அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

மிஸல்டோ – முத்தச் சிறுகிளை!

ஜெர்மனியின் ஆபென்பெர்க் பல்கலைக்கழகம் அந்நகரின் முதியவர்கள் நலனுக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடன் பல்கலைக்கழகம்  இந்த வாரம் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் அங்கு பட்ட மேற்படிப்பின் பொருட்டு  சென்றிருக்கும் மகன் சரணும்   கலந்து கொண்டான்.

கொண்டாட்டம் நடைபெற்ற அரங்கு நுழைவாயிலில் கட்டி தொங்க விடப்பட்டிருந்த வெண்ணிற கனிகளுடன் கூடிய  ஒரு சிறு பசுங்கிளையை கடப்பவர்கள், அதனடியில் நிற்பவர்கள் அனைவரும், அவனுட்பட தொடர்ந்து முத்தமிடப்பட்டார்கள் என்பதை மெல்லிய வெட்கத்துடன் என்னிடம் பகிர்ந்துகொண்டான் 

பொதுவெளியில் பாராட்டுவது, அன்பை தெரிவிப்பது ஆகியவற்றிற்கு அவ்வளவாக பழக்கப்பட்டிருக்காத தென்னிந்திய சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு நிச்சயம் இது வெட்கத்தை உண்டாக்கும்  நிகழ்வுதான்.

அந்த குறுங்கிளை மிஸல்டோ (Mistletoe) என்னும் ஒரு மர ஒட்டுண்ணிச்செடியின் பகுதி. இந்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் இச்செடியின் கிளைகள் அலங்காரத்துக்கான பயன்பாட்டில் இருக்கின்றன எனினும் அதனடியில் முத்தமிட்டுக் கொள்ளும் வழக்கம் இந்தியாவில் இல்லை.

மிஸல்டோ என்னும் இச்செடி அதனடியில் செல்பவர்கள் முத்தமிடப்பட வேண்டும் என்னுமளவில் மட்டுமே அறியப்பட்டிருக்கிறது. மிக நெடிய வரலாறும் தொன்ம தொடர்புகளும் கொண்டது இந்த மிஸல்டோ முத்தமிடல்.

மிஸல்டோ தொன்மம்

மிஸல்டோ வளமை, குழந்தைப்பிறப்பு மற்றும் காதலின் குறியீடாக ரோமானியர்கள் மற்றும் ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலும், நடுக்காலத்திலும் வாழ்ந்த பழங்குடிச் சமுதாயங்களை உள்ளடக்கிய செல்ட்டியர் (Celts) இன-மொழிக் குழுவினரால் கருதி வணங்கப்பட்டது. வேர்களற்ற பசுமைமாறா இலைகளை கொண்டிருக்கும் கடும்பனிக்காலத்தில்,  மரங்கள் இலைகளை முற்றாக உதிர்த்திருக்கையிலும் அவற்றின் மீது செழித்து வளரும் இவை  நீள்வாழ்வு மற்றும், இறவாமையின் அடையாளமாக  பல பண்டைய நாகரீகங்களால் வணங்கப்பட்டது. இச்செடி அமைதி மற்றும் புனிதத்தின் குறியீடாகவும் ரோமானியர்களால் கருதப்பட்டது.

ரோமானியர்களின் குளிர்காலக் கொண்டாட்டம், விதைத்தல், விதை மற்றும் விவசாயத்தின் கடவுளான சனியை வழிபடும் நாளாகக் கருதப்பட்ட சாடர்னேலியா (Saturnalia) கொண்டாட்டங்களின் போது, வீடுகளைத் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்க வீட்டின் முன்னால் மிஸல்டோ கிளைகளைk கட்டித் தொங்கவிடும் சடங்குகள் இருந்தன. ஒவ்வொரு டிசம்பர் 17 அன்று தொடங்கும் இந்த விழா அடுத்த 7 நாட்களும் பொது விருந்து, மது, சூதாட்டம், விளையாட்டுப் போட்டிகள் என்று கோலாகலமாக டிசம்பர் 23 அன்று முடியும். சீசரின் காலத்தில் விமரிசையாக இருந்த இவ்விழா பின்னர் படிப்படியாக குறைந்து மூன்று நாள் கொண்டாட்டமாகியது. 

நார்ஸ் தொல்குடியினர் போர் முடிவை அறிவிக்க ஆயுதங்களை மிஸல்டோ வளர்ந்திருக்கும் மரத்தினடியில் குவித்து வைத்தனர். பண்டைய செல்ட் கலாச்சாரத்தில்  ட்ரூயிட் (Druids) எனப்பட்ட சமூகச் சான்றோர்களைக் (ஆசிரியர்கள், நீதிபதிகள், மதத்தலைவர்கள் போன்றவர்களை) குறித்த சொல்,  மிஸல்டோ ஒட்டுண்ணி மரத்துடன் சேர்ந்து இருப்பதால் கூட்டுறவு என்பதின் புனித அடையாளமாகவும் இதனை கருதினார்கள்.

பொதுக் கால வரிசையில், முதல் நூற்றாண்டில் ட்ரூயிடுகள் கடும் பனிப்பொழிவால்  மொட்டையான மரங்கள் மீது பச்சை பசேலென்று வளர்ந்திருக்கும் இவற்றை மரணச் சூழலில் காணப்படும் உயிர்நிறைந்த தாவரங்களாக,  அசாதாரண சக்திகளும் மந்திர பண்புகளும் கொண்ட தாவரங்களாக கருதினார்கள். இவற்றின் குறுங்கிளைகள் கால்நடைகளை அடைத்து வைத்திருக்கும் இடங்களிலும் வீட்டின் முன்பாகவும் தீய சக்திகள் அண்டாதிருக்கவும், சந்ததி விருத்திக்கும் கட்டிவிடப்பட்டன.

அக்காலங்களில் வாய்ச்சண்டை முற்றினால் சண்டையிட்டுக் கொள்பவர்கள் மிஸல்டோ வளர்ந்திருக்கும் மரங்களினடியில் நின்று சமாதானம் பேசிக் கொள்ளும் வழக்கம் முதலில் இருந்திருக்கிறது. மிஸல்டோ பல வகையான மரங்களில் ஒட்டுண்ணியாக வளர்ந்தாலும்   ஓக் அவர்களின் புனித மரமாதலால் அதன்மீது வளர்ந்திருந்த மிஸல்டோ மிகப்புனிதமானதாக  வழிபடப்பட்டது . குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் இந்த மிஸல்டோ வளர்ந்த ஓக் மரங்களினடியில் நிகழ்ந்தன.

நார்ஸ் தொன்மங்களில்  போர் மற்றும் இறப்பின் கடவுளான ஓடினுக்கும் (Odin), அவரது  மனைவியும் கர்ப்பத்திற்கும் தாய்மைக்குமான கடவுளான  ஃப்ரிக்கிற்கும்(Frigg ) பிறந்த மகன் பால்டர் (Balder).   ஃபிரிக் தன் மகனுக்கு நெருப்பு ,நோய், நீர், தாவரங்கள் என விண்ணிலும் மண்ணிலும் இருக்கும் எவற்றாலும் உயிராபத்து வரக்கூடாது என ஒவ்வொரு உயிரினங்களிடமும் சென்று வேண்டி வரம் பெற்றுக் கொண்டாள்.   தன் பாலினத்தையும் உருவத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் தொந்தரவின் கடவுளான லோகி (Loki) நிலத்திலும் வானிலுமல்லாது ஒட்டுண்ணியாக மரங்களில் வளரும் மிஸல்டோவின் கிளைகளினால் அம்பு செய்து பால்டரைக் கொன்றான்.

அதுவரையிலும் கனிகளற்று இருந்த மிஸல்டோவில் தன் மகனுக்காக ஃபிரிக் அழுத கண்ணீர் முத்துக்களே கனிகளாகின, என்றும் தன் மகனைக் கொன்ற மிஸல்டோவை யாரும் வெறுக்காமல் அதன் மீதும் அன்பு செலுத்தி, அதனடியில் எப்போது யார் சென்றாலும் முத்தமிட்டு கொள்ள வேண்டும் என்று அவள் கேட்டுக்கொண்டதாகவும்  சொல்லப்படுகின்றது.

பால்டரின் அன்னை வரம் கேட்க மறந்துவிட்ட மிஸல்டோவை இனி யாரும் மறக்க கூடாது என்பதற்காகவே அதன் குறுங்கிளைகள் பிறகெப்போதும் வீடுகளின் முன்பாக கட்டி தொங்க விடப்படுகிறது என்றும் அந்த தொன்மத்தின் பொருட்டே அதனடியில் முத்தமிட்டு கொள்வதும் வழக்கமாகியது என்றும் பரவலாகச் சொல்லப்படும் ஒரு தொன்மம் சார்ந்த கதை.

பிரபல ஆங்கில நாவலாசிரியர் வின்ஸ்டன் க்ரஹாம் (Winston Graham) மிஸல்டோ முன்பு மரமாக இருந்ததாகவும் அதன் கட்டையிலிருந்தே ஏசு கிறிஸ்துவின் சிலுவை உண்டாக்கப்பட்டதாகவும், அதனால் அம்மரம் சபிக்கப்பட்டு ஓட்டுண்ணியானதாகவும் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலோ-சாக்ஸன்கள் (Anglo-Saxons) பிரிட்டானியாவின், தெற்கையும், கிழக்கையும் கிபி 5ம் நூற்றாண்டில் ஸ்காண்டிநேவிய பகுதிகளில் இருந்து ஆக்கிரமித்த ஜெர்மானிய குழுக்கள். இம்மக்களே இங்கிலாந்து நாட்டை அமைத்தார்கள். இவர்கள் பேசிய மொழியே ஆங்கிலத்தின் மூல மொழி. அவர்களின் ஆங்கிலோ-சாக்ஸன் மொழியில்தான் ’’கிளையில் இருக்கும் சாணம்’’  என்று பொருள்படும் Mistletoe என்னும் பெயர் இந்த ஒட்டுண்ணிச்செடிகளுக்கு அவை பறவைகளின் எச்சங்களால் வளர்வதை குறிக்குமாறு பெயரிடப்பட்டது.

மிஸல்டோ வரலாறு

மிஸல்டோவின் கீழ் மனிதர்கள் ஏன் முத்தமிட முனைகிறார்கள் என்பதற்கு கடவுள்கள், இறப்பு, காதல், காமம் ஆகியவற்றின் தொன்மம் சார்ந்த விளக்கங்கள் இருந்தாலும், இந்த தாவரம் புனித தன்மையிலிருந்து கலாச்சார குறியீடாக பரிணாம வளர்ச்சி அடைந்தது பல நூற்றாண்டுகால வரலாற்றை கொண்டது. 

பொது ஆண்டுக்கு முந்தைய ’30-19’ல் ரோமானிய கவிஞர் வர்ஜிலால்  (virgil) எழுதப்பட்ட  முற்றுப்பெறாத கவிதைத் தொகுப்பில் //தூய ஆன்மாக்களின் உலகத்தில் நுழைய மிஸல்டோ பந்துகள் தேவைப்படுகின்றன// என்னும் வரிகள் உள்ளன.

விவிலியம் குறிப்பிடும் எரியும் புதர், இலைகளற்ற செங்கனிகளும் மஞ்சள் மலர்களும் நிறைந்த மிஸல்டோவின் தோற்றம்தான் என்றும் சொல்லப்படுகின்றது.

பண்டைய பாபிலோனிய- அஸிரிய சாம்ராஜ்யத்தில் காதல் கடவுளின் ஆலயத்தின் முன்பு  மிஸல்டோ வளர்ந்திருக்கும்  மரங்களினடியில் நிற்கும் இளம்பெண்களை முதன்முதலில் காணும் ஆண் அவளை மணம் புரிந்து கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது அப்போது அவர்கள் முத்தமிட்டுக் கொண்டிருக்க வில்லை.

மிஸல்டோவும் அதன் கொண்டாட்டங்களின் போதான பயன்பாடுகளும் கிறிஸ்துவத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்தது. தீராப்பயணி பிளைனி, தியோபிராஸ்டஸ் ஆகியோர் 2000 வருடங்களுக்கு முன்பே மிஸல்டோவை குறிப்பிட்டிருக்கின்றனர். பிளைனி இதை சொர்க்கத்திலிருந்து விழுந்த  ஒரு துளி என்கிறார்.

பிளைனி ரோமானியர்களின் மிஸல்டோ அறுவடைச் சடங்கை விவரித்திருக்கிறார். மிஸல்டோ  வளர்ந்திருக்கும் ஓக் மரத்தின் மீதேறி பொன் அரிவாளொன்றினால் மிஸல்டோவை வெட்டி எடுக்கும் சடங்கின் போது அம்மரத்தின் முன்பாக இரண்டு வெள்ளெருதுகள் பலியிடப்பட்டன. மிஸல்டோ நிலத்துக்கும் வானுக்குமான இடைப்பட்ட உலகில் இருக்கும் தாவரமாக வணங்கப்படுவதால், வெட்டியெடுக்கப்படும் மிஸல்டோ ஒருபோதும் நிலத்தில் விழாதவாறு மரத்தடியில் ஒரு வெண்ணிறத் துணி விரிக்கப்பட்டு அதில் சேகரிக்கப்படுகிறது, 

பின்னர் மிஸல்டோவிலிருந்து விஷமுறிவு போன்ற உயிர்காக்கும் மருந்துகள் அம்மக்களுக்கென அப்புனித நாளில் தயாரிக்கப்பட்டது.  ரோமானியர்களுக்கு முன்பு செல்ட்டுகள் இச்சடங்கில் மனிதர்களை பலியிட்டிருக்கலாம் என்றும் அதை ரோமானியர்கள் தடை செய்து எருதைப் பலியிட்டிருக்கலாம் என்றும் வரலாற்றாய்வாளர்களால் கருதப்படுகிறது.

கிறிஸ்தவ  மதம் பரவிய காலங்களில் குளிர்கால கொண்டாட்டங்களில் அலங்காரங்களில் இடம் பெற்ற மிஸல்டோ தீய ஆவிகளை விரட்ட கதவுகளில் தொங்கவிடப்பட்டது.  இதன் அலங்கார உபயோகம் பரவலாகிக் கொண்டிருந்தாலும் தேவலாயங்கள் இவ்வழக்கம் பாகன் பழங்குடியினரின் வழக்கமென்பதால் அதன்மீது விலக்கம் கொண்டிருந்தன. பல தேவாலயங்களில் அச்சமயத்தில் மிஸல்டோ கொண்டாட்டங்களில் பயன்படுத்தத் தடை விதித்திருந்தன. ஆனால் வீடுகளில் இதன் உபயோகம்  தொடர்ந்து இருந்தது.

தாவர வகைப்பாட்டு இயலின் தந்தை லின்னேயசும், டார்வினும் மிஸல்டோவை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.  

3ம் நூற்றாண்டில் கிருஸ்துவமதம் பரவியபோது அம்மதத்துடன் மிஸல்டோவின் தொன்மங்களும் இணைந்தது. 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) ஆய்வாளர்கள்  20000 வருடங்களுக்கு முன்பான  குட்டை மிஸல்டோவின் எச்சங்களை அகழ்வாய்வில்  கண்டுபிடித்திருக்கிறார்கள். ஐரோப்பிய தொன்மங்களில் மிஸல்டோ ஆண்மையின் சாரமாக குறியீடாக கருதப்படுகிறது.

1500 களில் ஐரோப்பாவில் மிஸல்டோவின் கத்தரிக்கப்பட்ட குறுங்கிளைகள், மலர்கள் மற்றும் கனிகளைக்கொண்டு ஒரு பந்துபோல உருவாக்கி வண்ண ரிப்பன்களையும் இணைத்து, அதை வீட்டு முன்பாக தொங்கவிடும் வழக்கமும் குளிர்கால கொண்டாட்டங்களின் ஒரு  பகுதியாக இருந்திருக்கிறது அவற்றை முத்தப் பந்துகள் என அழைத்தார்கள். அதனடியில் நிற்கும் கன்னி பெண்ணுக்கு முத்தமிடப்பட்டால் அவளுக்கு அடுத்து வரும் புத்தாண்டில் திருமணம் நடக்கும் என்றும் மிஸல்டோவின் கனிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முத்தத்தின் போதும் எடுத்துக்கொண்டு கனிகள் தீர்ந்துபோகையில் முத்தமிடுதலும் நின்றுபோவதும் வழக்கத்தில் இருந்திருக்கிறது. பல பல வரலாற்றாய்வாளர்களும் இதை குறிபிடுகிறார்கள் 

1719 மற்றும் 1720களில் மிஸல்டோவை குறித்த விரிவான ஆய்வு நூல்கள்  மருந்தாளுனரும் மருத்துவருமான ஜான் கோல்பேட்சினால்(John Colbatch,) வெளியிடப்பட்டது. அதில் பல பக்கங்களில் மிஸல்டோவை குறித்த தொன்மையான நம்பிக்கைகளும், சடங்குகளுடன் மிஸல்டோவுக்கிருந்த தொடர்புகளும் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அந்நூல்களில் எங்குமே மிஸல்டோ முத்தத்தை அவர் குறிப்பிடவில்லை .

பிரபல வரலாற்றாய்வாளர் மார்க் ஃபோர்சைத் (Mark Forsyth) முத்தமிடுதல் குறித்த இந்தத் தொன்மக் கதைகளில் உண்மையில்லை என்கிறார். அவரது  A Christmas Cornucopia: The Hidden Stories Behind Our Yuletide Traditions என்னும் நூலில் பால்டாவின் மரணம் மிஸல்டோவினால் உண்டாகி இருக்கும் என்னும் தொன்மத்தில் நம்பகத்தன்மை இருக்கலாம் எனினும் மிஸல்டோவின் அடியில் முத்தமிட்டு கொள்ளும் கலாச்சாரத்துக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கும்  அந்த தொன்மத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார் டைம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலொன்றில்.

ஏதேனும் ஒரு புத்திசாலிப் பையன் அல்லது சாமார்த்தியசாலியான ஒரு பெண்ணால் இவ்வழக்கம் உருவாகி இருக்கலாம் என்று ஃபோர்சைத் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அப்படியான ஒரு வழக்கம்  எப்படி எப்போது துவங்கி இருக்கும் என்பதை யூகிப்பது  மிகவும் கடினம் என்பதைக் குறிப்பிட்டு, ’’எனினும் விவாகரத்து மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான எந்த சாயலும் இல்லாத 18 ஆம் நூற்றாண்டில், காதல் அறவே இல்லாத திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கும் பெண்களின் கவலைகள் மற்றும் தீமைகளின் பட்டியலில்  இந்த கட்டாய மிஸல்டோ முத்தம் என்பது மிக, மிக மிக குறைவான தொந்தரவாகவே இருந்திருக்கும்’’ என்கிறார் அவர்.

1784ல் வெளியான ஒரு பாடலில் முதல் முறையாக மிஸல்டோ முத்தம் குறிப்பிடப்பட்டிருப்பதையும்  ஃபோர்சைத் சுட்டிக்காட்டுகிறார் 

” ஜெம், ஜான், ஜோ, உள்ளிட்ட ஆண்கள்

எங்களுக்கு என்ன அதிர்ஷ்டம் அனுப்பப்பட்டது?’என்று 

கூச்சலிட்டபடியே முத்தமிட்டார்கள்’’,

மிஸெல்டோவுக்கடியில்  

 20 வயது கூட ஆகியிருக்காத இளம் பெண்களுக்கு “

மேலும் பல வரலாற்றாய்வாளர்கள் இந்த பாடலை குறிப்பிட்டு அந்த காலத்தில்தான் மிஸல்டோ முத்தங்கள் பிரபலமாயிருக்கும் என்று யூகிக்கிறார்கள். இங்கிலாந்தில் 1700களின் இறுதியில் துவங்கிய இந்த வழக்கம் 1800களில் உலகெங்கிலும் அறியபட்ட ஒன்றாக இருந்தது  

இப்பாடலுக்கு பின்னர் 18 ம் நூற்றாண்டின் பல பிரபல இலக்கிய படைப்புக்களில் இவ்வழக்கம் இடம்பெற்றிருந்தது.1794 ம் ஆண்டின் சித்திரமொன்றில் ஒரு உணவு கூடத்தில் சமையலறை பணிப்பெண்கள் மிஸல்டோவின அடியில் வலுக்கட்டாயமாக முத்தமிடப்படுகிறார்கள் 

விக்டோரிய காலத்தின் துவக்கத்தில் ஆங்கிலேய பணியாளர்கள் மத்தியில் பிரபலமான இவ்வழக்கம் பின்னர் நடுத்தர குடும்பங்களுக்கும், உயர்குடியினருக்கும் பரவி புகழ்பெற்றது. முத்தமிடுவதை மறுக்கும் பெண்களுக்கு துரதிர்ஷ்டம் நேரும் என்றும் நம்பப்பட்டது  .

மிஸல்டோவின் காதல் குறியீட்டு உபயோகம் 18ம் நூற்றாண்டில் மிக பரவலாகியது அச்சமயத்தில் மிஸல்டோ கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக மாறிவிட்டிருந்தது

அலங்கார பொருளாக இருந்து புனிதமான தாவரமாக உயர்ந்து காதலின் குறியீடாக மாறிவிட்டிருந்தது மிஸல்டோ

1843ல் சார்ல்ஸ் டிக்கென்ஸ் வெளியிட்ட  ‘A Christmas Carol’ என்னும் நூலில் மிஸல்டோவினடியில் முத்தமிட்டுக்கொளும் சித்திரங்கள் இடம் பெற்றிருந்தன.அதில்தான் மிஸல்டோவின் கனிகள் தீரும்வரையே முத்தமிடுதல் என்னும் தகவலும் இருந்தது. 

டிக்கென்ஸ் அவரது The Pickwick Papers  என்னும் நூலில் மிஸல்டோவினருகில் முத்தமிட்டுக்கொள்வதை சொல்லுகிறார்.

வாஷிங்டன் இர்விங் 1819 மற்றும் 1820ல் தொடர்ந்து வெளியிட்ட,  ‘The Sketch Book of Geoffrey Crayon’ நூலிலும், ‘Christmas Eve’ என்னும் 1855-1859 களில் வெளியான நூலிலும் மிஸல்டோவினடியில் முத்தமிட்டுக் கொள்வதை விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். ‘’அந்த அரங்கில் இளம்பெண்கள் கூச்சலிட்டபடி முத்தமிட வரும் ஆண்களிடமிருந்து தப்பிக்க மூலைகளுக்கு ஓடுகிறார்கள் கடைசியில் வேறு வழியில்லாமல் அவர்களது முத்தங்களை ஏற்று கொள்கிறார்கள்.’’ என்று விவரிக்கிறார்.

இர்விங்கின் அந்த நூல் 19ம் நூற்றாண்டில் அப்போது சிறு கொண்டாட்டமாக இருந்த கிறிஸ்துமஸ் தினங்களை, மிஸல்டோ முத்தங்களால் வளர்ந்த பெரும் கொண்டாட்டமாக மாற  வழிவகுத்தது.  இந்நூலின் அமெரிக்க வாசகர்கள் மிஸ்ல்டோ முத்தத்தை பின்னர் பரவலாகினர். ஃபிரெஞ்ச் மக்களும் அப்போது மிஸல்டோவை பரிசாக அளிப்பதை பண்டிகை மற்றும்  புத்தாண்டு கால வழக்கமாக கொண்டிருந்தனர்.

குளிர்கால மற்றும் கிறிஸ்துமஸ் கால கொண்டாட்டங்களின் அங்கமாகிவிட்டிருக்கும் மிஸல்டோ ஹாரிபாட்டர் வரைக்கும் பிரபல கலாச்சாரங்களிலும் இடம் பெற்றுள்ளது. ஹாரிபாட்டரும் தன் முதல் முத்தத்தை சோ-சாங்கிற்கு மிஸல்டோவினருகில்தான் அளிக்கிறான்.

18 ம் நூற்றாண்டில் மிஸல்டோ கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் சாதரணமாகவே காணப்பட்டது. மிஸல்டோ நிலத்தில் படக்கூடாது என்னும் மரபின் படி அது எப்போதும் கயிற்றில் அல்லது சிவப்பு ரிப்பனில் கட்டி தொங்கவிடப்பட்டது. வருடம் முழுவதும் இப்படி தொங்கும் மிஸல்டோ கிளைகள் கிறிஸ்துமஸ் சமயத்தில் புதிதாக மாற்றப்படுகிறது

ஜெர்மனியில் இதனருகில் செல்லும் யாராகிலும் முத்தமிடப்படுகையில் அவர்கள் அன்புக்குரியவர்களாகவும் தொடரும் ஆண்டில் அதிர்ஷ்டக்காரர்களாகவும் இருப்பார்கள் என்னும் நம்பிக்கை உள்ளது

கிறிஸ்தவத்தில் முத்தமிடல்

கிறிஸ்தவ மதத்தில் முத்தமிடுவது மரியாதையின், மன்னிப்பின் பொருட்டாக வழக்கத்தில் இருக்குமொன்று. சிலுவை வடிவங்கள், ஏசுவின் சித்திரங்கள் ஆகியவற்றை வணங்குவதும்,  மண்டியிட்டு வணங்குவோரின் புறங்கையில் முத்தமிடுவதுமாக கிறிஸ்துவத்தில் முத்தம் வழிபாட்டின் ஒரு அங்கமாக  இருக்கிறது

 பண்டைய கிறிஸ்தவம் “greet each other with a holy kiss” என்னும் ஒருவரை ஒருவர் வாழ்த்தி கன்னங்களில் முத்தமிட்டுக்கொள்வதை வலியுறுத்தியது, ஏசு கிறிஸ்து சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார் என்பதால் பாதங்களில் முத்தமிட்டு வணங்குவதும் கிறிஸ்தவத்தில் ஒரு வழக்கமாக உள்ளது.

மீனவர்களின் கை விரல் மோதிரத்தை முத்தமிடுவதென்பது பண்டைய ரோமானிய சடங்குகளில் ஒன்று.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புனிததந்தை, அவரது பெயரும் படகில் அமர்ந்திருக்கும் புனிதர் பீட்டர் உருவமும் பொறிக்கப்பட்ட பொன் மோதிரத்தை அணிவார். அந்த மோதிரத்தை முத்தமிடும் வழக்கம் இன்றளவும் உள்ளது

 30 வெள்ளிக்காசுகளுக்காக யூதாஸ் கிறிஸ்துவை காட்டிக்கொடுத்ததும் முத்தமிட்டுத்தான் என்கிறது விவிலியம்.

எனவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது மிஸல்டோவினடியில் அன்பை பரிமாறிக்கொள்ள முத்தமிடுவதை கிறிஸ்துவம் சார்ந்த ஒரு சடங்காகவும் நினைத்துக்கொள்ளலாம்

தாவரவியல் தகவல்கள்

உலகெங்கிலும் சுமார் 1500  வகை மிஸல்டோக்கள் உள்ளன அனைத்துமே மரங்களின் மீது ஒட்டுண்ணிகளாய் செழித்து புதர் போல் வளர்பவை

அனைத்து மிஸல்டோக்களும் விஸ்கேசி (Viscaceae) மற்றும் லொராந்தேசி (Loranthaceae) குடும்பங்களை சேர்ந்தவை. லொராந்தேசி மிஸல்டோ தாவரங்கள் வண்ணமயமானவை. நவீன தாவர வகைப்பாட்டியல் விஸ்கேசியை சந்தன மரங்களின் குடும்பமான சாண்டலேசியின் துணைக்குடும்பமாக அங்கீகரிக்கிறது. ஐரோப்பாவில் இருக்கும் மிஸல்டோ விஸ்கம் ஆல்பம்(Viscum album) என்னும் அறிவியல் பெயர் கொண்டது. மிஸல்டோவுக்கு  birdlime, all-heal, golden bough, drudenfuss, iscador மற்றும் devil’s fuge, என்றும் பெயர்கள் உண்டு

ஐரோப்பாவிற்கு வெளியே மிஸல்டோவின் பலவேறு சிற்றினங்களும் வகைகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. 

வட் அமெரிக்காவில் பல மிஸல்டோ வகைகள் உள்ளன. முக்கியமாக  Phoradendon  leucarpum சிற்றினம் இங்கு அதிகம் பயன்பாட்டில் உள்ளது. அறிவியல் பெயரான Phoradendron, என்பது மர திருடன் என்று பொருள்படுகிறது. 

அதைக்காட்டிலும் சிறிய செடியான Arceuthobium சிற்றினமும் அங்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது இவை குட்டை மிஸல்டோ என அழைக்கப்படுகின்றன இவை செதில்களை போன்ற சிற்றிலைகளுடன் காணப்படுபவை.

மிஸல்டோ ஒட்டுண்ணியென்பதால் அது சார்ந்திருக்கும் மரங்களிலிருந்து  நூல் போன்ற உறிஞ்சும் வேர்களால் நீரும் சத்துக்களும் எடுத்துக்கொண்டு எப்போதும் பசுமை மாறா தாவரமாக இருக்கும்.

அமெரிக்க மிஸல்டோ கனிகள் வெடித்து சிதறி சுமார் 50 அடி தொலைவுக்கு அதன் விதைகளை பரப்பும்

மிஸல்டோ கனிகள் மனிதர்களுக்கு நஞ்சல்ல எனினும் செல்லப்பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்துண்டாக்கும் எனவே கவனம் தேவை

அடர்ந்து வளரும் இவற்றின் கனிகளை பல வகை பறவைகளும் அணில்களும் விலங்குகளும் உணவாக எடுத்துக் கொள்கின்றன  மிகப்பெரிய புதராக வளரும் இவற்றில் பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன

விஸ்கம் ஆல்பம்  கிளைத்திருக்கும் தண்டுகளும், பசுமைமாறா ஜோடி இலைகளும் வெளிர் மஞ்சள் மலர்களும் வெண் கனிகளும் கொண்டவை.  சொரசொரப்பான கடினமான இலைகள் எதிரடுக்கில் அமைந்திருக்கும் 

இவற்றின் உறிஞ்சும் வேர்கள் மரங்களின் தண்டுக்குள் சென்று உணவையும் நீரையும் உறிஞ்சிக்கொள்ளும் இவை  5 வருடங்கள் கழித்தே மலர்க்காம்பற்ற மிகச்சிறிய  மலர்களை உருவாக்கும்.   ஆண் பெண் மலர்கள் தனித்தனியே காணப்படும் ஜூனிபர், பைன், ஓக் மற்றும் பலவகை மரங்களில் இவை வளரும். 

இதன் கனிகளில் ஒற்றை விதை பசை போன்ற viscin என்னும் சதையால் சூழப்பட்டிருக்கும். விசினின் ஒட்டும் தன்மையால் விதைகள் முளைக்கும் வரை காற்றாலும் மழையாலும் அவ்விடத்திலிருந்து நீங்காமல் பாதுகாக்கப்படுகின்றன

மிஸல்டோ ஒரு பகுதி ஒட்டுண்ணி அதாவது அவை வளரும் மரங்களிலிருந்தும் உணவை நீரை எடுத்துக் கொள்வதோடு இலைகளின் பச்சையம் கொண்டு பிற தாவரங்களைப்போல ஒளிச்சேர்க்கையின் மூலமாகவும் உணவு தயாரிக்கின்றது

இவை செழித்து வளர்ந்து ஒரு மூட்டைபோல் மரங்களின் கிளைகளில் காணப்படுவதால் சூனியக்காரியின் துடைப்பம், மரம் மேல் கூடை போன்ற வழங்கு பெயர்களும் உள்ளன 

மிஸல்டோ ஆப்பிள் மரங்களில் மிக அதிகமாக வளரும். வெளிச்சம் குறைவான காட்டில் வளரும் மரங்களை காட்டிலும் , அதிக வெளிச்சம் கொண்ட தனித்தனியான மரங்களில் இவை நன்கு செழித்து வளரும்

பிசிபிசுப்பான ஒட்டும் தன்மை கொண்ட இதன் கனிகள்  பறவைகளின் இறகுகளில் ஒட்டிக்கொண்டு பல இடங்களுக்கு பரவும் சுவையான கனிச் சதையை உண்ணும் விலங்குகளும் இவற்றை பரப்பும். மரங்களின் மீது விழும் விதைகள் அம்மரத்தின் ஒட்டுண்ணியாக வளர தொடங்கும். மரங்களின் மீது விழும் மிஸல்டோ விதைகள் 6 வாரங்களில் முளைக்கின்றன. மிஸல்டோ கனிகளில்  phoratoxin என்னும் நஞ்சு இருக்கிறது. 

 பல்லாண்டு தாவரங்களான இவை தான் வளர்ந்திருக்கும் மரங்களை கொல்லுவதில்லை மாறாக உணவுக்கும் நீருக்கும் மட்டுமே அவற்றை சார்ந்திருக்கின்றன. பொதுவாக மிஸல்டோக்களின் வளர்ச்சி அவை சார்ந்திருக்கும் பெருமரங்களை பாதிப்பதில்லை. எனினும் ஒரே மரத்தில் பல மிஸல்டோ தொகுதிகள் வளருகையில் மரத்தின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுகிறது

இவற்றை கட்டுப்படுத்த செய்யப்படும் அனைத்து முயற்சிகளும் மிஸல்டோ சார்ந்திருக்கும் மரங்களின் வளர்ச்சியையும் சேதப்படுத்துமென்பதால் கட்டுப்பாடுகள் எதுவும் நடைமுறையில் இல்லை

 இவற்றின் வேறுபாடுகளும் வகைகளும்

  • Viscum album subsp. abietis வெண்ணிற கனி, இலைகள் 8 செமீ.மத்திய ஐரோப்பாவில் காணப்படும். Viscumin என்னும் கடும் நஞ்சு கொண்டது. கனிகள் உயிராபத்து உண்டாக்கும்
  • Viscum album subsp. album. ஐரோப்பா, தென்மேற்கு ஆசியாவிலிருந்து நேபாளம் வரை காணப்படுவது. கனி வெண்ணிறம்,இலைகள் 3-5 செ மீ. ஆப்பிள் போப்புலஸ் மற்றும் டீலியா மரங்களில் வளரும்.
  • Viscum album subsp. austriacum -கனி மஞ்சள் நிறம், இலைகள் 2-4 செமீ மத்திய ஐரோப்பாவில் காணப்படுபவை பைனஸ் லாரிக்ஸ் மற்றும் பிசியா மரங்களில் வளரும்.
  • Viscum album subsp. meridianum தென்கிழக்காசியாவில் காணப்படும்.கனி மஞ்சள் நிறம், இலைகள் 3-5 செ மீ மேப்பிள், ப்ரூனஸ் மற்றும் சோர்பஸ் மரங்களில் வளரும்.
  • Viscum album subsp. creticum  சமீபத்தில் கிழக்கு கிரீட்டில்(Crete) கண்டறியப்பட்டது. கனி வெண்ணிறம், இலைகள் மிகமிக சிறியவை பைனஸ்  மரங்களில் வளரும்
  • Viscum album subsp. coloratum  – சீன மிஸல்டோ, சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது
  • American mistletoe (Phoradendron leucarpum)  வடஅமெரிக்காவில் காணப்படுவது.
  • European mistletoe (Viscum album) ஐரோப்பா மற்றும் ஆசியாவில் காணப்படுவது.
  • P. tomentosum ssp. macrophyllum-Big leaf mistletoe, தென்மேற்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவிலிருந்து டெக்ஸாஸ் வரை காணப்படுவது. 
  • Arceuthobium spp-Dwarf mistletoe வட அமெரிக்காவிற்கு அறிமுகமான அயல் தாவரம் . குட்டையானது
  • Viscum articulatum- இந்தியாவில் ஜகரண்டா மரங்களில் காணப்படுகின்றன-இலைகளற்றவை. சதைப்பற்றான தட்டையான பசுந்தண்டுகளை  கொண்டவை.  சமஸ்கிருதத்தில் இவை காமினி எனப்படுகின்றன.
  • Viscum triflorum-கிழக்கு ஆப்பிரிக்க மிஸல்டோ, சிறிய வட்ட இலைகளை கொண்டது. 
  • Viscum minimum- மிகச்சிறிய தாவரம், சதைப்பற்றான தாவரங்களின் தண்டுகளில் வளருபவை
  • Loranthus longiflorus (Honeysuckle Mistletoe) – இந்திய மிஸல்டோ-வேம்பு , வாகை, புங்கை போன்ற மரங்களில் வளரும்.
  • Loranthus acacia, Agelanthus sansibarensis-ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் காணப்படும்  இவையிரண்டும்  அலையாத்தி மரங்களின் மீது வளர்பவை
  • Helicanthes elastica- the mango tree Mistletoe- இந்திய மாமர மிஸல்டோ-தடித்த பளபளப்பான காம்பற்ற இலைகளை கொண்டது 

மிஸல்டோவின் சூழல் முக்கியத்துவம்

மிஸல்டோக்கள் வெறும் காதலின் சின்னங்கள் மட்டுமல்ல, காடுகளில் சூழல்முக்கியத்துவம் கொண்ட மிக முக்கியமான தாவரமாகவும் இருந்து வருகிறது. ஒட்டுண்ணி என்னும் பெயர் இருப்பினும் மிஸல்டோ உணவு உறைவிடம் ஆகியவற்றை பிற உயிரினங்களுக்கும் அளிக்கும் தாவரமாகவே இருக்கிறது. விலங்குகள் பறவைகள் மட்டுமல்லாது வண்ணத்து பூச்சிகளுக்கும் இவை உணவளிக்கின்றன. மேலும் தான் பெற்ற சத்துக்களை  மரங்களிலிருந்து விழுந்த பின்னர் நிலத்துக்கே மீண்டும் அளிக்கிறது

பாலைமரங்களிலும் இவை வளர்ந்து அங்கிருக்கும் உயிரினங்களுக்கு வேறெதுவும் கிடைக்காதபோது உணவளிக்கின்றன. மிஸல்டோ குளிர்காலத்தில் தேனீக்களுக்கு மகரந்தங்களையும் மலரமுதினையும் அளிக்கிறது.   

செழிப்பான வனப்பாதுகாப்பு சூழலுக்கு இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பங்காற்றி வருகின்றன.

மான்களின் விருப்ப உணவாக மிஸல்டோ இருப்பதால் அமெரிக்க பழங்குடியினர் மிஸல்டொவை இரையாக  வைத்து மான்களை பிடிப்பது உண்டு

மருத்துவ பயன்கள்

 பண்டைய கிரேக்கர்கள் மிஸல்டோவை மாதவிலக்கு வலியிலிருந்து கல்லீரல் கோளாறுகள் வரை சிகிச்சையளிக்க பயன்படுத்தினர். இது சாவா மூவா மருந்து என்னும் நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தது

மனித இன அறிவியலான Anthroposophy’யை தோற்றுவித்தவரான ருடால்ப் ஸ்டெய்னர் மிஸல்டோவை புற்றுநோய்கெதிரான சிகிச்சையில் பயன்படுத்தலாமென்பதை தெரிவித்தார். மிஸல்டோவிவிலிருந்து அமெரிக்க மருத்துவர்கள் பெருங்குடல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கின்றனர். மிஸல்டோவின் சாறு கீமோ சிகிச்சையைக் காட்டிலும் மிககுறைந்த பக்கவிளைவுகளை அளிக்கிறது

மிஸல்டோ இலைகளையும், இளம் தண்டுகளையும் அரைத்து சாறெடுத்து பல சிகிச்சைகளில் ஐரோபியர்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக சுவாச கோளாறுகளுக்கு,

பிற பயன்கள்

மிஸல்டோ கனிச்சாறை கொண்டு உருவாக்கப்படும் பசையை மரக்கிளைகளில் தடவி பறவைகளையும் அணில் போன்ற சிறு விலங்குகளையும் பிடிக்க வேட்டைக்காரர்கள்  பயன்படுத்துகின்றனர்.

மிஸல்டோவின் இலைகள் பாலுணர்வை தூண்டும் இயல்பை கொண்டிருக்கிண்றன.(aphrodisiac). ஆஸ்திரியாவில் புதுமண தம்பதிகளின் மண இரவில்  கட்டிலில்  மிஸல்டோவை வைக்கும் வழக்கம்  தொன்று தொட்டு இருக்கிறது. ஜப்பானிய தொல்குடிகளான ஐனுக்கள் (Ainu) வயல்களில் நடவுக்கு முன்னர் நறுக்கிய மிஸல்டோவை வைத்து வணங்கி நல்ல மகசூல் கிடைக்க வழிபாடு நடத்துகின்றனர்

இஸ்டிரியாவில் (Istria)பிஸ்கா (Biska) என்னும்  மிஸல்டோ  சாறு கலந்த பிராந்தி தயாரிக்கப்படுகிறது.

இங்கிலாந்தின் ஹெர்ஃபெட்ஷியா நகரின் மலராக மிஸல்டோ மலர் 2002ல் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்பெயினில் குளிர்கால கொண்டாட்டங்களின் போது மிஸல்டோவை அம்பு செலுத்தி மரங்களினின்றும் விடுவித்து அவற்றை நிலத்தில் விழாமல் வலது கையில் பிடிப்பது ஒரு சடங்காக செய்யப்படுகிறது

கிறிஸ்துமஸ் காலங்களில் இவற்றை சேகரித்து சந்தைப்படுத்தும் தொழிலில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சில குடும்பங்கள் மட்டும் பல தலைமுறைகளாக  ஈடுபட்டுவருகின்றனர்.

மிஸல்டோ நறுமணம் கொண்ட மிட்டாய்களும் இனிப்புக்களும்  கிறிஸ்துமஸ் சமயங்களில் கிடைக்குமென்றாலும் மிஸல்டோவில் எந்த நறுமணமும் இல்லை.

தாவரகுருடு

தாவரகுருடு என்று சொல்லப்படும்  தாவரங்களை சரியாக அடையாளம் காணமுடியத சிக்கல் இந்த மிஸல்டோ விஷயத்திலும் இருக்கிறது

பலர் அசல் மிஸல்டோவை அடையாளம் காணமுடியாமல் சிவந்த கனிகளை கொண்டிருக்கும் ஹோலி எனப்படும் (Ilex aquifolium) மற்றொரு தாவரத்தையும் மிஸல்டொவாக பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகள் முட்கள்,போல குத்தும் மடிப்புக்கள் உடையது.இவற்றின் கனிகள் ரத்த சிவப்பில் இருக்கும். இவை ஒட்டுண்ணிகள் அல்ல, மிஸல்டோக்களும் அல்ல. நிலத்தில் வேரூன்றி வளரும் தாவரங்கள். பண்பாட்டுடன் இணைந்துள்ள தாவரங்களை இனங்கண்டு அவற்றை முறையாக பயன்படுத்துவது  மிக அவசியமானது. 

 கிறிஸ்துமஸ் தாவரவியல் மற்றும் விழாக்கால சூழியல் என்று தனி கிளை துறைகள் இருக்கின்றன. தாவரங்களின் விழாக்கால பயன்பாடுகளையும் அவை சார்ந்த தொன்மங்களையும் இத்துறை கற்பிக்கிறது(.Christmas Botany & Festive Ecology) 

தாவரங்களின் கலாச்சார முக்கியத்துவம்

மனித வாழ்வாதாரம் தாவர உலகத்துடன் உணவு, உடை இருப்பிடம் மருந்து, கேளிக்கை என பல தேவைகளின் பொருட்டு மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. பல கலாச்சாரங்களில், குறிப்பிட்ட சில தாவர இனங்கள் அதற்கு அப்பாலும் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றன என்பதற்கு மிஸல்டோவும், கிறிஸ்துமஸ் மரங்களும் சிறந்த உதாரணங்கள்

சார்ந்திருக்கும் சமூக வாழ்விற்கான குறியீடாக, பிறருக்கு பலனளிக்கும் ஒர் உயிரினமாக, அசாதாரண சூழலிலும் தானும் வழ்ந்து பிறரையும் வாழவைக்கும் ஒன்றாக பல வகைகளில் இந்த மிஸல்டோவை நாம் பொருள் கொள்ளலாம்

அக்காலத்தில் மிஸல்டோவினடியில்  முத்தமிடப்படுவது திருமணத்திற்கான உத்தரவாதம் என கருதப்பட்டது. பாலியல் சுதந்திரம் கட்டற்று இருக்கும் இக்காலத்தில் மிஸல்டோ முத்தம் அன்பை பரிமாறிக் கொள்ளும் பொருளை மட்டும் தான் கொண்டிருக்க முடியும். எனவேதான் மிஸல்டோவை கடக்கும், அதனடியில் நிற்கும் யாரும் யாராலும் முத்தமிடப்படுகிறார்கள் 

எத்தனை கனிகளோ அத்தனை முத்தங்கள், என்பதையும் நாம் வாழ்வில் சக மனிதர்களிடம் எத்தனை முறை அன்பை செலுத்துகிறோம் என்பதன் கணக்கீடாகவும் எடுத்துக்கொள்ளலாம்

நார்ஸ், கிரேக்க ரோமானிய தொன்மங்களில் இடம் பெற்றிருக்கும் இந்த மிஸல்டோ குறுங்கிளைகளினடியில் முத்தமிடும், முத்தமிடப்படும் வாய்ப்பு  கிடைக்கையில் தவிர்க்க வேண்டாம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது பரிசுப் பொருட்களும் அன்பும் அவற்றுடன் முத்தங்களும் பரிமாறப்படட்டும்

இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு நகரமே தயாராகிக் கொண்டிருக்கிறது. மாலை வேளைகளில் சிறுவர்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வீடுகளுக்கு முன் வந்து சிறிது நேரம் நின்றுபாடல்கலை பாடிச்செல்கிறார் .

நேற்றிரவின்  பாடல் 

“ஒரு வான்கோழி மற்றும் சில மிஸல்டோக்கள் இந்த கொண்டாட்ட காலத்தை பிரகாசமாக்க உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.” என்றது.

  1. மிஸல்டோவை குறித்தும் அதன் பழங்குடி உபயோகம், வரலாறு குறித்து மேலும் அறிந்து கொள்ள உதவும் மிஸல்டோ இணையதளம்:https://mistletoe.org.uk/mp/.
  2. https://wonderopolis.org/wonder/why-do-people-kiss-under-mistletoe/
  3. https://wonderopolis.org/wonder/why-do-people-kiss-under-mistletoe/
  4. https://insider.si.edu/2011/12/mistletoe-facts-from-a-smithsonian-botanist/
  5. காணொளி- https://youtu.be/QtJqBiF6EF0

Suseum!

Suseum (Sustainability Museum) is India’s first dedicated museum for renewable energy, clean technology, and eco-friendly lifestyles. Launched by Energy Alternatives India (EAI), a clean-tech research and consulting firm founded by IIT and IIM alumni, it is located on Nungambakkam High Road in Chennai. 

 Rather than focusing on ancient history, Suseum is designed as a forward-looking, interactive space focused on environmental survival and ecological balance.

The Vision

The core objective of Suseum is to bridge the gap between complex environmental science and everyday human life. By presenting sustainability in practical, tangible ways, it serves as an educational hub for students, researchers, and citizens looking to understand how modern engineering must align with nature to preserve the future.

The Brains Behind the Initiative

  • Founded by IIT & IIM Alumni: EAI was established by a team of premier technical and management professionals dedicated to accelerating the adoption of renewable energy and clean technology across India.
  • The Visionary: The primary driving force behind Suseum is Narasimhan Santhanam (Narsi), the co-founder and director of EAI. An alumnus of IIT Madras (B.Tech) and IIM Calcutta (PGDM), Santhanam is a prominent climate-tech and renewable energy expert.

The History and Evolution

  • 2013 Launch: Suseum was officially inaugurated in November 2013 on Nungambakkam High Road, Chennai, earning the distinction of being India’s very first dedicated sustainability museum.
  • The “Why”: Before Suseum, information on clean technology was heavily restricted to corporate boardrooms, technical journals, and academic papers. The founders realized there was a severe gap between complex environmental science and practical, everyday adoption by the public.
  • From Office to Innovation Hub: To bridge this gap, EAI creatively converted a section of its own workspace into a physical, public-accessible museum. The goal was to build a philanthropic, interactive space where students, citizens, and small business owners could see, touch, and feel real-world eco-friendly applications rather than just reading about them.
  • Expanding Ecosystem: Over the years, the history of Suseum has aligned with EAI’s broader initiatives to foster green talent and entrepreneurship, serving as a launchpad for climate-tech internships, educational workshops for school children, and a specialized eco-store showcasing commercial sustainable alternatives.

Key Highlights & Exhibits

  • Hands-On Clean Tech: Visitors can see and touch advanced green technologies, such as vertical-axis wind turbines, solar innovations, and flywheel energy storage systems.
  • Urban Gardening Solutions: The museum showcases practical urban greening concepts, including vertical gardens, which demonstrate how dense city spaces can be engineered to support plant life and reduce heat.
  • Eco-Friendly Alternatives: Displays feature daily-use sustainable products, ranging from compostable plastic cups to biodegradable materials, illustrating how consumers can reduce their carbon footprint.
  • The Suseum Store: A dedicated space where visitors can directly purchase eco-friendly products and find sustainable solution providers for homes or institutions.

Botanical relations

When we look at the clean-tech and sustainability solutions showcased at Suseum, they are essentially humans trying to copy what plants have been doing flawlessly for millions of years.

  1. Solar Energy Capture vs. Photosynthesis

Suseum heavily features advanced solar photovoltaic (PV) technologies, demonstrating how humans can harvest sunlight to generate electricity.

The Botanical Connection: Solar panels are nothing more than a mechanical, less efficient imitation of a leaf’s chloroplasts. While human engineers use silicon wafers to induce an electron flow from sunlight, plants use chlorophyll pigments to achieve quantum efficiency in splitting water molecules and capturing photons.

The Future: Advanced clean-tech research (like dye-sensitized solar cells) actively copies plant pigments to create organic solar cells.

  1. Vertical Gardens as Urban Ecosystems

One of the key practical exhibits at Suseum focuses on urban greening solutions, particularly vertical gardens and living walls for dense city spaces.

  • The Botanical Connection: This relies heavily on understanding epiphytic plants (plants that grow on other structures without soil, like certain ferns and orchids) and their root physiology.
  • Botanical Engineering: To design a sustainable vertical garden, one must understand how plant roots anchor, how they absorb moisture through specialized tissues (like velamen in orchids), and how different species interact to purify the air, reduce urban heat islands, and trap heavy metals.

3. Biodegradable Materials and Plant Polymers

The eco-store and material exhibits at Suseum showcase compostable plastics, plant-based packaging, and biodegradable consumer goods.

  • The Botanical Connection: This is entirely rooted in plant biochemistry. Instead of using fossil-fuel-based hydrocarbons, these materials are engineered using plant polymers like cellulose, hemicellulose, and lignin (the structural components of plant cell walls) or starches extracted from corn and cassava.
  • The Lifecycle: Understanding how microorganisms enzymatically break down these botanical bonds back into organic soil nutrients is what makes these products truly sustainable

4. Phytoremediation and Waste Treatment

Clean technology often involves eco-friendly ways to treat greywater and industrial waste without harsh chemicals.

  • The Botanical Connection: This introduces phytoremediation—the use of specific living plants to clean up contaminated soil and water. For example, using water hyacinths or specific reeds in constructed wetlands to absorb toxins, heavy metals, and excess nitrates through their root systems.

Bridging the Gap

  1. Academic Botany to Applied Green-Tech

In the classroom, you study plant anatomy, physiology, and biochemistry in detail. Suseum takes those exact concepts and showcases their real-world commercial applications.

  • From Stomata to Architecture: Understanding how a plant regulates water loss and gas exchange through stomata helps you design passive cooling systems for buildings using green walls.
  • From Plant Biochemistry to Materials Science: Your knowledge of plant cell walls, starch, and cellulose is exactly what industries need to engineer the next generation of bioplastics and compostable packaging materials shown at Suseum.

2. Opening Frontiers in Biomimicry and Bio-Design

The future of engineering is biomimicry—solving human problems by copying nature’s designs. Because plants are stationary, they have evolved the most sophisticated structural and energy-harvesting mechanisms on Earth.

  • As a botanist, you understand how leaves optimize light absorption at different angles. Clean-tech companies need this expertise to build tracking solar panels that mimic heliotropism (sun-following movements in plants like sunflowers).
  • You understand how lotus leaves stay clean via the microscopic structural architecture of their surface (the Lotus Effect). This is used to engineer self-cleaning solar panels and water-repellent paint.

3. Career Opportunities in Urban Agriculture & Phytoremediation

As cities grow denser and more polluted, traditional botany is moving into urban landscapes. Places like Suseum emphasize urban greening, vertical farming, and non-chemical waste treatment.

  • Hydroponics and Aeroponics: Future botanists will be the core architects of vertical farms, managing nutrient solutions, light wavelengths, and plant pathology without soil.
  • Phytoremediation Experts: Industries and municipalities increasingly look for botanists who can select and engineer specific plant species (like hyperaccumulators) to clean up heavy metal soil pollution and industrial greywater naturally.

4. Driving the Bio-Economy and Sustainable Entrepreneurship

The global shift away from fossil fuels means that plants are the new oil. Everything currently made from petroleum (plastics, fuel, synthetic fibers) will eventually need to be made from plant-based alternatives.

  • A botany student who understands sustainability trends can enter fields like Biofuels (algal and agricultural biomass energy), Ethnobotanical product formulation, and Green Supply Chain consulting.
  • It prepares you to be a consultant for environmental impact assessments, carbon sequestration auditing, and eco-restoration projects.

Suseum shifts Botany from a purely academic, lab-based, or field-classification science into an active, high-demand field of applied ecological engineering

Suseum demonstrates that true sustainability is not about human engineering overpowering nature, but rather human engineering submitting to botanical wisdom. Every clean energy device we build is just a step closer to replicating a plant’s natural metabolic processes. 

தோசைக்கல் முதுகு!

முன்பெல்லாம் மகன்கள் சின்னக்குழந்தைகளாக இருக்கையில் நான் என்ன சொன்னாலும் நம்புவார்கள். இந்த ஊருக்கு வந்த புதிதில் இந்த புதுக்குடியிருப்பு அமைந்திருந்த ஊர் மேட்டில் இரண்டே இரண்டு வீடுகளும் சுற்றிலும் வயல்களும்தான் இருந்தன. வீட்டுக்கு எதிரே ஒரு மாபெரும் மாந்தோப்பு . தெருவெங்கும் அடர்ந்த மரங்களுடன் மாலை விளக்கேற்றுகையிலேயே முழுக்க இருட்டிவிடும்.

இந்தச்சூழலில் ஒரு பெண் தனியே குழந்தைகளுடன் வீடுகட்டி வசிக்க வந்தது ஊரில் பேச்சாக இருந்தது. அதுவும் முதல் சில வருடங்களில் மதிலும் கட்டவில்லை; பாம்புகள் அதிகம் வந்துகொண்டிருந்த இடமாக வேறு இருந்தது.

அவ்வப்போது வீட்டுக்கு வரும் கிராமத்துப் பெண்களால் துபாய்க்காரர் வீடு என்று பெயரும், தனியே ஒரு டீச்சரம்மா மகன்களுடன் வசிக்கிறார் என்பதும் ஊரெங்கும் பரவியது. அபுதாபி என்னும் பெயர் புழக்கத்துக்கு வந்திருக்கவில்லை, துபாய் எனும் குடைச்சொல்லுக்கு கீழே அபுதாபி, குவைத், ஷார்ஜா போன்ற நாடுகள் அடங்கி இருந்த காலமது. எப்படியானாலும் ஆர்னால்டு ஷ்வாஷ்னேகர் ஆண்கள் இல்லாமல் பெண் ஒருத்தி தனியே இருப்பது ஒரு அதிசயமாகி பலர் நேரில் வந்தும் ’’.. பன்னாடி எங்கே? எப்போ வருவாரு? எப்படி தனியாக தைரியமாக இருக்கிறேன்?..’’ என்றெல்லாம் கேட்கத் தொடங்கினார்கள். 

எனவே நான் பேச்சோடு பேச்சாகச் சொல்வதுபோல் தோட்ட வேலைக்கு வரும் பெண்களிடம், என்னிடம் ஒரு கைத்துப்பாக்கி இருக்கிறது என்று சொல்லிவைத்தேன், அதனால் எந்தப் பயமும் இல்லை, லைசென்ஸ் வேறு இருக்கிறது, பாதுகாப்புக்காக நான் எப்போது வேண்டுமானாலும் சுடலாம் என்றும் சொல்லிவிட்டதால் அக்கிராமம் முழுக்க அந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. சரண், தருணிடமும் அதையே சொன்னேன்; பொய் சொன்னால் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா? 

அவர்களும் ஒரு கேள்வியும் கேட்காமல் நம்பினார்கள். அவ்வப்போது துப்பாக்கி எங்கே இருக்கு என்று கேட்டு நச்சரிப்பார்கள். அது எல்லாம் மறைச்சு வச்சிருக்கேன், சொல்ல முடியாது குண்டு போட்டுருக்கில்லையா நீங்க எடுத்தா சுட்டுருவீங்க..’’என்பேன்.

சரண் புத்திசாலித்தனமாக, ’’…மறைச்சு வச்சிருந்தா திருடன் வந்தா டக்குன்னு எப்படி எடுப்பே?..’’  என்பான்.

நான் பதிலுக்கு ’’… அது வந்து மறைச்சுதான் வச்சிருக்கேன், ஆனா எனக்கு உடனே கைக்குக் கிடைக்கும் இடத்துல வச்சிருக்கேன்…’’ என்பேன். நான் கல்லூரிக்குச் சென்றிருக்கையில் இவர்கள் இருவரும் மாய்ந்து மாய்ந்து துப்பாக்கியைப் பல இடங்களில் தேடி இருக்கிறார்கள். 

வெகுகாலம் கழித்தே அது பொய் என்று தெரிந்துகொண்டார்கள்.  நான் என்ன சொன்னாலும் நம்பிய பொற்காலமது. ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. இப்போது தருண் படிப்பு முடித்து வீட்டில் இருக்கிறான். அவனுக்கு வேலை வரும் ஆகஸ்ட்டில்தான் சென்னையில், எனவே நேரம் கிடைக்கையிலெல்லாம் அவனோடு பேசிக்கொண்டிருப்பேன். 

மகன்களோடு செலவிடும் சமயம் மிகவும் அரிது என்று அறிந்திருக்கிறேன். வேலை, கல்யாணம், குடும்பம் என அவர்கள் முன்புபெரும் கதவுகள் திறந்திருக்கின்றன. எனவே கிடைக்கும் சமயத்தை பேசிப்பேசிக்கழிக்கிறோம்

பெரும்பாலும் என் இளமைக்காலக்கதைகள் தான். அப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் நான் முதன்முதலில் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்த சம்பவத்தைச் சமீபத்தில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

என் இளமைப்பருவத்தில் நான் மகிழ்ந்திருந்த காலமென்றால் அபயமத்தை வீட்டிலும், சரஸ்வதி பெரியம்மா வீட்டிலும் விடுமுறையில் இருந்த காலங்கள்தான். அதுவும் அபயமத்தை மீது எனக்குப் பெரும் பிரேமை இருந்தது.

என் சொந்த அத்தைகள் எல்லாம் மாமன்களிடம் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு, மூக்குச் சிந்திக்கொண்டும், அகால வேளையில் ரத்தக்காயங்களுடன்  இடுப்பில் குழந்தைகளோடு வந்து கதவை தட்டும் அபலைகளும், அண்ணன் வீட்டில் சீராடிக்கொண்டு வந்து இருப்பவர்களுமாகத்தான் இருந்தார்கள்.

ஆனால் அபயமத்தை நன்றாகப் படித்து, என் மாமாவைக் காதல் திருமணம் செய்துகொண்டு, லவ்டேல் பள்ளியில் நல்ல வேலையில் இருந்ததோடு, புடவையை ஒற்றைத்தலைப்பாகப் போட்டுக்கொண்டு, குளிர்கண்ணாடி அணிந்து, ஒரு மொபெடில் ஜம்மென்று என்னையும் உட்காரவைத்துக்கொண்டு சேரிங் கிராஸ்க்கு அழைத்துச்செல்வார்கள்.  அத்தை நல்ல ஓங்குதாங்காக வேறு இருப்பார்கள். எனவே எனக்கு அவரைப் போல் இருக்க வேண்டுமென்று பெரிய கனவெல்லாம் இருந்தது.

லவ்டேலில் இருந்த அத்தையும் மாமாவும்  சென்னை  கிண்டி ஐஐடி-யில் பணிமாறுதல் பெற்று வந்தார்கள். பின்னர் என் கோடை விடுமுறைகள் எல்லாம் சென்னையில்தான். மாமா அங்கு உடற்பயிற்சி இயக்குநராகவும், அதே வளாகத்தில் இருந்த வனவாணி பள்ளியில் அத்தை உடற்பயிற்சி ஆசிரியையாகவும் பணியாற்றினர். ஆசிரியர் குடியிருப்பொன்றில் கீழ்த்தளத்தில் வீடு. ஒரு கோடை விடுமுறையின்போதுதான் அவர்கள் வீட்டில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி வாங்கி இருந்தார்கள். நான் போன முதல் நாளே ஞாயிறு என்பதால் அன்று மாலை ஏதாவது ஒரு மொழித் திரைப்படம் போடுவார்கள் என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

மாமா ஒலிபரப்பு துவங்கும் முன்னர் தொலைக்காட்சியை ஆன் செய்து, கரகரவென்று சத்தத்துடன் கருப்பு வெளுப்பில் புள்ளிகளால் நிறைந்திருக்கும் திரையைக் காட்டி “பார்த்தியா, இதுதான் சென்னை மெரினா பீச் மணல்” என்று மொக்கை ஜோக் சொல்லிக்கொண்டிருந்தார். 

அக்கம் பக்கத்துக் குழந்தைகளும் வந்து அந்த குட்டி ஹால் முழுக்க நிறைந்து அமர்ந்திருந்தோம். அத்தை பெரிய பாத்திரத்தில் வாழைக்காயை மெல்லிசாகச் சீவி, எண்ணெயில் பொரித்து, உப்பு மிளகாய்த்தூள் போட்டுப் பொரித்து எல்லோருக்கும் சின்னச் சின்னக் கிண்ணங்களில் சாப்பிடக் கொடுத்திருந்தார்கள்.

அன்று ஒரு கருப்பு வெள்ளை மராத்திப்படம்; எனக்கு அந்தப் படம் லேசாகத்தான் நினைவில் இருந்தது, ஏதோ இளம் சன்னியாசியின் படம் அது. அந்தச் சிறுவனும் அவன் தங்கையுமாகக் காடெல்லாம் அலைவார்கள். ஒரு சமயம் ஊரில் எங்குமே அவர்களுக்குச் சமைக்கப் பாத்திரமோ சாப்பாடோ கொடுக்க மறுப்பார்கள்.

பசித்தழுத தங்கைக்கு இளம் சன்னியாசி கனன்று சுடும் தன் முதுகையே அடுப்பாக்கிக் காட்டுவார். தங்கை அவரது முதுகில் தோசைக்கல் மாதிரி ஒவ்வொரு ரொட்டியாகச் சுட்டுச் சுட்டு எடுப்பாள்.

அந்தப் படத்தின் மற்ற காட்சிகள் எல்லாம் எனக்கு மறந்துவிட்டன. ஆனால் இந்த தோசைக்கல் முதுகு மட்டும் மனதில் அப்படியே பதிந்துவிட்டது.

ஆனால் இந்தத் தருண் நான் சொன்னதை நம்பவே இல்லை. துப்பாக்கி வைத்திருந்ததையெல்லாம் நம்பினவன், “..போடா! முதுகு தோசைக்கல்லாமா? அதுல ரொட்டி சுடுவாங்களாமா? யார்கிட்ட கதை விடுறே? இப்படியெல்லாம் ஒரு புராணக்கதை நான் எங்கேயுமே கேட்கலை” என்று ஒரேயடியாக மறுத்தான். 

நானும் என்ன என்னவோ கூகுளில் தேடியும் அப்படி ஒரு படத்தை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இவன் வேறு, “டேய் சும்மாதானே சொன்னே? உண்மையைச் சொல்லு” என்று வெறுப்பேற்றிக்கொண்டிருந்தான். 

’’..சத்தியமா அப்படி ஒரு படம் இருந்ததுடா, நான் டிவியில் பார்த்த முதல் படமே அதான் , எதுக்குடா பொய்சொல்லபோறேன் உன்கிட்ட..’’ என மீள மீளச் சொல்லி என் முகம் வாடிய பின்னர், அவன் “சரி இரு, நான் தேடுறேன்” என்று ஜெமினையிடம், பல விதங்களில் கேட்டு, ஒருவழியாக அது 1940-ல் வெளியான 35 எம் எம் கறுப்பு வெள்ளை மராத்திப் படமான ‘Sant Dhyaneshwar’ என்பதையும், அதன் யூடியூப் லிங்க் எடுத்தும் அந்த முதுகு தோசைக்கல்லில் ரொட்டி சுடப்படுவதையும் பார்த்துவிட்டான். 

அந்த இளம் சன்னியாசி அவரது யோக வலிமையின் வெப்பத்தினால் முதுகைச் சூடு பண்ணி இருக்கிறார் என்பது இப்போது தெரிந்தது. நல்லவேளையாக படம் யூடியூபில் இருந்தது; இல்லாவிட்டால் நான் பொய் சொன்னேன் என்று நினைத்திருப்பான் 

திரைப்பட இணைப்பு: https://www.youtube.com/watch?v=HPqQydBYwz8 (Zee Music Marathi)

காட்சியின் தனி இணைப்பு: https://www.youtube.com/watch?v=DWs9LI_LT_8 

(தங்கை முக்தாபாய் ஞானேஸ்வரின் தகிக்கும் முதுகில் ரொட்டி சுடும் அந்த புகழ்பெற்ற  காட்சி).

கும்பகோணம் ஜெனிஃபர்!

2004-ல் சரணும் தருணும் சிறுவர்கள். சரணுக்கு 3 வயது, தருணுக்கு 1 ½ வயது. அவர்களிடம் சொன்னாலும் புரியாத வயது என்பதால் கும்பகோணம் பள்ளி தீவிபத்தைப்பற்றி அவர்களிடம் சொல்லவில்லை.

கும்பகோணத்தில் ஸ்ரீ கிருஷ்ணா பிரைமரி, சரஸ்வதி நர்சரி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் ஒரே வளாகத்தில் நெரிசலான ஒரு கட்டிடத்தில் இயங்கின. சுமார் 900 குழந்தைகள் அங்கு படித்தனர்.

2004 ஜூலை 16 காலை 11 மணிவாக்கில் பள்ளியின் சமையலறையிலிருந்து பறந்த தீப்பொறி சமையலறையின் ஓலைக்கூரையிலிருந்து பள்ளியின் ஓலைக்கூரையில் பிடித்துக் காற்றில் மளவளவென்று பரவியது.

அன்று பள்ளிக்கு ஆய்வாளர் வருவதாக இருந்ததால் மாடியிலிருந்த ஆங்கில மீடியம் பிள்ளைகளையும் கீழ்த்தளத்தில் நெருக்கமாக அமரச்செய்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் காண்பிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். மாடியிலிருந்து இறங்க மிகக்குறுகலான ஒரே ஒரு படிக்கட்டும் பள்ளியிலிருந்து வெளியேற ஒரே ஒரு வாசலும் மட்டுமே இருந்தது. ஓலைக்கூரை எரிந்து சரிந்ததில் வகுப்பறைகளின் வாசல் முற்றிலும் மூடப்பட்டு, குழந்தைகள் தப்பிக்க வழியின்றி உள்ளே மாட்டிக்கொண்டு கருகி இறந்தனர். 10 வயதிற்கு உட்பட்ட 94 பிஞ்சுக் குழந்தைகள் ஆணா பெண்ணா என்று கூட கண்டுபிடிக்க முடியாமல் கருகிக்கட்டையாகக் கிடந்த அந்த காட்சி இன்னும் என் நெஞ்சில் அப்படியே இருக்கிறது.

மாடிப்படிகளில் பாதி இறங்கிய ஒரு குழந்தை, “அய்யோ பென்சில் டப்பாவை அங்கேயே வைத்துவிட்டேன், அது இல்லைன்னா அம்மா அடிப்பாங்க” என்று மீண்டும் ஓடிச்சென்று உள்ளே சிக்கி கருகிய சோகத்தையும் தாளவே முடியவில்லை. பேரண்டிங் குறித்த பெரும் கேள்வியை எழுப்பிய சம்பவம் அது.

நெருப்பு, சாவு, வெப்பம் எதுவும் அந்தப் பிஞ்சுகளுக்குத் தெரியவில்லை; பாதுகாப்பு பற்றியும் பெற்றோர் ஏதும் சொல்லித் தரவில்லை. பொருட்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று மட்டுமே கடுமையாகச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. இன்றும் அப்படிப்பட்ட பெற்றோர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

76 குழந்தைகள் அங்கேயே இறந்தார்கள்; 18 பேர் மருத்துவமனையில் தீக்காயங்களுடன் போராடித் தோற்று உயிர்விட்டார்கள். பிழைத்தவர்களில் பலருக்கு சரும மாற்று சிகிச்சை செய்து, கடும் மனச்சிக்கல்களுடன் இன்னும் வாழ்கிறார்கள்.

அன்று ஜெனிஃபர் ஆங்கில மீடியம் பள்ளியில் 4-ம் வகுப்பில் இருந்தாள். கீழ்த்தளத்தில் அமரவைக்கப்பட்டிருந்த அவள் அனுமதி பெற்று வெளியே இருந்த தண்ணீரை குடிக்கச் சென்றபோதுதான் தீ பரவியது. தீயைப்பார்த்ததும் உள்ளே வகுப்பில் இருந்த தன் தம்பியையும் இழுத்துக்கொண்டு வெளியே ஓடித்தப்பித்தாள் ஜெனிஃபர்.

தப்பிப் பிழைத்த குழந்தைகளுக்கு வேண்டியவற்றை அளித்து, உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தொடர்ந்து உதவிய அன்றைய ஆட்சியர் ராதாகிருஷ்ணன் மீது ஜெனிஃபருக்கு பெரும் அபிமானம் உண்டாகி இருக்கிறது, அந்தப் பிஞ்சு மனதில். ஆட்சியர் பணி குறித்த ஒரு கனவை அவர் விதைத்திருக்கிறார்.

வறுமையான குடும்பத்தைச்சேர்ந்த ஜெனிஃபர் இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் வென்று, மாவட்டத்தில் 15 வது இடம்பெற்று, துணை மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்க இருக்கிறாள். ” எனது அதிகாரத்தில் முதலில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வேன்” என்கிறார். மானசீகமாக அவளது கைகளை இறுகப்பற்றிக் கொண்டேன். சமீபத்தில் தெரிந்துகொண்ட மிக மகிழ்ச்சியான செய்தி இதுதான்.

சிங்கப்பெண் அதிரடித்திட்டம்!

த வெ க பொறுப்பேற்றபின் பெண்களின் பாதுகாப்பின் பொருட்டு சிங்கப்பெண் அதிரடிக்காவல் திட்டத்தை அறிவித்து, உடனே தொடங்கவிருந்து பின்னர் எதனாலோ தாமதமாகி பின் இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் தவணையாகவே இந்தத்திட்டத்துக்கு  354 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் இந்த ஆட்சியில் மட்டுமல்ல கடந்த எல்லா ஆட்சிகளிலும், எல்லாக் காலங்களிலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் இருந்திருக்கிறது இருக்கிறது.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமூக நிலை என்பது வரலாற்றில் ஒரே சீராக இருந்ததில்லை; அது காலத்திற்குத் தகுந்தாற்போல் பல ஏற்ற இறக்கங்களையும், முரண்பாடுகளையும் கொண்டதாகவே இருந்துள்ளது. முற்காலத்தில் பெண்கள் “முழுக்க முழுக்கப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தார்கள்” என்பதும் உண்மையல்ல, அதே சமயம் “எப்போதும் ஒரு பொற்காலத்தில் வாழ்ந்தார்கள்” என்பதும் உண்மையல்லதான்.

பண்டைய தமிழ் சமூகத்தில், குறிப்பாக சங்க காலத்தில், பெண்களுக்குக் குறிப்பிடத்தக்க அறிவுச் சுதந்திரமும் மதிக்கத்தக்க இடமும் இருந்தது என்பதை நம் இலக்கியங்கள் காட்டுகின்றன. அவ்வையார் காக்கைபாடினியார் போன்றோரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பல பெண்கள்  ஏராளமாக பயணத்திருக்கிறார்கள்,  காதல் மற்றும் இணையைத் தேர்வு செய்வதிலும் சுதந்திரம் இருந்திருக்கிறது,  சமூக மதிப்பும் இருந்திருக்கிறது.

ஆனால் அதே சங்க காலத்திலும் அதற்குப் பிந்தைய காலங்களிலும், பெண்களின் “பாதுகாப்பு” என்பது பெரும்பாலும் அவர்களின் கற்பை பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின்  மூலமே உறுதி செய்யப்பட்டது.

இலக்கியங்களில் ‘இல்லிவன்பூட்டி’, ‘இறைவளை நல்லார்’ எனப் பெண்கள் வீட்டின் எல்லைக்குள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்படும் வழக்கம் இருந்தது.   வெளியில் இருக்கும் வன்முறையைக் குறைப்பதற்குப் பதிலாக, பெண்ணை வீட்டிற்குள் வைப்பதையே  சமூகம் பாதுகாப்பாகக் கருதியது.

போர் நடக்கும்போது, தோற்ற நாட்டின் பெண்களைக் சிறைப்பிடித்து வருவதும், அவர்கள் அசிங்கப்படுத்தப்படுவதும்  வழக்கமாக இருந்தது.

 இடைக்காலச் சமூக அமைப்பில், சங்க காலத்திற்குப் பின்பு உடன்கட்டை ஏறுதல், மொட்டையடித்தல், கைம்மை நோன்பு போன்ற சடங்குகள், கைம்பெண்களுக்கான உணர்வுகளை மந்தமாக்கும் பிரத்யேக உணவுகள் (அல்லிவிதை) போன்றவை தீவிரமடைந்து, பெண்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்கிறது  உலகப்பொதுமறையான திருக்குறள். கடவுளைக் கும்பிடாவிட்டாலும் கணவனைத் தெய்வமாகக் கும்பிட்டுவிட்டு எழுகிற பெண் ‘பெய்’ என்று சொன்னால் மழை பெய்யுமாம்.

இன்றைக்கு வரை கணவன் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக மங்கலய பூஜைகளும், காரடையான் நோன்புகளும், இன்னும் பல விரதங்களும் நோன்புகளும் மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன. ஆனால், இதற்கு நேர்மாறாக, ஒரு மனைவியின் ஆயுளுக்காகவும், அவளது நல்வாழ்வுக்காகவும் கணவன்மார் கடைப்பிடிப்பதற்கென்று எந்தவொரு பிரத்யேக வழிபாடுகளோ அல்லது நோன்புகளோ நம் பண்பாட்டு வழக்கங்களில் உருவாக்கப்படவே இல்லை.

ஏன் மனைவி நீளாயுளுடன் இருக்க வேண்டியதில்லையா? பொண்டாட்டி செத்தவன் புதுமாப்பிளை எனும் பழமொழி எப்படி  வந்திருக்கும்?

பெண்ணின் வாழ்வும் ஆரோக்கியமும் அவளது கணவனைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்ற எண்ணமே இத்தகைய வழிபாட்டு முறைகளின் பின்னணியில் இருக்கிறது. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு, உத்தியோகம் புருஷலட்ஷணம்? இப்போது ஆண் மட்டுமா உத்தியோகத்திலிருகிறான்?

இந்த நிலை மாற வேண்டும். குடும்பம் என்பது இருவருக்குமானது, அங்கு இருவரின் ஆயுளும், ஆரோக்கியமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற புரிதல் புதிய தலைமுறை ஆண்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிச்சயம் வர வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில்,  பெண்கள் வெளியே வந்துவிட்டனர். கல்வி, வேலைவாய்ப்பு, விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் சாதனை படைக்கிறார்கள்.

முன்பை விட இன்று பெண்களுக்குச் சட்டப் பாதுகாப்பும் (POCSO, உள்நாட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம், பணியிடப் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்), அவசர உதவிக்கான தொழில்நுட்பங்களும் அதிகம். ஆனால், பெண்கள் பொதுவெளியில் நடமாடும் சுதந்திரம் அதிகரித்துள்ளதால், அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறையின் வடிவங்களும் சைபர் குற்றங்கள், பொதுவெளித் தொல்லைகள் என மாறியுள்ளன.

எனவே சிங்கப்பெண் திட்டம் போன்ற முயற்சிகள் அவசியம் என்றாலும், என்னைப் பொறுத்தவரை வேரில் பூச்சிபிடித்திருக்கும் ஒரு மரத்துக்கு அதை கவனிக்காமல் கிளைகளுக்கும் இலைகளுக்கும் மருந்தடிப்பதைப் போன்றதுதான் இது.

சைபர் குற்றங்களாகட்டும், குடும்ப வன்முறைகளாகட்டும், தோல்வியுற்ற தாம்பத்தியமாகட்டும், பெண்களுக்கு எதிரான எல்லாக் குற்றங்களுக்கும் காரணமாக வேறு காரணிகள் இருக்கின்றன. அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது சரிசெய்ய சிங்கப்பெண் போன்ற திட்டங்களுக்கு இணையான முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.

பல்வேறு உலகளாவிய சமூகவியல் ஆய்வுகளின்படி, ஓருபால் திருமணங்களில்  லெஸ்பியன் (பெண்-பெண்) உறவுகளில்   விவாகரத்து அதிகரித்திருக்கிறது.  ஒப்பிடுகையில் ஆண்-ஆண் திருமணங்களில் சட்டப்பூர்வ பிரிவுகள்  குறைவாகப் பதிவாகியுள்ளன.. எல்லா வகையான உறவுகளிலும் சிக்கல் இருக்கிறது வன்முறை இருக்கிறது என்னும் போது சிக்கல்களின் வேரைக்கவனிக்க வேண்டுமல்லவா?

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிங்கப்பெண் திட்டத்தில் பல முக்கியமான முன்னெடுப்புகள் மற்றும் வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவை வெறும் தற்காப்பு அல்லது அவசரக் கால உதவிகளோடு நின்றுவிடாமல், இன்னும் ஆழமாகச் செயல்பட வேண்டியிருகிறது.

ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பது, பெண் காவலர்களுக்கு என்று பிரத்யேக உடனடி அடையாளம் காணும் வகையில் சீருடை அளித்திருப்பது, பள்ளி கல்லூரி பேருந்து ரயில் நிலையங்களில் கூடுதல் கவனிப்பும் பாதுகாப்பும் கண்காணிப்பும் அளிப்பது, தொழில்நுட்ப நிறுவன வளாகங்களிலும் பிற தொழில் நிறுவனங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, நெரிசல் மிகுந்த இடங்களிலும் பொதுப் பூங்காக்களிலும் பாதுகாப்பு அளிப்பது, சைபர் குற்றங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது, பின்தொடர்தல், பாதுகாப்பு அச்சம் விளைவித்தல் போன்ற குற்றங்களைக் கண்காணிப்பது, பாலியல் தொழிலுக்குப் பெண்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதைக் கண்காணிப்பது,  பெண் கள் தொடர்பான எல்லாக் குற்றங்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பது எனப் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. 

முழுக்க சிங்கப்பெண் தரப்பை இன்னும் நான் அறிந்துகொள்ளவில்லை எனினும் என் பரிந்துரைகள்: 

108 ஆம்புலன்ஸ், 100 காவல் என்று இருப்பது போல் சிங்கப்பெண் காவலர்களை அழைக்கவென்று ஒரு தனி எண் தரப்பட வேண்டும். நான் வளைகுடா நாட்டில் இருந்தபோது, அங்கு இப்படி குடும்ப வன்முறைகளைத் தடுக்கவென்று ஒரு நாளில் பலமுறை காவல் ரோந்து வாகனம் எல்லா குடியிருப்புகளின் வழியாகவும் மிக மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும். மாடியிலிருந்து பார்ப்பவர்களுக்கும் தெரியும் வகையில் அந்த வாகனத்தின் மேற்கூரையிலும் மிகத் தெளிவாகக் காவலர்களைத் தொடர்புகொள்ளும் எண் பெரிதாக எழுதப்பட்டிருக்கும். மேலும், அங்கெல்லாம் உள்ளூர் தொலைபேசி சேவை முற்றிலும் இலவசம் என்பதால் அது மிக பயனுள்ளதாக இருந்தது. குடும்ப வன்முறையில் ஈடுபட அங்கு வாழ்ந்த இந்தியர்களும் இந்த ஒரு காரணத்தினாலேயே மிகத் தயங்கியதை நான் அறிவேன்.

ஆனால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இவற்றுக்கெல்லாம் காரணமாக இருப்பது என்னவென்பதையும் கவனத்தில் கொண்டு, அவற்றைத் தவிர்க்கவும் சிங்கப்பெண்ணுக்கு இணையான கவனத்துடன் திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இப்படியான குற்றங்களுக்கு அடிட்பைக்காரணம் பாலியல் வறட்சிதான்.  இளம் வயதினருக்கு ஒழுக்கம், விழுமியம் போன்றவற்றைக் கற்றுத்தர வேண்டிய குடும்பம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதைச் சுத்தமாக மறந்துவிட்டு, மதிப்பெண் வாங்குவதற்கு மட்டும் மெனக்கெடுவது மிக முக்கியமான காரணமாகி இருக்கிறது.

பெண் குழந்தைகளுக்கு ஒருபக்கம் மிகத் தீவிரமாக கவனமும் செல்லமும், பாதுகாப்பும் அளிக்கும் குடும்பங்களும், மற்றொரு பக்கம் அவர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை எடுக்கக்கூட நேரமில்லாமல் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் குடும்பங்களும் பெருகி இருப்பது.

ஆணும் பெண்ணும் இளம் வயதில் எதிர்பாலினரைத் தெரிந்தும் புரிந்தும் கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்யும் கல்வி நிறுவனங்களும், அவற்றில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கப் போட்டி போடும் அறிவற்ற பெற்றோர்கள் இருப்பதும் பெரிய அவலமாகி இருக்கிறது.

குடும்ப வாழ்வில் மனைவி என்பவர் ஆணுக்குச் சமையலும் வீடு வேலையும் செய்வதற்காக இன்னொரு வீட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவள் என்ற எண்ணத்தோடு ஆண்கள் இருப்பது.அந்த எண்ணத்தை மகன்களின் பெற்றோர்களும் நூற்றாண்டுகளாக நம்பி வளர்த்தெடுத்துக் கொண்டிருப்பது எனப் பல முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்து, உயர்ந்த கல்வி அளிப்பதாகச் சொல்லிக்கொண்டு பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் தமிழகப் பள்ளிகளில், ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனி வளாகம், தனித்தனி விளையாட்டு மைதானம், தனித்தனி படிக்கட்டுகள், தனித்தனி வகுப்பறைகள் இருக்கின்றன; இதை முதலில் தடை செய்ய வேண்டும்.

எதிர்பாலினத்தவரைப் பற்றிய அறிதலே இல்லாத இளைஞர்களை உருவாக்குவது, பிற்பாடு அவர்கள் இருவராக இணைந்து ஒரு கூரைக்கு கீழ் வாழவேண்டி வருகையில் அவர்களின் மனச்சிக்கல்களையும் உளவியல் ரீதியான கோளாறுகளையும் அதிகமாக்கிவிடுகிறது. இதுவே மணவுறவுச் சிக்கல்களுக்கும், பாலியல் வறட்சிக்கும் அடித்தளமிடுகிறது.

மேட்டுப்பாளையத்தில் ஒரு பிரபல பள்ளியில் சரணின் நண்பன் படிக்கையில், பெண்களின் விளையாட்டு மைதானத்தைத் திரும்பிப் பார்த்ததற்காக அவன் பல மணி நேரம் மைதானத்தில் முட்டிப் போட வைக்கப்பட்டான்.

கல்லூரி ஒன்றில் ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டிருந்ததற்காக, அவர்களின் அடையாள அட்டையைக் கல்லூரி முதல்வர் வாங்கி வைத்துக் கொண்டு, பெற்றோர்களை அழைத்து வரச் சொல்லியதால், அந்தப் பெண் அன்றே தற்கொலை செய்து கொண்டாள்.

இப்போதும் வானொலியில் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். பள்ளிகளின் விளம்பரங்களில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனி வளாகம் என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. பல பெற்றோர்களும் இதை விரும்புகிறார்கள்.

12-ம் வகுப்பு முடிந்ததும் தினமலர் போன்ற நாளிதழ்களும் பிற நிறுவனங்களும் ‘இனி என்ன படிக்கலாம்?’ என்பதற்கான ஆலோசனைகளைத் தரும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை ஏராளமாக ஒருங்கிணைக்கிறார்கள் அல்லவா?

அப்படி இளம் வயதில் இருப்பவர்களின் குடும்பங்கள் அந்த மிகச்சிறப்பான, குழப்பங்களும் ஹார்மோன் கொந்தளிப்புகளும் மனச்சிக்கல்களும் ஏராளம் இருக்கும்  வயதில்,  குழந்தைகளை,எப்படி நடத்த வேண்டும், வெறும் மதிப்பெண்களுக்காக அவர்கள் இளமையைத் தொலைக்க வேண்டியதில்லை, இந்த காலகட்டத்தில் அவர்களுக்குப் புரிதலும் அனுசரணையும், நல்ல ஊட்டச்சத்தும் தேவை, ஓய்வும்  அவசியம் என்பதை புரிந்து கொள்ள நல்ல உளவியல் தெரிந்த பேச்சாளர்களைக் கொண்டு பல இடங்களில் பேச வைக்க வேண்டும்.

சமூக ஊடகங்களின் தாக்கமும் ஊடுருவலும் மிகத் தீவிரமாக இருக்கும் இக்காலத்தில், அப்படிப்பட்ட ஊடகச் செய்திகள் பலருக்கும் சென்று சேரவும் அரசு முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.

‘’..இப்ப பார்த்தீங்கன்னா, ஒரு அம்மா ராத்திரி 1 மணிக்கு ‘மேக்கப் போடுது…’ என்று ஒருவர் சொன்னதுமே, அதற்குப் பின்னர் என்ன சொல்லப் போகிறார் என்று கூட யோசிக்காமல், அரங்கம் சிரித்துக் கும்மாளமிடுகிறது.

இப்படியான அசட்டு பிசட்டு நகைச்சுவைகள் அன்றாடம் எத்தனை முறை மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது! அப்படி இளைஞர்களை எப்படி உடல், மனம் போன்ற ரீதியாகக் காயப்படுத்தாமல் வாழ வைப்பது என்னும்  தரமான உரைகளை ஊடகங்கள் வழியாகப் பரப்ப வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற எத்தனை வழிகளை ஊடகம் வழியாக உண்டாக்குகிறார்கள் அதே அக்கறையோடு இவைகளும் பரப்பப்பட வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் கட்டாயம் உளவியல் நிபுணர்கள் எப்போதும் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். குடும்ப வன்முறை, பின்தொடர்பவர்களால் உண்டாகும் மன அழுத்தம், பாலியல் தொல்லை போன்ற பலவற்றைப் மாணவ-மாணவிகள் பகிர்ந்து கொள்ள  யாரும் இல்லாத சூழல் கல்விக்கூடங்களில் நிலவுகிறது.

ஒரு ஆசிரியர் தவறாக நடந்து கொள்கிறார் என்றால், மாணவர்கள் புகார் அளிக்க முடிவதில்லை. எனவே, அந்தந்தப் பள்ளிகள், கல்லூரிகளில் புகார் பெட்டி பல இடங்களில் இருக்க வேண்டும்.

மேலும் ‘குட் டச், பேட் டச்’ (Good Touch, Bad Touch) போன்றவற்றைச் சிறு குழந்தைகளுக்கும் தொடர்ந்து கற்றுத்தரச் சிறப்பு வகுப்புகளும், பாடத்திட்டத்திலேயே இணைக்கப்பட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சில்மிஷங்களில் ஈடுபடாத ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

குடும்ப ஆண்களால் பெண்கள் பாலியல் தொல்லைகளை அனுபவிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. அவற்றைச் சொல்லவும் அவர்களுக்குப் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, உளவியல் நிபுணர்கள் எதேச்சையாக வரவேண்டியோ அல்லது மருத்துவ முகாம் ஒன்று நடக்க வேண்டியோ இருக்கிறது.

கோவைக்கல்லூரி ஒன்றில், ஒரு தேர்வின் போது ஒரு மாணவியைக் காணோம் என்று தேடித் தேடி அவளை மொட்டை மாடியில் கண்டுபிடித்தார்கள். அழுதுகொண்டிருந்த அவளை விசாரித்ததில், அவளது தந்தை அவளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிக்கொண்டே இருப்பதால் படிக்க முடியவில்லை என்றும், தேர்வை எதிர்கொள்ள முடியாமல் அப்படிச் செய்தாள் என்றும் தெரியவந்தது.

எங்கிருந்து பெண்களுக்குத் தொல்லை வந்தாலும் தெரிவிக்க ஒரு பிரத்யேக எண் அல்லது புகார் பெட்டி அவசியம் வேண்டும். எந்தக் கல்வி நிறுவனமாக இருந்தாலும், மாலை அல்லது காலை நேரச் சிறப்பு வகுப்புகள் இருந்தால், அங்கு கட்டாயம் ஆசிரியர் அல்லாத அல்லது பாடம் கற்பிக்காத, யாருக்கும்  யாரும் எந்தத் தொல்லையும் அளிக்காமல் இருக்கிறார்கள் என்று மட்டும் கண்காணிக்கும் பெண் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

கல்வி நிறுவன வளாகங்களிலும் பள்ளிப் பேருந்துகளிலும் கட்டாயம் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மனநல ஆலோசகர்கள் இல்லாத பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஆண் மையச் சமூகத்தை அத்தனை எளிதாக மாற்றிவிட முடியாது என்றாலும், இந்தத் தலைமுறையினருக்காவது பாடப்புத்தகங்களில் இருக்கும் பல பேதங்களைத் தவிர்த்த பாடங்களை இணைக்க வேண்டும்.

உதாரணமாக, human என்று வரவேண்டிய இடங்களில் எல்லாம் man என்று இருக்கிறதல்லவா, அதையெல்லாம் கவனமாக மாற்ற வேண்டும்.

Evolution of man, Descent of man, Stone age man என்றெல்லாம் வாசிக்கிறோமே, அப்போது பெண்கள் இல்லையா என்ன? டார்வினின் பரிணாம வளர்ச்சிப் படமான புகழ்பெற்ற ‘குரங்கிலிருந்து மனிதன் உருவான’ வரிசையில் ஆண் உடல் மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் இன்னும் பரிணாம வளர்ச்சியே அடையவில்லையா?

பெண் உடலை அப்படியே பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஜனன உறுப்புகளோடு சித்தரிக்க முடியாது என்றால், உறுப்புகளை மறைக்கும் வகையிலான கோணங்களில் (Silhouette or Stylized representations) ஏன் சித்தரிக்கக் கூடாது?

உடற்கூறியல், தசை மண்டலம், எலும்பு மண்டலம் போன்ற பொதுவான அறிவியல் வரைபடங்களில் ஆண் உடல் மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது பெண்களுக்கு அந்த மண்டலங்கள் இல்லையா என்ன?

இனப்பெருக்கச் சித்தரிப்புகளுக்கு மட்டுமே  பாடப்புத்தகங்களில் பெல்விக் பகுதியுடன் மட்டும் தனியே பெண் காட்டப்படுகிறாள். இதைப் படித்து வளரும் குழந்தைகளுக்குப் பெண் இனப்பெருக்கத்திற்கு மட்டுமானவள் எனும் புரிதல் மட்டுமே உண்டாகும். பாலினச் சார்பற்ற (Gender Neutral) உடலமைப்புகளைப் பாடப் புத்தகங்களில் கொண்டு வர வேண்டும். பெண் உடல் என்பது வெறும் இனப்பெருக்கத்திற்கு மட்டுமே உரியது என்று ஆண்கள் பள்ளிக்கால  இளமையிலிருந்தே நம்பும் நிலையை மாற்ற வேண்டும்.

பூப்பு நன்னீராட்டு விழாக்களையெல்லாம் விளம்பரப்படுத்தாமல் இருக்கலாம். அந்தச் சின்னப்பெண்ணுக்கு அஜித்தும் விஜய்யும் தலையில் கைவைத்து ஆசியளிக்கும் பேனர்கள் ஊரெல்லாம் வைக்கப்படுகின்றன, அதற்கு முற்றிலும் எதிராக மருந்துக்கடையிலும் மளிகைக் கடையிலும் ரகசியமாகக் கஞ்சா வாங்குவது போல் நியூஸ் பேப்பரில் சுற்றப்பட்டுச் சானிட்டரி நேப்கின்  வாங்குவதும் நடந்துகொண்டிருக்கும், வெளிப்படையாக கடைகளில் தனக்கு வேண்டிய ஃபெமினைன் ஹைஜின் பொருட்களை கேட்டுவாங்கலாம் என்று பெண்களும் நினைக்க வேண்டும். பெண்களை அப்படி நாம் வளர்கக்வும் வேண்டும். அது ரகசியமாக செய்யவேண்டிய திருட்டுச்செயலல்ல. இனப்பெருக்கத்திற்கு எங்கள் வீட்டுப் பெண் தயார் என்பதை பகிரங்கமாக விளம்பரப்படுத்தும் சமூகத்தில், வளர்ந்து வரும் ஆண் சமுதாயத்திற்குப் பெண்களின் மீது எப்படிப்பட்ட நல்ல அபிப்பிராயம் இருக்க முடியும்?

மாதவிலக்கு நாட்களில் பெண்களை வீட்டிற்குள் சேர்க்காமல் தீட்டு என்று சொல்லி வெளியிலோ அல்லது தனி அறையிலோ ஒதுக்கிவைக்கும் குடும்பங்கள், அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான புரிதலைக் கொடுக்கப் போகிறார்கள்? அது பெண் குழந்தைகளுக்கே தங்களின் உடல் சார்ந்த இயற்கை நிகழ்வின் மீது ஒருவிதக் குற்றவுணர்ச்சியையும், தாழ்வுமனப்பான்மையையும் வளர்க்கும். ஆண் குழந்தைகளுக்கோ பெண் உடல் என்பது ஏதோ அசுத்தமானது, ஒதுக்கி வைக்கப்பட வேண்டியது என்ற தவறான பார்வையை விதைக்கும்.

ஆண் குழந்தைகள், பெண்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள், இனப்பெருக்கத்திற்கானவர்கள் ஆண்களுக்கு வேலை செய்துகொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் மட்டுமே என நினைப்பதற்கான எல்லா அடித்தளங்களையும் இச்சமூகம் செய்துகொண்டே இருக்கையில் சிங்கப்பெண் திட்டம் எப்படி வெற்றிகரமாக இயங்க முடியும்?

எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று குழந்தைகளைத் தான் கேட்க வேண்டும். மருத்துவர்களும் பொறியாளர்களும் மட்டுமே நிறைந்த உலகமாய் மாறிப் போவதில்லை என்பதை முட்டாள் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிறப்பு வகுப்புகள் நடத்தும் நிறுவனங்களில் அவ்வப்போது அதிரடிச் சோதனை நடத்தி, வகுப்புகளின் காலம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது, வகுப்புகளால் பாதுகாப்பு எப்படி இருக்கிறது எனத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

சமூக ஊடக விளம்பரங்களும் இந்த ஆண் ஆதிக்கச் சமூகத்தைப் பேணிக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு, நெய்யிலோ இதயம் நல்லெண்ணெயிலோ, பிரீத்தி மிக்ஸியிலோ சுவையாகச் சமைக்கும் பெண்கள், உணவு மேஜையில் அமர்ந்திருக்கும் ஆணுக்கும் அவன் குடும்பத்திற்கும் கொண்டு வந்து கொடுக்கும் உணவுகளை அவர்கள் சுவையாகச் சாப்பிட்டுப் பாராட்டுவது போன்ற விளம்பரங்கள்.

வாஷிங் மெஷின், குக்கர், மிக்ஸி, அடுப்பு போன்ற விளம்பரங்களுக்குப் பெண்களும், ரேஸ் கார், பைக் விளம்பரங்களுக்கு ஆண்களும் வருவதைக் குடும்பத்தோடு அமர்ந்து தொடர்ந்து பார்க்கும் இளம் தலைமுறையினர்—சமையல், பரிமாறுவது, துவைப்பது எல்லாம் பெண்களுடையது என்றும், ரேஸ் கார் ஓட்டுவதுதான் ஆண்மை என்றும் நம்புவார்கள்.

அ. வெண்ணிலாவின் ஒரு கவிதை இருக்கிறது: “யார் சொல்லிக் கொடுத்தது அந்தச் சின்னப் பெண்ணுக்கு, வீட்டு வாசலில் இருக்கும் நாளிதழை அம்மாவிடமும், புத்தகத்தை அப்பாவிடமும் கொடுக்க வேண்டும் என்று?”

நான் அன்றாடம் கேட்கும் ஒரு வானொலி விளம்பரம் இருக்கிறது: மாமனார் “அம்மாடி, தினத்தந்தியோ (தினமலரோ) எங்கே?” என்பார். எழுந்துட்டீங்களா மாமா? “இதோ கொண்டு வருகிறேன்” என்பார் மருமகள். உடனே கணவன் “லதா தினத்தந்தி எங்கே?” என்பார். “மாமா படிக்கறாருங்க படிச்சதும் கொண்டு வருகிறேனே” என்பாள் மனைவி. அடுத்து ஒரு சின்னப் பெண் “அம்மா, அப்பா படித்ததும் எனக்குக் கொடுங்கள்” என்பாள்.உடனே தாய் மகிழ்ந்து “எத்தனை தலைமுறையானாலும் தினத்தந்திதான் சிறந்தது” என்பார்.

ஏன் அத்தனை தலைமுறையாயினும் ஆண்கள் நாளிதழைக் கூடத் தாங்களாக எடுத்துக் கொள்ளாமல் பெண்களை ஏவுகிறார்கள்? இதை தினமும் கேட்டு பார்த்துத்தான் வளருகிறது எதிர்கால தலைமுறையொன்று. திரும்பத் திரும்ப ஒரு ஆண் ஆதிக்கச் சமுதாயத்தைக் கட்டமைத்து வளர்த்துவிட்டு, சிங்கப்பெண், புலிப்பெண் திட்டங்களை முன்னெடுப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

பெண்களை கிள்ளுக்கீரையாக நடத்தலாம் பெண்கள் காம இசைக்காக படைக்கப்பட்டவர்கள் பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் பெண்களை எப்படிவேண்டுமானாலும்நடத்தலாம் என்று சமூகம் ஆண்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. இதனால் தான் திரும்பத்திரும்ப பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் சீண்டல்களும் அவமதிப்புகளும் எத்தனை தண்டனை கொடுத்தாலும் நடந்துகொண்டே இருக்கிறது.

ஆண்கள் தேநீர் தயாரித்துக் களைத்து வரும் பெண்களுக்குக் கொடுக்கும் ஒரு தேநீர் விளம்பரம் இருக்கிறதா? நல்ல நெய் ஊற்றித் தோசை சுட்டு மனைவிக்குக் கணவன் கொண்டு வந்து தரும் ஒரு விளம்பரமாவது இருக்கிறதா? பெண்கள் கார் ஓட்டிக்கொண்டு போகும் ஒரு கார் விளம்பரம் தான் இருக்கிறதா? ஏன் இல்லை?

எல்லா நிறுவனங்களிலும் சிங்கப்பெண் புகார் பெட்டி வைக்கப்பட்டு, அதில் வரும் புகார்களை சிங்கப்பெண் அதிகாரிகள், காவலர்களே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் திறந்து பார்த்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவற்றைஎல்லாம் செய்தால்தான் இந்தத் திட்டம் உண்மையில் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான பெயரளவுத் திட்டங்களைப் போல இதுவும் ஆகிவிடும். 

இந்த திட்டத்தில் காவலர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்கள், பெற்றோர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள், மாணவப்பிரதிநிதிகள், உயர்கல்விதுறை அமைச்சகத்தினர், மேடைப் பேச்சாளர்கள் இன்ஸ்டா பக்கத்தை உருவாக்குபவர்கள் என பலதரப்பினரும் இருக்கவேண்டும்

சிங்கப்பெண் காவலர்களுக்கும் பணியில் ஈடுபடுவதற்கு முன்பே உளவியல் ஆலோசனைகளும் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

பொள்ளாச்சி வீட்டில் இருக்கையில், அருகில் பெண்களுக்கென்று பிரத்யேகக் காவல் நிலையம் இருந்தது. அதில் வேலை பார்த்த தலைமைக்காவலர் எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவர். அவர் மிகக் கடுமையான அணுகுமுறைகளைக் கொண்டிருந்தவர் என்பதால், அங்கு விசாரணைக்கு வரும் குடும்ப வன்முறை வழக்குகளில் ஆண்களுக்குத் தண்டனை நிச்சயமாக இருந்தது.

வேலைக்குப் போகாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்து மனைவியைச் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்த அந்தத் தலைமைக் காவலரின் கணவர், ஒருமுறை சண்டையில் அக்காவலரின் கையை அடித்து உடைத்துவிட்டார். பல மாதங்கள் கட்டுப்போட்டுக் கொண்டு காவல் நிலையத்திற்கு அவர் வந்துகொண்டிருந்தார்.

சிங்கப்பெண்களுக்கு உண்மையில் தாங்கள் எதைப் பாதுகாக்கவிருக்கிறோம், தங்களுக்குத் தங்கள் வீடுகளிலும் இணையரிடமும் பாதுகாப்பு இருக்கிறதா, சமூகத்தில் தங்களின் இடம் என்ன என்ற புரிதலும் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கப்பெண் திட்டத்தை ஆண்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்ளும் பெண்களைக் குறித்த கவனமும் அவர்களுக்கு இருக்க வேண்டும்.

கன்னிமரா!

கல்லூரி திறக்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன. தருண் வேலையில் சேர இன்னும் ஒரு மாதமாகும். நினைத்துக்கொண்டாற்போல நேற்று ’’..அம்மா நாளைக்கு டாப்ஸ்லிப் போலாமா?..’’ என்றான். உடனே சரி என்றேன். வெகுநாட்களாகிறது அங்கு சென்று, தருண் காட்டியல் படிக்கையில்  6 மாதம் அங்கே பயிற்சியில் இருந்தான். அப்போது அவனை அழைத்துவரச் சென்றதுதான்.

இன்று அதிகாலை புறப்பட்டோம். ’’…சாப்பாடு செய்றது, பேக் பண்றதுங்கற வேலையே வேண்டாம் நேராப் போறோம் என்ன கிடைக்கிறதோ சாப்பிடறோம் ஓகேவா..’’ என்றான். சரி என்றேன். ’’…சில சமயம் நூடுல்ஸ்தான் கிடைக்கும்..’’ என்று என் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். ’’…என்னவானாலும் சாப்பிடுகிறேன் வா..’’ என்றேன்.

எனவே காலை நான் ஒரு காபி மட்டும்  தருண் சர்க்கரையோ பாலோ எடுத்துக்கொள்வதில்லை எனவே அவன் ஊறவைத்த சில பாதம் பருப்புகள்.

6 மணிக்கெல்லாம் ஆனைமலை போய்விட்டோம். அங்கே ஒரு டீக்கடையில் தருண் பன்னும் டீயும், நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். போண்டாவுக்கும் வடைக்கும் இடைப்பட்ட ஒரு சாதனம் இருந்தது. சூடாக உள்ளங்கையில் அடங்காத அளவில், கடலைமாவில் பெரிது பெரிதாக வெங்காயம் வெட்டிபோட்டு உருட்டி எண்ணெயில் பொறித்தது பசித்தால் சாப்பிட அதை வாங்கிக்கொண்டோம். 

கடையில் நல்ல கூட்டம். உள்ளே சில பென்ச்சுகளில் வயர் கூடையில் தண்ணீர் பாட்டிலும் தூக்குவாளியும் இடுப்பில்  வெற்றிலை புகையிலை பாக்கு சகிதம் சுருக்குப்பையுமாகப் பின்கொசுவப் பெண்கள் அமர்ந்து வடை சாப்பிட்டார்கள். நான் சுய்யம் இருக்கும் என எதிர்பார்த்தேன். எனக்கு இப்படியான கிராமப்புற டீக்கடைகளில் விற்கும்  மெல்லிய இனிப்புடனிருக்கும் சுய்யம் பிரியம், ஆனால் அது அங்கு இல்லை. 

’’கட்டன்2 , 4 பால் டீ, 2 காபி, .” என்று மாஸ்டர் பரபரப்பாக இயங்கினார். யாருக்கு கட்டன் என அவர் கண்ணாடி டம்ளரை நீட்டுகையில் ஒரு குரல் “அட, போட்டுட்டியா… நான் பால் டீ குடிக்கலாம்னு நினைச்சேன்” என்றது. மாஸ்டர் கடுப்பாகி, “ஆமா, டீ போடச்சொல்லுவே போட்டுக்கொடுத்தா வேற கேப்பே!… நானென்ன உன் பொண்டாட்டியா?” என்றார்.

இருவரும் புன்னகைத்துக்கொண்டே காருக்கு வந்தோம். ஆறேமுக்காலுக்கெல்லாம் டாப்ஸ்லிப்  செக்போஸ்டுக்கு வந்துவிட்டோம். எனினும் 7 மணி பஸ் வந்தபின் , அந்த பஸ்ஸுக்கு பின்னால்தான் தனியார் வாகனங்களை அனுப்புவார்கள் என்று முன்பே தெரியுமாதலால் அமைதியாகக் காத்திருந்தோம். எங்களுக்கு முன்பு ஒரு கார் இருந்தது. பின்னாலும் சில கார்கள் வந்து சேர்ந்துகொண்டன. மிகச் சரியாக 7 மணிக்கு பஸ்ஸின் ஹார்ன் ஒலி கேட்டது. 7.03-க்கு பஸ் செக் போஸ்டுக்கு வந்ததும் அனைவரையும் பஸ்ஸுக்குப் பின்னே அனுமதித்தார்கள். நல்ல இளமழையில் நீண்ட சாலையில் தொடர்ந்த கார்களை முன்னே செல்லவிட்டு அமைதியாகப் பயணித்தோம்.

ஒரு சில காட்டுக்கோழிகள் மட்டுமே ஓடின. மயில்களின் அகவல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. கிளம்பும் போது ஒன்றும் சொல்லாமல் காட்டுக்குள் வந்தபின்னர், “….டேய் காட்டுக்கு வரும்போதுதான் நீ இப்படி மாம்பழக்கலர்ல புடவை கட்டிட்டு வருவியா?…’’ என்றான். நான் பதிலே சொல்லவில்லை.  “போனை முதல்ல ஆஃப் பண்ணு, சத்தம் வந்ததோ…” என்று மிரட்டல் வேறு. துளிக்கூட சிக்னலே இல்லாத காட்டில் இதுவேற என்று நினைத்துக்கொண்டேன்.

பழங்குடியின செட்டில்மெண்ட்டில் நிறைய உலகக்கோப்பை கால்பந்து பேனர்கள் இருந்தன. சின்ன சின்ன கால்பந்து மைதானங்களும். இளளைஞர்கள் கால்பந்து வீரர்களின் சீருடையைப் போல டி ஷர்ட் அணிந்திருந்தார்கள்.

வன அலுவலகத்தின் முன்னால் கார் நின்றதும், எதிரே என் மாணவனும் மிகச்சிறந்த தாவர வகைப்பாட்டியல் நிபுணனுமாகிய பிரகாஷ் நின்றிருந்தான். அவன் காட்டில்தான் பணியில் இருக்கிறான் என்று தெரியும், ஆனால் அங்கு அவனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு பென்ச்சில் அமர்ந்து பிரகாஷும் நானும் தருணும், தருணுக்கு முன்பே பரிச்சயமாயிருந்த அலுவலர் விஷ்ணுவும் பேசிக்கொண்டிருந்தோம். லண்டானா (உண்ணிச்செடி) அழிப்பு மும்முரமாக இருப்பதால் ஒரு சில செடிகளே கண்ணில் பட்டன. மகிழ்ச்சியாக இருந்த “இதென்ன ருயெலியா சிம்ப்ளெக்ஸா? (Ruellia simplex அதை இளம் ஊதா மணி வடிவ மலர்களுடன் நித்யவனத்திலும் பார்த்திருந்தேன்) இது சாப்பிடுகிற காளானா? அட, பாம்புக்களா?” என்று நானும் பிரகாஷும் பரவசமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

அனுமதி வாங்கிக்கொண்டு யானைக்கொட்டிலுக்குச் சென்றோம். நல்ல மழையில் யானைகள் வந்து அவற்றுக்குரிய இடங்களில் நின்று, அவரவர் பாகன்களால் உணவுக்கவளங்கள் ஊட்டப்பட்டன. மிக கம்பீரமாய் அக்காட்டின் முதிய யானை கஜராஜா கலீம் வந்தது. அதன் மேல் பாகன் அமர்ந்திருப்பதே மேலும் கம்பீரமாக இருந்தது. தூரத்தில் மதம் கொண்ட கபில்தேவ் தனியே கட்டிவைக்கப்பட்டிருந்தது. தலையை ஆவேசமாக ஆட்டிக்கொண்டு தேக்குக்காட்டுக்குள் தனித்திருந்தது கபில்தேவ்.

கலீம் 

தேவி என்று ஒரு யானை இருந்தது அங்கே, அதையும் சின்னத்தம்பி யானையையும் வேறு முகாமிற்குக்கொண்டு சென்றுவிட்டார்கள். தேவி யானையைப் பார்க்க நினைத்திருந்தேன்.  

கோழிக்கமுத்தியிலிருக்கும் குழந்தைகள் கலீமை “கலீம் தாத்தா” என்று அழைக்கிறார்கள், அது சந்தோஷமாக இருந்தது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் வண்டி ஓட்டுநர் தருணுக்குத் தெரிந்தவர். அந்த இளைஞனிடமும் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்புகையில் மணி 9 தான் ஆகியிருந்தது. 

யானைக்கொட்டிலுக்கருகே ஒரு சிறுவன் அமர்ந்து செல்போனில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்தான். எதிரே அடர்காடு இளமழை யானைகளும் குரங்குகளும் கண்னேதிரே ஆனால் அவனோ செல்போனில் விளையாடுகிறான் என்று ஆதங்கமாக இருந்தது.

த வெகவின் சுற்றுச்சூழல் அமைச்சர் தன்னை சுற்றுலாத்துறை அமைச்சர் என சொல்லிக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக அந்த துறைக்கு என்னை அமைச்சராக்கினால் முதல் கையெழுத்து தமிழகக்காடுகளுக்குள் செல்போன் சிக்னல்களை துண்டிக்கும் கோப்பில்தான் போடுவேன்.

கபில்தேவ்

மணி 10 தான் ஆகி இருந்தது, தருண், “டேய் பரம்பிக்குளம் போலாமா?” என்றான். “சரி” என்றேன். உடனே கட்டணம் செலுத்தி கேரள எல்லைக்குள் சென்றோம். அங்கிருந்த ஒரு ஹோட்டலில் இட்லி சாப்பிட்டோம். சுவையான இட்லி, இரண்டு சட்னி சாம்பாருடன். நிறம் மட்டும்தான் இட்லிக்கு கொஞ்சம் மட்டும்.

 உள்ளே சென்றதும் Safariக்கு அவர்களது வேனில்தான் போக வேண்டும் காருக்கு அனுமதியில்லை என்றார்கள். பின்னர் தலைக்கு 500 செலுத்தி, வேனில் எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த எண் இருந்த  இருக்கையில் அமர்ந்தோம். உடன் 13 ஆண்கள் ஒரு வேனில் வந்திருந்தார்கள்.

வேன் புறப்படக் காத்திருக்கையில் மரக்கூழுக்காக வெட்டப்பட்ட தேக்கின் அடிமரக் கட்டையிலிருந்து தளிர்கள்செழித்துத் துளிர்த்து நின்றிருந்தன. நுனியில் இருக்கும் செந்தளிரை எடுத்து அதன் சாற்றைக் கையில் மருதாணி போல வைத்துக்கொண்டேன். தருண், “சும்மா இருக்க மாட்டியா?” என்று அடிக்குரலில் உறுமினான். நான் அலட்டிக்கொள்ளாமல், “முதல்ல வீடியோ எடு” என்று அதட்டி அவனை எடுக்க வைத்தேன்.

13 ஆண்களுடன் , மேலும் ஒரு தம்பதியும்,  மகளுடன் வந்திருந்த ஒரு பெற்றோருமாக வேன் நிறைந்ததும் புறப்பட்டோம். காட்டெருது, கருமந்தி, ஏராளமான மயில், மான்கூட்டம் எல்லாம் பார்த்தோம். 

மீண்டும் மூங்கில் மலர்வைக் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அது பெரிய அதிர்ஷ்டம் எனக்கு, இது மூன்றாவது முறை. மலர்ந்து நாட்களாகியிருக்கும் போல, மூங்கிலின் கிளைத்த மஞ்சரிகள் காய்ந்து மூங்கில் தொகுப்புகள் எல்லாம் உடைந்து காய்ந்திருந்தன. ஒரு நன்கு விளைந்த மூங்கில் பிளந்து உடைந்து தொங்கிக்கொண்டிருந்தது. அதன் கணுவிடைவெளிக் குழியில் இருந்த கையளவு மழைநீரில் துண்டு வானம் இருந்தது. 

கார் ஜன்னலுக்கருகே உடைந்து நீட்டிக்கொண்டிருந்த உலர்ந்த சில மூங்கில் மஞ்சரிகளை மட்டும் எடுத்துக்கொண்டேன்

கன்னிமரா தேக்குக்கு அழைத்துச் சென்றார்கள். வேனில் இருந்த ஒருவர்  ’’.. போ மாமா ஏறி இறங்கி  மரத்தைப் பார்க்கறதாவது நான் வரவில்லை…” என்று சீட்டில் படுத்துக்கொண்டார். அவர்கள் திருநெல்வேலிக்காரர்கள். “சித்தப்பு, அங்கே மூணு எருமையா கீது? இல்ல மாப்ள, நாலு கீது, நல்லாப் பாரு!” “யாராச்சும் ஏதாச்சும் பார்த்தா ஜோரா (சத்தமா) சொல்லுங்க, அதுக்குத்தான் நம்மை இட்டாந்திருக்காங்க” என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். 

கொங்கு பெல்ட்டில் இந்த ஸ்லாங் கேட்க எனக்கு வேடிக்கையாக இருந்தது. நான் திருநெல்வேலி போய் பேசியிருந்தால் அவர்களுக்கும் வேடிக்கையாக இருந்திருக்கும். நான் அடியாண்டம் பெரணியையும், மரத்தில்  பச்ச்சையும் வெள்ளையுமாகப் பிடித்திருக்கும் லைக்கன்களையும் போட்டோ எடுப்பதை அவர்களில்  ஒருவர் மிக வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். “கோட்டி பிடித்திருக்கிறதோ இந்த அம்மாவுக்கு” என நினைத்திருக்கக்கூடும். கோட்டிதான், பின்னல்லாதே!

கன்னிமராவின் உயரமும் பிரம்மாண்டமும் பிரமிப்பை ஏற்படுத்தியது. அருகில் சென்று தொட்டுக்கொண்டு போட்டோ எடுத்துக்கொண்டேன். தருணையும் “மரத்தைக் கட்டிக்கொள்” என்று சொன்னபோது, “போடா, டிபிக்கல் டூரிஸ்ட் பழக்கம் அது” என்றான். வற்புறுத்திப் போகச் சொன்னேன், வேண்டாவெறுப்பாகச் செய்தான்.

வேன் காட்டுக்குள் செல்லும்போது புங்க மரத்தின் கிளைகள் ஜன்னலில் உரசி என் மடியில் ஒரு புங்கங்காய்  பச்சைப்பதக்கம் போல் விழுந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக்கொண்டேன்.

வழியில் ஒரு சிறு ஆமை ரோட்டில் இருந்தது. வேனில் வந்த வன அலுவலர் வண்டியை நிறுத்தி, அதை எடுத்துப் பாதுகாப்பாக ஓரத்தில் விட்டார். 2 மணி நேரத்திற்கும் மேல் இருந்த வன உலா முடிந்ததும் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தோம்.

என் தோழி ஸ்ரீமா அங்கே டெண்ட் கேம்ப்பில் தங்குபவர்களுக்கான உணவகம் நடத்துகிறாள். மூன்று மகன்களுடன் இளம் விதவையாக அங்கே அவள் பல வருடங்களுக்கு முன்பு கேண்டீன் நடத்தத் துவங்கினாள். அவளது மூத்த மகன் விஷ்ணு என் மாணவன். இப்போது மணிப்பாலில் முனைவர் பட்ட ஆய்வில் இணையவிருக்கிறான் நானும் என் அமெரிக்கத் தோழி ஜாய் டேனியலும் முன்பு அங்கே சென்று அடிக்கடி தங்குவோம். அப்போதிலிருந்து ஸ்ரீமா நல்ல தோழி எனக்கு.

முதல் முறை பார்த்தபோது எலுமிச்சம்பழ மஞ்சளில் சுடிதார் போட்டுக்கொண்டு,  அடுப்படியில் நின்று நின்று வியர்த்து மெருகேறிய முகமும் விரித்துவிட்ட கூந்தலுமாக ஒரு காட்டுப்பூவைப் போலிருந்தாள். அவளுக்குச் சொல்லாமல் சமையலறையின் வாசலில் நின்று, “ஸ்ரீமா!” என்று குரல் கொடுத்தேன். பார்த்துப் பத்து வருடங்களுக்கும் மேலே இருக்கும். எட்டிப்பார்த்தவளுக்கு முகமெல்லாம் பூரித்து, “அய்யோ மேடம், இது எந்தா ஒரு  முன்னறிவிப்பில்லாதே?” என்று கட்டிக்கொண்டாள். இரண்டு பேருமாக மலையாளத்தில் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்ததை தருண் சிரித்துக்கொண்டு பார்த்திருந்தான்

பிறகு ஸ்ரீமா கட்டாயம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியதால், டெண்டில் தங்குபவர்களுடன் சேர்ந்து காட்டின் நடுவில் இருந்த வட்ட உணவகத்தில் சப்பாத்தி, பருப்பு, சிக்கன், தட்டைப்பயிறு கறி, வெண்டைக்காய் புளிக்குழம்பு, கோஸ் துவரன், சாம்பார், மோர், அப்பளம், பாயசம் எனச் சாப்பிட்டோம். அங்கிருந்தவர்களிடம் எல்லாம் “இது உண்ணியுட மாஷே” என்று பெருமையாக என்னை அறிமுகம் செய்துவைத்தாள்.  

பின்பு விடைபெற்றுக்கொண்டு, மீண்டும் டெண்டில் தங்குவதைப் பற்றிப் பேசிக்கொண்டு  தொட்டால்சிணுங்கியைத் தொட்டுப்பார்த்துக்கொண்டு பெரணிகளை சேகரித்துக்கொண்டு, உள்ளங்கையில் தேக்குக்கொழுந்தின் சிவப்பு அடிபட்டுகன்றியது போல் பிடித்திருக்க ஊர் திரும்பினோம். நீண்ட, நல்ல அனுபவங்கள் நிறைந்த நாள்.

தருணும் பெங்களூரும் பெயர்களும்!

சமீபத்தில் மீண்டும் பெங்களூர் செல்ல வேண்டி வந்தது. தருண் மேற்படிப்பை முடித்துவிட்டான். அவனது பட்டமளிப்பு நிகழ்வுக்கு எல்லோரும் வரவேண்டும் என விரும்பினான்.  முதன்முறையாக இந்தபயணத்தில்தான் தருண் விளையாட்டுப்பிள்ளை, பெண்களால் விரும்பப்படுபவன் என்னும் எளிய சித்திரங்களிலிருந்து பொறுப்பான ஆண் என்னும் இடத்துக்கு (என்மனதில்) வந்திருக்கிறான். அவன் முன்பே முதிர்ந்திருக்கக்கூடும்.

குந்திக்கு பார்த்தன் போல என் மனதிலிருக்கும் விழைவுகளெல்லாம் மகன் உருவெடுத்தது போல தருண் எப்போதும் எனக்கு.

ஒரு நாள் எதனாலோ கோபமாக இருந்த நான் அவனை வீட்டு வாசலில் எதற்கோ கடந்து சென்றேன். தருண் ’’.. ஏ புள்ளே பொன்னுத்தாயீ, என்ன? மாமன் நிக்கறேன் நீ பாட்டுக்கு போறவ ? திரும்பித்தான் பார்க்கறது?…’’ என்றான். குபீரென சிரித்துவிட்டேன். பெண்களால் ஏன் அவன் விரும்பப்படுகிறான் என்பதை நான் நன்கறிவேன்

சரண் எனக்கும் தந்தையின் இடத்தில் இருப்பவன்.

இந்த நிகழ்விலும் முதுகில் அறைந்த வெயிலில் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கையில் இயல்பாக என் தலையில் தன் கையை வைத்து, என் மீது வெயில் படமலிருக்க செய்தான் சரண். இதை அவன் நினைவில் கூட வைத்திருக்கப் போவதில்லை. ஆனால் நான் மின் மயானம் செல்லும் வழியிலும் நினைத்துக்கொள்வேன்.

தருண் என்னைப் போல் இல்லை என்பதும் ஆறுதலளித்தது. நான் என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால் ஆனவள்,  கசந்த இளமைப்பருவம், வலிமிகுந்த பிள்ளைப்பருவத்தின் வேதனைகளிலிருந்து மீண்டுவர முடியாதவள்  நான். அந்த வஞ்சங்களை எல்லாம் ஒருபோதும் மறக்கவும் விரும்பாதவள். பல ஆண்டுகளாகின்றன என் தாய் வீட்டுக்குள் நான் காலடி எடுத்துவைத்தும் ஒரு வாய் தண்ணீர் குடித்தும்.

ஆனால் இந்த நிகழ்வுக்கு தன் இறுதிக்காலத்திலிருக்கும் தனது அப்புச்சி உடன் வரவேண்டுமென விரும்பினான் தருண். அவரை 86 வயதில் அத்தனை நீண்ட கார்ப் பிரயாணத்தில் மற்றொரு மாநிலத்துக்கு அழைத்து செல்வதிலிருந்த அனைத்துப் பாதகங்களும் அவனிடம் சொல்லப்பட்டன. ’’..எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. போறோம் அவ்வளவுதான்…’’ என்றான்.

எனவே அனைவரும் காரில் பெங்களூர் சென்றோம். தருண் மட்டுமே  கார் ஓட்டத் தெரிந்தவன் ஓட்டுநர் வந்தால் இடம்பற்றாக்குறை ஆகும் என்பதால் சாம்பவி, லக்‌ஷ்மியுடன் ஐந்துபேராக தம்பியின் புதுப் பெரிய காரில் சென்றோம். தம்பி விஜி பணி நிமித்தம் வெளிநாட்டில் இருக்கிறான். சரண் மும்பையிலிருந்து சனிக்கிழமை விமானத்தில் வந்து ஞாயிறு இரவு திரும்பி செல்ல முடிவெடுத்திருந்தான்.

செல்லும் வழியில் பழைய சிவாஜி பாடல்களையும், திருச்சி லோகநாதனின், சிதம்பரம் ஜெயராமனின் பாடல்களையும் ஒலிக்க வைத்து அவருக்கு பிடித்திருக்கிறதா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டான். நான் அவனை வியப்புடன் பின்னாலிருந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.

கோரிக்கையற்று கிடக்குதண்ணே இந்த வேரில்பழுத்த பலா, வசந்த மாளிகையின் பாடல்களை எல்லாம் அவர் ரசிப்பதைப் பார்த்து, “இது பிடிக்குமா அப்புச்சி உங்களுக்கு?” என்று கேட்டுக்கொண்டான். அவர் மகிழ்ந்து, “பின்னே!” என்றார்.

“இது யார் பாடினதுனு சொல்லுங்க?” எனக் கேட்பதும், அடிக்கடி அவரை சிறுநீர் கழிக்க இறக்கிவிட்டு, உதவி பிறகு கைகளை கழுவிவிட்டு, மீண்டும் மாற்றுடை அணிவித்துவிடுவதுமாக, பொறுமையாகக் கார் ஓட்டிக்கொண்டு வந்தான்.

தொப்பூரைத் தாண்டி இருக்கையில் ’’விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது, பாடல் ஒலித்தது. அதில் வரும் எனக்குப் பிடித்த “பாலில் நெய்யளவு பரந்த புன்னகை” என்னும் வரிகளைச் சிலாகித்துவிட்டு, அதன் அர்த்தத்தை என்னிடம் மீண்டும் கேட்டு, “சே, எப்படி எழுதியிருக்காங்க இல்லை?” என்று அதிசயித்தான். பின் நினைத்துக்கொண்டது போல, “ஆமா, அதென்ன கையளவு பழுத்த மாதுளை?” என்றான்.  மயான அமைதி நிலவி யாரும் பதில் சொல்லாமலிருக்கையில், அவன் அப்புச்சி “ஹ ஹ” என்று மெல்ல சிரித்தார். பின்னர் அவனும் புன்னகைத்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தான்.

அவனுக்கு பிடித்த பாடல்களும் கேட்டோம். ’’நீரலைகள் இடம் மாறி நீந்துகின்றன் குழலோவில் தொடங்கி,

துணைவனைக்காக்கும் கடமையும் தந்தாய் தூயவளே நீ வாழ்கவைத்தொட்டு,

காய்ந்துபோன சோலையோரம் கங்கை வந்து பாயும் நேரத்துக்கு வந்து

பின்னர் ஒரே பாய்ச்சலாக டிப்பம் டப்பம் பாடலுக்கு வந்து

‘’அவ அழக பத்தி பாட… இல்ல எஜுகேஷன்…

என் மனசு இனி உனக்கு… ஒரு பிளேஸ்டேஷன்…

நீ இருக்கும் எடம் எனக்கு…ஒரு ஹில் ஸ்டேஷன்…
நீ வேணுமுன்னு பண்ணபோறேன்…
மெடிடேஷன்… என்று தாவிக்கொண்டிருந்தான்

ஒரு முழுநாளும் காருக்குள் அடைபட்டிருந்ததில் சாம்பவி பொறுமை இழந்திருந்தாள். அருகில் உறங்குபவர்கள் வாயில் விரலை விடுவதும், “ஏன் பையா படத்துக்கு பையான்னு பேர் வச்சாங்க அதில் யாரு பையன்? எதுக்கு சிவாஜிக்கு 50 வயசில் பிரேக்கப் பாட்டு? (எழுதுங்கள் என் கல்லறையில் அவன் பைத்தியக்காரன் என்று), “ஏன் அருணகிரிநாதர் முருகனை பெருமாள்ங்கறாரு?”(முத்தைத்திரு)  அய்யே சீ, சிவாஜி கன்னத்தையா சொல்லறா? (கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விடமாட்டேன்) என்றெல்லாம் கேள்வி கேட்டுப் பிராண்டிக் கொண்டிருந்தாள்.

திரும்பி வரும்போது பெங்களூரின் பிரபல மால் ஒன்றின் முன் காரை நிறுத்தி, அப்புச்சி கையால் தனது பட்டச்சான்றிதழை வாங்கிக்கொள்ளும்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டான் தருண்.

ஒரு மேம்பால வளைவில் செல்லுகையில் வானில் அழகாக ஒரு வண்ணத் தீற்றலாய் வானவில் தோன்றியது, காரை நிறுத்தி, “அப்புச்சி, அங்கே பாருங்க” என்று சொல்லிக் காண்பித்தான். என் வஞ்சங்கள் தொட்டிருக்காத தொலைவில் அவன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது,பெருமிதப்பட்டுக்கொண்டேன்.

ஹோசூர் தாண்டியதும் பயங்கரப் போக்குவரத்து நெரிசல். மொத்தம் 12 மணி நேரம் எந்தச் சடைவும் புலம்பலும் சோர்வும் இன்றிப் பொறுமையாய், மகிழ்ந்து கார் ஓட்டிக்கொண்டு வந்து எங்களைப் பத்திரமாய் பெங்களூர் கொண்டு போய்ச் சேர்த்தான்.

கிறைஸ்ட் பல்கலைக்கழகம் ஜே ஜேவென இருந்தது. பெரும் கல்வி நிறுவனம் என்பதால் ஆயிரக்கணக்கில் கூட்டம் இருந்தது. அதிலும் பெண்கள் அனைவருக்கும் வெள்ளை நிறப் புடவைதான் Dress Code என்பதால், ஏராளமான தேவதைகளுக்கு மத்தியில் இருந்தோம். இளமையின் அழகு, பட்டம் வாங்கும் நிறைவு என கலவையான அழகுகளில் திளைத்தோம். தருணுக்குக் கேட்கவே வேண்டாம், மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தான்.

நான் இதுவரை பார்த்திராத அவன் தோழிகளையும் பல்கலை வளாகத்துக்கு வெளியே சந்தித்தேன் இம்முறை. அதில் ஒருத்தி யக்ஷகானக் கலைஞர். காது மூக்கு கழுத்து என அணிகலன்கள் எதுவுமில்லாமல், உயர்த்திக் கட்டிய கூந்தலோடு எளிய சிவப்பு பனியனும் ஜீன்ஸுமாக நல்ல உயரமாகப் பேரழகியாக வந்து நின்றாள். அவள் மகாபாரத நிகழ்வொன்றில் அர்ஜுனனாக நடித்த காணொளியை முன்பே பார்த்திருக்கிறேன்.

எப்போதும் அவன் தோழிகளின் புகைப்படங்களை பொதுவெளியில் பகிரக்கூடாதென்னும் அன்புக்கட்டளை இட்டிருக்கிறான் தருண். (அடுத்த வீட்டுபெண்களை அப்படி நாம காட்டக்கூடாது இல்லையாம்மா?)

ரிதி ஆல்வாவுக்குப் பிறகு நான் சந்தித்த அசல் அழகி இவள்தான். இவளும் மங்களூர் கொங்கணிக் குடும்பம் என்பது இன்னுமொரு ஒற்றுமை. “கண்ணுக்குள்ளேயே இருக்கிறார்கள்” என்பார்களே, அப்படி அந்தப் பெண் கண்ணுக்குள்ளேயே நிற்கிறாள். பேரழகி என்பது வெறும் புறத்தோற்றம் மட்டுமல்ல; அவளது கம்பீரமான உடல்மொழி ,நாணிக்கொண்டிருக்காமல், அதே சமயம் “அழகி” என்னும் அகந்தையும் இல்லாமல், கம்பீரமாகவும், அதே சமயத்தில் அழகாகவும் இருந்தாள்.

பல்கலைக்கழகத்தில் அன்று 1,785 பேருக்குப் பட்டம் அளிக்கப்பட்டது. அதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். நான் பெண்களின் பெயர்களை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பெண் பெயர்களைக் கேட்பதும் அறிந்துகொள்வதும் எப்போதுமே மிக விருப்பம்.

அதிகமாகச் சொல்லப்பட்ட பெயர்களில் சாக்ஷி, நவ்யா, ஷாலினி, மஞ்சு, ஷாலு, மது, ரியா, சிஜு, பிஜு இருந்தன. பல நூறு பெயர்களில் எனக்கு மிகப்பிடித்தமானதாக ‘மிதிலா உல்லாஸ்’ இருந்தது. சொல்லிச்சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.

ஒருத்தியின் பெயர் ரியா வர்லியானா! (“அவ தங்கச்சி பேர் தெரியுமா உனக்கு? ரியா வந்தியானா” – தருண்)

அஞ்சலி தேவி என்று பெயர் அழைக்கப்படும்போது, எனக்குக் காம்பஸ் வைத்து வரைந்தது போன்ற வட்ட முகத்துடன், கூடுதல் புஷ்டியாக, அகலக் கண்களுடன், இடுப்பென்பதே இல்லாத, ’’…அழைக்காதே, நினைக்காதே, அவைதனிலே என்னை, ஓ ராஜா…” என்று பாடிய அழகி மனதில் வந்து சென்றார்.

அனிதா அகஸ்டின், ஜுகுனு ஓபராய் போன்ற ஸ்டைலிஷ் பெயர்களும், இருந்தன. சாவியோனா கந்து பேமா என்னும் நீண்ட  பெயர் எனக்கு ஜெ-வின் ‘பேமா’ கட்டுரையை நினைவுக்குக் கொண்டுவந்தது.

தேவதுலா என்னும் பெயரும், பூவண்ணம் எனும் பெயரும் அத்தனை அழகாக இருந்தன.

அங்கித் ராஜ் அதிகாரி, ட்ரிஷா குரியாக்கோஸ், நட்டாலியா தாமஸ், அதிதி பச்சோலி, கிருணாளி மண்ட்ரேகர் ஆகிய பெயர்களும் கவனிக்க வைத்தன. கன்னிகா பரமேஸ்வரி, அம்பிகா ஆகிய பெயர்களும் இனித்தன.

ஒரு பெண்ணின் பெயர் ஜோஷ்வா குலுகுண்டி. (“ஒருவேளை ஊட்டி கொடைக்கானல் பக்கத்துக் குடும்பமாய் இருக்கும்” – தருண்)

சந்தோஷி மந்த மூஸ், ஷிவாஞ்சலி ஜெகதீசன் போன்ற பெயர்கள் கம்பீரமாக இருந்தன.

அந்த நெரிசலில் என்னை ஒரு பெண் பின்னாலிருந்து வந்து தொட்டு, “நீங்க தருணின் அம்மாதானே?” என்றார். ஆச்சரியமாக, “ஆம்” என்றேன்.

முகம் விரிய புன்னகைத்து, “நான் தருணின் ஆசிரியை கரீனா” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, கையைப் பற்றிக்கொண்டு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். சரணிடம் ஐரோப்பாவிலிருந்து வந்த பின்னர் மும்பை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டார்.

“எப்படி என்னைக் கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்டேன். அவரது கைபேசியை எடுத்து, அதில் தருண் அவருக்கு அனுப்பியிருந்த என் புகைப்படத்தைக் காட்டி, “இதைவச்சுத் தேடிக் கண்டுபிடித்தேன்” என்றார்.

ஒரு மாணவனின் குடும்பத்தை அப்படித் தேடிக் கண்டுபிடித்துப் பேசும் ஆசிரியையான அவரையும் என்னையும் நான் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன். நான் ஒருபோதும் அப்படிச் செய்ததே இல்லை. என்னை அப்படி யாரேனும் பார்க்க விரும்பினால், என் அறைக்குச் சென்று காத்திருக்கும்படியோ அல்லது அறைக்கு வரும்படியோதான் சொல்லியிருக்கிறேன்.

அனைத்து ஆசிரியர்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை என்றாலும், என்னால் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பிறகு குழுப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். தருண் நிச்சயமாக எங்களுடன் அறைக்கு அப்போது வர வாய்ப்பில்லை என்பதால் நாங்கள் மட்டும் புறப்பட்டுச் சென்றோம்.

‘சால்ட்’ எனும் நவீன உணவகத்திற்குச் சாம்பவியும் சரணும் என்னை மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார்கள். சரண் அன்று பில்லுக்கு கொடுத்த தொகையில் நான் இரண்டு மாதங்கள் குடும்பத்தை ’’வீசி எறிந்து’’ செலவழித்து நடத்தியிருப்பேன்.

நல்ல மழை அன்று. மாலை அறைக்குத் திரும்பிய தருணுக்கு, கொட்டும் மழையில் அன்று கோலி அடித்த சிக்ஸில் வெற்றி பெற்ற அணியைப் பெங்களூரு இளைஞர்கள் வெறிபிடித்துக் கொண்டாடிக்கொண்டிருந்த அந்த இரவில், காரை எடுத்துக்கொண்டு சென்று மொகாபரா அலுவலகப்பை ஒன்றை வாங்கி வந்த சரண் பட்டம் பெற்றதற்காகப் பரிசளித்தான். தருணுக்கு எப்போதும் தந்தையின் இடத்திலிருப்பவன் சரண்.

பின்னர் சரணை இரவு விமான நிலையத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு, கிரிக்கெட் பைத்தியங்களிடம் மாட்டிக்கொள்ளாமல் பெரும்பாடுபட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம்.

காலை  நேரமே புறப்பட்டு ஊர் திரும்பினோம். யக்ஷகான அழகி வந்திருந்து எங்களுடன் காலை உணவுண்டு விடை கொடுத்து அனுப்பினாள். மனதில் எடைகூட வைக்கும் பேரழகு அவளுடையது. அன்று மதியம் கிறைஸ்ட் பல்கலையில் ஒரு உரையாற்றவிருந்தாள். அவளது அழகிற்கு அவளது புத்திசாலித்தனமும் ஒரு காரணம்தான். நிமிர்வுள்ள இப்படியான பெண்களை எனக்கு எப்போதும் மிகப்பிரியம்.

அவளுடன் வெண்முரசு பற்றியும், மருத்துவர் /கவிஞர் வேணு வேட்ராயன் சென்னையில் குறுந்தொகையை நாட்டிய நாடகமாக்கப் போகும் முயற்சியைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். இதையெல்லாம் பேச இதுநாள் வரை எனக்கு ஒரு இளம் பெண் கிடைத்ததே இல்லை. பேசிக்கொண்டிருந்த அவளின் நினைவே மனதிலாட ஊர் திரும்பினேன்.

வரும் வழியில் ‘ஆஹா’ என்னும், ஒரு இளைப்பாறிக்கொள்ளும், ஓய்வறைகள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, ராஜபாளையம் வடை போன்ற சுவையான சூடான தின்பண்டங்கள் தரும் ஓர் இடத்தில் காரை நிறுத்தினோம். மீண்டும் நல்ல பாடல்கள் கேட்டுக்கொண்டு வரும் வழியில், தருண் சற்று ஓய்வெடுக்க காரை நிறுத்திய ஓரிடத்திலிருந்து, ‘கோழிக்கீரை’ எனப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பர்ஸ்லேன் (Purslane) கீரைச் செடியைப் பறித்துக்கொண்டு வந்தேன். இப்போது தருணின் பட்டமளிப்பு நாளின் நினைவாக அந்தத் தொட்டியில் வேர்பிடித்து வளர்கிறது அந்த ‘கிராஜுவேஷன் கீரை’.

கொச்சின் கவின் கேர் நிறுவனத்தில் விரைவில் பணியில் இணையவிருக்கும் தருணுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்! 

கொல்கத்தாவும் கடலூர் சீனுவும்!

கொல்கத்தாவில் காளி வழிபாடு மிகப்பிரசித்தம். அதைப்போலவே காளிக்கு ஜபா குஸும் என்கிற குருதிநிற செம்பருத்தி (Jaba Kusum) மாலை அணிவிப்பதும்.

செம்பருத்தியின் இதழ்கள் காளியின் நாக்கு எனக் கருதப்படுகிறது இங்கு. கொல்கத்தாவின் பிரசித்தி பெற்ற கோவில்களில் இந்த மாலை தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பயன்பாட்டில் இருக்கிறது என்பதால் உள்ளூர் மலர்ச்சந்தை இந்தச் செம்பருத்தி மாலைகளையே பெரும்பாலும் நம்பி இயங்குகின்றது.

மலர்ந்த செம்பருத்தியில் மாலை கட்டினால் இதழ்கள் கிழிந்து, கசங்கி, காயம்பட்டு அணிவிக்கையிலேயே அதன் அழகை இழந்துவிடும் என்பதால் கல்கத்தாவின் பிரபல Mullick Ghat மலர்ச்சந்தையில் அதிகாலையில் செம்பருத்தி அரும்புகளைப் பறித்து மிக நெருக்கமாகத் தொடுத்து உருவாக்கும் கயிறைப் போன்றிருக்கும் செம்பருத்தி அரும்பு மாலைகள் வெகு பிரசித்தம். இந்த அரும்புமாலையைக் கடவுளுக்கு அணிவிக்கையில் அவை மெல்ல இதழவிழ்ந்து செக்கச்செவேலெனெ மிகச் சரியாக வழிபாட்டின்போது மலர்கின்றன.

செம்பருத்தியைப் போலவே, எருக்கம் மலர்களும் அன்னை காளியின் உக்கிர வடிவங்களுக்கும், வங்காளத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ‘தாரா தேவி’ வழிபாட்டிற்கும் மிக உகந்தவையாகக் கருதப்படுகிறது. எருக்கம்பூவின் உறைவிடமும் அதன் தன்மையும் உக்கிர தெய்வங்களின் அதீத ஆற்றலோடு  ஒத்துப்போவதாக அங்கு நம்பப்படுகிறது.

கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள புகழ்பெற்ற தாராபித் கோவிலில் தாரா தேவிக்கு எருக்கு மாலைகள் கிலோ கணக்கில் சாத்தப்படுகின்றன. வங்காளத்தில் சிவபெருமான் மற்றும் காளி வழிபாடு எப்போதும் ஒன்றோடொன்று இணைந்தது. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான, நஞ்சை முறிக்கும் தன்மையுடைய பூக்களில் எருக்கம்பூ (வங்காள மொழியில் ‘அகந்தா’) முதன்மையானது.

கொல்கத்தாவில் உள்ள தக்ஷிணேஸ்வர் போன்ற பெரிய கோவில்களில் காளி தேவியோடு சேர்த்து சிவபெருமானுக்கும் தனி சன்னதிகள் உண்டு. திங்கட்கிழமைகள் மற்றும் பிரதோஷ நாட்களின் போது இந்த எருக்கு மாலைகள் சிவபெருமானுக்குச் சாத்துவதற்காக அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

செம்பருத்தி அரும்புகளைப் போலவே எருக்கம் மலர்களும் மிகவும் தடிமனான இதழ்களைக் கொண்டவை. இவை எளிதில் வாடாது; காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி நாள் கணக்கில் அப்படியே  புத்தம் புதிதாக இருக்கும். அதனால்தான் மலர் வியாபாரிகள் இதை அழகிய தடிமனான மாலைகளாகத் தொடுத்து விற்கிறார்கள்.

கொல்கத்தாவின் மலர்ச்சந்தைகளில் அந்த அடர் சிவப்புச் செம்பருத்தி மாலைகளுக்கு நடுவே, இந்த வெளிறிய எருக்கு மாலைகள் இருப்பதையே எனக்கு வழிபடலாம் போலிருந்தது.

கொல்கத்தா மலர்ச்சந்தையில் மட்டுமே காண முடியும் இவற்றை இப்போது அங்கிருக்கும் தம்பி கடலூர் சீனி புகைப்படமெடுத்து அனுப்பினார். நன்றி தம்பி.

 லஜ்ஜாவதி என்கிற மைமோசா பூடிகா என்கிற தொட்டால் வாடி!

இன்று ஜெ தளத்தில் மகத்தான நடிப்பு என்னும் பதிவில் தொட்டால் சிணுங்கி என்கிற தொட்டாற்சுருங்கியான, தொட்டல்வாடியாகிய மைமோசா பூடிகாவைப்பற்றி எழுதி இருந்தார். நமஸ்காரி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு

நான் அதிகம் அதிசயிக்கும் மகா புத்திசாலித்தாவரங்களில் மைமோஸாவும் ஒன்று.   புறத்தூண்டல்களுக்கு உடனே இலைகளைச் சுருக்கி எதிர்வினையாற்றும் (thigmonasty)  அதன் புத்திசாலித்தனத்தை விட தொடர்ந்து அளிக்கப்படும் பாதகமேதுமில்லாத புறத்தூண்டல்களைப் புரிந்துகொண்டு இலைகளைச்சுருக்காமலிருக்கும் அதன் நினைவாற்றலை நான் எல்லா வகுப்புகளிலும் சொல்லிச்சொல்லி மாய்வேன்.

நித்யவனம் முதல் தாவரவகுப்பு மாணவி ராஜி அங்கேயே இதை நிரூபித்துக்காட்டினாள்.

தொட்டால் சிணுங்கியின் அறிவியல் பெயர் Mimosa pudica. இதில் லத்தீனச்சொல்லிலான பேரினப்பெயர் mimosa என்பதற்கு mime, acting நடிப்பு/  “போலச் செய்தல்” என்று பொருள். விலங்குகளைப் போல இந்தத் தாவரம் தொடுதலுக்கு எதிர்வினை ஆற்றுவதால் இப்பெயர் பெற்றது.-osa என்றால் resembling என்று பொருள்.

ஜெ தலைப்பாக மகா நடிப்பு என்று கொடுத்திருந்தது பெரும் வியப்புண்டாக்கியது, எத்தனை பொருத்தம்.

Pudica என்னும் சிற்றினப்பெயருக்கு லத்தீன் மொழியில்  “வெட்கப்படுபவள்” / “கூச்சப்படுபவள்” (to feel shame/ Bashful/Shrinking) என்று பொருள்.

  என் பித்துக்களிலொன்று இந்த தாவரவியல் பெயர்களின் வேரைத்தேடி வெகுதூரம் செல்வது. அப்படி மைமோஸா பூடிகாவின் பின்னே பலநாட்கள் சென்றிருக்கிறேன். 17-ம் நூற்றாண்டில்தான் லின்னேயஸால் மைமோஸா பெயரிடப்பட்டது.அதன் சுருங்கும் இலைகளைக்கொண்டு விலங்குகளைபோல நடிக்கிறது என்னும் பொருளில் அந்தப்பேரினப் பெயரிடப்பட்டது.

ஸ்பேனிஷ் மொழியில் இதே மிமோஸா பிரியமான -affectionate என்று பொருள் படுகிறது,மேலும் செவ்வியல் லத்தீன மொழியில் இதற்கு Modest, bashful,  shy , Chaste, virtuous,  pure என்றெல்லாம் பொருள் உண்டு

லத்தீனச்சொல்லான pudere,  என்பதற்கு  வெட்கபப்ட வேண்டிய என்று பொருள் அதுதான் இதன்வேர்ச்சொல்லும் கூட.  இத்தோடு icus என்னும் பின்னொட்டைச்சேர்த்து  pudicus  என்னும் ஆண் பால்பெயரும் (masculine), pudica  என்னும் பெண்பால் பெயரும் (feminine), pudicum  (neuter), என்னும் பால் பேதமற்ற பெயரும் உருவாக்கப்பட்டது. தாவர அறிவியல் பெயர்களில் இப்படி பாலினம் இருப்பதை நாம் அறிவோம்.

 இந்த பூடிகா என்னும் பெயருக்கான வேர் மிகச்சுவாரஸ்யமானது. லத்தீனச்சொல்லான pudenda  வெட்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்லது பகுதிகள் என்று பொருள் தருகிறது.  மருத்துவ மொழியில் இடுப்புப் பகுதியிலிருந்து ஜனன உறுப்புகளுக்கு (to and fro) உணர்வுகளைக் கடத்தும் நரம்புக்கு   pudendal nerve என்று பெயர். மகப்பேறு சமயத்தில்  செய்யப்படும் regional anesthesia procedure க்கு  pudendal block என்றுதான் பெயர். பின்னர் நவீன மருத்துவத்துறை உருவான பிறகு international anatomical nomenclature committee  போன்ற அமைப்புகள்  மனித ஜனன உறுப்புக்கள் மறைக்கப்பட வேண்டியவை, வெட்கத்துக்குரியவை எனும் புரிதலைத் தரும் இந்தச்சொல்லை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க பரிந்துரைத்தது. 

(சங்குப்புஷ்பத்தின் அறிவியல் பெயரான Clitoria ternatea அப்பட்டமாக பெண் ஜனன உறுப்பைக் குறிக்கிறது என்று அந்தப்பெயர் வைக்கப்பட்ட காலத்திலெழுந்த எதிர்ப்பைக்குறித்து முன்பு நான் எழுதி இருக்கிறேன்)

பிற்பாடு இதே சொல் மாடஸ்டி, ஹைடிங் என்னும் பொருளில் புழங்கி பின்னர் இறுதியாக வெட்குதலுக்கு வந்து சேர்ந்தது. எனவே தாவரவியல் இருபெயரீட்டு முறை வந்தபோது தொடுதலுக்கு தன் இலைகளை மூடிக்கொள்ளும் இதற்கு பூடிகா என்று லின்னேயஸால் பெயரிடபட்டது

இந்த இலைகள் மூடிக்கொள்வதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலையும் பார்த்துவிடலாம்

இதன் இலைகள் சுருங்குவதற்குப் பின்னால் ஒரு வியக்கத்தக்க உடலியல்  மற்றும் மின்-வேதியியல் செயல்பாடு உள்ளது.   தொட்டால் சிணுங்கிச்செடியின் இலைக்காம்புகளின் அடிப்பகுதியில் பல்வைனஸ்  எனப்படும் மெல்லிய செல்கள் உள்ளன. இவை நீரைத் தங்களுக்குள் நிரப்பி, நல்ல அழுத்தத்துடன்  இலைகளை நிமிர்த்தி விறைப்பாக வைத்திருக்கும். நாம் இலையைத் தொட்டவுடன், ஒரு மின் வேதியியல் சமிக்ஞை இலைக்காம்பின் அடிப்பகுதிக்கு வேகமாகப் பாய்கிறது.

இந்த சமிக்ஞை கிடைத்தவுடன், பல்வைனஸ் செல்களில் உள்ள பொட்டாசியம் அயனிகளும் (K⁺), குளோரைடு அயனிகளும் (Cl⁻) திடீரென செல்களுக்கு வெளியே  தள்ளப்படுகின்றன. இதனால், செல்களுக்குள் இருந்த நீர் மூலக்கூறுகள் ஆஸ்மாசிஸினால் திசுக்களை விட்டு வெளியேறுகின்றன.

நீர் வெளியேறியவுடன் செல்கள் தங்களின் உள்அழுத்தத்தை இழந்து சட்டெனச் சுருங்குகின்றன. இதனால் இலைகள் அப்படியே வாடி கீழே தொங்கிவிடுகின்றன. மீண்டும் நீர் உள்ளே சென்று இலைகள் நிமிர 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும். அவ்வளவுதான்.

இந்தத் தாவரம் தன் ஆற்றலை ஏராளமாகச் செலவழித்து ஏன் இப்படிச் சுருங்க வேண்டும் என்பதற்குப் பரிணாம ரீதியாக இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன:

 தாவரங்களை உண்ணும் பூச்சிகளோ அல்லது விலங்குகளோ தொடும்போது, தாவரம் சட்டெனச் சுருங்கி வாடிப் போவது போலக் காட்சியளிக்கும். இதனால் “இது காய்ந்த, உண்ணத் தகுதியற்ற தாவரம்” என நினைத்து விலங்குகள்  சென்றுவிடும்.  

 இலையின் மீது அமரும் சிறிய தீமை விளைவிக்கும் பூச்சிகளை, இலைகள் சட்டென மூடுவதன் மூலம் கீழே உதிர்த்துத் தள்ள இது உதவுகிறது.

தாவர அறிவியல் வரலாற்றில்  ராபர்ட் ஹூக்  போன்ற தொடக்கக்கால அறிவியல் அறிஞர்கள் தாவரங்களுக்கும் விலங்குகளைப் போல நரம்பு மண்டலம் இருக்கிறதா என்று ஆராயத் தூண்டுகோலாக இருந்ததே இந்த ‘பூடிகா’  தான். 

தன் மார்பகங்களையும் ஜனன உறுப்பையும் கைகளால் மூடிக்கொண்டிருகும் வீனஸ் தேவதையின் சிலையின் அந்தக்குறிப்பிட்ட போஸுக்கு வீனஸ் பூடிகா என்றுதான் பெயர்.

காலையில் மகா நடிப்பு வாசித்ததிலிருந்து மனம் இந்த வேர்ச்சொற்களின் பின்னால் சென்று விட்டது. 

அஞ்சலி- சலீம் குமார்

பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் நேற்றிரவு (6/6/26)மறைந்தார். நேற்று காலை கொச்சி அம்ரிதா மருத்துவமனையில் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியின் போதே மனம் இதை எதிர்பார்த்திருந்தது. ஏனெனில் அவர் பலவகையான  ஆரோக்கிய குறைபாடுகளால் பல்லாண்டுகாலம் பாதிப்பிலிருந்தவர். அவற்றோடு தான் நம்மை அழவும் பெரும்பாலும் சிரிக்கவும் செய்தார். ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் தளர்ந்திருந்தார் ஆனாலும் ஏராளமான படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

நான் அவரை  மாயாபஸாருக்கு பிறகுதான் நேரில் ஒருமுறை பார்த்தேன். சிஐடி மூசா விலிருந்து அவர் எங்கள் மூவருக்கும் பிரியப்பட்ட தாரமாகி இருந்தார். அடிக்கடி ஏசியாநெட்டில் அந்தப் படத்தைப் பார்ப்போம். அம்மா வீட்டில் வேலைகளுக்கு உதவியாக  இருந்த மஞ்சு சிஐடி மூசா படம் போட்டால் ஹாலில் உருண்டு உருண்டு புரண்டு புரண்டு சிரிப்பாள். 

எங்களூரில் விவசாயப் பணிகளைக் காட்டிலும் ஷூட்டிங்கிற்கு செல்பவர்கள் தான் அதிகம். நடந்துபோகும் தொலைவிலிருக்கும் தோப்புகளுக்கும் வயல்களுக்கும் வெகுசிலரே களை எடுக்கவும் பிற காட்டுப்பணிகளுக்கும் செல்வார்கள். மற்ற அனைவரும் அரசமரத்தடி விநாயருக்கு எதிரே  வந்து நிற்கும் டிராக்டர்களில்  crowd artist களாக புறப்பட்டு செல்வார்கள். 

பெரும்பாலும் மாதத்தில் 20 நாட்கள் இதுதான் நடக்கும் கணிசமான தொகையும் ஒரு தண்ணீர் பாட்டிலும் மதியவுணவும் கொடுக்கப்படும் என்பதாலும் வேறு வேலை பெரிதாக ஏதுமில்லாமல் சண்டை நடக்கையில் மார்க்கெட் அல்லது குடோன்களில் குறுக்கும் நெடுக்குமாக ஓடவேண்டும் அல்லது காய்கறி வாங்குவதுபோல் பாவனை அல்லது அரசமரத்தடி பஞ்சாயத்துகளில் கூடிநிற்க, மறியலில் கோஷமிட என்று எளிய, ஒப்பனை தேவைப்படாத வேலைகள் தான். மேலும் சினிமா நடிகர்களை அருகில் பார்க்கலாம் என்பதும் கூடுதல் பிரயோஜனம். திரும்ப அதே டிராக்டரில் வீடு திரும்பிக்கொள்ளும் வசதி வேறு.

ஃபகத் ஃபாஸிலின் படமான டயமண்ட் நெக்லஸ் இந்த வீட்டிற்கு நேர் எதிரில் அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த அஸ்வினின் வீட்டில் தான் நடந்தது. லாலேட்டனோ மம்மூட்டியோ சுரேஷ் கோபியோ இல்லை, யாரோ ஒல்லிப்பிச்சிப் பையன் ஹீரோ அவனுக்கு தலையில்  அதிகம் முடியுமில்லை என்று சொல்லப்பட்டதால் ஆர்வமிழந்து நான் அங்கே வேடிக்கை பார்க்க கூட போகவில்லை. 

சுமார் 1 வாரம் படப்பிடிப்பு நடந்தது அது ஒரு பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் சரணும் தருணும் பெரும்பாலும் அங்குதான் இருந்தார்கள் சரணுக்கு நாயகியின் அடர்ந்த நீண்ட கூந்தல் மீது பெரும் பிரேமை உண்டாகி இருந்தது அதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனான்.

ஆனால் ஒருநாள் அந்த நாயகன் ஃபாஸிலின் மகன் என்றும் ஃபாஸிலும் மம்மூட்டியும் படப்பிடிப்புக்கு அன்று வந்துசென்றார்கள் என்றும் கேள்விப்பட்டபோது ’’அடடா போயிருக்கலாமே என்று நினைத்தேன்.

அப்படி பல வருடங்களுக்கு முன்பாக தென்சங்கம்பாளையம் கோழிப்பண்ணையில் சுரேஷ் கோபியின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது  நான் சுரேஷ் கோபியின் பரம ரசிகையாக அவரை பார்க்கலாம் என்று அங்கு சென்றிருந்தேன். ஆனால் சுரேஷ் கோபி அங்கே இல்லை ஒருவேளை கேரவனில் இருந்திருக்கலாம். படப்பிடிப்புத்தளத்தில் ஒரு நாற்காலியில் சலிம் அமர்ந்திருந்தார் அவருக்கான காட்சிகள் ஏதும் படமாக்கப்படவில்லை.

அவர் அவரது வயதைக்காட்டிலும் திரையில் தெரிவதைக் காட்டிலும் மூத்தவராக தெரிந்தார். அதுவே முதலும் கடைசியுமாக நான் சலீமைப்பார்த்தது.

எனக்கு சலீம், ஸ்ரீனிவாசன், மற்றும் மாமுக்காயா, இன்னொசெண்ட், ஜெகதி ஸ்ரீகுமார் ஆகியோரை மிகவும் பிடிக்கும் இவர்கள் மீது பெருமதிப்பும் கொண்டிருக்கிறேன்’

சலீமை பொருத்தவரை அவரைக் காட்டிலும் அவரது மனைவி சுனிதாவின் மீது எனக்கு பிரியம் அதிகம் அதிகம் பொது வாழ்வில் தன்னைக் காட்டிக்கொள்ளாதவர். காதல் கணவர் சலீம் மீது பெருங்காதலுடனேயே 30 வருடம் வாழ்ந்தவர். 

பல சமயங்களில் சுனிதாவை நான் என்னுடன் ஒப்பிடுக்கொள்வேன். சலீமை எதிர்பார்க்காமல் இருமகன்களையும் வளர்த்து ஆளாக்கி குடும்பத்தை தனியே தைரியமாக பேணியவர் சுனிதா

அவர்கள்  இருவரும் காதல் வயப்பட்ட போது சலீம் நடிகராகி இருக்கவில்லை கொச்சி கலாபவனில் ஒரு மிமிக்ரி கலைஞராக கால்பதிக்க போராடிக்கொண்டிருந்தார். நிரந்தர வருமானமோ  சொல்லிக்கொள்ளும்படியான வேலையோ இல்லாத சலீமுடன் காதல் வயப்பட்டிருந்த சுனிதாவின் வீட்டில் திருமணத்துக்க்கு பெரும் எதிர்ப்பு இருந்தது. சுனிதா திடமாக ’’எனக்குக் கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது இந்த வேலை இல்லாத பணம் இல்லாத சலீமுடன் தான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

பின்னர் அவர்களது திருமணம்  1996 செப்டம்பரில் ஒரு மாலை வேளையில் மிக எளிமையாக நடந்தது. மணநாளுக்கு மறுநாள் காலைதான் சலீமுக்கு அவரது முதல் திரைப்பட வாய்ப்பான இஷ்டமானு நூறு வட்டம் படப்பிடிப்புக்காக உறவினர் ஒருவரின் கார் வந்து வீட்டு வாசலில்  நின்றது. அந்த நிமிஷத்திலிருது சலீம் கேரளம் கொண்டாடும் மாபெரும் நடிகரானார், சுனிதா முழுக்க முழுக்க வீட்டை கவனித்துக்கொண்டார். சுனிதாவுடன் சலீமின் தாய் கௌசல்யாவும் அவர் உயிருடன்இருந்த வரை குடும்பத்தை கவனித்துக்கொண்டார்.

தாய் மீது அளப்பரிய பாசம் கொண்டிருந்த சலீம் அவரது மறைவுக்குப்பின்னர் தனது சொந்த ஊரில் தாயின் நினைவாக ஒரு திறந்தவெளி அரங்கொன்றை நிறுவினார்.

சலீமின் தந்தை  கங்காதரன் நாத்திகர், எனவே மகனுக்கு மத அடையாளம் அற்ற ஒரு பெயர் வைக்கவேண்டும் என்றே சலீம்குமார் எனப் பெயரிட்டார்

சுனிதாவுக்கு சளி பிடித்தால் கூட வீடு ஸ்தம்பித்துவிடும் என்று சலீம் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார் அத்தனைக்கு முழுவீட்டையும் சுனிதா தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தார் அரிதினும் அரிதாகவே சுனிதவும் மகன்களும் அவரோடு பொதுவிழாக்களுக்கு வந்தார்கள். 

சலீம் தான் காங்கிரஸ் அனுதாபி என்பதை எப்போதும் பெருமிதமாகச்  சொல்லிக் கொண்டவர். உச்ச நடிகர்கள் அனைவரிடமும் பழகும் வாய்ப்புப் பெற்றிருந்தாலும் அவர்களுடன் அளவான நட்பைப் பேணிக்கொண்டு, தன் இளமைக்கால நண்பர்களுடனும் அரசியல் தொடர்புகளுடனுமே நெருக்கமாக இருந்தார். சினிமா உறவுகள் நிரந்தரமில்லை படப்பிடிப்பின் போது மட்டுமே கூடும் கூட்டம்  அது  என்றும் சலீம் சொல்லி இருக்கிறார்.

அசாத்தியமான கலைஞர் சலீம் நான் அவரது நகைச்சுவைக்கு  மட்டுமல்லாது குணசித்திர வேடங்களுக்கும் ரசிகை. சலீமின் மறைவு கேரள திரைத்துறை கலாச்சாரத்தின் ஒரு பெரும் சகாப்தத்தின் முடிவு

அவரது சிரோசிஸ் என்னும் ஈரல் அழிவு நோய்க்கு பலரும் மதுப்பழக்கம் தான் காரணம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவரது குடும்பத்தில் பரம்பரையாகவே ஈரல் பாதிப்பு இருந்தது. காப்பி டீ கூட குடிக்காத சலீமின் சகோதரும் ஈரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். சலீம் நவீன அலோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கை அற்றவராக இருந்தார். எனவே ஈரல் பாதிப்பிற்கு பல வகையான மாற்று மருத்துவங்களை பலகாலமாக முயற்சித்தார். 

 அதில் ஒருவர் 51 நாள் அரிசிக்கஞ்சியுடன் கலந்து சாப்பிடச் சொல்லிய மூலிகை மருந்து ஒரு பலனும் இல்லாமல் அவரது நிலையை மேலும் மோசமாக்கியது. சலீம் அந்த சிகிச்சையை கைவிட்ட போதுதான் தெரிந்தது, அதைப் பரிந்துரைத்தவருக்கே புற்றுநோய் கடைசிக் கட்டத்தில் இருந்தது என்று. 

பின்னரும் ஒரு புதிய இயற்கை சிகிச்சை முயற்சியை மேற்கொண்டார். 500  இளநீரில் கலந்த முலிகை மருந்தை உட்கொள்ளும் அந்த முயற்சியும் ஈரலை பாதுகாக்க தவறிய போது அந்த மருத்துவர் மிக எளிதாக ’’எல்லாத்தையும் கொட்டீராதீங்க,  சருமப்பாதுகாப்புக்கும்  இதே இளநீரை உபயோகிக்கலாம்’’  என்று சொன்ன அநியாயமும் நடந்தது.

பின்னரே சலீம் ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்மதித்து அது வெற்றிகரமாக நடந்தது. அவர் icuவில் இருக்கையில் சுனிதா அவர் இருந்த  அறையின் கண்ணாடிக் கதவுக்கு வெளியேவே  அகலாமல் நின்றிருந்து சலீம் வெளியே வந்தபின்னரே அவருடன் அறைக்குத் திரும்பியதை கேரளச் சினிமா உலகம் இன்னும் சொல்லிக் கொண்டிருகிறது. சலீம் அடிக்கடி சொல்வார்’’ பலமுறை நானே சரி போதும் போகலாம் என்று நினைத்திருக்கிறேன் ஆனால் சுனிதா ஒவ்வொருமுறையும் என்னை மீட்டெடுத்திருக்கிறாள் ’’ என்று. இந்த முறை  சலீமை 56 வயதில் சுனிதா இழந்தே விட்டார்.

அவரது இருமகன்களில் ஒருவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். மஞ்சும்மல் பாய்ஸிலும், லோஹாவிலும் அவர் இருக்கிறார். மிக நல்ல மனிதர் சலீம், எப்போதும் சிரி நிறைந்திருந்த அவரது laughing villa   என்னும் பொருத்தமான பெயரிடப்பட்ட இல்லம் இன்றுதான் மௌனமாக இருக்கிறது

2010ல் சலீமின் நண்பர்  கொச்சின் ஹனீஃபா மறைந்த போது சலீம் ‘’நான் வருத்தப்படவில்லை விரைவில் நான் அவனைச்சென்று சந்திக்க இருக்கிறேன்’’ என்றார். மூச்சுலகில் உடல் உபாதைகள் ஏதுமின்றி மகிழ்ந்திருங்கள் சலீம். நிறைவடையுங்கள் வணங்குகிறேன். சுனிதாவுக்கும் மகன்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களும் அன்பும்.

« Older posts

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑