நிகழாக்காலம் வாசித்து முடித்தேன் இரண்டாம் முறையாக.  சில பகுதிகளை துண்டு துண்டாக முன்பே வாசித்திருந்தும் இப்போது முழுவதுமாக வாசித்தேன். சனியன்று விமான நிலையத்தின் வரிசை நாற்காலிகளில் பெரும்பாலும் காலியாக இருந்தது அதிலொன்றில் அமர்ந்து இதை வாசித்தேன் 65 சதமானம். மிச்சத்தை பின்பு நேற்று கல்லூரியில் வகுப்புக்களுக்கு இடையில் வாசித்தேன். புரியாத பகுதிகளை நேற்று இரவு மீள் வாசிப்பு செய்தேன். இப்போது கதையில் புரியாமை ஏதும் இல்லை எனினும் ஏன் இவையெல்லாம் இவற்றுக்கு இடையில் வந்தது என்று புரியலை இப்பொவும்

ஆனா. முன்பே  சுரேஷ் சொல்லியிருப்பதை நினைத்துக்கொண்டேன்.இதிலும் குணா எழுதும் கடிதம் ஒன்றில்   இப்படி வரும் ‘’ காலமும் நிகழ்வும் தொடர்பினை கைவிடும்போது வரும் விந்தை’’ ன்னு. அதான் எனக்கு புரியலை போலிருக்கு.அருமையான கதை. சுரேஷ் எழுதினதிலேயே இதுதான் நீளம் அதிகம்னு நினைக்கிறேன். Loved it totally

 சக்தி குணா வரும் முழுக்கதையும் ரொம்ப பிடிச்சிருக்கு. அதே போல் ரிஷ்டெப் செடிக்கதையும். அது ஒரு fairytale போலிருக்கு. குணா படித்து முடித்து வாலிப வயது வரையுலும் அவன் வாழ்வில் நடந்த பலவறை விரிவாக சொல்லியிருக்கீங்க. அவன் வாழ்வில் குறுக்கிட்ட பெண்கள் அவன் காயப்படுத்திய பெண்கள் அவ்னை காயப்படுத்திய பெண்கள்  என விஸ்தாரமாகவே இருந்தது சக்தியின் பால்யகாலத்து நட்பிலிருந்து, நஸ்ரியா நிலோஃபர், உறவுகளில் சுகன்யா நதியா மலர் அலுவலகத்தில் ஸ்வப்னா பக்கத்து வீட்டில்  மஞ்சுளா என்று அலைக்கழிக்கிறார்கள் குணாவை ஒவ்வொருத்தியும்.

ஒரு கடிதம் எழுதி துவங்கும் நாவலையும். அப்படியே பதில்கடிதமொன்றில் முடியும் நாவலையும் இப்போதுதான் வாசிக்கிறேன் நான். நல்ல முயற்சி.குணாவும் சுரேஷும் வேறு வேறில்லை எனவே சுரேஷ் சுரேஷுக்கு எழுதும் கடிதம் துவங்கி வைக்கின்றது நாவலை

நாவலின் துவக்கம் ஒரு திரைப்படத்தின், அதுவும் தமிழ் திரைபப்டத்தின் துவக்கம் போலவே இருந்தது. கோழிகளும் சேவல்களும், பனி பெய்யும் அதிகாலை, உறக்கம் கலையாத குழந்தைகள். சாணி போடும் மாடுகள் குளிக்க செல்லும்பெண்கள்  டீக்கடை என்று டிபிகல் சினிமா ஓப்பனிங்.

கதை முழுக்க வரும் கதைமாந்தர்கள் பேசும் slang  கதையுடன் வாசிப்பவர்களை ஒன்றச்செய்கின்றது.

வழக்கம் போலவே கதையுடன் நான் என் வாழ்வையும் என்னையும் பல இடங்களில் பொருத்திப்பார்த்துக்கொண்டேன். சுகந்தி தன்னந்தனியே வீடுகட்டியது தனிமை அவளுக்குள் வைராக்கியத்தை உண்டு பண்ணியது எலாம் தேவிக்கும் பொருந்தும். தனிமை முதலில் பயமுறுத்தியது, பின்னர் பழகியது பின்னர் பிடித்து விட்டது. இப்போ நானும் தனிமையும்’சேர்ந்து’’ வாழ்கிறோம்

//உடலில் பளிச்சென்று தெரியும் கூறுகளை மட்டுமே கண்ணுக்குப் புலப்படச் செய்யும் அந்தியைப் போன்றவள்.

// அம்மா அப்பா நான் மூவரும் நின்றிருந்தோம். எங்களுக்கு இடையே பொட்டலின் காற்று கடந்து சென்று கொண்டிருந்தது.//

// கீறினால் கிழிந்துவிடும்படியான மனப்படலங்கள் எதையும் அந்த உரையாடலில் தொட்டுவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தாள்//

//கார்களின் உள்ளே பொழியும் இளநீலம்//

இருவரும் பற்றிக்கொண்டிருந்த சரடின் ஒரு முனையை அவள் ஏற்கனவே விட்டு விட்டிருந்தாள்இவையெல்லாம் கவனிக்க வைத்தது. நான் மிகவும் ரசித்தவையும் கூட

//. நஸ்ரியா பெண்களுக்குரிய இயல்பான முறையில் என்னைக் கைவிடத் தொடங்கினாள்//

// புதுத்தகப்பன் என்பதால் அந்த சதைப்பிண்டத்தை ஞானபீட விருதினைப் போல அவர் ஏந்தியிருந்தார்.// இதெல்லாம் கஷ்டமாயிருந்தது ரொம்ப வாசிக்கும் போது

குழந்தையை அப்படி சதைப்பிண்டம்னு சொல்லலாமா ? அதுபோலவே பெண்களுக்கு ஸ்நேகிச்ச ஆண்களை கைவிடுதல் இயல்புன்னு அப்படி பொதுவில் சொல்லமுடியாது இல்லியா

பாலூட்டிக்கொண்டே பெற்றுக்கொண்டுமிருந்தாள்னு சொல்லியிருக்கீங்க இல்லியா அதும் அறிவியல்ரீதியா சாத்தியமில்லை பாலூட்டுதல் ஒரு இயற்கை வழி கர்ப்பத்தடைதான்.  மிக அரிதாகவே அபப்டி கருவுருதல் நிகழும் பாலூட்டும் தாய்மார்களுக்கு. இது சுரேஷ்க்கு தெரிஞ்சிருக்கலாம்  ஒருவேளை அத்தனை அறிவியல் பின்புலம் தேவையில்லை இந்த கதைக்குன்னு நினச்சுருக்கலாம் நீங்க

ஆத்தா கொடுக்கும் புளியின் செம்பழம் எனக்கும் சாப்பிடனும்னு ஆயிருச்சு. வீட்டுக்கு திரும்பும் தெருமுனையில் இருக்கும் மரத்திலிருந்து அப்பப்போ உதிர்ந்து கிடக்கும் பழங்களை நான் இப்பொவும் சீசனில் பொறுக்கி சாப்பிடுவேன்.

’நெருப்பை தாண்டும் முயற்சியில் இருக்கும் பாம்பைபோல சென்று சென்று திரும்பிக்கொண்டிருக்கும் புள்ளி’’ இதுவும் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா  இருக்கு

டிவி பத்தி கேட்கும் கேள்வி பத்தி ஏற்கனவே சுரேஷிடம் பேசியிருப்பதை நினைவு கூர்ந்தேன்

பள்ளியில் கர்த்தர் சுரேஷைப்போலவே எனக்கும் பிரியமானவர்.ஒரு போட்டொ வச்சிருந்தேன் கிழிஞ்சு நார் நாரா போறவரைக்கும் .  கழுத்துக்கு கீழே புரளும் நெளிக்கூந்தலுடன் கருணை ததும்பும்  முகத்துடன் அஞ்சல் முத்திரையுடன்  கர்த்தர் இருக்கும் அந்த புகைப்படம் அன்பென்பதை அறியாத அப்பருவத்தில் எனக்களித்த பாதுகாப்பு உணர்வினையும் நிம்மதியையும் எழுதி விளக்கிவிட முடியாது

மழைக்காற்றை குளிர்பட்டுன்னு சொன்னதும் நல்லாருக்கு

மஞ்சள் கலர் சுரேஷுக்கு பிடிக்காது போலிருக்கு

நதியாக்கு எழுதி கிழிக்கும் கடிதத்திலும் நஸ்ரியா கேண்டினில் முக்கிய விஷயம் பேசறப்போ போட்டுக்கொண்டு வருகையிலும் அப்படித்தான் எனக்கு தோணுது அவர் எழுதியிருக்கறதை பார்த்தா

எஞ்சினீயரிங் கல்லூரி அட்மிஷன் விடுதி இதெல்லாம் சமீபத்தில் மகனை கொண்டு போய் விட்டுவிட்டு வந்ததால் அவற்றுடன் இணைத்து பார்த்துக்கொண்டேன்

சக்தி அரசடி குளத்தில் துணி துவைத்துக்கொண்டிருக்கையில் குணா போய் பார்க்கும் காட்சி அற்புதம் ராஜ்கபூர் நர்கீஸ் சந்திப்பை நினச்சுட்டேன்.

மலர்விழியும் தோழிகளும் குணாவை பெண் வேடமிட்டு ரசித்து விளையாடும் பகுதி  தேவைக்கும்கொஞ்சம் அதிகமான நீளம்னு தோண்சுச்சு.

மையெழுதினா கண்களில் மர்மம் கூடும்னு சொன்னதும் அழகு. எனக்கும் அப்படி தோணும் கவர்ச்சியும் மர்மமும் கூடிரும் கண்ணெழுதிட்டானு நினைப்பேன்.

ஏன் சுகந்தி மகனுடனான தன் பிரியத்தை காட்டாமல் தன்னையே கட்டுபடுத்திக்கிட்டானு புரியலை. அவனை யாரையும் சாராமல் வளர்க்கனும்னு நினைச்சாளா/?

 ஆற்றுத்தண்ணீரை சேம்பிலையில் கோரிக்குடிக்கும் அக்காட்சி மலையாளப்படத்தை நினவு படுத்தியது.

ஹாஸ்டலில் யூகலிப்டஸ் மரங்கள் பெரியம்மா வீட்டில் ஊஞ்சல் கட்டியிருக்கும் புன்னை,  பூசன மரங்கள்( மல்பெரியா?) இப்படி நிறைய பச்சை பிடிச்சுருக்கு கதைக்குள்

சுனதன் கதையையும் கதைக்குள் என்னால் பொருத்திக்க முடியலை. என் புரிதல் திறன் குறைவென்பது காரணமாயிருக்கலாம். உங்களுக்கு நடந்த பைக் விபத்தும் இருக்கே கதையில்/?

// முற்றத்தில் காயும் ஈரத்தவிட்டை
சூரியனும் பின்னர் காற்றும் வனைவது போல// loved this very much

ஸ்வப்னாவுடனான உறவுக்கு பின்னர் கண்ணீர் வழிய அவன் இருக்கையில் மனம் சங்கடப்பட்டது . அந்த சமயத்தில் குணாவை  அணைத்துக்கொள்ளனும்னு தோணுச்சு என்னமோ

// கொஞ்சம் நாகரிகக் கனிவுடன் பேசினாலே தங்களுடைய பலகீனமான பக்கங்களைத் திறந்து படிக்கத் தரும் பெண்களைப் போன்றவள் அல்ல ஸ்வப்னா./ இது என்னவோ என்னை புண்படுத்தியது காரணமின்றி அல்லது காரணத்துடன்

சொல்முகம் கலந்துரையாடலில் கவனித்தேன் பலரும் அக தரிசனம புறதரிசனம் என்றெல்லாம் பேசியதை அப்படி தரிசனஙக்ளையோ படிமங்களையோ கதைகளில் தேடிக்கண்டடையத்தெரியாத, கதைகளை நேரடியாக் புரிந்துகொள்ளும் எளிய வாசகி நான்

எனக்கு இக்கதை அல்லது கதைகள் பிடிச்சிருக்கு. இடையிடையே வருபவற்றை தொடர்புபடுத்திக்க தெரியலைங்கறது வாசகியா என்னோட குறை

பலமுறை புன்னகைச்சபடியேதான் வாசிச்சேன்