லோகமாதேவியின் பதிவுகள்

சண்டே சொல்லு!

“Having too much on my plate”என்று சொல்லப்படும் நிலையில் இருக்கிறேன். பாதியிலிருக்கும் அக்டோபரில் முடித்தாக வேண்டிய ஒரு மொழியாக்கம், தமிழக மாவட்டங்களின் flora வை ஆவணப்படுத்தும் அரசுவேலை,வெளியாகிக்கொண்டிருக்கும் உணவு குறித்த தொடருக்கான கட்டுரைகளை எழுதுவது, அதற்கென வாசிப்பதும், தயாரிப்பதும்,காத்திருக்கும் ஒரு நூலறிமுகம், கல்லூரி வேலை, வீட்டு பராமரிப்பு, ஓணவெயில் காலமாதலால் தோட்டத்துக்கு நீரூற்றுதல், சமையல், பயணம், கடைவீதி ,விழாக்கள். இந்த வருட முடிவிற்குள் முடித்தாகவேண்டிய குடும்பச் சிக்கலொன்று,அதன்பொருட்டு நடக்கும் நாடகங்களை எதிர்கொள்வதும் சகித்துக்கொள்வதும், அடுத்து நடக்கவிருக்கும் அறக்கல்விக்கான வகுப்புக்களுக்கு (அரைத்த மாவையே அரைக்கக்கூடாது என்பதற்காக) கூடுதலான தகவல்களைச் சேகரிப்பது, என்று கண்ணைக்கட்டுகிறது.

நேற்று கல்லூரியில் தேர்வுப்பணி முடித்து அங்கிருந்து யான்அறக்கட்டளை துவங்கவிருக்கும் ஒரு முக்கிய நிகழ்சிக்கான முன்தயாரிப்புப் பேச்சுவார்த்தைக்கென கோவை சென்று விட்டு மாலை வீடு திரும்பி இரவு வெகுநேரம் எழுதிக்கொண்டிருந்து விட்டு பின்னிரவில்தான் உறங்கினேன்.

காலை 5 மணிக்கு வழக்கம்போல கண்ணைப்பிரிக்க முடியவில்லை. பள்ளியில் சேர்ந்த புதிதில் குட்டிச்சைது சொல்வதைப்போல இன்று வியாழன் என்று நினைவு வந்ததும் நானே மனதிற்குள் சண்டே சொல்லு சண்டே சொல்லு என அடம் பிடித்து ,உடனிருந்து தேற்ற யாருமில்லாததால் நானே சமாதானமாகி எழுந்து புறப்பட்டு, இதோ கல்லூரியில் இருக்கிறேன்.

இன்னும் இரண்டு நாட்களில் சண்டே சொல்லலாம்!

1 Comment

  1. Priya

    இன்னும் இரண்டு நாள்

Leave a Reply to Priya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑