தேர்வுக்காலம் இப்போது கல்லூரியில்.வளாகமே மாணவர்களால் நிறைந்து வண்ணமயமாக இருக்கிறது. எனது துறைக்கருகில் பழுத்து வாடிய இலைகளை கொட்டிக் குவித்துக்கொண்டிருந்த புங்கை மரத்தடியில் என்னை இரு மாணவிகள் கைகோர்த்த படி கடந்து செல்கிறார்கள். ஒருத்தி மற்றவளிடம் ‘’.. சொல்லறதைச்சொல்லிட்டேண்டி, மாட்னேன்னு வைய்யி அவ்வளவுதான் பெரிய பிரச்சனையாயிரும் ..’ என்கிறாள். ஓங்கு தாங்காக பெருங்கூட்டுக்காரியாயிருந்த மற்றவள் கனவில் அழ்ந்த கண்களுடன்’’… என்னா ஆனாலும் சரிடிநான் பார்த்துக்கறேன்..’’ என்கிறாள். இந்த இளமை அளிக்கும் துணிச்சல் இருக்கிறதே!