லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 6 of 13)

ஆர்டிசோக் மலரரும்பு- கூனை மலர்

கிரேக்க தொன்மவியலில் ஆகாயம்  இடி ஆகியவற்றின்  கடவுளான ஜீயஸ் தனது சகோதரர் பொசைடனைச் சந்திக்கச் சென்றபோது, சைனாரா என்ற அழகான பெண்ணைக் கண்டார். உடனடியாக அவள் மீது காதலில் விழுந்த அவர்அவளை ஒரு தேவதையாக்கி தன்னுடன் ஒலம்பஸ் மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மிகவும் தனிமையிலிருந்த சைனாரா ஜீயஸுக்கு தெரியாமல் தனது குடும்பத்தைப்  பார்க்க ரகசிய பயணங்களை மேற்கொண்டார். ஜீயஸ் இவற்றைக் கண்டுபிடித்தவுடன்  கோபமடைந்து, ஒலிம்பஸ் மலையில் இருந்து சைனாராவை  ஒரு கூனைப்பூவாக மாற்றி கீழே தள்ளிவிட்டார் என்று ஒரு கதை இருக்கிறது.

இக்கதையின் பேரில்தான் கூனைப்பூ என்னும் ஆர்டிசோக் (artichoke ) கின் அறிவியல் பெயரும் சைனாரா கார்டன்குலஸ் (Cynara cardunculus, variety scolymus)  என வைக்கபட்டது. மனிதர்களின் பழமையான உணவுகளில் கூனை மலர்களும் ஒன்று .இந்த சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் சதைப்பற்றான உண்ணக்கூடிய மலரரும்புகள்தான் ஆர்டிசோக்குகள் . இவை உருண்டை அல்லது பிரெஞ்ச் ஆர்டிசோக்குகள், முள் முட்டைகோசு  ஆகிய பெயர்களிலும் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

 ஆங்கில சொல்லான artichoke  என்பது 16 ம் நூற்றாண்டில் ’கூரிய’ என்னும் பொருள் கொண்ட  (அரபிச்சொல்லின் வேர்களை கொண்ட)  இத்தாலிய சொல்லான articiocco என்பதிலிருந்து பெறப்பட்டது.

மத்திய தரைக்கடல் பகுதிக்கும் வட ஆப்பிரிகாவுக்கும் சொந்தமான இந்த தாவரங்கள் பழங்காலத்திலிருந்தே உணவாகப் பயன்பட்டுவருகின்றன. இத்தாலியில்  1400 ம் ஆண்டில் கூனைப்பூ உண்ணப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அப்போது இதன்  தளிரிலைகளும் உண்ணப்பட்டன.

இவை பண்டைய கிரேக்கத்தில் மருந்தாகவும் உணவாகவும் பயன்பாட்டில் இருந்தன. பண்டைய ரோமானிய செல்வந்தர்கள் மட்டும் இவற்றை உணவில் விரும்பி உண்டார்கள் அக்காலத்தில் ரோமானிய குடிமக்களில் வறியவர்கள் கூனை மலர்களை உண்ணத் தடை இருந்தது.  பல நாடுகளில் கூனைமலர்கள் பாலுணர்வை தூண்டும் இயல்புடையதென்பதால் பெண்கள் அவற்றை உண்ணவும் தடை இருந்தது

15 ம் நூற்றாண்டில் இவை ஐரோப்பாவில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டன. டச்சு மக்களால் இங்கிலாந்துக்கு 1530 ல் ஆர்டிசோக்குகள் அறிமுகமாயின. 19 ம் நூற்றாண்டில்   அமெரிக்காவிற்கு பிரஞ்சு குடியேறிகளால் கொண்டு வரப்பட்ட இவை லூசியானாவில் முதலில் சாகுபடி செய்யபட்டன

7 அடி உயரம் கொண்ட  பல்லாண்டுத் தாவரங்களான கூனைச்செடிகள்  9 அடி சுற்றளவுக்கு பரந்து வளரும். ரோஜா மலர்களைப்போல சுற்றடுக்கில் அமைந்திருக்கும் அடர்பச்சை  இலைகள் 1 மீ  நீளம் .வரை வளரும் ஒவ்வொரு வருடமும் மலரும் காலம் முடிகையில் இலைகளும் வாடி உதிர்ந்து பின்னர் மீண்டும் புதிதாக தளிர்க்கும்

தாவரம் வளரத்துவங்கிய 6 வது மாதத்திலிருந்து மலர் அரும்புகளை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு  மலர்த்தண்டிலும்  1 லிருந்து 5 கூனைப்பூக்கள் உருவாகும்.  ஒரு வருடத்தில்  ஒரு தாவரத்தில் சுமார் 20 கூனைப்பூக்கள் உருவாகும்.

இச்செடிகளின் மலர்கள் மலர்ந்து விரியும் முன்னர்  மலரும்புகளின் கூர் நுனி கொண்ட தோல் போன்ற தடித்த  இதழ்களைப்போலிருக்கும்  மலரடிச்செதில்களின் (bracts) உள்ளிருக்கும் சதைப்பற்றான மாவுபோன்ற பொருள் உண்ணத்தகுந்தது. அரும்புகளின் இதயம் எனப்படும்  சதைப்பற்றான மையப்பகுதி மிகச்சுவையானது.

அறுவடை செய்யாத  அரும்புகள் அழகிய ஊதா நிற  மலர்களாக  மலரும். 8 வருடங்கள் வரை பலனளிக்கும் இவை விதைகளை உருவாக்கினாலும்  தாவரங்களிலிருந்து தோன்றும் பக்கச்செடிகளிலிருந்தும் வேர்த்துண்டுகளிலிருந்தும் இவற்றை எளிதாக வளர்க்கலாம்.

ஆர்டிசோக்குகளில்  பொட்டாஷியம், வைட்டமின் C , நார்ச்சத்து இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.

சிறிய அரும்புகள் அதிக சுவையுடன் இருக்கும். இவற்றை  முழுமையாக  நீரில் அல்லது  நீராவியில் வேகவைத்தும்,  சமைக்காமல் அப்படியே பச்சையாகவும் உண்ணலாம்

இவற்றில் பல நிற மலர்கள் இருந்தலும் மிக அதிகம் சாகுபடி செய்யபடுவது பசைநிற மலர்வகைகளே. உணவுப்பயிர்களாகவும் அலங்காரச்செடிகளாகவும் இவை வளர்க்கப்படுகின்றன.

உலகின் மிக அதிக ஆர்டிசோக் உற்பத்தியாளராக இத்தாலி, எகிப்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இருக்கின்றன.  பிரபல இத்தாலிய மதுவகையான சைனார் (Cynar) ஆர்டிசோக் மலர்ரும்புகளை நொதிக்கச்செய்து உருவாக்கப்படுகின்றது. 16 சதவீத ஆல்ஹகாலை கொண்டிருக்கும் இம்மது  உணவுக்கு முன்னர் பசியுணர்வை தூண்ட அருந்தும் மதுவகைகளில் மிக பிரபலமானது. (aperitif)

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இவை மிக அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. கலிஃபோர்னியாவின் மாண்டெரே (Monterey) பகுதி உலகின் ஆர்டிசோக் மையம் என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் மார்ச் 16 ஆர்டிசோக் நாளாக கொண்டாடப்படுகிறது கலிஃபோர்னியாவின் வருடா வருடம் நடைபெறும்அர்டிசோக் கொண்டாட்டங்களில் 59 வது கொண்டாட்டம் 1948ல்  நடைபெற்ற போது மர்லின் மன்றோ ஆர்டிசோக் அரசியாக பட்டமளித்து சிறப்பு செய்யப்பட்டார்

கார்டூன் எனபடும் இவற்றின் காட்டுமூதாதை (Cynara cardunculus) யின்  இளம் இலைகளும் மலரும்புகளும் தண்டுகளும் வேர்களும் கூட  உண்ணத்தகுந்தவை இவையும் இப்போது ஆர்டிசோக்குகளுடன் சாகுபடியாகின்றன.

 ஜெருசேலம் ஆர்ட்டிசோக் எனப்படுபவை இந்த கூனைப்பூக்கள் அல்ல. Helianthus tuberosus என்னும் தாவரத்தின் கிழங்குகள்தான் இந்த பெயரில் அழைக்கப்படுகின்றன.. வியட்நாமில் இதிலிருந்து தேநீர் தயாரித்து மருத்துவக் காரணங்களுக்காக அருந்தப்படுகிறது

  இவை சுவைக்காக, உடல்நலனுக்காக,, ஈரல் பாதுகாப்பு வயிற்றுக்கோளாறுகளுக்கான சிகிச்சைக்கு என பல்வேறு மருத்துவக் காரணங்களுக்காவும் உண்ணப்படுகின்றன. இவற்றின் இரு முக்கிய வேதிப்பொருட்கள் சையனாரின் மற்றும் சிலிமாரின்  (cynarin and silymarin)

ஆர்டிசோக் மலரரும்புகளை எளிதாக சமைத்து உண்ணுதலை கற்றுத்தரும் காணொளி: https://youtu.be/CPwEX4Q1QAs

ஃபெனி, முந்திரிக்கனிச்சாறு

Aani Ek is the new artisanal feni to come out of Goa

அறிவியல் ஆய்வுகளின் முன்னோடி என்று கருதப்படும் வில்லியம் டேம்ப்பியர். (William Dampier) 17/18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். இளம் வயதில் பெற்றொரை இழந்த இவர் 16  வயதிலிருந்தே  கடல் சாகச பயணங்களை மேற்கொண்டவர். அவகேடோ, பார்பிக்யூ, பிரெட் ஃப்ரூட் கட்டமரான், சாப்ஸ்டிக்ஸ் (Avocado, Barbecue, Breadfruit, Cashew, Catamaran, Chopsticks ) போன்ற பல நூறு சொற்களை உலகிற்கு தனது கடற்பயண நூல்களில் முதன் முதலில் எழுதி அறிமுகப்படுத்திய இவர் ஒரு கடற்படை தலைவர் மாலுமி, இயற்கையாளர் மற்றும் உலகை மூன்று முறை கடல் வழி சுற்றி வந்த முதல் மனிதர் என்னும் பெருமைக்குரியவரும் கூட. 1697 ல் வெளியான இவரது A New Voyage Round the World  மிகப்பிரபலமான கடற்பயண நூல்.

வில்லியம்  தனது பயணங்களில் பல இனக்குழுக்களை சேர்ந்த மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வின் இயங்கியலை அறிந்துகொள்வதிலும் இயற்கையின் அம்சங்களை கூர்ந்து அவதானிப்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தவர். அவரது கடல்பயண அனுபவங்களை பல நூல்களாக எழுதியிருக்கிறார். அப்படி ஒரு நூலில் போர்ச்சுக்கீசியர்கள் ஒரு மரத்தின் பெயரை காஜு என்று பெயரிட்டிருப்பதை செவிவழி கேட்டு அதை கேஷூ என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டார் என்கிறது வரலாறு அப்படி வில்லியம்ஸினால்  கேஷு என்று குறிப்பிடப்பட்டதுதான் நமது முந்திரி மரம்.

Anacardium occidentale  என்னும் அறிவியல் பெயருடைய பசுமை மாறா முந்திரி மரங்கள்  மத்திய மற்றும் வடகிழக்கு பிரேசிலை சேர்ந்தவை. ஐரோப்பிய காலனியாதிக்கத்துக்கு முன்பு அங்கிருந்த பழங்குடியினரால் இம்மரம் , மருந்து மற்றும் எரிபொருளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது

1558ல் ஃப்ரென்ச் இயற்கையாளர் திவெட்’டினால் (Thevet)  முந்திரியின் முதல் சித்திரம் வெளியானது 16ம் நூற்றாண்டின் மத்தியில் போர்ச்சுக்கீசியர்கள் பிரேசிலிலிருந்து முந்திரி மரக்கன்றுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். 1703ல் வெளியான  வில்லியமின் ’’ஹாலந்துக்கான புதிய கடற்பயணம்’’ என்னும் நூலில்தான் முதன்முறையாக cashew என்று இம்மரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.1 பிரேசில் பழங்குடியினரின்  துபி (tupi) மொழியில்  முந்திரியை  கொட்டை என்னும் பொருள்படும் அகாஜு (acaju) என்று குறிப்பிடப்பட்டதை போர்ச்சுக்கீசியர்கள்  காஜு என்று அழைத்தார்கள்.

காட்டு முந்திரி மரங்கள்  பருமனான திருகிய  தண்டுடன் பத்து மீட்டருக்கும் மேலன உயரத்தில் வளர்பவை.  தற்போது முந்திரிக்கனிகள் அறுவடை செய்யப்படுவது தோட்டக்கலை துறையினரால் உருவாக்கப்பட்ட  குட்டையான ஒட்டுரகங்களிருந்தே!

இம்மரங்களின் நுண்ணிய நட்சத்திர வடிவத்திலிருக்கும், பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலர்களில் ஆண் பெண் மற்றும் இருபால் மலர்கள் கலந்திருக்கும். இவை சார்ந்திருக்கும் அனகார்டியேசி குடும்பத்தின் மாமரத்திலும் இப்படித்தான் ஒரே பூங்கொத்தில் ஆண் பெண் மற்றும் இருபால் மலர்கள் கலந்திருக்கும் இதை தாவரஅறிவியல்  polygamous  என்கிறது. 

 இருபால் மலர்கள் கருவுற்றதும் சிறுநீரக வடிவிலான கொட்டை என்னும் கனி உருவாகும்.  மலர்களிலிருந்து கனி உருவாக சுமார் 55 லிருந்து 70 நாட்கள் தேவைப்படும். முந்திரிக்கொட்டை என்று அழைக்கப்படும் இவையே அம்மரத்தின் கனிகள். கொட்டை முழுவளர்ச்சி அடைந்த பின்னரே கனியெனப்படும் பகுதி முழுவளர்ச்சி அடையும். இக்கனியின் மேல்தோல் மிகமெல்லியதாக இருக்கும் நல்ல நறுமனத்தையும் கொண்டிருக்கும்

மலர்க்கொத்தின் காம்பானது  (peduncle) கனிக்கொட்டை உருவாகுகையில் விரிந்து சதைப்பற்றுடன் பிரகாசமான மஞ்சள் அரஞ்சு நிறத்தில் தலைகீழ் இதய வடிவில் வளரும். இதுவே பொதுவில் முந்திரிக்கனி அல்லது முந்திரிப்பழம் என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த சதைப்பற்றான மலர்க்காம்பு பழமென்று அழைக்கப்பட்டாலும்  இது பொய்ப்பழம் . அசல் பழமென்பது முந்திரியின் கொட்டைதான்

இம்மரத்தின் அறிவியல் பெயரான அனகார்டியம் என்பது இந்த சதைப்பற்றான  பழத்தின் தலைகீழ் இதயவடிவை குறிக்கின்றது ’அன’ என்றால் தலைகீழ் கார்டியம் என்றால் இதய வடிவம்

ஆக்ஸிடெண்டாலிஸ் என்னும் சிற்றினப்பெயர் ’மேற்கிலிருந்து’ என்று பொருள்படுகிறது. ‘cashew apple’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது தலைகீழ் இதயவடிவிலிருக்கும்  இந்த போலி முந்திரிப்பழம்தான்.

 உலகெங்கிலும் மிக அதிகம் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளிலொன்றாக இருக்கும் முந்திரிக்கொட்டையின் உலக உற்பத்தி  2018ல் மட்டும் 6மில்லியன் டன். இதில் 70 சதவீதம் வியட்நாம் மற்றும் இந்தியாவில் உற்பத்தியானது.  2018 ல்  முந்திரிக்கனியின் 1.7 டன் மொத்த  உற்பத்தியில் பிரேசில் மட்டுமே 90 சதவீதம் பங்களித்திருந்தது

முந்திரி தொழிற்சாலைகளில் கொட்டையோடுகளின் எண்ணெய் உபரித்தயரிப்பாக  இருக்கிறது இதில் அனகார்டிக் அமிலம் ,கார்டோல் மற்றும் கார்டனோல் ஆகியவை அடங்கி இருப்பதால் இந்த எண்ணெய் பலநூறாண்டுகளாகவே மருந்தாகவும் மரச்சாமான்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது 

 முந்திரி கொட்டையின் இரட்டை அடுக்கு உறையில் இருக்கும் பிசின் வகையை சேர்ந்த அனகார்டிக் அமிலம் சரும அழற்சியை உண்டாக்கும். முந்திரி கொட்டையின் ஒவ்வாமை என்பது பெரும்பாலும் இந்த உறையின் இந்தெ வேதிச்சேர்மானங்களால் உண்டாகும் ஒவ்வாமையே. ஒவ்வாமை உண்டாக்கும் கொட்டைஉறயின் அமிலம் cashew nut shell liquid, CNSL) எனகுறிப்பிடப்படுகின்றது 

 ஐரோப்பியர்களால் முந்திரி பிரேசிலில் 1558 ல் கண்டறியப்பட்டபோது இந்த ஒவ்வாமையினால் இக்கொட்டைகள் உண்ண தகுந்தவையல்ல என்றே கருதப்பட்டது. ஆனால்  துபி பழக்குடியினர் குரங்குகள் கற்களைக்கொண்டு கொட்டையின் மேற்தோலை உடைத்தும், பாறைகளில் கொட்டைகளை தேய்த்தும் ஓட்டை அகற்றி விட்டு உண்பதை கண்டபின்பு அவர்களும் அதே முறையை பயன்படுத்தி உண்ண துவங்கினர்.  பின்னர் கொட்டைகளை வறுத்து ஓட்டை நீக்கி எப்படி அதன் ஒவ்வாமையை நீக்குவது என்பதை கண்டறிந்து அம்முறையை ஐரோபியர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள் 

கொட்டைகளை வறுத்து சுவையாக உண்ன முடிந்ததை கண்டுகொண்டபின்னர் அச்சுவையே போர்ச்சுக்கீசியர்களை முந்திரி மரக்கன்றுகளை கோவாவுக்கு 1560ல் கொண்டு வரச் செய்தது.புதிய சூழலிலும் கன்றுகள் செழித்து வளர்ந்தன

போர்த்துகீசியர்களால் 16 ம் நூற்றண்டில் முந்திரி இந்தியாவிற்கு அறிமுகமானதாக பொதுவாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் குறிப்பாக தமிழக்தில் முந்திரி இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன

. கி மு 200 – 300களில் பௌத்தக் கட்டிடக் கலையில் நிறுவப்பட்ட இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில், பர்குட் கிராமத்தில் உள்ள பர்குட் (Bharhut) ஸ்தூபிகளில் இரு சீதாப்பழங்களும் இரு முந்திரிப்பழங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

மேலும் திருச்சிராப்பள்ளியின் 2500 வருடங்களுக்கு முன்புகட்டபட்ட  கோவிலின் கல் தூண்களில் முந்திரிபழங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வேதங்களில் குறிப்பிட்டிருக்கும்    கஜுதக்கா மற்றும் வ்ருத அருஸ்கரா (Kazutaka & Vritta Aruskara),  என்பதும் முந்திரிகளையே குறிக்கின்றது எகின்றனர் ஆய்வாளர்கள்.

இந்தியர்கள் முந்திரியின் சுவையையும் மருத்துவ குணங்களையும் சேர்த்து கண்டுகொண்ட பின்னர்  16 ம் நூற்றாண்டின் பிற்பாதியில் முந்திரி இந்தியாவில்  வேகமாக பிரபலமாகியது.

கிழக்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அதே சமயத்தில் முந்திரி அறிமுகமானது, வறுத்த முந்திரியின் மணம் பரவி பல கலாச்சாரங்களிலும் முந்திரி முக்கிய இடம் பிடிக்க துவங்கியது. கடற்கரை மணலரிப்பை தடுக்கும் பொருட்டு ஹவாய், மடகாஸ்கர் இலங்கை உள்ளிட்ட  மேலும் பல நாடுகளிலும் அச்சமயத்தில் முந்திரி அறிமுமானது.

அமெரிக்கவிற்கு முந்திரி 1905ல் அறிமுகமானதாக வரலாறு குறிப்பிடுகிறது 1920 வரையிலும்  அங்கு அத்தனை பிரபலமாகி இருக்காத முந்திரி 1941ற்கு பிறகே பெரும்பான்மையான புழக்கத்திற்கு வந்திருக்கிறது 1941 க்கு பிறகு இந்தியாவிலிருந்து மட்டுமே அமெரிக்காவிற்கு வருடத்திற்கு சுமார் 20,000 டன்  முந்திரிக்கொட்டைகள் கடல் வழி ஏற்றுமதியானது    

வறுத்த முந்திரிக் கொட்டையின் சுவையை மகிழ்ந்தனுபவித்த போர்த்துகீசியர்கள் கோவாவில் பயிரான மரங்களிலிருந்து கொட்டைகளின் அறுவடைக்கு பின்னர் வீணாகும் ஏராளமான பழங்களை உபயோகப்படுத்தும் விதமாக கனிச்சாற்றிலிருந்து மதுவை உருவாக்கி அருந்தினர் . அந்த மரபு இன்னும் அங்கு  நானூறாண்டுகளாகவே நீடிக்கிறது 

 முந்திரிப்பழத்தின் சதையை கூழாக்கி நொதிக்க செய்து  கோவாவில் மட்டும் தயாரிக்கப்படும் மதுபானம் ஃபெனி அல்லது ஃபென்னி எனப்படுகின்றது.

 இரட்டை வடித்தல் மூலம் கிடைக்கும் 45 சதவீத்திற்கும்  அதிகமான  ஆல்கஹாலை கொண்டிருக்கும் ஃபெனி கோவாவின் அடையாளங்களிலொன்றாகவே  கருதப்படுகிறது 

முந்திரி கனிகளில் பிரக்டோஸ், குளுக்கோஸ், கனிமத்தாது உப்புக்கள், பல முக்கிய அமினோ அமிலங்கள், மற்றும் அதிக அளவு அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை உள்ளன

.ஃபெனியின் தோற்றம் குறித்த முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை 1740ல் போர்ச்சுக்கீசியர்கள் ஃபெனியிலிருந்து மதுபானம் உண்டாக்கும் முறையை கோவா நகர மக்களுக்கு கற்றுக்கொடுத்ததகவே பெரிதும் நம்பப்படுகிறது.

ஃபெனி உருவாக்கம்

கனியின் சதைப் பகுதி பாறை கற்களால் நசுக்கப்பட்டு கூழாக்கப்பட்டு சிறு மலைபோல குவிக்கப்படும். முன்பு கற்களால் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நசுக்குதல் இப்போது அழுத்தும் கருவியான    பிங்ரி’யினால் செய்யப்படுகின்றன.{pingre (cage.} . கால்களால் நசுக்கப்படும் முறையும் பயன்பாட்டில் இருக்கிறது.

கைகளால் பிசையப்பட்டு நூடி என்னும் காட்டுக்கொடியால் கட்டப்படும் (vine- nudi,) சதைக்கூழ் குன்றுகள்  ஒரு கனமான பாறைக்கல்லினால் இரவு முழுவதும் அழுத்தப்படுகிறது.

கனிகளை கொட்டி நசுக்கும் கற்களால் ஆன இந்த தரைப்பகுதி கோல்மி (collmi)  எனப்படும்.  இக்கூழ் குன்றிலிருந்து வடியும் சாறு  நீரோ   (neero)

நீரோ முந்திரிக்கனிச்சாறு நிலத்தில் ஆழமாக புதைக்கப்பட்டிருக்கும் குடம் போன்ற மண் அல்லது செப்பு பாத்திரங்களுக்குள் செலுத்தப்பட்டு. பல  நாட்கள் இயற்கையாக நொதிக்க செய்யப்படுகிறது.  நொதித்த திரவம் 3 நாட்களுக்கு பிறகு பான்ஸ் எனப்படும் செம்புக் கொதிகலன்களில்  ‘(bhanns ) இவை காய்ச்சி வடித்தலுக்கு உள்ளாகின்றன.

எந்த நுண்ணுயிர்களும் வேதிப்பொருட்களும் சேர்க்கப்படாத ஃபெனி வடித்தல் பாட்டி எனப்படுகிறது (‘bhatti).  

ஒற்றை வடித்தலுக்கு பிறகு கிடைக்கும் 15 சதவீத ஆல்கஹால் கொண்ட பானம்  அரக் (urrac) எனப்படுகிறது.  

உர்ரக் மீண்டும் நீரோவுடன் கலக்கபட்டு 40-42 சதவீத ஆல்கஹால் இருக்கும் திரவமான   காஜுலோ (cazulo) கிடைக்கின்றது. காஜுலோ மீண்டும் உர்ரக்குடன் கலக்கப்பட்டு வடித்தலுக்கு உள்ளாகையில் 45 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் கொண்டிருக்கும் ஃபெனி ஆகிறது. ஃபெனி நெடியுடைய மது

ஃபெனி என்பது  நுரையை குறிக்கும் சமஸ்கிருத சொல்லான ‘phena’விலிருந்து உருவானது.  குசுக்கப்பட்ட பாட்டிலிலிருந்து கோப்பைகளில் ஊற்றப்படுகையில் நுரைத்துப் பொங்கும் இம்மதுவின் இயல்பால் இப்பெயர் வைக்கப்பட்டது

கோவாவில் முந்திரியிலிருந்தும் இளநீரிலிருந்தும் ஃபென்னி தயாரிக்கப்படுகிறது. இளநீர் ஃபெனி மாட்டல்ஃபெனி எனப்படுகிறது. (Maddel fenny ) 2009ல் ஃபெனி புவிசார் குறியீடு பெற்றிருகிறது.2 கோவா அரசு ஃபெனிக்கு கலாச்சார அந்தஸ்தும்  அளித்திருக்கிறது3 .இந்திய மது வகைகளில் புவிசார் குறியீடு பெற ஒரே மது வகை ஃபெனியே. ஃபெனி கோவாவில் மட்டுமே உருவாக்கப்படுகின்றது  

கோவாவில் மட்டும் சுமார் 4000 வடிசாலிகள் ஃபெனிக்கென்றே இயங்குகின்றன. அவற்றிலிருந்து கிடைக்கும் ஃபெனியில் சுமர் 70 சதவீதம் கோவா மக்களுக்கே செலவாகிறது மீதியே சுற்றுலாப்பயணிகளுக்கு சந்தைப் படுத்தப்படுகிறது. வடிசாலிகளில் மட்டுமல்லாது பல குடும்பங்களில் அவர்களின் தனிப்பட்ட தேவைக்காக வீட்டிலேயே ஃபெனி உருவாக்கபடுகிறது. 

 கோவாவின் பிரத்யேக ஃபெனி அருந்தும் முறையென்பது ஃபெனியை தேங்காய் சிரட்டைகளில் ஊற்றி அருந்துவதுதான். ஃபெனி ஐஸ்கட்டிகள் கலந்தும், கலக்காமலும் அருந்தப்படுகிறது. அதனுடன் கடல் உணவுகள் பொருத்தமானதாக அமையும். ஒரு துண்டு எலுமிச்சை அல்லது உப்பு தூவப்பட்ட பச்சைமிள்காயுடனும் ஃபெனியை அருந்துபவர்களும் உண்டு 

கோவாவை சேர்ந்த நந்தன் குட்சத்கர்  ஃபெனி அருங்காட்சியகம்  ஒன்றை கோவாவின் அழகிய கடற்கரை கிராமமொன்றில் அமைந்திருக்கிறார். இங்கு ஃபெனியை குறித்த ஆயிரக்கணக்கான தகவல்களும் ஃபெனி சீசாக்களின் மாதிரிகளும் உள்ளன. நூற்றண்டுகள் பழமையான ஃபென்னியும் அங்குள்ளது

இந்தியாவின் முந்திரி தொழிற்சாலை துவக்கம் குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் அதிகம் இல்லை எனினும் 1920களில் இலங்கையிலுருந்து கொல்லம் வந்த ரோச் விக்டோரியா (Roch Victoria) என்பவர் வணிக ரீதியான பெரும் முந்திரி தொழிற்சாலையை அங்கு உருவாக்கினார் என்பதற்கான ஆதாரங்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன 

கொல்லத்திலிருந்து அறுவடை செய்யப்பட்டு, வறுத்து  நச்சு நீக்கபட்ட  தரமான முந்திரிகள் அமெரிக்கவிற்கு ஏற்றுமதியாகி இருக்கின்றன 

 டான்ஸானியாவில்  உலர்ந்த முந்திரிக்கனிகளிலிருந்து சாறெடுத்து வடித்தலுக்கு உள்ளாக்கி உண்டாக்கப்படும் மிகக் கடும் மது வகை  கோங்கோ (gongo.) எனப்படுகிறது.

முந்திரிப்பழங்களிருந்து நொதித்தலுக்கும் வடித்தலுக்கும் உட்படுத்தப்படாத ஆல்கஹால் சிறிதும் இல்லாத  பானம் காஜுனா (Cajuína). ஆல்கஹாலுக்கு எதிரான நடவடிக்கையாக பிரேசிலின் ஒரு மருந்தாளுநரால் உருவாக்கப்பட்ட இந்த பானம் இப்போது பிரேசிலில் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது

முந்திரிக்கொட்டைகளை கனியிலிருந்து பிரித்து நச்சுநீக்கம் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு கொட்டையின் ஓட்டு எண்ணெயால் உடல் பாதிப்புகள் உருவாகின்றன மேலும் கனியிலிருந்து கொட்டைகளை பிரித்தெடுப்பது அதிக உடலுழைப்பை கோரும் பணி இதனாலேயே முந்திரி கொட்டைகள் விலை கூடியவைகளாக இருக்கின்றன

இந்தியாவின் முக்கிய முந்திரி உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, கோவா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா.. மொத்த உலக உற்பத்தியில் இந்தியா 23 சதவீதத்தை பங்களிக்கிறது

1 A voyage to New Holland, &c. in the year (1703). 

2.Certificate of Geographical Indication Registration for Feni

3.  “Goa government readies to brand ‘Feni’ as ‘heritage brew'”. Mid-Day. 23 January 2016. 

4. ஃபெனி உருவாக்கம் குறித்த காணொளி :https://youtu.be/vR1rMG7DEKw

இகபானா -மலர்வழி

This contains an image of: nordiclotus_20140908e

 உலகின் அனைத்து கலாச்சாரங்களிலும் மலர்களின், மலர் வடிவங்களின் தாக்கம் இருக்கிறது. பண்டைய எகிப்திய ரோமானிய மற்றும் கிரேக்க  நாகரிகங்கள் அனைத்திலுமே  மலர்கள் அலங்காரத்திற்காகவும், வழிபாட்டிலும், தனிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களுக்காகவும், பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டன.  

உலகெங்கிலும் இன்று மத எல்லைகளை கடந்த மலர்களின் பயன்பாடு இருக்கிறது. தெய்வங்களின் மலர் இருக்கைகள், கோவில்களின் கல்தூண்களின்  மலர்ச்செதுக்குகள், தென்னிந்திய கோலங்களின் மலர் வடிவங்கள், மலர்க்களங்கள்,  குகை ஓவியங்களின் மலர் வடிவங்கள் என பண்டைய நாகரிகங்களின் மலர்களின் பயன்பாட்டினை குறித்த பற்பல சான்றுகள் உள்ளன. எகிப்திய கல்லறைகளில் பெரும்பாலானவற்றில் மலர்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக உருவாக்கப்பட்ட பிரபல அஜந்தா குகை ஓவியங்களில் கைகளில் ஒற்றை மலரொன்றை ஏந்தியிருக்கும் இடை ஒசிந்த ஓவியம் உலக பிரசித்தி பெற்றது.

உலக  நாகரீகங்கள் அனைத்திலுமே மலர்களின் தாக்கம் இருக்கிறது எனினும் ஜப்பானிய கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாத ஒரு அங்கம் மலர் அமைப்புகளும் அவற்றின் பயன்பாடுகளும்.  மலர்ப் பயன்பாடுகளை தவிர்த்துவிட்டு ஜப்பானிய பண்பாட்டை அறிய முடியாது. ஹன கொத்தோபா என்பது (hana kotoba)  ஜப்பானிய ரகசிய மலர் மொழியை குறிக்கும் சொல். அதன்படி ஜப்பானிய மலர்களுக்கு அவற்றின் வண்ணம், அவற்றின் முட்களும், காம்பும், காம்பின் உயரம், மாலைகளில் இணைக்கப்பட்டிருக்கும் மலர்களின் கலவை ஆகியவற்றிற்கான தனித்தனியே சங்கேத அர்த்தங்கள் இருக்கின்றன 

’’விண்ணும் மண்ணும் மலர்களே

புத்தரும் பிற கடவுளரும் மலர்களே

மனிதனின்  இதயமும் ஆன்மாவும் மலர்களே’’!

பிரபல ஜப்பானிய  கடவுள் துதி ஒன்று இந்த வரிகளுடன் துவங்குகிறது,

எப்போதும் நமக்கு மறுபக்கத்தில்தான்  செழிப்பு இருக்கிறது என்பதை சொல்லும் சொல்லாட்சிகள், முதுமொழிகள் அநேகமாக உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் இருக்கின்றன ’’அக்கரைக்கு இக்கரை பச்சை என்னும் நமது பிரபல முதுமொழியை போல ஜப்பானில்  ’’அடுத்த வீட்டுக்காரனின் தோட்ட மலர்கள் அனைத்தும் சிவப்பு ’’ என்பார்கள். 

உலகின் அனைத்துக் கலாச்சாரங்களை காட்டிலும் ஜப்பானிய கலாச்சாரம் இயற்கையுடன் நெருங்கிய தொடர்பை கொண்டது. ஜப்பானிய ‘ஓரிகாமி’ என்னும் காகிதங்களின் மடிப்புகளில் வடிவங்களை உருவாக்கும் கலையில் ’காகிதம்’ என்னும் சொல்லுக்கான ஜப்பானிய சொல்லான ’காமி’ என்பதே கடவுளுக்குமான சொல். இயற்கையிலிருந்து உருவாகும் காகிதமும் கடவுளே அங்கு. ஜப்பானிய போன்ஸாய் கலையும் பிரபஞ்சத்தின் மீச்சிறு வடிவை  மரங்களில் உருவாக்குவதுதான்.   ’ஹனா’ என்றால் ஜப்பானிய மொழியில் மலர். (hanami)   ஹனாமி என்னும் ஜப்பானிய செர்ரி மலர்க்கொண்டாட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஜப்பானில் பல  பெண்களின் பெயரில்  ஹனா இருக்கும்  .

ஜப்பானிய கலைகளின் சிறப்புகளில் ஒன்று மிகக்குறைந்த அளவிலேயே பிற நாட்டுக்கலைகளின் சாயலை அவை  கொண்டிருப்பது. புத்த மதம் அங்கு தோன்றிய போது உருவான இகபானா மலர்க்கலை ஜப்பானின் சிறப்புகளில் ஒன்று. ஜப்பானிய  மூன்று முக்கிய நுண்கலைகளில் கொடொ (kōdō) என்னும் வாசனை பத்திகளின் வழிபாட்டு உபயோகம், சாடோ(chadō) என்னும் தேநீர்ச்சடங்கிற்கும் அடுத்தபடியாக இகபானா மலரமைப்பு இருக்கிறது   

ஜப்பானிய மொழியில் இக-பானா (Ikebana) என்பது  மலர்களை அமைப்பது என்று பொருள்படும். -ikeru  என்றால் அமைப்பது  -hana  என்பது  மலர்களை குறிக்கும்.  இச்சொல் ’மலர்களுக்கு உயிரளிக்கும் படி அமைப்பது’ என்னும் பொருளிலும் வழங்கப்படுகிறது

இகபானாவை பயில்பவர்கள் ’கடோகா’ என அழைக்கப்படுகின்றனர் இகபானா ’கடோ’ (kadō) என்றும் அழைக்கப்படுகின்றது. கடோ என்றால் ’மலர்களின் வழி’ எனப்பொருள்.  

This contains an image of: White Calla Lily Table Decoration

இகபானாவின் துவக்கம்.

அனைத்து பருவங்களிலும் மலர்களை ஆராதிப்பதென்னும் வழக்கம் பண்டைய ஜப்பானில் பிரபலமாக இருந்தது

ஹேயான் காலத்தை சேர்ந்த  (Heian-794–1185) பிரபல ஜப்பானிய வாகா கவிதைத் தொகுப்புக்களில் (Waka) மலர்கள் குறித்த எராளமான கவிதைகள் இருக்கின்றன. புத்தமதம் அங்கே உருவானபோது புத்தரை  மலர்ளை கொண்டு வழிபடுவது பொதுவான ஒரு கலாச்சாரமாக  உருவானது

 புத்தமதம் தோன்றிய இந்தியாவில் தாமரையே மிக அதிகம் புத்த வழிபாட்டில்  இருந்ததென்றாலும் ஜப்பானில் அந்தந்த பருவத்திற்கான மலர்களே வழிபாட்டுக்கென எடுத்துக்கொள்ளப்பட்டன. சீனாவின் புத்த துறவிகள் பலவகையான மலர் அமைப்புக்களை கொண்டு புத்தரை வழிபடும் பாணியை  ஜப்பானில் துவங்கினார்கள்

துவக்க காலங்களில் அவர்கள் எந்த குறிப்பிட்ட அர்த்தமும் இல்லாமல்  பொதுவாக மலர்களை ஆலயங்களில் புத்தர் முன்பாக  அமைத்து வழிபட்டனர்.

பின்னர் உருவான கூஜ் (kuge) எனப்படும் புத்தருக்கான பிரத்யேக மலர் வழிபாட்டில் மூன்று மலர்க்காம்புகள்  நீரிலிருந்து ஒன்றாக இணைந்து நிற்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. ஷின், சோ மற்றும் ஹைகாய் (shin, soe & hikae) எனப்பட்ட  அம்மூன்றும் சொர்க்கம், மனிதன். மற்றும் பூமியை குறித்தன.  

தொடர்ந்த கமாகுரா காலத்தில் மிட்ஷு குசோக்கு  (mitsu-gusoku)  எனப்படும் புகையும் வஸ்து, மெழுகுதிரி மற்றும் அழகாக அமைக்கப்பட்ட மலர்கள் இவைகளை கொண்டு வழிபடும் முறை உருவாகி வந்தது. 1392 வரை இம்முறை புழக்கத்தில் இருந்தது.  பின்வந்த காலங்களில் புத்த சமய திருநூல்கள் பலவும் மலர்களின் பெயர்கள் கொண்டு உருவாக்கப்பட்டன. முராமோச்சியின் (1336–1573),   காலத்தில்  ஆலயங்கள் மற்றும் மடாலயங்களின் உள் அலங்கார அமைப்புக்கள் உருவானபோது மலர்களின் பயன்பாடு அதிகரித்தது 

முதன்முதலில் நேர்த்தியும் ஒழுங்குமாக நியதிகளுக்குட்பட்ட ஒரு மலர்க்கலை தோன்றியது  14 ம் நூற்றாண்டில் ஜப்பானில் ஷின் நோ ஹனா (Shin- no- hana) என்னும் ’மையத்தில் மலர்களை அமைக்கும் கலை’ உருவான போதுதான்,  பைன் போன்ற ஊசியிலை மரங்களின் சிறு கிளையொன்றை கிண்ணங்களில் மையப்பகுதியில் நேராக நிற்கும்படி அமைத்து அதனைச் சுற்றிலும் 3 அல்லது 5 பருவகால மலர்களை அமைக்கும் எளிமையான  இந்த மலரமைப்புக்களை 14 ஆம் நூற்றாண்டு ஜப்பானிய ஓவியங்களில் காணமுடியும். இந்த கலையில் மரக்கிளைகள்  சேய்மையின் இயற்கைக் காட்சியையும் மலர்கள் அண்மை இயற்கை காட்சியையும் குறிப்புணர்த்தின

ஜப்பானிய ராணுவ தளபதிகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் கலை ஆர்வத்தில் உதவவென்றே பிரத்யேக உதவியாளர்களாக டோபோஷுக்கள் இருந்தனர். (Doboshu) இதில் ஒருசிலர் உருவாக்கிய மலர் அலங்கார வடிவங்களே தத்தேபானா என்னும் மலரமைப்புக்கலையின் முன்வடிவங்கள் (tatebana)

14ஆம் நூற்றாண்டில் சாமுராய்கள் தங்கள் செல்வாக்கையும் அதிகாரத்தையும் வெளிப்படையாக தெரிவிக்க நினைத்தார்கள் அப்போது  டோகொனோமா என்னும் (tokonoma)  சாமுராய்களின் கவச உடைகள், படைக்கலன்களை மலர்களுடன் இணைத்து காட்சிப்படுத்தும் வழக்கம் பிரபலமாக இருந்தது அப்போதைய மலரலங்காரங்கள் ’’நிற்கும் மலர்கள்’’ என்று பொருள்படும்  தத்தேபானா /தத்தேஹனா  (tatebana or tatehana)  எனப்பட்டன. இதுவே  இகபானாவின் தூய ஆதி வடிவம்

15ஆம் நூற்றாண்டு வரை மிக மெல்ல வளர்ந்த இக்கலை அந்நூற்றாண்டின் இறுதியில் மீண்டும் புத்துயிர் பெற்று புத்தம் புதிதாக  முகிழ்த்தது.  தேநீர் சடங்குகள் புகழ்பெற துவங்கிய 15 ம் நூற்றாண்டின் இறுதியில் இக்கலை மறுமலர்ச்சி அடைந்தது. தேநீர்  விருந்துகள் நிகழும் அரங்குகளின்  முகப்பு அறைகளில்  காக்கேமோனோ (kakemono) என்னும் சுருள்துணிச் சித்திரம் மட்டுமே தொங்க விடப்பட்டிருக்கும் அதனுடன் எளிய மலரமைப்பு ஒன்றும் வைக்கப்பட்டபோது தேநீர் சடங்குகளின் வசீகரம் மேலும் கூடியது.

1436-1490 வை சேர்ந்த அஷிகாகா (Ashikaga)வம்சத்தின் எட்டாவது ஷோகனான அஷிகாகா யோஷிமஸா(Ashikaga Yoshimasa)   சா நோ யூ (cha-no-you) என்னும் தேநீர் சடங்கையும் இகபானாவையும் இணைத்து சா-பானா என்னும் கலையாக  அழகுபடுத்தியவர்களில் முதன்மையானவர்  

This contains an image of:

 யோஷிமஸாவின் சமகாலத்தைய இயற்கை ஆர்வலர்கள் பலரும் இந்த மலரமைப்பின் மேம்படுத்துதலில் பெரும் பங்காற்றினார்கள்  

16 ம் நூற்றாண்டில்  (1477-1561)  வழிபாட்டு தலங்களிலும் தேநீர் விருந்துகளிலும் பயன்படுவதைக்காட்டிலும் மேலான ஒரு இடத்தை இகபானா மலர் அமைப்புக்கள் அடைந்தன.அச்சமயத்தில் இகபானா ரிக்கா (Rikka) என்றழைக்கப்பட்டது. அதிலிருந்து மாறுபட்ட  இகபானாவின் மற்றோர் வடிவமான நாஜெயிரிபானாவும்  (nageirebana)ஏக காலத்தில் தோன்றி பிரபலமடைந்தது. 

நூற்றாண்டுகளுக்கு இவ்விரண்டு வகை மலரமைப்புக்களும் புழக்கத்தில் இருந்தன. ரிக்கா அலங்காரமானதாகவும் நாஜெயிரி மிக எளிமையாக இயற்கையுடன் ஒத்திசைவு கொண்டதாகவும் அமைந்திருந்தது தொடர்ந்த காலங்களில் ரிக்காவுடன் போட்டியிட முடியாத நாஜெயிரி வடிவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராட வேண்டி இருந்தது பின்னர் மெல்ல மெல்ல அது தனித்த மலரலங்காரக்கலையாக பிரபலமடைந்தது. 16 ம் நூற்றண்டின் இறுதியில் நாஜெயிரியின் எளிமையும் இயற்கையான அமைப்பும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது.  பின்னர் இகபானா ஜப்பானின் பாரம்பரியங்களில் குறிப்பிடத்தக்க கலையானது. ஆண்களும் பெண்களும் எல்லா வயதிலும் இகபானாவை கற்றுக்கொள்ள விழைந்தனர். பலநூறு பள்ளிகளும் இகபானாவுக்கென உருவாகத் துவங்கின

19 ம் நூற்றாண்டில் இகபானாவில் தேர்ச்சி பெறும் பெண்களுக்கு சிறந்த கணவர்கள் கிடைப்பார்கள் என்றும் அவர்கள் ஆகச்சிறந்த இல்பேணுநர்களாகவும் அன்னைகளாகவும் ஆவார்கள் என்றும் நம்பிக்கை இருந்தது

Explore Wabi-Sabi Ikebana's photos on Flickr. Wabi-Sabi Ikebana has uploaded 153 photos to Flickr.

இகபானா நூல்கள்

 கெனெயி (Kenei) காலமான 1206 லிருந்து  எடோ (Edo) காலமான 1660-1704 வரை இகபானா குறித்த ஏராளமான நூல்கள் வெளியாகின. அவற்றில் செண்டென்ஸ்போ (Sendensbo) மிக முக்கியமானதாக கருதப்படுகிறது இகபானாவின் அடிப்படை விதிகளை விளக்கும் அந்நூல்களில் அனைத்து வகையான  மலரமைப்புக்களுக்கும் சித்திரங்களும் இடம்பெற்றிருந்தன 

அதை தொடர்ந்து இகனோபு (lkenobu) எழுதிய  கண்டென்ஸ்போ (Kandensbo) என்னும் நூலும் இகபானா வளர்ச்சியில்  மிக முக்கியமானது. கண்டென்சோவில் இகபானாவின்  விதிகளும் குறிக்கோள்களும் தெளிவாக விவரிக்க பட்டிருந்தன அதன் பிறகு இகபானா மலர் அலங்காரம் வெகுவாக புகழ்பெற்றது. 

17ஆம் நூற்றாண்டில், மரப்பொருட்கள் மற்றும் உலோகப் பொருட்கள் மீது பளபளப்பான வண்ணப்பூச்சுகள் பூசும்  லாகர் (Lacquer) கலையில் தேர்ந்தவரான  கொரின்  (Korin) இகபானா வடிவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கினார். அவரது ஈடுபாட்டினால் இகபானா அமைப்புக்கள் வைக்கப்படும் கிண்ணங்கள் தட்டுக்கள் மற்றும் கொள்கலன்களில் பல அழகிய வடிவங்களும் வண்ணங்களும் உருவாக்கப்பட்டு, இகபானா அதன் அழகின் உச்சத்தில் இருந்தது. அந்த  காலகட்டத்தில் இகபானாவை பல்லாயிரக்கணக்கானோர் கற்றுத்தேர்ந்தனர் 

இகபானா வடிவம் முழுமையடைந்ததும் அப்போதுதான். 17ஆம் நூற்றண்டின் இறுதியில் இகபானாவின் இரு பிரபல வடிவங்களில் ஒன்றும், மிக அலங்கரமான மலர் அமைப்பு முறையுமான ரிக்காவின் மீதான விலக்கமும் உருவாகி இருந்தது. அப்போதிலிருந்து நாஜெயிரி  வகையே இகபானா அமைப்புக்களுக்கு பயன்படுகிறது. (இவ்விரு கலைகளையும் பயிற்றுவிக்கும் கலைஞர்களும், இவற்றை கற்க விரும்பும் மாணவர்களும்  இன்னும்  இருக்கிறார்கள்). இதன்பிறகு இகபானா கலை உச்சத்தை நோக்கி பயணிக்க துவங்கியது. 

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ரிக்காவிற்கும் நாஜெயிரிக்கும் இடையேயான ஒரு கலப்பு வகையான செயிக்கா (Seika) உருவானது செயிக்கா என்றால் புத்தம் புதிய மலரென்று பொருள். செயிக்கா சமச்சீரற்ற முக்கோண  அமைப்பில் இருக்கும்.

Икебана / Ikebana - 13 Апреля 2016 - Блог - Икебана

ஜென் மற்றும் இகபானா

ஜென் மார்க்கத்திற்கும் இகபானாவுக்கும் இருக்கும் ஒற்றுமைகளாக; 

  1. சமநிலை, எளிமை மற்றும் ஒத்திசைவு
  2. இயற்கையுடனான  நெருக்கம் 
  3. பருவ காலத்தை அறிந்திருத்தல்
  4. அன்றாடங்களின்  எளிய அழகை ஆராதித்தல்
  5. மா (ma)  எனப்படும் காலி இடங்களை கண்டுகொண்டு அதையும் ஆராதித்தல். (இகெபானாவில் மலர்கள் அமைந்திராத வெற்று இடங்களும் உண்டு
  6. வேற்றுமை பாராட்டாதிருத்தல்
  7. தன்னை மறத்தல். (இகபானாவில் ஆழ்ந்து காலத்தை மறத்தலுக்கு இது இணையாக சொல்லப்படுகின்றது)
  8. எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்தல்
  9. இறையை உணர்தல் 
  10. ஆழ்ந்த அமைதியை உணர்தல்  -ஆகியவை சொல்லபடுகின்றன,

இகபானா  கலவைகள்

இகபானாவின் பல வடிவங்களுக்கும் பல வகையான அடிப்படை கலவைகள் உள்ளன

சொர்க்கம் (அல்லது மெய்மை)- மனிதன்- பூமி என்பது போல பூமி- காற்று- நீர், அன்னை- தந்தை- மகவு என பல கலவைகளும் உபயோகிக்க படுகின்றன

அடிப்படை விதிகள்

தென்மே (Tenmei) காலத்துக்கு பிறகு இகபானா தனது தூய வடிவத்திலிருந்து சற்றே மாறி செயற்கையான சில இணைவுகளுடன் உருவானது. அந்த வடிவம்தான் இப்போதைய சொர்க்கம், மனிதன் மற்றும் பூமி ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய இறுதி இகபானா வடிவம் 

இப்போதைய இகபானாவின் மூன்று  பள்ளிகளான  இகனோபு, என்ஷூ ரியூ மற்றும் மிஷோ ரியூ ,(Ike nobu, Enshiu- Ryu, Misho-Ryu) ஆகியவை  இந்த விதிகளையே பின்பற்றுகின்றன. இப்போதும் டோக்கியோ மற்றும் கியோட்டோவில்  இகபானாவின் பழைய தூய வடிவங்களை இன்னும்  கோ ரியூ, கோ ஷின் ரியூ (KO- Ryu, Ko Shin- Ryu)  என்னும் பெயர்களில் கற்றுக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.

இகபானாவின் பிற விதிகள்

மலரமைப்புக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுப்பதிலும், மலரமைப்பின் வடிவத்தை நிர்ணயிப்பதிலும்  இருளும்-ஒளியும், கடவுளும்-சாத்தானும், நல்லதும்-கெட்டதும் போன்ற இரு எதிரெதிரானவைகள் அவசியம் இருக்கவேண்டும்.

ஒரே வண்ண மலர்கள் அமைக்கப்படுவது  துரதிர்ஷ்டவசமானது என கருதப்படுகின்றது. சிவப்பின் நிறம் இறப்புடன் தொடர்புடையதால் பெரும்பாலும் இகபானாவுக்கு அவை விரும்பப்படுவதில்லை. மேலும் சிவப்பு நெருப்பின் நிறமாதாலாலும் ஜப்பானிய வீடுகள், எடையற்ற எளிதில் தீப்பிடிக்கும்படியான பொருட்களால் கட்டப்படுவதால் அவை இகபானாவில் உபயோகிப் படுவதில்லை

 அதுபோலவே ஒற்றைப்படை எண்ணிக்கையில் மலர்களை அமைப்பதும் துரதிர்ஷ்டம் என்று கருதப்படுகிறது.  அப்படி ஒற்றைப்படையில் இருக்கும் எதுவும் சமச்சீரான வடிவத்தை அமைக்காது என்பதால்  அவ்வகையான அமைப்புக்கள் இயற்கையின் அம்சமாக இருக்காது என ஜப்பானின் அனைத்து கலை வடிவங்களிலும்  ஒற்றைப்படை எண்ணிக்கை பெரும்பாலும் விலக்கப்பட்டிருக்கும்

கொள்கலன்கள்; அடுத்த முக்கிய விதி எந்த கொள்கலனில் மலர்கள் அமைக்கப்படுகின்றன என்பதில் இருக்கிறது. ஜப்பானிய இகபானா கொள்கலன்கள் அனைத்தும் திசைகாட்டியைப்போல் நான்கு திசைகளையும் குறிப்பவையாக கருதப்படுபவை தான். எந்த திசையில் எவற்றை அமைப்பது என்பதை குறித்த தளர்வற்ற விதிகள்  இகபானாவில் உள்ளது

இகபானாவின் கொள்கலன்களில் வாயகன்றவை, உயரமானவை மூங்கில் அல்லது உலோகத்தால் ஆனவை என பல வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான ஜப்பானியர்கள் இகபானாவை வெண்கல கிண்ணங்களில் அமைக்க விரும்புகிறார்கள் வெண்கல நிறமே பூமியின் நிறமென  அங்கு கருதப்படுகிறது. வெள்ளியும் விருப்பத்துக்குரியதாகவே இருக்கிறது. கொள்கலன்களில் மூன்றில் ஒரு பங்கு  நீர் நிறைக்கப்பட்டிருக்க வேண்டும்

இகபானா மலர்மொழி

இகபானாவின் எந்த அமைப்பானாலும் நாம் அவற்றின் மலர்மொழியை புரிந்துகொள்ளும்படியே அவை அமைக்கப்பட்டிருக்கும் 

முக்கிய நிகழ்வுகளிலும், மங்கல நிகழ்சிகளிலும் விருந்தாளிகளின் வருகையின் போதும் மட்டுமல்லாது வீட்டிலிருந்து பயணம் செல்லுகையிலும் பூட்டிய வீட்டில் இகபானா அமைக்கப்படும்.  மணமுடித்து  தேனிநிலவு செல்லும் தம்பதியர்களின் வீட்டில் நீடித்த, மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கையின் குறியீடாக கருதப்படும் வில்லோ மரக்கிளைகள் கொண்ட  இகபானா அமைக்கப்பட்டிருக்கும்

நீண்ட பயணம் செல்வதற்கான இகபானா அமைப்பில் வளைந்து ஒரு வட்டம் போல் அமைக்கப்பட்டிருக்கும் இளந்தண்டுகள் பத்திரமாக பயணம் முடிந்து அவர்கள் வீடு திரும்புவதை குறிக்கும்

புதிய வீடுகளின் புகுமுக விழாவில் பரிசளிக்கப்படும் இகபானாக்களில் எப்போதுமே நீரைக் குறிக்கும் தூய வெண்ணிற மலர்கள் அமைந்திருக்கும். கட்டாயமாக வீடுகளில் சிவப்பு நிறம் உபயோகத்தில் இருக்கவே இருக்கக்கூடாது. புதிய சொத்துக்கள் வாங்கப்படுகையிலும் குழந்தைகளின் பிறப்பின்போதும் நீண்ட காலம் வாடாமலிருக்கும் சாமந்தி போன்ற மலர்கள் அமைக்கப்படவேண்டும்.

மங்கல நிகழ்வுகளுக்கென  இருப்பது போல் அமங்கல நிகழ்வுகளுக்கும் தனித்தனி விதிகள் உண்டு

இறப்பிற்கு உபயோகிக்கப்படும் மலர்வளையங்களில் வெண்ணிற மலர்களும் காய்ந்த குச்சிகளும், வாடிய இலைகளும் அமைக்கப்படவேண்டும்.

இகபானா பரிசளிக்க படுகையில் எப்போதும் அரும்புகள் மட்டுமே உபயோக்கிக்கவேண்டும்.. அப்போதுதான் பரிசு பெற்றுக் கொள்பவர்கள் அவற்றின் மலர்தலை கண்டு மகிழ முடியும்   

இகபானா அமைத்தல்

இகபானா உருவாக்கத்தின் முதல்படியாக குபாரி   (kubari) எனப்படும் ஆதாரமான குச்சி நிறுவப்படும். இந்த குச்சியின் வடிவம் ஒவ்வொரு பருவத்திற்கும் வேறுபடும், நுனியில் பிளவு படாதவை, இரண்டாக பிளவுபட்டது, மூன்று பிளவுகளை கொண்டவை என இவை வேறுபட்டிருக்கும்

நீரில் கென்ஸான் (kenzan)என்னும் ஊசிகள் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு மெத்தை போன்ற அமைப்பை கொள்கலனில் வைத்து மலர்க்காம்புகள் ஊசிகளில் செருகி அமைக்கப்படும்

  • மலர்களை  தேர்ந்தெடுக்கையில் ஆதாரவிதியான சொர்க்கம்- மனிதன்- பூமி என்பதை அவை குறிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.
  • அமைக்கப்பட இருக்கும் வடிவம் வெட்டி எடுத்த மலர்களை காட்டுவதாக இல்லாமல்  உயிருள்ள மலர்களை காட்டுவதாக இருக்க வேண்டும்
  • இகபானாவின் இறுதி வடிவம் அப்போதைய பருவத்தை குறிக்க வேண்டும்
  • எந்த நிகழ்வுக்கு இகபானா அமைக்கப்படுகின்றது என்பதை கருத்தில்கொண்டு மலர்களையும் உலர்ந்த இலைகளையும் அரும்புகளையும்  சரியான இடங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்
  • மலர்த்தண்டுகளும், கிளைகளும் கொள்கலத்தின் நீர்மட்டத்துக்கு மேல் 4 இன்ச் உயரத்தில்  ஒன்றாக இணைத்த பின்னரே  அமைக்கப்படவேண்டும்’
  • கிளைகளும் இலைகளும் ஒன்றை ஒன்று ஒருபோதும் குறுக்கிடக்கூடாது
  • அமைக்கப்படும் மலர்களின்  பிரத்யேக இயல்பு மறைந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்
  • கிளைகளோ, மலர்களோ, இலைகளோ ஒருபோதும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைந்துவிடக்கூடாது
  • சொர்க்கத்தை குறிப்பவை பிறவற்றை விட உயரமாகவும்  மலரமைப்பின் மத்தியிலும் இருக்க வேண்டும்
  • மனிதனுக்கான இரண்டாவது அமைப்பு சொர்க்கத்தின் நீளத்தைவிட பாதியைத்தான்  கொண்டிருக்கவேண்டும்
  • மூன்றாவதும் மிகசிறியதுமான பூமியை குறிப்பது, மனிதனுக்கு வைக்கப்பட்டிருக்கும் மலரின் உயரத்தில் பாதி இருக்க வேண்டும்
  • மலர்களை தேர்ந்தெடுக்கையில் நீண்ட மலர்க்காம்புள்ளவைகளையே தேர்ந்தெடுக்கவேண்டும். மேலும் ஒரே திசையில் இருக்கும் இரு கிளைகள் ஒரே நீளம் கொண்டவையாக இருக்க கூடாது. ஒன்றை ஒன்று மறைக்கும் இலைகளை இறுதியில் கத்தரித்து நீக்க வேண்டும்
  • மலர்களோ, இலைகளோ கிளைகளோ மற்றவற்றை முழுமையாகவோ அல்லது அவற்றின் விளிம்புகளையோ மறைக்கும் படி அமைந்திருக்க கூடாது, முழுமையாக அனைத்தையும் அமைத்தபின்னரெ தேவையற்றவை எவை என முடிவு செய்ய வேண்டும். இகபானா அமைப்பை மிக மிக பொறுமையுடன் செய்யவெண்டும்
  • அனைத்து இகபானா அமைப்புக்களிலும்  மனிதனை குறிக்கும் முழுமையாக மலர்ந்த மலர்களும்,  பூமியை குறிக்கும் அரும்புகளும்  சொர்க்கத்தை குறிக்கும் பாதி மலர்ந்த மலர்களும் கலந்திருக்க வேண்டும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட முழுமையாக மலர்ந்த மலர்கள் இருப்பின் ஒன்றையடுத்து ஒன்று என உயரம் குறைவாக இருக்கும்படி அமைக்கவேண்டும்.
  • ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற மலர்கள் சரியான இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதும் மாறா விதிகளில் ஒன்று

கடுங்காற்று வீசும் மார்ச் மாதங்களில், இகபானா அமைப்புக்களின் தண்டுகள் காற்றில் வளைந்தவை போல அமைக்கப்பட்டிருக்கும். கோடைக்காலங்களில் அகலமான நீர்நிரம்பிய தட்டுக்களில் மலர்களும் இலைகளும் அமைக்கப்படும்.

பைன் மரங்கள் நீளாயுளுக்கும், சாமந்திகள் உயர்குடியினரை குறிக்கவும் தாமரை  உடல் மற்றும் உள்ளத்தின்  தூய்மையையும் பிற பருவ கால மலர்கள் அழகையும் வசீகரத்தையும் குறிக்கின்றன. இகபானாவின் மையப்பகுதி புத்தரை குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. அனைத்து மலர்களின் அருகிலும் இலைகள் இருக்க வேண்டும். 

கோடையில் பசும் இலைகள் மிக அதிகம் இருக்கும்படியும்,இலையுதிர் காலத்து அமைப்புகளில் பொன்மஞ்சள் நிறத்தில் பழுத்திருக்கும் இலைகள் ஆங்காங்கே இருக்கும்படியும் அமைந்திருக்கும் இதே விதிகளின் படி தொங்கும் ஜாடிகளிலும் இகபானா அமைக்கப்படுவதுண்டு

அரிதாக  பிரத்யேக காரணங்களின் பேரில் சிறப்பு நிகழ்வுகளுக்கென இலைகளின்றி மலர்கள் மட்டுமோ அல்லது மலர்களின்றி இலைகள் மட்டுமோ கொண்டும் இகபானா அமைக்கப்படும் 

இலைகளின் சுருளுக்குள் இருக்கும் சிறு பூச்சிகளுடனும், கிழிந்த இலைகளும், அழுகும் கனிகளும் கூட இகபானாவில் அமைக்கப்பட்டு இயற்கையின் அதே காட்சியை பிரதிபலிப்பதும் உண்டு

 இகபானாவின் பால் பேதங்கள்

ஜப்பனியர்கள் பாறைகளில், கற்களில், அருவிகளிலும் கூட பால் வேற்றுமையை காண்பவர்கள். மலர்களின் பருவங்களிலும் கூட இவ்வாறு பால் பேதம் உண்டு அரும்புகள் பெண், மலர்ந்தவை ஆண், மலர்ந்து வாடியவை மீண்டும் பெண் என ஜப்பானில் கருதப்படும்

இகபானா அமைப்புக்களில் இலைகளின் அடியில் இருக்கும் மலர்ந்த மலர்கள் பெண்மையை குறிப்பதாக கருதப்படும் இது (In)  இன் எனப்படும். எப்போதும் பெண்மைக்கு இடப்பக்கமே பூமி இருக்கவேண்டும்.  (yo) யோ எனப்படுவது ஆண்மையை குறிக்கும் இதற்கு வலப்பக்கம் பூமி இருக்க வேண்டும்.  இகபானாவில் இலைகளின் பின்புறம் ஆணென்றும் முன்புறம் பெண்ணென்றும் கருதப்படும். இரட்டை இலைகள் இணைந்து அமைந்திருக்கையில் கொள்கலனின் வெளிப்புறத்தை நோக்கி இருப்பது ஆண். உள்நோக்கி இருப்பது பெண்.

இப்படியான இகபானா மலரமைப்பின் இந்த பால் வேறுபாடுகளுக்கான  நியதிகள் ஜப்பானில் மட்டுமே முறையாக பேணப்படுகின்றன. ஜப்பானுக்கு வெளியேயான இகபானா அமைப்புக்களில் இவை தளர்த்த பட்டிருக்கும். 

மலர்கள் வாடாமலிருத்தல்

இகபானாவில் அதிமுக்கியமானது  அலங்காரமாக அமைக்கப்பட்டிருக்கும் மலர்கள் வாடாமல் நீண்ட நாட்களுக்கு இருப்பதற்கான ரகசிய வழிமுறைகள் தான். இகபானா ஆசிரியர்கள் பலரும் இதற்கான மருந்துக்கலவை என்ன என்பதை மிக ரகசியமாக வைத்துக்கொண்டு  கல்விகற்று முடித்து பட்டம் வாங்குகையில் மாணவர்களுக்கு தெரிவிப்பது உண்டு. எப்போதுமே  அந்த ரகசியங்களை  வெளிப்படுத்தாமல் மரணப்படுக்கையில் இருக்கையில் மாணவர்களுக்கு தெரிவிக்கும் ஆசிரியர்களும் உண்டு.

பலவகையான மூலிகை மருந்துகளும், அவற்றின் ரகசிய கலவைகளும் இகபானா மலர்கள் வாடாமலிருக்க உபயோகப்படுத்தபப்டுகின்றன.

மலர்கள் வாடாமல் இருக்க மலர்க்காம்பின் அடிப்புறத்தை வேகவைப்பது, எரிப்பது, நீராவியில் காட்டுவது, நசுக்குவது என பல்வேறு ரகசிய வழிமுறைகள் ஒவ்வொரு பள்ளியிலும் பிரத்யேகமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. ரசாயன பொருட்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன என்றாலும் மலர்க்காம்புகளை நீருக்கடியில் வைத்து வெட்டுவது இவற்றில் அடிப்படையான ஒன்று. இதுவே இகபானா மலரமைப்புக்களை நெடுநாட்கள் வாடாமல் வைத்திருக்கிறது இம்முறை மிஸுகிரி (mizugiri)  எனப்படுகிறது

இகபானா பள்ளிகள்

 இகபானா கலைக்கான பள்ளிகள் சுமார் மூன்றாயிரத்துக்கும் அதிகமாக ஜப்பானில் மட்டும் உள்ளது. உலகின் பிறபாகங்களிலும் இகபானா பள்ளிகள் உள்ளன, இவற்றில் மிக பிரபலமானது இகனோபு பள்ளி, அடுத்தது ஷோகெட்ஷு பள்ளி

இகனோபு (I K E N O B U), 70 0 AD

 ஓனோ நோ இமோகோ (Ono- no- Imoko) வினால் 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இதுவே இகபானா பள்ளிகளில் மிக பழமையானதும் சிறப்பானதாகவும் ஜப்பானில் கருதப்படுகிறது இதன்  முதன்மை ஆசிரியர் எப்போதும் இகனோபு என்றே அழைக்கப்படுவார். இப்பள்ளியின் இப்போதைய ஆசிரியர் 45 ஆவது தலைமுறையை சேர்ந்தவர்

ஷோகெட்ஷு (SHOGE TSU  ) 1171 — 1231

இப்பள்ளியை உருவாக்கியவர்   மையோயி ஷோமின்  (Myoye Shomin).

இவற்றோடு பிரபலமாக இருக்கும் பிற பள்ளிகள்;

  1. ஹிகாஷியாமா பள்ளி  (HIGASHIYAMA )  1436- 1492 

இது  அஷிகாகா யோஷிமஸா வால் துவங்கப்பட்டது (Ashikaga Yoshimasa)

  • சென்கி கோ ரையூ (SENKE- KO – RYU) 1 5 2 0 .

பிரபல சென் நோ ரிக்யூவால் துவங்கப்பட்ட பள்ளி  ( Sen- no- Rikyu )

  • பிஷோ ரையூ (BIS HO- RYU)1545

கோட்டோ டாய்காக் உனோக் அமியால் துவங்கப்பட்ட  (Goto Daigak unok ami) இதுவே பிறவற்றைக்காட்டிலும் ஏராளமான கிளைகளை கொண்டிருப்பது

  • கோஷின் ரியூ  (Ko-SHIN- RYU) 1600 — 1624.

ஷின் டெட்சு சாய் துவங்கியது இப்பள்ளி (Shin- tetsu – sai)

இகபானா கற்றுக்கொள்பவர்களுக்கு முதலில் கண்களை இயற்கையின் நுண்மையான அழகுகளை காணும் பயிற்சி அளிக்கப்படும். மலர்களின் மெய்யான அழகை ஆராதிக்க துவங்குபவர்களே இகபானாவில் இறங்கமுடியும். 

கராத்தே பள்ளிகளின் கருப்பு பெல்ட்டை போலவே இகபானா கல்வியிலும் மதிப்பீட்டு முறைகள் உள்ளன.  இகபானா கல்வியில் உயர்ந்தபட்ச மதிப்பீடு என்பது க்யூ (kyu) எனப்படும்.  க்யூ அடைந்தவர்கள் வெகுகாலம் இகபானா கலையை பயிற்றுவிக்கும் தகுதி கொண்டவர்கள் ஆகிறார்கள். 

கத்தரிக்கோலை எப்படி பிடிப்பது, குச்சிகளை எப்படி உடைக்காமல் வளைப்பது ,மரபை உணர்த்தும் மலர்களை தெரிவு செய்வது, சரியான கிண்ணங்களை தேர்ந்தெடுப்பது போன்றவற்றிற்கான பயிற்சிகளே இகபானா கல்வியில் பாலபாடங்கள்.

இகபானா மலர்களையும் பிற பொருட்களையும் சூழலுடன்  பொருத்திப் பார்த்து அவற்றின் அழகை ஆராதிக்கவும் ஒவ்வொரு பருவத்திற்கான சிறப்புகளை உணரவும் கற்றுக்கொடுக்கிறது

பாணிகள்  

ரிக்கா; இயற்கையின் அழகை போற்றும் புத்த சமய வெளிப்பாடாக நிற்கும் பூக்கள் எனப்பொருள்படுகிறது ரிக்கா பாணி. ரிக்கா அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்னும் கருத்தை விளக்குவதுதான்.பிரபஞ்சத்தின் ஒரு துளியை அழகுற இயற்கையின் அங்கங்களை கொண்டு அமைப்பதே ரிக்காவின் அடிப்படை.இம்முறையில் மலர்கள் நேராக நிற்கும்ப டி அமைக்கப்படும்

நாஜெயிரி; இந்த பாணி ”அப்படியே வீசி எறிவது ” என்னும் பொருளில் இயற்கையின் ஒழுங்கற்றமையில் இருக்கும் நேர்த்தியை சொல்வது.

மொரிபானா; மொரிபானா ’மலர்களை அடுக்குவது’ என்று பொருள்படும் கலை இதில் சுய்பான் (suiban) எனப்படும் தட்டையான ஆழம் குறைவான அகலமான  நீர் கொள்கலன்கள் உபயோகப்படுத்தப்பட்டன. மேலும் மரபாக அதுவரை இகபானாவில் உபயோகப்படுத்தப்பட்டவகளை காட்டிலும் பல புதிய பொருட்களும் இணைந்தன. மொரிபானாவில் நிலக்காட்சிகளை பிரதிபலிக்கும் ஷாகேய்  (shakei) என்னும் அமைப்புக்களும் அதிலிருந்து உருவாகியது.

செயிக்கா (Seika) என்பது  மிக எளிய பாணி. இதில் மூன்று மலர்கள் மட்டும் உபயோகப்படுத்தப்படும்

சா பானா (cha-bana) என்பது தேநீர் சடங்குகளின் போது அமைக்கப்படும் பிரத்யேக இகபானா அமைப்புகள்

நவீன  இகபானா

ஏறக்குறைய 600 வருட பழமையான கலையான இகபானா இன்றும் சிறப்பாக ஜப்பானில்  திகழ்கிறது. பிரபல ஜப்பனிய கலை வடிவங்களான மாங்கா மற்றும் அனிமேவிலும்  இகபானா முக்கிய இடம் பெற்றிருக்கின்றது.

1957ல் இகபானா என்று ஒரு திரைப்படம் வெளியானது.  2017ல் வெளியான ’வாளும் மலரும்’ என்னும் திரைப்படம் 16 ம் நூற்றாண்டில் இகபானா உருவான வரலாற்றை சொல்கிறது. 

நவீன இகபானாவில் செயற்கை சாயங்களில் பல வடிவங்கள் இலைகள் மீது தீட்டப்படுகின்றன தண்டுகளும் கிளைகளும் வேண்டிய வடிவங்களில் கத்தரிக்கப்படுகின்றன. 

1912ல் இகபானாவின் முதல் நவீன பள்ளி அன்ஷின் ஒஹாராவினால் துவங்கப்பட்டது இவர் இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை இகபானாவில் புகுத்தினார். ஒன்று  மேற்கத்திய மலர்களை இகபானாவில் இணைத்துக் கொள்வது, இரண்டு  ஆழம் குறைவான வட்ட வடிவ கொள்கலன்களை உபயோகிப்பது. இந்த இரு மாற்றங்களினால் இகபானா  ஜப்பானின்  கூடுதல் பிரியத்துக்குரியதாகி விட்டிருக்கிறது 

சொகெட்ஸுபள்ளி (Sogetsu)  1927ல் சொஃபு டெஷிகாஹராவால் (Sofu Teshigahara) துவங்கபட்டபோது இகபானா சிற்பக் கலைக்கு நிகரான இடத்தை பெற்றது. இவரே அதுவரை இகபானாவில் இல்லாதிருந்த, ஆனால் இயற்கையின் அம்சங்களான தூசி, அழுக்கு, பாறைத்துண்டுகள் மற்றும் பாசிகளையும் இகபானாவின் அங்கங்களாக்கினார். சொகெட்ஸு பள்ளியின் இகபானா பாணி பிளாஸ்டிக், காகிதம் மற்றும் உலோகங்களையும் இணைத்துக் கொண்டது.

நவீன இகபானா ஆழம் குறைவான கிண்ணங்களில் அமைக்கப்படும் மொரிபானா பாணி மற்றும் உயரமான ஜாடிகளை கொண்ட பழைய நாஜெயிரி பாணி ஆகிய இரண்டு பிரிவுகளையும் கொண்டிருக்கிறது

தற்போது இகெனொபு, மொரிபானா(ஒஹாரா) மற்றும் சோகெட்ஸு ஆகிய மூன்று பாணிகளுமே ஜப்பானில் பிரசித்தம்.

20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இகபானா சர்வதேசமயமானது எலென் கோர்டொன் ஏலென் (Ellen Gordon Allen) என்னும் ஜப்பானில் தங்கி இகபானா கலையை கற்றுக் கொண்ட அமெரிக்க பெண் ,1956ல்  ஜப்பானின் முக்கிய இகபானா பள்ளிகளை ஒன்றிணைத்து சர்வதேச இகபானா அமைப்பை நிறுவினார்  அவரது செயல்நோக்கம் இகபானா வின் மூலம் தோழமையை உருவாக்குவது-

தற்போது இகபானா கலையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்குமான மையக்கருத்தென்பது தோழமையே. இகபானாவில் உபயோகப்படுத்தப்படும் பொருட்களுக்கிடையேயும்,  இக்கலையை கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கிடையேயும், ஆசிரியர்களுடனும் தோழமையை உருவாக்குவதே நவீன இகபானாவின் முதன்மை நோக்கமாக இருக்கிறது

ஜப்பானில் மட்டுமே சுமார் 15 மில்லியன் ஆர்வலர்கள் தற்போது இகபானாவை கற்று கொண்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலோர் பெண்கள்

ஜப்பானில் பிரபலமான இகபானா பள்ளி சோஹோ ஜி ஆலய வளாகத்திலிருக்கிறது. இங்கு ஆசிரியர்கள் மட்டுமே 60 ஆயிரம் பேர்.

இகபானா கண்காட்சிகளும் போட்டிகளும் வருடாவருடம் நடைபெறும். இதில் ஆகச்சிறந்த இகபானா கலைஞர்கள் போட்டியிடுவார்கள் 

இகபானா இப்போது ஜப்பானின் ஒவ்வொரு முக்கிய விழாக்களிலும் சிறப்பான இடம் பெற்றிருக்கிறது. மார்ச் 3ஆம் தேதியில் கொண்டாடப்படும் இளம்பெண்களுக்கான விழாவான ஹினா மாட்சுரியின் போது (Hina Matsuri) பீச் மரங்களின் சிறு மலர்க்கிளைகளுடன் மலர்களும் பொம்மைகளும் வைத்த இகபானா அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது

அதுபோலவே மார்ச் 5 அன்று கொண்டாடப்படும் ஆண்மைக்கான விழாவில் ஜப்பானிய ஐரிஸ் மலர்கள் இகபானாவில் அமைக்கப்பட்டிருக்கும். ஜூலை 7 அன்று நடைபெறும் டனபாடா (Tanabata) என்னும் நட்சத்திர விழாவில் இகபானாக்கள் மூங்கிலில் அமைக்கப்படும். செப்டம்பரில் ஜப்பானியர்கள் நிலாக்காயும் நிகழ்வான சுகிமி (tsukimi) நடைபெறுகையில் மக்கள் கூடுமிடங்களில்  அப்பருவத்தில் செழித்து வளரும் புல் வகையான  பம்பஸ் புற்கள் கலந்த இகபானா அமைப்புக்கள்   அமைக்கப்பட்டிருக்கும்

நிலவையோ கதிரையோ மழையையோ ஆராதிக்கவும் கவனிக்கவும் நேரமற்ற இப்போதைய விரைவு வாழ்க்கையில் இயற்கையையும், அன்றாடங்களின் அழகையும் கவனிக்கக் கற்றுத்தரும் இகபானாவை பயிலும் வாய்ப்பில்லையெனினும் இகபானா அலங்காரங்களை கவனித்துப் பார்க்கவாவது முயற்சிக்கலாம்.

இந்த வலைத்தளத்தில் இக்கலையை வீட்டிலிருந்தே கற்றுக்கொள்ள உதவும் காணொளிகள் உள்ளன’ ikebanahq.org.  

இகபானாவின் பல வடிவங்களைக்காண; Gallery – Ikebanalab

கூனை மலர்-ஆர்டிசோக் மலரரும்புகள்

கிரேக்க தொன்மவியலில் ஆகாயம்  இடி ஆகியவற்றின்  கடவுளான ஜீயஸ் தனது சகோதரர் பொசைடனைச் சந்திக்கச் சென்றபோது, சைனாரா என்ற அழகான பெண்ணைக் கண்டார். உடனடியாக அவள் மீது காதலில் விழுந்த அவர்அவளை ஒரு தேவதையாக்கி தன்னுடன் ஒலம்பஸ் மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மிகவும் தனிமையிலிருந்த சைனாரா ஜீயஸுக்கு தெரியாமல் தனது குடும்பத்தைப்  பார்க்க ரகசிய பயணங்களை மேற்கொண்டார். ஜீயஸ் இவற்றைக் கண்டுபிடித்தவுடன்  கோபமடைந்து, ஒலிம்பஸ் மலையில் இருந்து சைனாராவை  ஒரு கூனைப்பூவாக மாற்றி கீழே தள்ளிவிட்டார் என்று ஒரு கதை இருக்கிறது.

இக்கதையின் பேரில்தான் கூனைப்பூ என்னும் ஆர்டிசோக் (artichoke ) கின் அறிவியல் பெயரும் சைனாரா கார்டன்குலஸ் (Cynara cardunculus, variety scolymus)  என வைக்கப்பட்டது.

மனிதர்களின் பழமையான உணவுகளில் கூனை மலர்களும் ஒன்று இந்த சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் சதைப்பற்றான உண்ணக்கூடிய மலரரும்புகள்தான் ஆர்டிசோக்குகள் . இவை உருண்டை அல்லது பிரெஞ்ச் ஆர்டிசோக்குகள், முள் முட்டைக்கோசு  ஆகிய பெயர்களிலும் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

 ஆங்கில சொல்லான artichoke  என்பது 16 ம் நூற்றாண்டில் ’கூரிய’ என்னும் பொருள் கொண்ட  (அரபிச்சொல்லின் வேர்களை கொண்ட)  இத்தாலிய சொல்லான articiocco என்பதிலிருந்து பெறப்பட்டது.

மத்திய தரைக்கடல் பகுதிக்கும் வட ஆப்பிரிகாவுக்கும் சொந்தமான இந்த தாவரங்கள் பழங்காலத்திலிருந்தே உணவாகப் பயன்பட்டுவருகின்றன. இத்தாலியில்  1400 ம் ஆண்டில் கூனைப்பூ உண்ணப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அப்போது இதன்  தளிரிலைகளும் உண்ணப்பட்டன.

இவை பண்டைய கிரேக்கத்தில் மருந்தாகவும் உணவாகவும் பயன்பாட்டில் இருந்தன. பண்டைய ரோமானிய செல்வந்தர்கள் மட்டும் இவற்றை உணவில் விரும்பி உண்டார்கள் அக்காலத்தில் ரோமானிய குடிமக்களில் வறியவர்கள் கூனை மலர்களை உண்ணத் தடை இருந்தது.  பல நாடுகளில் கூனைமலர்கள் பாலுணர்வை தூண்டும் இயல்புடையதென்பதால் பெண்கள் அவற்றை உண்ணவும் தடை இருந்தது.

15 ம் நூற்றாண்டில் இவை ஐரோப்பாவில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டன. டச்சு மக்களால் இங்கிலாந்துக்கு 1530 ல் ஆர்டிசோக்குகள் அறிமுகமாயின. 19 ம் நூற்றாண்டில்   அமெரிக்காவிற்கு பிரஞ்சு குடியேறிகளால் கொண்டு வரப்பட்ட இவை லூசியானாவில் முதலில் சாகுபடி செய்யபட்டன

7 அடி உயரம் கொண்ட  பல்லாண்டுத் தாவரங்களான கூனைச்செடிகள்  9 அடி சுற்றளவுக்கு பரந்து வளரும். ரோஜா மலர்களைப்போல சுற்றடுக்கில் அமைந்திருக்கும் அடர்பச்சை  இலைகள் 1 மீ  நீளம் .வரை வளரும் ஒவ்வொரு வருடமும் மலரும் காலம் முடிகையில் இலைகளும் வாடி உதிர்ந்து பின்னர் மீண்டும் புதிதாக தளிர்க்கும்

தாவரம் வளரத்துவங்கிய 6 வது மாதத்திலிருந்து மலர் அரும்புகளை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு  மலர்த்தண்டிலும்  1 லிருந்து 5 கூனைப்பூக்கள் உருவாகும்.  ஒரு வருடத்தில்  ஒரு தாவரத்தில் சுமார் 20 கூனைப்பூக்கள் உருவாகும்.

இச்செடிகளின் மலர்கள் மலர்ந்து விரியும் முன்னர்  மலரும்புகளின் கூர் நுனி கொண்ட தோல் போன்ற தடித்த  இதழ்களைப்போலிருக்கும்  மலரடிச்செதில்களின் (bracts) உள்ளிருக்கும் சதைப்பற்றான மாவுபோன்ற பொருள் உண்ணத்தகுந்தது. அரும்புகளின் இதயம் எனப்படும்  சதைப்பற்றான மையப்பகுதி மிகச்சுவையானது.

அறுவடை செய்யாத  அரும்புகள் அழகிய ஊதா நிற  மலர்களாக  மலரும். 8 வருடங்கள் வரை பலனளிக்கும் இவை விதைகளை உருவாக்கினாலும்  தாவரங்களிலிருந்து தோன்றும் பக்கச்செடிகளிலிருந்தும் வேர்த்துண்டுகளிலிருந்தும் இவற்றை எளிதாக வளர்க்கலாம்.

ஆர்டிசோக்குகளில்  பொட்டாஷியம், வைட்டமின் C , நார்ச்சத்து இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.

சிறிய அரும்புகள் அதிக சுவையுடன் இருக்கும். இவற்றை  முழுமையாக  நீரில் அல்லது  நீராவியில் வேகவைத்தும்,  சமைக்காமல் அப்படியே பச்சையாகவும் உண்ணலாம்

இவற்றில் பல நிற மலர்கள் இருந்தலும் மிக அதிகம் சாகுபடி செய்யபடுவது பசைநிற மலர்வகைகளே. உணவுப்பயிர்களாகவும் அலங்காரச்செடிகளாகவும் இவை வளர்க்கப்படுகின்றன.

உலகின் மிக அதிக ஆர்டிசோக் உற்பத்தியாளராக இத்தாலி, எகிப்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இருக்கின்றன.  பிரபல இத்தாலிய மதுவகையான சைனார் (Cynar) ஆர்டிசோக் மலர்ரும்புகளை நொதிக்கச்செய்து உருவாக்கப்படுகின்றது. 16 சதவீத ஆல்ஹகாலை கொண்டிருக்கும் இம்மது  உணவுக்கு முன்னர் பசியுணர்வை தூண்ட அருந்தும் மதுவகைகளில் மிக பிரபலமானது. (aperitif).

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இவை மிக அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. கலிஃபோர்னியாவின் மாண்டெரே (Monterey) பகுதி உலகின் ஆர்டிசோக் மையம் என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் மார்ச் 16 ஆர்டிசோக் நாளாக கொண்டாடப்படுகிறது கலிஃபோர்னியாவின் வருடா வருடம் நடைபெறும்அர்டிசோக் கொண்டாட்டங்களில் 59 வது கொண்டாட்டம் 1948ல்  நடைபெற்ற போது மர்லின் மன்றோ ஆர்டிசோக் அரசியாக பட்டமளித்து சிறப்பு செய்யப்பட்டார்.

கார்டூன் எனபடும் இவற்றின் காட்டுமூதாதை (Cynara cardunculus) யின்  இளம் இலைகளும் மலரும்புகளும் தண்டுகளும் வேர்களும் கூட  உண்ணத்தகுந்தவை இவையும் இப்போது ஆர்டிசோக்குகளுடன் சாகுபடியாகின்றன

.

 ஜெருசேலம் ஆர்ட்டிசோக் எனப்படுபவை இந்த கூனைப்பூக்கள் அல்ல. Helianthus tuberosus என்னும் தாவரத்தின் கிழங்குகள்தான் இந்த பெயரில் அழைக்கப்படுகின்றன.. வியட்நாமில் இதிலிருந்து தேநீர் தயாரித்து மருத்துவக் காரணங்களுக்காக அருந்தப்படுகிறது

  இவை சுவைக்காக, உடல்நலனுக்காக,, ஈரல் பாதுகாப்பு வயிற்றுக்கோளாறுகளுக்கான சிகிச்சைக்கு என பல்வேறு மருத்துவக் காரணங்களுக்காவும் உண்ணப்படுகின்றன. இவற்றின் இரு முக்கிய வேதிப்பொருட்கள் சையனாரின் மற்றும் சிலிமாரின்  (cynarin and silymarin).

ஆர்டிசோக் மலரரும்புகளை எளிதாக சமைத்து உண்ணுதலை கற்றுத்தரும் காணொளி: https://youtu.be/CPwEX4Q1QAs

தீக்கொன்றை

தாவர அறிவியல் பெயர்: Delonix regia

SS Naturals15 Royal Poinciana seeds, Gulmohar, Delonix Regia tree, Flame  tree, Flamboyant Tree,Krishnachura, Kempu torai,ornamental tree,  Landscaping,Fastest growing Tree : Amazon.in: Garden & Outdoors

 ஆங்கிலப்ப்பெயர்கள்: Flamboyant, Royal Poinciana, Gulmohar tree,  Flame tree, Peacock flower tree, Mayflower tree ,  flame of the forests, flame tree, , poinciana,

தமிழ்பெயர்கள்: தீக்கொன்றை, குல்மொஹர், நெருப்புக்கொன்றை, காட்டுத்தீ மரம், மயூரம், செம்மயில்கொன்றை, மயிற்கொன்றை, மேமாதப்பூ மரம் 

பயறுவகைத்தாவரங்களின்பேபேசிகுடும்பத்தின்துணைக்குடும்பமானஸிசல்பீனியேசி (Caesalpiniaceae)குடும்பத்தை  சேர்ந்தஇம்மரம்மடகாஸ்கரைதாயகமாக கொண்டது.

 உலகநாடுகள் பலவற்றில் பல பெயர்களில் இம்மரம் அழைக்கப்படுகிறது,.அமெரிக்காவில்  தீக்கொன்றை மரங்களை  அறிமுகப்படுத்திய ’’பிலிப் டிலாங் வில்லியர்ஸ் போயின்சி’’- (Phillippe de Longvilliers de Poincy) என்பவரின் பெயரில் இதனை ஆங்கிலத்தில் ராயல்போயின்ஸியானா –Royal Poinciana  என அழைப்பதுண்டு.

கேரளாவில் ஏசு கிருஸ்து சிலுவையில் அறையப்பட்ட கல்வாரி மலையில் இருந்த இம்மரத்தின் மீது ஏசுவின் ரத்தத்துளிகள் சிதறியதில் இம்மலர்கள் ரத்த சிவப்பு நிறம் வந்ததாக  நிலவும் ஒரு நம்பிக்கையில் இம்மரத்தின் மலர்களை கல்வாரிப்பூ எனக்குறிபிடுகிறார்கள். கேரளாவில் இவற்றை வாகையென்றும் பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள் 

வியட்நாமில்  ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்க படுகையில் இவை மலர்வதால்இம்மரம்  அங்கு மாணவ மரம் என்று அழைக்கப்படுகிறது.  

இந்தியாவில் 200 வருடங்களுக்குமுன்பிருந்தே காணப்படும் இம்மரம்பிரிட்டிஷ் இந்தியாவில் தேயிலை தோட்டங்களில் நிழல் தரும் பொருட்டு பிரிட்டிஷாரால்அறிமுகப்படுத்தபட்டது. மடகாஸ்கரில்19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வென்ஸலாஸ்போஜரால் (Wenceslas   Bojer) கண்டறியப்பட்டஇம்மரங்களின் எண்ணிக்கை  இப்போது மடகாஸ்கரில்அருகிவிட்டாலும்உலகின் பல பகுதிகளில் இவை ஏராளமாக சாலையோரம் நிழல் தரும் அழகு மரங்களாகவும், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின்வளாகங்களில்அழகுக்காகவும்வளர்க்கப்படுகின்றன..

delonix regia | pressed flowers by margaret woermann | Plantae, Ideias de  tatuagens, Tatoo

தீக்கொன்றை மரங்கள் 15 மீட்டர் உயரம் வளரக்கூடியவை.மரத்தண்டு2 மீட்டர் அகலம் வரை பெருத்திருக்கும். பெரும்பாலும் பசுமை மாறாமரமாக இருக்கும், இது குறைந்த காலத்துக்கு குறிப்பிட்ட மாதங்களில்உலகின் சில இடங்களில் மட்டும் இலைகளை உதிர்க்கும்இயல்புடையது. இவற்றின் மலரும் காலம் இந்தியாவில் மே முதல் ஜூலை வரை ஆனால் பிற நாடுகளில் இந்த காலம் வெகுவாகமாறுபட்டிருக்கும்.இந்தியாவில் தீக்கொன்றைகள்மார்ச்சில் இருந்து ஜூலை வரை இலைகளை உதிர்த்திருக்கும்.  

வேகமாக வளரும் இவை 3 வருடங்களில் சுமார் 8 மீட்டர் உயரம் வரை வளர்ந்து விடும்  4 லிருந்து5 வருடங்களில் மலர துவங்கும்.  

மயிலிறகு போல அகன்ற இருகூட்டிலைகள்அடர்பச்சை நிறத்தில் இருக்கும். இலைகள் சுமார் 60 செமீநீளமும்20 லிருந்து40 ஜோடி கூட்டிலைகளை எதிர் எதிராகவும்கொண்டிருக்கும். மரத்தின் மேற்பரப்பு ஏராளமான இலைகளையும்பெருங்கொத்துக்களாகமலர்களுடனும் அகன்று இருக்கும்.

File:Gulmohar (Delonix regia) leaves.jpg - Wikimedia Commons

கூட்டிலைக்காம்பு சற்று பருத்திருக்கும், கிளை நுனிகளிலும், கணுவிடுக்குகளிலிருந்தும், மலர் மஞ்சரிகள் உருவாகும். மஞ்சரிகளில்மலர்க்காம்புகளின் நீளம் ஓரளவுக்கு சரிசமமாக இருக்கும். கிளை நுனியில் தோன்றும் மஞ்சரிகள் அளவில் பெரியதாக இருக்கும். மலர்களின் நிறம் அடர் சிவப்பிலிருந்து ஆரஞ்சு, இளஞ்சிவப்பு என வேறுபடும். 4லிருந்து 5 செமீஅளவுள்ள பெரியமலர்கள் ஐந்து இதழ்களுடன் இருக்கும். 4 இதழ்கள்சிவப்பிலும் ஒருஇதழ் சற்று பெரிதாக மஞ்சள் வெள்ளை தீற்றல்களுடனும் இருக்கும்

Flamboyant (Delonix regia) | Delonix regia FABACEAE-CESALPIN… | Flickr

இதழ்கள் பெரிதான நகங்களை போலிருப்பதால் கிரேக்கமொழியில் dilo என்பது’’தெளிவாக’’என்னும் பொருளிலும் onix என்றால்’’நகங்கள்’’(Claws) என்றும் பொருள்தரும் இருசொற்களை சேர்த்து இம்மரத்தின்பேரினத்தின்பெயரிடப்பட்டது. சிற்றினமான ரீஜியா என்பது’’அரசனைப்போல’’என்றுபொருள்தரும் இலத்தீன சொல்லிலிருந்து பெறப்பட்டது

தீக்கொன்றையைபோலவே சிறப்பான இயல்புகளைகொண்டிருக்கும் பலதாவரங்களின் சிற்றினங்களுக்கு ரீஜியா எனபெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

Delonix regia, the flame tree with dry p... | Stock Video | Pond5

5 செமீ அகலமும் 30 லிருந்து 60 செமீ நீளமும் கொண்டிருக்கும் நீண்ட தட்டையான கனிகள் கடினமான தோலுடன் இருக்கும். பளபளப்பான பெரிய  விதைகளும் கடினமான விதையுறையைகொண்டிருக்கும்.. 20லிருந்து40 விதைகள்கனியில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும்..விதைகள் மூலம் இனப்பெருக்கம் நடக்கும்..

மரப்பட்டை சாம்பல் கலந்த  மண் நிறத்தில் சொரசொரப்பாக இருக்கும்..விதைகள் மிக கடினமான வெளியுறைகொண்டிருப்பதால் கொதி நீரில் மூழ்க வைத்து எடுத்து. ஈர காகிதங்களில்பொதிந்து வைத்து உலராமல்பாதுகாத்தால்.ஒரு வாரத்தில் இவை முளைக்கும். இயற்கையாக விதைகள்முளைக்க  வருடங்களாகும் 

இதன் மரம் அடர்த்தி குறைவானெதென்பதாலும், கரையான் மற்றும் பூச்சி தாக்குதலுக்குஆளாவதாலும்இவற்றிலிருந்து  மரச்சாமான்கள்செய்யப்படுவதில்லை. சிறு பொம்மைகள் செய்வது, சமையலறை கத்திகளின்கைப்பிடிகள் ஆகியவை செய்யவே  இவற்றை பயன்படுத்துகிறார்கள். கிளைகள் குச்சிகள் ஆகியவை விறகுக்காக பயன்படுகின்றன

மரப்பட்டையில் கிடைக்கும் பிசின் நீரில் கரைந்து  கொடுக்கும் பசை மாத்திரைகளைபிசைந்து உருவாக்க பயன்படுகிறது..

அழகிய பளபளப்பான விதைகளைக் கொண்டு ஆபரணங்கள் செய்யப்படுகிறது இனிப்பு சுவையும்புரதமும்   கொண்ட பிஞ்சுக்காய்களும்இலைகளும்மனிதர்களுக்கும்கால்நடைகளுக்கும்உணவாகிறது

இலைச்சாறு பல வேதிச்சேர்மங்களை கொண்டிருப்பதால் களை கொல்லியாகவும்பயன்படுத்தப்படுகின்றது.  பார்த்தீனியநச்சுக்களைவளர்ச்சியை  இதன் இலைச்சாறு ஓரளவுக்கு கட்டுபடுத்துவது  சமீபத்திய ஆய்வுகளில்கண்டறியப்பட்டிருக்கிறது

விதைகளும்மரப்பட்டையும், பாரம்பரிய  மருத்துவ முறைகள் பல்வேறு சிகிச்சைகளுக்குமருந்தாக  பயன்படுகிறது. 

சத்து நிறைந்த மலர்கள் பசியை தூண்டும், பலவீனம் போக்கும்,வயிற்றுப்போக்கு மூக்கில் ரத்தம் வடிதல், சர்க்கரை வியாதி, ஆகியவற்றிற்கு மருந்தாகும், பழங்குடியினர் மரப்பட்டைசாற்றை தலைவலி நிவாரணியாக  பயன்படுத்துகின்றனர்.மரப்பட்டை சாறு வெட்டுக்காயங்களில்  ரத்தப்பெருக்கைஉரையச்செய்து கட்டுப்படுத்தும், சிறு நீர் பெருக்கும் வலி நிவாரணமளிக்கும்.

Flame of the Forest - Delonix Regia - Gulmohar Tree | Delonix regia,  Poinciana, Royal poinciana

அரிதாக மஞ்சள் மலர்கள் இருக்கும் வகையும்தீக்கொன்றைகளில்  காணப்படுகிறது.Delonix regia var. flavida என்னும் அறிவியல் பெயர் கொண்டிருக்கும் மஞ்சள் கொன்றை மரத்திற்குபதிலாக  பலநூல்களில் இயல் வாகை மரத்தின் பெயரும்படமும்   தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்கும்.தீக்கொன்றைகளில் பொன்ஸாய் மரங்களும் உருவாக்காப்படுகின்றன.

Amazon.com : Bonsai Flamboyant Flame Tree Seeds to Grow | 20 Seeds | Delonix  regia, Prized Flowering Tropical Bonsai Tree Seeds : Patio, Lawn & Garden

தீக்கொன்றைகள் பல நாட்டு தபால் தலைகளிலும் இடம்பெற்றுள்ளன.

Delonix regia ASCENSIÓN 11/05/1981 | Post stamp, Postal stamps, Postage  stamps

கொமாட்சுனா

தோட்டத்தில் கொமட்சுனா கீரைகளை பார்வையிடும் யமஷிடா

20 கிராம் சுமார்  28 000 அமெரிக்க டாலர்கள் விலைகொண்ட   ட-ஹாங்- போ (Da-Hong Pao ) தேயிலைகளையும், யானைகளுக்கு சாக்கலேட், சோளம் மற்றும் உயர்தர காபி பழங்களை உணவாக கொடுத்து அவற்றின் சாணத்தில் செரிமானமாகாமல் கிடைக்கும் காபிக்கொட்டைகளிலிருந்து எடுக்கப்படும்   ஒரு கிலோ சுமார் 400 டாலர்கள்  விலை கொண்ட கருப்பு தந்த காபித்தூளைபோல (Black ivary coffee) மேலும் பல அரிய, அதிக விலைகொண்ட தாவரபொருட்கள் உள்ளன.அவற்றில் கொமட்சுனோ கீரையும் ஒன்று இது யமஷிடா கீரை என்றும்  அழைக்கப்படுகிறது:

டோக்கியோவை சேர்ந்த அஸஃபுமி யமஷிடா (Asafumi Yamashita) 25 வருடங்களுக்கு முன்பு பாரிஸுக்கு  சென்றார். பொன்ஸாய் கலைஞரான அவர் தான் உருவாக்கிய அழகிய பொன்ஸாய் மரங்களை அங்கு விற்று பொருளீட்டி வாழ்ந்தார். உலகெங்கும் பொன்சாய் மரங்கள் திருட்டுப் போவது போலவே யமஷிட்டாவின் தோட்த்திலிருந்தும் 2 போன்ஸாய் மரங்களை தவிர அனைத்தும் ஒரு துரதிர்ஷடமான் நாளில் திருட்டு போயின.

மனம் வெறுத்துப்போன யமஷிட்டா  பொன்ஸாய் தொழிலை கைவிட்டு தான் கொண்டுவந்திருந்த சில அரிய ஜப்பனிய வகை காய்கறிகளின் விதைகளை கொண்டு பாரீஸில் கிடைக்காத ஜப்பனிய கீரைகளையும் காய்கறிகளையும் அந்த தோட்டத்தில் பயிரிட்டார்.

 3000 சதுர அடிமட்டுமே கொண்ட அவரது தோட்டத்தில் 50 வகையான அரிய ஜப்பானிய தாவரங்கள் செழித்து வளர்கின்றன. பாரிஸின் மிக அதிக பொருளீட்டும் தோட்டக்காரராக யமஷிடோ இப்போதுஅறியப்படுகிறார்.

அவரது சின்னஞ்சிறு தோட்டத்தில் வளரும் அரிய வகை தாவரங்களில்  ஹினோனா என்னும் ஊதா டர்னிப் கிழங்குகளும், (hinona),  கொமாட்சுனா என்னும் கீரையும் (komatsuna),  சிவப்பு  கத்தரிக்காய்களும், அரிய பட்டாணி வகைகளும் குட்டித்தக்காளிகளும் பாரிஸீல் உயர்தர உணவகங்களின் வாடிக்கையாளர்களின் விருப்ப உணவாகி விட்டிருக்கிறது.

அதிக நார் சத்து நிறைந்த இந்த கொமாட்சுனா கீரைகள் ஒரு கிலோ 400 டாலர்கள் வரை விலைகொண்டவை. இந்த கீரைகளை அவர்  ஃப்ரான்ஸின் மிஷெலின் நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவகங்களின் சமையற்கலைஞர்களுக்கு மட்டும் கொடுக்கிறார்

 இந்த கொமாட்சுனா கீரையின் தாவர அறிவியல் பெயர் Brassica rapa var. perviridis. இந்த கடுகுக்கீரை வகை ஜப்பானிலும் தாய்லாந்திலும் மட்டுமே வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுகின்றது.

கொமாட்சுனா என்றல் ஜப்பானிய மொழியில் ’’கொமாட்சின் கீரை’’ என்று பொருள்.. ஜப்பானிய கிராமமான கொமாட்ஸுகாவா வை சேர்ந்த கீரைகள் இவை (Komatsugawa). அந்த கிராமத்தில் 17 ம் நூற்றாண்டிலிருந்து இக்கீரைகள் சாகுபடியாகின்றன.

ஜப்பானிய பேரரசர்களால் நியமிக்கப்படும்  ஷோகன் எனப்படும் மிக செல்வாக்கும் அதிகாரமும் நிரம்பிய ராணுவ அதிகாரிகளில்  எட்டாவது  அதிகாரியான டோக்குகவா யொஷிமுனே (Tokugawa Yoshimune) என்பவர் அந்த கிராமத்துக்கு  1719ல் வேட்டைக்கு சென்று திரும்பும் வழியில் மதிய உணவுக்கு வந்திருந்தார். ஒரு எளிய மடாலயத்தில் அவருக்கு காய்கறி சூப்பும் வேகவைத்த அரிசியும்   வதக்கிய உள்ளூர் கீரைகளும் கொடுக்கப்பட்டன. அந்த கீரையின் சுவையிலும் மணத்திலும் மயங்கிய அவர்  அங்கே ஓடிகொண்டிருந்த  கொமட்ஸு ஆற்றின் பெயரையே வைத்து கொமட்ஸுனா கீரை எனப் பெயரிட்டர் இப்போதும் அந்த ஷின் கொய்வா கட்டொரி மடாலயத்தில் புத்தாண்டின் போது இந்த  கீரை உணவு அனைவருக்கும் வழங்கப்படுகிறது (Shin-Koiwa Katori Shrine). அந்த மடாலயத்தின் தெய்வங்களுக்கும் அன்று இந்த கீரையே படைக்கப்பட்டு வழிபடப்படுகிறது

இந்த கீரைச்செடியின் எந்த பருவத்திலும் கீரைகளை உணவாக எடுத்துக்கொள்ளலாம். முற்றிய அல்லது இளங்கீரைகள் இரண்டுமே நல்ல சுவையான சத்தானவை.  அடர் பச்சை இலைகளுடன் 20 லிருந்து 80 நாட்களில் வளரும் இந்தச்செடி சுமார் 30 செமீ உயரம் வரை வளரும். அதிக வெப்பத்தை தாங்காத இந்த செடி நல்ல நிழலான இடங்களிலும் பசுமைகுடில்களிலும் மட்டுமே வளரும்.

கீரைகளை நறுக்கி எடுத்தபின்னர் அடித்தண்டுகளிருந்து மீண்டும் 3 முறை கீரைகள் வளர்ந்து அறுவடை செய்யப்படும்

லேசான இனிப்புச்சுவையையும் நல்ல மணமும் கொண்டிருக்கும் இந்த கீரையை சமைக்காமல் அப்படியே பச்சையாகவும் உண்ணலாம், வேகவைத்தோ, வாட்டியோ, வதக்கியோ அல்லது பொறித்தோ உண்ணலாம். சாலட்களிலும் சூப்புகளிலும் சேர்க்கலாம். இந்த கீரையிலிருந்து ஊறுகாய்களும் தயாரிக்கப்படுகின்றன.

கால்சியம், நார்சத்து போன்றவைகளையும் பல வைட்டமின்களையும் கொண்டிருக்கும் இந்த கீரை ஜப்பானியர்களின் விருப்ப உணவுகளில் ஒன்று,

கொமாட்சுனா கீரை விதைகள் அமேஸான் வர்த்தகத்தில் கிடைகின்றன.

யமஷிடா

தாமரை நாரிழைகள்

பின்னலாடைத் தொழிலில் இயற்கை நாரிழைகளின் நீடிக்கும் தன்மையில் உள்ள  சிக்கல்கள், மேலும் பல புதிய இயற்கை நார் இழைகளை குறித்த  ஆராய்ச்சிகளுக்கு  வழி வகுத்துள்ளன.

உலகெங்கிலும்  பல்வேறு தாவரங்களில் இருந்து இழைகள் பெறப்படுகின்றன. கற்றாழை, வாழை, யானைக்கற்றாழை, சணல், சணப்பை, மூங்கில், பால் நார், சோளம், சோயா,  புல்நார், நிலக்கடலை ஓடு,  காபி பீன்ஸ் கழிவுகள், அன்னாசி இலைகள் மற்றும் யூகலிப்டஸ் ஆகியவை அவற்றில் சில. 

இயற்கை இழைகள் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் பொருட்டு  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2009 ஆம் ஆண்டை சர்வதேச இயற்கை இழைகளின் ஆண்டாக அறிவித்தது – IYNF

samatoa

பின்னலாடை தொழிலில் மிகவும் விரும்பத்தக்க வடிவம் இறைவழிபாட்டுடன்  நெருங்கிய தொடர்புடைய தாமரை மலரின் வடிவம்தான், பிற மதங்களை காட்டிலும் இந்து மற்றும் புத்த மதம் தாமரையுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பவை.  புத்த மதத்தின் மிக முக்கிய குறியீடு தாமரை. பண்டைய காலத்தில் கம்போடிய புத்த துறவிகள் தாமரை நாரிழைகளால் பின்னப்பட்டு இயற்கை சாயமிடப்பட்ட ஆடைகளையே  தூய்மை, தெய்வீகத்தன்மை மற்றும் அமைதியை குறிக்க அணிந்தனர். தாய்லாந்திலும் மியான்மரிலும் தாமரை நாரிழைகளிலான ஆடைகள் மிக ஆடம்பரமான உயர்தர ஆடைகளாக கருதப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட பாரம்பரிய  நாரிழைகளும் ஆடைகளும் உள்ளன. கம்போடியாவின் தாமரை நாரிழைகளாலான ஆடைகள் அவ்வாறான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் மற்ற இயற்கை இழைகளுடன் ஒப்பிடும்போது இவை மிக்குறைவாகவே  பிரபலமாயிருக்கின்றன.

தாமரை நாரிழைகளின் பயன்பாடு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு 1910 ல்  டா சா ஊ என்னும்  இந்த்தா (intha)பழங்குடி இனப்பெண் ஒருவரால் துவங்கப்பட்டது. (Daw Sa Oo)  அப்பெண்மணி தாமரை இலைகளின் நீண்ட காம்புகளை கத்தரித்து அவற்றிலிருந்து நார்களை சேகரித்து அடுத்த ஒருவருடம் முழுவதும் அவற்றைக்கொண்டு ஆடைகளை நெய்வதில் ஈடுபட்டிருப்பார். அருகிலிருந்த புத்த மடத்தின் துறவிகளுக்கென அவர் அந்த ஆடைகளை உருவாக்கினார்.அவரது மறைவுக்கு பின்னர் அவரது குடும்பத்தினரால் சிறிய அளவில் இத்தொழில் செய்யபடது

 தாமரை இழைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளே உலகின்  ஆகச்சிறந்த சுற்றுச்சூழலுக்கு  உகந்த  மற்றும் புனிதமான ஆடை என கருதப்படுகிறது, ஒரு காலத்தில் துறவிகளுக்கு மட்டுமே பயன்பட்ட இவற்றை. இப்போது வணிகமயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்ப்ட்டிருக்கின்றன..

கம்போடியாவின் தாமரை சாகுபடி செய்யப்படும் நீர்வயல்களிலிருந்து Padonma-kya என்று அவர்களால் அழைக்கப்படும் இந்திய தாமரையான Nelumbo nucifera வின் தண்டுகள் அதிகாலைகளில் நறுக்கி அறுவடை செய்யப்பட்டு சேகரிக்கப்படுகின்றன.

 அறுவடை செய்யப்படும் இலைத்தண்டுகளில் நீளவாக்கில் சுமார் 20ருந்து 30 நாரிழைகள் வரை இருக்கும், அவை உருவி எடுக்கப்பட்டு திருகித் திருகி ஒற்றை இழையாக்கப்பட்டு  பின்னர் கழுவி உலர்ந்தபின்னர் மூங்கில் தறிகளில் நெய்து ஆடையாக்கப்படுகின்றன.

தாமரை இழைகளை நெய்கையில் அவ்வப்போது நீர் தெளித்துக்கொண்டே இருக்கவேண்டும் இல்லாவிட்டால் அவை பயன்படுத்த முடியாத அளவிற்கு உலர்ந்துவிடும். தண்டுகள் அறுவடை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அவற்றை நெய்துவிடவேண்டும் இல்லாவிட்டால் நார்கள் வீணாகப்போய்விடும். தாமரை இழை நெய்தலில் ஒரு சிறு துண்டு நார் கூட வீணாவதில்லை நீளமான நாரிழைகள் ஆடைகளுக்கு பயன்படும் என்றால் உடைந்த சிறு நாரிழைகள் விளக்குத் திரிகளாக உபயோகிக்கப்படும் 

அறுவடையிலிருந்து ஆடை உருவாக்கம் வரை முழுக்க முழுக்க கைகளாலேயே உருவாக்கப்படும் இச்செயல் அதிக நேரத்தையும், அதிக உடலுழைப்பையும் கோருவது. சுமார் 1,20,000  தண்டுகளிலிருந்து ஒரு ஆடை உருவாக்கப்படும். அதாவது ஒரு சதுர மீட்டர் அளவிலான துணியை உருவாக்க 8000 தாமரைத்தண்டுகளும் 20 நாட்களும் தேவைப்படுகிறது.

முழுக்க முழுக்க இயற்கையான வழிகளில் இந்த நாரிழைகளிலிருந்து ஆடைகள் உருவாவதால் இவற்றிற்கு GOTS  எனப்படும் உலகின் மிக சிறந்த சூழலுக்குகந்த ஆடையிழைகள்  என்னும் அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது.   (Global Organic Textile Standard) 

தாமரை இழை ஆடைகள் புற ஊதாகதிர்களை தடுக்கும், ஈரத்தை உறிஞ்சும், காற்றை உள்ளே அனுமதிக்கும், மிக மிருதுவாகவும் செளகரியமாகவும் அணிபவர்களுக்கு இருக்கும் மேலும் இவை நீடித்தும் உழைக்கும் தாமரை இழையாடைகளில் கறை படியாது தாமரையைப் போலவே இவையும் தூய்மையானவை.

 இந்த ஆடைகளை அணிபவர்களுக்கு மனஅமைதியும் நல்ல ஆரோக்கியமும் கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது, பருத்தி மற்றும் லினென் துணிகளுடன் ஒப்பிடுகையில் தாமரை  இழைகளே உயர்ந்த தரத்துடன் இருக்கின்றன

 தாமரை இழைநார் ஆடைகள் மருத்துவதுறை மற்றும் விண்வெளிப் பயணங்களுக்கான உடைகளை உருவாக்க பயன்படுகிறது

 ஹாங்காங், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இவ்விழைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளுக்கு நல்ல தேவை இருக்கிறது. புத்த துறவிகளும் இவற்றையே விரும்பி அணிகிறார்கள்

உலகளவில்  தாமரை இழைகளில் உருவாக்கபட்ட ஆண்களின் ஆடைகளில் Nomark  சட்டைகளும், பெண்களுக்கான Kyar hi கழுத்துகுட்டைகளூம் (scarf)  பிரபலம். 2012ல் யுனெஸ்கோவின் தனிச்சிறப்பான SOE முத்திரை அந்தஸ்தையும் இவ்விழையாடைகள் பெற்றிருக்கின்றன. (Seal of Excellence). Samatoa என்னும் பிரபல பெயரிலும் தாமரை இழைஆடைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன. 

கழுத்துக்குட்டை

  சாயமேற்றப்படாத இழைகளின் நிறம் பால் வெண்மையில் இருக்கும், இயற்கை சாயங்களில் ஆரஞ்சு மஞ்சள் நீலம் பச்சை ஆகியவையே இவ்வாடைகளுக்கு நிறமேற்ற அதிகம் பயன்படுகின்றன.

மருத்துவ காரணங்களுகாகவும், தண்டு, வேர்க்க்கிழங்கு ஆகியவற்றின் சத்துக்கள் மற்றும் சுவைக்காக உணவுக்காகவும், அழகிய தூய மலர்களுக்காகவும் மட்டும அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருந்த இவற்றின் இலைத்தண்டுகள் வீணாகிக்கொண்டிருந்தன. தற்போது அவற்றிலிருந்து உலகின் மிக அதிக விலையுள்ள மிகத் தரமான ஆடைகள் உருவாககப்படுகின்றன

கம்போடியா, வியட்னாம் மற்றும் மியான்மரிலும், இந்தியாவின் மணிப்பூர் மற்றும் குஜராத்திலும் தாமரைகள் நாரிழைகளின் பொருட்டு சாகுபடி செய்யப்படுகின்றன.  தாமரை இழைகளிலிருந்து ஆடைகள் மட்டுமல்லாது ஆபரணங்களும்  உருவாக்கப்படுகின்றன.

மணிப்பூரின் பிஷ்ணூபுர் மாவட்ட்த்தைச் சேர்ந்த 27 வயது பிஜியஷாந்தி ( Bijiyashanti Tongbram) தாமரை இழையாடை தொழிலை 2019ல் அங்கு பிரபலமாக்கியவர். தாவரவியல் பட்டதாரியான அவரது வீட்டிற்கருகேதான் இந்தியாவின் வடகிழக்கு பிரதேசத்தின் மிகப்பெரிய நீர்நிலையான லோக்டாக் நன்னீர் ஏரியும் (Loktak lake) அதனை சுற்றிலும் ஆயிரக்கணக்கான தாமரைக்கொடிகள் வளர்ந்திருக்கும் பும்டி  என்கிற நூற்றுக்கணக்கான மிதக்கும் மணிபூரின் பிரெத்யேகமான சிறு தீவுத்தொடர்களும் உள்ளன.கம்போடியாவின் தாமரைநாரிழை தொழிலைக்கேள்விப்பட்டு அது குறித்தான ஏராளமான காணொளிகளையும் பார்த்து தானும் தாமரைநார் பிரித்தெடுக்கும் தொழிலில் ஈடுபட்டார் பிஜியஷாந்தி

பிஜியஷாந்தி

அவருடைய சொந்த நிறுவனமான சனாஜிங் சனா தம்பால் (‘Sanajing Sana Thambal’) தாமரை நாரிழைகளை தயாரிப்பதோடு அந்த ஊர்பெண்களுக்கும் இத்தொழிலில் வேலைவாய்ப்பும் வழங்குகின்றது. சமீபத்திய மனதின் குரல் நிகழ்வில் திரு நரேந்திர மோடி பிஜிஷாந்தியின் இம்முயற்சியை வெகுவாகப் பாராட்டினர்.

மணிப்பூரின் பும்டி மிதக்கும் தீவுகள்

மாதுளை

திராட்சை, அத்தி மற்றும் மாதுளை ஆகிய மூன்றும் தான் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் மூன்று கனி வகைகள்  என கருதப்படுகிறது. சுமார் 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் உணவில் மாதுளை இருந்திருக்கிறது.

Punica granatum என்னும் அறிவியல் பெயர் கொண்ட மாதுளை ஆங்கிலத்தில் pomegranate எனப்படுகிறது. ஈரானுக்கு சொந்தமான இந்த தாவரம் 16/17ஆம் நூற்றாண்டில்  அரேபியா, இந்தியா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அறிமுகமாகி சாகுபடி செய்யப்பட்டது. மருதாணியின் குடும்பமான லித்ரேசியை சேர்ந்த சிறு மர இனமான இது 5 லிருந்து 10 மீட்டர் உயரம் வரை வளரும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் இருக்கின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாதுளைகள் சாகுபடி செய்யப் பட்டிருக்கலாம் என்று அகழாய்வு கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

Pomegranate என்னும் இதன் ஆங்கில பெயர் லத்தீன மொழியில்  ஆப்பிளை குறிக்கும் pōmum என்னும் சொல்லையும்  விதைகள் கொண்ட என்று பொருள் தரும்  grānātum  என்னும் சொல்லையும் இணைத்து பல விதைகள் கொண்டிருக்கும் ஆப்பிள் என்னும் பொருளில் வைக்கப்பட்டது. மாதுளை பல ஆண்டுகள் வாழும் தாவரம்.. ஃப்ரான்ஸில் 200 ஆண்டுகளையும் கடந்து வாழும் மாதுளை செடிகள் உண்டு.மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள்   எனவும் பெயர்களுண்டு.

 ஏராளமான கிளைகளைக் கொண்டிருக்கும் இத்தாவரத்தின் பளபளப்பான இலைகள் எதிரடுக்கில் அமைந்திருக்கும் . 3 லிருந்து 7 இதழ்களை கொண்டிருக்கும் அடர் ஆரஞ்சு நிற  அழகிய மலர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கனிகளை உருவாக்காத மலர் மாதுளைச் செடிகளும் உண்டு.

கடினமான கனியின் வெளி ஓட்டினுள் வெண்ணிற தோல் போன்ற உறையால் உருவாக்கப்பட்ட சமச்சீரற்ற அறைகளில் விதைகள் நிறைந்திருக்கும்.  ஒவ்வொரு விதையையும் சுற்றியிருக்கும் அடர் சிவப்பு நிற சதைப்பற்றான உரை சார்கோடெஸ்டா எனப்படும். (sarcotestas),ஒரு மாதுளம் கனியில் 400 லிருந்து 1500 விதைகள் வரை இருக்கும்.

அழகுக்காக தொட்டிகளிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படும் நானா மாதுளை ரகம் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றது. (P. granatum var. nana). இந்த வகையில் இருந்து தான் மாதுளையின்  போன்ஸாய் மரங்களும் செய்யப்படுகிறது

யேமனில் மட்டுமே விளையும் சொசொட்ரான் மாதுளை (Punica protopunica) மிகச்சிறிய கனிகளையும் இளஞ்சிவப்பு மலர்களையும் கொண்டிருக்கும். நாக்கை புண்ணாக்கும் அளவிற்கு மிக புளிப்பான சாறும்,  கசக்கும் விதைகளையும் கொண்ட இக்கனியின் உள்ளிருக்கும் வெண்ணிற சதைப்பற்றான உறை மட்டுமே இங்கு உண்ணப்படுகிறது. இதன் பிற பாகங்கள் கால்நடை தீவனமாக பயன்படுகிறது.  பச்சைக் காய்களின் தோலை சிறிது நீரில் கசக்கி அந்த புளிப்பு நீரை பாலை தயிராக்க பயன்படுத்துகிறார்கள்.

எகிப்தின் 18 ஆவது அரச வம்சத்தை சேர்ந்த  1478 BC  ல் ஆட்சி புரிந்த அரசி    (Hatshepsut) ஹாட்ஷெஸ்ப்சுட்டின் மம்மி வைக்கப்பட்டிருந்த பிரமிடில் உலர்ந்த பெரிய மாதுளங்கனி இருந்தது. பண்டைய எகிப்தில் மாதுளை வளமையின் குறியீடாக கருதப்பட்டது.ஒவ்வொரு நாளும் குளியலுக்கு முன்னர் உண்ணும் ஒரு மாதுளை உங்கள் இளமையை தக்க வைக்கும் என்றொரு முதுமொழி உண்டு எகிப்தில்

கிபி 14 ஆம் நூற்றாண்டில் துருக்கியில் கப்பல் விபத்தொன்று நிகழ்ந்தது. அதன் உடைந்த பாகங்கள் ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரால் 1982ல் கண்டறியப்பட்ட போது/ அக்கப்பலின் பல அறைகளில் இருந்த  யானைதந்தங்கள், நீர்யானையின் பற்கள், அருமணிகள் உள்ளிட்ட பலவேறு விலையுயர்ந்த பொருட்களுடன் பல சீசாக்களில் முழு மாதுளைகளும்  இருந்தன.

கறுப்பு மாதுளை

பண்டைய கிரேக்கத்தில் மாதுளைகள் வைனின் கடவுளான டையோனிசிஸின் (Dionysus)   குருதியிலிருந்து உருவானவை என்று நம்பப்பட்டது. அங்கு இது வளமை மற்றும் செல்வத்தின் அடையாளமாக கருதப்பட்டது. புதிய வீடுகளுக்கு வருகை தரும் விருந்தினர்கள் அவசியம் முதல் பரிசாக மாதுளைகளையே அளிக்கும் வழக்கமும் இருந்து.பல பண்டைய நாகரிகங்களின் நாணயங்களிலும் மாதுளங்கனி சித்தரிக்கப்பட்டிருக்கிறது

பல பண்டைய நாகரீங்களில் மாதுளையைபோன்ற அணிகலன்கள் இருந்தன. வைரக்கற்கள் பதிக்கபட்ட கழுத்தணிகளும் காதணிகளும் அரசகுடும்பத்தினரின் பிரியத்துக்குரியவையாக இருந்திருக்கின்றன. அவற்றில் பல அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன.

யூதர்களில் ஒரு சாரார் ஏதேன் தோட்டத்தின் விலக்கப்பட்ட கனி ஆப்பிள் அல்ல மாதுளை தான்  என்று கருதுகிறார்கள்

பல ஐரோப்பிய தேவாலயங்களிலும் ஏசுவின் ஓவியங்களிலும் சிலைகளிலும் மாதுளையின் வடிவம் இடம்பெற்றிருக்கும். தேவாலயங்களின் திரைச்சீலைகளிலும் தையல்வேலைகளில் மாதுளைகளை காணமுடியும் லியானர்டோ டாவின்சியின் ஓவியங்களில் கன்னிமேரியும் குழந்தை ஏசுவும் கைகளில் மாதுளையை வைத்திருப்பார்கள்.  சில தேவாலயங்களின் இறப்பு சடங்குகளில் மாதுளை கலந்த உணவுகள்  பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதுண்டு.விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ‘’நாம் அதிகாலையில் தோட்டத்துக்கு சென்று மலர்ந்திருக்கும் மாதுளைகளை காணலாம் ‘’ என்னும் வரி இருக்கிறது.பாதிரிகளின் உடைகளில் மாதுளையின் உருவம் சித்தரிக்கப்பட்டிருக்கும் 

மூன்று முறை குரானிலும் இக்கனி குறிப்பிடப்பட்டிருக்கிறது கடவுளுக்கு விசுவாசமயிருப்பவர்களுக்கான கனியான மாதுளையின் ஏதோ ஒரு விதை நேரடியாக சொர்க்கத்திலிருந்து வந்திருக்கும் என்கிறது இஸ்லாம்.

ஆர்மீனிய மணப்பெண் மாதுளையுடன்

ஆர்மீனியர்களின் கலாச்சாரத்திலும் மாதுளை மிக நெருங்கிய தொடர்புடையது. அங்கும் இது செல்வம், வளமை, மற்றும் குடும்ப வாழ்வின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆர்மீனிய திருமணங்களில் மணமகளுக்கு மணமகனால் தரப்படும் ஒரு மாதுளை சுவற்றில் வீசி எறியப்படும் அதிலிருந்து சிதறி விழும் முத்துக்கள் அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் என கருதப்படும். ஆர்மீனியாவில் மாதுளைக்கென சிலையுண்டு.

 பலநாட்டின் கொடிகளிலும் விளையாட்டு வீரர்களின்  உடைகளிலும் மாதுளை இடம்பெற்றிருக்கும். மாதுளை திருவிழாக்களும் பல நாடுகளில் நடைபெறுகிறது

பண்டைய பெர்சியாவில் மாதுளை செடிகள் கோவில்களில் வளர்க்கப்பட்டன. பசுமைமாறாத அதன் இலைகள் அழியாமைக்கு அடையாளமாக சொல்லப்பட்டன.

ஹன் வம்ச ஆட்சிக்காலத்தில் (206 BC–220 AD) சீனாவுக்கு மாதுளை அறிமுகமானது. அப்போதிலிருந்தே சீனகலாச்சாரத்தில் மாதுளைக்கு மிக முக்கிய இடமுண்டு.இன்றும் சீன வீடுகளின் முகப்பறையில் பிளந்த மாதுளங்கனியின் சித்திரம் இருக்கும்.1195ல் சீனாவில் உருவாக்கப்பட்ட போதிதர்மரின் ஆலயமெங்கும் மாதுளைச்செடிகள் நிறைந்திருக்கின்றன. மாதுளைக்கு சீன ஆப்பிள் என்றும் பெயருண்டு

ரோமானியர்களின் கலாச்சாரத்திலும் மாதுளைக்கு முக்கிய இடமுண்டு. பண்டைய ரோமில் திருமணமான பெண்கள்,மணமானவர்கள் என்னும் அடையாளத்தை காட்டும் விதமாக மாதுளைச்செடியின் சிறு குச்சிகளை தலைப்பின்னலில் செருகிக்கொள்ளுவார்கள்.

புத்த மதம் மூன்று புனித கனிகளாக எலுமிச்சை, பீச் மற்றும் மாதுளையை குறிப்பிடுகின்றது.பிம்பிசாரரின் அரண்மனைக்கு வருகை தந்திருந்த புத்தரை காண வந்த ஏராளமானோர் அவருக்கு விலை உயர்ந்த பல பரிசுகளை அளிக்க காத்திருக்கையில் வெகு தொலைவிலிருந்து வந்திருந்த ஒரு பெண் கொடுத்த ஒற்றை மாதுளையையே புத்தர் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டாராம்,  

கிமு 485–465ல்  வீரத்தின் அடையாளமாக கருதப்பட்ட மாதுளைகளை ஈட்டி நுனிகளில் செருகிக்கொண்டு பெர்ஸிய வீரர்கள் கிரேக்கத்துக்கு போரிட சென்றார்கள் 

மாதுளைச்சாயமிட்ட நூலிழைகள்

ஈரானிலும் இந்தியாவிலும் மாதுளை  சமயங்களுடன் தொடர்புடைய வளமையின் குறியீடாக கருதப்படுகிறது. ஈரானிய அசைவ சமையல்களில் மாதுளை தவறாமல் இடம்பெறும். மாதுளியின் சாறை கம்பளிகளுக்கும் பட்டுக்கும் சாயமேற்றவும் அங்கு பயன்படுத்துகிறார்கள்.ஈரானில் இறைச்சியை மிருதுவாக்க மாதுளைச்சாற்றில் ஊற வைக்கும் வழக்கம் இருக்கிறது. ஈரானில் மட்டுமே விளையும் கறுப்பு மாதுளை பல மருத்துவ பயன்பாடுகள் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலிய நாடோடிப்பாடல்களில் புலம்பெயர்ந்தவர்களின் கவிதைகளில் அத்திகளும் ஆலிவ்களும் மாதுளைகளும் செறிந்திருக்கும் வீட்டுத்தோட்டத்துக்கு திரும்புவதன் ஏக்கம் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கும். இஸ்ரேலிய கவிதைகளில் காதலியின் கன்னங்கள்  பிளந்த மாதுளையுடன் ஒப்பிடப்பட்டிருக்கும்

பிறப்பு, இறப்பு, இனப்பெருக்கம், பாலுணர்வு, வளமை என பலவற்றின் குறியீடாக பல நாகரீகங்களில் மாதுளை இருந்திருக்கிறது. அறுவடைக்குப் பின்னும் பல நாட்கள் சேமித்து வைத்திருக்கக் கூடிய கனியாக பயணிகளால் பெரிதும் விரும்பப்பட்ட கனியாக மாதுளை இருந்தது, குறிப்பாக பாலை மற்றும் கடல் வழி பயணிகளுக்கு.

சீன திபெத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள் மாதுளையின் கனி, கனிச்சாறு,  கனியோடு, விதை, மலர்கள், வேர் பட்டை ஆகியவை பல நோய்களுக்கு மருந்தாக அளிக்கப்படுகின்றது.

கொரிய கலாச்சாரத்திலும் சொர்க்கத்தின் கனியாக மாதுளை குறிப்பிடபடுகிறது. பண்டைய ஜெர்மனியில் மணமகள் மாதுளை சித்தரிக்கப்பட்டிருக்கும் பீங்கான் பாத்திரங்களை வரதட்சணையாக கொண்டு வரும் வழக்கம் பரவலாக இருந்து.

இயற்கையிலேயே கனியில் ஒரு சிறு கிரீடம் இருந்ததாலோ என்னவோ பல அரசர்கள் மாதுளையை கொடிகளிலும், நாணயங்களிலும் சின்னமாக அமைத்து கொண்டிருந்தனர். கிரீடம் இருந்தும் சாமான்யர்களுக்குமான கனியாகவே இருந்தது மாதுளை. 

உலகெங்கிலும் மாதுளங்கனிகள் அவற்றில் நிரம்பி இருக்கும் சத்துக்களுக்காகவும் சுவைக்காகவும் விரும்பப்படுகின்றன. பெரும்பாலும் கனிரசமாக சுவைக்கப்படும் இவை சைவ அசைவ உணவு வகைகளிலும் சேர்க்கப்படுகின்றது. இந்தியாவின் சில பிரத்யேக சந்தைகளில் மட்டும் உணவில் சேர்க்கப்படுவதற்கென இவற்றின் உலர் விதைகள் கிடைக்கின்றன 

2 மாதங்கள் வரை மாதுளையை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம். மாதுளையை ஃப்ரீஸரில் சிறிதுநேரம் வைத்திருந்து பின்னர் உரித்தால் சுலபமாக விதைகளை எடுக்கலாம். மாதுளையின் ஓட்டை கரண்டியால் மெல்ல தட்டி பின்னர் உரித்தாலும் விதைகள் எளிதில் வெளிவரும்.

மாதுளங்கனியின் ரத்தச் சிவப்புக்கென்றே  balaustine  என்று தனித்த ஒரு ஆங்கிலச் சொல்லுண்டு

அறிமுகமான நாடுகளில் எல்லாம் இதன் சுவையான சாறு நிரம்பிய சதைப்பற்றான தாகம் தீர்க்கும் கனிகளுக்காக  இவை பெரிதும் விரும்பப் பட்டன.உலகின் பல நாடுகளில் இவை இப்போது சாகுபடி செய்ய பட்டாலும் தெற்கு சீனாவும் ஆஃப்கானிஸ்தானும் மிக அதிக அளவில் மாதுளைகளை பயிராக்குகின்றன.

மாதுளையின் 500க்கு மேற்பட்ட கலப்பின வகைகள் தற்போது உலகெங்கிலும் சாகுபடியாகின்றன .மிக அதிகமாக இந்தியாவில்தான் மாதுளை விளைகிறது. உலகின் இரண்டாவது மிக அதிக மாதுளை விளைவிக்கும், ஏற்றுமதி செய்யும் நாடு ஈரான் .வருடா வருடம் இங்கு   மாதுளை திருவிழா வெகு விமரிசையாக  நடைபெறுகிறது.

உலகின் மிகசிறந்த மாதுளைகள் ஆஃப்கானில் விளைகின்றன. எனவே ஆஃப்கானிஸ்தான் மாதுளையின் நாடு என அழைக்கப்படுகிறது. உலகின் பிற நாடுகளைக் காட்டிலும் மிக அதிகமான ரகங்களில் மாதுளை செடிகள் ஆஃப்கானிஸ்தானில் உள்ளது.உலக சந்தையில் ஆஃப்கான் மாதுளைகளின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

அசோகவனத்து சீதை

அசோக மரங்கள்

 இந்தியா முழுவதுமே காணப்படும் Sorrowless tree- அசோகம் -சோகத்தை நீக்கும் என்ற பொருளைத்தரும் அசோக மரத்தைக்குறித்தும், அசோக மரம் என்று பரவலாக தவறாக பலரால் கருதபடும் மற்றொரு மரத்தையும் குறித்தும் அறிந்துகொள்ளலாம். அசோகு, பிண்டி, செயலை என்று வெவ்வேறு பெயர்களில் தமிழிலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட இந்த மரத்தின் அறிவியல் பெயர் சரகா அசோகா (Saraca Asoca). இது சிசால்பீனியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. 

மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள தமயந்தியின் கதையில் அசோகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  கணவன் காணாமல் போன பின்பு, தமயந்தி கண்ணீருடன், பூத்துக் குலுங்கி நிற்கிற அசோகமரத்தின் அருகில் சென்று, அதனுடைய பெயருக்கு ஏற்றவாறு தன்னுடைய துயரத்தை நீக்கி, கணவன் மீண்டும் தன்னோடு சேர வேண்டும் என்று வேண்டுகிறாள்.  

கடவுளை வணங்குவதற்குத் தகுந்த மரமாக அசோகம் பல காலமாக இந்தியாவில் இருந்து வந்துள்ளது என்று பிரகத் சம்ஹிதை நூல் கூறுகிறது. இந்துக்களுக்கு மட்டுமின்றி சமண மதத்தினரும், புத்த மதத்தினரும்  அசோக மரத்தைப் புனித மரமாகக் கருதுகின்றனர். துர்க்கைக்கு உரித்தான ஒன்பது தாவரங்களில் அசோகமும் ஒன்று. சிவன் மட்டுமின்றி காமதேவனின் பக்தர்களும் இதைப் புனிதமாகக் கருதுகின்றனர். சமண அருகனுக்கு விருப்பமான இந்த மரத்தின் அடியில்தான், வர்த்தமான மகாவீரர் கடவுள் நிலையை அடைந்தார்.. சாக்கியமுனி அசோக மரத்தடியில்தான் பிறந்தார் எனப்படுவதால் புத்த மதத்தினரும் இம்மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றனர்.

பல சமஸ்க்ருத நூல்களில் அழகிய அசோகமரங்கள் அடர்ந்த இந்திய புத்தகோவில்கள் விவரிக்கபட்டிருக்கின்றன.பேங்காக்கின் பகோடாக்களில் வழிபட செல்பவர்கள் அசோக மலர்களை தவறாமல்  கொண்டு செல்வார்கள்

 நல்ல மணமுடைய இதன் தளிரையும் மலரையும் பண்டைய இந்திய மக்கள்  தலையிலும் காதிலும்   மார்பிலும் அணிந்ததாக இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன.  அத்வைத வனத்திலும், இந்திரபிரஸ்தத்திலும் இந்த மரம் காணப்பட்டதாக மகாபாரதம் கூறுகிறது.

சலங்கை அணிந்த ஓர் இளம்பெண்ணின் கால்களால் மென்மையாக உதைக்கப்பட்டால் இம்மரம் பூத்துக் குலுங்கும் என்று காளிதாசர் மேகதூதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   சமணர்களின் ஆசாரங்க சூத்ரமும், குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும்  அசோகத்தைக்குறித்துக் கூறுகின்றன. மத நம்பிக்கை அடிப்படையிலும், பண்பாட்டு ரீதியிலும் இந்த  அசோக மரம்  மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

வங்காளப்பெண்கள் அசோக சஷ்டி தினத்தன்று  இம்மலரின் மொட்டுக்களை உண்ணுவதும் மலர்ச்சாற்றை குழந்தைகளின் மீது தெளித்தால் அவர்கள் துயரின்றி வாழ்வார்கள் என்று நம்புவதும் வழக்கதிலிருக்கிறது.

சமஸ்கிருதச் சொல்லான அசோகு தமிழில் அசோகம் என்றாயிற்று. சாயை, அங்கணப்பிரியை, கிருமிகாரகம் , மலைக்கருணை, தாமிர பல்லவம், வஞ்சுளம், வீத சோகம் எனவும் அழைக்கப்படும் இம்மரத்திற்கு  சரிபம், ஹேமபுஷ்பா, தாம்ரபல்லவா என வடமொழியிலும் பல பெயர்கள் உண்டு.

இது அழகிய தோரணம் போல கவிழ்ந்து தொங்கும் அடர்ந்த மினுங்கும் இலைகளும் மஞ்சல் கலந்த ஆரஞ்சுவண்ண மலர்க்கொத்துக்களும் செறிந்திருக்கும் ஒரு  பசுமை மாறாமரம்

கூட்டிலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். தளிரிலைகள் செம்பு நிறத்திலும் முதிர்ந்தவை மினுங்கும் பச்சைநிறத்திலும் இருக்கும். முதிர்ந்த மரப்பட்டை அடர் பச்சையில் நீலச்சாம்பல் திட்டுக்களுடன் காணப்படும். 4 லிருந்து 8 நீள் முட்டை வடிவ விதைகளுடன் இருக்கும் தோல்போன்ற தடித்த உறைகொண்ட தட்டையான கனி இருபுறமும் கூரான நுனி கொண்டிருக்கும்.

விதைகள்

அசோகம் இந்திய மண்ணில் எங்கும் சாதாரணமாக வளரக்கூடியது. குறிப்பாக, இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது. ஒடிசா மாநிலத்தின் கிழக்கு மலைத்தொடர் பகுதிகளிலும், கோவா, கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளிலும் இயல் தாவரமாக இது காணப்படுகிறது.   இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வளர்ப்பு மரமாகவும் இருக்கிறது.     ஒடிசாவின் மாநில மலரும் அசோக மலரே.

இந்தியா இலங்கை மற்றும் நேபாளில் மிகப்புனிதமான மரமாக கருதப்பட்டு வழிபடப்படும் மரங்களில் அசோகமும் ஒன்று. புத்த மதத்திலும் இந்து மதத்திலும் தொடர்புடைய மரம் இது. ராமாயணம் உள்ளிட்ட பல புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மரம் இந்த அசோகம். இந்தியாவில் இந்த மரத்துக்கு உயிரும் ஆன்மாவும் உண்டு என்றும், “மக்களின் துயரத்தில் இது துயர்கொள்ளும், மக்களின் மகிழ்ச்சியில் இது மகிழ்வு கொள்ளும்” என்றும் நம்பிக்கை நிலவுகின்றது.

அசோக மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆண் பெண் இருபாலருக்கும் கொடுக்கப்படுகின்றது ஆயுர்வேதத்தில். தேக ஆரோக்கிய பலம் மற்றும் நோய் நீக்குதலில் அசோக மரப்பட்டை பெரும் பங்கு வகிக்கின்றது

 மரப்பட்டை, உலர்ந்த மலர்கள் ஆகியவற்றிற்கு  பெண்களுக்கு வரும் உடல்நிலை, மனநிலை மற்றும் கருப்பைக், கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குணங்கள் உண்டு

Dysmenorrhoea எனபடும் ஒழுங்கற்ற வலியுடனான மாதவிலக்கு. Amenorrhoea எனப்படும் மாதவிலக்கு துவங்காமை, ஆகியவற்றிற்கும், மலட்டுத்தன்மையை போக்கவும் இம்மரப்பட்டைச்சாறு மருந்தாக பயன்படுகிறது.  

 இம்மரத்தின் காற்று வீசும் இடத்தில் கூட பெண்களுக்கு கருப்பை தொடர்பான எந்த நோயும் குறைகளும் வராது என்பது நம்பிக்கை. மாசி பங்குனி மாதங்களில் மலரும் அசோகமலரின் நறுமணத்தை நுகரும் பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் காரணமற்ற மனஅழுத்தங்களும் விலகும்.   ராவணன் அந்தப்புரமகளிரின் ஆரோக்கியத்தின் பொருட்டே இம்மரங்களை அங்கு வைத்திருந்தாரென்பதை இதன் மருத்துவகுணங்களினின்றும் நாம் அறிந்துகொள்ளலாம்

சரும மென்மைக்கும் மரப்ட்டைச்சாறு உதவுகின்றது, சருமத்தினடியில் தேங்கி இருக்கும் அழுக்குகளையும் நச்சுக்களையும் நீக்கி சருமத்தை பொலிவுடன் விளங்கச்செய்யும் இப்பட்டைச்சாறு.  

அசோக மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் அசோகரிஷ்டம், அசோகாதிவடி, அசோகாதி குக்குலு மற்றும் அசோகாதிசூரணம் ஆகியவை மலட்டுத்தன்மை மற்றும் கருப்பை நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும். பட்டைசாறு கர்ப்பஷ்ய ரசாயனம் எனப்படுகிறது

அசோக மரத்துப் பூக்களை சேகரித்து நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் அடிபட்ட காயம், அதனால் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியன குணமாகும். அசோக மரத்துப் பூவின் தேநீர் ஆழ்மனத்தில் கவலை, பதட்டமான உணர்வு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தக்கூடியது.


  புராணங்களில் இம்மரங்களில் யட்சிகள் வாழ்வதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்திய சிற்பங்கள் பலவற்றில் அசோகமரத்தினை பற்றிக்கொண்டிருக்கும் யட்சிகளைக் காணலாம். மலட்டுத்தன்மை நீக்கி காமம்பெருக்கும் குணமுள்ள அசோக மலர் காமனின் கரும்பு வில்லின் ஐந்து மலர்கணைகளில் ஒன்று.

சில இடங்களில் நெட்டிலிங்கம் என்னும் நெடிதுயர்ந்து வளரும் மரங்களை (Manoon longifolia-False Asoka tree) தவறாக அசோக மரம் எனக்கூறும் வழக்கம் இருந்து  வருகின்றது. இது  தவறு.

அசோகமும் நெட்டிலிங்கமும்

 அசோகமரம் என்பது Saraca asoka என்னும் அசோகமே. நெட்டிலிங்கம் உயரமான பெரும்பாலும் கிளைகளற்ற ஆப்பிள் பச்சை வண்ண மலர்கொத்துக்களையும் நாவற்பழம் போன்ற கனிகளையும் கொண்டிருக்கும் அன்னோனேசியே குடும்பத்தாவரம். இதன் இலைகள் நீளமாக ஓரங்களில் அலையலையான அமைப்புடன் காணப்படும், மரங்கள் நீளவாக்கிலான கூம்புகளைபோல காணப்படும், இவை அசோகமல்ல

இத்தாலிய சைப்ரஸ் மரங்கள்

.இவை பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிடிஷாருக்கு பிரியமான  உயரமான இத்தாலியன் சைப்ரஸை நினைவூட்டியதால்  இந்தியாவில் பரவலாக வளர்க்கபட்டது. இம்மரங்கள் இந்தி மொழியில் அஷோக் எனபடுகின்றன. அப்பெயரே தவறாக தமிழிலும் அசோகம் என்றாகிவிட்டது

முன்பு மேற்கு மற்றும் கிழக்கு மலைத்தொடர்களிலும் கிழக்கு இமாலய மலைப்பிரதேசங்களிலும் செறிந்து வளர்ந்திருந்த அசோக மரங்கள் இப்போது மிக மிக குறைந்த எண்ணிக்கையில் பூங்காக்களில் காணப்படுகின்றது.

ராமனை பிரிந்து அரண்மனைச்சிறையிலிருக்க மறுத்து அசோக வனச்சிறையிலிருந்த சீதையை, அந்த அமைதியான வனமும் கொத்துக்கொத்தாக மலர்ந்திருந்த ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு மஞ்சரிகளும், அடர்த்தியான  அவற்றின் நீடித்த, மென்மையான நறுமணமும் நிச்சயம் வசீகரித்திருக்கும். அடர் ஆரஞ்சுசிவப்பு நிற கூம்புக் கோப்பைபோன்ற மஞ்சரிகளின் மலர்களின் உள்ளே இருக்கும் ஊதா நிற மகரந்த காம்புகள் ஒவ்வொரு மலரிலிருந்தும்  வெளியே வந்திருப்பது  வானவேடிக்கை போல இருக்கும்.  மலர்களை தேடி ஏராளமான் பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் வந்தபடி இருக்கும்.

கங்கையின் துணை ஆறுகளில் ஒன்றான கோஷியாற்றங்கரையிலிருந்த அசோக வனம் இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர் சீதைக்கு மிகவும் பிரியதுக்குரியதாக இருந்ததாக புராணங்கள் சொல்லுகின்றன. ஸ்கந்த புராணம் சீதை ராமனிடம்’’ .இது வைகாசி மாதம் நாம் இந்த வனத்திலேயே தங்கி இருந்து இந்த ஆற்றீல் நீராடலாம் ‘’ என்று சொன்னதாக குறிபிடுகிறது. இப்போது இந்த ஆற்றுக்கே சீதா பானி என்று பெயர். அசோகமரம் சீதா அசோகம் என்றும் அழைக்கப்படுகிறது.

நீலச்சிறுமலர்- ஸ்வேதை

தாவரவியல் சுவாரஸ்யமானதும், அதன் அடிப்படைகளையாவது அனைவரும் அறிந்து கொண்டிருக்க வேண்டியதுமான இன்றியமையாத ஒரு துறை. அதிலும் தாவர அறிவியல் பெயர்களும் அவற்றின் பொருளை அறிந்து கொள்ளுவதென்பதும் மிகமிக சுவாரஸ்யம்.

ஒரு தாவரத்தின் வட்டார வழக்குப்பெயரானாலும், ஆங்கிலப் பொதுப்பெயரானாலும், லத்தீன் மொழியிலான தாவர அறிவியல் பெயரானாலும் சரி ஒவ்வொன்றும் மிகச்சுவாரஸ்யமான பின்னணியையும் பொருளையும் கொண்டிருக்கும். தாவர வகைப்பாட்டியலின் தந்தையென கருதப்படும் லினேயஸினால் 17ஆம் நூற்றாண்டில் வைக்கப்பட்ட இப்பெயர்கள் இன்று வரை எந்த குழப்பமும் இல்லாமல் உலகெங்கிலும் பயன்பாட்டிலும் இருக்கின்றது. அதிலொன்றுதான் சங்குபுஷ்பம் எனப்படும் Clitoria ternatea. பெயரை மட்டுமல்லாது இச்செடியை குறித்து அறிந்து கொள்ள வேறு பல முக்கிய விஷயங்களும் உள்ளன.

சங்கு போன்ற தோற்றத்தில், அடர்நீல நிறத்தில் இருக்கும் இம்மலர் பூஜைக்குகந்ததாகவும், தாவர மருத்துவத்தில் மிக முக்கியமானதொன்றாகவும் இருக்கின்றது.

குறிஞ்சிப்பாட்டு, சீவகசிந்தாமணி மற்றும் 18 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த சிதம்பரநாத மாமுனிவர் இயற்றிய நடராஜ சதகம் ஆகியவற்றில் சங்குபுஷ்பங்களை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றது.


பழந்தமிழ் இலக்கியங்களில் இம்மலர் ’’மணியைப் பார்ப்பது போல நீல நிறத்தில் இருக்கும், மயில்-பீலியின் கண் போல் இருக்கும்., கண்ணைப்போல் இருக்கும், கண்ணைப் போல் மலரும்’’.என்று பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

”மணி கண்டு அன்ன மா நிற கருவிளை
ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய” – நற் 221/1,2.

(நீலமணியைக் கண்டாற்போன்ற கரிய நிறமுள்ள கருவிளை மலர், ஒள்ளிய பூவாகிய செங்காந்தளோடு குளிர்ச்சியுள்ள புதர்களை அழகுசெய்ய)


”தண் புன கருவிளை கண் போல் மா மலர்” – நற் 262/1

(குளிர்ச்சியான கொல்லையில் வளர்ந்த கருவிளம்பூவின், கண் போல மலர்ந்த, பெரிய பூவானது)


”பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி” – குறு 110/4

(மயில்தோகையின் ஒளிரும் கண்ணினைப்போன்ற கருவிளம்பூவை ஆட்டி)
”கருவிளை முரணிய தண் புதல் பகன்றை”–அகம் 255/11

(பகன்றையும் கருவிளையும் நிறத்தால் மாறுபட்டவை)
மணிப்பூங் கருவிளை – குறிஞ்சிப்பாட்டு (அடி 68)
கண் என கருவிளை மலர – ஐங் 464/1
நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294

அழற்படுகாதையில் இளங்கோவடிகள் நால்வகைச்சாதியினரில் உழவுத் தொழிலால் உடல் கருத்த வேளாளனை உடல் நிறத்தால், “கருவிளை புரையும் மேனியன்’ எனக்குறிப்பிடுகிறார்.
திருத்தில்லையில் பட்டினத்தாரும் ’’காமப் பாழி, கருவிளை கழனி
தூமைக் கடவழி’’ என்கிறார்.

இலக்கியங்களில் அதிகமாக நீலமலர்களும் குறிஞ்சிப் பாட்டு ஒன்றில் ஒரிடத்தில் மட்டும் வெண்மலர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரும்பைக் குழம்பாக்க இம்மலர்ச்சாறு பயன்படும் என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் தலைவியும், தோழியும் குவித்து விளையாடி தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் இதுவும் ஒன்று.

ஆசியாவில் தோன்றி, தற்போது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களிலும் காணப்படுகின்ற இத்தாவரத்திற்கு ‘’காக்கணம், உயவை, மாமூலி, காக்கட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி, சங்குப்பூ ,சங்கு புஷ்பம், கன்னிக் கொடி, இரிகன்னு, கருவிளை, காக்கரட்டான், சுபுஷ்பி, மோஹநாசினி, ஸ்வேதை, ஸ்வேதா’’ எனவும் பெயர்களுண்டு.
கிரிகணிக்கி, கிர்குணா என்று கன்னடத்திலும், ஷேங்கபுஷ்ப என்று மராத்தி மற்றும் கொங்கணியிலும், கோகர்ணிகா, அர்த்ரகர்ணி என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகின்ற இக்கொடி அவரை, துவரை, உளுந்து போன்ற பயறு வகைகளின் குடும்பமாகிய ஃபேபேசியே’வை சேர்ந்தது. இலங்கையில் இது நீல காக்கணை.

மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் அபராஜிதாவும், ஆண்டாள் ’கார்க்கோடப் பூ” என்பதுவும் இதே மலரைத்தான். ”கிருஷ்ணனின் ஒளி’’ என்கிறார் இதை அரவிந்த அன்னை. நீலக்குருவியொன்றை ’’கருவிளை இதழை சிறகாக்கி காற்றில் எழுந்த பூவரசம்’’ என்கிறார் ஜெயமோகன் வெண்முரசின் நீலத்தில்

இதன் ஆங்கிலப்பெயர்கள்; Blue butterfly, Asian pigeon wings, Butterfly pea, Bluebell vine, Blue pea, Kordofan pea & Darwin pea.

சிவாலயங்களில் காலை, மாலை, பகல் பூஜைகளுக்கென்று தனித்தனியே மலர்களை குறிப்பிடும் ஆகமம் சங்குபுஷ்பத்தை பகல்நேர பூஜைக்கு உகந்ததாக குறிப்பிடுகின்றது. ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவனுக்கு செய்யப்படும் விசேஷபூஜையில் மிக முக்கியமானதாக கருதப்படுவதும் வெண்சங்கு புஷ்பமே. அதற்குப்பிற்குதான் வில்வமும், கொன்றையும், மகிழமும், மல்லிகையும்.

கோயம்புத்தூர், கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சங்கமேஸ்வரர். ஆலயம் சங்குபுஷ்பம் இருந்த காட்டை அழித்து கட்டப்பட்டதால் இறைவனுக்கு சங்கீஸ்வரன் என்றே பெயர். இவரை வழிபட்ட விஜயநகரப் பேரரசுக்கு சங்கவம்சம் என்ற பெயரும் உண்டு.

பிரபஞ்சம் உருவாவதில் தொடங்கி, நோயை, நோய் தீர்க்கும் வழிகளை, நோய் அணுகாதிருக்கும் வழிமுறைகளை, உணவை, மரணத்தை, இயற்கையை, மண்ணை, என வாழ்க்கையின் அனேக துறைகளை உள்ளடக்கிய நூலான சரக மகரிஷி தொகுத்தளித்த சரகசம்ஹிதையில், கற்கும் திறன், பகுத்தறிவு, ஞாபகத்திறன் ஆகியவற்றை அதிகரிக்க உதவும் நான்கு மூலிகைகளாக வல்லாரை, அதிமதுரம், சீந்தில்கொடி, சங்குபுஷ்பம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றது…

Clitoria ternatea near the fence.


சங்குப்பூச்செடி, காடுகள், தரிசு நிலங்கள், வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக காற்றில் பரவிவரும் சிறு விதைகளால் முளைத்து வளர்கின்றது. ஈரப்பதமான மண்ணில் செழித்து வளரும் ஏறு கொடி வகையை (Climber) சார்ந்த இவை, மாங்களையோ கொழுகொம்புகளையோ பற்றிக்கொண்டும் பற்றுக் கொம்பில்லாதபோது தரையிலேயே அடர்ந்து புதர்போல பரவியும் வளரும். இச்செடி இளம் பச்சை கூட்டிலைகளையும், பளிச்சிடும் மலர்களையும் உடையது. 4×3 செமீ அளவில், நன்றாக விரிந்து மலர்ந்திருக்கையில், சங்கைப்போல தோன்றும் இதன் மலர்கள் வெள்ளை, ஊதா, கருநீலம் மட்டுமல்லாது கலப்பு வண்ணங்களிலும், இளநீலத்திலும் கூட இருக்கின்றன. நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட செடிகளும் அரிதாக வளர்வதுண்டு. சிறிய 4-10 செமீ நீளமே உள்ள இளம்பச்சை பீன்ஸ் போன்ற காய்களில் 6 முதல் 10 தட்டையான விதைகள் இருக்கும். ஆழமாக வளரும் இதன் ஆணிவேர்கள் இக்குடும்பத்தின் பிற தாவரங்களைப்போலவே வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்தி மண்ணை வளமாக்குகிறது.

வெள்ளை, நீலம் இரண்டு வகைச்செடிகளிலுமே இலை, வேர், மலர்கள், விதை ஆகிய அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுபவை.

ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும் செடியான இதன் மலர் உள்ளிட்ட அனைத்து பாகங்களில் இருக்கும் பல வேதிப்பொருட்களில் ternatins , triterpenoids, flavonol glycosides, anthocyanins , steroids, Cyclic peptide-cliotides ஆகியவை மிக முக்கியமானவை. மலரின் அடர் நீலநிறம் இதிலிருக்கும் anthocyanins வகையைச்சேர்ந்த delphinidin. என்னும் நிறமியால் உணடானது.

தாவரவியல் வகைப்பாட்டியலில் இத்தாவரம், Clitoria என்ற பேரினத்தினைச் சார்ந்தது. இப்பேரினத்தின் கீழ் 50 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அடர் நீலநிறப் பூக்களுடன் இருக்கும் Clitoria ternatea தமிழில் கருவிளை எனவும், வெள்ளை நிற மலர்களைக் கொண்ட Clitoria ternatea var. albiflora, செருவிளை (கரிசண்ணி, வெள்ளைக்காக்கணம்) எனவும் அழைக்கப்படுகின்றன…

இதன் (Genus/Generic name) பேரினப்பெயரான Clitoria என்பது மலர்களின் தோற்றம் பெண் இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்பதால் லத்தீன் மொழியில் பெண்ணின் ஜனன உறுப்பின் பகுதியான clitoris என்பதை குறிக்கின்றது.

இச்செடி முதன் முதலாக 1678 ல் Johann Philipp Breyne எனும் ஜெர்மானிய தாவரவியலாளரால் இந்தோனேஷிய தீவுக்கூட்டங்களிலொன்றான ’டெர்னேஷியா’வில் கண்டறியப்பட்டபோது Flos clitoridis ternatensibus என்று பெயரிடப்பட்டது.

பிறகு David krieg என்பவர் 1698’ல் நீல நண்டுகளுக்கு பெயர்பெற்ற மேரிலாண்டில் கிடைத்த சங்கு புஷ்ப செடிகளை, Clitoria mariana என்னும் பெயரில் குறிப்பிட்டு உலர்தாவரமாக்கினார். இந்த ஹெர்பேரியம் இன்றும் Edinburg ,Royal botanical garden அருங்காட்சியகத்தில் ல் பாதுகாப்பாக வைக்கபட்டிருக்கின்றது.

ஆனால் பல தாவரவியலாளர்கள் (James Edward Smith -1807, Amos Eaton – 1817, Michel Étienne Descourtilz -1826 & Eaton and Wright -1840) இத்தனை அப்பட்டமாக பெண்ணுறுப்பைக்குறிக்கும் பெயரை ஒரு தாவரத்திற்கு வைத்ததற்கு, தொடர்ந்து பல வருடங்கள் பலவாறு எதிர்ப்பை தெரிவித்து Vexillaria, Nauchea போன்ற வேறு பல பெயர்களையும் பரிந்துரைத்தார்கள். ஆனாலும் Clitoria என்னும் இந்தப்பெயர்தான் இன்று வரையிலுமே நிலைத்திருக்கிறது. தாவரங்களுக்கு இருபெயரிடும் binomial முறையைக்கொண்டு வந்தபோது லினேயஸ் Genus எனப்படும் பேரினத்துக்கு அதே clitoria வையும் Species எனப்படும் சிற்றினத்திற்கு ternatea என்பதையுமே வைத்தார்.

பலநாடுகளிலும் வட்டார வழக்குப்பெயரும் இதே பொருளில்தான் இருக்கிறது. இச்செடியின் இளம் தண்டுகள், மலர்கள், இலைகள் மற்றும் பிஞ்சுக்காய்கள் ஆகியவை உலகின் பல்வேறு பகுதியில் உணவாக உண்ணப்படுகின்றன. தேனீக்கள் மற்றும் சிறுபூச்சிகளால் மகரந்தசேர்க்கை நடைபெறும் இம்மலர்கள் பட்டுபூச்சிகள், மற்றும் பறவைகளை வெகுவாக கவரும். வேகமாக வளரும் இயல்புடைய, விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இச்செடி விதைத்த 6 அல்லது 7 ஆவது வாரத்திலிருந்து மலர்களை கொடுக்கத் துவங்கும்.

கால்நடைத்தீவனமாகவும் உணவாகவும் மருந்தாகவும் உணவு நிறமூட்டியாகவும் இதன்பயன்பாடுகள் ஏராளமாக இருப்பினும் தென்னிந்தியாவில் இச்செடி வழிபாட்டுக்குரிய மலர்களை கொடுப்பதாகவும், அலங்காரச்செடியாகவும் மட்டுமே கருதப்படுகின்றது. அதன் பிற பயன்களை அவ்வளவாக அறிந்திராத இப்பகுதியை பொருத்தவரை இச்செடி மிக குறைவாகவே பயன்கள் அறியப்பட்டு உபயோகத்திலிருக்கும் தாவரமாகவே (underutilized plant) இன்னும் இருக்கின்றது.

மனித உடலில் உள்ள தசவாயுக்கள், தசநாடிகளின் அடிப்படையிலேயே சித்தர்கள் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். இந்த பத்து வாயுக்களும் நம் உடலின் அனைத்து செயல்பாடுகளையும் தீர்மானிக்கின்றன, இவையே நம் உடலை பாதுகாப்பவையும் கூட. இவற்றில் பிராணன், ஆபானன், வியானன், உதாதனன், சமானன் ஆகியவை பஞ்சபிராணன் எனப்படும். உடம்பில் நடுப்பகுதியில் உள்ள, உணவை செரிக்க உதவும் சமானன் வாயுவின் பணியில் ஏற்படும் பாதிப்பை சரி செய்யக்கூடிய ஆற்றல் சங்கு புஷ்பத்துக்கு உள்ளது.

சிவவாக்கியர் என்ற சித்தர் வெண் சங்கு மலர் பற்றி மிகவும் சிலாகித்துப் பாடியிருக்கிறார். மனஅமைதியின்மை, உறக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கும் சங்கு புஷ்பக் கொடி நிவாரணமளிக்கின்றது. ஆயுர்வேதத்தில் மனதை சாந்தப்படுத்துவதற்கான மருந்தாக சங்குபுஷ்பம் பலநூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ரத்தக்குழாய் அடைப்புக்கும், யானைக்கால் வியாதிக்கும் இதன் விதைகள், வேர்கள், மலர்ச்சாறு ஆகியவை சிறந்த மருந்தாகும். சங்கு புஷ்பக் கொடியின் விதை மற்றும் வேர்ப் பகுதிகள் இருமல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் மூட்டு வலி நோயை குணப்படுத்தவும் உதவுகிறது.

தென்கிழக்கு ஆசியாவில் உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூவின் சாறு பயன்படுத்தப்படுகிறது. மலர்களை சூடான அல்லது குளிர்ந்த பானமாக அருந்துவதன் மூலம் இதன் மருத்துவ பலன்களை எளிதாக பெறலாம். பத்து அல்லது 12 புதிய அல்லது உலர் மலர்களை கொதிநீரில் இட்டு நீர் நீலநிறமகும் வரை கொதிக்கவைத்து வடிகட்டி ஒரு கோப்பை பானம் தயாரித்து அருந்தலாம். சுவையை மேம்படுத்த சங்குபுஷ்ப பானத்துடன் தேன், சர்க்கரை, இஞ்சி அல்லது புதினா, எலுமிச்சம்புல், எலுமிச்சச்சாறு சேர்த்தும் அருந்தலாம். எலுமிச்சைச்சாறு சேர்க்கையில் நீலநிறம் இளஞ்சிவப்பாகிவிடும். சாதாரண தலைவலி, கைகால் வலி, அசதி போன்றவற்றிற்கும் சங்குபுஷ்ப பானம் நல்ல நிவரணம் தரும். இப்பானம் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.. உணவிலிருக்கும் சர்க்கரை ரத்தத்தில் சேரும் வேகத்தையும் இச்சாறு குறைப்பதால் சர்க்கரை நோய்க்கும் நல்ல மருந்தாகின்றது. பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத இயற்கை மருத்துவமுறை இது.

சாலட்களில் மலர்களையும் இளம் இலைகளையும் காய்களையும் சேர்த்து பச்சையாகவே உண்ணலாம். உலர்ந்த மலர்களையும் விதைகளையும் கூட உணவில் சேர்த்துக்கொள்லாம்.

பாலுணர்வை தூண்டவும் இம்மலர்கள் பலநாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தபடுகின்றது பல்லாண்டுகளாகவே பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும், பால்வினை நோய்களை குணமாக்கவும் சீன பாரம்பரிய மருத்துவம் சங்குபுஷ்பச்செடியை பயன்படுத்துகிறதென்பதை அறிகையில் மனித உடல் உறுப்புக்களின் வடிவிலிருக்கும் தாவர பாகங்கள் அதே உடலுறுப்பின் குறைகளை, நோய்களை தீர்க்குமென்பதைச்சொல்லும் doctrines of signature என்பதின் முக்கியத்துவத்தை நினைக்கவேண்டியிருக்கிறது.

மலர்களில் இருக்கும் Acetylcholine என்னும் வேதிப்பொருள் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகின்றது. தொடர்ந்து அருந்துகையில் நினைவாற்றல் பெருகும். Cyclotides, என்னும் புற்றுநோய்க்கெதிரான வேதிப்பொருள்களை கொண்டிருக்கும் ஒருசில அரிய தாவரங்களில் சங்குபுஷ்பமும் ஒன்று.

மலர்களின் அடர் நீல நிறம் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களை அமைதிப்படுத்துகின்றது. வேர்கள் சிறுநீர் பெருக்கும். பாம்புக்கடிக்கு விஷமுறிவாகவும் இச்செடியை பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.

மலர்ச்சாற்றுடன் உப்புசேர்த்து கொதிக்கவைத்து அந்த நீராவியை காதில் காட்டினால் காதுவலி குணமாகும் இதன் உலர்ந்த இலைகளை மென்று உண்டாலே தலைவலி, உடல்வலி நீங்கும்.
செயற்கை உணவு நிறமூட்டிகளின் பக்க விளைவுகள் அதிகமென்பதால் இம்மலர்களிலிருந்து எடுக்கப்படும் நிறமூட்டிகளுக்கு தற்போது நல்ல வரவேற்பிருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் இம்மலர்கள் bunga telang என்னும் பெயரில் இயற்கையான உணவு நிறமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது, மலாய் உணவுகளில் அரிசிச்சோற்றை நீலநிறமாக்க சங்குப்பூச்சாறு பயன்படுத்தப்படுகின்றது.

மலேசியாவின் சில பகுதிகளில் சங்குபுஷ்பத்தின் அரும்புகள் சிலவற்றை அரிசி வேகும்போது சேர்த்து இளநீல நிறமான nasi kerabu. எனப்படும் உணவை தயாரிக்கிறார்கள் தாய்லாந்தில் dok anchan எனப்படும் இந்த மலரிலிருந்து தயாரிக்கப்படும் நீலநிற சர்பத் எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தப்படுகின்றது. தாய்லாந்தின் கோவா டோம் எனப்படும் நீல நிற இனிப்பும் சங்குப்பூவைக்கொண்டு செய்யப்படுகிறது.

பர்மாவிலும் தாய்லாந்திலும் மாவில் தோய்த்த இம்மலர்களை பஜ்ஜி போல் பொறித்தும் உண்கிறார்கள். பலநாடுகளில் இம்மலரின் சாறை ஜின் போன்ற பானங்களிலும் சேர்த்து, நிறம் இளஞ்சிவப்பாக மாறிய பின் பருகும் வழக்கம் இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கத்தின் சுற்றுப்புறங்களில் தாவரங்கள் அழிந்து மலடாகிப்போன மண்ணில் இவற்றை வளர்க்கிறார்கள். (revegetation crop)

இத்தனை அழகிய, எளிதில் வளரக்கூடிய நலம்பயக்கும், நோய்தீர்க்கும் பக்கவிளைவுகளற்ற சங்குப்பூச்செடியை வீடுகளிலும், தோட்டங்களிலும், பூத்தொட்டிகளிலும் வளர்த்து பயன்பெறலாம். தற்பொழுது பல இடங்களில் இதன் மருத்துவப்பயன்களுக்காக இவை சாகுபடி செய்யப்படுகிறது. இதன் உலர்ந்த மலர்களும் மலர்ப்பொடியும் சந்தையில் கிடைக்கின்றது. இதன் பலன்களை அதிகம் பேர் அறிந்துகொண்டிருப்பதால் ஆன்லைன் வர்த்தகத்திலும் இம்மலரின் தயாரிப்புக்கள் அதிகம் விற்பனையில் இருக்கின்றன.

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑