கண்முன்னே நழுவிச்செல்கிறது காலம்

அதிலிருந்து தெறித்து வெளிவரும்

கணங்களில்

கைக்கு கிடைத்த

சிலவற்றை அள்ளி சேகரித்து

மடியில் இறுக்கக்கட்டிக்கொள்கிறேன்

உன்னுடன் வாழ

எனக்கும் வேண்டுமல்லவா

சில கணங்கள்!