இன்று மார்கழி துவங்கிவிட்டது. பல வீடுகளில் எந்த மாற்றமும் இல்லையெனினும் இன்னும் மரபும் பழமையும் மிச்சமிருக்கும் சில கிராமத்து வீடுகளில் சாணப்பிள்ளையாரும் கோலமும் மரத்தடி பிள்ளையாருக்கு அதிகாலை நீராட்டுமாய் இருக்கத்தான் செய்கிறது. நல்ல வேளையாக நான் இவற்றையெல்லாம் பார்க்க கிராமத்தில் இருக்கிறேன்
சாணப்பிள்ளையாரும் அதில் மலர்களுமான இந்த வழமையில் தாவரவியல் பின்புலம் இருகிறது. அதிகாலையில் குடும்பத்தினர் கோவில்களுக்கு செல்லும் மாதமாகையாலும் அடுத்து தை பிறப்பதாலும் இந்த மாதத்தில்தான் முன்பு பரவலாக திருமணங்கள் உறுதி செய்யப்பட்டன. இப்போழுது போல அப்போதெல்லம் matrimony . com ல் கொண்டாட்டமாய் திருமணங்கள் நிச்சயிக்கப்படவில்லை. அவையும் இலை மறை காய்மறையாகவே இருந்தகாலம் அது
வாசலில் சாணப்பிள்ளையாருக்கு அருகு வைத்திருந்தால் அந்த வீட்டில் கல்யாணத்திற்கு பிரம்மச்சாரி இளைஞர்கள் இருப்பார்கள், பூசணிப்பூ ,( அது ஒரு unisexual மலர் ) இருந்தால் கல்யாணவயதில் பெண்பிள்ளைகள் இருப்பார்கள், அருகும் பூசணிப்பூவும் சேர்ந்திருந்தால் கல்யாணத்திற்கு மகனும் மகளும் இருக்கிறார்கள், செம்பருத்தி சங்குப்பூ போன்றவை ( மகரந்தமும் சூலகமும் சேர்ந்திருக்கும் bisexual மலர்கள் இவை) இருப்பின் திருமணமான கணவனும் மனைவியுமாய்க் இருகிறார்கள் பெண்ணோ ஆணோ கல்யாண வயதில் அந்த வீட்டில் இல்லை என்று கொள்ளலாம். அதிகாலையில் வீடுகளைக்கடந்து கோவில்களுக்கு செல்பவர்கள் இவற்றிலிருந்து செய்திகளைத்தெரிந்து கொண்டு பின் பேசி முடிவு செய்தால் தையில் திருமணம் நடக்க ஏதுவாக இருக்கும்

தும்பைமலர்களும் அவ்வப்போது இருக்கும் தும்பை வைரஸ் தொற்றைத்தடுக்கும் குணமுள்ளது. பனிக்காலத்தில் அது போன்ற தொற்றுக்கள் பரவாமல் இவை தடுக்கும்
ஸ்டிக்கர் கோலமிடும் இந்த நவநாகரீககாலத்தில் இவற்றை தெரிந்துகொள்ளவாவது செய்யலாம்.
”மார்கழித்திருநாளில் மங்கையர் இளந்தோளில் கார்குழல் வடிவாக கண்ணன் வந்தான்”” என்னும் இந்த பாடலை நினைவு கூறுகிறேன் இந்த. அற்புதமான மாதத்தில்