லோகமாதேவியின் பதிவுகள்

கடைசிக்கணம்

காலடியில் விரைந்து நழுவிக்கொண்டிருக்கிறது   கணங்கள்

நீளும் இரவுகளின் மெளனம் உடைக்கின்றது கேவலின் மொழி

கண்ணீரின் உப்புச்சுவையை நாவைச்சுழற்றி

சுவைத்துக்கொண்டிருக்கிறது போர்த்தியிருக்கும் இருள்

படுக்கையறையெங்கும் இருக்கிறது

குருதியில் பதறியபடி  நடந்து நடந்து

நனைந்த என் காலடித்தடங்கள்

அவற்றிற்கிடையிலும் நீ வந்தால் காணலாம்

கடைசிக்கணத்தில் கைகளினின்றும் நழுவி விழுந்த

உனக்கென சேர்த்துவைத்திருந்த உலர்ந்த மகிழம்பூக்களை

பாசிபிடித்த கிணற்றுச்சுவர்களிலிருந்து

அசைவில்லா ஆழ்நீரை நோக்கி இறங்கிச்செல்லும்

படிக்கட்டுகளில் அமர்ந்து இறுதியாக   என்னிடம்

சொன்னவற்றை நினைத்துக்கொண் டே

இழந்துகொண்டிருக்கிறேன்  துளித்துளியாய்

என்னிடமிருந்து  என்னையே  என்றென்றைக்குமாய்

1 Comment

  1. KANNAN.m

    Touching professor

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑