சிறு அதட்டலில் பணிந்துவிடும்

பெரும்பாலும்,

அவ்வப்போது மிரட்ட வேண்டியிருக்கையில்,

 அஞ்சினாற்போல் எங்காவது போய் பதுங்கிக்கொள்ளும்,

 அப்படித்தான் எப்போதுமென்றும் சொல்லமுடியாது

பிரம்பெடுத்தாலே அடங்கும் சமயங்களும் உண்டு,

 வசைச்சொல்லும் வேண்டியிருக்கும்

வேளைகெட்ட வேளைகளில் விவஸ்தையின்றி நடந்துகொண்டால்,

அரிதாக அதற்கு ஆவேசம் வரும் நாட்களில் கழுத்தை திருகியும்,

 காலடியிலிட்டு நசுக்கியும் கொன்று புதைப்பதுண்டு,

அப்படியும் உயிர்த்தெழுந்து விடுகிறது

 உடன்கட்டையேறும் வரை உடனிருக்குமிந்த

 உள்ளுறை விலங்கு!