அகியவற்றை தெரிவிக்கின்றனர்

இக்கடுகை எதிர்ப்பவர்கள் இதன் களைக்கொல்லி சகிக்கும் இயல்பினால் உண்டாககூடிய உயிரியல் மற்றும் சூழலியல் அபாயங்களையும் இப்பயிர் மண்னிற்கு உண்டாக்கும் தீங்குகளையும்   நடத்தபட்ட ஆய்வுகளில் இருக்கும் நிரப்பப்படாத இடைவெளிகளையும் முன்வைக்கின்றனர்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான புதிய சந்தையையும்,அதன் காப்புரிமையை குறிவைக்கும் அமைப்புக்களும் மேலும் ஆபத்தை விளைவிப்பார்கள் எனவும் இத்தரப்பு கூறுகிறது இந்த கடுகு சாகுபடி சோதனைகளுக்கு உச்சநீதிமன்றம்  தடை விதிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் எதிர்ப்பமைப்புக்கள் தெரிவித்திருக்கின்றன.’

2011ல் வெளியான உயிரி தொழில் நுட்ப விதைகளால் நிகழ்ந்த இந்திய விவசாயிகளின் தற்கொலையை பேசும் Bitter Seeds எனும்  பிரபல ஆவணப்படம் இந்தியாவில் மரபணு பயிர்களின் விளைவுகளை விளக்குகிறது. பல சூழலியலாளர்கள் இந்த ஆவணப்படம் அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று என்று பரிந்துரைக்கிறார்கள்.  

விரைவில்  இதற்கான தீர்ப்பை அளிக்கவிருக்கும் உச்சநீதிமன்றத்துக்கு   இந்திய  தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau of India) 1995 லிருந்து 2006 வரையிலான 12 வருடங்களில் மட்டும் சுமார் 200,000 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்னும் ஆதாரத்தைக்  காட்டியதும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

மாற்றங்கள் தேவைதான் என்றாலும், தங்க ஊசியென்பதால் கண்ணைக் குத்திக்கொள்ள முடியாது. வேலியே கடுகுப்பயிர்களை மேயுமா அல்லது உணவுப்பயிர்களின் விளைச்சலை மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் அதிகரித்து உணவுப்பாதுகாப்புக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

***

மேலதிகத் தகவல்களுக்கு:

Seed balls!

Seed balls represent an innovative approach to natural reforestation and habitat restoration, combining traditional wisdom with modern ecological understanding. These compact spheres contain everything needed for successful plant growth, packaged in a protective clay coating that ensures optimal germination conditions.

What Are Seed Balls?

Seed balls (also referred to as ‘seed pellets’ or ‘seed bombs, nendo dango in Japanese’) are structures typically made of clay, compost, water and seed (but can include a huge range of ingredients including soil, rock dust, cat litter, coffee grounds, cayenne pepper, sand, worm castings and mycorrhizal fungi). A seed ball is a seed that has been wrapped in soil materials, usually a mixture of clay and compost, and then dried. 

These structures can ameliorate conditions that contribute to failure in arid land restoration , including dry conditions that exacerbate seed desiccation stress and create soil crusts that limit seedling establishment, as well as seed loss via predation (typically by rodents and ants).

Seed balls also serve to enhance seed to soil contact and reduce seed redistribution by wind. In theory, seeds are protected in the structure until adequate rainfall removes the surrounding clay and a small pocket of nutrients from the compost component of the seed ball nourishes the seedlings as they emerge. Seed balls are cheap and easy to make and can enhance germination of seeded species.

A seed ball consists of three primary components carefully combined to create a self-contained planting system:

  1. Seeds (preferably native species)
  2. Clay (as a protective barrier)
  3. Compost (for nutrient supply) 

Essentially, the seed is ‘pre-planted’ and can be sown by depositing the seed ball anywhere suitable for the species, keeping the seed safely until the proper germination window arises. Seed balls are an easy and sustainable way to cultivate plants in a way that provides a larger window of time when the sowing can occur. They also are a convenient dispersal mechanism for guerrilla gardeners and people with achy backs.

Seed Balls vs Seed Bombs?

The only substantial difference is what you call them. “Bomb” sounds more subversive, and so it’s gaining popularity among gardeners. When properly made, the seed ball or bomb will have enough seed to ensure germination, but not so many seeds that the plants will choke each other. Since the idea is to grow healthy plants, we should use enough seed to ensure good likelihood of germination, but not so many that the seedlings are stressed from crowding and fail to thrive.  

Historical Significance

 The seed balls are primarily used and invented by Egyptians. The reason behind this invention would be the safety measure taken for the welfare of seeds and farming after any natural calamity that effects the farming lands or farms. Nile flooding is more common in Egypt as it also erodes the farm lands and it was a major worrisome factor for Egyptians. As a matter of fact, they developed the methodology of creating seed balls to safeguard their farming from flooding.

Though the originated land is Egypt, seed balls are also commonly used in Asian countries. More closely, Japanese farmers are the second massive users of seed balls. It is said that Japanese have re-invented the seed balls after the Egyptian dynasty.

In 1700, the West African slave women of Carolinas used seed balls. They were commanded to cultivate rice using the seed balls. These rice seed balls have been made with a rice seed, red clay and soil composite.  Rice seeds were coated in clay, dried, and pressed into the mud flats with the heel of the foot. This served two purposes, protecting the seed from the birds, and also preventing it from floating off when the fields were flooded.  

 They mainly prepared to safeguard the rice seeds from insects and birds even from the flooding. This method helped in rice cultivation and improved the rice seed’s security. Ancient people found this technique as a successful one.

Masanobu Fukuoka, founder of Japanese natural farming promoted seed balls in his 1975 book the one straw revolution. fukuoka used seed balls also known as seed dumplings to sow in his farm without cultivating them first.

Today, seed balls are fun for green-minded kids and adults,  and are also an important tool of the gardening movement.

Seed ball making

Materials to Collect

  • Soil/compost mix 
  • Red clay (primary component)
  • Seeds (typically native species)
  • Water
  • Compost/humus
  • Optional additives (cotton fibers or paper for extra protection) 
  • A tray to work on

Proportions and Size

  • Mix approximately 5 parts clay to 1part seeds
  • Form balls between 10mm and 80mm in diameter
  • 24-48 hours drying time 

Method

  1. Chop the clay up into small pieces to make it easier to work with
  2. Mix the clay, the soil/compost mix, and the seeds together. A 1:1 clay to soil/compost ratio works pretty well we have found, but play around with different ratios! You want your mixture to be able to hold together in a ball-shape, but still be loose and crumbly enough to break apart when it has been dispersed. Add some water if your mixture is too dry and crumbly. 
  3. Form small balls of your mixture and lay them out on your tray. 
  4. Allow the seed balls to dry.
  5. Go on an adventure and disperse your seed balls! If you want to give your seeds the best chance, find a bare patch of ground to place them. You can also throw the seedballs, or create patterns with them on the ground!

  1. Clay coating

The clay coating in seed balls serves as a sophisticated natural protection system that plays multiple crucial roles in ensuring seed survival and successful germination

Primary Protective Functions:

Physical Barrier

  • Creates a hardened shell around the seed  
  • Acts as armor against mechanical damage
  • Protects against erosion forces
  • Shields seeds from physical abrasion
  • Environmental Shield
  • Regulates moisture penetration
  • Controls temperature fluctuations
  • Blocks harmful UV radiation
  • Prevents premature germination triggers
  • Advanced Protection Mechanisms
  • Moisture Management System
  • Gradually releases moisture as needed  
  • Prevents seed rot from excessive water
  • Maintains optimal humidity levels
  • Ensures controlled hydration during germination
  • Thermal Regulation
  • Insulates seeds from extreme temperatures
  • Creates stable microenvironment
  • Delays germination until optimal conditions
  • Helps synchronize growth with seasonal patterns

Scientific Composition

  • The effectiveness of the clay coating comes from its precise formulation:
  • Combines mineral soil with specialized compost mixtures  
  • Includes multiple types of compost for balanced nutrition
  • Creates optimal pH balance for seed development
  • Provides sustained nutrient release during early growth

Practical Benefits

  • Extended Viability
  • Allows flexible planting schedules
  • Enables storage until ideal conditions
  • Maintains seed health during dormancy
  • Reduces immediate germination pressure
  • Natural Timing Control
  • Breaks dormancy naturally with rainfall.
  • Coordinates growth with environmental cues
  • Prevents premature sprouting
  • Ensures synchronized emergence

The clay coating creates a significant transformation in both the size and weight of the original seeds, effectively turning tiny seeds into compact, protected packages. Let me break down these changes precisely.

Size Transformation

  • The clay coating dramatically increases the dimensions of the original seed:
  • Final diameter ranges from 10mm to 80mm.
  • Typically becomes 20-40 times larger than the original seed
  • Creates uniform spheres regardless of irregular seed shapes
  • Produces consistent handling size for distribution

Weight Impact

  • The clay coating adds substantial mass to the original seed:
  • Uses approximately 5 parts clay to 1 part seeds.
  • Increases total weight by roughly 400-500%
  • Adds protective bulk while maintaining portability
  • Creates manageable units for handling and distribution 

Seed Ball Anatomy

Seeds are scarified if necessary prior to placing in the seed ball. Depending on the size and requirements of the plants, seeds are either mixed in with the soil before the seed balls are made or placed individually within the moist seed ball. The seed balls are then air-dried, providing a safe haven for its contents until germination.

Seed balls are packaged in a small recyclable brown paper bag. Nothing fancy, nothing that leaves an unnecessary footprint.

Pressed gently on the soil, about 2/3 of the way down.  

Optimal Growing Conditions

Moisture Requirements

Consistent rainfall or irrigation

Well-draining soil to prevent waterlogging

Moderate humidity levels

Regular moisture availability during germination phase .

Temperature Parameters

Species-appropriate temperature ranges

Stable diurnal cycles

Absence of extreme thermal fluctuations

Seasonal synchronization with native growth patterns

Seed Germination 

Key Factors Influencing Germination Time

  • Environmental Conditions
  • Moisture levels – consistent rainfall or watering is essential climatekids.nasa.gov
  • Temperature variations
  • Seasonal timing
  • Soil quality at planting location

While exact germination times vary by species and conditions, the seed ball method is designed to provide natural protection and flexibility in planting schedules. Success rates improve significantly when environmental conditions match the native requirements of the chosen plant species.

Best Practices for Optimal Results

Timing Considerations: Plant during the appropriate growing season for your region

Ensure consistent moisture availability

Monitor temperature ranges suitable for your chosen species

Storage Guidelines

Keep seed balls dry if planting is delayed

Maintain room temperature storage

Protect from direct sunlight and moisture exposure

Best Practices For successful implementation:

  • Choose appropriate locations avoiding private property and sensitive ecosystems
  • Select native species adapted to local conditions
  • Avoid overcrowding to ensure healthy plant development
  • Consider seasonal timing for optimal germination rates 

Practical Applications

  • Seed balls serve multiple purposes in modern environmental conservation:
  • Urban Renewal: Used extensively in gardening initiatives to beautify neglected spaces
  • Wildlife Support: Provides habitat restoration opportunities
  • Educational Tool: Engages communities in environmental stewardship
  • Conservation Method: Helps maintain biodiversity through strategic planting

Environmental Significance

The importance of seed balls extends beyond simple gardening:

  • Native Species Preservation: Promotes the growth of indigenous plants that naturally belong in local ecosystems 
  • Ecosystem Balance: Helps counteract the effects of non-native species invasion
  • Carbon Sequestration: Contributes to greenhouse gas reduction through increased plant growth
  • Natural Protection: Safeguards seeds from predators and adverse conditions until optimal growing conditions arise 

This ancient technique continues to evolve as a powerful tool for environmental restoration and community engagement, combining traditional wisdom with modern sustainability goals.

This dramatic transformation from tiny seed to substantial seed ball represents a remarkable adaptation of ancient technology, combining natural materials with practical functionality to ensure successful plant establishment.

Seed balls perform optimally under specific environmental conditions and face challenges in others. Understanding these conditions is crucial for successful implementation.

Challenging Environments

Adverse Conditions

Prolonged drought periods

Extreme temperature fluctuations

Poor soil quality

High winds causing displacement

Excessive rainfall leading to waterlogging

Sensitive Periods

Initial germination phase requires careful monitoring

Young seedlings need protection from extremes

Establishment period demands consistent conditions

Vulnerable to sudden environmental shifts

Best Practices for Challenging Environments

Before Planting :

  • Conduct thorough site assessment
  • Test soil conditions
  • Evaluate local microclimate
  • Choose appropriate species for conditions
  • During Establishment
  • Monitor moisture levels closely
  • Provide supplemental care when needed
  • Protect from extreme weather events
  • Maintain consistent conditions during critical growth phases

Long-term Maintenance

  • Regular assessment of environmental impacts
  • Adjust strategies based on performance
  • Document successful approaches for future reference
  • Share knowledge with other practitioners

Recent developments

Recent developments in seed ball technology reflect ongoing innovation in addressing environmental challenges. Here’s a comprehensive overview of current advances and adaptations:

Enhanced Materials and Coatings
Advanced Clay Formulations
Integration of specialized mineral soil compositions
Enhanced moisture retention properties
Improved thermal regulation capabilities
Protective Additives
Strategic incorporation of cotton fibers
Implementation of liquefied paper reinforcement
Customized coating thickness optimization
Species-specific formulation adaptations
Climate-Specific Adaptations
Drought Resistance Solutions
Enhanced moisture retention systems
Improved clay matrix formulations
Strategic timing optimization
Species selection for water-stressed conditions.
Temperature Management
Thermal regulation improvements
Seasonal adaptation strategies
Microclimate creation techniques
Climate-appropriate species matching
Sustainable Innovations
Eco-Friendly Materials
Recyclable packaging solutions
Minimal environmental footprint
Natural decomposition properties
Locally sourced materials integration .
Distribution Improvements
Precise placement methodologies
Targeted dispersal techniques
Efficient coverage patterns
Reduced waste protocols.

 Scientific Benefits

  • Seed balls address several critical challenges in arid landscape restoration  
  • Protection Against Desiccation
  • Prevents seed drying out
  • Maintains optimal moisture levels
  • Reduces stress on emerging seedlings
  • Predator Prevention
  • Protects seeds from rodents and ants
  • Ensures higher germination success rates
  • Maintains seed placement integrity
  • Enhanced Soil Contact
  • Improves seed-to-soil interface
  • Reduces wind dispersal
  • Creates localized nutrient pockets

Ecological Impact

  • Seed balls serve multiple ecological purposes 
  • Pollinator Support
  • Promotes native flower growth
  • Provides food sources for pollinators
  • Supports local insect populations
  • Habitat Restoration
  • Enables natural regeneration
  • Works with existing ecosystems
  • Requires minimal maintenance

Seed balls in urban environments

Seed balls can indeed be effective in urban environments, though their implementation requires careful consideration of specific urban challenges and opportunities. Let me break down their effectiveness across different settings

Urban Implementation Success Factors

Protected Areas
Community gardens
Park perimeters
Green spaces along waterways
Abandoned lots (with permission)
Vertical Spaces
Green roofs
Wall planters
Balcony gardens
Window boxes
Rural Implementation Success Factors
Natural Areas
Forest edges
Wildlife corridors
Stream banks
Abandoned agricultural land
Restoration Zones
Erosion control areas
Wildlife habitat restoration
Native species reintroduction sites
Buffer zones around protected areas
Urban Challenges and Solutions
Environmental Factors
Higher temperatures
Urban heat island effects
Variable soil quality
Limited space
Human Impact
Foot traffic
Maintenance activities
Pet disturbance
Litter accumulation
Rural Advantages
Natural Conditions
Better soil quality
More consistent moisture
Less human interference
Existing wildlife support
Space Availability
Larger areas for dispersal
Fewer restrictions
Natural seed dispersal patterns
Better ecosystem integration

What is the Science? 

The compost in the seed balls give the emerging seedlings some nutrients to help get them started on their journey. The clay’s job is to hold the seed balls together long enough to be dispersed. The clay will break down in the rain and allow the seeds and compost to spread out over and into the ground. 

The reason that we encourage native flower seeds in your seed balls is because native flowers feed and support our native insects – many of whom are important pollinators or food web members. Insects are not able to feed from every single flower in the world, many have a small amount of flowers they can feed from or raise their young on. Some insects are only able to feed from one type of flower! Planting native flowers gives these important pollinators a feeding station to help them through the year. 

Successful seed ball implementation in urban environments requires patience and thorough assessment. While some areas may initially seem unsuitable, creative solutions such as vertical installations or container gardens might still make seed ball projects viable in challenging urban spaces.

Conclusion

Seed balls can be highly effective in both urban and rural environments when properly implemented. Urban areas require more careful planning and protection measures, while rural settings often benefit from natural conditions. Success depends primarily on choosing appropriate locations and understanding local challenges rather than the environment type itself. 

Seed  balls- in a nutshell

A seed ball (or plant seed bomb) is a plant seed which has been pre-planted in a small round lump of soil materials, mainly a mixture of clay and compost along with other necessary nutrients, and the entire ball containing the seed is then dried.

The seed ball is a mini soil pocket which contains the seed and all other necessary ingredients for the seed’s survival in the same pocket. This enables the seed to germinate for a few days initially and then be produced when the conditions are right.

Each seed is pre-planted and is generally sown by depositing the seed ball anywhere where it is suitable for the plant species. This keeps the seed safe from birds and other animals till the right moment for germination.

Seed balls are an easy and sustainable method to achieve plant cultivation as it provides a large window of time when during the time period of the sowing.

A seed ball is easy to transport and easy to plant.

Seed balls are also a type of nature-based solution. The materials for making seed balls – seeds, soil, and humus– are simple, affordable, and locally available.  Seed balls, are a mechanism for seed encapsulation and dispersal increasingly being used in the context of ecological restoration. For seed balls to achieve their desired effect they need to be stable enough to facilitate handling but then be able to uptake water to allow for seed imbibition. 

Tips

Don’t sow in others’ gardens or crops.

Never plant invasive species.  

Don’t put too many seeds

Don’t disturb pristine or vulnerable ecosystems with non-native species.

And… don’t throw seed balls at siblings or animals (or people, vehicles, buildings, etc.).

References:

https://seed-balls.com/?srsltid=AfmBOoq9ZXHAxqaS1zKKvEzrl26pgjREz7X-3vanHrW7yr5HMiIbsVt1

https://igsss.org/seed-balls-promoting-biodiversity/#:~:text=It%20is%20made%20of%20clay,time%20in%20a%20shady%20place.

https://www.tandfonline.com/doi/full/10.1080/0028825X.2025.2463505

https://www.researchgate.net/publication/366204175_Seed_Ball_Campaign_An_Effective_Implementation_Tool_against_Global_Warming_and_Deforestation

https://seedballs.in/blogs/news/history-of-seed-balls?srsltid=AfmBOooVdcDakjjXX_oKpnFH5_3aKEFHBl32Hsy4_7jPV0a4y_lJ2kxs

https://www.researchgate.net/publication/361129763_Future_Perspective_of_Seed_Ball_Technology_For_Creating_New_Ecosystem

அழிந்துகொண்டிருக்கும் அடிப்படை அறிவியல் துறைகள்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகவே சமூக ஊடகங்கள் அனைத்தும் NEET மற்றும் JEE நுழைவுத்தேர்வுகள் குறித்தே பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. பெற்றோர்களில் 99 சதவீதத்தினரும் இவை இரண்டைத்தவிர உலகில் தங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்ளவும் பொருளியல் ரீதியாக வெற்றியடையவும் வேறு வழியே இல்லை என்று மூர்க்கமாக நம்புகிறார்கள்.

இனி அப்படி முழுக்க முழுக்க பொறியியலாளர்களும் கணினி மேதைகளும் மருத்துவர்களும் மட்டுமே நிறைந்திருக்கும் பொன்னுலகு ஒன்று வரப்போகிறதா என்ன? நிச்சயமாக இல்லை . எல்லா விதத்திலும் உலகின் சமநிலையைக் குறைக்க நம்மால் ஆனதை செய்துகொண்டே இருக்கிறோம்.

வானொலிகளில் அனைத்து எஃப் எம் சேனல்களிலும் பள்ளிக்கூடங்கள் குறித்த விளம்பரங்களில் JEE NEET க்கான சிறப்புப்பயிற்ச்சி அளிக்கும் பள்ளிகள், 8-ம் வகுப்பிலிருந்தே IIT க்கு தயாராக்கும் பள்ளிகள், போதாக்குறைக்கு ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி வளாகமும் விடுதிகளும் இருக்கும் பள்ளிகளை விளம்பரப்படுதுகிறார்கள்.

 அந்தப்பள்ளிகளை விரும்பித்தேர்ந்தெடுக்கும் முட்டாள் பெற்றோர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். எதிர்பாலினத்தவரைக் குறித்த அறிதலே இல்லாமல் பிள்ளைகள் வளர்வது அவர்களின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்ற சிறு அறிதல் கூட இல்லாத அவர்களை நினைத்து கவலைப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. தென்தமிழகத்தின் பிரபல பள்ளி ஒன்றில்படித்த என் நண்பரின் மகன் மாணவிகளின் தனித்த வளாகத்தில் அவர்கள் மைதானத்தில் விளையாடுவதை திரும்பிப்பார்த்ததற்காக மணிக்கணக்காக வெயிலில் முட்டி போடவைக்கப்பட்டான். 

பள்ளிகளைச்சொல்வானேன் நான் பணிபுரியும் கல்லூரி உட்பட பல கல்லூரிகளுக்கு benchmark institute என்று சொல்லபடும் ஒரு கல்லூரிக்கு அவர்களிடமிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள அனுப்பப்பட்ட பேராசிரியர்களில் நானும் இருந்தேன். அந்தக்கலூரியில் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் அங்கு தனித்தனி மாடிப்படிகள் இருந்தன ஒருபோதும் அவர்கள் வகுப்பிலோ வளாகத்திலோ ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லையாம் பெருமையாக அதன் தாளாளரும் முதல்வரும் சொல்லிக்கொண்டார்கள்.

மற்றொரு கல்லூரியில் வளாகத்தில் நின்று ஒரு மாணவனிடம் பேசிக்கொண்டிருந்ததால் அவர்களின் அடையாள அட்டையை வாங்கிக்கொண்டு, மறுநாள் பெற்றொர்களை அழைத்துவரச்சொன்னதால் பயந்து போன அந்த 20 வயதுகூட நிரம்பி இருக்காத மாணவி தற்கொலை செய்துகொண்டாள். வீட்டிலும் குழந்தைகளுக்கு அரவணைப்போ அன்போ கிடைப்பதில்லை, படி படி படி படி, உனக்காக கடன் வாங்கி இருக்கிறேன் உனக்காக கடுமையாக உழைக்கிறேன்  என்பதைத்தான் திரும்பத்திரும்ப கேட்கிறார்கள் பதினமவயதின் குழப்பங்களுக்கு தீர்வு சொல்லவோ  இனம்புரியாத அச்சங்களை, முதிரா வாய்தில் அவர்கள் சந்திக்கும்  பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ளவோ காதுகொடுக்கவோ யாரும் இல்லாத லட்சக்கணக்கான வீடுகளில்தான் நமது அடுத்த தலைமுறையினர் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஜெ தனக்கு வந்த ஒரு கடிதத்தைப் பற்றி அவரது தளத்தில் எழுதி இருந்தார். வயதான காலத்தில் தங்களை வந்து பார்க்காமல் வெளிநாட்டிலேயே இருக்கும் தங்களின் மகனைப்பற்றிக் குற்றம் சொல்லிய பெற்றொர்களின் தரப்பும்,  படிப்பதை தவிர வேறொன்றுக்கும் இடமில்லாத தன் இளமைக்காலத்தின் கசப்பான நினைவுகளால் பெற்றோர்களை தவிர்க்கும் மகனின் தரப்பும் விரிவாக சொல்லப்பட்டிருந்த கட்டுரை அது. அப்படித்தான் அப்படியேதான் நடக்கும்.

 இப்போது மகன்களையும் மகள்களையும் தாங்கள் விரும்பும் துறையில் சேர்ப்பதற்காக, அடுத்தவீட்டினரின், சுற்றத்தாரின் பொறாமையை சம்பாதித்துக்கொள்ள, அதுதான் கெளரவம் என்று அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் இதுமட்டும்தான் நடக்கும்.

அதிகாலை 6 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மாலை 8 மணிக்கு வீடு வந்து மீண்டும் படித்து எழுதி மனப்பாடம் செய்து நள்ளிரவு உறங்கப் போகும் குழந்தைகளை எனக்கு ஏராளமாகத் தெரியும். விடுதிகளில் சேர்ககப்ட்டிருப்பவர்களின் நிலைமை இதைக்காட்டிலும் மோசம் அதிகாலை எழுந்து குளித்து இரவு வரை ஒரே கேள்வியை 100 முறை எழுதி எழுதி  மூளை மழுங்கடிக்கபப்ட்டு சிந்திக்கும் திறனை முற்றிலும் இழந்து, ஆனால் நல்ல மதிப்பெண் மட்டும் வாங்கி விடும்   இவர்கள் எதிர்காலத்தில் இளமைக்கால ட்ராமாவால எத்தனை பாடுபடப்போகிறார்களோ எனபதைக்குறிது யாருக்காவது அக்கறை இருக்கிறதா?

தினமும் வீட்டில் அதிகாலையிலிருந்தே வானொலி கேட்பேன். அதில் தொடர்ந்து 7 மணி வரை பேசும் ஒரு நபரை பல்லாயிரக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள். அவர் தினமும் அதிகாலை  பிரார்தனைக்கென்று ஒரு நேரம் ஒதுக்குவார்.அந்நேரத்தில் அவருக்கு வரும் கடிதங்களில் சிலவற்றைச்சொல்லிக்கூட்டுப்பிரார்த்தனைச் செய்யச்சொல்லுவார். கடந்த சில மாதங்களாகவே பிரார்த்தனையில் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சைக்கும் JEE NEET எழுதவிருக்கும் தங்களின் குழந்தைகளின்வெற்றிக்குமாகத்தான் பிரார்த்திக்கசொல்லி கடிதங்கள் வந்தவண்ணம் இருக்கின்றது.

அந்த நபரும் பேச்சோடு பேச்சாக தன்மகனையும் அதே நுழைவுத்தேர்வுக்கு அழைத்துச் சென்றதாக இரண்டுநாட்கள் முன்பு சொல்கிறார். கேட்பவர்களுக்கு உலகம் ஓடும் பாதையில் தான் நாமும் ஓடவேண்டும் என்று தோன்றாதா? கேரளாவில் சொல்வார்கள் நாடோடும் போழ் நாம் நடுவில் ஓடனும் என்று. இப்படிச் செய்யலாமா கல்வி வெற்றிமட்டும்தான் வெற்றியா?  சகதாபம்  என்பதை  மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா ? அவர்களுக்கு வாழ்வில் அறம் வழித்துணையாக வேண்டாமா? குழந்தைகள் பல துறைகளையும் கற்றுக்கொள்ளவேண்டாமா? என்ன மாயை இது?

 அத்தனைபேரும் இதையே படிக்க வேண்டும் என்றால் மற்ற துறையெல்லாம் என்னவாவது? அந்தத் துறைகளில் நடக்கவேண்டிய ஆய்வுகளெல்லாம் ? அந்த ஆய்வுகளினால் சமூகத்துக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் எல்லாம்?

முன்பெல்லாம் பொறியியல் கல்லூரிகள் காளான்களைப்போல முளைத்தவண்னம் இருந்ததென்றால் இப்பதெல்லாம் புற்றீசல் போல அவை பெருகிக்கொண்டிருக்கின்றன. மிக வெளிப்படையாக கொள்ளை அடிக்கிறார்கள் என்றாலும் தங்களின் பொருளாதார தாங்கும் சக்தியைமீறி, தோட்டத்தை விற்று கடன்வாங்கி நகைகளை விற்றுக்கூட பிள்ளைகளை பொறியியல் படிக்க வைக்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

 அத்தகைய பெற்றோர்களின் பேராசையும் அடிமுட்டாள் தனமும்தான்  இப்படியான சுயநிதிக்கல்லூரிகளைப் பெருக வைக்கிறது. ஒரு செமஸ்டருக்கு 5 லட்சம் என 8 செமெஸ்டர்களுகு கல்விக்கட்டணம் செலுத்தி பொறியியல் படித்தபின்னர் மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு வேலைசெய்யும் பலரையும், அந்த வேலைகூட கிடைக்காமல் இருக்கும் மேலும் பலரையும் நாமெல்லோருமே அறிவோம்.

கலை அறிவியல் கல்லூரியில் மிகக்குறைந்த கல்விக்கட்டணம் செலுத்தி தாவரவியல் படித்துவிட்டு காபிவாரியம் ஏலக்காய் வாரியம் தேயிலை வாரியம் கரும்பு ஆராய்ச்சி பருத்தி ஆராய்ச்சி என பல மத்திய அரசு வேலைகளில் இளமையிலேயே இணைந்து கம்பீரமாக வேலைசெய்பவர்கள். விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் சுயமாக தொழில் செய்பவர்கள் நஞ்சில்லா விவசாயம் செய்பவர்கள் பயிர்நோயியலாளர்கள் எல்லாம் ஏன் வெளியுலகத்துக்கு தெரிவதேயில்லை?.

  கடந்த ஆண்டுகளில் டெங்கி காய்ச்சல் வந்தபோது, கொரோனா பெருந்தொற்று வந்தபோது நாம் தேடிச்சென்ற பப்பாளி மரங்களும் நிலவேம்புச்செடிகளும் அதன்பின்னர் ஏன் மதிப்பிழந்தன ? அவற்றால் உயிர் பிழைத்த எத்தனை பேர் தாவரவியல் படிப்பு முக்கியம் என்று உணர்ந்தார்கள்? ஆனால் ஆன்லைன் வகுப்பில் கணினிப்பயன்பாட்டைப் பார்த்த பட்டிதொட்டிகளில் இருக்கும் பெற்றோர்கள் எல்லாம் கணினிதான் இனி எதிர்காலம் என்று முடிவுக்கு வந்து அந்தப்படிப்பில் பிள்ளைகளைச்சேர்த்தார்களே அது எப்படி?

எத்தனை ஆண்டுகளாக டிஜிடாலிஸ் செடி இதயநோயாளிகளுக்கு மருந்தளித்து அவர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது? எத்தனை எத்தனை ஆண்டுகளாக கசகசா செடியிலிருந்து எடுக்கப்படும் மார்ஃபின் உச்சகட்ட வலிநிவரணியாக இருந்து வருகிறது ?  எத்தனை புற்றுநோயாளிகளுக்கு நித்யகல்யாணிச்செடியிலிருந்து எடுக்கப்படும் நூற்றுக்கணக்கான வின்கா ஆல்கலாய்டுகள் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கின்றன? 

இப்படி அட்ரோபின் நிகோடின் ஆஸ்பிரின் கொகெய்ன் என்று தாவரங்களிலிருந்து கிடைக்கும் மருந்துகளையெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருகும் நாம், நமது அடுத்த தலைமுறையினருக்கும் இவை தேவைப்படுகையில் இந்தத் தாவரங்களை அடையாளம் காணும் தாவரவியலாளர்கள்  வேண்டும் என ஏன் நினைப்பதில்லை? பைட்டோகெமிஸ்ட்ரி துறைசார்ந்தவர்களே இந்தத்தாவரங்களில் இருந்து வேதிப்பொருட்களை பிரித்தெடுக்க முடியும் பொறியியலாளர்களும் மருத்துவர்களும் அல்ல. அந்தப்படிப்பை கற்றுக்கொள்ள யாருமே முன்வருவதில்லையே?

மேட்டுப்பாளையத்தின் பிரபல உறைவிடப்பள்ளியில் படிக்கும் உறவினரின் மகனை அழைத்துச்செல்ல ஒரு விடுமுறையின் போது நானும் அவர்களின் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அந்தப்பள்ளியில் உயிரியல் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 13 பேர் மட்டும்தான், அவர்கள் அனைவருமே மருத்துவம் படிக்கும் உத்தேசத்துடன் தான் இருக்கிறார்கள்.

 அந்தப் பள்ளியில் வளாகம் எங்கிலும் பல மரங்களுக்கு தவறான அறிவியல் பெயர்கள் எழுதப்பட்ட பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அதை நான் புகைப்படத்துடன் என் கல்லூரி முகவரியிலிருந்து, தாவரவியல் துறைத் தலைவர் என்று குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டி கடிதம் எழுதியும் இப்போது வரை அவை திருத்தப்படவில்லை. ஏன் தாவரவியல் இத்தனை தாழ்வானதாக நினைக்கப் படுகிறது?

கூட்டுப்பிரார்த்தனை செய்தாவது மகனும் மகளும் மருத்துவராக வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் ஏன் தாவரவியல் என்று ஒரு துறை இருப்பதைக்கூட அறியாமல் இருக்கிறார்கள்?

மருத்துவர்களும் பொறியாளர்களும் வியாபாரிகளும் உயிருடன் இருக்க தாவர உணவைத்தானே  சாப்பிட வேண்டி இருக்கிறது , எங்கே ஒரே ஒரு உணவைச்சொல்லுங்களேன் பார்ப்போம் தாவரங்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்படாமல்?

சுனிதாவில்லியம்ஸ் வெண்வெளிக்குச் செல்லும் போதும் சமோசா தானே எடுத்துச்சென்றார்?

ஏன் தக்காளி கிலோ 8 ரூபாய்க்கும் ப்ரோக்கலி ஒன்று 125 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது? தேவைக்கு அதிகமான உற்பத்தியினால்தானே?

எத்தனை பொறியாளர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்கள் இருக்கிறது இப்போது? எல்லா மருத்துவர்களும் குறைந்த பட்சம் 12 ஆண்டுகளாவது கடும் உழைப்பைச் செலுத்தினால் மட்டுமே தனியே சிகிச்சையளிக்கும் கட்டத்துக்கு வரமுடியும், அதில் அத்தனை பேர் வெற்றிகரமான மருத்துவர்களாகிறார்கள்? உலகியல் வெற்றி அடைகிறார்கள். வெகுசிலர்தான் இல்லையா?

எத்தனைபேருக்கு சொந்தமாக மருத்துவமனை இருக்கிறது படித்து முடித்து அங்கேயே பணிபுரிய?

மூன்று தளங்கள் கொண்ட மாபெரும் மருத்துவமனையை வைத்திருக்கும் எங்கள் குடும்ப மருத்துவரின் மகள்கள் இருவரும் மருத்துவம் படிக்காமல் வேறு துறைகள் தான் படிக்கிறார்கள், என் மகன்களில் ஒருவன் சைபர் பாதுகாப்பும் மற்றொருவன் காட்டியலும் படிக்கிறார்கள்.

 கலைஅறிவியல் கல்லூரிகளிலும் கணினி அறிவியலும் வணிகவியலும்தான் படிக்க விரும்புகிறார்கள். பிற அடிப்படை அறிவியல் துறைகள் அனைத்திலும் மாணவர்களே இல்லை

நான் பணிபுரியும் கல்லூரியில் இன்னும் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரவில்லை ஆனாலும் கணினி அறிவியல் துறை மற்றும் வணிகவியல் துறைகளில் இடங்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. அறிவியல் துறைகளில் மொத்தமாகவே 10 விண்ணப்பங்கள் கூட வாங்கப்படவில்லை. எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்? எதை நோக்கி நம் சமூகம் போய்க்கொண்டிருக்கிறது?

இன்று காலை எனக்கு குப்பைமேனிச்செடியின் புகைப்படம் அனுப்பி இது என்ன செடி என ஒருவர் கேட்டிருந்தார். அவருக்கு இரு மகள்கள் இருவரும் மருத்துவத்தில் முதுகலை படிக்கிறார்கள் அவரும் கணினி அறிவியல் பேராசிரியர். நம் சுற்றுப்புறங்களில் இருக்கும் முக்கியமான மூலிகைகள் பற்றிக்கூட அறிதல் இல்லாத இப்படியான் குடும்பங்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன.

குப்பைமேனிக்கு போவானேன்? செம்பருத்திச்செடியே அடையாளம் தெரியாமல் என்வீட்டிலிருந்து  அலமண்டா மலர்களைப் பறித்து தலைக்கு தேய்க்கும் எண்ணெய் காய்ச்சி எடுத்தாள்  பின்வீட்டுக்கார 30 வயதைத்தாண்டிய பெண்ணொருத்தி. இனி வரப்போகும் காலத்தில் என்ன என்ன நடக்கவிருக்கிறது?

பலவீடுகளில் அலங்காரச் செடியாக வளர்க்கப்படும் கவிழ்ந்து தொங்கும் ஊமத்தைகளைப்போன்ற மலர்களைக் கொண்டிருக்கும் ஏஞ்சல் ட்ரம்பெட் செடி கடும் நஞ்சுகொண்டது அதைத்தொட்ட கைகளால் கண்ணைத்துடைத்தால் கூட பார்வையிழப்பு உண்டாகும்.

 சுற்றுப்புறமெங்கும் வளரும் குன்றிமணிக்கொடியின் கருப்பும் சிவப்புமான விதைகளில் இருக்கும் நஞ்சான ஏப்ரினுக்கு இன்னும் முறிமருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, அதைக்கடித்தால் உடனடியாக மரணம் உண்டாகும். ஆமணக்குச்செடியின் கனிகளில் இருக்கும் ரிசின் என்னும் புரதநஞ்சும் மிகக்கடுமையான உயிரைப்போக்கும் வீரியம்கொண்டது என்பதையெல்லாம் இனி கற்றுக்கொடுக்க தாவரவியலாளர்கள் வேண்டாமா? 

நீர்நிலைகளிருந்து நிலம் காற்று என அனைத்தும் மாசுபட்டு இருக்கையில் அவற்றைச் சரிசெய்ய சூழியலாளர்கள் வேண்டாமா?  பால் 40 ரூபாய்க்கும், குடிநீர் அதில் பாதி 20 ரூபாய்க்கும் வாங்க்கிக்கொண்டிருக்கும் நாம் ஏன் இதை யோசிப்பதில்லை.பேரூர் நதியில் நீத்தார் கடன் செலுத்த வருபவர்களுக்கு ஆற்றில் நீர் இல்லாததால் பாட்டிலில் நீர் விற்கப்படுகிறது. இந்த அவலத்துக்குப்பிறகும் நாம் இயற்கையைக் குறித்துச் சிந்திப்பதில்லை

 இனியொரு பெருந்தொற்று வந்தால் அதற்கு மருந்தளிக்க தாவரங்களும் அந்தத் தாவரத்திலிருந்து சிகிச்சையளிக்கத் தாவரவியலாளர்களும் வேண்டவே வேண்டாமா?

எனக்குத் தெரிந்து ஒரு பேராசிரியர் தென்னந்தோப்பில் 4 ஏக்கரை விற்று மகனை ஒரு செமஸ்டருக்கு 8 லட்சம் கட்டி ( 8 செமஸ்டர்களுக்கு) பொறியியல் படிக்க வைத்து அவன் கல்லூரியிலேயே ப்ளேஸ்மெண்டில் வேலைகிடைத்து சென்னையில்  வீடுபார்த்து நண்பர்களுடன் தங்கி சமைத்துச் சாப்பிட்டு வேலைக்குபோய் மாதம் 50 ஆயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறான். கணக்குப் போட்டுப் பார்த்தால் என்ன ஒரு முட்டாள்தனமென்று புரியும். ஆனால் அவர் பெருமையாக மகன் சென்னையில் வேலை செய்துகொண்டிருக்கிறான் என்கிறார்.

பஞ்சாபில் மால்வா பிரதேசத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவைக்காட்டிலும் 40 மடங்கு அதிக பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதால் வீட்டுக்கு ஒரு புற்றுநோயாளி இருக்கிறார்கள் எனவே தினமும் சண்டிகருக்கு(cancer train) புற்றுநோய் ரயிலொன்று  மருத்துவமனைகளுக்கென்றெ பல பல வருடங்களாக  ஓடிக்கொண்டிருக்கிறது.அதில் நோயாளிகளுக்கு இலவசமாகவும் உடன் வருபவர்களுக்கு சலுகைவிலையிலும் கட்டணம் வாங்கப்படுகிறது

  இனிமேல் பயிர்களுக்கு வரும் நோய்களுக்கு எத்தனை மருந்து எப்படி எப்போது அடிக்க வேண்டுமென  யார் கற்றுக் கொடுக்க போகிறார்கள்? வீட்டுத்தோட்டம் பற்றி எப்படி தெரிந்துகொள்வார்கள்? சோயாப் பயிருக்கு அடிக்கும் கிளைபோசேட் மருந்தின் நஞ்சு சோயாவின் எல்லா உணவு ப்பொருட்களிலும் இருக்கிறது அதை அதிகம் சாப்பிடக்கூடது, சோயா கழிவுகளை கோழித்தீவனமாகக் கொடுப்பதால் கோழி இறைச்சியிலும் முட்டையிலும் அந்த நஞ்சு இருக்கிறது என்பதெல்லாம் யார் சொல்லிக்கொடுப்பர்கள் எப்படி தெரிந்து கொள்வது ?

கவலையாக இருக்கிறது எதிர்காலத்தை நினைத்தால். ஏன் இந்த மோகம்? ஏன் இப்படி  இந்த ஆசை பிசாசாக எல்லோரையும் ஆட்டுவிக்கிறது? இதில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொள்ளும் குழந்தைகள் வேறு இருக்கிறார்கள், அவர்கள் பயந்துகொள்வது தேர்வுத்தோல்வி குறித்தல்ல, ஒருவேளை தோல்வி அடைந்தால் எதிர்கொள்ளப்போகும் பேராசைக்கார பெற்றொர்களை நினைத்தே உயிரை  மாய்த்துகொள்கிறார்கள். லட்சக்கணக்கான பெற்றோர்களுக்கு கவுன்சலிங் தேவைப்படுகிறது இப்போது.

பள்ளிக்குழந்தைகளின் அடிப்படைக் கல்வியில்  A for apple சரிதான் ஆனால்  N for neen, T for turmeric என்று சொல்லி கொடுக்க முடியாத நாம் எப்படி அமெரிக்கா நம் இயல் மரமான வேம்பிற்கு காப்புரிமை வாங்கியதற்காக நீதிமன்றத்தை நாடலாம்? நம் இயல் தாவரங்களை குழந்தைகளுக்கு இளமையிலேயே கற்றுக்கொடுக்க வேண்டாமா இதில் என்ன கஷ்டம் இருக்கிறது?

இந்தப்பரிந்துரையை எல்லாம்  மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்களிடம் தெரிவிக்க இயலாத எளிய ஆசிரியை நான். அரசியல்  செல்வாக்கும் அவரவர் குழந்தைகளின் எதிர்கால நன்மையைக் குறித்து அக்கறையும் கொண்டவர்கள் யாரேனும்  முயற்சி செய்யலாம்.

தமிழகமெங்கும் அயல் ஆக்கிரமிப்புத்தாவரங்கள் அழகுத்தாவரங்களாக அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.  இயல் தாவ்ரஙக்ளுக்கான வாழிடங்களை இழந்துகொண்டே இருக்கிறோம். பெரிய ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். எது அயல் தாவரம் அது இயல் தாவரம் என்று யார் கற்றுக்கொடுப்பார்கள்? அந்த தாவரத்தின் கெடுதல் என்ன என்பதை எப்படித் தெரிந்துகொள்வீர்கள்?

நம்மைச் சுற்றி இத்தனை தாவரவியல் சார்ந்த பயன்பாடுகளும் தேவைகளும் இருக்கையில் ஏன் பொறியாளர்களையும் மருத்துவர்களையுமே நாம் உருவாக்க வேண்டும்? யோசித்துப்பாருங்கள்.

If all flowers wanted to be roses, nature would lose her springtime beauty and the fields would no longer be decked out with wild flowers! 

புதிய தொடர் -போய்!

இந்த வாரம் முழுவதும் தொழுநோய் சிகிச்சைக்குச் சருமத்தில் தடவப்பட்டுச் சிகிச்சையளிக்கப் பயன்பட்ட, ஒரு விதை எண்ணெயிலிருந்து, ஊசிமருந்தை முதன் முதலாகத்தயாரித்து, அந்த ஆராய்ச்சிக்கட்டுரை வெளியாகும் முன்பே 78 நோயாளிகளைக் குணப்படுத்திய, ஹவாய் பல்கலைக்கழகத்தின் முதல் அறிவியல் முதுகலைப்பட்டதாரியான, ஆப்பிரிக்க அமெரிக்கப்பெண் ஆலிஸ் பால் குறித்து வாசித்துக்கொண்டிருந்தேன்.

கிளை கிளையாகப்பிரிந்த வாசிப்பில் ஹவாயிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 8000 தொழுநோயாளிகள் வசித்த ஒரு தீவையும், அவர்களுக்குச் சவப்பெட்டி செய்வதிலிருந்து அடக்கக்குழிதோண்டுவது, வீடு கட்டிக்கொடுப்பது, வீட்டுக்கு வர்ணமடிப்பது, அவர்களுடனேயே தங்கி சமைத்து உண்பது என்று சேவை செய்த ஒரு பாதிரியைக்குறித்தும் அறிந்துகொண்டேன். 3000 அடி உயர செங்குத்துப்பாறைகளால் புற உலகிலிருந்து விலகி இருந்த அந்தத்தீவில் இறையியலை போதித்து தானும் தொழுநோயாளியாகி அங்கேயே இறந்தும் போன அவரைக்குறித்து பெருமதிப்பு உண்டாகி இருக்கிறது.

அவரைக்குறித்தும் 24 வயதில், தன் கண்டுபிடிப்பை வெளியிடாமலேயே ஆய்வகத்தின் குளோரின் நஞ்சினால் உயிரிழந்த ஆலிஸைக் குறித்தும் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அந்தப்பாதிரி தொழுநோயாளிகளுடன் இணைந்து உண்ட பாலினேசியாவின் பிரதான உணவான சேம்பின் கிழங்கிலிருந்து உண்டாக்காப்படும் போய் (Poi) குறித்து வாசிக்கையில் தான் உலெகெங்கிலும் இருக்கும் இப்படியான, அதிகம் பேர் அறிந்திருக்காத தாவர உணவுகளைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் வந்தது.

போய், வஸாபி, ஃபலாஃபல்,புரிட்டோஸ், ராசவள்ளிக்கிழங்கு, நோச்சி, குயினா, சில அரிய மதுவகைகள், இந்த உணவுகள் தயாரிக்கப்படும் முறை, அந்தத்தாவரத்தின் இயல்புகள் என்று விரிவாகச் சுமார் 25 கட்டுரைகள் எழுதவிருக்கிறேன்.

இன்று போய் எழுதிமுடித்து, தொடர்ந்து நாலைந்து கட்டுரைகள் எழுதியபின்னர் அவற்றைத் தொடர்ந்து வெளியிட உத்தேசித்திருக்கிறேன். இந்தத் தொகுப்பை நூலாக வெளியிடுகையில் வைக்க ஒரு நல்ல தலைப்பையும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். பஞ்ச கால உணவுகள் குறித்தும் சட்டரீதியான அல்லது மதம், கலாச்சாரம் சார்ந்த தடைசெய்யபட்ட உணவுகள் மற்றும் பானங்கள் (Taboo food and drink) குறித்தும் தொடர்கள் எழுதவெண்டும்.

கோடைக்காலக்காற்றே!

 மழை போலவே வெயில் பொழியும் கடுங்கோடை தொடங்கி விட்டது. கல்லூரி பின் மதியம் 3 மணிக்கு முடிவதால் முதுகில் வெயில் அறைய அறையத்தான் தினமும் வீட்டுக்குப் புறப்படுகிறேன். எனினும் புகாரொன்றுமில்லை. மழைக்காலங்களைப்போலவே எனக்குக் கோடைக்காலமும் பிரியம்தான்.  

சாலையெங்கும் வண்ணங்கள் நிறைந்திருக்கிறது. நீலவாகையான ஜகரண்டாக்கள் மலைப்பகுதியில்லை என்றாலும் பொள்ளாச்சியிலும் வீடுகளின் முன்பாக ஊதாமலர்களுடன் மலர்ந்து நிற்கின்றன. நெடுஞ்சாலை எங்கிலும் தீக்கொன்றைகளின் செக்கசெவேலென்னும் மலர்தல் கண்ணை நிறைக்கின்றது. இடையிடையே பொன் மலர்ந்தது போல சரக்கொன்றைகள் ஒரு இலைகூட இல்லாமல் மஞ்சளான மஞ்சளாக ஒயிலாக நிற்கின்றன.

 

அடர்மஞ்சளில் சிறு மலர்கள் நிறைந்திருக்கும் பெருங்கொன்றைகளும், ஒரு இலைக்கு ஒரு மலர் என நிறைந்து ததும்பியபடி  மிக அழகிய கிளையமைப்பில் வான் நோக்கி மலர்ந்து நிற்கும்  செம்பட்டு வாகைகளும் வரிசையாக நிற்கும் சாலைகளில் பின்மதியப்பயணம் என்பது ஒரு அருள் தான்.

காபிப்பொடி வண்ணத்தில் புல்லிக்கிண்ணங்களும், தூயவெள்ளையில் இதழ்களுமாக புங்கனும் போட்டிபோட்டுக்கொண்டு கூட மலர்ந்திருக்கிறது தூரத்தில் இருந்து பார்க்கையில் இதழிதழாக தரையெங்கும் கொட்டிக்கிடக்கும் புங்கை மலர்கள், இறைந்துகிடக்கும் பொரிபோல இருப்பதால் இதைப் பொரிப்புங்கை என்போம் இங்கு. 

அப்படியேதான் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கின்றது வேம்பும். கல்லூரிக்குள் நுழைகையிலேயே எடுத்துச் சாப்பிட்டு விடலாம் போல வேம்பின் மணம் நிறைந்திருக்கிறது. நான் நினைப்பதுண்டு கோடையில் மட்டும் வேம்பின் தாவர அறிவியல் பெயரான Azadirachta indica வின் இண்டிகாவை எடுத்துவிட்டு Azadirachta edulis (எடுலிஸ்- உண்ணத்தகுந்தது) என்று தற்காலிகமாக மாற்றிக்கொள்ளலாம் என்று.  

வீட்டிலும் கோடைக்கொண்டாட்டம்தான். இன்னும் ஜகரண்டா மலரவில்லை வீட்டில். ஆனால் நுண்மணிகளைபோல பசுமஞ்சளில் மலர்சொரிகிறது சொர்க்கமரம், சந்தனம் மஞ்சள் அடர் ஊதா என  மூன்று நிறங்களில்  அலமண்டா , ஆரஞ்சு காம்புகளுடன் கவிழ்ந்து கிடக்கிறது அதிகாலியில்  பின்வாசலெங்கும் பவளமல்லிகை.

இளஞ்சிவப்பு வெள்ளை நீலம் என மூவண்ணத்தில் ருயெல்லியா, பலவண்ண ஜினியா,

 மரம் முழுக்க கை அகலத்துக்கு சதைப்பற்றான இதழ்களுடன் பாரிஜாதம், குருதிநிறப் பந்துகளாக தெட்சி, பல நிறங்களில் செம்பருத்தி, வெள்ளைச்சிறுகுடைகளாக சாம்பங்காய் மலர்கள், அமரில்லிகள் என வீடும் வண்ணங்களிலும் நறுமணங்களிலும் நிறைந்திருக்கிறது.

கண்ணுக்கு மட்டுமல்ல நாக்குக்கும் கோடை விருந்தளிக்கிறது. கோடையில் கனியளிக்கும் பல அன்னை மரங்கள் வீட்டில் இருக்கின்றன. அருநெல்லிக்காய்களை பச்சைமிளகாய் கல்லுப்பு வைத்து அம்மியில் சதைத்துச் சாப்பிடுவது, பெரிய நெல்லிக்காய்களை ஆவியில் வேகவைத்து காரமிட்டு தாளிப்பது,

விளிம்பிக்காய்களில் ஏராளமாக ஊறுகாய் தயாரித்து வேண்டியவர்களுக்குக் கொடுப்பது,

மாமரம் காய்க்கொழுந்து விடத்துவங்கியதும் செம்பு நிறத் தளிரிலைகளில் புளியும் உப்பும் வைத்து சுருட்டிச் சாப்பிடுவது, மாமரம் எப்போது பூக்கும் எப்போது காய்க்கும் எப்போது கனியும் என பார்த்துக்கொண்டே இருப்பது,  முதல் ஆளாகக் காய்த்து திரண்டு விடும் நடுச்சாலையை வைக்கோலில் மூடி வைத்து வீடே மணக்கையில் எடுத்து சாறு கைகளில் வழிய வழியச் சாப்பிடுவது, குறுக்கே வெட்டினால் நட்சத்திர வடிவில் இருக்கும் ஸ்டார்கனிகளை தட்டு நிறைய காலை உணவில் சேர்த்துக்கொள்வது, 

கரும்புச்சக்கரை கலந்து பற்கள் கூசும் வரை சாப்பிடும் விளாம்பழங்கள்,

தமிழ்நாட்டில் அவ்வளவாகத் தெரியப்பட்டிருக்காத லோலோலிகா கனிகள் சொப்பிக்காய்த்து செங்கனிகளானதும் பறித்து  லேசாகப்பிளந்து முன்பே கலக்கப்பட்ட உப்பு மிளகாய்த்தூளை தூவி, தேங்காய் எண்ணெய்ச்சொட்டு விட்டு மூடி வாயிலிட்டு புளிப்பும் காரமும் எண்ணெய் மணமுமாக அதன் நுண்ணிய விதைகள் பற்களில் இடறச் சுவைப்பது, ஆப்பிள் செர்ரியின் குட்டிக்குட்டிபழங்களை புளிப்பாகச்சாப்பிடுவது,,,,,

வேப்பம்பூக்களைச்சேகரித்து வடகத்தில் சேர்த்துக்கொள்வது , ஆஹா எத்தனை கோடி இன்பம் கோடையிலும் வைக்கப்பட்டிருக்கிறது ? இப்படிச் சுவைக்கையில் எல்லாம் அடடா, இந்தச் சுவையெல்லாம் தெரிந்துகொள்ளாத கோடிப் பேர் இருக்கிறார்கள் என்னும் ஆதங்கம் உண்டாகும். 

வெண்முரசு வாசிக்கையிலும் இதைத்தான் நினைத்துக்கொள்வது. எத்தனை கோடிப்பேர் இந்த வாசிப்பனுபவத்தை அறியாமலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என.

இதோ சாளரம் வழியே வீசுகிறது வெம்மையும் வேம்பின் வாசனையும் நிறைந்த கோடைக்காற்று. 

சிவப்பும் அழகு சூடும் ருசி, கருப்பும் அழகு காந்தலும் ருசி என்பதுபோல கோடையும் தனி ருசிதான்.

நெஞ்சாங்கூட்டில்,

ஐரோப்பாவுக்கு மேற்படிப்புக்காகப் போனபின்பு சரண் இந்தியாவிற்கு வந்த சென்ற ஆண்டின் முதல் விடுமுறையின்போது சென்னைக்கு விஜய் ஆண்டனியின் இசைக்கச்சேரிக்கு என்னையும் அழைத்துச் சென்றிருந்தான். சரணுக்கு அதற்கு முன்பு  செலிபிரிட்டி க்ரஷ் என்று எதுவும் இருந்ததில்லை, முதலும் கடைசியுமாக விஜய் ஆண்டனிதான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஜெர்மனியிலிருக்கையிலேயே கச்சேரியின் தேதிகளைக் குறிப்பிட்டு சென்னை போகனும், போகனும், நீயும் வந்தே தீரனும் என்று சொல்லிக்கொண்டே இருந்தான். 

அவனுக்கு விஜய் ஆண்டனியின் பாடல்கள், இசை, அவரது குரல் எல்லாவற்றின் மீதும் பெரிய மரியாதையும் பிரியமும் இருக்கிறது. எப்போது கார் ஓட்டினாலும் விஜய் ஆண்டனி அவனுடன் இருப்பார். கூடவே உற்சாகமாக உரக்கப் பாடிக்கொண்டே வருவான். அவரது பாடல்களில் பிரத்யேக பொருளற்ற சில சங்கதிகள் வருமல்லவா அது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதைத் தனியே சொல்லிச்சொல்லிச் சிலாகிப்பான். எனக்கு அத்தனை பிரியமில்லையென்றாலும் அவரின் நெஞ்சாங் கூட்டில்  போல சில பாடல்களின் மீது தனித்த பிரியமுண்டு.

இப்படி இசைக்கச்சேரிகளுக்கெல்லாம் நான் போனதில்லை. பொள்ளாச்சியின் ஒருகோடியில் ஒரு சிறு இருண்ட வீட்டில் பிறந்து அப்பாவின் ஆணவத்திற்கு அஞ்சியும் ஒளிந்தும் வளர்ந்து, எப்படியோ தப்பிப்பிழைத்து அன்னையாகவும் ஆசிரியையாவும் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு அதற்கான சாத்தியங்கள் வாழ்வில் இல்லாமல் இருந்தது. 

சிறுமியாக இருக்கையில் விடியற்காலை அப்பா ட்ரான்ஸிஸ்டரில் வைக்கும் பாடல்கள் பரிச்சயமானது. பதின்பருவத்தில் அத்தைகள்  இருவரும் பாக்கட் டிரான்சிஸ்டரில் கேட்கும் பாடல்களை நானும் அக்காவும் கேட்போம். அதுவும் வேட்டைக்காரன் புதூர்செல்லும்போது மட்டும்.

கல்லூரிக்காலத்தில் வீட்டில் டிவியும் மர்ஃபி வானொலியும் இருந்தது. இளையராஜா அறிமுகமென்றாலும் பாடல்களை உரக்கக்கேட்கவோ உடன் பாடிமகிழவோ வாய்ப்பிருக்கவில்லை.

ஒரு இருண்ட வாழ்வில் இருந்தோம் நான், அம்மா அக்கா மூவரும்.அப்பா வீட்டில் இல்லாதபோது இரவெல்லாம் வானொலியைத் திருகிக்கொண்டிருப்போம். ரஷ்ய ஒலிபரப்பு விடுதலைபுலிகள் ஒலிபரப்பெல்ளாஆம் சிலசமயம் கேட்கும். பரவசமடைந்து கொள்வோம்.

பின்னர் ஒரு பெரும் கதவு திறந்து முதுகலை படிக்கக் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் போனபோது தனியே எனக்கென்று ஒரு வானொலிப்பெட்டி இருந்தது . அதில் எப்போதும் பாடல்கள் கேட்பதுண்டு சில இரவுகள் உறங்காமல்  கூடக் கேட்டிருக்கிறேன். எப்படியோ இந்துஸ்தானி இசையில் பிரியமாகி விட்டிருந்தது.  கூடவே கஜல்களும் ராஜி என்னும் தோழியால் அறிமுகமானது. பங்கஜ் உதாஸ் மீது பெரும் பிரேமை கொண்டிருந்தேன். ’’சிட்டி ஆயிஹே ,பதனுக்கு மிட்டி ஆயிஹே’’வை ஓராயிரம் முறை கேட்டதுண்டு. இளமைக்கனவுகளின் ஒரு பகுதியாகவே அப்போது கஜல் இசை இருந்தது.

அச்சமயம் வீட்டில் குடியிருந்த நாகமாணிக்கம் குடும்பத்தினரால் டேப் ரெக்கார்டர் அறிமுகமானது. பலமுறை முயன்றும் எங்களுக்கென ஒன்று அப்பாவிடம் சம்மதம் பெற்று  வாங்க முடியவில்லை. ஆனால் அவர்கள் வீட்டு டேப்ரெக்கார்டரை எங்களிடமே பெரும்பாலும் கொடுத்திருந்தனர். இசை கேட்டுக்கேட்டு மகிழ்ந்த காலமது.

முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தபோது எனக்கு ஆராய்ச்சிக்கான   மாதாமாதம் கணிசமான உதவித்தொகையும் கிடைத்தது. எனவே ஒரு வாக்மேன் வாங்கினேன் அடிக்கடி ரயிலில் புதுதில்லி ஹைதராபாத், கோவா எனச் செல்லவேண்டி இருந்த போதெல்லம் அதில் தொடர்ச்சியாக இசைகேட்பேன்.

ஆனால் சரண் அழைத்துச் சென்றது போல் திறந்தவெளி அரங்கில் ஆயிரக்கணக்கானோருடன் இப்படியொரு இசை நிகழ்ச்சியைக் கேட்டதே இல்லை. இப்படி கேட்கக் கிடைக்குமென்று  நினைத்தது கூட இல்லை. ஆனால் சரண் வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.

நான், சரண், அகரமுதல்வன் மனைவி பிரபா மூவருமாகச் சென்றோம். நிகழ்ச்சிக்குப் பெருங்கூட்டம் இருந்தது அங்கே. பிரபாவின் ஆட்டோ வந்து சேர முடியாத அளவு சாலையிலும் இசை நிகழ்ச்சியால் நெரிசலாகியது.

இருக்கைகள் போடப்பட்டிருந்த இடத்துக்கு வெளியே பல்லாயிரம் இளைஞர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் நாங்களும்.   கட்டணத்திற்கேற்ப வண்ணப்பட்டைகள் கைகளில் கட்டப்பட்டன.  அங்கேயே குளிர்பானங்கள் தண்ணீர் பாட்டில்கள் நொறுக்கு தீனிகள் விற்கப்பட்டன. வேண்டியதை வாங்கிக்கொண்டோம்.

உள்ளே அவரவர் இருக்கைகளில் அமர்ந்தோம். மிக உயரமான மேடை   என்பதால் எல்லாருக்குமே மேடை நன்றாகத் தெரிந்தது ராட்ஷச ஸ்பீக்கர்கள் அங்கங்கே வைக்கப்பட்டிருந்தன. எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் படி மஞ்சள் நிறத்தில் கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் இருந்தன.

ஜொலிக்கும் பல வண்ணமின்விளக்குகளுடன் வண்ணமயமாகத் துவங்கியது நிகழ்வு. கூரையிலிருந்து தொங்கிக்கொண்டு விஜய் ஆண்டனி இறங்கியபோது கூட்டம் வெடித்து ஆர்ப்பரித்தது. 

அவர் எதன்பொருட்டோ மாகப என்னும் ஒரு தொலைக்காட்சி பிரபலத்தை அழைத்துவந்திருந்தார். மாகப நிச்சயமாக இடைச்செருகல் தான். விஜய் ஆண்டனிக்கு மாகபா போன்ற ஒருவர் தோள் கொடுக்க வேண்டியதில்லை. அடுத்தடுத்த பாடல்களைக்குறித்த அறிவிப்புகளுக்கு  எதிர்த்தரப்பில் ஒருவர் வேண்டி இருந்ததால் அவரை அழைத்திருக்கலாம். அசட்டுபிசட்டென்றேதான் அந்த நிகழ்விலும் அவர் பேசிக்கொண்டிருந்தார். நிகழ்வின் வீரியத்தை கொஞ்சம் குறைத்த பெருமை மாகாபவிற்கே.

ஒவ்வொரு பாடலுக்கும் அந்த வெளி அதிர்ந்தது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கிளர்ந்தொளிரும் இளமைப்பெருக்கில் கலந்துகொண்டு உச்சகட்ட ஒலியில்  பாடல்களைக் கேட்டது பெரிய அனுபவமாக இருந்தது.சரண் எழுந்து நின்று மற்றவர்களைபோல் நடனமாடி கொண்டே கேட்டான். நானும் பிரபாவும் கூடவே பாடினோம். மச்சக்கண்ணி, புலி உறுமுது பாடல்களுக்கெல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் வெறியாட்டம் போட்டது. அவ்வப்போது சிறு தூறலாக மழை பெய்தது.

பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பெரியதிரையில் தனது காதல் மனைவியையும் இளைய மகளையும் காட்டி விஜய் ஆண்டனி அறிமுகப்படுத்தினார்.

என்னைப்போலவே சில அன்னைகளும் வந்திருந்தனர் அவர்களும் மகள் மகனுடன் சேர்ந்து நடனமாடி ரசித்தனர். எனக்கு முன்பாக ஒரு இளைஞர் கூட்டமிருந்தது. ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அல்லது நண்பர் குழாம். அவர்கள் ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ந்திருந்தார்கள். என் இருக்கைக்கு நேர் முன்பு ஒரு இளைஞன். 22-லிருந்து 24-க்குள் வயதிருக்கும். ரிம்லெஸ் கண்ணாடி அணிந்திருந்தான் வெள்ளைச் சட்டையும் கால் சட்டையும், கன்னமெங்கும் செம்பருக்கள், அவன் நாற்காலி மேல்நின்று ஆடிக்கொண்டிருக்கையில் என் புடவையின் கீழ்நுனி அவன் நாற்கலிக்கடியில் சிக்கிக்கொண்டது. அவன் ஆட்டம்  ஆடிமுடித்து இறங்கிய பின்னரே புடவையை  விடுவித்தேன்.

ஆனால்  அவனின் அத்தனை கொந்தளிப்புக்களையும் ’’நூறு சாமிகள் இருந்தாலு’’ம் பாடல் பொங்கும் பாலில் நீர்தெளித்தது போல் அடங்கச்செய்தது.

பாடல் பாடப்பட்டுக்கொண்டிருக்கையில் அந்த இளைஞன் அமைதியாக நாற்காலியில் அமர்ந்து கொண்டான். கண்களில்இருந்து கண்ணீர் சரம்சரமாய் வழிந்தது. கண்ணாடியைக் கழற்றி பாக்கட்டில் வைத்துக்கொண்டு அழுகையை கட்டுப்படுத்தவோ கண்ணீரைத் துடைக்கவோ செய்யாமல் அப்படியே கண்ணீர் சொரிந்தபடி அந்தப் பாடலைக்கேட்டுக் கொண்டிருந்தான். அன்னையை இழந்த மகனாயிருக்கக்கூடும் என்று நினைத்தேன். அவனை அணைத்துக் கொள்ள விழைந்தேன்.  

அதன் பிறகான பாடல்களுக்கு அவனால் அப்படி ஆடவும் கூடவே பாடவும் முடியவில்லை. முறிந்துவீழ்ந்த மரம்போலிருந்தான். இறுதிப்பாடல்களின் போது  மழை பலமாகவேதொடங்கியது , ஆனால் கூட்டம் மழையை பொருட்படுத்தவே இல்லை.

நாங்கள் மூவரும் கூட்ட நெரிசலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க 2 பாடல்களை தியாகம் செய்துவிட்டு புறப்பட்டோம்.

 பெரும் திருவிழா முடிந்தது போலசாலை முழுக்க நெரிசலாக இருந்தது

தமிழ் விக்கியில் விஜய் ஆண்டனியின் கொள்ளுத்தாத்தாவான மாயுரத்தில் பணிபுரிந்த வேதநாயகம் பிள்ளையின் பக்கத்தை இறுதிசெய்தபோது குற்ற விசாரணைகளை மொழியாக்கம் செய்யும் சுவாரஸ்யமான பணியில் பிள்ளை இருந்ததை அறிந்தேன். 4 பெண்களை திருமணம் செய்துகொண்டிருக்கிறார் பிள்ளை.

https://tamil.wiki/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88

தமிழின் முதல் நாவலாகப் பிரதாபமுதலியார் சரித்திரத்தை எழுதியவர். தாது வருஷபஞ்சத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கஞ்சித் தொட்டிஅமைத்து  பசியாற்றி இருக்கிறார் பிள்ளை.   தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றி இருக்கும் இவரைக்குறித்து ஒரு கீர்த்தனை பாடப்பட்டிருக்கிறது

 இரவெல்லாம் காதுகளில் விஜய் ஆண்டனியின் குரலும் பாடலும் இசையும் கேட்டுக்கொண்டே   இருந்தது.

அத்தனை ஆயிரம்பேரின்  கொந்தளிப்பிலும் கூக்குரலிலும் உற்சாகத்திலுமல்ல, அந்த இளைஞனின் துயரத்தை மிக அந்தரங்கமாகத் தொட்டதில்தான் விஜய்ஆண்டனியின் வெற்றி இருக்கிறது. இதை என்றைக்காவது விஜய் ஆண்டனியிடம் சொல்லவேண்டும். சரணும் அவரைநேரில்  பார்க்கக் காத்திருக்கிறான். 

காய்ச்சல் மரம்!

மமானியை தேடி பொலிவிய வனக்காவலர்கள் காட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தார்கள். அயலவர் ஒருவருக்கு மமானி உதவுவதை வெறுத்த இன்கா இனத்தின் இளைஞர்கள் அவனை காவலர்களுக்கு காட்டிக் கொடுத்திருந்தார்கள்.

அதை அறியாத மமானி தனக்குள்ளேயே பேசிக்கொண்டு காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தான். அவன் அதிர்ஷ்டத்தின் மீது அவனுக்கு சில வருடங்களாகவே அவநம்பிக்கை வந்துவிட்டது. மரப்பட்டைகளையும் விதைகளையும் சேகரிப்பது அவன் குலத்தொழிலாக  இருந்தும் இத்தனை வருடங்களாக அவன் எஜமானுக்கு தேவையான அந்த மரத்தை தேடிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு அம்மரத்தை நன்றாகவே அடையாளம் தெரியும். இலைகளின் அடிப்புறம் சிவப்பாகவும் மேற்புறம் பளபளக்கும் பச்சை நிறத்திலும் இருக்கும். அவற்றின் பட்டை மிக கசக்கும் அதைத்தான் எஜமானர் சார்லஸ் லெட்ஜரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். கசக்கும் பட்டையை கொண்டிருக்கும் குயினா என்றழைக்கப்படும் எல்லா மரங்களும் ஒன்று போலவே இருந்தாலும் நுட்பமான வேறுபாடுகளும், கனத்த மரப்பட்டையும் கொண்டிருக்கும் ஒன்றைத்தான் அவன் தேடிக்கொண்டிருந்தான்.

ஒவ்வொரு கோடையிலும் மினுங்கும் பச்சை இலைக்குவையுடன் தெரியும் ஒவ்வொரு மரத்தையும் தேடித்தேடி பார்ப்பான். மாமனி ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் பனி மூடிய மலை முகடுகளில் ஏறி அழகிய இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த மலர் கொத்துக்கள் தெரிகிறதா என்று தேடுவான். 28 மரவகைகள் கண்டறிந்தும் அவன் தேடிய ஒன்று கிடைக்கவில்லை இன்னும்.

காட்டின் உயரமான ஒரு குன்றின் மீதிருந்து உரக்க கத்தி்னான் மமானி. ‘’அபூ, எங்கள் மலைத் தெய்வமே! உனக்குப் பிரியமான கொக்கோ இலைகளையும் சோளத்தையும் எத்தனை முறை படைத்து வழிபட்டேன்? நீ நிறைவுறவில்லையா? நான் துரதிர்ஷ்டக்காரன் தானா ? எஜமான் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்துவிடப் போகிறதா?

கோன்! காற்றுக்கும் மழைக்குமான தெய்வமான நீயுமா என் மீது இரங்கவில்லை? உனக்கும் பல நூறு பிராரத்தனைப் பாடல்களை பாடினேனே! எத்தனை கரிய பறவைகளை உனக்கென பலி கொடுத்தேன்? எத்தனை தலைமுறைகளாக நாங்கள் பட்டை சேகரிக்கிறோம்? ஏன் இப்போது கனியமாட்டேனென்கிறீர்கள்?’’

’’ சரி நான் காத்திருக்கிறேன் நீங்கள் இறங்கி வருவீர்கள் என்று எனக்கு தெரியும். இது எனக்கான காலம். 22 வருடங்களாக என் நான்கு மகன்களை கூட பார்க்காமல் எஜமானருடன்தானே இந்த காட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதற்கு பலனில்லாமல் போகாது. எத்தனையோ மக்களின் உயிரைக் காப்பாற்றத்தானே இதை தேடுகிறேன் என்று உனக்கு தெரியாமலா இருக்கும்? என் அபூ! எஜமானர் சார்லஸ்க்கு எத்தனையோ விதைகளையும், பட்டைகளையும் தேடித்தேடி சேகரித்து தந்திருக்கிறேன், இந்த ஒன்றை மட்டும் ஏன் கண்ணில் காட்டாமல் மறைத்து வைத்திருக்கிறாய்?’’

மமானிக்கு அந்த வருடத்தின் வசந்தம் அதிர்ஷ்டத்தை கொண்டு வருமென்று நம்பிக்கை இருந்தது. தேடியதை கொடுத்தால் இன்னும் சில அல்பகாக்களை எஜமான் அவனுக்கு கொடுப்பாரென்பதால் மட்டும் அல்ல, அந்த மரத்தை காண்கையில் அவருக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்காகத்தான் அதைத் தேடுகிறான்.

அவன் உள்ளுணர்வு சொன்னது சரிதான் அவன் அந்த மரத்தை பார்த்தே விட்டான். ஒரு மலைச்சரிவில் மலர்ந்து நின்றிருந்தது அது. குழல் போல சிவப்பில் மலர்கொத்துக்களும், கனத்த பட்டையுமாக அங்கே நிற்பது அதேதான்,

மலைத்தெய்வங்களே! மனமிரங்கி விட்டீர்கள் என்று கூவியபடி கண்ணீருடன் மமானி அங்கே சென்றபோது மரத்தடியில் ஏராளமான விதைகளும் சிதறிக் கிடந்தன. காட்டின் மறுபுறத்திலிருந்து அங்கு வந்து கொண்டிருக்கும் அவன் எஜமானர் அத்தனை வருடங்களாக இதைத்தான் தேடினார். விதைகளை சேகரித்து மண்ணில் பிசைந்து பல உருண்டைகளாக உருட்டி தண்டுகள் சூலாயுதம் போல கிளைத்திருக்கும் தாரா மரப்பொந்துக்குள் ஒளித்து வைத்து விட்டு மமானி சார்ல்ஸுக்கு கொடுத்த சங்கேத குரல் சார்ல்ஸ் லெட்ஜெருக்கும் அங்கே காவலிருந்த பொலிவியா காவலர்களுக்கும் ஒரே சமயத்தில் கேட்டது.

மமானிக்கு நினைவு அடிக்கடி தப்பிக்கொண்டே இருந்தது நினைவு வரும் போதெல்லாம் வலியும் தெரிந்தது. நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் கண்ணில் வழிந்து யார் அடிக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. உயிரே போனாலும் எஜமானரின் பெயரை சொல்லப்போவதில்லை என்பதில் மமானி உறுதியாக இருந்தான்.

எத்தனை நாளாயிருக்கும் காட்டில் பிடிபட்டு இங்கே வந்து என்றும் அவனுக்கு நினைவில் இல்லை. எஜமானருக்கு அந்த விதைகளை கொடுப்பதற்குள் பிடித்துவிட்டார்களே என்பதுதான் அவனுக்கு வருத்தம், ஆனால் தாரா மரப்பொந்துக்குள் இருப்பவற்றை அவர் நிச்சயம் எடுத்துக்கொள்வார் என்று நம்பிக்கை இருந்தது.

பெரு மற்றும் அதன் அண்டை நாடுகளில் வளரும் சின்கோனா மரங்களின் பட்டைகளையும் விதைகளையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த காலம் அது.

மலேரியா சிகிச்சைக்காக பல நாடுகளில் இருந்தும் அவற்றை திருடிச் செல்ல பலர் அக்காட்டுக்குள் ஊடுருவுவதால் அங்கு பலத்த காவல் இருந்தது. மமானி யாருக்கு உதவி செய்தான் என்பதை அறியத்தான் அவனை காவலர்கள் சித்திரவதை செய்தனர். ஆனால் 20 நாட்களாக அடித்தும் மமானியிடமிருந்து எந்த விவரமும் கிடைக்கவில்லை.

குகைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மமானியால் நடக்க முடியவில்லை. உடலெங்கும் எலும்பு முறிவும், ரத்தக்காயங்களுமாக மெல்ல தவழந்து தன் வீட்டை நோக்கி நகர முயன்ற மமானியின் கண்கள் குருதியிழப்பால் உயிரிழக்குமுன்னர் கடைசியாக ஒருமுறை தாரா மரம் இருக்கும் திசையை பார்த்தன.

1818 ல் லண்டனில் பிறந்த சார்லஸ் லெட்ஜர், அல்பாகாவின் ரோம விற்பனையின் பொருட்டு தனது 18வது வயதில் (1836ல்) பெருவிற்கு சென்றார் .1852 ல் ஆஸ்திரேலியாவில் அல்பாகாக்களை அறிமுகம் செய்ய அவர் சிட்னிக்கு பயணித்தார். அப்போது அல்பாகாக்களை பிற நாடுகளுக்கு கொண்டு செல்ல சட்டப்படி தடை இருந்தது. இருந்தும் தென்னமெரிக்காவிற்கு திரும்பிய லெட்ஜர் பல நூறு அல்பாகாக்களை பெருவின் பழங்குடியினரின் உதவியுடன் சிட்னிக்கு 1859 ல் கொண்டு சென்றார். அங்கு அவருக்கு அல்பாகா வர்த்தகம் செழிப்பாக நடந்தது.

1864ல் தென்னமரிக்கா திரும்பிய அவர் அப்போது பலரும் ஈடுபட்டிருந்த சின்கோனா பட்டைகளை தேடும் முயற்சியில் கவனம் செலுத்தினார். முன்பே நெருக்கமாக இருந்த மானுவல் இன்க்ரா மமானி (Manuel Incra Mamani) என்னும் பொலிவிய பட்டை மற்றும் விதை வேட்டையாடும் (காஸ்கரில்லெரோ) இன்கா பழங்குடியின பணியாளுடன் பொலிவியா மற்றும் அதன் அருகிலிருந்த காடுகளில் சின்கோனா விதைகளையும் பட்டைகளையும் தேடித்தேடி சேகரித்துக்கொண்டிருந்தார்.

அந்த தேடுதல் வேட்டையில் பிறரால் நுழைய முடியாத அடர் காட்டுப்பகுதிகளுக்குள் பல சிரமங்களுக்கிடையே அவர்கள் இருவரும் பயணித்து சின்கோனா விதைகளை சேகரித்தனர்

லெட்ஜரிடம் 1843 லிருந்து பணியாற்றிய மமானி சின்கோனாவின் 29 வகைகளை ஏராளமான ஆபத்துகளுக்கிடையில் கண்டறிந்தார். அயலவருக்கு உதவி செய்ததற்காக தன் இனத்தவர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்ட மமானி யாருக்கு உதவி செய்தேன் என்று கடைசி வரை தெரிவிக்காததால் 1871 ல் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

மமானியின் இறப்பால் மனமுடைந்த லெட்ஜர் பிற்பாடு மமானியின் குடும்பத்தின் பொருளாதார தேவை உள்ளிட்ட முழுப்பொறுப்பையும் ஏற்றுகொண்டார். மமானிக்கும் லெட்ஜருக்கும் மட்டும் தெரிந்த ரகசிய இடத்தில் சேர்த்து வைத்திருந்த சின்கோனா விதைகளை லண்டனில் இருக்கும் தனது சகோதரர் ஜார்ஜுக்கு அனுப்பி வைத்தார்.

ஜார்ஜ் அளித்த சின்கோனா விதைகளில் பிரிட்டிஷ் அரசு அத்தனை ஆர்வம் காட்டாததால் மீதமிருந்த விதைகளை டச்சு அரசிடம் கையளித்தார் ஜார்ஜ்.

டச்சுக்காரர்களுக்கு விதைகளின் அருமை தெரிந்ததால் அவற்றை பாதுகாத்து, விதைத்து மரங்களாக்கினர். இம்மரங்கள் பின்னர் லெட்ஜரின் பெயராலேயே Cinchona ledgeriana என்றழைக்கப்பட்டன. இவை 8 லிருந்து 13 சதவீதம் குயினைனை அளித்தன.

மலேரியா

மலேரியா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகில் இருந்து கொண்டிருக்கும் ஒரு பழமையான நோய். மாசடைந்த காற்றினால் உருவாகும் காய்ச்சல் என துவக்க காலத்தில் கருதப்பட்டதால்’’அசுத்தமான காற்று’’ எனப்பொருள்படும் இத்தாலிய சொல்லால் இந்நோய் ’மலேரியா’ என அழைக்கப்பட்டது (“bad air” -mal’ aria).

அறிவியலாளர்கள் 30 மில்லியன் வருடங்களுக்கு முன்பு கல்மரப்பிசினில் (amber) பாதுகாக்கப்பட்டிருந்த, கொசுக்களில் மலேரியா ஒட்டுண்ணிகளை கண்டறிந்திருக்கிறார்கள்.

மலேரியா பிளாஸ்மோடியம் என்ற நுண்ணிய ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது, இந்த ஒட்டுண்ணியை கொண்டிருக்கும் பெண் அனோபிலஸ் கொசு மனிதர்களை கடிக்கும் போது நோய் அவர்களையும் பாதிக்கிறது. நோயுற்ற மனிதர்களின் உடலினுள் ஒட்டுண்ணி கல்லீரல் மற்றும் இரத்த சிவப்பணுக்களில் பெருகி காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

பல நூற்றாண்டுகளாக ரோமானிய நகரங்களின் செல்வந்தர்கள் மலேரியா தாக்கும் பருவத்தில் குளிர்ந்த காலநிலை கொண்ட பிரதேசங்களுக்கு சென்று நோயிலிருந்து தப்பினர். ஏழைகள் நோய்த்தொற்றினால் காய்ச்சல் மற்றும் உடல் பலவீனத்தால் பாதிக்கப்பட்டனர்,ரோமாபுரி 17 ம் நூற்றாண்டின் மலேரியாவின் தலைமைப் பிரதேசமாக இருந்தது.

அக்காலங்களில் மருத்துவர்கள் மலேரியா சிகிச்சைகளாக நோயாளிகளுக்கு மண்டையோட்டில் துளையிடுதல், (trepanning,) குருதி நீக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புக்களை வெட்டி அகற்றுவது ஆகியவற்றுடன் ஆர்டிமிசியா, பெல்லடோனா ஆகிய மருந்துகளையும் பயன்படுத்தினர்

ஆண்டு முழுவதும் மலேரியா ஒட்டுண்ணி செழித்து வளர்ந்த ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதி மக்களுக்கு மலேரியா ஒட்டுண்ணியிடமிருந்து பாதுகாக்கும் இரத்த சிவப்பணு பிறழ்வு நோயான, அரிவாள் செல் இரத்த சோகை உருவானது., இந்த பிறழ்வு நோய், அவர்களை மலேரியாவிலிருந்து பாதுகாத்தாலும் அதுவும் ஒரு முக்கிய நோயாக இருந்தது

டச்சு, போர்த்துகீசியர் மற்றும் ஆங்கிலேயர்கள் மலேரிய ஒட்டுண்ணிக்கும், உடலை வெகுவாக பலவீனப்படுத்தும் காய்ச்சலுக்கும் எதிரான நோய்த்தடுப்பு இல்லாதவர்களாதலால் மலேரியாவின் பேரழிவை அஞ்சி பல தசாப்தங்களாக ஐரோப்பியப் படைகளை ஆப்பிரிக்காவின் உட்புறத்திலிருந்து விலக்கியே வைத்திருந்தனர்.

ஆனால் மத்திய அமெரிக்காவில் ஸ்பெயின் படையெடுப்பாளர்களுடன் வந்த, இத்தாலிய பாதிரியார்கள் மலேரியா கொசுக்களைக் கொண்டு வந்து, அமேசோனிய படுகை மற்றும் ஆண்டிஸ் மலைப்பகுதிகளுக்கு நோயை அறிமுகப்படுத்தினர். அப்போதுதான், இன்கா பழங்குடியினர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கும் குய்னா-குய்னா அல்லது , காஸ்காரில்லா என்றழைக்கப்பட்ட பெருவியன் மரத்தின் பட்டைத்தூளை பயன்படுத்துவது தெரிய வந்தது அதுவே சின்கோனா மரப்பட்டை.

1860 களில் ஒன்றிணைந்த இத்தாலியின் முதல் பிரதமர் மலேரியாவில் 1861ல் உயிரிழந்த போதும் மலேரியா நோய் குறித்த அறிதல் மிக குறைவாகவே அங்கு இருந்து.

1878 ல் இத்தாலியின் மாபெரும் ரயில் பாதை பணியில் ஈடுபட்டிருந்த 2,200 பணியாளர்களில் 1455 பேருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்ட போதுதான் இத்தாலி மலேரியாவின் தீவிரத்தை முதன் முதலாக அறிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை தொடங்கியது

1880 வரை மலேரியாவை உருவாக்கும் ஒட்டுண்ணி கண்டறிய பட்டிருக்கவில்லை 1880ல் தான் பிரெஞ்ச் மருத்துவர் அல்ஃபோன்ஸ் (Alphonse Laveran) நோயாளியின் ரத்தத்தில் மலேரியா ஒட்டுண்ணியை கண்டறிந்தார்

நாடு தழுவிய மலேரியா கட்டுப்பாடு மற்றும் கண்டறிதல் பரிசோதனைகள் பின்னர் வேகமாக நடந்து, முடிவில் இத்தாலியின் 8362 குடியிருப்பு பிரதேசங்களில் 3075 பகுதிகள் மலேரியாவினால் பீடிக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது.

பெருவின் பழங்குடியினர் காய்ச்சலுக்கு பயன்படுத்தும் சின்கோனா மரப்பட்டைகளை குறித்து உலகம் அப்போது அறியத் துவங்கி இருந்ததால், இத்தாலி முழுவீச்சில் சின்கோனா மரப்பட்டைளை உபயோகப்படுத்தி மலேரியாவை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை தொடங்கியது

19 ம் நூற்றாண்டில் மருத்துவர்கள் மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க குருதி நீக்க சிகிச்சையை பயன்படுத்தியதால் ரத்தசோகையினால் நோயாளிகள் மிகவும் பலவீனமடைந்தார்கள். பலருக்கு உடல் உறுப்புக்கள் அகற்றப்படவேண்டி இருந்து. ஒரு சிலரே மலேரியாவுக்கு குயினைனை பயன்படுத்தினர். ஆனால் அதன் பக்க விளைவுகள் அதிகமென்பதால் ராணுவ மருத்துவர்கள் யான் ஆன்றி ஆண்டனி மற்றும் ஃப்ரான்கோயிஸ் ஆகியோர் (Jean Andre Antonini மற்றும் Francois Clement Maillot) காய்ச்சலுக்கு குயினைனை பயன்படுத்தக்கூடாது என்று வெகுவாக எதிர்த்தனர் . எனினும் குயினைனின் பயன்பாடு மலரியா காய்ச்சலை போலவே பெருகிக்கொண்டேதான் இருந்தது.

1840 களின் மத்தியில் தங்க கடற்கரையின் ஐரோப்பியர்கள் குயினைன் மாத்திரைப்புட்டியை படுக்கை அருகில் வைத்திருப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர். அக்காலங்களில் மலேரியா இறப்பு கணிசமாக குறைந்திருந்தது. அதன்பிறகு பிரிட்டிஷ் ராணுவத்திலும் குயினைன் பயன்பாடு துவங்கியது.

1947 ல் அமெரிக்காவில் தொடங்கிய மலேரியா கட்டுப்பாட்டு முயற்சி 1950 வரை முழுமூச்சாக நடைபெற்று , 1951 ல் மலேரியா அமெரிக்காவில் முற்றிலும் ஒழிக்கப்பட்டது

2018ல் உலகெங்கும் மலேரியாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 405,000 ஆக இருந்தது. இதில் 67% ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள். தவிர்க்க முடிந்த நோயான மலேரியாவில் இத்தனை ஆயிரம் மக்கள் இறந்தது வேதனைக்குரியதுதான் என்றாலும் கடந்த 20 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவான மரண எண்ணிக்கைதான்.

2019 ன் .உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை 2010ல் இருந்த 251 மில்லியன் மலேரிய நோயாளிகளைக் காட்டிலும் 2018 ல் குறைவாக 228 மில்லியன் மட்டும் இருந்ததை சுட்டிக்காட்டியது. தற்போது உலகின், 2.9% சதவீதத்தினர் மலேரியாவினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

சின்கோனாவின் வரலாறு

ஸ்பெயினின் மருத்துவரும் தாவரவியலாளருமான நிக்கோலஸ் (Nicolás Monardes) 1574ல் மரப்பட்டைப்பொடி ஒன்றின் காய்ச்சல் குணமாக்கும் பண்புகளை எழுதி வெளியிட்டிருந்தார் .மற்றொரு மருத்துவரான ஜுவான் (Juan Fragoso) அடையாளம் காண முடியாத ஒரு மரத்தின் பட்டைப் பொடி பல நோய்களை தீர்ப்பதாக 1600களில் குறிப்பிட்டிருந்தார்.

1638ல் இரண்டு நாணயங்களின் அளவிற்கு உருட்டி எடுத்துக் கொள்ளப்பட்ட தென்னமரிக்காவின் Loja பகுதியை சேர்ந்த மரமொன்றின் பட்டைப் பொடி நீரில் கலந்து குடிக்கையில் காய்ச்சலை குணமாக்குவதைக் குறித்து ஃப்ரே (Fray Antonio de La Calancha என்பவர் குறிப்பிட்டிருந்தார்

ஆனால் சின்கோனாவைப் பொறுத்தவரை முதல் விஞ்ஞானிகளாக கருதப்படுபவர்கள் 16 ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இயேசு சபையின் உறுப்பினர்களான Jesuits என்றழைக்கப்பட்ட அருட்பணியாளர்கள் தான். இவர்கள் அனைத்து கண்டங்களிலும் இறைப்பணியுடன் மருத்துவப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டிருந்தனர். மனித குலத்துக்கு உபயோகப்படும் சாத்தியங்கள் கொண்ட எதுவாகினும் சோதித்து, சேகரித்து உலகின் பல பாகங்களுக்கும் அவற்றை அறிமுகம் செய்தார்கள் அவர்களால் கிடைக்கப் பெற்றவைகள் தான் டோலு என்னும் இருமல் நிவாரணி, நன்னாரி டானிக் மற்றும் கோகோ இலைகள்,

தென்னமரிக்க பழங்குடியினர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க அருந்திய மரப்பட்டைச்சாற்றை குறித்து கேள்விப்பட்ட Jesuits அவற்றை தேடி பயணித்தனர். பெரு, பொலிவியா பகுதிகளின் கெச்சுவா (Quechua) பழங்குடியினரால் ஒரு மரப்பட்டைச்சாறு தசை தளர்வுக்கும் காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்பட்டது. மரப்பட்டையை பொடித்து இனிப்பு நீரில் அதை கலந்து கசப்பை குறைத்து அவர்கள் அருந்தினார்கள் அம்மரத்தை அவர்கள் காய்ச்சல் மரமென்று அழைத்தனர்.

வெனிசுவேலாவிலிருந்து பொலிவியா வரை பரவியிருந்த ஆண்டிஸ் மலைத்தொடரில் செறிந்து வளர்ந்திருந்த பசுமை மாறா அம்மரங்களின் விதைகளையும் பட்டைகளையும் பட்டைச்சாற்றையும் ஐரோப்பாவில் அருட்பணியாளர்கள் 1640களில் அறிமுகப்படுத்தினர்.

மெக்ஸிகோ மற்றும் பெருவின் நிலப்பரப்புகளில் ஆய்வுகளை செய்த கிருத்துவ போதகர் பார்னெபி (Barnabé de Cobo -1582–1657),தான் ஐரோப்பாவிற்கு சின்கோனா பட்டையை அறிமுகம் செய்தவர். பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து ஸ்பெயினுக்கும் பின்னர் ரோம் மற்றும் இத்தாலியின் பிற பாகங்களுக்கும் இவரே 1632 ல் சின்கோனாவை அறிமுகம் செய்தார் .1650களில் ஸ்பெயினுக்கு தொடர்ந்து சின்கோன மரப்படைகள் கப்பல்களில் அனுப்பி வைக்கபட்டுக்கொண்டிருந்தன.

இந்த அருட்பணியாளர்கள் 1640 ல் ஐரோப்பாவெங்கும் காய்ச்சல் மரத்தின் பட்டைப் பொடி வர்த்தகத்துக்கான வழிகளை உருவாக்கியதால். 1681ல் மலேரியாவிற்கான சிகிச்சையளிக்கும் மருத்துவ மரப்பட்டையாக சின்கோனா உலகெங்கும் அறியப்பட்டது.

1653ல் இத்தாலிய தாவரவியலாளர் பியட்ரோ (Pietro Castelli) மருத்துவம் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் கைப்பட எழுதி வெளியிட்ட நூற்றுக்கணக்கான சிறு சிறு துண்டுப் பிரசுரங்களில் ஒன்றில் சின்கோனா மரத்தைக் குறித்தும் மலேரியாவுக்கு எதிரான அதன் செயல்பாட்டையும் எழுதியிருந்தார். இதுவே சின்கோனா மரத்தைக்குறித்த முதல் இத்தாலிய ஆவணம்.

1677ல் பெருவியன் மருத்துவப் பொடி என்னும் பெயரில் சின்கோனா மரப்பட்டை பொடி அதிகாரபூர்வமாக லண்டன் பார்மகோபியாவில் (London Pharmacopoeia) “Cortex Peruanus” என்னும் பெயரில் பிரசுரமானது

Myroxylon peruiferum என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட பெருவியன் பால்ஸம் என்னும் மற்றொரு பிசின் மரத்தின் பட்டைகளும் சின்கோனாவின் பட்டைகளுடன் கலப்படம் செய்யப்பட்டது. அம்மரப்பட்டைக்கும் காய்ச்சலை குணமாக்கும் மருத்துவ பண்புகள் இருந்ததால் அம்மரமும் லண்டன் பார்மகோப்பியாவில் 1677ல் இடம்பெற்றது,

பிரஞ்ச் சின்கோனா தேடல் பயணத்தில் 1743ல் பெறப்பட்ட சின்கோனா விதைகள் மற்றும் நாற்றுக்கள் யாவும் ஒரு பெரும் கடற்புயலின்போது கடலில் மூழ்கின

சின்கோனா 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அரச குடும்பத்தினர்ர்களையும் குடிமக்களையும் சிகிச்சையளித்து காப்பாற்றுவதில் பங்களித்துடன் காலனித்துவம் மற்றும் போர்களுக்கும் காரணமாக இருந்தது.

எக்குவடோரின் தலைநகரான குயிடோவிற்கு (Quito) 1735ல் வருகைபுரிந்த வானியலாளர் சார்லஸ் (Charles Marie de la Condamine) இந்த மரத்தை முதல் முதலாக சரியாக விவரித்தார்.அவரால் அடையாளம் காணப்பட்டு விவரிக்கப்பட்ட மரம் Cinchona officinalis,

1735,ல் பாரிஸின் அறியிவில் அமைப்பு தாவரவியலாளர் ஜோஸப் என்பவரை (Joseph de Jussieu) தென்னமெரிக்காவின் தாவரங்கள் குறித்து அறிய அனுப்பி வைத்தது அப்போது அவர் சின்கோனா மரத்தை பிரெஞ்ச் மொழியில் காய்ச்சல் மரம் என்று பொருள் படும் “l’arbre des Fièvres” என்று பெயரிட்டார்.

Jesuits எனப்பட்ட அருட்பணியாளர்களால இவை அறிமுகப்படுத்தபட்டதால், இந்த பட்டைப்பொடி பல நாடுகளில் ஜீசுட்ஸ் பட்டை அல்லது ஜீசுட்ஸ் பொடி (Jesuit’s bark Jesuit’s powder) என அழைக்கப்பட்டது

கிரானடா வைஸ்ராயின் பிரத்யேக மருத்துவரான ஜோஸ் (José Celestino Mutis) கொலம்பியாவின் சின்கோனா மரங்களை 1760 லிருந்து ஆய்வு செய்து ‘’El Arcano de la Quina’’ என்னும் நூலை சின்கோனா மரங்களின் சித்திரங்களுடன் 1793 ல் வெளியிட்டார்

அவர் வணிகரீதியான பலன் அளிக்கும் சின்கோனா வகைகளைக் கண்டறிய ஒரு திட்டத்தையும் முன்மொழிந்தார். அந்த திட்டம் 1783ல் அரசால் அனுமதிக்கப்பட்டு அவரது இறுதிக்காலமான 1808 வரை வெற்றிகரமாக நடந்தது.

கோவிட் பெருந்தொற்றுக்கான மருந்துகளுக்காக 2 வருடங்கள் முன்பு எப்படி நாம் அலைபாய்ந்து கொண்டிருந்தோமோ அதுபோலவே அன்று மலேரியாவுக்கான மருந்துகளுக்கு உலகம் காத்துக்கொண்டிருந்தது. .சின்கோனா கிடைத்தபோது வேறு எதைப்பற்றியும் கவலையில்லாமல் அவற்றை வெட்டி சாய்த்தது

பின்னர் 19 ம் நூற்றாண்டில் குயினைனின் தேவை பலமடங்கு அதிகமாகி பெரும் தட்டுப்பாடு உருவாகியது குயினைன் மரப்பட்டைச் சாறளித்து காய்ச்சலை குணமாக்குவது பாரம்பரிய மருத்துவ முறையாகத்தான் இருந்தது, எனினும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு அப்பட்டைப்பொடி ஐரோப்பாவின் மிக விலை உயர்ந்த மருந்து பொருளாகவே இருந்தது

டச்சு அரசு ஜாவாலிருந்து 1854ல் சின்கோனா நாற்றுக்களின் பட்டையையும் விதைகளையும் சேகரிக்க ஜஸ்டஸ் (Justus Hasskarl) என்பவரை அனுப்பியது

பிரபல பிரிட்டிஷ் தாவரவியலாளர் ரிச்சர்ட் ஸ்ப்ரூஸ் 1849 லிருந்து 1864 வரை 15 ஆண்டுகள் தென்னமெரிக்க காடுகளில் உதவிக்கு கியூ பூங்காவின் தோட்டக்காரர் ராபர்ட் கிராஸ் மற்றும் ஆங்கில புவியலாளரும் கள ஆய்வாளருமான கிளிமென்ஸ் மர்ஹாம் ஆகியோருடன் (Richard Spruce, Robert Cross & Clemens Markham) சின்கோனா விதைகள் நாற்றுக்கள் மற்றும் பட்டைகளை திருட்டுத்தனமாக சேகரித்தார். உதவிக்கு தென்னரிக்க பழங்குடியினரையும் உபயோகப்படுத்திக் கொண்டார்.

பெருவிற்கு இக்குழு வந்தபோது சின்கோனா மரங்கள் ஆயுதமேந்திய காவலாளிகளால் அல்லும் பகலும் பாதுகாக்கபட்டன. இத்தனை ஆபத்துக்கள் இருந்தும் மார்ஹம் பெரு அரசின் அனுமதி இல்லாமல், அவர்களுக்கு தெரியாமல் சின்கோனா விதைகளையும் நாற்றுக்களையும் சேகரித்து மேற்கிந்திய தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் அனுப்பினார்.

கிராஸ் மற்றும் ஸ்ப்ரூஸ் மட்டும் 100,000 சின்கோனா சுக்கி ரூப்ரா (Cinchona succirubra) வகையின் விதைகளையும் 637 நாற்றுக்களையும் சேகரித்தனர். ரகசியமாகவும் பத்திரமாகவும் இந்தியாவிற்கு அவற்றில் 463 நாற்றுக்கள் வந்தன. மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பட்ட அவற்றில் பெரும்பாலானவை துரதிர்ஷ்டவசமாக பிழைக்கவில்லை. ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரு சில நாற்றுக்கள் வளர்ந்தன.

17ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து 19 ம் நூற்றாண்டு வரை சின்கோனா பட்டைகள் உலகெங்கிலும் பயணித்தன.

1840 ல் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் ராணுவ வீரர்களுக்குமான மலேரியா சிகிச்சைகளுக்கு மட்டும் வருடத்திற்கு 700 டன் சின்கோனா மரப்பட்டை உபயோகிக்கப்பட்டது 19ம் நூற்றாண்டில்தான் ஐரோபியர்கள் அதீத சந்தைப்படுத்தலால் சின்கோனா மரங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள்.

எனவே அவரவர் நாடுகளில் சின்கோனா பயிரிடுவது மற்றும் இருக்கும் சின்கோனா மரங்களை பாதுகாப்பது ஆகியவற்றில் ஒவ்வொரு நாடும் முனைப்பாக இருந்தனர். பிறகு சின்கோனா உலகின் பல பாகங்களிலும் பரவலாக வளர்க்கப்பட்டது. டச்சு மற்றும் பிரிட்டிஷார் சின்கோனா வளர ஏதுவானவை என தாவரவியலாளர்களால் அடையாளம் காட்டப்பட்ட பிரதேசங்களை பாதுகாத்தனர். சின்கோனா விதைகள் வேறெங்கும் கொண்டு செல்லப் படுவதையும் தடை செய்தனர்.1852ல் டச்சு அரசு ஜஸ்டஸ் (Justus Charles Hasskarl) என்பவரை தென்கிழக்காசியாவில் சின்கோனாவை பயிரிட முனைந்த்தாக குற்றம் சாட்டி கைது செய்தது.

அச்சமயத்தில்தான் 1840களில் துவங்கி பல வருடங்கள் சார்லஸ் லெட்ஜர் மமானியின் உதவியுடன் ரகசியமாக பெருவின் காடுகளில் அதிக குயினைன் அளிக்கும் மரத்தை தேடிக்கொண்டிருந்தார்,

  • பொலிவியாவிலிருந்து பலரால் 1846ல் சேகரிக்கப்பட்ட விதைகளை கொண்டு உருவானவையே ஐரோப்பாவின் சின்கோனா வகையான C. Calisaya
  • பெருவிலிருந்து உலகின் பிற பாகங்களுக்கு அறிமுகமான மற்றொரு முக்கிய வகை சிவப்பு பட்டை கொண்ட Cinchona succirubra, (இப்போது C. pubescens– இதன் பட்டைச்சாறு காற்றில் கலக்கையில் சிவப்பு நிறமாக மாறும்)

கியூ பூங்காவில் சின்கோனாக்களுக்கென்றே பிரத்யேக பசுங்குடில்கள் உருவாககப்பட்டன. இந்தியாவில் நீலகிரி மற்றும் கொல்கத்தா தாவரவியல் பூங்காக்களில் இவை வளர்க்கப்பட்டன.

1880களில் நீலகிரியின் சின்கோனா தோட்டங்கள் தேயிலை தோட்டங்களாக மாறும்வரை இந்தியா மற்றும் டச்சு அரசுகளே சின்கோனா உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் இருந்தன.

தென்னமெரிக்க சின்கோனா பட்டையின் முக்கிய ஆல்கலாய்டுகள் குயினைன் மற்றும் குயினைடின்((quinine & quinidine.) இரண்டும் மருத்துவத்துறையில் வெகுவாக பயன்பட்டு அவற்றின் தேவை உலகெங்கும் அதிகரித்தபோது மரங்களை பாதுகாக்கும் நடவடிகைகளும் கடுமையாகின.

பல நாடுகளுக்கும் அப்போது சின்கோனா மரப்பட்டை தேவைப்பட்டது எனவே அவை பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை இதன் பொருட்டு செலவழித்தன. 1857ல் பிரிடிஷ் இந்தியா வருடத்திற்கு சுமார் 7000 ரூபாய்கள் குயினைனுக்கு மட்டும் செலவளித்தது.

டச்சு , பிரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷாருக்கு முன்பாக ’’தங்களின் தேவைக்கேற்ற இயற்கை குயினைனை தாங்களே தயாரிப்பது, அல்லது குயினைனை வேதிப்பொருட்களிலிருந்து தயாரிப்பது ’’ ஆகிய இரண்டு வழிகள் மட்டும் இருந்தபோத,..1850ல் பிரெஞ்ச் மருந்து நிறுவனங்கள் ஜனவரி 1, 1851 க்குள் ரசாயன குயினைன் தயாரிப்பவர்களுக்கு 4000 பிராங்குகள் பரிசாக அளிக்கப்படும் என்றுகூட அறிவித்தார்கள் எனினும் 1944 வரை ரசாயன குயினைன் உருவாகி இருக்கவில்லை.

இந்தியாவில் சின்கோனா

பிரிட்டிஷ் இந்தியாவில் 1880களிலிருந்து சின்கோனா நீலகிரி மலையிலும் டார்ஜிலிங்கிலும் வளர்க்கப்பட்டது. கேரள மாநிலத்தின் மூணாரில் உள்ள மலைகளில் பிரிடிஷ் இந்தியாவின் அதிகாரிகள், பூஞ்சார் அரசரிடமிருந்து குத்தகைக்கு எடுத்த பூஞ்சார் பகுதி நிலத்தில் தேயிலை மற்றும் காபியுடன் சின்சோனா வளர்ந்தது.

இந்தியாவில் தற்போது சின்கோனா வணிக ரீதியாக பயிரிடப்படுவது டார்ஜிலிங்கில் மட்டுமே 1862 ல் தொடங்கப்பட்ட சின்கோனா மற்றும் பிற மருத்துவ தாவரங்களின் இயக்குநரகத்தின் (Directorate of Cinchona and Other Medicinal Plant (DCOMP)) 6900 ஏக்கரில் வளரும் சின்கோனா மரங்களிலிருந்து சுமார் 1,50,000 லிருந்து 2,00,000 கிலோ சின்கோனா மரப்பட்டை உருவாகிறது.

தாவரவியல் பண்புகள்

29 மீ உயரம் வரை வளரும், காபி பயிரின் குடும்பமான ரூபியேசியை சேர்ந்த சின்கோனா மரங்கள் பசுமை மாறா வகையை சேர்ந்தவை. எதிரடுக்கில் அமைந்திருக்கும் பளபளப்பான இலைகளையும் குழல் போன்ற வெண்மையும் இளம் சிவப்பும் கலந்த அழகிய சிறு மலர்களையும் கொண்டிருக்கும் கொத்துக்களாக காணப்படும் மலர்களின் இதழ்களில் மென்மயிர்களைப்போல வளரிகள் பரவியிருக்கும். சின்கோனா மரத்தின் கனி மிகச்சிறியது

7 லிருந்து 8 வருடம் வளர்ந்த சின்கோனா மரங்களிலிருந்து மரப்பட்டை எடுக்கையில் குயினைன் அளவு அதில் அதிகமிருக்கும். சின்கோனா

மரப்பட்டைகளில் குயினைன் மட்டுமல்லாது 35 வகையான பிற முக்கியமான ஆல்கலாய்டுகளும் கிடைக்கின்றன

கதைகள்

சின்கோனா மரப்பட்டையில் குயினைன் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து பல கதைகள் இருந்தன அவற்றில் பிரபலமானது 1928 ல் சி ஜே எஸ் தாம்ஸன் (C.J.S. Thompson) பிரிடிஷ் மருத்துவ சஞ்சிகையில் எழுதியது. காய்ச்சலில் அவதியுற்ற இந்தியர் ஒருவர் சின்கோனா மரம் முறிந்து வீழ்ந்து கிடந்த ஏரித் தண்ணீரை அருந்தி குணமான கதையை அதில் விவரித்திருந்தார்

ஐரோப்பிய குயினைன் கதையொன்று உலகெங்கிலும் பரவலாக இருந்த ஒன்று. அதுதான் உண்மை என இன்னும் நம்பிக்கொண்டிருப்பவர்களும் உண்டு.

17 நூற்றாண்டில் ஸ்பெயினின் சின்கோன் பகுதியை சேர்ந்தவரும் count என்னும் நிலப்பிரபுவும், மன்னருக்கு அடுத்த நிலையில் இருந்தவரும் பெருவின் வைஸ்ராயுமான லூயியின் (Luis Jerónimo Fernández de Cabrera Bobadilla Cerda y Mendoza) மனைவி அன்னாதான் (Ana de Osorio (1599–1625) மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கையில் முதன்முதலில் குயினைன் அளிக்கப்பட்டு மலேரியாவிலிருந்து குணமானவர் என்னும் ஒரு புனைவு உலகெங்கும் பிரபலமாக இருந்தது. குணமான அவர் ஸ்பெயினுக்கு திரும்பிச் சென்ற போது தன்னுடன் சின்கோனா மரப்பட்டைகளை எடுத்துச்சென்று ஐரோப்பாவில் அவற்றை அறிமுகப்படுத்தினார் என்றது அந்தக்கதை. எனவே சின்கோன் பகுதியின் பிரபுவின் மனைவியாதலால் countess chinchon என அழைக்கப்பட்ட அவரின் பெயராலேயே அந்த மரமும் சின்கோனா மரம் என்று அழைக்கப்பட்டதாக கதை சொன்னது.

1859ல் இந்தியாவிற்கான சின்கோனா தேவையின் ரகசிய செயல்பாட்டாளராக இரண்டு வருடங்கள் தென்னமரிக்காவில் செயல்பட்ட க்ளிமென்ஸ் மர்ஹாம் தனது தென்னமரிக்க அனுபவங்களை நூலாக்கினார். , அவருக்கு பழங்குடியினர் செய்த உதவிகளை, அக்காட்டின் அனைத்து தாவரங்களையும் அடையாளம் கண்டுகொண்ட பழங்குடியினரின் அறிவையெல்லாம் அந்நூலில் விவரித்த, அவரே ’’சின்கோன் என்னும் பிரபுவின் மனைவி மலேரியாவால் நோயுற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்து உயிர் காத்த மரப்ட்படை அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டு சின்கோனா மரம் என்னும் பெயர் பெற்றது’’ என்னும், இன்று வரையிலும் புழக்கத்தில் இருக்கும் புனைவை நூலில் எழுதி மேலும் பிரபலமாக்கியவர்.

வைஸ்ராய் லூயியின் அதிகாரபூர்வ நாட்குறிப்பு 1930 ல் கிடைத்த போது அவரது முதல் மனைவியான அனா இவர் வைஸ்ராயாவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே ஸ்பெயினில் மறைந்து விட்டார் என்னும் உண்மை தெரிந்தது

கணவருடன் தென்னமரிக்காவிற்கு வந்த அவரது இரண்டாம் மனைவி பிரான்சிஸ்கா (Francisca Henríquez de Ribera) நல்ல உடலாரோக்கியத்துடன் இருந்தார். அவருக்கும் பட்டைச்சாறு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. வைஸ்ராய்க்கும் பலமுறை கடும் காய்ச்சல் வந்திருக்கிறது எனினும் அவர் ஒருமுறைகூட சின்கோனா பட்டை பொடியை நிவாரணமாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை. மேலும் வைஸ்ராயின் இரண்டாம் மனைவியும் ஸ்பெயினுக்கு திரும்பிச்செல்லும் வழியில் உடல்நலக்குறைவால் கொலம்பியா துறைமுகத்திலேயே உயிரிழந்தார்.அவரும் ஸ்பெயினுக்கு செல்லவே இல்லை. எனவே பிரபுவின் மனைவிகள் மூலம் இந்தப்பொடி ஐரோப்பாவிற்கு அறிமுகமானது என்பது வலிந்து உருவக்காப்பட்ட புனைவுதான் என்பதை அவரின் நாட்குறிப்பு உறுதி செய்தது.

ஆனால் இக்கதை மிகப்பிரபலமானதாக அக்காலத்தில் இருந்ததால் 1742ல் தாவர வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் சின்கோன் அரசியின் பெயரால் சின்கோனா அஃபிஸினாலிஸ் என்று அம்மரத்துக்கு பெயரிட்டார். 

இந்த அறிவியல் பெயரில் chinchon என்பது தவறாக cinchon என்றிருப்பதால் 1874 ல் இது Chinchona. என சரியாக திருத்தப்பட வேண்டும் என்னும் வேண்டுகோள் பலரால் முன்வைக்கப்பட்டும் பெயர் இன்று வரை மாற்றப்படவில்லை.

கெச்சுவா பழங்குடியின மொழியில் குயினா (quina) என்றால் புனித மரப்பட்டை என்று பொருள். இது சில சமயம் பட்டைகளின் பட்டை எனும் பொருளில் quinquina என்றும் குறிப்பிடப்பட்டது. சின்கோனா மரப்பட்டை, பெருவிய பிசின் மரப்பட்டை இரண்டுமே குயினா என்றே குறிப்பிடப்படுகிறது. எனவே இதிலிருந்து ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டபோது அது குயினைன் என்று பெயரிடப்பட்டது.

கண்டுபிடிப்புக்கள்

ஆங்கிலேய மருத்துவரான தாமஸ் (Thomas Sydenham -1624–89) மிகத் திறமையாக சின்கோனா மரப்பட்டை சாற்றை சிகிச்சைகளுக்கு உபயோகித்து மலேரியா காய்ச்சலை பிற காய்ச்சல்களிலிருந்து வேறுபடுத்துவதை கண்டறிந்தவர்.

1790 ல் பிரெஞ்ச் வேதியியலாளர் ஆண்டனி (Antoine François de Fourcroy (1755–1809) சின்கோனா மரப்பட்டையிலிருந்து சிவப்பு நிறத்தில் ஒரு பிசினை பிரித்தெடுத்தார் அதில் ஆல்கலாய்டுகளைப் போன்ற குணங்கள் கொண்ட வேதிப்பொருட்கள் இருப்பதாக அறிவித்தார் எனினும் அந்த செம்பிசின் மலேரியாவை குணமாக்கவில்லை.

1800 வரை சின்கோனா மரப்பட்டை கரைசலாக்கப்பட்டு குடிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. 1811ல் போர்த்துக்கீசிய கப்பற்படை அறுவை சிகிச்சை மருத்துவரான பெர்னார்டினோ (Bernardino Antonio Gomez) சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைன் ஆல்கலாய்டை பிரித்தெடுத்து “cinchonino.” என பெயரிட்டார்.

1820 ல், பிரான்ஸின் வேதியியலாளர்கள் பியரி மற்றும் ஜோசப் (Pierre Joseph Pelletier & Joseph Bienaim Caventou) ஆகியோர் cinchonino” என்பது “quinine” மற்றும் “cinchonine.” இரு முக்கிய ஆல்கலாய்டுகளின் கலவை என கண்டறிந்தார்கள்

சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைனை பிரித்தெடுக்கும் முறையையும் இவர்கள் கண்டறிந்தார்கள். இது நவீன மருந்துத் தொழிலின் தொடக்கம் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.. அவர்கள் குயினைன் பிரித்தெடுக்க பாரிசில் ஒரு தொழிற்சாலையையும் நிறுவினர்,

அடுத்த முக்கிய திருப்பமாக 1833ல் ஹென்ரி மற்றும் டிலோண்டரால் குயினிடைன் (quinidine) பிரித்தெடுக்கப்பட்டது ( Henry and Delondre),

1844ல் சின்கோனிடைன் (cinchonidine) வின்க்கில் (Winckle) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு 1853 ல் இறுதியாக அது quinidine என பாஸ்டரால் பெயரிடபட்டது (Pasteur).

இதன் மூலக்கூறு வடிவம் 1854ல் ஸ்டெரெக்கரால் கண்டறியப்பட்டது( Strecker)

உலகின் முதல் செயற்கைச்சாயமான மாவீன் 5 (mauveine) வில்லியம் ஹென்ரியால் (William Henry Perkin) குயினைனை கண்டுபிடிக்கும் முயற்சியின் போது1856ல் கண்டறியபட்டது,

குயினைனின் ரசாயனத்தயாரிப்பு பல சிக்கல்களை தாண்டி 1944ல் சாத்திமாமயிற்று. பலர் இந்த முயற்சியில் இறங்கி படிப்படியாக முன்னேற்றம் கண்டனர்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில் சின்கோனா மரப்பட்டை மற்றும் குயினைன் வர்த்தகத்தில் டச்சு உலகின் ஆகப்பெரிய நாடாக இருந்து 1944 ல் ரசாயன குயினைன் தயாரிப்பு துவங்கும் வரை டச்சு அரசே குயினைன் சந்தையில் கோலோச்சியது

ஹோமியோபதி என்னும் மருத்துவ முறையும் சின்கோனா பட்டையின் மருத்துவ பண்புகளை சோதிக்கும் முயற்சியில் தான் உருவானது. ஹோமியோபதியை தோற்றுவித்தவர். சாமுவேல் ஹானிமன்(1755-1843)

மருத்துவரான இவர் அக்காலத்தின் மருத்துவ ஆய்வு முறையின் மீது கடும் அதிருப்தி கொண்டிருந்தார். இரத்தம் சுத்திகரிக்க நோயாளி மீது அட்டையை விட்டு உறிஞ்ச செய்வது, இருதயத்தின் இரத்தக் குழாய்களை வெட்டி இரத்தத்தை வடியவிடுவது போன்ற கொடிய சிகிச்சையால் பலர் கொல்லப்பட்டனர்.

இவற்றால் டாக்டர் ஹானிமென் மருத்துவ தொழிலை விட்டு விட்டார். பல ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர் .1796 ல் வில்லியம் கல்லன் என்பவரின் மருத்துவ நூலை ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கு மொழி மாற்றிக் கொண்டிருக்கையில் பெருவின் மரப்பட்டை காய்ச்சலை குணமாக்குவது குறித்து எழுதி இருப்பதை கண்டார். அதை பரிசோதித்து பார்க்கையில் தான் ’’ஒத்தது ஒத்ததை குணமாக்கும்’’ என்னும் விதியின் அடிப்படையிலான சிகிச்சை முறையான ஹோமியோபதி 15 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவரால் உருவாக்கப்பட்டது.

யுனானி மருத்துவ முறையை தோற்றுவித்தவரான காலனின் குருதி நீக்கச் சிகிச்சையும் குயினைனின் வெற்றிக்கு பிறகுதான் நிறுத்தப்பட்டது

தொற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்பட்ட முதல் இயற்கை இரசாயன கலவை குயினைன் தான் இன்று, குயினைன் மருத்துவ நோக்கங்களுக்காக அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இது மலேரியாவைத் தடுக்கப் பயன்படுவதில்லை, மாறாக நோய்க்கு காரணமான உயிரினமான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்தின் ஹீமோகுளோபினை கரைத்து வளர்சிதைமாற்றம் செய்யும் திறனில் குயினைன் குறுக்கிடுகிறது.

சிகிச்சை வரலாறு

சின்கோனாவின் எந்த வகை மரத்தின் பட்டை வீரியமிக்கது, பட்டைபொடியில் செய்யப்படும் போலி மலேரிய மருந்துகள், குயினைனின் பக்க விளைவுகள் இவை அனைத்தும் சேர்ந்து சின்கோனாவை மலேரியாவுக்கான தீர்வாக மட்டும் இல்லாமல் பெரும் கேள்விக்குறியாகவே ஆக்கி இருந்தது,

இம்மருந்தை எடுத்துக்கொண்ட நோயாளிகள் சிலருக்கு கொப்புளங்கள் உண்டாகின சிலருக்கு உதடுகள் எரிந்து புண்னாகின இன்னும் சிலருக்கு காதுகளில் விசித்திரமான ஓலிகள் கேட்டன பலருக்கு காது செவிடாகி, கண்பார்வையும் குறைந்தது .

.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் பயன்பட்டு வரும் ஆர்டிமிசின் என்னும் தாவரமருந்தும் மலேரியாவுக்கு எதிரானதுதான். இதுவும் குயினைனுக்கு மாற்றாக பயன்படுத்த பட்டது

மலேரியாவினால் இறப்பு அதிகமாகிக்கொண்டே இருந்தாலும் சின்கோனா மரப்பட்டைகளை சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள பலரும் தயங்கினார்கள் ஆங்கிலேய மருந்தாளுநர் ராபர்ட் டால்போர்தான் (Robert Talbor) 17 ம் நூற்றாண்டின் இறுதியில் சின்கோனா பட்டையின் உபயோகங்களை எளியவர்களுக்கும் புரியும்படி விளக்கினார். அப்படியும் பலருக்கு சின்கோனாவை சிகிச்சைக்கு எடுதுக்கொள்ள பெரும் மனத்தடை இருந்ததால், 1670களில் சின்கோனாவைவிட சிறந்தது என்னும் பெயரில் அதே சின்கோனா என வெளிப்படையாக தெரிவிக்காமல் ஒரு ரகசிய மருந்து என சொல்லி சின்கோனா பட்டைச்சாற்றினால் பலரை குணமாக்கினார்.

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் மற்றும் அவரது இளம் மகன் பதினாலாம் லூயிஸ் ஆகியோரையும் டால்போர் வெற்றிகரமாக சின்கோனா மரப்பட்டையை சிகிச்சையாக அளித்து மலேரியாவிலிருந்து மீட்டார்

டால்போர் சின்கோனா மரப்பட்டை கஷாயாங்களின் பலவித தயாரிப்பு முறைகளை இளவரசர் லூயிஸ்க்கு தனது இறப்புக்கு பின்னரே அவை வெளியிடப்படவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் எழுதிக் கொடுத்திருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவர் எழுதிய சின்கோனாவை குறித்த அனைத்தும் அடங்கிய நூலான ” Le remede Anglais pour la guerison des fievres. 1682 ல் பிரான்ஸ் மன்னரால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதன் ஆங்கில வடிவம் ‘Talbor’s wonderful secret for curing of agues and fevers. வெளியானது இவ்விரண்டு நூல்களும் மக்கள் மத்தியில் அதுவரை இருந்த குயினைன் குறித்த சித்திரத்தை அடியோடு மாற்றியது

சின்கோனா மரப்பட்டையின் விலை 25 லிருந்து 100 ஃப்ரேங்க்குகள் உடனடியாக உயர்ந்தது. ’’இறை நம்பிக்கையும் பிரார்த்தனையும் செய்யாத அற்புதங்களை கப்பல்களில் வந்து கொண்டிருக்கும் சின்கோனா மரப்பட்டைகள் செய்யும்’’ என்பது அப்போது பிரபலமான ஒரு வாசகமாக புழக்கத்தில் இருந்தது

1866 லிருந்து 68 வரை தென்னிந்தியாவின்’ மெட்ராஸ் சின்கோனா’ கமிஷனால் பெருமளவில் சின்கோனா பட்டைகளின் காய்ச்சல் குணமாக்கும் திறன் பரிசோதிக்கப்பட்டது. 2472 மலேரியா நோயாளிகளில் சோதனை நடத்தி அவர்களில் 846 பேருக்கு குயினைனும்,664பேருக்கு குயினிடைனும், 559 பேருக்கு சின்கோனைனும் 403 பேருக்கு சின்கோனிடைனும் அளிக்கப்பட்டது. இவர்களில் 2445 நோயாளிகள் குணமடைந்தனர் 27 பேர் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

குணமாக்கும் இயல்புக்கு சமமாகவே நச்சுத்தன்மையும் கொண்டிருக்கும் ஆல்கலாய்டுகளான குயினைன் மற்றும் குயினைடைன் ஆகியவை மிக அதிகமாக மலேரியா சிகிச்சையில் உபயோகப்படுத்தப்பட்டன.

முதல் உலகப்போரின் போது குயினைன் மட்டுமே மலேரியாவிற்கான ஒரே சிகிச்சையாக இருந்தது ரொனால்ட் ரோஸ்.(Ronald Ross) கொசுக்களின் மூலம் மலேரியா பரவுதலை கண்டறிந்த பின்னர் குயினைன் உபயோகம் பல மடங்கு அதிகரித்தது

உலகப்போர் மருத்துவ முகாம்களில்தான் ரத்தத்தில் இருந்த மலேரிய ஒட்டுண்ணிகளுக்கெதிராக குயினைன் வீரியமிக்க மருந்தாக செயல்பட்டாலும், ஈரலை தாக்கும் மலேரியா ஒட்டுண்ணிகளுக்கெதிராக அவை வேலை செய்வதில்லை என்பது கண்டறியப்பட்டது. அது எதனால் என்றும் அப்போது அறிந்து கொள்ள முடியவில்லை.

1917 ல் சர் வில்லியம் ஆஸ்லர் மலேரியாவை குயினைன் கொண்டு குணப்படுத்த முடியாதவர்கள் மருத்துவத்துறையை விட்டு விலகிவிடலாம் என்று அறிவிக்கும் அளவுக்கு மலேரியாவுக்கு எதிராக குயினன் 1920 வரை வெற்றிகரமாக செயல்பட்டது. 1920ல் மலேரியா சிகிச்சையில் குளோரொகுயின் அறிமுகமானபோது குயினைனின் பயன்பாடு ஏறக்குறைய நின்றுபோனது.

ஒட்டுண்ணிகளால் குளோரோகுயினுக்கான உயிர்ம எதிர்ப்பு (resistance) உருவானபோது மீண்டும் குயினைன் தனது இடத்தை பிடித்துக் கொண்டது

மலேரியா சிகிச்சைகள் வெற்றிகளைத் தந்தாலும், சின்கோனா ஆல்கலாய்டுகளின் பயன்பாடு உயிருக்கு ஆபத்தான எதிர்விளைவுகளையும் உருவாக்கி இரு முனைகளும் கூர் கொண்ட கத்தியை போலிருந்தது.

சிகிச்சை முறைகள்

கசப்புச் சுவையுடன் சிறிது எலுமிச்சை நறுமணம் கொண்டிருக்கும் குயினைன் பட்டைப்பொடி. பெரும்பாலும் நீரில் கரைத்து அருந்தப்படும் இவை மாத்திரைகளாகவும் தயாரிக்கப்பட்டன.

பிரிட்டிஷ் அதிகாரிகள் சோடா மற்றும் சர்க்கரையில் குயினைன் பொடியை கரைத்து தயாரித்த டானிக்கை அருந்தினர். இந்தக் கலவையை உருவாக்கிய எராமஸ் (Erasmus Bond) 1858ல் அதற்கு காப்புரிமை பெற்றார். பல மருந்து நிறுவனங்கள் 1860 களில் இந்த டானிக் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டன. 1880 களில் பிரிட்டிஷ் இந்தியாவின் செயல்பாட்டாளர்களாயிருந்த சில நைஜீரியர்கள் இந்த டானிக்குடன் சிறிதளவு ஜின்னையும் கலந்தனர். சிறிது போதையும் அளித்த இந்த மலேரிய டானிக் ஒரு நூற்றாண்டு காலம் மக்களிடையே வெகுவாக புழங்கியது

மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் போது, ​​குயினின் மாத்திரை வடிவில் கொடுக்கப்படுகிறது. குயினின் நீர் அல்லது டானிக் நீர் வடிவிலும் விற்கப்படுகிறது, இது ஜின் மற்றும் ஓட்கா போன்ற மது வகைகளுடன் ஒரு பிரபலமான கலவையாக உலகம் முழுவதும் அருந்தப்படுகிறது. குயினின் கலந்த பானங்களில் “Q” என்ற எழுத்து குறிக்கப்பட்டிருக்கும்.

1889லிருந்து புரோமோ குயினைன் (Bromo Quinine) என்னும் பெயரில் சந்தைப்படுத்தப்பட்ட குயினைன் 1960 வரை விற்பனையானது. குயினைன் கோகெயின் மற்றும் ஹெராயின் போன்ற போதை மருந்துகளில் கலப்படம் செய்யப்படுகிறது

செயற்கை குயினைன் தயாரிப்பு மிகுந்த செலவு பிடித்த ஒன்றாக இருந்தது. தொடர்ந்து chloroquine, primaquine, proguanil, மற்றும் artemisinin ஆகியவை மலேரியாவிற்கு எதிராக செயல்படுவதை நிரூபிக்க முடிந்ததென்றாலும் இன்னும் இயற்கை குயினைனுக்கு இணையான பாதுகாப்பான ஒன்றை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடர்கின்றன. மொத்த குயினைன் உற்பத்தியில் 40 சதவீதம் மருத்துவத்துறையிலும் 60சதவீதம் உணவுத் தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றது

அதன் செயல்திறன் முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்ட 400 ஆண்டுகளுக்குப் பிறகும் குயினின் ஒரு முக்கியமான மலேரியா எதிர்ப்பு மருந்தாகவே உள்ளது. இருப்பினும், 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேரியாவிற்கான முதல்-வரிசை சிகிச்சையாக உலக சுகாதார அமைப்பால் (WHO) குயினின் பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் குறைவான பக்கவிளைவுகளுடன் குயினைனுக்கு இணையாக பலனளிக்கும் பிற மருந்துகள் உள்ளன. எனெவே ஆர்ட்டெமிசினின் இல்லாதபோது மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கின்றது. மூட்டுவலி மற்றும் காக்காய்வலிப்புக்கு சிகிச்சையளிக்கவும் குயினின் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது chloroquine மற்றும் Atabrine இரண்டும்தான் மலேரியா சிகிச்சையில் பயன்படுகின்றன. இம்மருந்துகளுக்கான எதிர்ப்புத்தன்மையை மலேரியா ஒட்டுண்ணிகள் உலகின் சில பகுதிகளில் உருவாக்கி உள்ளன. வியட்நாமில் அப்படியான எதிர்ப்புத்திறன் கொண்ட ஒட்டுண்ணிகள் இருப்பதால் அங்கு மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க இயற்கை குயினைன் உபயோகபடுத்தப்படுகிறது.

குயினின் இன்று

குயினின் இன்றும் தென் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றாலும், உலக குயினைன் சந்தையின் பெரும்பகுதி தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவால் வழங்கப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தாலும் உலக மருந்து சந்தையில் போட்டியிட முடியாமல் ஒதுங்கி இருக்கிறது

இயற்கையாக கிடைக்கும் குயினைன் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் பன்னாட்டு நிறுவனங்களால் காப்புரிமை பெற்றவையாதலால் அவை உற்பத்தியாகும் நாடுகளுக்கும், அவற்றின் பயன்பாடுகளை முதலில் உருவாக்கிய பழங்குடிச் சமூகங்களுக்கும் எந்த நன்மையும் கிடைப்பது இல்லை என்பதற்கு குயினைன் வர்த்தகமும் மற்றுமோர் எடுத்துக்காட்டு.

லெட்ஜர்

1890 ல் தனது இறுதிக் காலத்தில் வறுமையில் வாடிய லெட்ஜருக்கு உதவ கிளிமென்ஸ் மர்ஹான் பெரிதும் முயன்றார் இந்திய மற்றும் டச்சு அரசுகள் ஆரம்பத்தில் அவரின் வேண்டுகோளை பரிசீலிக்கவில்லை. எனினும் 1897ல் டச்சு அரசு லெட்ஜெருக்கு வருடத்திற்கு 100 டாலர் உதவித்தொகை அளிக்க ஒத்துக்கொண்டது. உதவித்தொகை கிடைத்த 9 வருடங்கள் கழித்து 1906 ல் தனது 87 வது வயதில் 1906ல் லெட்ஜெர் உயிரிழந்தார்

இந்தியாவிலும் ஜவாவிலும் வளரும் ஆயிரக்கணக்கான சின்கோனா மரங்கள் லெட்ஜெரினால் தருவிக்கப்பட்ட விதைகளிலிருந்து உருவனாவை.
1900த்தில் உலகின் மொத்த குயின்னைன் உற்பத்தியில் ⅔ பங்கு ஜாவாவில் இருந்து கிடைத்தது. இத்தனை வருடங்கள்,கழித்தும் லெட்ஜர் வகை சின்கோனாக்களே அதிக குயினைன் அளிக்கின்றன.

Gabriele Grammiccia, எழுதிய சார்ல்ஸ் லெட்ஜரின் வாழ்க்கை 5 என்னும் நுல் அவர் எத்தனை அசாதாரணமான மனிதர் என்பதை நமக்கு சொல்கிறது. 18 வயதில் அல்பகா ஆடுகளுடன் துவங்கிய லெட்ஜரின் வாழ்க்கையை அல்பகா ஆடுகளின் ரோமமும் சின்கோனா மரப்பட்டையுமே வடிவமைத்தது என்று சொல்லலாம்.

சிட்னியில் இருந்த லெட்ஜரின் கல்லறை (Rockwood Methodist Cemetery in Sydney) சிதிலமடைந்து அவரின் இரண்டாவது மனைவியின் சகோதர சகோதரிகளின் பெயர் மட்டும் அதில் மீதமிருந்தது. சமீபத்தில் அவரின் சுயசரிதை எழுதிய கிரேமிசியாவால் கல்லறை புதுப்பிக்கப்பட்டு சார்லஸ் லெட்ஜரின் பெயரும் அதன் கீழே உலகிற்கு குயினைன் அளித்தவர் என்றும் பொறிக்கப்பட்டது

தற்போது மலேரியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன, சின்கோனா இனத்தின் வரலாற்று ரீதியான அதிகப்படியான சுரண்டலால் அதன் 17 இனங்கள் பெருவில் அழிந்துவரும் இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன,

1895ல் ஆய்வாளர்கள் ஆண்டஸ் மலைப்பகுதிகளில் 25000 சின்கோனா மரங்கள் இருந்ததை கணக்கிட்டிருந்தார்கள் இப்போது அதே நிலப்பரப்பில் இருக்கும் போடோகார்பஸ் தேசிய பூங்காவில் வெறும் 29 மரங்கள் மட்டுமே இருக்கின்றன,

பெருவின் தேசிய கொடியில் இம்மரம் பொறிக்கப்பட்டிருக்கிறது தென்னமரிக்க உள்ளூர் இயற்கை பாதுகாப்பு அமைப்புக்கள் சின்கோனா மரங்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. ’’ஆசிர்வதிக்கபட்ட விதைகள்’’ என்னும் பொருள் கொண்ட சூழல் அமைப்பான செமில்லா பெண்டிட்டா (Semilla Bendita) 2021 ல் பெரு தன்னாட்சி பெற்ற 200 வது ஆண்டை கொண்டாடும் விதமாக 2021 சின்கோனா விதைகளை நட்டுவைத்து அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது மேலும் இவ்வமைப்பு பல்துறை வல்லுநர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒருங்கிணைத்து சின்கோனா மரங்களின் மரபியல் வளரியல்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை முன்னெடுக்கிறது உள்ளூர்வாசிகளின் பங்களிப்பு இம்மரங்களின் பாதுகாப்பில் இருப்பதையும் இந்நிறுவனம் உறுதி செய்து கொள்கிறது

கியூ பூங்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு முக்கிய இடங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்னமரிக்கவிலிருந்து கொண்டு வரப்பட்ட சின்கோனா மரப்பட்டைகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்துவந்த பாதைகளை ஆராய்ந்தோமானால் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கும் சாகசக்கதைகளையெல்லாம் மிஞ்சும் சாகசமும் மர்மமும் நிறைந்தவையாக அவை இருக்கும் .

குயினைன் கடந்துவந்த பாதை ஒரு மாபெரும் வலையென வரலாற்றில் விரிந்திருக்கிறது சின்கோனா மரப்பட்டை பெறப்பட்ட , தென்-அமெரிக்காவின் ஆண்டஸ் காடுகளிலிருந்து பிரிட்டிஷ் தாவரவியல் பூங்காவிற்கும், தென்னிந்தியாவின் காலனித்துவ தோட்டங்கள் முதல் இந்தோனேசியாவின் ஜாவா தீவு வரையிலும் உலகம் முழுவதும் குயினைனின் வரலாறு விரிந்துள்ளது..

மிக எளிதாக தாவர அடிப்படையிலான மருந்துகளை மாற்று மருத்துவம்’ என்று நினைத்து மக்கள் கடந்து விடுகிறார்கள். மேற்கத்திய கலாச்சாரத்தில் மருத்துவர்களால் தற்போது பரிந்துரைக்கப்படும் 7000 க்கும் மேற்பட்ட மருத்துவ கலவைகள் தாவரங்களிலிருந்து பெறப்பட்டவை, ஆனால் மனித குல வரலாற்றில் குயினைன் உள்ளிட்ட பல முக்கிய உயிர்காக்கும் மருந்துகளின் பொருட்டு நாம் தாவரங்களுக்கு என்றென்றைக்குமாக கடன் பட்டிருக்கிறோம். பல்லுயிர் பெருக்கமும் மனித ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக்கொண்டு செல்வதைத்தான் குயினைனின் இந்த கதை காட்டுகிறது.

மமானியைப்போல பல்லாயிரக்கணக்கான மனிதர்களை பலி கொண்டபின்னரே மலைத்தெய்வங்கள் நமக்கு பலவற்றை அருளியிருக்கின்றன மமானியின் பெயரில் அந்த சின்கோனா மரம் பெயரிடப்படவில்லை. அவர் வரலாற்றில் மறக்கப்பட்டவர். மறைக்கப்பட்டவர். ஆனால் வரலாற்றின் கண்களுக்கு தெரியாமல் பலியான பல்லாயிரக்கணக்கானோர் நம் உயிர்காக்கும் மருந்துகள் கடந்து வந்த பாதையில் குருதிப்பலி கொடுத்திருக்கிறார்கள்

கோவிட் தொற்றில் தப்பி பிழைத்திருக்கும் நமக்கு இனி மலேரியா வரவேண்டாம், சாதாரண காய்ச்சல் வந்தால் கூட நம் நலனுக்கென உயிரிழந்த மமானி, உயிருக்கு துணிந்து பல சாகசங்கள் செய்து அடுத்த தலைமுறைகளுக்கு தேவையானவற்றை அபாயங்களை பொருட்படுத்தாமல் கண்டறிந்தவர்கள், எந்த சொந்த நலனுக்காகவும் இன்றி மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த கிருஸ்துவ அருட்பணியாளர்கள் என சிலரையாவது நினைத்துப்பார்க்கலாம்

*2021ல் மலேரியாவுக்கான அங்கீகரிக்கப்பட ஒரே தடுப்பு மருந்து Mosquirix. என்னும் சந்தைப் பெயரில் இருக்கும் RTS, S. உலக சுகாதார நிறுவனம் இதனை மலேரியா தொற்று இருக்கும் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பரிந்துரை இருக்கிறது

« Older posts

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑