சமீபத்தில் மீண்டும் பெங்களூர் செல்ல வேண்டி வந்தது. தருண் மேற்படிப்பை முடித்துவிட்டான். அவனது பட்டமளிப்பு நிகழ்வுக்கு எல்லோரும் வரவேண்டும் என விரும்பினான். முதன்முறையாக இந்தபயணத்தில்தான் தருண் விளையாட்டுப்பிள்ளை, பெண்களால் விரும்பப்படுபவன் என்னும் எளிய சித்திரங்களிலிருந்து பொறுப்பான ஆண் என்னும் இடத்துக்கு (என்மனதில்) வந்திருக்கிறான். அவன் முன்பே முதிர்ந்திருக்கக்கூடும்.
குந்திக்கு பார்த்தன் போல என் மனதிலிருக்கும் விழைவுகளெல்லாம் மகன் உருவெடுத்தது போல தருண் எப்போதும் எனக்கு.
ஒரு நாள் எதனாலோ கோபமாக இருந்த நான் அவனை வீட்டு வாசலில் எதற்கோ கடந்து சென்றேன். தருண் ’’.. ஏ புள்ளே பொன்னுத்தாயீ, என்ன? மாமன் நிக்கறேன் நீ பாட்டுக்கு போறவ ? திரும்பித்தான் பார்க்கறது?…’’ என்றான். குபீரென சிரித்துவிட்டேன். பெண்களால் ஏன் அவன் விரும்பப்படுகிறான் என்பதை நான் நன்கறிவேன்
சரண் எனக்கும் தந்தையின் இடத்தில் இருப்பவன்.
இந்த நிகழ்விலும் முதுகில் அறைந்த வெயிலில் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கையில் இயல்பாக என் தலையில் தன் கையை வைத்து, என் மீது வெயில் படமலிருக்க செய்தான் சரண். இதை அவன் நினைவில் கூட வைத்திருக்கப் போவதில்லை. ஆனால் நான் மின் மயானம் செல்லும் வழியிலும் நினைத்துக்கொள்வேன்.
தருண் என்னைப் போல் இல்லை என்பதும் ஆறுதலளித்தது. நான் என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால் ஆனவள், கசந்த இளமைப்பருவம், வலிமிகுந்த பிள்ளைப்பருவத்தின் வேதனைகளிலிருந்து மீண்டுவர முடியாதவள் நான். அந்த வஞ்சங்களை எல்லாம் ஒருபோதும் மறக்கவும் விரும்பாதவள். பல ஆண்டுகளாகின்றன என் தாய் வீட்டுக்குள் நான் காலடி எடுத்துவைத்தும் ஒரு வாய் தண்ணீர் குடித்தும்.
ஆனால் இந்த நிகழ்வுக்கு தன் இறுதிக்காலத்திலிருக்கும் தனது அப்புச்சி உடன் வரவேண்டுமென விரும்பினான் தருண். அவரை 86 வயதில் அத்தனை நீண்ட கார்ப் பிரயாணத்தில் மற்றொரு மாநிலத்துக்கு அழைத்து செல்வதிலிருந்த அனைத்துப் பாதகங்களும் அவனிடம் சொல்லப்பட்டன. ’’..எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. போறோம் அவ்வளவுதான்…’’ என்றான்.
எனவே அனைவரும் காரில் பெங்களூர் சென்றோம். தருண் மட்டுமே கார் ஓட்டத் தெரிந்தவன் ஓட்டுநர் வந்தால் இடம்பற்றாக்குறை ஆகும் என்பதால் சாம்பவி, லக்ஷ்மியுடன் ஐந்துபேராக தம்பியின் புதுப் பெரிய காரில் சென்றோம். தம்பி விஜி பணி நிமித்தம் வெளிநாட்டில் இருக்கிறான். சரண் மும்பையிலிருந்து சனிக்கிழமை விமானத்தில் வந்து ஞாயிறு இரவு திரும்பி செல்ல முடிவெடுத்திருந்தான்.
செல்லும் வழியில் பழைய சிவாஜி பாடல்களையும், திருச்சி லோகநாதனின், சிதம்பரம் ஜெயராமனின் பாடல்களையும் ஒலிக்க வைத்து அவருக்கு பிடித்திருக்கிறதா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டான். நான் அவனை வியப்புடன் பின்னாலிருந்து கவனித்துக்கொண்டிருந்தேன்.
கோரிக்கையற்று கிடக்குதண்ணே இந்த வேரில்பழுத்த பலா, வசந்த மாளிகையின் பாடல்களை எல்லாம் அவர் ரசிப்பதைப் பார்த்து, “இது பிடிக்குமா அப்புச்சி உங்களுக்கு?” என்று கேட்டுக்கொண்டான். அவர் மகிழ்ந்து, “பின்னே!” என்றார்.
“இது யார் பாடினதுனு சொல்லுங்க?” எனக் கேட்பதும், அடிக்கடி அவரை சிறுநீர் கழிக்க இறக்கிவிட்டு, உதவி பிறகு கைகளை கழுவிவிட்டு, மீண்டும் மாற்றுடை அணிவித்துவிடுவதுமாக, பொறுமையாகக் கார் ஓட்டிக்கொண்டு வந்தான்.
தொப்பூரைத் தாண்டி இருக்கையில் ’’விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது, பாடல் ஒலித்தது. அதில் வரும் எனக்குப் பிடித்த “பாலில் நெய்யளவு பரந்த புன்னகை” என்னும் வரிகளைச் சிலாகித்துவிட்டு, அதன் அர்த்தத்தை என்னிடம் மீண்டும் கேட்டு, “சே, எப்படி எழுதியிருக்காங்க இல்லை?” என்று அதிசயித்தான். பின் நினைத்துக்கொண்டது போல, “ஆமா, அதென்ன கையளவு பழுத்த மாதுளை?” என்றான். மயான அமைதி நிலவி யாரும் பதில் சொல்லாமலிருக்கையில், அவன் அப்புச்சி “ஹ ஹ” என்று மெல்ல சிரித்தார். பின்னர் அவனும் புன்னகைத்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தான்.
அவனுக்கு பிடித்த பாடல்களும் கேட்டோம். ’’நீரலைகள் இடம் மாறி நீந்துகின்றன் குழலோவில் தொடங்கி,
துணைவனைக்காக்கும் கடமையும் தந்தாய் தூயவளே நீ வாழ்கவைத்தொட்டு,
காய்ந்துபோன சோலையோரம் கங்கை வந்து பாயும் நேரத்துக்கு வந்து
பின்னர் ஒரே பாய்ச்சலாக டிப்பம் டப்பம் பாடலுக்கு வந்து
‘’அவ அழக பத்தி பாட… இல்ல எஜுகேஷன்…
என் மனசு இனி உனக்கு… ஒரு பிளேஸ்டேஷன்…
நீ இருக்கும் எடம் எனக்கு…ஒரு ஹில் ஸ்டேஷன்… நீ வேணுமுன்னு பண்ணபோறேன்… மெடிடேஷன்… என்று தாவிக்கொண்டிருந்தான்
ஒரு முழுநாளும் காருக்குள் அடைபட்டிருந்ததில் சாம்பவி பொறுமை இழந்திருந்தாள். அருகில் உறங்குபவர்கள் வாயில் விரலை விடுவதும், “ஏன் பையா படத்துக்கு பையான்னு பேர் வச்சாங்க அதில் யாரு பையன்? எதுக்கு சிவாஜிக்கு 50 வயசில் பிரேக்கப் பாட்டு? (எழுதுங்கள் என் கல்லறையில் அவன் பைத்தியக்காரன் என்று), “ஏன் அருணகிரிநாதர் முருகனை பெருமாள்ங்கறாரு?”(முத்தைத்திரு) அய்யே சீ, சிவாஜி கன்னத்தையா சொல்லறா? (கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விடமாட்டேன்) என்றெல்லாம் கேள்வி கேட்டுப் பிராண்டிக் கொண்டிருந்தாள்.
திரும்பி வரும்போது பெங்களூரின் பிரபல மால் ஒன்றின் முன் காரை நிறுத்தி, அப்புச்சி கையால் தனது பட்டச்சான்றிதழை வாங்கிக்கொள்ளும்படி ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டான் தருண்.
ஒரு மேம்பால வளைவில் செல்லுகையில் வானில் அழகாக ஒரு வண்ணத் தீற்றலாய் வானவில் தோன்றியது, காரை நிறுத்தி, “அப்புச்சி, அங்கே பாருங்க” என்று சொல்லிக் காண்பித்தான். என் வஞ்சங்கள் தொட்டிருக்காத தொலைவில் அவன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது,பெருமிதப்பட்டுக்கொண்டேன்.
ஹோசூர் தாண்டியதும் பயங்கரப் போக்குவரத்து நெரிசல். மொத்தம் 12 மணி நேரம் எந்தச் சடைவும் புலம்பலும் சோர்வும் இன்றிப் பொறுமையாய், மகிழ்ந்து கார் ஓட்டிக்கொண்டு வந்து எங்களைப் பத்திரமாய் பெங்களூர் கொண்டு போய்ச் சேர்த்தான்.
கிறைஸ்ட் பல்கலைக்கழகம் ஜே ஜேவென இருந்தது. பெரும் கல்வி நிறுவனம் என்பதால் ஆயிரக்கணக்கில் கூட்டம் இருந்தது. அதிலும் பெண்கள் அனைவருக்கும் வெள்ளை நிறப் புடவைதான் Dress Code என்பதால், ஏராளமான தேவதைகளுக்கு மத்தியில் இருந்தோம். இளமையின் அழகு, பட்டம் வாங்கும் நிறைவு என கலவையான அழகுகளில் திளைத்தோம். தருணுக்குக் கேட்கவே வேண்டாம், மூழ்கித் திளைத்துக்கொண்டிருந்தான்.
நான் இதுவரை பார்த்திராத அவன் தோழிகளையும் பல்கலை வளாகத்துக்கு வெளியே சந்தித்தேன் இம்முறை. அதில் ஒருத்தி யக்ஷகானக் கலைஞர். காது மூக்கு கழுத்து என அணிகலன்கள் எதுவுமில்லாமல், உயர்த்திக் கட்டிய கூந்தலோடு எளிய சிவப்பு பனியனும் ஜீன்ஸுமாக நல்ல உயரமாகப் பேரழகியாக வந்து நின்றாள். அவள் மகாபாரத நிகழ்வொன்றில் அர்ஜுனனாக நடித்த காணொளியை முன்பே பார்த்திருக்கிறேன்.
எப்போதும் அவன் தோழிகளின் புகைப்படங்களை பொதுவெளியில் பகிரக்கூடாதென்னும் அன்புக்கட்டளை இட்டிருக்கிறான் தருண். (அடுத்த வீட்டுபெண்களை அப்படி நாம காட்டக்கூடாது இல்லையாம்மா?)
ரிதி ஆல்வாவுக்குப் பிறகு நான் சந்தித்த அசல் அழகி இவள்தான். இவளும் மங்களூர் கொங்கணிக் குடும்பம் என்பது இன்னுமொரு ஒற்றுமை. “கண்ணுக்குள்ளேயே இருக்கிறார்கள்” என்பார்களே, அப்படி அந்தப் பெண் கண்ணுக்குள்ளேயே நிற்கிறாள். பேரழகி என்பது வெறும் புறத்தோற்றம் மட்டுமல்ல; அவளது கம்பீரமான உடல்மொழி ,நாணிக்கொண்டிருக்காமல், அதே சமயம் “அழகி” என்னும் அகந்தையும் இல்லாமல், கம்பீரமாகவும், அதே சமயத்தில் அழகாகவும் இருந்தாள்.
பல்கலைக்கழகத்தில் அன்று 1,785 பேருக்குப் பட்டம் அளிக்கப்பட்டது. அதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். நான் பெண்களின் பெயர்களை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பெண் பெயர்களைக் கேட்பதும் அறிந்துகொள்வதும் எப்போதுமே மிக விருப்பம்.
அதிகமாகச் சொல்லப்பட்ட பெயர்களில் சாக்ஷி, நவ்யா, ஷாலினி, மஞ்சு, ஷாலு, மது, ரியா, சிஜு, பிஜு இருந்தன. பல நூறு பெயர்களில் எனக்கு மிகப்பிடித்தமானதாக ‘மிதிலா உல்லாஸ்’ இருந்தது. சொல்லிச்சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.
ஒருத்தியின் பெயர் ரியா வர்லியானா! (“அவ தங்கச்சி பேர் தெரியுமா உனக்கு? ரியா வந்தியானா” – தருண்)
அஞ்சலி தேவி என்று பெயர் அழைக்கப்படும்போது, எனக்குக் காம்பஸ் வைத்து வரைந்தது போன்ற வட்ட முகத்துடன், கூடுதல் புஷ்டியாக, அகலக் கண்களுடன், இடுப்பென்பதே இல்லாத, ’’…அழைக்காதே, நினைக்காதே, அவைதனிலே என்னை, ஓ ராஜா…” என்று பாடிய அழகி மனதில் வந்து சென்றார்.
அனிதா அகஸ்டின், ஜுகுனு ஓபராய் போன்ற ஸ்டைலிஷ் பெயர்களும், இருந்தன. சாவியோனா கந்து பேமா என்னும் நீண்ட பெயர் எனக்கு ஜெ-வின் ‘பேமா’ கட்டுரையை நினைவுக்குக் கொண்டுவந்தது.
தேவதுலா என்னும் பெயரும், பூவண்ணம் எனும் பெயரும் அத்தனை அழகாக இருந்தன.
அங்கித் ராஜ் அதிகாரி, ட்ரிஷா குரியாக்கோஸ், நட்டாலியா தாமஸ், அதிதி பச்சோலி, கிருணாளி மண்ட்ரேகர் ஆகிய பெயர்களும் கவனிக்க வைத்தன. கன்னிகா பரமேஸ்வரி, அம்பிகா ஆகிய பெயர்களும் இனித்தன.
ஒரு பெண்ணின் பெயர் ஜோஷ்வா குலுகுண்டி. (“ஒருவேளை ஊட்டி கொடைக்கானல் பக்கத்துக் குடும்பமாய் இருக்கும்” – தருண்)
சந்தோஷி மந்த மூஸ், ஷிவாஞ்சலி ஜெகதீசன் போன்ற பெயர்கள் கம்பீரமாக இருந்தன.
அந்த நெரிசலில் என்னை ஒரு பெண் பின்னாலிருந்து வந்து தொட்டு, “நீங்க தருணின் அம்மாதானே?” என்றார். ஆச்சரியமாக, “ஆம்” என்றேன்.
முகம் விரிய புன்னகைத்து, “நான் தருணின் ஆசிரியை கரீனா” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, கையைப் பற்றிக்கொண்டு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். சரணிடம் ஐரோப்பாவிலிருந்து வந்த பின்னர் மும்பை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டார்.
“எப்படி என்னைக் கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்டேன். அவரது கைபேசியை எடுத்து, அதில் தருண் அவருக்கு அனுப்பியிருந்த என் புகைப்படத்தைக் காட்டி, “இதைவச்சுத் தேடிக் கண்டுபிடித்தேன்” என்றார்.
ஒரு மாணவனின் குடும்பத்தை அப்படித் தேடிக் கண்டுபிடித்துப் பேசும் ஆசிரியையான அவரையும் என்னையும் நான் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன். நான் ஒருபோதும் அப்படிச் செய்ததே இல்லை. என்னை அப்படி யாரேனும் பார்க்க விரும்பினால், என் அறைக்குச் சென்று காத்திருக்கும்படியோ அல்லது அறைக்கு வரும்படியோதான் சொல்லியிருக்கிறேன்.
அனைத்து ஆசிரியர்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டியதில்லை என்றாலும், என்னால் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
பிறகு குழுப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். தருண் நிச்சயமாக எங்களுடன் அறைக்கு அப்போது வர வாய்ப்பில்லை என்பதால் நாங்கள் மட்டும் புறப்பட்டுச் சென்றோம்.
‘சால்ட்’ எனும் நவீன உணவகத்திற்குச் சாம்பவியும் சரணும் என்னை மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார்கள். சரண் அன்று பில்லுக்கு கொடுத்த தொகையில் நான் இரண்டு மாதங்கள் குடும்பத்தை ’’வீசி எறிந்து’’ செலவழித்து நடத்தியிருப்பேன்.
நல்ல மழை அன்று. மாலை அறைக்குத் திரும்பிய தருணுக்கு, கொட்டும் மழையில் அன்று கோலி அடித்த சிக்ஸில் வெற்றி பெற்ற அணியைப் பெங்களூரு இளைஞர்கள் வெறிபிடித்துக் கொண்டாடிக்கொண்டிருந்த அந்த இரவில், காரை எடுத்துக்கொண்டு சென்று மொகாபரா அலுவலகப்பை ஒன்றை வாங்கி வந்த சரண் பட்டம் பெற்றதற்காகப் பரிசளித்தான். தருணுக்கு எப்போதும் தந்தையின் இடத்திலிருப்பவன் சரண்.
பின்னர் சரணை இரவு விமான நிலையத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு, கிரிக்கெட் பைத்தியங்களிடம் மாட்டிக்கொள்ளாமல் பெரும்பாடுபட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம்.
காலை நேரமே புறப்பட்டு ஊர் திரும்பினோம். யக்ஷகான அழகி வந்திருந்து எங்களுடன் காலை உணவுண்டு விடை கொடுத்து அனுப்பினாள். மனதில் எடைகூட வைக்கும் பேரழகு அவளுடையது. அன்று மதியம் கிறைஸ்ட் பல்கலையில் ஒரு உரையாற்றவிருந்தாள். அவளது அழகிற்கு அவளது புத்திசாலித்தனமும் ஒரு காரணம்தான். நிமிர்வுள்ள இப்படியான பெண்களை எனக்கு எப்போதும் மிகப்பிரியம்.
அவளுடன் வெண்முரசு பற்றியும், மருத்துவர் /கவிஞர் வேணு வேட்ராயன் சென்னையில் குறுந்தொகையை நாட்டிய நாடகமாக்கப் போகும் முயற்சியைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். இதையெல்லாம் பேச இதுநாள் வரை எனக்கு ஒரு இளம் பெண் கிடைத்ததே இல்லை. பேசிக்கொண்டிருந்த அவளின் நினைவே மனதிலாட ஊர் திரும்பினேன்.
வரும் வழியில் ‘ஆஹா’ என்னும், ஒரு இளைப்பாறிக்கொள்ளும், ஓய்வறைகள் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு, ராஜபாளையம் வடை போன்ற சுவையான சூடான தின்பண்டங்கள் தரும் ஓர் இடத்தில் காரை நிறுத்தினோம். மீண்டும் நல்ல பாடல்கள் கேட்டுக்கொண்டு வரும் வழியில், தருண் சற்று ஓய்வெடுக்க காரை நிறுத்திய ஓரிடத்திலிருந்து, ‘கோழிக்கீரை’ எனப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பர்ஸ்லேன் (Purslane) கீரைச் செடியைப் பறித்துக்கொண்டு வந்தேன். இப்போது தருணின் பட்டமளிப்பு நாளின் நினைவாக அந்தத் தொட்டியில் வேர்பிடித்து வளர்கிறது அந்த ‘கிராஜுவேஷன் கீரை’.
கொச்சின் கவின் கேர் நிறுவனத்தில் விரைவில் பணியில் இணையவிருக்கும் தருணுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்!
கொல்கத்தாவில் காளி வழிபாடு மிகப்பிரசித்தம். அதைப்போலவே காளிக்கு ஜபா குஸும் என்கிற குருதிநிற செம்பருத்தி (Jaba Kusum) மாலை அணிவிப்பதும்.
செம்பருத்தியின் இதழ்கள் காளியின் நாக்கு எனக் கருதப்படுகிறது இங்கு. கொல்கத்தாவின் பிரசித்தி பெற்ற கோவில்களில் இந்த மாலை தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பயன்பாட்டில் இருக்கிறது என்பதால் உள்ளூர் மலர்ச்சந்தை இந்தச் செம்பருத்தி மாலைகளையே பெரும்பாலும் நம்பி இயங்குகின்றது.
மலர்ந்த செம்பருத்தியில் மாலை கட்டினால் இதழ்கள் கிழிந்து, கசங்கி, காயம்பட்டு அணிவிக்கையிலேயே அதன் அழகை இழந்துவிடும் என்பதால் கல்கத்தாவின் பிரபல Mullick Ghat மலர்ச்சந்தையில் அதிகாலையில் செம்பருத்தி அரும்புகளைப் பறித்து மிக நெருக்கமாகத் தொடுத்து உருவாக்கும் கயிறைப் போன்றிருக்கும் செம்பருத்தி அரும்பு மாலைகள் வெகு பிரசித்தம். இந்த அரும்புமாலையைக் கடவுளுக்கு அணிவிக்கையில் அவை மெல்ல இதழவிழ்ந்து செக்கச்செவேலெனெ மிகச் சரியாக வழிபாட்டின்போது மலர்கின்றன.
செம்பருத்தியைப் போலவே, எருக்கம் மலர்களும் அன்னை காளியின் உக்கிர வடிவங்களுக்கும், வங்காளத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ‘தாரா தேவி’ வழிபாட்டிற்கும் மிக உகந்தவையாகக் கருதப்படுகிறது. எருக்கம்பூவின் உறைவிடமும் அதன் தன்மையும் உக்கிர தெய்வங்களின் அதீத ஆற்றலோடு ஒத்துப்போவதாக அங்கு நம்பப்படுகிறது.
கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள புகழ்பெற்ற தாராபித் கோவிலில் தாரா தேவிக்கு எருக்கு மாலைகள் கிலோ கணக்கில் சாத்தப்படுகின்றன. வங்காளத்தில் சிவபெருமான் மற்றும் காளி வழிபாடு எப்போதும் ஒன்றோடொன்று இணைந்தது. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான, நஞ்சை முறிக்கும் தன்மையுடைய பூக்களில் எருக்கம்பூ (வங்காள மொழியில் ‘அகந்தா’) முதன்மையானது.
கொல்கத்தாவில் உள்ள தக்ஷிணேஸ்வர் போன்ற பெரிய கோவில்களில் காளி தேவியோடு சேர்த்து சிவபெருமானுக்கும் தனி சன்னதிகள் உண்டு. திங்கட்கிழமைகள் மற்றும் பிரதோஷ நாட்களின் போது இந்த எருக்கு மாலைகள் சிவபெருமானுக்குச் சாத்துவதற்காக அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
செம்பருத்தி அரும்புகளைப் போலவே எருக்கம் மலர்களும் மிகவும் தடிமனான இதழ்களைக் கொண்டவை. இவை எளிதில் வாடாது; காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி நாள் கணக்கில் அப்படியே புத்தம் புதிதாக இருக்கும். அதனால்தான் மலர் வியாபாரிகள் இதை அழகிய தடிமனான மாலைகளாகத் தொடுத்து விற்கிறார்கள்.
கொல்கத்தாவின் மலர்ச்சந்தைகளில் அந்த அடர் சிவப்புச் செம்பருத்தி மாலைகளுக்கு நடுவே, இந்த வெளிறிய எருக்கு மாலைகள் இருப்பதையே எனக்கு வழிபடலாம் போலிருந்தது.
கொல்கத்தா மலர்ச்சந்தையில் மட்டுமே காண முடியும் இவற்றை இப்போது அங்கிருக்கும் தம்பி கடலூர் சீனி புகைப்படமெடுத்து அனுப்பினார். நன்றி தம்பி.
இன்று ஜெ தளத்தில் மகத்தான நடிப்பு என்னும் பதிவில் தொட்டால் சிணுங்கி என்கிற தொட்டாற்சுருங்கியான, தொட்டல்வாடியாகிய மைமோசா பூடிகாவைப்பற்றி எழுதி இருந்தார். நமஸ்காரி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு
நான் அதிகம் அதிசயிக்கும் மகா புத்திசாலித்தாவரங்களில் மைமோஸாவும் ஒன்று. புறத்தூண்டல்களுக்கு உடனே இலைகளைச் சுருக்கி எதிர்வினையாற்றும் (thigmonasty) அதன் புத்திசாலித்தனத்தை விட தொடர்ந்து அளிக்கப்படும் பாதகமேதுமில்லாத புறத்தூண்டல்களைப் புரிந்துகொண்டு இலைகளைச்சுருக்காமலிருக்கும் அதன் நினைவாற்றலை நான் எல்லா வகுப்புகளிலும் சொல்லிச்சொல்லி மாய்வேன்.
நித்யவனம் முதல் தாவரவகுப்பு மாணவி ராஜி அங்கேயே இதை நிரூபித்துக்காட்டினாள்.
தொட்டால் சிணுங்கியின் அறிவியல் பெயர் Mimosa pudica. இதில் லத்தீனச்சொல்லிலான பேரினப்பெயர் mimosa என்பதற்கு mime, acting நடிப்பு/ “போலச் செய்தல்” என்று பொருள். விலங்குகளைப் போல இந்தத் தாவரம் தொடுதலுக்கு எதிர்வினை ஆற்றுவதால் இப்பெயர் பெற்றது.-osa என்றால் resembling என்று பொருள்.
ஜெ தலைப்பாக மகா நடிப்பு என்று கொடுத்திருந்தது பெரும் வியப்புண்டாக்கியது, எத்தனை பொருத்தம்.
Pudica என்னும் சிற்றினப்பெயருக்கு லத்தீன் மொழியில் “வெட்கப்படுபவள்” / “கூச்சப்படுபவள்” (to feel shame/ Bashful/Shrinking) என்று பொருள்.
என் பித்துக்களிலொன்று இந்த தாவரவியல் பெயர்களின் வேரைத்தேடி வெகுதூரம் செல்வது. அப்படி மைமோஸா பூடிகாவின் பின்னே பலநாட்கள் சென்றிருக்கிறேன். 17-ம் நூற்றாண்டில்தான் லின்னேயஸால் மைமோஸா பெயரிடப்பட்டது.அதன் சுருங்கும் இலைகளைக்கொண்டு விலங்குகளைபோல நடிக்கிறது என்னும் பொருளில் அந்தப்பேரினப் பெயரிடப்பட்டது.
ஸ்பேனிஷ் மொழியில் இதே மிமோஸா பிரியமான -affectionate என்று பொருள் படுகிறது,மேலும் செவ்வியல் லத்தீன மொழியில் இதற்கு Modest, bashful, shy , Chaste, virtuous, pure என்றெல்லாம் பொருள் உண்டு
லத்தீனச்சொல்லான pudere, என்பதற்கு வெட்கபப்ட வேண்டிய என்று பொருள் அதுதான் இதன்வேர்ச்சொல்லும் கூட. இத்தோடு icus என்னும் பின்னொட்டைச்சேர்த்து pudicus என்னும் ஆண் பால்பெயரும் (masculine), pudica என்னும் பெண்பால் பெயரும் (feminine), pudicum (neuter), என்னும் பால் பேதமற்ற பெயரும் உருவாக்கப்பட்டது. தாவர அறிவியல் பெயர்களில் இப்படி பாலினம் இருப்பதை நாம் அறிவோம்.
இந்த பூடிகா என்னும் பெயருக்கான வேர் மிகச்சுவாரஸ்யமானது. லத்தீனச்சொல்லான pudenda வெட்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்லது பகுதிகள் என்று பொருள் தருகிறது. மருத்துவ மொழியில் இடுப்புப் பகுதியிலிருந்து ஜனன உறுப்புகளுக்கு (to and fro) உணர்வுகளைக் கடத்தும் நரம்புக்கு pudendal nerve என்று பெயர். மகப்பேறு சமயத்தில் செய்யப்படும் regional anesthesia procedure க்கு pudendal block என்றுதான் பெயர். பின்னர் நவீன மருத்துவத்துறை உருவான பிறகு international anatomical nomenclature committee போன்ற அமைப்புகள் மனித ஜனன உறுப்புக்கள் மறைக்கப்பட வேண்டியவை, வெட்கத்துக்குரியவை எனும் புரிதலைத் தரும் இந்தச்சொல்லை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க பரிந்துரைத்தது.
(சங்குப்புஷ்பத்தின் அறிவியல் பெயரான Clitoria ternatea அப்பட்டமாக பெண் ஜனன உறுப்பைக் குறிக்கிறது என்று அந்தப்பெயர் வைக்கப்பட்ட காலத்திலெழுந்த எதிர்ப்பைக்குறித்து முன்பு நான் எழுதி இருக்கிறேன்)
பிற்பாடு இதே சொல் மாடஸ்டி, ஹைடிங் என்னும் பொருளில் புழங்கி பின்னர் இறுதியாக வெட்குதலுக்கு வந்து சேர்ந்தது. எனவே தாவரவியல் இருபெயரீட்டு முறை வந்தபோது தொடுதலுக்கு தன் இலைகளை மூடிக்கொள்ளும் இதற்கு பூடிகா என்று லின்னேயஸால் பெயரிடபட்டது
இந்த இலைகள் மூடிக்கொள்வதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலையும் பார்த்துவிடலாம்
இதன் இலைகள் சுருங்குவதற்குப் பின்னால் ஒரு வியக்கத்தக்க உடலியல் மற்றும் மின்-வேதியியல் செயல்பாடு உள்ளது. தொட்டால் சிணுங்கிச்செடியின் இலைக்காம்புகளின் அடிப்பகுதியில் பல்வைனஸ் எனப்படும் மெல்லிய செல்கள் உள்ளன. இவை நீரைத் தங்களுக்குள் நிரப்பி, நல்ல அழுத்தத்துடன் இலைகளை நிமிர்த்தி விறைப்பாக வைத்திருக்கும். நாம் இலையைத் தொட்டவுடன், ஒரு மின் வேதியியல் சமிக்ஞை இலைக்காம்பின் அடிப்பகுதிக்கு வேகமாகப் பாய்கிறது.
இந்த சமிக்ஞை கிடைத்தவுடன், பல்வைனஸ் செல்களில் உள்ள பொட்டாசியம் அயனிகளும் (K⁺), குளோரைடு அயனிகளும் (Cl⁻) திடீரென செல்களுக்கு வெளியே தள்ளப்படுகின்றன. இதனால், செல்களுக்குள் இருந்த நீர் மூலக்கூறுகள் ஆஸ்மாசிஸினால் திசுக்களை விட்டு வெளியேறுகின்றன.
நீர் வெளியேறியவுடன் செல்கள் தங்களின் உள்அழுத்தத்தை இழந்து சட்டெனச் சுருங்குகின்றன. இதனால் இலைகள் அப்படியே வாடி கீழே தொங்கிவிடுகின்றன. மீண்டும் நீர் உள்ளே சென்று இலைகள் நிமிர 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும். அவ்வளவுதான்.
இந்தத் தாவரம் தன் ஆற்றலை ஏராளமாகச் செலவழித்து ஏன் இப்படிச் சுருங்க வேண்டும் என்பதற்குப் பரிணாம ரீதியாக இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன:
தாவரங்களை உண்ணும் பூச்சிகளோ அல்லது விலங்குகளோ தொடும்போது, தாவரம் சட்டெனச் சுருங்கி வாடிப் போவது போலக் காட்சியளிக்கும். இதனால் “இது காய்ந்த, உண்ணத் தகுதியற்ற தாவரம்” என நினைத்து விலங்குகள் சென்றுவிடும்.
இலையின் மீது அமரும் சிறிய தீமை விளைவிக்கும் பூச்சிகளை, இலைகள் சட்டென மூடுவதன் மூலம் கீழே உதிர்த்துத் தள்ள இது உதவுகிறது.
தாவர அறிவியல் வரலாற்றில் ராபர்ட் ஹூக் போன்ற தொடக்கக்கால அறிவியல் அறிஞர்கள் தாவரங்களுக்கும் விலங்குகளைப் போல நரம்பு மண்டலம் இருக்கிறதா என்று ஆராயத் தூண்டுகோலாக இருந்ததே இந்த ‘பூடிகா’ தான்.
தன் மார்பகங்களையும் ஜனன உறுப்பையும் கைகளால் மூடிக்கொண்டிருகும் வீனஸ் தேவதையின் சிலையின் அந்தக்குறிப்பிட்ட போஸுக்கு வீனஸ் பூடிகா என்றுதான் பெயர்.
காலையில் மகா நடிப்பு வாசித்ததிலிருந்து மனம் இந்த வேர்ச்சொற்களின் பின்னால் சென்று விட்டது.
பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் நேற்றிரவு (6/6/26)மறைந்தார். நேற்று காலை கொச்சி அம்ரிதா மருத்துவமனையில் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியின் போதே மனம் இதை எதிர்பார்த்திருந்தது. ஏனெனில் அவர் பலவகையான ஆரோக்கிய குறைபாடுகளால் பல்லாண்டுகாலம் பாதிப்பிலிருந்தவர். அவற்றோடு தான் நம்மை அழவும் பெரும்பாலும் சிரிக்கவும் செய்தார். ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் தளர்ந்திருந்தார் ஆனாலும் ஏராளமான படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
நான் அவரை மாயாபஸாருக்கு பிறகுதான் நேரில் ஒருமுறை பார்த்தேன். சிஐடி மூசா விலிருந்து அவர் எங்கள் மூவருக்கும் பிரியப்பட்ட தாரமாகி இருந்தார். அடிக்கடி ஏசியாநெட்டில் அந்தப் படத்தைப் பார்ப்போம். அம்மா வீட்டில் வேலைகளுக்கு உதவியாக இருந்த மஞ்சு சிஐடி மூசா படம் போட்டால் ஹாலில் உருண்டு உருண்டு புரண்டு புரண்டு சிரிப்பாள்.
எங்களூரில் விவசாயப் பணிகளைக் காட்டிலும் ஷூட்டிங்கிற்கு செல்பவர்கள் தான் அதிகம். நடந்துபோகும் தொலைவிலிருக்கும் தோப்புகளுக்கும் வயல்களுக்கும் வெகுசிலரே களை எடுக்கவும் பிற காட்டுப்பணிகளுக்கும் செல்வார்கள். மற்ற அனைவரும் அரசமரத்தடி விநாயருக்கு எதிரே வந்து நிற்கும் டிராக்டர்களில் crowd artist களாக புறப்பட்டு செல்வார்கள்.
பெரும்பாலும் மாதத்தில் 20 நாட்கள் இதுதான் நடக்கும் கணிசமான தொகையும் ஒரு தண்ணீர் பாட்டிலும் மதியவுணவும் கொடுக்கப்படும் என்பதாலும் வேறு வேலை பெரிதாக ஏதுமில்லாமல் சண்டை நடக்கையில் மார்க்கெட் அல்லது குடோன்களில் குறுக்கும் நெடுக்குமாக ஓடவேண்டும் அல்லது காய்கறி வாங்குவதுபோல் பாவனை அல்லது அரசமரத்தடி பஞ்சாயத்துகளில் கூடிநிற்க, மறியலில் கோஷமிட என்று எளிய, ஒப்பனை தேவைப்படாத வேலைகள் தான். மேலும் சினிமா நடிகர்களை அருகில் பார்க்கலாம் என்பதும் கூடுதல் பிரயோஜனம். திரும்ப அதே டிராக்டரில் வீடு திரும்பிக்கொள்ளும் வசதி வேறு.
ஃபகத் ஃபாஸிலின் படமான டயமண்ட் நெக்லஸ் இந்த வீட்டிற்கு நேர் எதிரில் அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த அஸ்வினின் வீட்டில் தான் நடந்தது. லாலேட்டனோ மம்மூட்டியோ சுரேஷ் கோபியோ இல்லை, யாரோ ஒல்லிப்பிச்சிப் பையன் ஹீரோ அவனுக்கு தலையில் அதிகம் முடியுமில்லை என்று சொல்லப்பட்டதால் ஆர்வமிழந்து நான் அங்கே வேடிக்கை பார்க்க கூட போகவில்லை.
சுமார் 1 வாரம் படப்பிடிப்பு நடந்தது அது ஒரு பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் சரணும் தருணும் பெரும்பாலும் அங்குதான் இருந்தார்கள் சரணுக்கு நாயகியின் அடர்ந்த நீண்ட கூந்தல் மீது பெரும் பிரேமை உண்டாகி இருந்தது அதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனான்.
ஆனால் ஒருநாள் அந்த நாயகன் ஃபாஸிலின் மகன் என்றும் ஃபாஸிலும் மம்மூட்டியும் படப்பிடிப்புக்கு அன்று வந்துசென்றார்கள் என்றும் கேள்விப்பட்டபோது ’’அடடா போயிருக்கலாமே என்று நினைத்தேன்.
அப்படி பல வருடங்களுக்கு முன்பாக தென்சங்கம்பாளையம் கோழிப்பண்ணையில் சுரேஷ் கோபியின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது நான் சுரேஷ் கோபியின் பரம ரசிகையாக அவரை பார்க்கலாம் என்று அங்கு சென்றிருந்தேன். ஆனால் சுரேஷ் கோபி அங்கே இல்லை ஒருவேளை கேரவனில் இருந்திருக்கலாம். படப்பிடிப்புத்தளத்தில் ஒரு நாற்காலியில் சலிம் அமர்ந்திருந்தார் அவருக்கான காட்சிகள் ஏதும் படமாக்கப்படவில்லை.
அவர் அவரது வயதைக்காட்டிலும் திரையில் தெரிவதைக் காட்டிலும் மூத்தவராக தெரிந்தார். அதுவே முதலும் கடைசியுமாக நான் சலீமைப்பார்த்தது.
எனக்கு சலீம், ஸ்ரீனிவாசன், மற்றும் மாமுக்காயா, இன்னொசெண்ட், ஜெகதி ஸ்ரீகுமார் ஆகியோரை மிகவும் பிடிக்கும் இவர்கள் மீது பெருமதிப்பும் கொண்டிருக்கிறேன்’
சலீமை பொருத்தவரை அவரைக் காட்டிலும் அவரது மனைவி சுனிதாவின் மீது எனக்கு பிரியம் அதிகம் அதிகம் பொது வாழ்வில் தன்னைக் காட்டிக்கொள்ளாதவர். காதல் கணவர் சலீம் மீது பெருங்காதலுடனேயே 30 வருடம் வாழ்ந்தவர்.
பல சமயங்களில் சுனிதாவை நான் என்னுடன் ஒப்பிடுக்கொள்வேன். சலீமை எதிர்பார்க்காமல் இருமகன்களையும் வளர்த்து ஆளாக்கி குடும்பத்தை தனியே தைரியமாக பேணியவர் சுனிதா
அவர்கள் இருவரும் காதல் வயப்பட்ட போது சலீம் நடிகராகி இருக்கவில்லை கொச்சி கலாபவனில் ஒரு மிமிக்ரி கலைஞராக கால்பதிக்க போராடிக்கொண்டிருந்தார். நிரந்தர வருமானமோ சொல்லிக்கொள்ளும்படியான வேலையோ இல்லாத சலீமுடன் காதல் வயப்பட்டிருந்த சுனிதாவின் வீட்டில் திருமணத்துக்க்கு பெரும் எதிர்ப்பு இருந்தது. சுனிதா திடமாக ’’எனக்குக் கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது இந்த வேலை இல்லாத பணம் இல்லாத சலீமுடன் தான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
பின்னர் அவர்களது திருமணம் 1996 செப்டம்பரில் ஒரு மாலை வேளையில் மிக எளிமையாக நடந்தது. மணநாளுக்கு மறுநாள் காலைதான் சலீமுக்கு அவரது முதல் திரைப்பட வாய்ப்பான இஷ்டமானு நூறு வட்டம் படப்பிடிப்புக்காக உறவினர் ஒருவரின் கார் வந்து வீட்டு வாசலில் நின்றது. அந்த நிமிஷத்திலிருது சலீம் கேரளம் கொண்டாடும் மாபெரும் நடிகரானார், சுனிதா முழுக்க முழுக்க வீட்டை கவனித்துக்கொண்டார். சுனிதாவுடன் சலீமின் தாய் கௌசல்யாவும் அவர் உயிருடன்இருந்த வரை குடும்பத்தை கவனித்துக்கொண்டார்.
தாய் மீது அளப்பரிய பாசம் கொண்டிருந்த சலீம் அவரது மறைவுக்குப்பின்னர் தனது சொந்த ஊரில் தாயின் நினைவாக ஒரு திறந்தவெளி அரங்கொன்றை நிறுவினார்.
சலீமின் தந்தை கங்காதரன் நாத்திகர், எனவே மகனுக்கு மத அடையாளம் அற்ற ஒரு பெயர் வைக்கவேண்டும் என்றே சலீம்குமார் எனப் பெயரிட்டார்
சுனிதாவுக்கு சளி பிடித்தால் கூட வீடு ஸ்தம்பித்துவிடும் என்று சலீம் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார் அத்தனைக்கு முழுவீட்டையும் சுனிதா தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தார் அரிதினும் அரிதாகவே சுனிதவும் மகன்களும் அவரோடு பொதுவிழாக்களுக்கு வந்தார்கள்.
சலீம் தான் காங்கிரஸ் அனுதாபி என்பதை எப்போதும் பெருமிதமாகச் சொல்லிக் கொண்டவர். உச்ச நடிகர்கள் அனைவரிடமும் பழகும் வாய்ப்புப் பெற்றிருந்தாலும் அவர்களுடன் அளவான நட்பைப் பேணிக்கொண்டு, தன் இளமைக்கால நண்பர்களுடனும் அரசியல் தொடர்புகளுடனுமே நெருக்கமாக இருந்தார். சினிமா உறவுகள் நிரந்தரமில்லை படப்பிடிப்பின் போது மட்டுமே கூடும் கூட்டம் அது என்றும் சலீம் சொல்லி இருக்கிறார்.
அசாத்தியமான கலைஞர் சலீம் நான் அவரது நகைச்சுவைக்கு மட்டுமல்லாது குணசித்திர வேடங்களுக்கும் ரசிகை. சலீமின் மறைவு கேரள திரைத்துறை கலாச்சாரத்தின் ஒரு பெரும் சகாப்தத்தின் முடிவு
அவரது சிரோசிஸ் என்னும் ஈரல் அழிவு நோய்க்கு பலரும் மதுப்பழக்கம் தான் காரணம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவரது குடும்பத்தில் பரம்பரையாகவே ஈரல் பாதிப்பு இருந்தது. காப்பி டீ கூட குடிக்காத சலீமின் சகோதரும் ஈரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். சலீம் நவீன அலோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கை அற்றவராக இருந்தார். எனவே ஈரல் பாதிப்பிற்கு பல வகையான மாற்று மருத்துவங்களை பலகாலமாக முயற்சித்தார்.
அதில் ஒருவர் 51 நாள் அரிசிக்கஞ்சியுடன் கலந்து சாப்பிடச் சொல்லிய மூலிகை மருந்து ஒரு பலனும் இல்லாமல் அவரது நிலையை மேலும் மோசமாக்கியது. சலீம் அந்த சிகிச்சையை கைவிட்ட போதுதான் தெரிந்தது, அதைப் பரிந்துரைத்தவருக்கே புற்றுநோய் கடைசிக் கட்டத்தில் இருந்தது என்று.
பின்னரும் ஒரு புதிய இயற்கை சிகிச்சை முயற்சியை மேற்கொண்டார். 500 இளநீரில் கலந்த முலிகை மருந்தை உட்கொள்ளும் அந்த முயற்சியும் ஈரலை பாதுகாக்க தவறிய போது அந்த மருத்துவர் மிக எளிதாக ’’எல்லாத்தையும் கொட்டீராதீங்க, சருமப்பாதுகாப்புக்கும் இதே இளநீரை உபயோகிக்கலாம்’’ என்று சொன்ன அநியாயமும் நடந்தது.
பின்னரே சலீம் ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்மதித்து அது வெற்றிகரமாக நடந்தது. அவர் icuவில் இருக்கையில் சுனிதா அவர் இருந்த அறையின் கண்ணாடிக் கதவுக்கு வெளியேவே அகலாமல் நின்றிருந்து சலீம் வெளியே வந்தபின்னரே அவருடன் அறைக்குத் திரும்பியதை கேரளச் சினிமா உலகம் இன்னும் சொல்லிக் கொண்டிருகிறது. சலீம் அடிக்கடி சொல்வார்’’ பலமுறை நானே சரி போதும் போகலாம் என்று நினைத்திருக்கிறேன் ஆனால் சுனிதா ஒவ்வொருமுறையும் என்னை மீட்டெடுத்திருக்கிறாள் ’’ என்று. இந்த முறை சலீமை 56 வயதில் சுனிதா இழந்தே விட்டார்.
அவரது இருமகன்களில் ஒருவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். மஞ்சும்மல் பாய்ஸிலும், லோஹாவிலும் அவர் இருக்கிறார். மிக நல்ல மனிதர் சலீம், எப்போதும் சிரி நிறைந்திருந்த அவரது laughing villa என்னும் பொருத்தமான பெயரிடப்பட்ட இல்லம் இன்றுதான் மௌனமாக இருக்கிறது
2010ல் சலீமின் நண்பர் கொச்சின் ஹனீஃபா மறைந்த போது சலீம் ‘’நான் வருத்தப்படவில்லை விரைவில் நான் அவனைச்சென்று சந்திக்க இருக்கிறேன்’’ என்றார். மூச்சுலகில் உடல் உபாதைகள் ஏதுமின்றி மகிழ்ந்திருங்கள் சலீம். நிறைவடையுங்கள் வணங்குகிறேன். சுனிதாவுக்கும் மகன்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களும் அன்பும்.
1.Gabonensis – of or from Gabon, Africa – காபோன் (ஆப்பிரிக்கா) பகுதியைச்சார்ந்த.
2.Gaertneri – named for Joseph Gaertner, 18th-century German botanist – ஜோசப்கெர்ட்னர்நினைவாக.
Gaertner was a German botanist who essentially founded the field of Carpology (the study of fruits and seeds). His magnum opus, De Fructibus et Seminibus Plantarum (1788–1792), was a revolutionary shift in botanical science.The Carpological Shift: Before him, most botanists focused on flowers. Gaertner argued that the fruit and seed provided more stable, fundamental clues to a plant’s true identity and evolutionary relationships.Microscopic Precision: He was one of the first to use a microscope systematically to describe the internal anatomy of seeds, identifying the embryo, endosperm, and cotyledons with incredible accuracy
3.Gagea / Gageana – named for Sir Thomas Gage, 19th-century Irish botanist – தாமஸ்கேஜ்நினைவாக.
Sir Thomas Gage was a quiet, meticulous botanist who lived for the study of the overlooked—specifically lichens and rare flora.Gage was not just a collector; he was a pioneer of Lichenology. At a time when many viewed lichens as mere “crust” on rocks, Gage recognized them as complex, structured biological systems.Lichen Geometry: Gage’s work on crustose lichens (which form intricate, mosaic-like patterns on stone) is a direct historical link to natural structural models.Gage’s Herbarium: He maintained one of the most comprehensive private herbaria in England, documenting species that were being lost to early industrialization.
4.Gagnepainii – named for Francois R. Gagnepain, French botanist – காக்னெபெய்ன்நினைவாக.
François Raymond Gagnepain (1866–1952) was a prolific French botanist whose work is foundational for anyone studying the flora of Southeast Asia and East Asia.He is best known for his monumental work on the flora of former French Indochina (modern-day Vietnam, Laos, and Cambodia). He was a key author and editor of the Flore Générale de l’Indo-Chine, a massive multi-volume series that remained the primary reference for the region for decades.
5.Gaguedi – from the vernacular Tigrana (Ethiopian) name for this protea – எத்தியோப்பியநாட்டுப்புறப்பெயர்.
6.Gahnia – named for Dr. Henricus Gahn, Swedish student of Linnaeus – ஹென்ரிகஸ்கான்நினைவாக.
Dr. Henricus (Henrik) Gahn (1747–1816) was a distinguished Swedish physician and botanist who moved in the most elite scientific circles of the 18th century. He is a fascinating link between the “Age of Linnaeus” and the development of modern medical and botanical practices.Gahn was a student of the famous Carl Linnaeus at Uppsala University. He was part of the generation of “Linnaean apostles” and students who expanded on the binomial nomenclature system.His brother, Johan Gottlieb Gahn, was a world-renowned chemist who discovered the element manganese.
7.Gaillardia – named for M. Gaillard de Marentoneau, French patron of botany – கெய்லார்ட்நினைவாக.
8.Gairdneri – named for Dr. Meredith Gairdner, Scottish naturalist – மெரிடித்கெய்ர்ட்னர்நினைவாக.
9.Galacifolia / Galacifolium / Galacifolius – having leaves resembling the genus Galax – கேலக்ஸ்தாவரஇலைபோன்ற.
10.Galactia – from Greek gala (milk), referring to milky sap – பால்போன்றசாறுகொண்டபேரினம்.
11.Galactina / Galactinum / Galactinus – milky in appearance or nature – பால்போன்ற.
12.Galactites – referring to milky-white leaf veins – பால்போன்றவெண்ணிறஇலைநரம்புகள்கொண்ட.
13.Galanga – from Arabic khulendjan; mild ginger – சித்தரத்தைபோன்றஇஞ்சிவகை.
14.Galanthus – from Greek gala (milk) and anthos (flower); “Snowdrop” – பால்போன்றவெண்ணிறமலர் (பனிச்சொட்டுமலர்).
15.Galapageium – of or from the Galápagos Islands – கலாபகஸ்தீவுகளைச்சார்ந்த.
16.Galax – from Greek gala (milk), referring to white flowers – பால்போன்றதாவரப்பேரினம்.
17.Galbana – from Latin galbanum, a gum resin – தாவரப்பிசின்போன்ற.
18.Galbraithiae / Galbraithiana – named for Jean Galbraith, Australian botanist – ஜீன்கல்பிரைத்நினைவாக.
19.Galbulus – a modified cone where the scales are enlarged or fleshy – உருண்டையானதடித்தகனி.
20.Gale – from the Old English name Gagel; helmet-shaped or a small shrub – தலைக்கவசவடிவம்அல்லதுசிறுபுதர்.
21.Galeandra – helmet-shaped cap over the stamen – தலைக்கவசம்போன்றமகரந்தப்பைமூடி.
22.Galearis – helmet-like appearance of the flower – தலைக்கவசம்போன்றமலர்.
24.Galega – from Greek gala (milk); stimulator of milk production – பால்உற்பத்தியைத்தூண்டும்தாவரம்.
25.Galegifolia / Galegifolium / Galegifolius – leaves resembling the genus Galega – காலேகாதாவரஇலைபோன்ற.
26.Galenia – possibly named for the Greek physician Galen – மருத்துவர்காலன்நினைவாக.
Aelius Galenus (often known as Galen of Pergamon, 129–c. 216 AD) is perhaps the most influential figure in the history of medicine, whose ideas dominated the Western world for over 1,500 years. Galen is a complex figure: he is both a titan of science and a primary reason why medical progress “stalled” for centuries.In Galen’s era, a physician was by necessity a botanist. He refined the “Hippocratic” system, but his true contribution was his focus on Pharmacognosy (the study of medicines derived from natural sources).
27.Galeobdolon – smells like a weasel – கீரிபோன்றமணம்கொண்ட.
28.Galeopsis – resembling a weasel – கீரிபோன்றதோற்றமுடையபேரினம்.
29.Galeottiana / Galeottii – named for Henri Galeotti, French botanist – ஹென்றிகாலியோட்டிநினைவாக.
Henri Guillaume Galeotti (1814–1858) is a quintessential figure for your research on the global distribution of plants and the intersection of botany and engineering.He is credited with introducing a vast number of Mexican succulents and cacti to Europe. His collections fueled the “cactomania” that gripped European botanical gardens in the mid-19th century. He described hundreds of new orchid species. His work in the high-altitude cloud forests of Mexico provided the first scientific look at these complex ecosystems.He was one of the first to study how soil composition and rock formations (geology) dictated the “branching architecture” and survival of specific plant groups.
30.Galericulata / Galericulatum / Galericulatus – small cap or hat-shaped – சிறியதொப்பிபோன்றஅமைப்பு.
31.Galiaceae – a synonym for the family Rubiaceae – காஸியம்தாவரக்குடும்பம்.
32.Galinsoga – named for Mariano Martinez Galinsoga, Spanish physician – கலிசோகாநினைவாக.
34.Galium – from Greek gala (milk); used to curdle milk – பாலைஉறையவைக்கும்தாவரம்.
35.Gallica / Gallicum / Gallicus – of or from France (Gaul) – பிரான்சுநாட்டைச்சார்ந்த.
36.Gallinopes – shaped like a chicken foot – கோழியின்கால்போன்றவடிவம்.
37.Galphimia – anagram of Malpighia – மால்பிஜியாதொடர்புடையபேரினம்.
38.Galpinii – named for Ernest Edward Galpin, South African botanist – கால்பின்நினைவாக.
39.Galtonia – named for Sir Francis Galton, British explorer – சர்பிரான்சிஸ்கால்டன்நினைவாக.
40.Galvestonensis – of or from Galveston, Texas – கால்வெஸ்டன்பகுதியைச்சார்ந்த.
41.Galvezia – named for Jose Galvez, Spanish administrator – ஜோஸ்கால்வெஸ்நினைவாக.
42.Gambelii – named for William Gambel, American naturalist – வில்லியம்கேம்பெல்நினைவாக.
43.Gamblei – named for James Sykes Gamble, English botanist – ஜேம்ஸ்சைக்ஸ்கேம்பிள்நினைவாக.
44.Gamete – a reproductive cell (egg or sperm) – இனச்செல்.
45.Gametophyte – the haploid, gamete-producing phase of a plant – இனச்செல்தாவரகம்.
Feature
Gametophyte
Sporophyte
Ploidy Level
Haploid ($n$): Contains one set of chromosomes.
Diploid ($2n$): Contains two sets of chromosomes.
Product
Produces Gametes (sperm/eggs) via mitosis.
Produces Spores via meiosis.
Origin
Grows from a germinating spore.
Grows from a fertilized zygote.
Structural Role
The “sexual” phase.
The “asexual” phase.
46.Gamochaeta – bristles united at the base – அடிப்பகுதியில்இணைந்ததூவிகள்.
47.Gamolepis – referring to united bracts – இணைந்தபூவடிச்செதில்கள்.
48.Gamopetalous – a corolla with united or fused petals – இணைந்தஅல்லியிதழ்கள்.
49.Gamophylla / Gamophyllum / Gamophyllus – fused or joined leaves – இணைந்தஇலைகள்.
50.Gamosepala / Gamosepalum / Gamosepalus – united or fused sepals – இணைந்தபுல்லியிதழ்கள்.
51.Gandavense / Gandavensis – of or from Ghent, Belgium – பெல்ஜியம்பகுதியைச்சார்ந்த.
52.Ganderi – named for Frank Forrest Gander, American botanist – பிராங்க்கேண்டர்நினைவாக.
Frank Forrest Gander (1899–1976) was a polymath who bridged the gap between zoology and botany in a way that few scientists do today.Gander was a pioneer in nature education. He was a key leader in the “Junior Naturalist” programs, dedicated to teaching children how to record and identify plants in the field.
53.Gandogeri – named for Abbot Michel Gandoger, French botanist – மிஷெல்காண்டோஜர்நினைவாக.
54.Gangetica / Gangeticum / Gangeticus – of or from the Ganges River (India) – கங்கைநதிபகுதியைச்சார்ந்த.
55.Garberi / Garberia / Garberiana – named for Dr. Abram Paschal Garber, American botanist – ஆப்ராம்கார்ஃபர்நினைவாக.
56.Garcinia – named for Laurent Garcin, French botanist – கார்சினியாநினைவாக.
57.Gardenia – named for Alexander Garden, physician and botanist – கார்டன்நினைவாக.
58.Gardenii – specifically named in honor of Dr. Alexander Garden – கார்டன்சார்ந்த.
59.Gardneriana / Gardnerianum / Gardnerianus / Gardnerii – named for Hon. Edward Gardner – எட்வர்ட்கார்ட்னர்நினைவாக.
60.Garganica / Garganicum / Garganicus – of or from Mt. Gargano (Italy) – இத்தாலிபகுதியைச்சார்ந்த.
61.Garibina – from Khoi name Gariep (large) – பெரியஎன்றபொருள்படும்பெயர்.
62.Gariepensis – of or from the Gariep River, South Africa – தென்னாப்பிரிக்காபகுதியைச்சார்ந்த.
63.Garnotia – named for Prosper Garnot, French naturalist – கார்னோநினைவாக.
64.Garrettia / Garrettiana / Garrettianum / Garrettianus – named for H.B. Garrett, British botanist – காரெட்நினைவாக.
65.Garryaceae / Garrya – named for Nicholas Garry; a natural order of dicotyledons – காரியாதாவரக்குடும்பம்.
66.Gasteria – from Greek gaster (stomach), referring to the swollen base – வயிற்றுவடிவம்கொண்டகற்றாழை.
67.Gasteromycetes – fungi where spores are produced inside the fruiting body – அகவித்துருபூஞ்சைகள்.
68.Gaya – named for Claudio Gay, 19th-century French botanist – கிளாடியோகேநினைவாக.
69.Gelatinous – having the consistency of jelly – கூழ்மமான (கூழ்மப்போன்ற).
70.Geminate – occurring in pairs; twins – இரட்டையான.
71.Gemma – a small mass of vegetative tissue for asexual reproduction; a bud – முகுளம் / அரும்பு (அரும்புகள் / மொட்டுகள்).
72.Gemmation – the arrangement or expansion of buds; the process of budding – மொட்டுவிரிதல் (மொட்டுவிடுதல்).
73.Gemmule – a small bud or reproductive corpuscle – நுண்முகுளம்.
74.Gene – the basic unit of heredity – மரபணு.
75.General – investiture of parts at the base of an umbel – பொதுவான.
76.Geniculata / Geniculatum / Geniculatus – bent abruptly like a knee joint – முட்டிபோன்றவளைவு (முழங்கால்போன்றவளைவுடைய).
77.Geniculum – a node or joint of a stem – தண்டுக்கணு.
78.Genista – the Broom genus – ஜெனிஸ்டாபுதர்வகை.
79.Genotype – the genetic makeup of an organism – மரபணுவகை.
Feature
Genotype
Phenotype
Simple Definition
The internal genetic code (the “instructions”).
The external physical expression (the “result”).
Composition
The specific alleles (e.g., $AA$, $Aa$, $aa$) inherited from parents.
The observable traits (height, leaf shape, flower color).
Visibility
Invisible to the naked eye (requires DNA sequencing).
Visible and measurable in the field.
Changeability
Remains constant throughout the plant’s life.
Can change due to environmental factors (Plasticity).
80.Gens – a taxonomic synonym for a tribe – இனக்குழு.
81.Gentianaceae / Gentiana – the Gentian family – ஜென்சியானேசிகுடும்பம்.
82.Genus – a taxonomic rank between family and species – பேரினம்.
83.Geoblastus – embryo with underground cotyledons – தரைக்கீழ்முளைத்தல்.
84.Geocarpy / Geocarpus – fruit produced or ripening underground (e.g., Peanut) – நிலக்கனிவிளைதல் (நிலத்தினடியில்கனியும்).
85.Geonasty – nastic movement in response to gravity – புவிசார்வளைவு.
86.Geophilous – plants with underground fruiting organs – தரைக்கீழ்வாழும்உறுப்புகள்கொண்டதாவரம்.
87.Geophyte – a plant that survives via underground buds – தரைக்கீழ்மொட்டுத்தாவரம்.
88.Geotactic – response of a whole organism to gravity – புவிசார்நகர்வு.
89.Geotropism / Geotropic – growth or turning in response to gravity – புவிநாட்டம் (புவிநாட்டமுடைய).
90.Geraniaceae / Geranium – the Geranium family; from Greek geranos (crane) – ஜெரானியேசிகுடும்பம்.
91.Germ pore – a hole in pollen for the pollen tube – முளைப்புத்துளை.
92.Germen – a synonym for the ovary – சூலகம்.
93.Germination – the beginning of seed growth; development into a plant – முளைத்தல்.
94.Gesneraceae – a natural order of dicotyledons – ஜெஸ்னேரேசிகுடும்பம்.
95.Gibba / Gibbosa / Gibbous – swollen on one side – ஒருபக்கவீக்கம் (ஒருபக்கம்வீங்கிய).
111.Globulariaceae – a natural order containing Globularia – குளோபுலேரியேசிகுடும்பம்.
112.Globule – spherical reproductive organ in Characeae – சிறுகோளம்.
113.Globuline – transparent granules in tissue – நுண்உருண்டைபுரதம்.
114.Globulus – a small globule or shield – சிறுஉருண்டை.
115.Glochis / Glochideous – barbed point or bristles – முள்போன்றதூவி.
116.Glomeratus – collected into a close head – திரளான.
117.Glomerulis – a small head or soredium – சிறுதிரள்.
118.Glomus – a synonym for a capitulum – மலர்க்கொத்து.
119.Glossology – explanation of technical terms – கலைச்சொல்லியல்.
120.Glucose – a simple sugar from photosynthesis – குளுக்கோஸ்.
121.Glue – viscid plant secretion – தாவரப்பசை.
122.Glumaceous – chaffy like grass scales – உமிபோன்ற.
123.Glume – outermost husk of a grass spikelet – உமி.
124.Glumella – innermost scale in grasses – உள்உமி.
125.Gluten – viscid substance in flour – கோதுமைப்புரதம்.
Gluten is not a single protein; it is a composite of two primary groups of storage proteins found in the endosperm of the grass family (Poaceae), specifically in the tribe Triticeae: These provide viscosity (the ability to flow). They are monomeric proteins that act like a lubricant.
127.Gnetaceae – a natural order of Gymnosperms – நீட்டேசிகுடும்பம்.
128.Gnomonicus – stalk bent abruptly at a high angle – செங்கோணவளைவு.
129.Goblet-shaped – hemispherical and concave – கோப்பைவடிவம்.
130.Gongylodes – knob-like in appearance – முடிச்சுபோன்ற.
131.Gongylus – rounded reproductive corpuscles in algae – பாசிவித்துரு.
132.Gonnophorum – elevated receptacle bearing stamens and carpels – வித்துருதாங்கி.
133.Goodeniaceae – a natural order of dicotyledons – குடீனியேசிகுடும்பம்.
134.Gossypinus / Gossypium – cottony; the Cotton genus – பருத்திபோன்ற (பருத்திபேரினம்).
135.Gottlebei – named for Gunter Gottlebe – காட்லீப்நினைவாக.
136.Goudeyi – named for Christopher J. Goudey – கவுடிநினைவாக.
137.Goulimyi – named for Dr. C.N. Goulimis – கவுலிமிஸ்நினைவாக.
138.Gounellei – named for Pierre-Emile Gounelle – கவுனல்நினைவாக.
139.Gourd – fleshy fruit with parietal placentation – சுரைவகைக்கனி.
140.Govaniana / Govanianum / Govanii – named for George Govan – ஜார்ஜ்கோவன்நினைவாக.
George Govan (1791–1865) was a Scottish surgeon and botanist whose work laid the foundation for our understanding of the Himalayan flora.Govan was one of the first Western scientists to systematically collect plants from the Sirmur region of the Himalayas.
159.Grammatophyllum – from Greek for “grass” and “leaf” – புல்இலைபோன்றபேரினம்.
160.Grammicus – marked with lines resembling letters – வரிபோன்றகுறி.
161.Grammitis – referring to elongated sori – வரிபோன்றவித்துருக்கள்.
162.Granadense / Granadensis / Grenadense / Grenadensis – from Grenada, Central America – கிரெனடாபகுதியைச்சார்ந்த.
163.Granadilla / Granadillo – fruits with many seeds – அதிகவிதையுடையகனி.
164.Granata / Granatum / Granatus – many seeds – அதிகவிதைகளுடைய.
In the botanical world, Granata (derived from the Latin granatum, meaning “seeded”) is a term deeply intertwined with the history of the Pomegranate (Punica granatum).The city of Granada in Spain takes its name and its heraldic symbol from this fruit. It was brought there via the Silk Road and the Moorish missions, representing one of the most successful transcontinental plant distributions in history.In a literal intersection of botany and engineering, the military “grenade” was named after the pomegranate (granata) because the early versions of the weapon were shaped like the fruit and designed to scatter “seeds” (shrapnel) upon impact.
165.Grande / Grandis – large; spectacular – பெரிய / பிரம்மாண்டமான.
192.Gravis – heavy; weighty; large – பெரியஅளவுள்ள.
193.Greasy – a surface that feels oily – பிசுபிசுப்பான.
194.Greatheadii – named for Dr. J.B. Greathead – கிரேட்ஹெட்நினைவாக.
195.Greenei / Greenii – named for Edward Greene or Dave Green – கிரீன்நினைவாக.
196.Greenovia – named for George Greenough – கிரீனோநினைவாக.
George Bellas Greenough (1778–1855) is primarily remembered as a geologist, he was a pioneer in stratigraphy and mapping, which provided the structural foundation for how we understand plant distribution and the earth’s natural models.He published a massive, detailed geological map of England and Wales in 1819. While he famously clashed with William Smith (another “crushed” figure of history) over mapping techniques, Greenough’s map was a masterpiece of data visualization and structural layout.
197.Greenwayi – named for Dr. Percy Greenway – கிரீன்வேநினைவாக.
231.Guadalupense / Guadalupensis – from Guadalupe Island – குவாடலூப்தீவைச்சார்ந்த.
232.Guadua – vernacular bamboo name – மூங்கில்வகை.
In the “engineering” of the natural world, Guadua is the most important genus of bamboo .Known as “Iron Grass” or “Vegetable Steel,” this Neotropical bamboo is a masterpiece of structural architecture and sustainable construction.From a structural perspective, Guadua angustifolia (the most famous species) is a marvel of biomimicry. It has a tensile strength greater than steel and a compressive strength higher than many concretes, yet it is incredibly lightweight. The nodes (the rings) and internodes (the hollow spaces) act as natural bulkheads. In engineering terms, these nodes prevent the tube from buckling under pressure, allowing it to bend significantly without snapping—a perfect model for earthquake-resistant architecture. Its fibers are concentrated on the outer skin, where the most structural stress occurs. This is the exact principle used in modern hollow-section engineering.
233.Guaiacum – Latinized form of South American “guaiac” – குவாயகம்பேரினம்.
234.Guajava – Guava – கொய்யாபழம்சார்ந்த.
235.Guanabarica – from Rio de Janeiro – பிரேசில்பகுதியைச்சார்ந்த.
236.Guanaiensis – from Guana Island – குவானாதீவைச்சார்ந்த.
237.Guanchica – Canary Island people – கேனரிதீவுதொடர்பான.
238.Guangxiense / Guangxiensis – from Guangxi, China – சீனமாகாணத்தைச்சார்ந்த.
239.Guanicense – from British Guiana – கயானாபகுதியைச்சார்ந்த.
240.Guapira – from the vernacular name – குவாபிராபேரினம்.
241.Guaranitica / Guaraniticum / Guaraniticus – of the Guarani Indians – குவாரானிபழங்குடிதொடர்பான.
242.Guarea – common name for a genus of evergreen trees – குவாரியாபேரினம்.
243.Guarianthe – a genus of Central American orchids – ஆர்க்கிட்மலர்.
244.Guarume – from Guarume Island, Panama – பனாமாபகுதியைச்சார்ந்த.
245.Guatemalense / Guatemalensis – of or from Guatemala – குவாத்தமாலாநாட்டைச்சார்ந்த.
246.Guazuma – Latinized form of a Mexican plant name – மெக்சிகோதாவரப்பெயர்.
247.Guelzowiana – named for Robert Gülzow – குல்சோநினைவாக.
248.Guettarda – named for Jean-Étienne Guettard, French naturalist – கெட்டார்ட்நினைவாக.
249.Guianense / Guianensis – of or from French Guiana – கயானாபகுதியைச்சார்ந்த.
250.Guichenotia – named for Antoine Guichenot, French gardener – கைசெனோட்நினைவாக.
251.Guiengola – from Guiengola, Mexico – மெக்சிகோபகுதியைச்சார்ந்த.
252.Guihaia – Latinized form of a Chinese name; a genus of palms – சீனப்பெயர்சார்ந்தபேரினம்.
253.Guilfoylei – named for William Robert Guilfoyle, Australian botanist – கில்ஃபாயில்நினைவாக.
254.Guillaumetii / Guillauminiana – named for botanists Guillaumet or Guillaumin – கில்லாமின்நினைவாக.
255.Guineense / Guineensis – of or from Guinea, West Africa – கினிபகுதியைச்சார்ந்த.
256.Guizhouense / Guizhouensis – of or from Guizhou, China – சீனமாகாணத்தைச்சார்ந்த.
257.Guizotia – named for Francois Guizot – கிசோட்நினைவாக.
258.Gulubia – Latinized form of an Indonesian name; a genus of palms – இந்தோனேசியப்பெயர்சார்ந்தபனை.
259.Gumbletonii – named for William Gumbleton, Irish horticulturist – கம்பிள்டன்நினைவாக.
வெகுநாட்களுக்குப்பிறகு இன்று தியேட்டரில் கருப்பு பார்த்தோம் . மூக்குத்தி அம்மனின் மேல் வர்ஷன் தான் கருப்பு. கோவை பொள்ளாச்சி ஈரோடு என்று கொங்குப் பிரதேசத்தாட்களுக்கு கருப்பு பரிச்சயமானவர் என்பதால் அரங்கில் கொந்தளிப்பு குறைவாகத்தான் இருந்தது. ஆனால் சென்னைக்காரர்களுக்கெல்லாம் கருப்பன் மிகப்புதியவன்.
அங்கே ஒவ்வொரு ஷோவிலும் ஆணும் பெண்ணுமாகச் சாமிஆடுகிறார்களாம். அம்மனுக்கு பதிலாக அய்யன் என்பதால் ஆண்களுக்கும் சாமி வருகிறது போல.
சூர்யா பொருத்தமாகத்தான் இருக்கிறார் என்றாலும் அவரைக்காட்டிலும் கருப்பனாகக் கார்த்தி பொருத்தமாக இருந்திருப்பார்.
கருப்பு சுருட்டுபிடிக்கையில் எல்லாம் ’’புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்’’ என்று கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் statutory warning போடுவதையெல்லாம் கருப்பன் எப்படி அனுமதித்தான் என்று தெரியவில்லை.
கருப்பன்ங்க!!! சுருட்டு பிடிக்காம எப்படி?
இரண்டாம் பாதியில் கதையைக்குறித்து நிறையக்கேள்விகள் இருக்கின்றன என்றாலும் ஆர் ஜே பாலாஜியிடம் அவர் கேசப்பராமரிப்புக்கு என்ன செய்கிறர் என்று முதலில் கேட்கவேண்டும்.
அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. சுமார் 30 பங்கேற்பாளர்கள் அந்த பெரும்பாலையில் சிறு சிறு குழுக்களாக நடந்து கொண்டிருந்தனர். அவர்களின் வழிகாட்டி அந்த பாலை நிலத்தில் மண்டியிட்டு பிரார்த்தித்து, அங்கே சிறு சிறு பொத்தான்களை போல வளர்ந்திருந்த கள்ளிகளை பறித்து அவற்றின் மேற்புறத்தில் இருந்த சிறிய வளரிகளை துடைத்து நீக்கிவிட்டு எப்படி உண்ணவேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். பங்கேற்பாளர்கள் யாரும் அந்த கள்ளிகளை ஒருபோதும் திரும்பும் பயணத்தில் எடுத்துச் செல்லக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டனர்.சில மணி நேரம் கழித்து அனைவரும் சேகரித்த கள்ளிகளுடன் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்தார்கள்.
இரவுதான் அந்த நிகழ்வு நடைபெறும் என்பதால் அந்த வெட்டவெளியில் வானின் கீழ், நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக தோன்றுவதை பார்த்தபடி தங்களுக்கான இடங்களை தேர்ந்தெடுத்து கம்பளிகளை விரித்து அமர்ந்தனர். மெழுகுவர்த்தி, கொஞ்சம் கொக்கோ கனிகள், பீன்ஸ், வெண்ணிற மலர்கள் ஆகியவற்றுடன் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கும் கடவுள் மற்றும் குடும்பத்தினர் புகைப்படங்களையும் முன்னால் இருந்த சிறு மரப்பலகையில் ஒவ்வொருவரும் அமைத்தார்கள்.
ஒரு பழங்குடியின ஆண் அனைவருக்கும் விறகு கூட்டிய அடுப்பில் தேநீர் தயாரிக்க தொடங்கினார், இரு பெண்கள் இரண்டு தொல் இசைக்கருவிகளை முடுக்கி தயாராக்கினர்.
அதுவரை வீசிக்கொண்டிருந்த இளங்காற்று குளிராக மாறத்தொடங்கியது.நிலவு எழுகையில் அனைவர் முன்பும் நெருப்பு வளர்க்கப்பட்டது.
நள்ளிரவானதும் அனைவருக்கும் சிறு கரண்டியில் பசைபோல மிக மிக கசப்பான கள்ளிப்பசையும், அதை விழுங்கிய பின்னர் ஒரு கள்ளித்தேநீரும் அளிக்கப்பட்டது அந்த தேநீர் வயிற்றுக்குள் இறங்காமல் தொண்டையிலேயே நின்றிருந்த பசையை உள்ளே இறக்கியது. அந்த தாளக்கருவிகள் வட்டமாக அமர்ந்திருந்த பங்கேற்பாளர்களிடம் தரப்பட்டது. வாங்கிக்கொண்ட ஒவ்வொருவரும் அதை அவர்களுக்கு தெரிந்தாற்போல் இசைத்து ஒருசில பாடல்வரிகளை அவரவர் மொழிகளில் பாடினர்
பழங்குடியின தலைவர் அவர்களது தொல்மொழியில் அங்கு அனைவரும் கூடியிருக்கும்படி அனுமதித்த இயற்கைக்கு நன்றி தெரிவித்தார். பின்னணியில் பழங்குடியினர் சிலர் இணைந்து பாடினர்.
‘’நான் மிக லகுவாக இருக்கிறேன் இதோ இப்போது பறக்கவிருக்கிறேன் என் துயர்களிலிருந்து விடுபட்டு மேலே மேலே பறக்க விருக்கிறேன் இனி அனைவரும் ஒன்றே,
நாமனைவரும் ஒன்றே நாமே மருந்து, நாமனைவரும் மருந்து வாருங்கள், ஒருவருக்கொருவர் சிகிச்சையளித்து கொள்ளுவோம் இதோ, விண்மீன்களுக்கு அடியில் பாலையின் காற்றில், தூரத்தே ஏதோ முழக்கமொன்றை கேட்டபடிக்கு நாம் ஒருவருக்கொருவர் இணைந்து கொள்வோம் ஒருவரை ஒருவர் சிகிச்சை அளித்து மீட்போம்’’
என்னும் பொருளில் கைநீட்டினால் தொட்டுவிடலாம் போல நட்சத்திரங்கள் அருகில் அமைந்திருந்த அந்த நள்ளிரவில் அப்பாடல் மிக இனிமையாக ஒலிக்கிறது.
ஆச்சரியப்படும் விதமாக அங்கு அவர்களின் குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் எதற்கு குழந்தைகள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு, அவர்களின் கலாச்சாரத்தில் இதுபோன்ற முக்கியமான சடங்குகளில் குழந்தைகள் பங்கு கொள்ளாமல் இருந்தால் தான் ஆச்சரியம் என்றும், தொல்மரபின் நீட்சியான அச்சடங்கு, கட்டாயம் குழந்தைகளின் முன்னிலையிலேயே வழக்கமாக நடத்தப்படும் ஏனென்றால் அவர்களும் அம்மரபின் நீட்சிதான் என்று பதிலளிக்கப்பட்டது.
ஒருமணி நேரத்தில் குமட்டலும் வாந்தியும் அனைவருக்கும் உண்டாகின. சிறிது நேரத்தில் சிலர் விசும்பி அழுது கொண்டிருந்தனர். பலர் காலடியில் வேர்கள் வளர்வதை உணர்வதாக கூறினர். அனைவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். அதிகாலையில் அனைவரும் அங்கேயே படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர்.
தனித்தனியே அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நிகழ்வு முடியும்போது ஒரே குடும்பமாகி இருந்தனர். நிகழ்வை பாரம்பரிய முறைப்படி பழங்குடியின தலைவர் முடித்து வைத்ததும் அனைவரும் அங்கிருந்த நெருப்புக்கும் நீருக்கும் இசைக்கருவிகளுக்கும் வணக்கமும் நன்றியும் சொல்லி விடைபெற்றார்கள். அத்தனை பேரும் புத்தம் புதிதாக பிறந்தவர்கள் போல் இருந்தார்கள்.
அந்த கள்ளிப்பசை உள்ளிருந்து நமது ஆணவத்தை வெளிக்கொண்டு வந்துவிடுகிறது என்கிறார்கள் பழங்குடியினர். அக்கள்ளி உண்மையில் நாம் யாரோ அதை நமக்கு காட்டி கொடுக்கிறது என்கிறார் ஒரு பங்கேற்பாளர் பரவசமாக
இந்த அனுபவங்கள் எல்லாம் மெக்ஸிகோவில் நடைபெறும் பெயோட்டி சுற்றுலாவில் ஒரு சிறு கள்ளியை உண்ணும் ஒரு சடங்கு மற்றும் பிரார்த்தனை நிகழ்வில் கிடைப்பதுதான். அந்த சிறு பொத்தான்களை போலிருந்த கள்ளியின் பெயர் ’’பெயோட்டி’’
பெயோட்டி
பெயோட்டி (Peyote cactus) கள்ளியின் அறிவியல் பெயர் Lophophora williamsii.
பெயோட்டி என்னும் மெக்ஸிகன் பொது வழங்கு பெயர் நாவாட்(டு)ல் மொழி (Nahuatl) வேர்கள் கொண்ட ’’கம்பளிப்புழு கூடு’’ என்னும் பொருள் கொண்டிருக்கும் ஸ்பானிஷ் சொல்.
அமெரிக்க பழங்குடியினர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இக்கள்ளியின், சிகிசையளிக்கும், மன அமைதி உண்டாக்கும், புலன்களைக் கூராக்கும் அரிய பண்புகளை அறிந்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் பழங்குடியின கலாச்சாரத்தில் பெயோட்டிக்கு ஒரு பிரத்யேக புனிதமான இடமுண்டு. வட அமெரிக்கா, மேற்கு கனடா பகுதிகளின் சுமார் 40 பழங்குடியினத்தவர்களின் சடங்குகளில் பெயோட்டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
சில இனத்தவர்கள் இதை ஆன்மீக அனுபவத்தின் பொருட்டு உண்ணுகையில், தியானம் மற்றும் மந்திரங்களை உச்சரிப்பது போன்றவற்றை செய்கிறார்கள். மேலும் சிலரோ முழுக்க முழுக்க நோய் தீர்க்கும் சடங்காக மட்டுமே இதை உண்ணும் நிகழ்வை நடத்துகிறார்கள். ஒவ்வொரு பழங்குடிக்கும் பெயோட்டியை பயன்படுத்துவதில் அவர்களுக்கே உரித்தான தனித்த வழிமுறைகள் உள்ளன.
சில பழங்குடி இனத்தில் பெயோட்டி பாம்புக் கடிக்கு முறி மருந்தாகவும் அளிக்கப்படுகிறது, இன்னும் சிலர் இதை இரத்த சர்க்கரை மற்றும் சருமவியாதிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகின்றனர்
’வேட்டை’ என குறிப்பிடப்படும் பெயோட்டியை கண்டுபிடித்து சேகரித்து கொண்டுவரும் நிகழ்வும் சடங்கின் ஒரு பகுதியாக நடக்கும்.
பலர் நினைப்பதுபோல பெயோட்டி கள்ளி உண்ணுதல், போதை உண்டாக்கும் நிகழ்வல்ல, அது ஆன்மீக வேர்களை கொண்டிருக்கும் ஒரு அனுபவம்
மெக்ஸிகோ பழங்குடியினர் இதை ஒரு குணமாக்கும் சிகிச்சை அனுபவமென்றே குறிப்பிடுகின்றனர். உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்தையும் ஆன்மாவையும் குணமாக்கும் சிகிச்சை இது.
ஹிக்குரி (Hikuri) என்றும் அழைக்கப்படும் பெயோட்டி கள்ளி ஒரு அரிய தாவரம் எனவேதான் அப்பிரதேசத்தின் பழங்குடியினர் அதை பாதுகாப்பதில் மிக கவனமாக இருக்கின்றனர்.
முது தந்தை எனப்பொருள்படும் ‘Abuelo’, என்னும் இதன் பிறிதொரு பெயர் அக்கள்ளியின் ஆண்மை நிறைந்த ஆற்றலையும் குலமூத்தோரின் அறிவையும் உணர்த்துகிறது. பல இனங்களில் பெயோட்டி சொர்க்கத்தின் கதவுகளை திறக்கும் சாவி என கருதப்படுகிறது
20ம் நூற்றாண்டில் இது அறிவியல் ரீதியாக வகைப்படுத்தப்பட்ட பின்பு உலகெங்கிலும் பெயோட்டி பிரபலமாகி இருக்கிறது.
அமெரிக்காவின் போதைப்பொருள் அமலாக்கத்துறை (Drug Enforcement Administration – DEA) பெயோட்டியை , Schdule 1 drug என பட்டியலிட்டிருந்தும் பல அமைப்புகள் இந்த நெறியினை பின்பற்றுவதில்லை. உதாரணமாக அமெரிக்க பூர்வகுடி அமைப்புக்கள் பலவற்றின் சடங்குகளில் பரவலாக இக்கள்ளி உபயோகிக்கபடுகிறது.
பெயோட்டியில் இருக்கும் ஆல்கலாய்டான மெஸ்கலைன் அதன் விளைவுகளுக்கு காரணமாக இருக்கிறது (mescaline). மெஸ்கலைன் நேரடியாக மூளையில் செயல்புரிகிறது. LSD மற்றும் சைலோசைபின் காளான்களும் இப்படித்தான் நேராக மூளையில் விளைவுகளை உண்டாக்கும். மெஸ்கலைன் செயற்கையாக தயாரிக்கப்பட்டு போதைப் பொருளாகவும் பயன்பாட்டில் இருக்கிறது
பெயோட்டியின் உலர்ந்த உச்சிப்பகுதியை உண்ணுவது, பெயோட்டியை கொதிக்கும் நீரில் வேகவைத்து உண்ணுவது, பெயொட்டியிலிருந்து தேநீர் தயாரித்து அருந்துவது அல்லது பெயோட்டி தூள் அடைக்கப்பட்டிருக்கும் கேப்ஸ்யூல்களை விழுங்குவது என்று பலவிதங்களில் இது எடுத்துக் கொள்ளப்படுகிறது. சில குழுக்கள் உலர்த்தி பொடியாக்கிய பெயோட்டிகளை சிகரெட்டை போல புகைப்பதுமுண்டு
பெயோட்டியை உண்டதும் உடனே அதன் விளைவுகள் உடலில் உண்டாகும், அவ்விளைவுகள் சுமார் 12 மணி நேரம் உடலில் இருக்கும். இதன் விளைவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். புலன்களை கூர்மை கொள்ள வைப்பது மெஸ்கலைனின் இயல்பு என்பதால் பலர் ஒலியை பார்த்ததாகவும் சிலர் பலவித நிறங்களை வடிவங்களை உணர்ந்ததாகவும் சொல்கின்றனர். காட்சிகள் (visions) எனப்படும் இல்பொருள் தோற்றங்கள் மெஸ்கலைனின் விளைவுகளில் முதன்மையானது, பலருக்கு சில மிகப் பழைய நினைவுகள் மின்னல் போலமனதில் வந்து போவது மிக சாதாரணமாக நிகழும்
இதன் விளைவுகள் எத்தனை உச்சம் சென்றாலும் அவை தற்காலிகமானவையே மெஸ்கலைனின் வீரியம் குறையும் போது அவையும் குறைந்துவிடும்
அதிக பெயோட்டி உண்டதால் ஏதும் ஆபத்துக்கள் உண்டானதில்லை. அரிதாகவே ஒருசிலருக்கு மெஸ்கலைன் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும்
புகையிலை மற்றும் பிற போதை பொருட்களை போல அல்லாது மெஸ்கலைன் அடிமையாதல் என்பதும் அரிதினும் அரிதாகவே நிகழ்கிறது. எனினும் சிலர் இதை போதைப்பொருளாகவும் உபயோகப்படுத்தி கொண்டிருக்கின்றனர்
தாவரவியல் இயல்புகள்
பெயோட்டி டெக்சாஸ் மற்றும் தெற்கு மெக்ஸிகோவை தாயகமாக கொண்டது. வடக்கு மெக்சிகோவின் சிகுவாஹுவான் பாலையில் மிக அதிக எண்ணிக்கையில் இவை காணப்படும்.
தட்டையான மேற்பரப்பை கொண்டிருக்கும் சாம்பல் பச்சை அல்லது நீலப்பச்சை நிறத்தில், முட்கள் இல்லாத அழகிய சிறுதட்டையான உருண்டைவடிவ இக்கள்ளிகள் தரையோடு தரையாக வளர்பவை,
பெயோட்டிகள் entheogen எனப்படும் சமயச்சடங்குகளில் பயன்படும் மனம் மயக்கும் தாவர வகையை சேர்ந்தவை. கூட்டங்களாக வளரும் இயல்புடைய இக்கள்ளிகள் 2-7 செ மீ உயரமும் 10-12 செ மீ சுற்றளவும் கொண்டிருப்பவை. மேலிருந்து கீழாக அமைந்திருக்கும் புடைத்த வரிகள் கள்ளியின் மேற்புறத்தை சுளைகள் போல பிரித்திருக்கும். முட்களற்ற இக்கள்ளிகளில் இளமஞ்சள் கம்பளி நூல் போன்ற மென்வளரிகள் கொத்தாக வளர்ந்திருக்கும். இவற்றில் மார்ச்சிலிருந்து மே வரை சிறிய இளஞ்சிவப்பு மலர்கள் உருவாகும்.
இவற்றின் மகரந்த தாள்கள் தொடுதல் மூலம் தூண்டப்பட்டு மகரந்தங்களை விடுவிக்கும் வகையை சேர்ந்தவை. thigmotactic anthers எனப்படும் இவ்வகை கள்ளிகளின் மகரந்தங்களை குறித்து முதன் முதலில் சார்லஸ் டார்வின் கண்டறிந்தார்
கரிய விதைகளை கொண்டிருக்கும் சிறு இளஞ்சிவப்பு வெடியாக்கனிகள் உருவாகும் .
சுண்ணாம்பு மண்ணில் இவை செழித்து வளரும். இயற்கையான வாழிடங்களில் இவை மிக மிக மெதுவாக, சுமார் 16 வருடங்கள் முதிர்வதற்கு எடுத்துக்கொண்டு வளரக்கூடியவை. அறுவடைகளுக்கு இடையில் 8 வருடங்களாவது காத்திருந்தாலே மீண்டும் வேர்கிழங்குகளிலிருந்து கள்ளிகள் முளைத்து வரும். எனினும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இவை 3 வருடங்களில் முதிர்ந்து மலர துவங்குகிறது
பழங்குடி இனத்தவர்களின் கலாச்சாரத்தில் பல்லாயிரமாண்டுகளாக முக்கிய இடம்பெற்றிருக்கும் இந்த கள்ளி இப்போது மிக அதிக, முறையற்ற அறுவடையாலும் பெயோட்டி சுற்றுலாக்களின் பிரபலத்தாலும் அருகிவரும் இனத்தின் தாவரமாக பட்டியிலிடப்பட்டிருக்கிறது
வரலாறு
வட அமெரிக்காவின் பழங்குடியின வரலாற்றுடன் இணைந்திருக்கிறது இந்த பெயோட்டியின் வரலாறும். பல பழங்குடி இனங்களில் புனிதமான தாவரமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெயோட்டி இருக்கிறது. வட அமெரிக்காவின் தொல்குடிகளான Huichol, Tarahumara, Cora ஆகியோர் இக்கள்ளியுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பவர்கள்..
19 ம் ஆண்டில் நிறுவப்பட்ட அமெரிக்க பூர்வீக தேவாலயம் (Native American Church-NAC ) மற்றும் Huichol பழங்குடியினர் இக்கள்ளிகளுடன் மிக நெருங்கிய தொடர்பிலிருப்பவர்கள். இந்த தேவாலயம் கிறுஸ்துவத்தை பழங்குடியின சடங்குகளுடன் கலந்து இக்கள்ளிகளின் பயன்பாட்டுடன் இணைந்த பெயோட்டி மதத்தை உருவாக்கி இருக்கிறது. ஹூசோல் (Huichol) பழங்குடியினரின் நான்கு முதன்மை தெய்வங்கள் நீல மான், பெயோட்டி கள்ளி,மக்காச்சோளம் மற்றும் கழுகு ஆகியவை.
2005ல் டெக்சாஸில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்த இரு பெயோட்டி காளன்களின் உலர்ந்த துண்டுகளில் நடந்த ரேடியோ கார்பன் ஆய்வுகள் அவை பொது யுகத்துக்கு சுமார் 3660 வருடங்களுக்கு முற்பட்டவை என உறுதி செய்தன அத்தனை வருட பழமையான அவற்றிலிருந்து 2.5மிகி மெஸ்காலைன் ஆல்கலாய்டும் எடுக்கப்பட்டது ஏறக்குறைய அதே சமயத்தில் மெக்ஸிகோவின் பழங்கால கல்லறை குழிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெயோட்டிகள் பொ யு 810-107 வை சேர்ந்தவை என கணக்கிடப்பட்டன. எனவே அமெரிக்க பழங்குடியினர் 5500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெயோட்டி கள்ளிகளை பயனபடுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
19 ம் நூற்றாண்டை சேர்ந்தவரான ஜான் (john Raleigh Briggs ) என்பவரே பெயோட்டி கள்ளிகளை குறித்த அறிவியல் கவனத்தை முதன் முதலில் ஈர்த்தவர். லூயி (Louis Lewin) என்னும் அறிவியலாளர் 1888ல் Anhalonium lewinii என்னும் பெயோட்டி வகையை தாவரவியல் ரீதியாக விவரித்தார். இனப்பெருக்கவியலாளரான ஹேவ்லாக் (Havelock Ellis) சுயமாக பெயோட்டியை உண்டு அதன் விளைவுகளை 1898ல் அறிக்கையாக வெளியிட்டார். அவரைப்போலவே பெயோட்டியிலிருந்து மெஸ்கலைனை பிரித்தெடுத்த Arthur Heffter சுயமாக பெயோட்டி உண்டு அதன் விளைவுகளை 1897ல் கட்டுரயாக வெளியிட்டார்.
நார்வீஜியாவை சேர்ந்த இனவரைவியலாளரான கார்ல் (Carl Sofus Lumholtz) மெக்ஸிகோவின் இந்தியர்கள் பெயோட்டியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை முதன்முதலில் கட்டுரையாக எழுதி வெளியிட்டார். மேலும் அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது வேறு நச்சுப்பொருட்கள் கிடைக்காததால் எதிர்தரப்பினர் ஒரு படைப்பிரிவினரின் குடிநீர் தொட்டியில் ஊறவைத்த பெயோட்டியை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டதையும் அக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
1845ல் பிரெஞ்ச் தாவரவியலாளர் சார்லஸ் ஆண்டனியினால் ( Charles Antoine Lemaire) Echinocactus williamsii என பெயரிடப்பட இக்கள்ளிகள் 1894ல் Lophophora என்னும் பேரினத்தில் அமெரிக்க தாவரவியலாளர் ஜான் மெரில் என்பவரால் சேர்க்கப்பட்டது.( John Merle Coulter)
மெஸ்கலைன்
மெஸ்கலைன் முதன்மையாக புலன் கூர்மை கொள்ளுதல், ஒலிகளை காணுதல், கண்முன்னே இல்லாத நிறங்களை வடிவங்களை காணுதல் (synesthesia) என்னும் விளைவுகளை அளிக்கிறது.
20 கிராம் உலர்ந்த பெயோட்டி சுமார் 200லிருந்து 400 மி கி மெஸ்கலைன் கொண்டிருக்கும்.இதனுடன் hordenine என்னும் ஆல்கலாய்டும் உள்ளது.
பட்டியலிடப்பட்ட போதைப்பொருளாக பெயோட்டி இருப்பினும் 1994 அமலுக்கு வந்த American Indian Religious Freedom Act,ன் படி பழங்குடியினர் மதம்சார்ந்த சடங்குகளில் இதை பயன்படுத்த அரசு அனுமதித்திருக்கிறது
அருகிவரும் பெயோட்டி
2023 ஜனவரியில் அமெரிக்க பூர்வகுடி தேவாலயத்தின் (Native American Church of North America – Nacna) உறுப்பினர்கள் வாஷிங்டனுக்கு சென்று சட்ட வல்லுநர்களை சந்தித்து பெயோட்டியின் பாதுகாப்பை குறித்தும் அது தொடர்பான பல்லாயிரக்கணக்கான பழங்குடியினரின் நம்பிக்கையை குறித்தும் பேசினர். தொடர்ந்து பல அதிகார மட்டங்களிலிருக்கும் ஆளுமைகளை சந்தித்த அவர்கள் ஒவ்வொரு சந்திப்பிலும் பெயோட்டியின் வாழ்விட அழிப்பை காட்டும் புகைப்படங்களையும் அவர்களுடன் பகிர்ந்து உரையாடினார்கள்.
டெக்சாஸை சுற்றி இருக்கும் பல ஏக்கர் நிலப்பரப்பில் root plowing எனப்படும் பெயோட்டியை வேருடன் பிடுங்கி அறுவடை செய்யும் பல புகைப்படங்கள் அவை அழிவின் விளிம்பில் இருப்பதை உணர்த்தியது. தலைப்பகுதியை மட்டும் வெட்டி எடுக்கையில் வேர்க்கிழங்குகள் காய்ந்து போகாமல் மீண்டும் மீண்டும் அவற்றிலிருந்து கள்ளிகள் உருவாகும். ஆனால் வேருடன் பிடுங்கி எடுக்கும் இந்த முறை அமெரிக்க தொல்குடிகளின் 6000 ஆண்டு தொன்மையான மரபொன்றின் வேர்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது.
டெக்சாஸ்-மெக்சிகோ எல்லையின் இருபுறங்களிலும் இருக்கும் பெயோட்டி வயல்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிதறி வளர்ந்திருக்கும் பெயோட்டிகளை காணலாம். இப்பிரதேசத்தில் பெயோட்டிகளை அறுவடை செய்து விற்பனை செய்ய உரிமம் வைத்திருப்போர் peyoteros எனப்படுகின்றனர் இவர்கள் கள்ளியின் மேற்புறத்தை மட்டும் கவனமாக அறுவடை செய்து மீண்டும அடியிலிருந்து பெயோட்டிகள் வளர்வதை உறுதி செய்வார்கள்.
கடந்த 50 வருடங்களில் டெக்சாஸில் பெயோட்டி கள்ளிகளின் இயற்கையான வாழிடங்கள் சுருங்கிக்கொண்டே வருகின்றன
கள்ளிகளின் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவரான ஸ்டீவன் (Steven Van Heiden) நகரமயமாக்கல், கால்நடைகளின் மேய்ச்சல், காற்றாலைகள் ஆகியவற்றால் பெயோட்டிகள் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றன என்கிறார்
சட்டபூர்வமாகவும், அனுமதியின்றியும் இவை அதிக அளவில் முறையில்லாமல் அறுவடை செய்யபடுவதும் இவை அருகி வருவதற்கு மற்றுமோர் முக்கிய காரணம்
2013ல் பெயோட்டி கள்ளிகள் அழியும் அபாயத்திலிருப்பதாக அறிவித்த பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) , 2017 ல் இவற்றின் 3% முழுவதுமாக அழிந்துவிட்டது என்றும் அறிவித்திருக்கிறது
பெயோட்டியுடன் ஒரு மரபும் அழிந்து கொண்டிருப்பதுதான் மிகுந்த கவலைக்குரியதாகி விட்டிருக்கிறது. பெயோட்டிகளின் பயன்பாட்டிற்கும் அதன் வளர்ச்சிக்கும் எந்த தொடர்புமின்றி அவை வெகு வேகமாக அழிந்துகொண்டு வருகின்றன
The Indigenous Peyote Conservation Initiative (IPCI) என்னும் பழங்குடியின பெயோட்டி பாதுகாப்பு அமைப்பும் இக்கள்ளிகளின் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. டெக்ஸாசில் தற்போது பெயோட்டிகளை நர்சரிகளில் வளர்க்கும் திட்டம் துவங்கப்பட்டிருக்கிறது. மரங்களினடியில் வளர்க்கப்படும் சிறு பெயோட்டிகள் பின்னர் மீண்டும் எடுக்கப்பட்டு அவற்றின் இயற்கை வாழிடங்களில் வளரச்செய்யப்படுகின்றன
பழங்குடியினரிடம் இந்த பெயோட்டிகளை அளித்து அவர்கள் வீட்டிலும் அவற்றை வளர்க்கச் செய்யும் திட்டமும் செயல்படுத்தப்பட இருக்கிறது
இதன் பாதுகாப்பிற்கெனவே அரசு இதன் பயன்பாடுகளை கட்டுபடுத்த சட்டங்களை பிறப்பித்தது, எனினும் பழங்குடியினர் அத்தகைய சட்டங்கள் அவர்களின் கலாச்சார உரிமைகளுக்கு எதிரானது என எண்ணுவதால் பெயோட்டியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.
பெயோட்டியின் பிரபலம் அதிகரித்து அதன் தேவைகளும் அதிகரித்திருப்பதால் அவற்றை அழிவிலிருந்து காக்கவேண்டிய அவசியம் உண்டாகி இருக்கிறது
சட்டரீதியான பல கட்டுப்பாடுகள், கலாச்சார மாற்றங்கள், வாழிட அழிப்பு என பல அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் பெயோட்டி மிகச்சக்தி வாய்ந்த ஒரு கலாச்சார குறியீடாகவும், பல்லாயிரக்கணக்கான பழமையுள்ள பழங்குடியின மரபின் தொடர்ச்சியாகவும் திகழ்கிறது. நோய் சிகிச்சைகளில், குறிப்பாக ’உணர்வுரீதியான நலவாழ்வு’ எனப்படும் emotional well being என்பதில் இவற்றின் தேவை உலகெங்கிலும் அதிகரித்திருக்கிறது.
மெஸ்கலைனின் பயன்பாடு குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மெஸ்கலைன் பயன்பாடு சர்வதேச அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
பெயோட்டி கள்ளி அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகத்துக்கான அமைப்பான Convention on the International Trade in Endangered Species (CITES) மூலமும் கண்காணிக்கப்படுகிறது. இந்ததாவரம் தொடர்ந்து பூமியில் வாழ்வதற்கான அதன் தேவைகளுக்கும், இத்தாவரத்திற்கான் மனிதனின் தேவைகளுக்குமான இடைவெளியில் காத்துக்கொண்டிருக்கிறது இதன் பாதுகாப்பின் உத்திரவாதம் வருங்காலத்தில் பெயோட்டி கள்ளிகளுடன் இணைந்த கலாச்சாரங்களை பாதுகாப்பதையும், பெயோட்டி கள்ளிகளை பாதுகாப்பதும் மிக இன்றியமையாததாகி விட்டிருக்கிறது. தொடர்ச்சியான செயல்பாடுகள், சட்டபூர்வமான நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் பெயோட்டியை சுற்றியுள்ள சிக்கல்களை தீர்த்து அவற்றிற்கான இயற்கையான நிலப்பரப்பில் அவை வளர்வதை உறுதி செய்வதின் மூலம், தொடரும் தலைமுறைகளுக்கு அதன் கலாச்சார முக்கியத்துவதை கடத்தவும் முடியும்.
கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் 1492-ல் ஸ்பேனிஷ் அரசின் நிதி உதவியுடன் சாண்டா மரியா, நீனா, பிண்டோ என்னும் மூன்று கப்பல்களில் மசாலாப்பொருட்களின் வர்த்தகத்துக்காக ஆசியாவுக்கான கடற்பாதையை கண்டுபிடிக்கும் பயணத்தை துவங்கினார். அந்த பயணத்துக்கு தங்கம், அடிமை வர்த்தகம், புதிய தாவரங்கள், புதிய நிலப்பரப்புக்களை கண்டுபிடித்து ஸ்பேனிஷ் அரசுக்கு சொந்தமாக்குவது,கிறுஸ்துவமதத்தை பரப்புவது என பல நோக்கங்கள் இருந்தன.
ஆனால் அந்தப்பயணத்தில் அவர் திசையறிதல் மற்றும் பூமியின் சுற்றளவைக் கணக்கிடுவதில் பல பிழைகள் செய்தார். நிலப்பரப்புக்களைக் கண்டறிவதிலும் பெயரிடுவதிலும் பிழைகள் செய்தார். கரீபியன்தீவுகளை இந்தியா என்று நினைத்து அங்கிருந்த பழங்குடியினர்களை இந்தியர்கள் என குறிப்பிட்டு ஆவணப்படுதினார்.
அரபு மைல்களுக்கும் இத்தாலிய மைல்களுக்குமான வேறுபாட்டையும் அவர் பிழையாகவே புரிந்துகொண்டார் . பசிஃபிக்பெருங்கடல் என்ற ஒன்று இருப்பதையும், அமெரிக்காவையும் அவர் அறியவில்லை கள்ளிக்கற்றாழையான அகாவேவை சோற்றுக்கற்றாழையான ஆலோ என்று ஆவணப்படுத்தினார். மிளகாய்களை குருமிளகென்று கருதினார்.சாதாரண மரப்பட்டையை உரித்து லவங்கப்பட்டை என ஸ்பானிஷ் அரசி இஸபெல்லாவுக்கு அனுப்பினார். இப்படி பல பிழைகள், இனப்படுகொலைகள் கொலம்பஸினால் நிகழ்ந்தன. அவரது பிழையான தாவரக்கண்டுபிடிப்புக்களை பிரதானமாகக் குறிப்பிட்டு அந்தப்பயணத்தை ஒரு தொடராக எழுதுகிறேன். நாளை முதல் அத்தியாயம் வெளியாகிறது.
விலக்கப்பட்ட கனியைப் புசித்ததற்காக ஏதேன் தோட்டத்திலிருந்து பூமிக்குச் செல்லும்படி தண்டிக்கப்பட்டார்கள் ஆதாமும் ஏவாளும். ஏதேன் தோட்டத்தின் பசுமையையும் அழகையும் விட்டுப் பிரிய மனமில்லாத ஏவாள் தன் இடுப்பில் நான்கு இலைகள் கொண்ட லக்கி குளோவர் செடியொன்றை மறைத்துக்கொண்டு பூமிக்கு வந்தாள் என்று ஒரு கிறிஸ்தவ தொன்மம் இருக்கிறது.
இதனாலேயே சாதாரணமாக மூவிலை கொண்ட லக்கி குளோவர் செடியில் அரிதாகத் தென்படும் நான்கு இலைகள் கிடைத்தால், சொர்க்கத்தின் ஒரு துண்டையே கையில் வைத்திருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை உலகெங்கும் நிலவுகிறது.
இளைய குளோவர் என்று பொருள் படும் Shamrock என்னும் சொல் பல வகைச் செடிகளின் மூவிலைகளுக்கும் பொருந்தும் என்றாலும் அவற்றின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது இந்த வெள்ளைக்குளோவரான ட்ரைஃபோலியம் தான்.
ஐந்தாம் நூற்றாண்டில் புனித பேட்ரிக், அயர்லாந்து பாகன் பழங்குடியினருக்கு இந்த மூவிலைக் குளோவரைக் காட்டித்தான் அதி புனிதத்திரித்துவத்தை விளக்குவார். தனித்தனியே அமைந்திருக்கும் அதன் மூன்று இலைப் பாகங்களும் பிதா, சுதன், பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது, மூன்றும் ஒற்றைக்காம்பில் இருப்பது இறைவனின் அந்த மூன்று நிலைகளும் ஒன்றே என்பதை காட்டுகிறது எனவே மூவிலைக் குளோவரை வைத்திருப்பது மிக அதிர்ஷ்டம் என்று பேட்ரிக் சொல்லிச்சொல்லி பிரசிங்கித்தார், அப்போதிலிருந்துஇந்த குளோவர் கிருஸ்தவத்தில் மிகச்சிறப்பான இடம் பெற்றது.
பிறகு வந்த காலங்களில் ஏதேன் தோட்டத்து நாலிலைக் குளோவரை வைத்திருப்பது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்லாது அது பல அமானுஷ்ய சக்திகளை கொடுக்கும், சாதாரணமாகப் பார்க்க முடியாத தேவதைகளை இதை வைத்திருப்பவர்கள் பார்க்க முடியும், செல்லும் பாதையில் சூனியக்காரிகள் உருவாக்கும் மாயத்தோற்றங்களைக் கண்டறிந்து அவற்றை உடைத்து முன்னேறிச் செல்லமுடியும் என்னும் நம்பிக்கைகள் வெகுவாகப் புழங்கின. மேலும் அத்தனை ஆயிரம் மூவிலைகளுக்கிடையில் அரிதாகத் தென்படும் நாலிலை குளோவரைக் காண்பது கடவுளின் மீதான விசுவாசம் எத்தனை இருக்கிறதோ அதைப்பொருத்து என்னும் நம்பிக்கையும் நிலவியது.
உலகமெங்கிலும் இந்த நான்கு இலைகளுக்கு அன்பு , கடவுள் மீதான விசுவாசம், அதிர்ஷ்டம், நம்பிக்கை ஆகியன குறியீடாகச் சொல்லப்படுகிறது.
நாலிலைக் குளோவரின் அதிர்ஷ்டத்தைக் குறித்து மற்றுமொரு கட்டுக்கதையும் வெகுவாக புழக்கத்தில் இருந்தது. ஒரு மாபெரும் புல்வெளியில் நடைபெற்ற கடும் போரின் நடுவில் நெப்போலியன் கீழே இருந்த ஒரு நாலிலைக் குளோவரைப் பார்த்து அதை எடுக்கக் குனிந்த மறு நொடி அவரை நோக்கி வந்த ஒரு துப்பாக்கித்தோட்டா அவரது தலையைத் தாண்டிச்சென்றது அவர் மட்டும் குளோவரை எடுக்க குனியாமல் இருந்திருந்தால் நிச்சயம் அந்தத் தோட்டா அவர் உயிரை எடுத்திருக்கும், நாலிலைக் குளோவரின் அதிர்ஷ்டம் தான் நெப்போலியனைக் காப்பாற்றியது என்னும் இந்தக் கதை மிக வலுவாக வேர் பிடித்திருந்தது.
ஐரோப்பாவையும் மத்திய ஆசியாவையும் பூர்வீகமாகக் கொண்டது இந்த மூவிலைக் குளோவர். உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் இதன் பயன்களைத் தெரிந்துகொண்ட ஐரோப்பியக் குடியேறிகள் இதன் விதைகளை வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா,ஜப்பான் மற்றும் நியூசிலாந்துக்கு கொண்டு வந்து சாகுபடி செய்தார்கள். மேலும் உலகின் பிற பகுதிகளுக்கு ஐரோப்பியர்களின் கால்நடைகளின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த குளோவர் விதைகள் அறிமுகமாகின.
ஐரோப்பிய குடியேற்றம் நடந்த இடங்களிலெல்லாம் குளோவர்களும் வளர்ந்ததால் இதை, காலடி பட்ட இடமெல்லாம் வளரும் தாவரம் என்னும் பொருளில் White Man’s Foot: என்றழைத்தார்கள்.
இந்தத் தாவரத்தின் அறிவியல் பெயரில் உள்ள Trifolium என்றால் மூவிலைகள். repens என்றால் படர்ந்து வளருகிற என்று பொருள். இந்தத் தாவரத்துக்கு Dutch Clover, Ladino Clover என்றும் புழங்கு பெயர்கள் உண்டு.
உலகின் மிகப் பயனுள்ள களைச்செடியாக இந்த குளோவர் கருதப்படுகிறது. பயறு வகைக் குடும்பமான ஃபேபேசியைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வேர்முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை சேர்த்துவைக்கும் ரைசோபியம் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. எனவே இதன் வேர்களில் மிக அதிக அளவு நைட்ரஜன் இருக்கும். இந்தத் தாவரம் மடிந்தபின்னர் நிலத்தில் அந்த நைட்ரஜன் சத்து சேர்ந்து நிலத்தை வளமாக்குகிறது. இதனால் தான் ட்ரைஃபோலியம் வளர்ந்திருக்கும் மேய்ச்சல் நிலங்கள் வழக்கத்தைக் காட்டிலும் பசுமையாக செழிப்பாக இருக்கின்றன.
ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 545 கிலோ குறைந்தபட்சமாக 170 கிலோ நைட்ரஜனைக் இந்தக் குளோவர் தாவரம் சேமிக்கிறது. வெள்ளைக்குளோவர் பெரும்பாலும் Lolium perenne போன்ற தீவனப்புற்களுடன் கலந்தே வளர்க்கப்படுகிறது. இதனால் மிக அதிகமாக குளோவரை உண்ணும் கால்நடைகளுக்கு வரும் வயிற்று உபாதைகள் தீவனப்புல்லைத் தின்பதால் குணமாகிறது.
முழுத்தாவரமுமே உண்ணக்கூடியது குறிப்பாக மலர்த்தலைகள் எனப்படும் இதன் அழகிய மஞ்சரிகள் மிகுந்த சத்துக்கள் கொண்டது. இதன் இலைகளை அப்படியே சாலட்களில் சேர்த்து பச்சையாகவே சாப்பிடலாம் என்றாலும் 5-லிருந்து 10 நிமிடம் வேகவைத்து சாப்பிடுகையில் ஜீரணமாவது எளிதாக இருக்கும். லேசான இனிப்புச்சுவை கொண்ட மலர்த்தலைகளில் தேநீர் தயாரித்து அருந்தலாம், அவற்றை உலர்த்தி வறுத்துப்பொடித்து பிற உணவுகளுடனும் சேர்த்துக்கொள்ளலாம்.
வெப்பம் அதிகரித்திருக்கும் நாட்களில் சில இயற்கையாக வளர்ந்திருக்கும் காட்டுக் குளோவர் செடிகள் பூச்சிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக சயனைடுக்கு இணையான நச்சுப் பொருட்களை (linamarin & lotaustralin) உருவாக்கி இருக்கும் எனவே அச்சமயங்களில் இதை குறைவாகச் சாப்பிடலாம். மேய்ச்சல் நிலமெங்கும் பரவி வளர்ந்து, ஏராளமாக மலர்ந்திருக்கும் இவற்றின் மலரமுதை உண்ணும் தேனீக்கள் சேர்த்துவைக்கும் மிகச்சுவையான சத்துக்கள் நிறைந்த குளோவர் தேன் கடைகளில் கிடைக்கிறது..
1950 வரைக்கும் உலகெங்கிலும் மேய்ச்சல் நிலங்களுக்கு புல் விதைகள் வாங்குவோர் விரும்பிக் கேட்டதால் உடன் குளோவர் விதைகளும் கலக்கப்பட்டே விற்பனை செய்யப்பட்டது. குளோவர் வளரும் புல்வெளி மிகப்பசுமையாக, மிக மிகச் செழிப்பாக இருக்குமென்பதால் இது பெரிதும் விரும்பப்பட்டது.
அப்போது புற்களே இல்லாமல் முழுக்க முழுக்க குளோவர்களே நிறைந்திருந்த மேய்ச்சல் நிலங்களும் ஏராளமாக இருந்தன. ஆனால் 1950-க்குப்பிறகு உபயோகத்துக்கு வந்த 2,4D போன்ற அகன்ற இலைத்தாவரங்களுக்கான பிரத்யேகக் களைக்கொல்லிகள் மேய்ச்சல் நிலங்களில் இருந்த குளோவர்களையும் டேண்டெலியன்களையும் அடியோடு அழித்து ஒழித்தன.
மிகப் பயனுள்ள குளோவர்கள் அழிந்துகொண்டிருப்பதை மக்கள் உணராவண்னம் களைக்கொல்லி நிறுவனங்கள் குளோவரென்னும் மோசமான களையை அழிக்க களைக்கொல்லிகளை வாங்கச்சொல்லி மக்களை ஊக்குவித்தன. மக்களும் அதை நம்பினார்கள். மிகப்பெரிய அளவில் குளோவர்கள் அழிந்தபின்னரே “clover lawn movement” என்னும் மேய்ச்சல் புல்வெளிகளில் குளோவர்களை மீட்டெடுக்கும் இயக்கம் தொடங்கி அவை மெல்ல மெல்ல மீட்டெடுக்கப்பட்டன.
ட்ரைஃபோலியம் சிற்றினங்களில் இலைக்காம்பின் நீளத்தைப்பொறுத்து இவை சிறிய, நடுத்தரமான, பெரிய என்று மூன்று வகைகள் இருக்கின்றன இது ஒரு பல்லாண்டுத் தரைபடர் தாவரம். தண்டுக்கிழங்குகள் கணுக்கள் மண்ணில் படும் இடமெல்லாம் வேர் பிடித்து வளர்ந்து பரவிக் கொண்டே இருக்கும். மலரத்தலைகள் வெண்ணிறத்தில் சிறிது இளஞ்சிவப்பும் பாலாடை நிறமும் கலந்தாற் போலிருக்கும்.
வெள்ளை குளோவரின் ஒவ்வொரு இலைஇதழின் நடுவிலும் வெளிறிய வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் ‘V’ போன்ற ஒரு கோடு இருக்கும். இதைத் தாவரவியல் “Watermark” என்று குறிப்பிடுகிறது. மற்ற வகைக்குளோவர்களின் முட்டை வடிவ மூவிலைகளில் சில சமயம் ஆங்கில V வடிவ வெண்ணிறக் கோடுகளும், தீற்றல்களும் இருக்கும்.பல சிற்றினங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் வெண்ணிறத் தீற்றல் உருவாகி பின்னர் மறைவதும் உண்டு.
சிக்கலான வலைப்பின்னல் போல அடர்ந்து வளர்ந்து நிலத்தை மூடியிருக்கும் குளோவர்களிலிருந்து அடர்த்தியாக உருவாகும் மலர்த்தலைகளில் 20-லிருந்து 40 சிறுமலர்கள் அமைந்திருக்கும் மலர்கள் மெல்லிய தேன் வாசனை கொண்டிருக்கும். மகரந்தச்சேர்க்கைக்குப் பிறகு காம்பற்ற, இதய வடிவிலிருக்கும் மஞ்சள் அல்லது பழுப்பு நிற சிறு கனிகளும் அவற்றினுள் நுண் விதைகளும்இருக்கும்.
குளோவரில் கீழ்க்கண்ட வகைகள் உலகமெங்கும் இருக்கின்றன.
Trifolium repens var. nevadense (Boiss.) C.Vicioso
Trifolium repens var. ochranthum K.Maly
Trifolium repens var. orbelicum (Velen.) Fritsch
Trifolium repens var. orphanideum (Boiss.) Boiss.
Trifolium repens var. pipolina
Trifolium repens subsp. prostratum Nyman
Trifolium pratense subsp. pratense
Trifolium pratense, என்னும் சிற்றினம் Red Clover என்று சொல்லப்பட்டாலும் இதன் மலர்த்தலை இளஞ்சிவப்பில்தான் இருக்கும்.
பம்பிள் தேனீக்கள் இவற்றில் மகரந்த சேர்க்கை செய்கின்றன.உலகெங்கிலுமே இவை தீவனப்பயிராக மேய்ச்சல் நிலங்களில் பயிர்செய்யப்படுகின்றன. குளோவர் இது அயர்லாந்து நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மிக முக்கியமான சின்னமாகவும் இருக்கிறது.
இதன் நைட்ரஜனை சேமிக்கும் இயல்பால் தானியப்பயிர்கள் புல்வெளிகள் மற்றும் காய்கறி பயிரிடும் நிலங்களில் துணைப் பயிராகவும் குளோவர் பயிர் செய்யப்படுகிறது. இவை அடர்ந்து பரவி வளருவதாலும் மிக அழகிய மலர்த்தலைகள் நெருக்கமாக உருவாவதாலும் வேறு களைச்செடிகள் வளர்வது கட்டுப்படுத்தப்படுகிறது எனவே பெரும் பசும்புல்வெளிகளில் குளோவரையும் சேர்த்தே வளர்க்கிறார்கள். ஒரு சில பழங்குடியினர் இதன் மலர்த்தலைகளை உலர்த்தி அகலமான இலைகளுக்குள் பொதிந்து புகையிலையைப் போல புகைக்கிறார்கள் இந்தப்புகை போதை தராது எனினும் சிறிது மன அமைதி தருவதாகச் சொல்லபடுகிறது.
இந்தியாவில் இந்த தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் குடற்புழு நீக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் குளோவர்கள் பொதுவாக மூன்று அரிதாக நான்கு மேலுமரிதாக திடீர் மாற்றங்கள் மற்றும் சூழல் மாற்றங்களால் இலைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கக்கூடும் ஜப்பானில் இந்த வெள்ளைக் குளோவர்களில் அதிகம் திடீர் மாற்றம் எனப்படும் மியூட்டேஷன் நடக்கிறது.
ஜப்பானைச்சேர்ந்த ஷிகியோ ஒபாரா (Shigeo Obara) என்னும் தாவரவியலாளர் குளோவரை பயிர்பெருக்கம் செய்து ஏராளமான ஆய்வுகளையும் அதில் செய்தவர். இவர் தாவர மரபியலையும் தாவரவியலையும் இணைத்து பல ஆய்வுகள் செய்துகுளோவரில் பல சிறிய இலைகளை உருவாக்கினார். 60 ஆண்டுகளாக குளோவரில் ஆரய்ச்சிசெய்யும் இவர், மலர்த்தலைகளில் கைகளால் மகரந்தச்சேர்க்கை செய்து இதன் இலைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து கின்னஸ் சாதனையை இவரே மூன்று முறைச் செய்தார்.
2002-ல் ஒரு இலைக்காம்பில் 18 சிற்றிலைகள்
2008-ல் அந்த சாதனையை அவரே முறியடித்து ஒரு இலைக்காம்பில் 21 சிற்றிலைகள்.
2009- மீண்டும் முந்தைய சாதனையை அவரே முறியடித்து ஒரு காம்பில் 56 சிற்றிலைகள் கொண்ட குளோவரை உருவாக்கி சாதனை படைத்தார்.
இவாரது மறைவுக்குப்பின் 15 ஆண்டுகள் இந்தச் சாதனை மூறியடிக்கப்படாமல் இருந்தது.
2024-ல் தான் ஜப்பானின் யோஷி கரு என்பவர் ஒரே காம்பில் 63 சிற்றிலைகளை உருவாக்கி அந்த சாதனையை முறியைடித்தார். குளோவர் பயிர்ப்பெருக்கம் உலகெங்கிலும் பலருக்கு பிடித்தமான ஒரு கலையாக இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் நாலிலைக் குளோவரை ஒரு மணிநேரத்தில் சேகரிக்கும் சாதனைகளும் உலகெங்கிலும் நடக்கிறது.
அமெரிக்கரான Gabriella Gerhardt இந்த கின்னஸ் சாதனையை 5முறை செய்திருக்கிறார். முழு நிலவொளியில் நாலிலைக் குளோவரை சேகரிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மணவாழ்வு அமையும் என்று ஒரு நம்பிக்கை இருந்து பலர் இரவில் அதைத்தெடிச்சென்றிருக்கிறார்கள். பல உலகப்புகழ்பெற்ற நிறுவனங்களிலும் இந்த நாலிலை குளோவர் வடிவம் லோகோவாக இருக்கிறது.
நாலிலைக்குளோவரைக் கண்டால் கொஞ்ச நேரத்திலேயே நல்லசெய்தி வரும் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது. முன்பு பத்தாயிரம் மூவிலைகளில் ஒன்று நாலிலையாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் சொன்னது, இப்போது அது குறைந்து ஐந்தாயிரம் மூவிலைகளில் ஒன்று நாலிலையாக இருக்கும் எனப்படுகிறது.
பழங்கால மக்கள் குளோவர் இலைகளை வைத்து வானிலையைக் கணித்தனர். மழை வரப்போகிறது என்றால், இந்த இலைகள் நேராக நிமிர்ந்து நிற்கும் என்று நம்பப்பட்டது.குளோவரின் மலர்களில் மோதிரம் அணிந்துகொள்வது மலர்த்தலைகளைக் கோர்த்து மலர்க்கிரீடம் அணிந்துகொள்வது ரோஜாக்களைப் போல் இவற்றை சூடிக்கொள்வது என இதன் கலாச்சார அந்தஸ்தும் குறிப்பிடத்தக்கது.
சீட்டுவிளையாட்டின் கார்டுகளில், விவசாயிகளை, பயிர்ச்சாகுபடி செய்யப்படும் நிலத்தை குறிக்கும் க்ளப் என்றழைக்கப்படும் கார்டில் இருக்கும் சித்திரம் சிறு இலைக்காம்புடனிருக்கும் மூவிலைக் குளோவர்தான். (சீட்டுவிளையாட்டின் ஒவ்வொரு வகை கார்டுகளுக்கும் அவை குறிப்பிடுவதென்ன என்பதற்கு பிரத்யேகமான வரலாறு இருக்கிறது)
புனித பேட்ரிக்கின் நாளான மார்ச் 17 அன்று உலகெங்கிலுமே வெள்ளைக்குளோவரின் மலர்களையும் இலைகளையும் சூடிக்கொள்கிறார்கள். தமிழில் அருகு போல்வேரோடி ஆல்போல் தழைத்து என வாழ்த்துவது போல் ஐரோப்பாவெங்கும் நீண்ட ஆயுளுக்கும் நிறைவாழ்வுக்குமான வாழ்த்தாக “to be in clover” என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது.
பல தமிழ்த்திரைப்படங்களில் ஐரோப்பா மற்றும் இந்திய மலைவாசஸ்தலங்களில் எடுக்கபட்ட பாடல் காட்சிகளில் லக்கி குளோவரின் அழகிய மலர்ப்படுக்கைகள் தெரியும். உதாரணமாக ’’புல்வெளி புல்வெளி தன்னில்’’ பாடலைச் சொல்லலாம்,
தேவன் தேடுங்கள் கிடைக்கும் என்றார் எனவே இனி மேய்ச்சல் நிலங்களில் குளோவர்களைக் கண்டால் நாலிலைகளைத் தேடுங்கள் சொர்க்கத்தின் இலையொன்று கிடைக்கலாம்.
நிகோலாய் வாவிலோவ் மேற்கு உக்ரைனின் செர்னிவ்சி நகரின் கோதுமை வயல்களிலிருந்து முற்றிய தானியங்களை நண்பர்களுடன் சேகரித்துக்கொண்டிருந்தார். அது 1940- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி.
கருப்பு ஓக் மரக்கட்டைகளை அந்நகரின் கருப்புக்களிமண்ணில் பிசைந்து நிறுத்தி உருவாக்கிய கோட்டைகள் நிறைந்திருந்ததால் கருப்பு நகரம் என்றழைக்கப்பட்ட செர்னிவ்சி நகரம் அப்போதுதான் ரஷ்ய நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டிருந்தது.
நிகோலாய் சோவியத் ரஷ்யாவின் புகழ்பெற்ற வேளாண் மற்றும் தாவர மரபியல் விஞ்ஞானி. அவருடன் புகழ்பெற்ற ரஷ்யத் தாவரவியலாளர், வகைப்பாட்டியலாளர் மற்றும் உருளைக்கிழங்குப்பயிர் வல்லுனரான செர்கே (sergéi yuzepchuk), சாகுபடி செய்யப்படும் உணவுப்பயிர்களில் ஏராளமான ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்த ரஷ்யத் தாவரவியலாளர் பெக்த்ரிவ் (F.Kh. Bakhteev) மற்றும் பயிர்ப்பெருக்க விஞ்ஞானியான கமிரெஸ் (A.Y.Kameraz) ஆகியோரும் தானியவிதைச் சேகரிப்பிலும் அங்கே விளைந்திருந்த உணவுப்பயிர்களை ஆவணப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
பின்மதிய நேரத்தில் அவர்கள் அனைவரும் தானிய வயலின் நடுவில் இருக்கையில் தூரத்தில் ரஷ்ய ரகசியக் காவல்துறையினரின் “Black Maria” என்னும் பெரிய காவல் ரோந்து வண்டி வருவதைப் பார்த்தார்கள். அந்த வண்டி ஏன் அங்கே வருகிறது என்று அவர்கள் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கையிலேயே நேராக கோதுமைப்பயிர்களை நசுக்கி அழித்தபடி அந்த வண்டி அவர்களருகிலேயே வந்து நின்றது.
ரஷ்யா முழுக்கவே NKVD எனப்பட்ட ரஷ்ய ரகசிய காவல்துறையினரின் அடக்குமுறைக்குட்பட்டிருந்த ஸ்டாலின் ஆட்சிக்காலமது. அந்த “Black Maria” வண்டி எந்த வீட்டின் முன்பு நின்றாலும் அந்த வீட்டினர் காணாமல் போவார்கள் அல்லது மற்றவர்கள் கண்முன்பாகவே சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்பதை அனைவருமே அறிந்திருந்தார்கள்.
வண்டியிலிருந்து சீருடை அணிந்திருக்காத நான்கு காவலர்கள் இறங்கி நிகோலாயின் அருகில் வந்து மிக அவசரமாக விவசாய ஆராய்ச்சி குறித்த சந்திப்பொன்றிற்காக அவர் மாஸ்கோவிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார் எனவே உடனே புறப்பட வேண்டும் என்றார்கள்.
அவர்களிடம் ரஷ்ய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே மிகக் கொடூரமான ராணுவ விசாரணைகளுக்குப் பெயர் பெற்றிருந்த NKVD யின் துணைத்தலைவரான லெவ் ஷ்வார்ட்ஸ்மன் (Lev Shvartzman) கொடுத்தனுப்பிய எண்-529 எனக் குறிப்பிடப்பட்ட கைது ஆணை இருந்ததை அறியாத நிகோலாய், திகைத்து நின்றிருந்த நண்பர்களிடம் விதைகள் சேகரித்து வைத்திருந்த பைகளைக் கொடுத்துவிட்டு சிறிது நாட்களில் திரும்பி வருவதாகக்கூறி திரும்பவே திரும்பாத பயணத்துக்காகக் காரில் ஏறிச்சென்றார்.
உக்ரைனிலிருந்து ஏறக்குறைய 1200 கி மீ தொலைவை காரிலேயே கடந்த வாவிலோவ் நேராக மாஸ்கோவின் லுபையாங்கா எனப்படும் (Lubyanka) அரசியல் கைதிகளுக்கான கொடுஞ்சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது பெல்ட், ஷூ லேஸ் உள்பட அனைத்தும் உருவப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு புகைப்படமெடுத்து கைதி உடை அளிக்கப்பட்டது.
அரசுக்கெதிராக சதித்திட்டம் தீட்டியதற்காக அவரை கைது செய்திருப்பதாக அவரிடம் அப்போது தெரிவித்தார்கள். அங்கிருந்து ரஷ்யாவின் மிகக்கொடூரமான தண்டனைகள் அளிக்கப்படும், 1771-லிருந்தே வன்முறைகளுக்குப்பெயர் போன சிறையான புடிர்க்கா (Butyrka) சிறைக்கு நிகோலாய் கொண்டு செல்லப்பட்டு ஷ்வார்ட்ஸ்மேனால் 11 மாதங்கள் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். சுமார் 400 கடுமையான விசாரணைகள் அவரிடம் நடத்தப்பட்டன. ஒவ்வொரு விசாரணையும் இரவில் தொடங்கி மறுநாள் பகல் வரை 13 மணிநேரம் நீண்டது விசாரிக்கும் காவலர்கள் இடைவெளியின்றி முறை வைத்துக்கொண்டு ஓய்வின்றி கொடுமை செய்து விசாரிக்கும் மாரத்தான் முறை அங்கு வழக்கமாகப் பின்பற்றப்பட்டது.
இரவு முழுக்க உறக்கமில்லாமல் சித்திரவதை அனுபவித்து பகலில் 25 பேர் மட்டுமே இருக்க முடியும் இடத்தில் 100 கைதிகள் இருக்கும் அறைக்கு கொண்டு வரப்படும் அவர் எந்தக்காரணம் கொண்டும் உறங்காமலிருக்க மிகப்பிரகாசமான வெளிச்சம் அறையில் எப்போதும் பாய்ச்சப்பட்டது. அப்படியும் கண் அயர்ந்தால் சிறைக்கதவின் கம்பிகளில் கடும் ஓசை எழுப்பப்படும்.
மிக மிகக் குறைவான உணவு, கடும் சித்திரவதை, உறக்கமின்மை மற்றும் மன உளைச்சலை உண்டாக்கி செய்யாதவற்றை செய்ததாக ஒப்புக்கொள்ளச் செய்யப்படும் அந்த தண்டனைகளில் பெரும்பாலானோர் தாங்கள் சதித்திட்டம் தீட்டியதாக ஒத்துக்கொள்வார்கள். ஆனல் நிகோலாய் அப்படி ஒத்துக்கொள்ளவில்லை எனவே மேலும் மேலும் சித்திரவதைக்கு உள்ளானார்.
பிரிடிஷ் உளவாளியாக இருந்தாகவும் சோவியத் ஒன்றியத்தின் வேளாண்மையை அழிக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் ஒத்துக்கொள்வதாக அவரை பலவந்தப்படுத்திக் கையெழுத்து வாங்கப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதாகச்சொல்லி புடிர்க்கா கட்டிடத்தின் உள்ளேயே இருந்த ஒரு சிறிய அறையில் ஜூலை 9, 1941 அன்று அவரது குற்றங்கள் பட்டியலிடப்பட்டு நிகோலாய்க்கு சுட்டுக்கொல்லப்பட்டு உயிரிழக்க வேண்டும் என மரணதண்டனை விதிக்கப்பட்டது.
நிகோலாய் மரணதண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலவறைக்கு மாற்றப்பட்டார். அங்கே கற்பாறைகளாலான சுவர்களில் ஈரம் கசிந்து, கடும் குளிர் நிலவும். படுக்கவும் போர்த்திக்கொள்ளவும் எந்த வசதியும் இருக்காது. இரவில் ஒவ்வொரு கைதியாக சுட்டுக் கொல்லப்படுவதற்காக அழைத்துச்செல்லப்படுகையில் நிகோலாயும் அடுத்து தன்னையும் அழைக்கப் போகிறார்கள் என்று ஒவ்வொரு இரவிலும் காத்திருந்தார்.
1941, அக்டோபரில் நாஜி ஜெர்மன் படைகள் மாஸ்கோவை நெருங்கியபோது சோவியத் ஒன்றிய அரசு திகிலடைந்து நிகோலாய் உள்ளிட்ட மிக முக்கியமான அரசியல் குற்றவாளிகளை அங்கிருந்து வால்கா நதிக்கு கிழக்கில் வெகுதூரத்தில் இருந்த சரடோவ் சிறைக்கு மாற்றியது. சரடோவ் சிறையில் நிகோலாய் 1-ம் எண் அறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஜூன் 1942 வரை மரணதண்டனைக் கைதிகளுக்கான அறையில் இருந்தார்.
அங்கு 18 மாதங்கள் அவருக்கு மிகக்கொடூரமான தண்டனைகள் அளிக்கப்பட்டன. மிகுந்த நெரிசலான அறையில் ஒருக்களித்துப் படுக்க மட்டும் இடம் இருந்த, எப்போதும் பிரகாசமான வெளிச்சம் நிறைந்திருந்த அறையில் இருந்தார் நிகோலாய். அறைவாசிகள் அனைவருக்கும் மலம் கழிக்க சில வாளிகளே இருந்ததால் ஜன்னல்கள் இல்லாத அறையில் கடும் துர்நாற்றமும், டைபஸ் தொற்றும் நிமோனியாவும் பரவியது.
அனைவருக்குமே மிகமிகக்குறைவான உணவு கொடுக்கப்பட்டது சரடொவ் சிறையின் கொலை ஆயுதம் பட்டினிதான். எனவே கைதிகள் பலநாட்கள் பட்டினியில் இருந்தார்கள். நிகோலாய்க்கு உறைந்த முட்டைக்கோஸ் சீவல்கள் சில, வேகவைக்காத உலர் மாவு மற்றும் நீர்த்துப்போன, அழுகிய தக்காளியில் தயாரிக்கபட்ட சூப் ஆகியவை எப்போதாவது கொடுக்கப்பட்டது
அந்த அறையிலும் தனது மூளை மரத்துப்போகாமல் இருக்க சககைதிகளுக்கு சுவற்றில் கைக்கு கிடைத்தவற்றைக் கொண்டு எழுதி வேளாண்மை மற்றும் தாவரவியலை நிகோலாய் கற்றுக்கொடுத்தார்.
பின்னர் வெளியில் இருந்து அவரது தம்பியினால் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தத்தினால் நிகோலாயின் மரணதண்டனை 20 வருட கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டு, உடலும் மனமும் மிகத்தளர்ந்து, ஸ்கர்வி உள்ளிட்ட பல நோய்களுடன் அவதிப்பட்டுக்கொண்டிருந்த எலும்புகூடாகியிருந்த நிகோலாய் லேபர் கேம்ப் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இது எதுவுமே அறியாத லண்டன் ராயல் சொஸைட்டி நிகோலாய்க்கு அயல்நாட்டு உறுப்பினர் என்னும் மிக உயரிய விருதை அளித்துபோதுதான் வெளி உலகிற்கு அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பது தெரிய வந்தது. நிகோலாயின் கைதை எதிர்த்து,உலகெங்கிலும் இருந்து பல விஞ்ஞானிகள் சோவியத் ஒன்றிய அரசுக்கு கண்டனக்கடிதங்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்
என்ன செய்தார் நிகோலாய் அத்தனை சித்திரவதைகளுக்கும் மரணதண்டனை அளிக்கப்படுவதற்கும்?
நிகோலாய் ரஷ்ய மக்களின் பட்டினியைப்போக்கவும் பசியில்லா உலகமொன்றை உருவாக்கவும் முனைந்தார். அரும்பாடுபட்டு ஐந்து கண்டங்களுக்கும் பயணம் செய்து உணவுப்பயிர்களின் விதைகளைச் சேமித்து விதை வங்கியை உருவாக்கினார். பஞ்சத்தையும் பசியையும் போக்க உழைத்த தாவரவியலாளரான அவருக்குத்தான் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
சோவியத் யூனியனில் நிகோலாய் தாவரமரபியலாளராக பயிர்ப் பெருக்கவியலாளராக ஏராளமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டார். தாவரவியல் வரலாற்றில் இவரே பலவகையான உணவுப்பயிர்களைப் பாதுகாப்பதிலும் விதை சேகரிப்பிலும் பெரும் பங்காற்றியவர். தாவரவியல் துறை என்பதின் பொருளை உணவுத்தாவரங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் விரிவாக்கியவரும் இவரே. தீராப்பயணியான இவர் ஐந்து கண்டங்களுக்கும் பயணித்து 64 நாடுகளில் உணவுத்தாவரங்களை ஆவணப்படுத்தி விதைகளைச் சேகரித்து விவசாயிகளை நேரில் சந்தித்து உரையாடினார். உலகின் மிக முக்கியமான மரபணு வங்கியையும் (Gene Bank) இவரே முதன் முதலில் உருவாக்கினார்.
உணவுத் தாவரங்களில் தான் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் நிகோலாய் வாவிலோவ் முதன் முதலாக ஒரு குறிப்பிட பயிர் எங்கே தோன்றியது அலல்து எங்கே சாகுபடி செய்யப்பட்டது என்று எட்டு உலகளாவிய பயிர் உற்பத்தி மையங்களை வகைப்படுத்தினார்.(Centers of Crop Origin).
அவை:
தெற்கு ஆசிய மையம்: இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு நெல், கரும்பு, மாம்பழம், எள், கத்தரிக்காய் மற்றும் எலுமிச்சை வகைகள் தோன்றின.
சீன மையம்: இது மிகப்பெரிய மற்றும் பழமையான மையமாகும். சோயா பீன்ஸ், முள்ளங்கி, பேரிக்காய் மற்றும் பிளம்ஸ் போன்றவை இங்கிருந்து பரவின.
மத்திய ஆசிய மையம்: வடமேற்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகள் இதில் அடங்கும். கோதுமை, வெங்காயம், பூண்டு, பட்டாணி மற்றும் பாதாம் ஆகியவற்றின் பிறப்பிடம் இது.
அண்மை கிழக்கு மையம்: ஆசியா மைனர் மற்றும் ஈரான் பகுதிகள். பார்லி, ஓட்ஸ், திராட்சை, ஆப்பிள் மற்றும் பல பருப்பு வகைகள் இங்கு உருவாயின.
மத்திய தரைக்கடல் மையம்: ஐரோப்பாவின் தெற்குப் பகுதி. கடுகு, பீட்ரூட், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ் மற்றும் ஆலிவ் போன்றவை இங்கிருந்து வந்தவை.
அபிசீனிய மையம்: தற்போதைய எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா பகுதிகள். காபி, சோளம், பார்லி மற்றும் ஆமணக்கு ஆகியவற்றின் தோற்ற மையமாகும்.
மத்திய அமெரிக்க மையம்: மெக்ஸிகோ மற்றும் கரீபியன் தீவுகள். மக்காச்சோளம், பருத்தி, கோகோ மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவை இங்கு முதன்முதலில் பயிரிடப்பட்டன.
தென் அமெரிக்க மையம்: பெரு மற்றும் பிரேசில் பகுதிகள். உருளைக்கிழங்கு, தக்காளி, புகையிலை, அன்னாசி மற்றும் ரப்பர் மரங்கள் இங்கிருந்து உலகம் முழுவதும் பரவின.
இதன் அடிப்படையில் ஒரு பயிர் எங்கு தோன்றியதோ, அங்குதான் அந்தப் பயிரின் காட்டு மூதாதைகளும் (Wild varieties) அதிக மரபணு மாற்றங்களும் காணப்படும் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. பூச்சிகள் மற்றும் நோய்களைத் தாங்கும் திறன் கொண்ட புதிய ரகங்களை உருவாக்க இந்த மையங்களில் உள்ள காட்டு மூதாதை ரகங்கள்தான் இன்று வரை பயன்படுகின்றன. இந்த மையங்களினால் தான் அழிந்து வரும் பாரம்பரியப் பயிர் வகைகளும் அடையாளம் கண்டு பாதுகாக்கப்படுகின்றன.
நிகோலாய் காட்டு மூதாதைகளுடன், சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை கலப்பினம் செய்து புதிய, அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, அதிக விளைச்சல் கொடுக்கும் பயிர் வகைகளை உருவாக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.
நிகோலாய் இவானோவிச் வாவிலோவ் 1887-ல் நவம்பர் 25 அன்று மாஸ்கோவின் புகழ்பெற்ற ஜவுளி வணிக குடும்பத்தில் பிறந்தார். குடும்பத்தின் 7 குழந்தைகளில் ஒருவரான இவருக்கு செர்ஜி ,என்னும் இளைய சகோதரர் இருந்தார். புகழ் பெற்ற இயற்பியலாளரான இவர் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் அகாதமியின் தலைவராக இருந்தார். பிற்பாடு நிகோலாயின் மரணதண்டனையை கடுங்காவல் தண்டனையாக குறைக்கும் அளவுக்கு செல்வாக்கான பதவியில் இருந்தார்.
மிக இளம் வயதிலிருந்தே தாவரங்கள் மீது ஈடுபாடு கொண்டிருந்த நிகோலாய். பல உலர் தாவரங்களைப் பாதுகாத்து வைத்திருந்தார். மாஸ்கோ விவசாயக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை படிப்பில் தாவர நோயியலும், இயங்கியலும் கற்றார். நத்தைகளால் உண்டாகும் தாவர நோய்களில் பல ஆய்வுகளைச் செய்தார்
முதுகலைப் படிப்பை பிரபல மண் விஞ்ஞானியான டிமிட்ரியிடம் (Dmitri Prianishnikov) சேர்ந்து பயின்றார். 1911-லிருந்தே நோயெதிர்ப்புக் கொண்டிருக்கும் விதைகளை சிறிய அளவில் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்ட நிகோலாய் இங்கிலாந்தில் 2 வருட படிப்பில் இருக்கையில்தான் ஜெனிடிக்ஸ் என்னும் சொல்லை உருவாக்கிய வில்லியம் பேட்சனுடன் (William Bateson) இணைந்து தாவர மரபியலில் பணியாற்றினார். தாவர மரபியல் துறையை தோற்றுவித்தவரான மெண்டலின் கோட்பாடுகளை பெரிதும் மதித்து பின்பற்றியவர் பேட்சன்.
ரஷ்யப் புரட்சி நடந்த 1917-களில் நிகோலாய் ரஷ்யாவில் தாவர மரபணு வளங்களைச் சேகரித்து ஆராய்ச்சி செய்வதற்காக நிறுவப்பட்ட மிக முக்கியமான அமைப்பான பயன்பாட்டுத் தாவரவியல் பணியகத்தின் (Bureau for Applied Botany) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் அந்நிறுவனம் உலகப்புகழ் பெற்றது. (தற்போது N.I. Vavilov Institute of Plant Genetic Resources (VIR))
புரட்சி அமைப்பின் தலைவரான லெனின் கட்டளையால் சோவியத் ஒன்றியம் தாவர மரபியலில் உலகின் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதற்காக நிகோலாய்க்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டு அவர் ஏராளமான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். 1924-ல் லெனினின் மறைவுக்குப் பிறகு ஏறக்குறைய 20000 பணியாளர்களுடன் நாடெங்கிலும் நூற்றுக்கணக்கில் தாவர ஆய்வு மையங்களை நிறுவி அவை வெற்றிகரமாக செயல்படுவதை நிகோலாய் உறுதிசெய்தார்.
நிகோலாயின் புகழ்பெற்ற விதைத் தேடல் பயணம் 1916-ல் வடக்கு ஈரனில் தொடங்கியது. அங்கிருந்து அவர் தாயகம் திரும்பியபோது அதுவரை ரஷ்யா அறிந்தே இருக்காத பல புதிய வகை கோதுமை மற்றும் புல்லரிசி விதைகளைக் கொண்டு வந்தார். பின்னர் அவர் தொடர்ந்து 1933 வரை அமெரிக்கா, சீனா, லத்தீன் அமெரிக்கா, மத்தியதரைக் கடல்நாடுகள் மற்றும் எதியோப்பியாவுக்கு விதைத் தேடல் பயணங்களை மேற்கொண்டார்.
நிகோலாய் அவரது தலைமையின் கீழ் அந்த நிறுவனம் இருக்கையில் உலகின் முக்கிய உணவுப் பயிர்களின் 250,000 விதை மாதிரிகளைச் சேகரித்துச் சேமித்து வைத்து உலகையே வியப்பில் ஆழ்த்தினார். அந்தச் சேமிப்புக் கிடங்கில்தான் இரண்டாம் உலகப்போரின்போது 900 நாட்கள் கடும் போராட்டம் நடந்து அவ்விதைகளைக் காப்பாற்ற பல தாவரவியலாளர்கள் பட்டினியில் உயிரிழந்தார்கள்.(https://logamadevi.in/3914)
1920-களின் இறுதி மற்றும் 1930-களின் தொடக்கத்தில் தனிநபர்களிடமிருந்த நிலங்களைப் பறித்து, அவற்றை அரசுக்குச் சொந்தமான பெரிய கூட்டுப்பண்ணைகளாக மாற்றும் கட்டாயக் கூட்டுப்பண்ணை என்னும் தீவிரமான விவசாயக் கொள்கையை(Forced Collectivization) ஸ்டாலின் நடைமுறைப் படுத்தி , “ஐந்து கதிர்கள் சட்டம்” (Law of Five Ears of Grain) என்பதைக் கொண்டு வந்தார். இதன்படி, ஒரு விவசாயி தனது சொந்தப் பண்ணையில் உதிர்ந்து கிடக்கும் ஐந்து தானியக் கதிர்களை எடுத்தால் கூட அவருக்கு மரண தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதை வசதியான விவசாயிகள் எதிர்த்தனர். ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துழைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்ட போது தானியங்களை அரசிடம் கொடுக்க விரும்பாமல் அவர்களே பயிர்களை அழித்து கால்நடைகளைக் கொன்றனர்.
இதனால் 1932-33 களில் கடும் பஞ்சம் ஏற்பட்டு, சுமார் 50 லிருந்து 80 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். உக்ரைனில் இதனால் ஏற்பட்ட பஞ்சம் ஒரு இனப்படுகொலையாகவே கருதப்படுகிறது. அங்கு மட்டும் சுமார் 39 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
ரஷ்யா வேளாண் அறிவியலில் மாற்றங்களைச் செய்து விளைச்சலை அதிகரித்து பஞ்சத்தைப்போக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அந்தச்சமயத்தில் தான் ஸ்டாலின் ட்ரோஃபிம் லைசென்கோ (Trofim Lysenko) என்னும் வேளாண் விஞ்ஞானியின் போலி அறிவியல் கருத்துகளை நம்பி பல தவறுகளைச் செய்தார்.
ட்ரோஃபிம் நிகோலாயின் மீதிருந்த துறைசார்ந்த காழ்ப்பினால் மரபியல் பண்புகள் வழிவழியாக கடத்தப்படுகின்றன என்று மெண்டல், நிகோலாய் மற்றும் அனைத்து உலக மரபியலளர்களும் சொல்வது முழுக்கப் பொய் என்று ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார். அதை ஸ்டாலினும் நம்பினார். பல மொழிகளை நிக்கோலாய் அறிந்திருந்ததால் அவர் உளவாளியாக இருக்கலாம் என்னும் சந்தேக விதையையும் ஸ்டாலின் மனதில் ட்ரோஃபிம் விதைத்தார்,
இந்தப் பஞ்சத்தின் போது, பயிர்களின் மகசூலை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று ஸ்டாலின் விஞ்ஞானிகளை வற்புறுத்தினார். நிகோலாய்”புதிய ரகங்களை உருவாக்க பல ஆண்டுகள் முறையான ஆராய்ச்சி தேவை” என்று அறிவியல் பூர்வமாக கூறி, பஞ்சத்தை போக்க முழுவீச்சில் முனைந்தார்.
ஆனால் லிசென்கோ பயிர்கள் நாம் சொல்வதைக் கேட்கும், விளைச்சலை அதிகரிக்கும்படி அவைகளிடம் சொல்லி “சில வாரங்களில் மாற்றத்தைக் கொண்டு வரலாம்” என்று ஸ்டாலினுக்குப் பொய் வாக்குறுதி அளித்தார்.
“விதைகளுக்குப் பயிற்சி அளித்தல்” என்பதுதான் லிசென்கோவின் மிகப்பெரிய பொய். குளிர்காலக் கோதுமை விதைகளை ஐஸ்கட்டிகள் மிதக்கும் தண்ணீரில் நனைத்து வைப்பதன் மூலம், அவற்றை வசந்த காலத்தில் விளையச் செய்ய முடியும் என்று லிசென்கோ கூறினார். பயிர்களின் பண்புகளைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றினால், அந்தப் பண்புகள் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படும் என்றார் லிசென்கோ.
இது மரபியல் விதிகளுக்கு எதிரானது. இதனால் கோடிக்கணக்கான விதைகள் அழுகிப்போய் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
அத்தோடில்லாமல் லிசென்கோ “செடிகள் தங்களுக்குள் சண்டையிடாது” என்னும் ஒரு விசித்திரமான தத்துவத்தை முன்வைத்தார். ஒரே வகைச் செடிகளை மிக நெருக்கமாக நட்டால், அவை இடத்திற்காகவோ உணவிற்காகவோ சண்டையிடாது, மாறாக ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கும் என்று கூறினார். இதன் விளைவால் மிகவும் நெருக்கமாக நடப்பட்டு, சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் அனைத்தும் கருகின.
நிகோலாய் போன்ற விஞ்ஞானிகள் ஒரு புதிய பயிர் ரகத்தை உருவாக்க 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும் என்று கூறினர். ஆனால் லிசென்கோ “தன்னால் வெறும் 2 அல்லது 3 ஆண்டுகளில் புரட்சிகரமான விளைச்சலைத் தர முடியும்” என்று ஸ்டாலினிடம் உறுதி அளித்தார்.
மேலும் மரபணுக்கள் (Genes) என்ற ஒன்று கிடையாது என்றும், குரோமோசோம்கள் பற்றிய ஆய்வுகள் தேவையற்றவை என்றும் வாதிட்டார்.”சரியான சூழ்நிலையை வழங்கினால், ஒரு கோதுமைச் செடியை பார்லியாக மாற்ற முடியும்” என்று கூட நம்ப முடியாத பொய்களைக் கூறினார்.
இந்தக் காலகட்டத்தில்தான் நிக்கோலாய் வாபிலோவ் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார். விவசாய உற்பத்தி குறைந்ததற்கு வாவிலோவின் அறிவியல் முறைகள்தான் காரணம் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
“மரபணுக்கள் என்று கண்ணுக்குத் தெரியாத ஒன்று இருக்க முடியாது; அது ஒரு கற்பனை” என்று லிசென்கோ வாதிட்டார். எனவே மெண்டலின் விதிகளைப் போதித்த பேராசிரியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். மரபியல் தொடர்பான நூல்கள் நூலகங்களில் இருந்து நீக்கப்பட்டு, பல இடங்களில் எரிக்கப்பட்டன. மரபியல் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் “மெண்டலிஸ்ட்-வாவிலோவிஸ்ட்” என்று அழைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சார்லஸ் டார்வினின் “இயற்கைத் தேர்வு” கொள்கையையும் லிசென்கோ ஏற்கவில்லை. டார்வின் சொன்னது போல உயிரினங்களுக்கு இடையே போட்டி இருக்கும் என்பதை லிசென்கோ மறுத்தார். “ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் தங்களுக்குள் போட்டியிடாது, அவை கம்யூனிசக் கொள்கைப்படி ஒத்துழைக்கும்” என்று ஒரு விசித்திரமான வாதத்தை ஸ்டாலினுக்கு பிடிக்கும்படி முன்வைத்தார்.
எனவே மெண்டல் மற்றும் மார்கன் (T.H. Morgan) போன்ற உலகப் புகழ்பெற்ற மரபியல் அறிஞர்களின் புத்தகங்கள் சோவியத் பல்கலைக்கழகங்களில் தடை செய்யப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வாவிலோவ் உட்பட சுமார் 3,000-க்கும் மேற்பட்ட உயிரியல் விஞ்ஞானிகள் சிறையிலிடப்பட்டனர், நாடு கடத்தப்பட்டனர் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்டாலினுக்கு கம்யூனிச சித்தாந்தத்தின் மீது இருந்த அதீத பிடிவாதமும்”இயற்கையை மனிதன் நினைத்தபடி மாற்ற முடியும்” என்ற அவரது எண்ணத்திற்கும் லிசென்கோவின் பொய்கள் சாதகமாக இருந்தன. லிசென்கோ சொன்ன எந்த ஒரு முறையும் நிலத்தில் பலன் தரவில்லை. சோவியத் யூனியனின் தானிய உற்பத்தி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
லிசென்கோவின் பொய்களை நம்பி ரஷ்யா தனது பாரம்பரிய விதை வங்கிகளை இழந்தது. 1960-களின் பிற்பகுதி வரை ரஷ்யாவின் விவசாயம் மீள முடியாத பாதிப்பைச் சந்தித்தது. இச்சமயத்தில்தான் உக்ரைனில் இருந்த நிகோலாய் பிரிடிஷ் உளவாளி என கருதப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஸ்டாலினின் பார்வையில், லிசென்கோ ஒரு “பாட்டாளி வர்க்க விஞ்ஞானி”. ஆனால் வாவிலோவ் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் மற்றும் வெளிநாடுகளில் கல்வி கற்றவர். இதனைப் பயன்படுத்திய லிசென்கோ, வாவிலோவை “மேற்கத்திய நாடுகளின் உளவாளி” என்று ஸ்டாலினிடம் போட்டுக் கொடுத்தார்.1930-களின் இறுதியில் நடந்த அறிவியல் மாநாடுகளில், வாவிலோவ் லிசென்கோவின் கருத்துக்களை ஆதாரங்களுடன் மறுத்தார். “நாங்கள் சிதை நெருப்பில் வேண்டுமானால் இறங்குவோம், ஆனால் எங்கள் அறிவியல் உண்மைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம்” என்று துணிச்சலாகக் கூறினார்.
அவர் மீது பிரிட்டிஷ் உளவு நிறுவனத்திற்குத் தகவல் கொடுத்ததாகவும், சோவியத் விவசாயத்தைச் சீரழித்ததாகவும் பொய்க் குற்றச்சாட்டுகளை லிசன்கோ சுமத்தினார். இறுதியில், 1943-ல் சரடோவ் சிறையில் பட்டினியால் வாவிலோ உயிரிழந்தார்.
வாவிலோவின் குடும்பமும் பல ஆண்டுகள் இருட்டில் வைக்கப்பட்டிருந்தது. 1943-ல் வாவிலோவ் இறந்த செய்திகூட அவர்களுக்குச் சொல்லப்படவில்லை. அவர்கள் வாவிலோவ் ஒரு “சிறப்பு முகாமில்” கடிதத் தொடர்பு இல்லாமல் அடைக்கப்பட்டிருப்பதாகவே நம்ப வைக்கப்பட்டனர். 1950-களுக்குப் பிறகுதான், அவர் பட்டினியால் இறந்தார் என்ற கொடூரமான உண்மை அவர்களுக்குத் தெரிய வந்தது.
சகோதரனின் மரணத்தை அறியாத செர்ஜி 1945-ல் சோவியத் அறிவியல் அகாடமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதை ஏற்றுக்கொண்டார். அந்தப் பதவியை அவர் ஏற்றுக்கொண்டதற்குக் காரணமே, அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அண்ணனைத் தேடலாம் அல்லது காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில்தான்.
ஸ்டாலினின் அரசாங்கத்திடம் தனது அண்ணன் ஒரு தேசத்துரோகி அல்ல என்பதை விளக்கப் பல கடிதங்களை எழுதினார்.ஆனால் லிசன்கோ நிகோலாயின் மரணம் வெளியே தெரியாமல் தடுத்து அவர் தூரமான ஒரு இடத்தில் தனிமைச்சிறையில் இருப்பதாக பொய்களைப் பரப்பிக்கொண்டிருந்தார். நிகோலாயின் முதல் மனைவி, மகன், இரண்டாம் மனைவி, மகன் , மற்றும் சகோதரனின் குடும்பம் முழுவீச்சில் அவரைக்குறித்து தகவல்களை தேடிக்கொண்டே இருந்தார்கள். சகோதரர் நிகோலாய் பட்டினியால் இறந்துவிட்டார் என்ற உண்மையை கடைசிவரை அறியாமலேயே செர்ஜி 1951-ல் இறந்துபோனார்.
நிகோலாயின் முதல் மனைவி எகடெரினா ஒரு விவசாயப் பொருளாதார நிபுணர். இவர்கள் 1912-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் நிகோலாய் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும்,விதை சேகரிப்புப் பயணங்களுக்காகவும் எப்போதும் வீட்டை விட்டு வெளியே இருந்ததால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 1926-ல் விவாகரத்து செய்துகொண்டனர்.
நிகோலாய் கைது செய்யப்பட்டபோது, எகடெரினாவும் பெரும் சிரமத்திற்குள்ளானார். பிரிந்து வாழ்ந்தாலும், நிகோலாயின் அறிவியல் முயற்சிகளின் மீதும் அவரது நேர்மையின் மீது அவர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். நிகோலாயின் மறைவுக்குப் பிறகு, அவரது கௌரவத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் எகடெரினாவும் உறுதுணையாக இருந்தார். நிகோலாய் மற்றும் எகடெரினாவிற்கு 1918-ல் பிறந்தவர் ஒலெக். இவர் ஒரு மிகச்சிறந்த இயற்பியல் அறிஞர்.
தனது தந்தை கைது செய்யப்பட்டபோது ஒலெக் இளைஞராக இருந்தார். தந்தையின் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை அவர் உறுதியாக நம்பினார். தந்தையைக்குறித்த தகவல்களைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்த ஒலெக் 1946-ல் காகசஸ் மலைப்பகுதியில் மலையேற்றத்தின் போது மர்மமாக உயிரிழந்தார். தனது தந்தையின் மரணம் குறித்த உண்மைகளை அவர் தோண்டத் தொடங்கியதாலும், ஸ்டாலினின் ரகசிய போலீசாருக்கு எதிராகக் கேள்விகள் கேட்டதாலும், அவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இரண்டாம் மனைவி எலினா ஒரு திறமையான தாவரவியலாளர் மற்றும் வாபிலோவின் நீண்டகால ஆராய்ச்சி உதவியாளர். வாபிலோவ் கைது செய்யப்பட்டவுடன், எலினா “மக்கள் எதிரியின் மனைவி” எனக் கருதப்பட்டு வேலையையும், சமூக அந்தஸ்தையும் இழந்தார். அரசாங்கம் நிகோலாயின் சொத்துக்களை முடக்கியதால், எலினா தனது மகனை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார்.
நிகோலாய் கைது செய்யப்படும்போது அவரது மகன் யூரி நிக்கோலாய் விச் வாவிலோவ் 12 வயதுச் சிறுவன். தனது தந்தை ஏன் அழைத்துச் செல்லப்பட்டார் என்று கூடத் தெரியாத நிலையில் அவர் வளர்ந்தார். ஆனாலும் யூரி தனது சித்தப்பா செர்ஜியின் வழிகாட்டுதலில் ஒரு சிறந்த இயற்பியலாளராக வளர்ந்தார்.
யூரி வாழ்நாள் முழுவதையும் தந்தையின் பெருமையை உலகிற்குச் சொல்லவும், தனது தந்தை ஒரு தேசத்துரோகி அல்ல என்பதை நிரூபிக்கவும், அவரது அறிவியல் சாதனைகளை ஆவணப்படுத்தவும் செலவழித்தார். ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு, யூரி ராணுவ ஆவணக் காப்பகங்களிலிருந்து தனது தந்தை தொடர்பான ரகசியக் கோப்புகளைத் தேடி எடுத்தார். அந்த ஆவணங்களில் இருந்தும் நிகோலாயுடன் சிறையில் இருந்தவர்களிடமிருந்தும்தான் உடலுறுப்புக்கள் பட்டினியால் செயலிழந்து நிமோனியா தொற்று உருவாகி இதயம் நின்று மரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்த அவரது மரணச்சான்றிதழ் உள்ளிட்ட பல உண்மைகள் தெரிய வந்தன. தனது தந்தையின் வாழ்க்கை வரலாறு, அவர் சந்தித்த சித்திரவதைகள் மற்றும் சிறையில் அவர் பட்டினியால் மறைந்தது குறித்த உண்மைகளை யூரி உலகிற்குச் சொன்னார்.
2018-ல் அவர் காலமாகும் வரை, வாபிலோவின் தியாகத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றார். யூரி வாபிலோவ் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 90-வது வயதில் காலமாகும் வரை, தனது தந்தை உருவாக்கிய லெனின்கிராட் விதை வங்கியின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அறிவியலில் அரசியல் தலையீடு எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றியும் உலகெங்கும் விரிவுரையாற்றினார்.
ஸ்டாலினின் மரணத்திற்குப் பிறகுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. 1953-ல் ஸ்டாலின் இறந்த பிறகு, சோவியத் யூனியனில் “டி-ஸ்டாலினேஷன்” என்ற கொள்கை மாற்றத்தைக் கொண்டுவந்தார் நிகிதா குருக்ஷேவ், 1955-ல் வாவிலோவ் மீதான குற்றச்சாட்டுகளை ராணுவ நீதிமன்றம் மீண்டும் ஆய்வு செய்து, அவர் மீது சுமத்தப்பட்ட “உளவு பார்த்தல்” மற்றும் “சதி” போன்ற அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யாக உருவாக்கப்பட்டவை என்று கூறியது.
1955-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நிக்கோலாய் வாவிலோ முழுமையாகக் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டு, அவரது கௌரவம் மீட்டெடுக்கப்பட்டது. அவர் நிறுவிய விதை சேகரிப்பு நிறுவனத்திற்கு ‘வாபிலோவ் நிறுவனம்’ (Vavilov Institute) என்று பெயர் சூட்டப்பட்டது.
ட்ரோஃபிம் லிசென்கோவினால் உருவாக்கப்பட்ட போலி அறிவியல் கொள்கை லிசென்கோயிசம் (Lysenkoism) எனப்படுகிறது. இது தாவர/வேளாண் அறிவியல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகவே இன்று வரை குறிப்பிடபப்டுகிறது.
லிசென்கோவின் முறைகளைப் பின்பற்றி பயிரிடப்பட்ட கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழாயின. இது சோவியத் யூனியனில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்திற்கு காரணமாக அமைந்தது.
சுமார் 3,000-க்கும் மேற்பட்ட உண்மையான மரபியல் விஞ்ஞானிகள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். நிக்கோலாய் வாவிலோவ் இவர்களில் முக்கியமானவர்.
மெண்டல் மற்றும் டார்வினின் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. சோவியத் யூனியன் உயிரியல் துறையில் சுமார் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது.
ஸ்டாலினுக்குப் பிறகு லிசென்கோவின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. 1964-ல் சோவியத் அறிவியல் அகாதெமி அவரது கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக நிராகரித்தது. இன்று, “லிசென்கோயிசம்” என்ற சொல் “அரசியல் காரணங்களுக்காக அறிவியலைத் தவறாகப் பயன்படுத்துவதைக்” குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
மற்ற உலக நாடுகளில் டி.என்.ஏ (DNA) கண்டுபிடிப்பிற்குப்பிறகு நவீன மரபியல் துறை அசுர வேகத்தில் வளர்ந்தது. சோவியத் விஞ்ஞானிகள் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது தாங்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தனர். ஸ்டாலினுக்குப் பின் வந்த குருக்ஷேவ் தொடக்கத்தில் லிசென்கோவை ஆதரித்தாலும், இறுதியில் அவரது திட்டங்கள் தோல்வியடைந்ததால் அவரை ஓரங்கட்டினார். 1964-ல் லிசென்கோ தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
லிசென்கோ 1976-ல் இறக்கும் போது, ஒரு காலத்தில் அவர் கேலி செய்த “மரபியல்” (Genetics) சோவியத் யூனியனில் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
எங்கு புதைக்கப்பட்டார் என்று தெரிந்தால் அவரது கல்லறைக்கு மரியாதை செய்யப்படும் என்பதால் திட்டமிட்டு கூட்டத்தோடு கூட்டமாய் புதைக்கப்பட்ட நிகோலாய் வாவிலோவ் இன்று ஒரு உலகளாவிய நாயகனாகக் கொண்டாடப்படுகிறார்; லிசென்கோ “அறிவியலுக்கு எதிரான அரசியலின்” அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்.
வாவிலோவ் பாதுகாத்த அந்த லெனின்கிராட் விதை வங்கி இன்று ரஷ்யாவில் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகிறது
உண்மையான அறிவியல் அறிஞரான நிகோலாய், உணவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இறுதியில் பசியால் சிறையில் இறந்தார்.போலி அறிவியலைப் பரப்பி லட்சக்கணக்கான மக்களின் பசிக்கும் இறப்பிற்கும் காரணமாக இருந்த லிசென்கோ தனது முதுமைக் காலம் வரை வசதியாக ஒரு மாதிரிப்பண்ணையில் அவர் நம்பிய போலிஅறிவியல் ஆய்வுகளைச்செய்துகொண்டு இயற்கையாக இறந்தார்.
வேதகாமத்தில் “மண்ணில் விழுந்த கோதுமை மணி” என்னும் வரிகள் இருக்கிறது(. யோவான் 12-ம் அதிகாரம், 24-ம் வசனம்.)
“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைத் தரும்.”
மண்ணில் விழுந்த கோதுமை மணி உவமைக்கு நிக்கோலாய் வாவிலோவை விடச் சிறந்த உதாரணம் அறிவியல் வரலாற்றில் வேறெங்கும் இருக்க முடியாது. விதை சேகரிப்பில் ஈடுபட்டு பட்டினியில் மடிந்த, மண்ணில் விழுந்த ‘கோதுமை மணி’ யான நிகோலாய் இன்று உலகெங்கும் விளையும் ஒவ்வொரு கதிரிலும் வாழ்கிறார்!