சில மாதங்களுக்கு முன்னர் புதிய தலைமுறையில் வர்தாவால் விழுந்த மரங்கள் பற்றி பதிவு செய்திருந்தார்கள்..
Nativity species என சொல்லப் படுகின்ற நம் நாட்டு மரங்கள் பெரும்பாலும் எந்த பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை. வேளச்சேரியில் அதிகபட்சம் நம் மரங்கள் தான், அதிகம் பாதிப்படையாத இடம் வர்தாவால்.weak tree என சொல்லப்படும் மாமரம் கூட புயலை தாக்குப்பிடித்திருக்கிறது. அழகிற்காகவும், கண்கவர் மலருக்காகவும், வேகமாக வளர்வதற்காகவும்வளர்க்கப்பட்ட வெளிநாட்டை சார்ந்த மரங்களே காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்துள்ளன!!
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த வெளிநாட்டை சார்ந்த மரங்களில் நம் பறவைகளும், அணில்களும், ஏனைய உயிர்களும் கூடு கட்டி வாழாமல், நம் நாட்டு மரங்களில் தான் கூடு வைத்து வாழ்கின்றன..
நம்மாழ்வார் கூறியது போல நிச்சயம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு முருங்கை மரம், ஒரு பப்பாளி மரம், ஓரு கருவேப்பிலை மரம், ஓரு வாழை மரம், இடமிருந்தால் ஒரு வேப்ப மரம் வைக்கலாம். இவை அனைத்தும் நம் உணவு தேவை, சுற்றுச்சூழல், உணவு சங்கிலி, கலாசாரம், மருத்துவம் சார்ந்து பின் விளைவாக கெடுதல்களை தராதது.
இந்த வர்தா சொல்லி சென்றிருப்பது, நம் தேவைக்கான மரங்கள் எதுவோ, அதை தேடி வளர்த்து பயன் பெறுவதுதான். நம் நாட்டின் மரவகைகள் 4500க்கும் மேல்..
கடந்தாண்டு december நல்ல மனங்களையும், மனிதர்களையும் அடையாளம் காட்டியது போல், அந்த december நமக்கான நல்ல மரங்களை அடையாளம் காட்டி சென்றிருக்கிறது..
ஏனென்றால் மரம், ஒரு செல் உயிரி மட்டுமல்ல, ஒரு சொல் உலகம்!!!