ஒரு நீண்ட விடுப்பில்2019 ஆகஸ்டில் சென்னை  சென்றிருந்தேன். சென்னை விஷ்ணுபுரம் குழும நண்பர்கள்   சொல்லி , திரு ராஜகோபால் , (Samarth learning solutions) நடத்திய  இரண்டு நாட்களுக்கான ஆளுமை மேம்பாட்டு பயிற்சியில்  17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கலந்துகொண்டேன்

உண்மையில் கலந்துகொள்வதற்கு முன்னர் ’ஆளுமை மேம்பாட்டிற்கு என்ன இரண்டு நாட்கள் பயிற்சியளிக்க வேண்டியிருக்கிறது’ என்னும் அலட்சிய மனோபாவம் இருந்தது. மேலும் ”எனக்கென்ன இனி மேம்மடுத்திக்கொள வேண்டும், 12 வருடங்களாக நல்ல ஆசிரியையாகத்தானே இருக்கிறோம்? என்றும் ஒரு கேள்வி இருந்தது. எதற்கும் போகலாம் சென்னை குழும நண்பர்களை பரிச்சயம் செய்துகொண் டதுபோலிருக்கும் என்றே சென்றேன் உண்மையில்

 இதுபோன்ற நிறைய பயிற்சிகளை எங்களுக்கு கல்லூரியில் வருடா வருடம் அளித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.  அந்த பயிற்சிகள் என்பது, ஒருவர் மேடையில் ’’ எப்படி நாங்கள் இந்த உயரிய தொழிலை தெய்வமென நினைக்கவெண்டும், முன்னுதாரணமான ஆசிரியர்களின் வாழ்க்கை குறிப்பு’’ இப்படி சொற்பொழிவாற்றுவார், அல்லது எங்களுக்கு சில விளையாட்டுககள் நடத்துவார்கள் அன்றெல்லாம் மகிழ்ந்திருந்து வீடு திரும்புவோம் அவ்வளவுதான். பயிற்சி என்று சொல்லப்பட்ட அந்த நிகழ்வுகளிலிருந்து எங்களுக்கு  கற்றுக்கொள்ளவோ, மேம்படுத்திக்கொள்ளவோ  ஏதும் இருந்ததே இல்லை.

ஆனால் இந்த பயிற்சியில் கலந்துகொண்டு நிறைவு செய்த பின்னரே இது எத்தனை அவசியமான ஒன்று என்பதையும் நான் மிகத்தாமதமாக இப்பயிற்சியினை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் உண்ர்ந்து வருந்துகிறேன். 15பேர் கலந்துகொண்டோம். பெரும்பாலும் தகவல்தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையை சேர்ந்தவர்களும் என்னைதவிர இன்னொரு ஆசிரியரும். அனைவரும் விஷ்ணுபுரம் குழுமத்தை சேர்ந்தவர்களே!

 12 வருட ஆசிரியத்தொழிலில் நான் முக்கியமென கருதிவந்தது, பெரும்பாலும் அன்பாயிருப்பது, தேவைப்பட்டால் கடுமைகாட்டுவது, நேரம் தவறாமை, மாணவர்களுக்கு  சரியாக விஷயத்தை கொண்டு சேர்ப்பது, மாணவர்களின் அந்த அவய்துக்கேயான சிக்கல்களையும் அன்னையென இருந்து தீர்வுகாண்பது  இவைகளை மட்டுமே.

ஆனால் இந்த பயிற்சியின் பின்னரே இன்னும் எத்தனை முக்கியமான நான் அவசியம் பின்பற்றவேண்டிய, எனக்கும் மாணவர்களுக்கும் சேர்த்து பயனளிக்கக்கூடிய  நுட்பமானவிஷயங்கள் இருக்கின்றன என்றறிந்து கொண் டேன்

ஆசிரியத்துக்கு மட்டுமல்ல,  ஒரு உரையாடலை எப்படி சாமார்த்தியமாக கொண்டு போவது, வியாபாரப்பேச்சுக்களை எப்படி வெற்றிகரகமாக நடத்துவது இப்படி ஏராளமாக கற்றுக்கொண்டோம்

பங்கேற்பாளர்கள் பேசுவதை வீடியோவாக எடுத்து மீண்டும் எங்களுக்கே போட்டுக்காண்பிக்கையில் அதில் நாங்கள் செய்தவையும் செய்யக்கூடாதவைகளும்  எங்களுக்கே தெளிவாக  தெரிந்தது

இந்த பயிற்சியின் வாயிலாக அல்லாது வேறெப்படியும் நாங்கள் இதுபோன்ற தவறுகளை, தோற்றப்பிழைகளை சரிசெய்துகொண்டிருக்கவும் ஏன் அறிந்துகொண்டிருக்கவும் கூட வாய்ப்பில்லை,. இரண்டு நாட்களுமே கொட்டும் மழையில் முழுக்க நனைந்து கொண்டும் கூட பின்மாலை வரை நீண்ட பயிற்சியில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டோம்

ராஜகோபாலும் அவர் நண்பர் அருணும் இப்பயிற்சியை நடத்தினார்கள். இருவரும் மிக்க தோழமையுடன் சிரித்த முகத்துடன் சோர்வின்றி , கட்டணமுமின்றி எங்களுக்கு முழுமனதுடன்  பயிற்சி அளித்தனர். பயிற்சியாளர்களுடன் பங்கேற்பாளர்கள் இருந்ததைபோலல்லாமல்  நெருங்சிய சினேகிதரோ அல்லது சொந்த சகோதரனோ வந்திருந்து வீட்டு முன்னறையில் காபி குடித்துக்கொண்டே இயல்பாக பேசிக்கொண்டிருந்தது போன்ற ஒரு சுவாதீனமும் செளகரியமும் எங்கள் அனைவருக்கும் இருந்தது.

.திரு ராஜகோபால் அவர்களை வெண்முரசு வாசகராக விஷ்ணுபுரம் விழாவில் இலக்கிய வாசகராகத்தான் அறிமுகம் ஆனால்  இப்படியான பயிற்சிகளை நடத்துபவர் என்றே இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன்..

விடுப்பு முடிந்து இனி ஒரு ஆசிரியையாக  மாணவர்கள் முன்னால் நின்று முன்னைக்காட்டிலும் சரியாகவும் சிறப்பாகவும் என்னால் பாடங்களை நடத்த முடியும் என்று திடமான நம்பிக்கை வந்திருக்கிறது இப்போது

பங்கேற்பாளர்களில் பல துறைகளை சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.  அவர்களுடன் கலந்துரையாடியதும் நல்ல அனுபவமாயிருந்தது,. பயிற்சியளித்த ராஜகோபால் மற்றும் அருண் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் குழுமத்திற்கும் பயிற்சிக்கு  தன் வீட்டில் இடமளித்த திரு செளந்தருக்கும் நன்றி.

ஜா ஜா என்னும் ராஜகோபால்

இந்த பதிவு ஒரு கடிதமாக ஜெ வின் தளத்தில் வெளியானது, கடிதத்துக்கு சமர்த் குறித்த ஜெ வின் விரிவான பதில் இருக்கும் இணைப்பு;

சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்குமான பயிற்சிகள்