இலைதழைப்புகளுக்குள்
பார்த்துக்கொண்டிருக்கையிலெயே நுழைந்துவிடும் நாகம் போல
கண் எதிரிலேயே எனக்குள் நழுவிச்சென்று மறைகிறாய்
தேவன் தேர்ந்தெடுத்ததோர் கண்மொன்றில்
மெல்லப்பதித்தாய் உன் நேசமெனும் பற்களை
சலங்கை மணிகள் கொஞ்சும் என் மென்பாதமொன்றில்
நரம்புகளின் நுனி பற்றியபடி மெல்ல மேலேறி
இதயத்தை எட்டிப்பிடிக்கும்  அக்காதலெனும் நஞ்சினை
உவகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
எங்கெங்கிலுமாய் நீ என்னுள் நிரம்பித்ததும்பி வழியும்  நாளொன்றில்
இதழோரம் பொங்கி வழியும் வெண் நுரையின்
சின்னஞ்சிறு குமிழிகள் ஒவ்வொன்றிலும் தெரிவோம் நாமிருவருமே!